Tuesday, December 31, 2013

வாழ்த்துங்கள். வாழுங்கள். வாழ விடுங்கள்.

வாழ்த்துகள மகிழ்வை தருகின்றது
வாழ்த்துகள வயதை உயர்த்துகின்றது
வாழ்த்துகள பண்பட வைக்கின்றது
வாழ்த்துகள் மனித நேயத்தை தருகின்றது
வாழ்த்துகள் உந்து சக்தியை தருகின்றது
வாழ்த்துகள் வரவேற்பை தருகின்றது

இறைவனை வாழ்த்திதான் வேண்டுகின்றோம்
இல்லங்களில் வாழ்த்திதான் வரவேற்கின்றோம்
இயலாதவனயும் வாழ்த்தும்போது வாழ்கையை விரும்புகின்றான்

வாழ்த்துவதில் நாளென்ன! கிழமையன்ன!
வாழ்த்துவதில் ஜாதியென்ன! மதமென்ன!
வாழ்த்துபவர் மனிதஇனம் தானே.
வாழ வழியை காட்டியதுதானே மார்க்கங்கள்
வாழ்த்துவதற்கு வாழத்தானே வேண்டும்
வாழ்பவனை வீழ்த்த விரும்புபவன் வாழ்த்த முடியுமா!
வாழ்த்துவதை வாழ்நாள் வரை தொடரவேண்டும்

வாழ்த்தும் மனிதரும்
வாழ்த்தை வரவேற்கும் மனிதரும்
வையகத்தில் வாழும்வரை
வையகத்தில் வாழும் மனிதரை வீழ்த்த மனம் வருமோ !
வாழ்வெல்லாம் வாழ்த்தி வாழ்வோம்

வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்

நேற்று... 30 டிசம்பர் 2013 அன்று பட்டுக்கோட்டை அருகே அத்திவெட்டியில் (பிச்சினிக்கோட்டை கிராமத்தில்) மீத்தேன் வாயு திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்த சென்றிருந்த போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு 75 ம் வயதில் மரணித்த (இன்னாலில்லாஹி...) சகோ. கோ.‪#‎நம்மாழ்வார்‬ க்கு செய்யப்படும் வெறும் இரங்கல் மட்டுமே நமக்கு பயனளிக்காது..! தொலைநோக்குடன் கூடிய அவரது நல்ல சிந்தனைகளை நாம் செயலில் கொண்டு வர வேண்டும்.

எங்கள் வீட்டில் இயற்கை உரமிட்டே தோட்டம் வளர்க்கிறோம். பூச்சிக்கொல்லிகளை எல்லாம் பயன்படுத்துவது இல்லை. இதுபோல... நம்மால் முடிந்த மட்டும் நம்மாழ்வாரின் மக்கள் நலன் சார்ந்த கருத்துக்களை மக்களிடம் எடுத்து சொல்லி வளர்ப்பதே அவருக்கு நாம் செய்யும் நன்றிக்கடன்..!

===///

எல்லா சுகங்களையும் துக்கங்களையும் பகிர்ந்துகிட்டு வாழற வாழ்க்கைத் துணைக்கு நன்றி சொல்ல எது நம்மை தடுக்குது?

நிச்சயமா இந்த நிலைத்தகவல் நான் உட்பட பெரும்பாலானவர்களுக்கு பொருந்தக் கூடியதுதான்.

பொதுவாகவே முகநூலில் நான் பார்க்கிற விஷயம் இது. தெரிஞ்சோ தெரியாமலோ ‘வெர்சுவல் உலக’த்துக்கு அடிமையாகிட்டோம். ஒரு நாளின் பெரும் பொழுதை முகம் தெரியாத நண்பர்களோடதான் கழிக்கிறோம். கொஞ்சறோம், சண்டை போடறோம், கை குலுக்கறோம். ஆண்டு கடைசில அந்த நண்பர்களை நினைவுகூர்ந்து நன்றியை தெரிவிக்கறோம்.

ஆனா, நம்மோட எல்லா சுகங்களையும் துக்கங்களையும் பகிர்ந்துகிட்டு சொல்லப்போனா சகிச்சுகிட்டு வாழற வாழ்க்கைத் துணை பத்தி ஏன் குறிப்பிட மறக்கறோம்? அவங்களுக்கு நன்றி சொல்ல எது நம்மை தடுக்குது?

எனக்கு அமைந்த தோழிகள் / தோழர்கள் இப்படி... அப்படினு நெகிழற நாம ஏன் நம்மோடயே மனதாலும், உடலாலும் இணைந்தும், முரண்பட்டும் இருக்கிற வாழ்க்கைத் துணை பத்தி எதுவும் சொல்ல முடியலை?

Monday, December 30, 2013

இன்பமும் துன்பமும்

உடல் நலம் பாதித்தது
மருத்துவரிடம் சென்றேன்
மருத்துவர் ஊசி வழியே
உடலில் மருந்தை செலுத்தினார்
ஊசி போட்டது வலித்தது
உடல் நலமானது
ஊசி போட்டதால் வந்த வலி துன்பம்
ஊசி போட்டதால் நலமானது மகிழ்ச்சி
இன்பமும் துன்பமும் இணைந்து செயல்படுகின்றது

எதிலும் சந்தேகமும் பயமும் "வஸ்வாசி"

நம்பிக்கையற்ற நிலை 
நிர்ப்பந்ததின் கோளாறால் துன்புறுதல்
(கற்பனை கோளாறுகள் )

சுத்தம்

சுத்தமாக இருப்பதில் கடுமை
சுத்தமாக இருக்கிறதா என்பதில் உன்னிப்பாக கவனித்தல்
சுத்தம் சீரான முறையில் கையாளப் பட்டதா என்பதில் கவனம்

தன்னிலை வேலையில் சந்தேகம்

வீட்டின் கதவு சரியாக பூட்டப் பட்டாதா
கையை முறையாக கழுகாமல் விட்டு விட்டேனா
ஆயத்தத்தில் எதையாவது தவற விட்டு விட்டேனா
இறை வணக்கத்தில் தவறு நிகழ்ந்து விட்டதா

எனதாக நீயானாய்

ஏழு வானங்களும் நிரம்பி வழியும்படியான
நேசத்தைப் பூத்திருக்கின்றன உனது விழிகள்
சுகந்தம் வீசிப் பரவுமதன் பூரிப்பில்தான்
செழிக்கிறேன் நானும்

காலங்காலமாக மென்மையில்
ஊறிக்கிடக்கும் மனமதில்
எக் கணத்தில் குடியேறினேனோ
இசைத்த கீதங்களின் ஒலியிலெனது
இடர்கள் தீர்ந்தன
உற்சாகத்தின் வீரியமிக்க விதைகள்
உன் நம்பிக்கையின் கரங்களால்
ஊன்றப்பட்ட நாளதில்தான்
தூய சுவனத்தின் மழையென்னை
முழுதும் நனைக்கப் பெய்ததையுணர்ந்தேன்

Sunday, December 29, 2013

எல்லோருக்கும் பிடித்தது இங்கு நிறைந்திருக்கும்

இதமாகப் பிடித்து விடுவேன்..
இயன்றதை செய்து விடுவேன்..
இறைவன் அருள் நிறைந்து நிற்கும்
இஸ்லாத்தின் ஒளியாய் பரவச் செய்வோம்
இஸ்லாத்தின் வேதம் ஒலிக்கச் செய்வோம்
இறையருளால் மக்கள் பேதமின்றி நிறை வாழ்வு பெறுவோம்

யார் இந்த நேருக்கு நேர் புகழ் வீரபாண்டியன்?

ஏறத்தாழ 30 ஆண்டுகள் ஊடகத்துறையில் அனுபவத்துடன் ,தன்னுடைய பெயரிற்கு ஏற்ப யாருக்கும் அஞ்சாது உண்மையை உரைக்கும் நெஞ்சுரம் கொண்ட இவரது தந்தை சுதந்திர போராட்ட வீரர் என்பதும் குறிப்பிடதக்க விசயம்

முஸ்லிம் சமுதாய இயக்கங்களை காட்சி ஊடகங்கள் புறக்கணித்திருந்த கால கட்டங்களில் சன் டிவியில் தான் நடத்தும் நேருக்கு நேர் நிகழ்ச்சின் மூலமாக சமுதாய தலைவர்கள் பலரையும் உலகிற்கு அடையாளம் காட்டியவர் தான் நடத்தும் நிகழ்ச்சியில் உண்மை மேலோங்கி இருக்க வேண்டுமென்பதில் மிகவும் கண்ணும் கருத்துமாய் செயல்படக்கூடியவர்

சன் தொலைக் காட்சி வீரபாண்டியன் மீது இந்துத்துவ அமைப்புக்கள் தாக்குதல் - அ.மார்க்ஸ்

இரு வாரங்களுக்கு முன் சென்னையில் எஸ்.டி.பி கட்சியினரின் விழா ஒன்றில் NCHRO அமைப்பினர் வெளியிட்டுள்ள முசாபர்நகர் வன்முறைகள் குறித்த உண்மை அறியும் குழு அறிக்கை வெளியிடப்பட்டது. அதை வெளியிட்டு உரையாற்றியபின் அதே நாளில் ‘பெஃபி’ அரங்கில் நடைபெற்றுக் கொண்டிருந்த இளம் பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு வந்துவிட்டேன்.

நான் வந்தபின் சன்டிவி வீரபாண்டியன் உரையாற்றியுள்ளார். அப்போது முஸ்லிம்களுக்கான ஒரு வலுவான ஊடகம் இல்லாதது குறித்துப் பேசிய அவர் மோடி குறித்தும் பா.ஜ.க குறித்தும் வெளிவந்துள்ள பல மாற்றுச் செய்திகளை வெளியிட முஸ்லிம்கள் ஊடகத் துறையில் கால் பதிக்க வேண்டும் என்பதை வற்புறுத்தியுள்ளார்.

இவனை ஒன்றிணைக்க..

சாதியால்
பிறர் சதியால்
மதத்தால்
மனத்தால்

பிரிந்துகிடக்கும்
மனித இனம்

இன்று
பணத்தால்
பதவியால்
பொருளியலால்

ஆசையில் தலைமுறை இடைவெளி


புத்தாண்டு பிறந்தால்
பிறந்த ஆண்டுகள் இடைவெளி வந்ததால்
ஆசைகள் மாறுபடுகின்றது

குழந்தைகளுக்கு மிட்டாய்
வளர்ந்த பிள்ளைகளுக்கு புதிய ஆடைகள்
கல்லூரியில் படிக்கும் பிள்ளைகளுக்கு பணம்தான் வேண்டுமாம்.
பெரிய ஐந்து நட்சத்திர விடுதிகளுக்கு சென்று புத்தாண்டு கொண்டாட

பெண்களுக்கு ஆடைகள்
மனைவிக்கு இறைவனை தொழுது அவனிடம் வேண்டி நிற்பாள்
நமக்கு நடக்க வேண்டிய திட்டங்கள் பற்றி கற்பனை செய்வது

போர்வாட்கள் மற்றும் குறுவாட்கள்...!!


நீதியின் போர்வாட்கள்
அநீதிக்கு சாமரம்வீச,
துரோகம் மின்னும் கள்ளச்சிரிப்புடன்
மேடையேறுகின்றன குறுவாட்கள்...!!

முனை மழுங்கிய கிழட்டு வாட்கள்
சகுனித்தனத்தில் சாணைபிடிக்க,
ஆடம்பர மோகிகளான சோம்பேறி வாட்களோ
போர்க்களம் கண்டிராத தளபதிகள் காலில்
கெஞ்சிக்கெஞ்சித் தஞ்சமடைந்தன.. !!

ஆசைநாயகிகள் முந்தானையில்
ஒளிந்திருக்கும் குறுவாள்
ஐப்ரோமுனை
கூராக்க மட்டுமின்றி
சில போதைப்பன்றிகளை விரட்டவும் என்றறிக..!!

சூன்யத்தில் வீசப்படும் மாயவாள் அல்ல இது,
சொரணையை உசுப்பும்
சூட்சுமவாள் ..!!

எந்த வாளாலும் காயப்படுத்த முடியாத காற்றைப் போலத் திகழுங்கள்..!!

-மீகையீல் நுஐமி

 உறையிலிருக்கும்
வாளின்
சோகத்துக்குக்
காரணம்
தனிமை அல்ல...!!

 வீச்சின் நுட்பம் வாளின் கூர்மையிலோ பகட்டிலோ இல்லை,
வீசும் வன்கரங்களின் உறுதியில் உள்ளது..!!


Nisha Mansur

Saturday, December 28, 2013

சுயம்

கிடைத்தால் பரவாயில்லை
கிடைக்காவிடில் தப்பில்லை

இருந்தால் மகிழ்ச்சிதான்
இல்லையெனில் கவலையில்லை

காரில் செல்லும்போது கர்வமேதுமில்லை
நடந்து போகும்போது சுயஇரக்கமும் இல்லை

வீட்டைத் தூக்கிக்கொண்டு சுமக்க இயலாதென்பதால்
வீட்டின் வசதிகளையும் அப்படியே

அம்மாவைப் புகழ்ந்து கணக்கற்ற புகழ் பாடலகள் அத்தாவைப் பற்றி ..!!!!


நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ""உபகாரத்திலெல்லாம் மிகப்பெரிய உபகாரம் ஒருவர் தமது தந்தையின் நேசத்திற்குரியவரையும் நேசிப்பதாகும்.'' மற்றோர் அறிவிப்பில், "நிச்சயமாக உபகாரத்திலெல்லாம் மிகப்பெரிய உபகாரம் ஒருவர் தமது தந்தை நேசித்தவரை, தந்தையின் மரணத்திற்குப் பிறகும் நேசிப்பது'' என்றார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

இரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதரே! எனது பெற்றோர்களுக்குரிய உபகாரங்களில் அவர்கள் மரணமடைந்த பிறகும் நான் அவர்களுக்கு செய்யவேண்டிய உபகாரம் எதேனு மிருக்கிறதா?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் "ஆம்! நான்கு விஷயங்கள் உள்ளன. 1) அவர்களுக்கு துஆ செய்வது அவ்விருவருக்காகவும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோருவது 2) அவர்கள் செய்த உடன்படிக்கையை நிறைவேற்றுவது 3) அவர்களது நண்பர்களை கண்ணியப்படுத்துவது 4) இரத்த பந்துக்களுடன் இணைந்திருத்தல். இரத்த பந்தம் என்ற உறவுமுறை அவ்விருவரின் மூலமே தவிர எற்பட முடியாது'' என்று கூறினார்கள். (அல் அதபுல் முஃப்ரத்)

 (நபியே!) உமதிறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்றும் (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான். அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ உம்மிடம் முதுமையை அடைந்துவிட்டபோதிலும் அவர்களை வெருட்டவும் வேண்டாம். அவர்களை (நிந்தனையாகச்) "சீ' என்று சொல்லவும் வேண்டாம். அவர்களிடம் (எதைக் கூறியபோதிலும் புஜம் தாழ்த்தி) மிக்க மரியாதையாக (வும் அன்பாக)வுமே பேசும். அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடப்பீராக அன்றி "என் இறைவனே! நான் குழந்தையாக இருந்தபொழுது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்து போஷித்த பிரகாரமே, நீயும் அவ்விருவர் மீதும், அன்பும் அருளும் புரிவாயாக!'' என்றும் நீர் பிரார்த்திப்பீராக! (அல்குர்அன் 17:23,24)

 அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடப்பீராக! அன்றி, என் இறைவனே! நான் குழந்தையாக இருந்தபொழுது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்து போஷித்த பிரகாரமே, நீயும் அவ்விருவர் மீதும், அன்பும், அருளும் புரிவாயாக! என்றும் நீர் பிரார்த்திப்பீராக! (அல்குர்அன் 17:24)
-------------------------------------------------------------------------------------------------------------------

'திருமணம் உனக்காக அல்ல!'

இருபால் பயிலும் கல்லூரியில்
இணைந்து பயின்றதால் பெண்பால் நட்பு
இராண்டுக்கு மேல் ஒரு பெண்ணுடன் நெருங்கிய நட்பு
ஆண்டுகள் அதிகமாக நட்பு காதலாக மாறியது
காதலாக தொடர்ந்தது திருமணத்தில் முடிய நாடியது
திருமணம் முடிய பெற்றோர் அனுமதி பெற நாடினோம்

தந்தையிடம் காதலிப்பவளின் உயர்வைச் சொன்னேன்
தந்தையிடம் காதலிப்பவளை திருமணம் முடிக்க அனுமதி கேட்டேன்

தந்தை கேட்டார் 'யாருக்காக திருமணம்' யெனக் கேட்டார்
தந்தை கேள்வி பொருளற்றதாகப் பட்டது
தந்தையிடமே கேட்டேன் 'ஏன்! இப்படி ஒரு கேள்வி'யென்று!
தந்தை சொன்னார் 'உனக்காக இத்திருமணமென்றால் அத்திருமணம் வேண்டா'மென்று
தந்தையிடம் சொன்னேன் 'நான் எனக்குத் தானே திருமணம் செய்து கொள்ள முடியுமெ'ன்றேன்

எங்கே[ணி]நீ


உன்பின்னே ஒளிந்து
ஒப்பீ விளையாடிய
நாட்களும்

உன் குளிர்நீரருந்தி
குதூகளித்த
நாட்களும்

உன்னுள் குதித்து
குளித்தாடிய
நாட்களும்

நாட்குறிப்புகளில் மட்டும்
பத்திரமாய்
அசலைத்தொலைத்த
நகலாய்..
---------------------------

அரூப வணக்கம்

அரூப வணக்கம் (-அதில்)
இரண்டு இல்லை !
ஒன்றில் உண்டு
ஒன்றாய் உண்டு !

ஒருவன் மோட்டார் பைக் ஓட்டிச் செல்வது வழக்கத்தில் இருக்குமானால், இவன் கை, கால்கள் தானாகவே சாலை மேடு பள்ளங்கள் வளைவுகள் போன்றப் பயணச் சூழ் நிலைகளுக்குத் தகுந்தார்ப் போலவும், மோட்டார் வாகனம் தன் உருப்புபோலவும் வாகனத்தை இயக்கிக் கொண்டு செல்லுவான். வாகனமும் இவனின் விருப்பபடியே செல்லும்.

Friday, December 27, 2013

ஜும்மா தொழுகைக்கு பாங்கு சொல்லிட்டாங்க !

'பாங்கு சொல்லிட்டாங்க. ஜும்மாவுக்கு போய் ஹஜ்ரத் ஹதீஸ் சொல்வார் போய் கேள் .சீக்கிரம் கிளம்பு '
-தாய்

'ஒவ்வொரு வாரமும் தான் ஹதீஸ் சொல்கிறார் .நான் கேட்கிறேன். மனதில் நிற்காமல் மறந்து விடுகிறதே. பின் ஏன் அவசரப் படுத்துகிறாய்.'
-மகன்

'நானும்தான் தினமும் ஆக்கிப் போடறேன். நல்லா உண்கிறாய் அது உன் வயிரிலேயே இருந்துக் கொண்டேவா இருக்கு. அந்த உணவுதான் உன்னை உயிர் வாழ வைக்கிறது. அதுபோல் தான். அந்த ஜூம்மா பேருரைகளும்,சொற்பொழிவுகளும். அது உன்னை அறியாமலேயே உன்னை உயர்வடையச் செய்யும்.உனக்கு நன்மையை கொண்டு வந்து சேர்க்கும். அதன் அருமை உனக்கு இப்போது விளங்காமல் போகலாம். ஆனால் அந்த ஜூம்மா பேருரைகளும்,சொற்பொழிவுகளும் உன் உள் மனதில் உறைந்து நிற்பதனை காலம் வரும்போது நீ அறிவாய். '
-தாய்
---------------------------------
 இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
முஸ்லிம்கள் (மக்காவிலிருந்து) மதீனாவிற்கு வந்தபோது தொழுகைக்கு அழைப்புக் கொடுக்கப்படுவதில்லை. அவர்க ஒன்று கூடி நேரத்தை முடிவு செய்து கொள்வார்கள். ஒரு நாள் இது பற்றி எல்லோரும் கலந்தாலோசித்தனர். அப்போது சிலர், கிறித்தவர்களைப் போன்று மணி அடியுங்கள் என்றனர். வேறு சிலர் யூதர்கள் வைத்திருக்கிற கொம்பைப் போன்று நாமும் கொம்பூதலாமே என்றனர். அப்போது உமர்(ரலி) 'தொழுகைக்காக அழைக்கிற ஒருவரை ஏற்படுத்தக் கூடாதா?' என்றனர். உடனே பிலால்(ரலி) அவர்களிடம் 'பிலாலே! எழுந்து தொழுகைக்காக அழையும்" என்று நபி(ஸல்) கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி ஹதீஸ்  604.

பொருளீட்டும் போதினிலே

பொருளீட்டும் போதினிலே
......பொறுமையைநீ போற்றிடுவாய்
இருள்நீங்க வாழ்வினிலே
.......இடுக்கணையும் மாற்றிடுவாய்!


சதிகாரக் கும்பலையும்
.......சரியாகக் கண்டிடுவாய்
அதிகாரத் தோரணையை
........அழகாக வென்றிடுவாய்!

Thursday, December 26, 2013

துபாய்த் தமிழர்ச் சங்கமம் நடாத்தும் உலகளாவியக் கவிதைப் போட்டி

துபாய்த் தமிழர்ச் சங்கமம் நடாத்தும் உலகளாவியக் கவிதைப் போட்டி

விருப்புத்தலைப்பில் எழுதலாம்

தை முதற் தேதிக்குள் வந்து சேர வேண்டும்

வயது வரம்பில்லை

உலகத்தமிழர்கள் அனைவரும் பங்கு பெறலாம்

தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த கவிதைக்கு, அந்தக் கவிஞரின் வங்கிக் க்ணக்கில் தொகை ( 5001/=உருபா) சேர்ப்பிக்கப்படும்.
From: Kalam Kader <kalamkader2@gmail.com>
தகவல் : புலவர் கவியன்பன் கலாம்

மூன்று பேரும் கோரசாக ஒரே வாய்சில் பதில் அளித்தனர்..!


ஒருநாள், ஓர் அரபி பெண்மணி தன் வீட்டுக்கு வெளியே பார்த்த போது, நீண்ட நரைத்த தாடி வைத்த வயதான மூன்று கிழவர்கள் தம் வீட்டு வாசற்படியில் ரொம்ப நேரமாக அமர்ந்திருக்க கண்டார்.

வாயிற்கதவை திறந்து,
'ஐயா பெரியவர்களே..., தாங்கள் யார் என்று தெரியவில்லை. ஆனால், பசியோடு இருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். வீட்டின் உள்ளே வாருங்கள், ஏதாவது உணவு உண்ணுங்கள்'

மூவரில் ஒரு கிழவர் பதிலளித்தார்.
'குடும்பத்தலைவன் வீட்டினுள்ளே இருக்கிறாரா?'

'இல்லை, ஐயா... வெளியே சென்றிருக்கிறார்'

முகநூலின் முகவரி

அறிந்ததை தர
அறியாததை பெற
கவிதை வடிக்க
கருத்துரை சொல்ல
இறப்பை அறிவிக்க
கண்டதையும் கொட்ட
காணாததைக் காண
காணாமல் போனவர்களை சொல்ல

Wednesday, December 25, 2013

கடந்து செல்


கடந்து சென்றால்
காணலாம் என்றனர்
கடவுளை.

கடந்தகாலத்தைக்
கடக்க முடியவில்லை

கடந்தகால காயங்களைக்
கடக்க முடியவில்லை

என் மிதக்கும் மனதில் பெரிதும் அமர்ந்து கொண்டு உங்கள் உருவம் அசைந்தாடுகிறது

நீங்கள் என்னை நேசிக்க
நான் உங்களை நேசிக்காமல் போனதால்
நீங்கள் என்னை விடுத்து போனீர்கள்
நான் வெளிப்படுத்திய செயல்கள்
நான் உருவாக்கிய இழப்பு என்று இப்போது அறிகின்றேன்

நீங்கள் வெளித்தோற்றத்தில் மனத்தைக் கவரவில்லை
நீங்கள் உங்கள் உள்மனதில் கொண்டிருக்கும் நேசத்தினை
உங்கள் மடல், உங்கள் உள்மனதில் கொண்டிருக்கும் நேசத்தினை

Tuesday, December 24, 2013

இறைவா...

இறைவா...

யாவையும்
பிறக்கவும் இறக்கவும்
வைப்பவன் நீ !
பிறப்பே இல்லாத
பேரதிசயமும்
நீ !

பிரபஞ்சமெங்கும்
பெருங்காற்றை
புரள வைப்பவன் நீ !
அதில்
துளிகூட கொடுக்காமல்
மூச்சுக் காற்றை
மூடி விடுபவனும்
நீ !

யார் நல்லவர்

யார் நல்லவர்
யார் கெட்டவர்
யார் அறிவார்
யாவையும் இறைவனே அறிவான்

நல்லவரை கெட்டவரென்றால் கெட்டவராகலாம்
கெட்டவரை நல்லவரென்றால் நல்லவராகலாம்
மணலில் நல்ல விதைகளை விதைத்தால் நல்லவைகள் கிடைக்கலாம்
மனதில் நல்லதை விதைத்தால் நல்லவராகலாம்!

நான் உன் பார்வையில் இல்லாமல் இல்லை

இறைவா எனக்கு மன்னிப்பை வழங்கிடு
நிறைவாய் நான் உன்னை பிரார்த்தித்து இறைஞ்சுகிறேன்

நான் என் வாழ்நாட்களில் நல்லது செய்யவில்லை
நான் உன்னை நினையாமல் நல்லது செய்ய விடுத்தேன்
நான் வேண்டுமென்றே அனைத்தும் செய்யவில்லை
நான் செய்தவைகள் அறிந்தும் அறியாமலும் செய்தவைகள்
நான் செய்தவைகள் அனைத்தும் நீ அறிந்துக் கொள்வாய் என அறியாமல் போனேன்
நான் சென்ற தவறான வழிகள் அறிந்து இறுதியாக உன் வழி நாடி நிற்கின்றேன்
நான் கேட்கும் ஒரு வாய்ப்பு நல்லது செய்ய வேண்டி
நான் வேண்டுதல் கேட்டு உன்னிடம் நிற்கின்றேன்

சார்பு இல்லாத, தனக்கென்று அரசியல் இல்லாத மனிதர் யார்தான் இருக்கிறார்கள்?

வாழ்த்துகள் மனுஷ்ய புத்திரன்...

இப்படியொரு நிலைத்தகவலை என்னிடமிருந்து பலரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஒரு எழுத்தாளரின் மனைவி பேட்டி என் பொறுப்பில் இருந்த இணைப்பிதழில் வெளியானபோது அதிகமும் பொங்கியவர் மனுஷ்தான். ‘வேலை போக வாய்ப்பிருக்கிறது...’, ‘தனது அரசியலுக்காக இதையெல்லாம் பயன்படுத்திக் கொள்கிறார்...’ என்பது உட்பட பல நிலைத்தகவல்களை எழுதினார்.

இதுபோக பல விஷயங்களில் இருவரும் எதிரும், புதிருமாகத்தான் இருக்கிறோம். சில மாதங்களுக்கு முன் இணையத்தில் குறிப்பிட்ட சிலர் அவரை வக்கிரத்துடனும், வன்மத்துடனும் தாக்கியபோது மவுனமாக நின்றவர்களில், வேடிக்கைப் பார்த்தவர்களில் அடியேனும் ஒருவன்.

இப்படி ஏராளமான முரண்பாடுகள் இருவருக்கும் இடையில் இருக்கின்றன. இதை எல்லாம் அறிந்தவர்கள் இணையத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் இந்த நிலைத்தகவல் ஆச்சர்யத்தை அளிக்கும்.

யாருக்கு வாக்களிப்பது?

மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர் பதவி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் தேர்தலில் போட்டி! வேட்பாளர்களின் மனதினை ஆராய வேண்டும். கிராமங்களில் பல அறிமுகங்கள் போட்டி! பணம் சேர்க்கவா! தோற்றாலும் பரவாயில்லை நமது பெயரும் பிரபலமாக வேண்டும் என்ற எண்ணமா!  அல்லது புகழ் நாடியா! ' என் கண்  ஒன்று போவதை விட அவன் கண் இரண்டும் போக வேண்டும்' தான் வெல்வதைவிட அவன் தோற்பதே முக்கியம்! இப்படி பல கொள்கைகள் பரந்து மக்களை குழப்பத்தில் திணற வைக்கும் தேர்தல் விளையாட்டு.

முதுமையின் சிறப்பு

முதியவர்கள் ஒரு சமூகத்தின் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவர்கள்.

பழுத்த அனுபவங்களைக் கொண்டவர்கள்.
அவர்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வது ஒரு சமூகத்தின் கட்டாய தேவை.

முதியவர்கள் பொதுவாக ஒரு குறிப்பிட்ட வாழ்வு முறைச் சட்டத்திற்குள் தம்மை அடைத்துக் கொள்வதால் அவர்களுக்கு எல்லா நாளும் ஒரேநாள் போலத் தோன்றலாம். வெளியே நின்று பார்ப்பவர்களுக்கும் அங்கே வளர்ச்சி எதுவும் நடைபெறாத ஒரு தோற்றமே தெரியும்.

ஆனால், உணர்வு ரீதியாகவும், சமூக ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் வளரத்தக்க ஒரு இடத்தில் தான் அவர்கள் நின்று கொண்டிருக்கின்றார்கள் என்ற விழிப்புணர்வு அவர்களுக்குத் தரப்பட வேண்டும். வளர்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது மனச்சோர்வு ஏற்படுவதில்லை.]

இளமைப் பருவம்

இஃதொரு
பைத்தியக்காரப் பருவம்.

கெட்டதை நல்லதாகவும்
நல்லதைக் கெட்டதாகவும்
கற்பனை செய்து காட்டும்.

வேகமிருக்கும்
விவேகமிருக்காது.

மூத்தோரின்
மூதுரைகளெல்லாம்
மூளையில் ஏறாது.

முதற்காதல்














முதற்காதல்:

நினைவுகளின் ஒழுங்கைகள் வழியே
இறந்த காலத்தின் புத்தகத்தைப் பார்க்கிறேன்
கள்ளிமுட்களும், செஞ்சந்தனக் கரியும்
பாதங்களை முத்தமிட்ட பாதையில்
அகழிகள், மலைத்தொடர்கள் ஊடாகப்
பின்நடை போடுகிறேன்

கபிலம், கருமை, சாம்பல் நிறங்களில்
இருண்ட கறைகள் நிறைந்த
காலத்தின் மாபெரிய புத்தகத்தில்
ஒரேயொரு பக்கமே உள்ளது
அதில் ஒரேயொரு ஓவியம் உள்ளது
அநேக வர்ணங்கள் நிரம்பிய
வேறெந்த ஓவியத்திலும்
படிந்திராத வர்ணங்கள் நிரம்பிய

Monday, December 23, 2013

தாளாத பாசத்தில் தாய் வீடு போனாய்..

தாளாத பாசத்தில் தாய் வீடு போனாய்
தாளாத துயரத்தில் நான் படும் பாடு நீ அறிவாயோ!
பகற்பொழுதும் கனலாய் சுடுகிறது
பனிக் கொட்டும் இராக்காலமும் அனலாய் சுடுகிறது
படிந்துள்ள தூசியை துடைத்து வைப்பாய்
படிந்துள்ள தூசி நாசியை நெருடுகிறது
உன் நினைவில் என் இமைகள் மூடுமோ!

"செட் ஆகிடுச்சுன்னா தொடர்ந்து நிறைய பிஸ்னஸ் செய்யலாம்"

நான் என்பது பொதுப்பெயர்
-நிஷா மன்சூர்

அது ஒரு கோடைகால உச்சிநேரம்.
பொருளாதார ரீதியிலும் மனரீதியிலும்
ஒரு சிக்கலான காலகட்டத்தைத் தாண்டி வந்திருந்தேன்,
வணிகராகவும் எழுத்தாளராகவும் பரிணமித்த ஒரு தமிழ் எழுத்தாளரை சந்திக்கச் சென்றபோது அவர் கடையில் இல்லை.போனில் தொடர்பு கொண்டபோது
"பார்த்து ரொம்பநாளாச்சே,
வாங்களேன் வீட்டில் சந்திக்கலாம்" என்றார்.

வீடு கிட்டத்தட்ட ஆறு கிலோமீட்டர் தூரமிருந்தது,
இருபது ரூபாய் கேட்ட ஆட்டோக்காரரைப் புறக்கணித்துவிட்டு
நான் நடந்தேபோக முடிவு செய்தேன்( சாப்பாட்டுக்கு உதவுமே).

கணினி பிரச்சினை தீர்வு

கணினியில் இப்போது தான் காலடி எடுத்து வைத்திருக்கிறேன் அதற்குள்
என்ன பிரச்சினை என்றே தெரியவில்லை என்று சொல்பவர்களுக்கும்
கணினியின் புரோகிரமருக்கும் சில நேரங்களின் மண்டை குடைச்சலை
கொடுக்கும் புரோகிராம் பிழை (Error) -க்கும்
எளிதான வகையில் தீர்வு
கண்டுபிடிக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

கணினியில் வித்தியாசமாக ஏதோ பிழை செய்தி காட்டுகிறது நானும்
கூகுளில் சென்று தேடினேன் பல முடிவகள் கொடுத்தாலும் என்னால்
எதை தேர்ந்தெடுப்பது என்று தெரியவில்லை என்று சொல்பவர்களுக்கும்,
புரோகிராம்-ல் சாதாரண Array Function தான் இப்படி எல்லாம் பிழை
செய்தி காட்டுமா என்று எனக்கு இப்போது தான் என்று தெரிகிறது என்று
சொல்வபவர்களுகும் இதற்கு தீர்வு தேடி பல தளங்கள் செல்லவேண்டாம்
ஒரே தளம் அனைத்து கணினி பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்கிறது

Sunday, December 22, 2013

பேஸ்புக் குறித்து வியக்கும் வகையில் நிறைய தகவல்கள் !


இன்று இணையதள உலகில் 1 பில்லியன் பயனர்களுடன் கூகுளுக்கு அடுத்த இடத்தில் தனது ஆதிக்கத்தை செலுத்துவது எது என்று கேட்டால் அது பேஸ்புக் தான்.

ஒரு நாளைக்கு கூகுள் கூட போகாமல் இருந்திடுவோம் ஆனால் பேஸ்புக் போகாமல் மட்டும் நம்மால் இருந்துவிட முடியாது.

அம்மா!


அறுபது வயதுக் குழந்தை ஒன்று
அழுகிறது உனைத்தேடி
உன் உயிர் தந்து
என்னுயிராகிவிட்ட தாயே !
அன்று உன்னருகிருந்து
இன்று உனையும்
இழந்து தனிமரமாய்
குளிருக்குள் உன் வடு
தேடும் பறவையானேன் !

கருத்துரையும் விருப்பமும்(லைக்கும்)

கருத்துரை வழங்கல்

கருத்தை தெரிவிக்கும் உரை கருத்துரையானது
காவியத்திற்கு கருத்துரை
கட்டுரைக்கு கருத்துரை
கவிதைக்கு கருத்துரை
படித்ததற்கு
பார்த்ததற்கு
கருத்துரை வழங்க
அவற்றின் ஞானம் வேண்டும்
அதில் நேர்மை இருத்தல் வேண்டும்
அது ஒரு பக்க சார்புடையதாக இல்லாமல் இருத்தல் வேண்டும்

மூலத்தை விட கருத்துரை சிறப்பாக இருக்கவும் செய்யும்
கவிதை புரியாமல் போகலாம்
கவிதையின் விளக்க உரை
கவிதையை அறிய வைக்கும்
சங்க கால பாடல்கள் பாட நூல்கலாயின
அதனை விளங்க வைக்க ஆசிரியர் தேவைப் பட்டார்
இக்கால புதுக்கவிதை மக்களுக்கு எளிமையாக புரிய வைத்தன
புதுக்கவிதை படங்களில் வர மக்கள் அதனை பாட ஆரம்பித்தனர்
மக்கள் மனதில் பதிய வைத்தன
புதுக் கவிதைகள் மனதில் உள் வாங்கப் பட பழைய யாப்புக் கவிதைகளும் திரும்பவும் அரங்கேறின
தமிழுக்கு புதுக்கவிதையும் சங்க கால பாடல்களின் பாடல்களின் வித்தாக வந்து சேர்ந்தன

அவைகளுக்கு கருத்துரை வழங்குவதில் மக்கள் ஆர்வம் காட்ட தமிழுக்கு மறுமலர்ச்சியானது

" இது சிறந்த கவிதை என்று எளிமையாகச் சொல்லி விடுவது போல எது சிறந்த கவிதை எனச் சொல்ல முடியாது " என்கிறார் பேராசிரியர் வையாபுரிபிள்ளை.

அதுபோல் கருத்துரையும் பல் வகைகளிலும் சிறப்புப் பெற்றது.
அதில் எது சிறந்தது என்ற நிலை உருவானது .
பட்டிமன்றங்கள் கருத்துரையை வளர்க்கச் செய்தன.
கருத்துகள் குவியட்டும்
அறிவு வளரட்டும்
ஞானம் பெருகட்டும்
---------------------------------------------------------------------------

Saturday, December 21, 2013

கேட்டதையும் கொடுப்பான் , கேட்காததையும் கொடுப்பான்.


இறைவனிடம் (அல்லாஹ்விடம்) ஈமானைக் (நம்பிக்கை )
இறையருள் கேட்டேன் ! கொடுத்தான் .


கேட்பேன் ! கேட்டுக் கொண்டே இருப்பேன்
கேட்டதையும் கொடுப்பான் ,
கேட்காததையும் கொடுப்பான்.
கொடுத்ததும் நன்மைக்கே
கொடுக்காததும் நன்மைக்கே .
கேடகவேண்டியவன் அவனைத் தவிர மற்றவன் உண்டோ !
கேட்கவேண்டியது நம் செயல் .
கொடுப்பது அவன் அருள் .
கேட்பதிலும் நம்பிக்கை வேண்டும் .
கேட்பதிலும் பணிவுடன் கேட்க வேண்டும்
கேட்பதையும்  அழகாக கேட்க வேண்டும்
கேட்பதையும் முறையாக கேட்க வேண்டும்
கேட்பதை நல்லதை  கேட்க வேண்டும்
கேட்பதையும் மற்றவர் நலம் நாடியும் கேட்க வேண்டும்
கேட்டது கிடைக்காமல் போனால் வருந்தாமல் இருக்கும் மனம் வேண்டும்

கேட்டேன் ! கொடுத்தான் . கேட்பேன் ! கேட்டுக் கொண்டே இருப்பேன்

இறைவனிடம்
ஒருநாள்
சோம்பலைக் கொல்ல
சுறுசுறுப்பைக் கேட்டேன்
அவன்
சூரியனை அனுப்பி வைத்தான் !

சூடு தாங்காமல்
கொஞ்சம் சுகம் தா என்றேன்
அவன்
இலைகளை
ஆட விட்டான் !

அடக்குமுறையும், அராஜகமும்

அடக்குமுறையும், அராஜகமும்
துரோகங்களும்
எல்லை மீறும்போதுதான்
புரட்சியும் போராட்டங்களும்
மாற்றங்களும்
உருவெடுக்கின்றன.

இன்றையக் குழப்பங்கள்
நாளைய விடியலுக்கு
தெளிவானத் தீர்வை நோக்கி
நம்மை நகர வைக்கட்டும்..

துடுப்பாக இருந்ததுப் போதும்
அடுத்தப் பயணம்
அடுத்தவன் தோணியில்
இல்லாமல் இருப்பது நல்லது.

மாறுங்கள் இல்லை ஏமாறுங்கள்.
ஏந்தும் கரங்களை
இறைவன் ஏமாற்றுவதில்லை.


 Mohamed Salahudeen

“சுழற்சி”

குருதியின் சுழற்சி ஆக்ஸிஜன் கூட்டம்
..............குதித்திடும் இதயமும் ஓட்டம்
கருவினில் சுழற்சிக் குழந்தையாய் ஆக்கம்
................கருதிடும் தாய்மையின் நோக்கம்
மருவிலா மதியின் சுழற்சியால் தேயும்
.........வளர்ச்சியும் பிறையெனக் காயும்
உருவிலே வளர்ச்சி; சுழற்சியின் மாற்றம்
......உணர்த்திடும் முதுமையின் தோற்றம்

தமிழரும் இசுலாமியரும்

உலகம் முழுமைக்கும் இந்திய நாட்டிலிருந்து சூரிய குலச் சோழரால் உப்பு மிளகு சந்தனம் மணிக்கற்கள் ஆடை போன்றவை வணிகப் பெருவழி, கடல்வழிகளிலும்; கொண்டுசெல்லவும் ஏற்றுமதியும் செய்யப்பட்டன. இதனைப் பழந்தமிழ்ப் பாடல் புறநாநூறு-66:
"நளியிறு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உறவோன் மருக !
களி இயல் யனைக் கரிகால் வளவ ! ..."என; காற்றை வசப்படுத்திச் செலுத்தப்படும் நாவாய் ஒட்டுவதில் வல்ல கரிகாலின் முன்னோரின் மகதமும் வங்கமும் இருந்தன.
அரபு வணிகர்கள் வணிக மையங்களைப் 'பந்தர்'- கடைவீதி என அழைத்ததை; பத்.ப 6/5, 7/7, 8/4ல் காணலாம். பிறநாட்டு வணிகமையமாக செங்கடல் வணிகம் திகழ்ந்தது; அங்கும் நமது வணிகமே மேலோங்கியிருந்தது. யவனரால் கிரேக்க மொழியில் எழுதப்பட்ட Periplus of the Erythraei- நூல் எழுதியவரின் பெயர் இல்லை; தமிழ்நாட்டுடனான வணிகம் குறித்தது. கிரேக்கரும் ரோமரும் யவனர் எனக் குறிக்கப்பட்டனர். கி மு 1ஆம் நூ ஆ- ல் ரோமர் எகிப்தைக் கைப்பற்றினர். எகிப்தின் அலெக்சாண்றியத் துறைமுகம் வணிக மையமானது. எரிதிரைக்கடல் என்பதை Maris Erythaei எனக் குறிப்பிட்டனர். அரேபியருடனும் கடல்வழி வணிகமையங்களாக மகதமும் வங்கமும் இருந்ததன. இதனை முல்லைப்பாட்டு:
"நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
நீர்செல நிமிர்ந்த மாஅல் போல
பாடுஇமில் பனிக்கடல் பருகி வலன்ஏர்பு
கோடுகொண்டு எழுந்த கொடுஞ்செலவு எழிலி.. ." என உலகம் முழுதும் வணிகத்தால் வளைக்கப்பட்ட நிலையில் ஆரியர் மற்றும் அலெக்சாந்தர்களின் வரவால் நம்நாட்டின் வணிகம் சீர்குழைந்தது. அதனை நீக்க நீள மேகவண்ண நிறம்கொண்ட தமிழரின் சூரிகுலச்சோழரின் அயல்நாட்டுத் தூதுவன்- வருணன்; அரேபியரின் படைத்துணை பெற அங்குச்சென்றதைக் குறிப்பிடுகிறது. அத்துடன் அரேபியரின் உடல் வலிமை, உடை, வழிபாட்டு முறை குறித்தும் குறிப்பிடுகிறது. இதனால் இசுலாமிய சகோதரர்களின் வழிபாட்டுமுறை எத்துனை தொன்மையானது என்பதை அறிகிறோம். ஆனால் இன்றுவரை அவர்களது வழிபாடு மற்றும் தொழுகை முறைகளை இசுலாமிய சகோதரர்களே அறியாமல் இருந்துள்ளனர் என்பதோடு தமிழரின் தொடர்பும் நம்பிக்கைகளும் எத்தகையதாக இருந்தன என்பதையும் காண்கிறோம்.

Friday, December 20, 2013

யார் நல்லவர்கள் இறைவனே அறிவான்!

மோடி நல்லவர் - கலைஞர்
மோடி நல்லவர் - இன்றைய தமிழ்நாடு முதல்வருக்கும்
மோடி நல்லவர் - பி.ஜே. பி கட்சிக்கும்
இவர்களில் யார் நல்லவர்கள் இறைவனே அறிவான்!

நல்லவரோ அல்லது கெட்டவரோ மோடியை ஆதரிப்பவர்களுக்கு நாம் வாக்கு சீட்டு போடுபவதை விரும்ப மாட்டோம். நாம் ஆதரவு கொடுக்க மாட்டோம் மோடியை ஆதரிப்பவர்களுக்கு. நாம் ஆதரவு கொடுக்க மாட்டோம் என்பது அவர்களுக்கும் தெரியும்

நாம் பல கட்சிகளாக பிரிந்து இருந்தாலும்
நாம் இறைவனுக்கு நல்லவர்களாக இருப்போம்

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் (ஆட்சித் தலைமைக்குக்) கட்டுப்படாமல் (ஓர் ஆட்சித் தலைமையின் கீழ் ஒன்றுபட்ட) கட்டமைப்பிலிருந்து பிரிந்து, பின்னர் (அதே நிலையில்) இறந்துபோகிறாரோ அவர் அறியாமைக்கால மரணத்தையே சந்திப்பார். (கொள்கையோ இலக்கோ இல்லாத) மௌடீகக் கொடிக்குக் கீழே நின்று ஒருவர் போரிட்டு இன மாச்சரியத்திற்காகக் கோபப்படுகிறார்; அல்லது இன மாச்சரியத்திற்கு அழைப்பு விடுக்கிறார். அல்லது இன மாச்சரியத்திற்காகப் போரிடுகிறார் எனில், அவர் என் சமுதாயத்தைச் சேர்ந்தவர் அல்லர்.
யார் என் சமுதாயத்திலிருந்து என் சமுதாயத்திற்கெதிராகப் புறப்பட்டு அவர்களில் இறை நம்பிக்கையாளர்கள் என்றுகூடப் பார்க்காமல் அவர்களில் நல்லவர்களையும் கெட்டவர்களையும் கொன்று, அவர்களில் ஒப்பந்தம் செய்தவர்களிடம் அவர்களது ஒப்பந்தத்தை நிறைவேற்றவில்லையோ அவர் என்னைச் சேர்ந்தவர் அல்லர்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் 3767.

“இறைவனே! நீ எனக்கு ஞானத்தை அளிப்பாயாக. மேலும், ஸாலிஹானவர்களுடன் (நல்லவர்களுடன்) என்னைச் சேர்த்து வைப்பாயாக!” - குர்ஆன் 26:83.

கடல் கண்டேன்


கடல் கண்டேன்
அலைபோல் ஆர்ப்பரிக்கும்
மனம் கொண்டேன்

கடல் கண்டேன்
கடல் ஆழம் போல்
சிந்தனை கொண்டேன்

கடல் கண்டேன்
வருவதை உள்வாங்கும்
திறன் கொண்டேன்

பாவ சுபாவம்


நெய்விளக்கு ஏற்றவோ
நெஞ்சிருண்ட வேளையில்...
பொய்விலக்கி வாழவே
புனிதப் பாதைத் தேடினேன்
மெய்விலக்கம் கண்டபின்
மீண்டும் மீண்டும் பேதைநான்...
செய்வதென்ன பாவமா...?
செய்வதென் சுபாவமா...?

திரியிழந்த தீபமாய்
திரிந்துளைந்த என்னை நீ
நெறியிலே அமர்த்தினாய்
நினைவுகள் திருத்தினாய்
பொறியில் சிக்க வேகமாய்
போகும் பாவ ஜீவனாய்
அறிவிலாது போகிறேன்
ஆண்டவா நீ காத்தருள்...

சோதியில் நிறுத்தினாய்
சூன்யமாய் வழுக்கினேன்
நீதியால் நிமிர்த்தினாய்-அ
-நீதியில் தடுக்கினேன்
தூதினால் துலக்கினாய்
தூயதை விலக்கினேன்
ஆதியாதி ரட்சகா...
அடிமையென்னை ஏற்றருள்...

பறந்து போனவனை நினைத்து புலம்பல்

கனியென வர்ணித்த கன்னங்கள் குழி விழுந்தன
முத்தென வர்ணித்த பற்கள் சொத்தை விழுந்து சிதறின

கட்டான உடல் கலை யிழந்து போயின
உதிரும் முடியும் நிறம் மாறும் முடியும்
பருவ மங்கையாய் இருந்த தோற்றத்தை மாற்றின
இன்னும் இருக்குமிடத்திலிருந்து வர்ணனை செய்கிறாய்

Thursday, December 19, 2013

லுக்மான்(அலை) அவர்கள் தன் மகனுக்கு செய்த உபதேசம்.

பின்து இக்பால்

அல் குர்ஆனிலே ஸூரா லுக்மானில் லுக்மான் (அலை) தன் மகனிற்கு செய்யும் உபதேசம் ஒவ்வொறு பெற்றோர்களுக்கும் சிறந்ததோர் முன்மாதிரியாகும். இன்று பெற்றோர் தம் பிள்ளைகளை எவ்வாறு அனுகுகின்றார்கள்? தம் சிறார்களை அன்பாக அழைத்து அறிவுரை கூறுபவர்கள் மிகக்குறைவு. பிள்ளைகள் சிறியதோர் பிழை செய்தாலும் உடனே ஏசுபவர்கள்தான் அதிகம். இவ்வாரான பிழையான அனுகுமுறைகள் காரணமாகவே பிள்ளைகள் பெற்றோர்களை விட்டும் தூரமாகின்றனர்.

தற்காலத்தில் எல்லோரும் குழந்தை உளவியல் என்று பாடம் போட்டுப் படிக்க விரும்புகின்றனர். இருப்பினும் லுக்மான் (அலை)அவர்களின் உபதேசம் குழந்தை உளவியலுக்கு அடித்தளமாக இருந்தது என்பதை உணரத்தவரிவிட்டனர். இதோ லுக்மான் (அலை) அவர்களின் உளவியலை மையப்படுத்திய அனுகுமுறையை சற்று சிந்தையில் அலசிப்பாருங்கள்.

மயக்க மருந்தில்லாமலேயே அறுவை செய்து கொண்டவர்!

 உர்வத்து இப்னு மூபைர்(ரலி) அவர்கள்(624-692) உடல் பாதிக்கப் பட்டு அவரது ஒரு கால் முழங்கால் வரை எடுக்கப்பட வேண்டிய அவசியம் வந்தது. மருத்துவர் அறுவை செய்யும் போது வலி அறியாமல் இருக்க ஒரு குவளை மது சாப்பிடச் சொன்னார். உயிருக்கு ஆபத்தான நிலை வர அவசியம் கருதி சில நேரங்களில் சில விதிவிலக்கு மார்க்கத்தில் அனுமதித்திருப்பதனையும்  சுட்டிக் காட்டினார். அதற்கு உர்வத்து இப்னு மூபைர் அவர்கள் மறுத்து விட மயக்க மருந்தில்லாமலேயே அறுவை செய்யும்படி மருத்துவரிடம் சொல்லிவிட்டார்கள்.

'அப்படியானால் நான்கு நபர்கள் அவரது உடலைப் பிடித்துக் கொள்ளுங்கள்' என்று மருத்துவர் சொல்ல அதற்கும் உர்வத்து இப்னு மூபைர் அவர்கள் 'தேவை இல்லை உங்கள் அறுவை சிகிச்சையை தொடருங்கள்' என சொல்லி விட்டாகள்.

 இப்னு மூபைர் அவர்கள் இறைவனது பெயரை மனதில் சொல்லி துதித்துக் கொண்டிருக்க நல்ல முறையில் அறுவை சிகிச்சை நல்ல முறையில் சிறப்பாக முடிந்தது.
அல்ஹம்துலில்லாஹ். அனைத்துப் புகழும் இறைவனுக்கே.

 உர்வத்து இப்னு மூபைர் அவர்கள் 'அறுவை செய்து எடுக்கப் பட்ட காலின் பகுதியை முறையாக குளிப்பாட்டி அடக்கம் செய்யுங்கள்'  என மற்றவரிடம் சொல்லும்போது அவர் கூரியது 'அந்த கால் என்னை இறைவனை தொழ என்னை சுமந்துக் கொண்டு பள்ளிவாசலுக்குப் போக இவ்வளவு காலங்கள் உதவியது' என நெஞ்சுருக சொன்ன நிகழ்வு இஸ்லாமிய சரிதத்தில் சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக அமைந்து விட்டது.

வரிகளில் எத்தனை விதம்


ஆட்சியாளர் போடும் வரி
அடிவயிற்றைக் கலக்கும் வரி
மாய்ந்த பின்னும் மனம் வலிக்கும்
மனம் முழுதும் கனமிருக்கும்

வரிகளில் எத்தனை விதம்
வகை வகையாய் முளைத்ததுவே
நிறங்களையும் மிஞ்சிடுமாம்
நிம்மதியும் போனதுவே

Wednesday, December 18, 2013

தங்கத்தை பார்க்க மகிழ்வு


தங்கத்தை பார்க்க மகிழ்வு .
தங்கத்தை வாங்க முடியாமல் விலை உயர்வு .
தங்கம் நிலவரம் அறிய திகைப்பு

தங்கமான மக்களுடன் கூடிய நட்பு சிறப்பு
தங்கத்தில் சுத்த தங்கமும் உண்டு
தங்கத்தில் கலப்படமும் உண்டு
தங்கமான நட்பாக நினைத்து கலப்படமானது
தங்கமான நட்பு கலப்படமானது அறிய கலங்கியதும் உண்டு

அனைத்து நேரமும் அல்லாஹ்வின் (இறைவவின்) அருள் நாடுவோம் !

எதையும் செய்ய ஆரம்பிக்கும் பொழுது
பிஸ்மில்லாஹ்
அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு (ஆரம்பம் செய்கின்றேன் )

எதையும் செய்ய  நினைக்கும்போது
இன்ஷா அல்லாஹ்
அல்லாஹ்  நாடினால்

தவறை எண்ணி வருந்தும் போது
அஸ்தஹ்பிருள்லாஹ்
 அல்லாஹ் பிழை  பொறுப்பானாக

தும்மல் வருவது ...

பனியோடு தூசி கலக்க
நாசி அடைக்க
தும்மல் வர
தும்மலை நிறுத்த
மருந்து சாப்பிட
தும்மல் நிற்க
ஜுரம் வர
மருத்துவர் ஆலோசனை பெற
கூட்டம் அலை மோதும் நிலை

உணவும் உபசரிப்பும் நானும்.....


காற்றைப்போல நீரைப்போல உணவு என்பதும் உயிர்வாழ்வதற்கான ஒரு ஆதாரம்தான் எனினும்
உணவோடு கலந்த உபசரிப்பும்,காலநிலைக்கேற்ற உணவும் நிலப்பரப்புக்கேற்ற உணவும்,
என உணவு ஒரு கலாச்சாரச் சின்னமாகவே மாறிவிட்டது.

கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் யார் வீட்டுக்கு வந்தாலும்
முதன்முதலில் தண்ணீர் கொடுத்து வரவேற்பது வழக்கம்,அத்துடன் வசதிக்கேற்ப நீர்மோர் அல்லதுபழரசம்
அளிப்பதுடன் வீட்டு உறுப்பினர் அனைவரும் வந்து இன்முகத்தோடு வணக்கம் வைத்துவிட்டுச் செல்வார்கள்.
மிகுந்த மனமகிழ்ச்சி அளிக்கும் உபசரிப்பு இது.

ஆனால் எல்லா பகுதிகளிலும் ஒரேமாதிரியான உபசரிப்பும் விருந்தோம்பலும் இருந்ததில்லை,
கோவையில் கிடைக்கும் உபசரிப்பை கன்னியாகுமரியில் எதிர்பார்க்கவியலாது.

Tuesday, December 17, 2013

இந்தியாவின் பொங்கல்..

அமெரிக்காவிற்கான இந்தியத்துணைத்தூதர் தேவயானிகோப்ரகடே வை வீதியில் வைத்து விலங்கு போட்டு அமெரிக்கப் போலிசார் அழைத்துச் சென்றதற்கு இந்தியா கண்டன நடவடிக்கையை எடுத்துவருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

அடையாள அட்டைகளை திரும்பப் பெறுவது, அளவுக்கு மீறிய பாதுகாப்புகளை குறைப்பது, அமெரிக்க அதிகாரிகளுடனான சந்திப்புகளை ரத்து செய்தது போன்றவை ஆறுதலான செய்தி. போபாலில் பல்லாயிரம் மக்களைப் படுகொலை செய்த வாலன் ஆண்டர்சனைத் தப்பவைத்த தேசம்......
இன்று அமெரிக்கப் பள்ளிகள் மற்றும் தூதரகங்களில் பணியாற்றும் இந்தியர்களின் சம்பளவிவரங்களைக் கோரியுள்ளது.அமெரிக்கத் தூதரக அதிகாரிகளின் கூட்டாளிகள் என்ற பெயரில் விசா பெற்று வந்துள்ள ஓரினச் சேர்க்கையாளர்களை இந்தியச்சட்டப்படி கைது செய்யும் அளவுக்கு இந்நடவடிக்கை நீளலாம் எனத் தெரிகிறது.

இவை பழிவாங்கல் நடவடிக்கை என்றாலும், அமெரிக்கர்கள் நம் சட்டத்தை விட மேலானவர்கள் அல்ல என்று காட்டும் காலங்கடந்த முயற்சி எனலாம்.

தேவயானி கோப்ரகடே தன் பணியாளரை மோசமாக நடத்தியிருந்தால் அது குற்றம்தான். ஆனால் ஒரு மிகப்பெரிய நாட்டின் துணைத் தூதரை தெருவில் விலங்குபோட்டு அழைத்துச் சென்றது அகம்பாவச் செயல்.

அப்துல் கலாம், ஜார்ஜ்ஃபெர்ணாண்டஸ், ஷாருக்கான் உள்ளிட்ட இந்தியப் பிரபலங்களை அமெரிக்கா விமான நிலையத்தில் இழிவுபடுத்திய போதும்,,
இந்தியாவையும் அதன் மக்களையும் அத்து மீறி உளவு பார்த்தபோதும் அமைதி(?) காத்த இந்தியா
இப்போதாவது விழித்ததே ....அதற்காக அகமகிழ்ந்து எழுதிய வாழ்த்து...
............................................................................................................

அரோரா 3D அனிமேஷன் மேக்கர் முழு பதிப்பு இலவசமாக

நண்பர் Pirajeeth winniepooh கேட்டுக்கொண்டதற்க்காக இந்த பதிவு. போட்டோஷாபில் ஆர்வம் உள்ளவர்கள்  இது போன்ற அருமையான 3D அனிமேஷன் மென்பொருள்களை கற்றுக்கொள்ளலாம். இதன் சந்தை மதிப்பு $70 ஆகும். இதனை முழு பதிப்பாக  இலவசமாக பெறுவதை இங்கே பார்ப்போம்.


முதலில் அரோரா 3D அனிமேஷன் மேக்கர்  டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.

எல்லோருக்குள்ளும் உறையும் குளம்


குளம் குறித்த கனவுகளும், நினைவுகளும் இல்லாதவர்கள் குளத்தோடான பரிச்சயம் இல்லாதவர்கள். அதிலும் குறிப்பாக பால்யகாலத்தில் கிராமத்துக் குளங்களில் பல்டியடித்தவர்களுக்குள் எப்போதும் உறைந்து கிடக்கும் அந்த கனாக் காணும் குளங்கள். எங்கே சென்றாலும் அவர்கள் அதை ஒரு நினைவுக் குமிழியாகச் சுமந்து திரிகிறார்கள். அவ்வப்போது கிடைக்கும் அழகிய தருணங்களில் அவர்கள் அந்த நினைவுக் குமிழியைத் திறந்து குளத்தின் வாசனையை ஆழமாய் உள்ளிழுக்கின்றனர். இன்னும் சிலர் குளத்தை ஒரு பாயாய்ச் சுருட்டி கக்கத்தில் வைத்துக் கொள்கிறார்கள். வேனிற்காலத்தின் வியர்வை அருவிகளுக்கிடையே குளத்தின் ஞாபகத்தை உதறி விரித்து அதில் ஈரத் துளிகளை இழுத்தெடுக்க முயல்கின்றனர்.

Monday, December 16, 2013

வெளிநாட்டுக் கணவனின் சமையல்

அட்டவணைப் படி
அடுப்படிக்கு;
அடிப்படை உரிமையில்
முதன்மையாக இன்று நான்;

சமையலில்
அரைக்குறை அறிவுடன்;
VOIP கொடுக்கும் நிமிடத்துடன்;
நீ இருக்கும் பலத்துடன்
அடுப்படியில்!

சமையலில்;
புரியாத உன்
கைப்பக்குவத்தில்
புருவம் இரண்டும்
புரியாமல் தவிக்கும்;

தெரியாதச் சூத்திரத்தைப்
பக்குவமாக அலைப்பேசியில்
நீ பாடம் எடுக்க;
சிரித்துக்கொண்டேச்
சளைக்காமல்;
சலித்து எடுக்கும் உன் குறிப்பு!

செவியோடு;
உன்னோடு ஓட்டியிருக்கும்
எனைக் கண்டு;
நண்பர்கள் கிச்சுக் கிச்சுக் காட்ட;
கண் சிமிட்டியப்படி
காய்கறிகள் குதிக்கும்
குழம்பில்;
எனைப் போல!
நன்றி http://itzyasa.blogspot.in/

கூட்டணி பற்றி கூடி ஆலோசனை

அரசியல் பாடம் தந்த தத்துவ மேதைகள் மற்றும் புகழ் பெற்றவர்கள்
கூட்டு சேர்ந்து இந்திய தேர்தலுக்கு யோசனை செய்கின்றார்கள்!






இதில் யார் உள்ளார்கள் என்பதனை கண்டு பிடியுங்கள் . உங்கள் அறிவுக்கு ஒரு விருந்து .

சேவைக் கொள்கை வாகை சூடட்டும்

தேர்தலில் கூட்டு நாட்டுக்கு கேடு
கொள்கை சேவையோடு சேரட்டும்
கொள்கை தனித்து விளங்கட்டும்
சேவைக் கொள்கை வாகை சூடட்டும்

உணவில் கூட்டு இருப்பின் பிடிப்பு
குடும்பத்தில் கூட்டு இருப்பின் பிணைப்பு
கட்சியில்  கூட்டு குழப்பம்
ஆட்சியில் கூட்டு சந்தர்ப்பம்

ஓரினச்சேர்க்கையும் ஒரு பதினாறு குறிப்புகளும்

1. ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணத்தை அங்கீகரிப்பதன் வாயிலாக மனித இனத்திலிருந்து பிரிந்து இன்னொரு இனம் பிரிக்கப் படுகிறது. இனி கணக்கெடுப்பில் தனித்தனியே இரு இனங்களாக கண்டக்கெடுக்கப்படும்.

2. தன் மகன் ஓரினச்சேர்க்கையாளன் எனப்தை எந்த பெற்றோரும் ஏற்பதில்லை. எந்த உறவுகளும் அங்கீகரிப்பதில்லை. அதைப்பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை

3. உலகில் இனப்பெருக்கமே இல்லாத ஓர் இனம் ஓரினச்சேர்க்கையர் இனம்தான். இவர்களுக்கான புதிய வரவுகள் எல்லாம் ஆண்+பெண் உறவுகளால் பிறந்து பின் திசைமாறிப்போகும் பிள்ளைகள்தான்.

தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் சிறப்புக் கட்டுரைப் போட்டி

வணக்கம் நண்பர்களே... தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் சிறப்புக் கட்டுரைப் போட்டிக்கு அழைக்கிறேன்... வாருங்கள்...  வாருங்கள்...
- திண்டுக்கல் தனபாலன்

விளக்கம் காண கீழே உள்ள படத்தை சொடுக்குங்கள்

எத்தனை முக்கியத்துவம் வாய்ந்த மகிழ்ச்சிகள் இங்கே நிகழ்ந்து விட்டன !

சில மணி நேரம் நான் தொடர்பில் இல்லை...

அதற்குள்தான்
எத்தனை முக்கியத்துவம் வாய்ந்த மகிழ்ச்சிகள்
இங்கே நிகழ்ந்து விட்டன !

காங்கிரசுடனோ..
காவிகளுடனோ
கூட்டணி இல்லை என்ற
திமுகவின் பொதுக்குழு முடிவு ...


Sunday, December 15, 2013

பிள்ளையை கிள்ளி விடு பின்பு தாலாட்டு

குடியை தடுக்க விளம்பரம் செய்
குடிக்கும் வியாபாரம் செய்

புகை பிடித்தால் புற்று நோய் வருமென அறிவுறுத்து
புகைப் பிடிக்கும் சிகெரெட் விற்க அனுமதி கொடு
புகைப் பிடிக்கும் சிகெரெட்டுக்கு வரி கூட்டி கஜானாவை பெருக்கு

எட்ஸ் தடுக்க வழி செய்
ஓரினச் சேர்க்கையை அனுமதிக்க சட்டம் வர முயற்சி செய்

இனாமாக மின்சார வழி பயன்படுத்தும் பொருட்கள் கொடு
பணம் கொடுப்பவர்களுக்கும் மின்சாரத்தில் பற்றாக் குறையாக்கு

Saturday, December 14, 2013

இந்தியாவில் ஓரின சேர்க்கை வாழ்க்கை முறையை....

இந்தியாவில் ஓரின சேர்க்கை வாழ்க்கை முறையை பல அரசியல் தலைவர்களும் அமைப்புத் தலைவர்களும் வரவேற்றிருக்கிறார்கள்.

இது முஸ்லிம்களுக்கு அதிர்ச்சியைத் தந்திருக்கிறது.
 ஓரினச்சேர்க்கை பற்றி இஸ்லாம்  )
ஆனால் பெரும்பாலான மக்கள் இதை ஒரு மேட்டராகவே எடுத்துக் கொள்ளவில்லை.

காரணம் இருக்கிறது.
இந்திய கலாச்சாரத்தில் ஓரின சேர்க்கைக்கு பெரிய அங்கீகாரமே இருக்கிறது.
பல மன்னர்கள் அதில் ஆர்வமுள்ளவர்களாக இருந்தார்கள்.

மக்களிலும் பலர் திருமணம் செய்யாமல் வாழ்கிறார்கள்.

வெற்றிதரும் பாதை

தொற்றிவிடும் சோம்பலினைத் தூக்கியெறி(ந்து)  போடு

வெற்றிபெறும் நோக்கத்தை விட்டுவிடா தோடு

பற்றிவிடும் வேகமுடன் பாருலகைச் சுற்றிக்

கற்றுதரும் பாடமும்தான் காண்பதெலாம் வெற்றி!


ஊக்கமதை மனத்தினிலே ஊன்றுவதால் கிட்டும்

வாழ்க்கையிலே வாய்ப்புகளாய் வாசலையும் தட்டும்

தாக்கவரும் சூழ்ச்சிகளைத் தாங்கிடவே நில்லு

போக்கினிலே வாழ்த்துகளும் போற்றுதலும் சொல்லும்

இப்படியும் நடக்கலாம் ! ஒரு காலம் வரலாம் !

ஓரினச்சேர்க்கை குற்றமாக கருதப்படும் நாட்டில் ஒருவர் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக விசாரணையில் நீதிபதியால் குற்றம் சாட்டப்பட்டார் .

குற்றம் சாட்டப் பட்டவர் சொன்னார் 'எங்கள் நாட்டில் ஓரினச்சேர்க்கை குற்றம் என்ற சட்டம் இல்லையே '

Friday, December 13, 2013

மனநிறைவு

கிடைத்த பொருளில் நிறைவு குன்றிவிடுகிறது
கிடைக்காத பொருளில் ஆர்வம் அதிகமாகிறது

கட்டையான மனைவியை பெற்றவன் உயரமான பெண்ணை நாடுவான்

உயரமான மனைவியை பெற்றவன் கட்டையான பெண்ணை நாடுவான் (இது பொதுப்படையான கருத்து அல்ல உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை )

கருப்பு சிகப்பை நாடுவதும் சிகப்பு கருப்பை நாடுவதும் இயல்பு
மாற்றம் மகிழ்வை தரலாம் அது உய்ர்வைதராமலும் போகலாம் (உதாரனத்திற்க்கு தந்தவை உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை )

எதிலும் அவசரம்

பட்டாம் பூச்சி பறப்பதில் அழகு
பட்டாம் பூச்சி நிறமும் அழகு
பட்டாம் பூச்சி கூடு கட்டுவதும் அழகு
பட்டாம் பூச்சி தன் வேலையை தானே செய்வதும் அழகு

அந்த அழகை கண்டு ரசிப்பதும் அழகு
அது கட்டிய கூட்டில் உள் நுழைவதும் அழகு
அது நுழைந்த கூட்டில் வெளி வராமல் தவித்ததில் வருத்தம்
அது நுழைந்த கூட்டிலிருந்து வெளி வர கத்தரியால் அதன் கூட்டை கத்தரியால் வெட்டி பெரிது படுத்த அது வெளிவர அதன் மீது காட்டிய பரிவில் மகிழ்வு

Thursday, December 12, 2013

ஓரினச்சேர்க்கை பற்றி இஸ்லாம்

ஓரினச்சேர்க்கை பற்றி இஸ்லாம்

ஓரினச்சேர்க்கை ஒரு அருவருப்பான செயல் என்றும் மானக்கேடான செயல் என்றும் இஸ்லாம் தெளிவாக சொல்வதுடன் அச்செயலில் ஈடுபட்ட ஒரு சமுதயத்தைக் கல்மாறி பொழிந்து அழித்தாக குர்ஆன்
கூறுகிறது

குர் ஆன் “
27:55. “நீங்கள் பெண்களை விட்டு விட்டு, மோகங் கொண்டவர்களாக ஆண்களை நெருங்குகிறீர்களா? நீங்கள் முற்றிலும் அறிவில்லாத மக்களாக இருக்கிறீர்கள்” (என்றும் கூறினார்
29:28 وَلُوطًا إِذْ قَالَ لِقَوْمِهِ إِنَّكُمْ لَتَأْتُونَ الْفَاحِشَةَ مَا سَبَقَكُم بِهَا مِنْ أَحَدٍ مِّنَ الْعَالَمِينَ

இதயம் இருந்தும் இல்லாமல் போனதோ !


இதயம் கனக்கிறது பொறாமையால்
இதயம் வலிக்கிறது ஆற்றாமையால்
இதயம் அழுகிறது வேதனையால்
இதயம் தொடர்கிறது உயிரோடு இருப்பதால்
இதயம் துர்நாற்றம் வீசுகிறது பொய்மை கலந்ததால்
இதயம் இருந்தும் இதயம் இல்லாமல் போனது
இதயத்தில் இறக்கம் இல்லாமையால்

இதயம் படபடத்தது பாவைகள் கடந்து சென்றமையால்
இதயம் துடித்தது நேசிப்பவள் விலகிச் சென்றமையால்
இதயம் குளிர்ந்தது இயல்பாய் ஒன்றியதால்
இதயம் நேசிக்கச் செய்தது நேசக் கரம் நீட்டியதால்

இதயம் மணம் வீசுகிறது வாய்மை சேர்ந்ததால்
இதயம் மகிழ்கிறது மற்றோரை மகிழ்விப்பதால்
இதயம் மேன்மையானது இறைவனை தொழுததால்
இதயம் கனிவானது இறைவன் அருள் கிட்டியமையால்
இதயம் கனமில்லாதானது கடுமை மனம் அற்றதால்
இதயம் லேசானது மனம் விட்டு பேசியதால்
இதயம் ஜொலிக்கிறது புன்னைகை பூத்ததால்
 இதயத்தின் அடித்தளத்திலிருந்து எழும் நாதம், இறக்கையில்லாமலும் உயர, உயர பறக்கும் தன்மையை தன்னகத்தே கொண்டுள்ளது.. தாக்கத்தை ஏற்படுத்த வல்லது.
அல்லாமா இக்பால் (ரஹ்).

ஃபாஸ்ட் ஃபுட் திருமணங்கள்.

"திருமணங்கள் ஆயிரம் காலத்துப் பயிர்", "வீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் பண்ணிப் பார்" என்பதெல்லாம் ஏறக்குறைய வழக்கொழிந்து விடும் நிலமையில் தொங்கிக் கொண்டிருக்கும் பழமொழிகள்.

முன்பெல்லாம் ஒரு கல்யாணம் முடிவானால்... ஊருக்கே அது ஒரு திருவிழாச் செய்தி. இரு வீட்டாரும் சந்தித்துப் பேசுவதில் துவங்கி, ஒவ்வொரு விஷயமாய் இரண்டு வீட்டுப் பெற்றோர்களும், பெரியோர்களும் பார்த்துப் பார்த்துச் செய்வார்கள். எத் தரப்புக்கும் எந்தக் குறையும் வந்து விடக் கூடாதென்பதில் ஊர்ப் பெரியவர்கள் ரொம்பவே கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருப்பார்கள்.

யாராவது வாய்தவறி ஏதாவது சொல்லி விட்டால் உடனே பெரியவர்கள் முன்னின்றி அதை சமரசம் செய்து வைப்பார்கள். "வாழப் போறவங்க மன நிறைவோட போணும்" என ரொம்பவே பிராக்டிகலான ஒரு பதிலையும் சொல்வார்கள்.