Sunday, December 1, 2013

தமிழ்த் தாய்க்கும் – தந்தையாருக்கும் பெருமை சேர்த்தது !!

பேரன்புடையீர்,


வணக்கம் !


சாரஸ்வதீய சித்ரகர்ம சாஸ்த்ரம் – சிற்ப சாஸ்த்ரம் – ஓவிய சாஸ்த்ரம் – பரத சாஸ்த்ரம் இவைகளில் ஆழ்ந்த ஆராய்ச்சிக்குப் பின்பு ,


தமிழாராய்ச்சியும் சேர...

1982 – ல் எமது தந்தையார் “ஓவிய மேதை” கே.ஆர். வேணுகோபால் சர்மா அவர்களால் கண்டடையப்பட்ட பேரழகு கொஞ்சும் “தமிழ்த்தாய்” திருவுருவத்தை...

தமிழகத்தின் பாரம்பரியமிக்க நாளேடான “தினமணி” கடந்த வாரம் தனது ஞாயிறு கொண்டாட்டம் பகுதியில் முதல் பக்கத்தில் அழகுற வெளியிட்டு


நாடறியச் செய்தது !!

தமிழ்த் தாய்க்கும் – தந்தையாருக்கும் பெருமை சேர்த்தது !!

அதனை உலகத் தமிழர்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி !


என்றும் தங்களுடன்,


ஸ்ரீராம் சர்மா















சற்று முன் திருவள்ளுவரின் உருவத்தை ஓவியமாக வரைந்தவர் ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்கள் மகனார் ஸ்ரீ ராம் சர்மா என்னுடன் சென்னையிலிருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி மகிழ்ந்தார் . அவர் அனுப்பிய படத்தினை பாருங்கள்
- முகம்மது அலி ஜின்னா

------------------------------------------------------------------------------------------------------------

No comments: