Wednesday, December 11, 2013

பிரபலங்கள் வரிசையில் கவிஞர் அபூ ஹாஷிமா வாவர்


அபூ ஹாஷிமா வாவர் அவர்கள் இறைவன் அருளால் தன்னால் முடிந்த அளவு தான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதில் ஒரு நிறைவு கொள்கின்றார்.
உங்களில் உயர்ந்தோர் தான் பெற்ற கல்வியை மற்றவருக்கு எடுத்து உரைப்பவரே உயர்ந்தோர் ஆவர். அது தன் புகழ் நாடி இல்லாமல் இறையருள் நாடி இருக்கும்போது அந்த சேவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த சேவையை செய்தவருக்கு நன்மை வந்தடைவதுடன் அதனால் மற்றவர்களும் பயனடைகின்றனர்.
இந்த வழியில் கவிஞர் அபூ ஹாஷிமா வாவர் அவர்களும் நன்மையடைந்து மற்றவர்களும் பயன் அடைகின்றாகள்.


அவர்கள் "(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்" எனக் கூறினார்கள்.(குர்ஆன் 2:32)

'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்

 இதனை சொடுக்கி படியுங்கள் சொர்க்கமென்று தெரியாதவன் ...

 கவிஞர் அபூ ஹாஷிமா வாவர் அவர் எழுதியநிறைய புத்தகங்கள் நிறைய உள்ளன. மார்க்க பக்தி உடையவர் . அவரைப் பற்றிய கீழ உள்ள காணொளியை பாருங்கள்

 கவிஞர் அபூ ஹாஷிமா வாவர் முகநூல் முகவரி Abu Haashima Vaver 
https://www.facebook.com/abuhaashima.vaver
 அன்புடன்
முகம்மது அலி ஜின்னா

No comments: