Monday, December 30, 2013

இன்பமும் துன்பமும்

உடல் நலம் பாதித்தது
மருத்துவரிடம் சென்றேன்
மருத்துவர் ஊசி வழியே
உடலில் மருந்தை செலுத்தினார்
ஊசி போட்டது வலித்தது
உடல் நலமானது
ஊசி போட்டதால் வந்த வலி துன்பம்
ஊசி போட்டதால் நலமானது மகிழ்ச்சி
இன்பமும் துன்பமும் இணைந்து செயல்படுகின்றது

குழந்தையை பெறும்போது தாய்க்கு வலிக்கின்றது
குழந்தையை பெற்ற பின் தாய் குழந்தையை பார்த்து மகிழ்கின்றாள்

வாழ்வில் பெரும் பகுதி மகிழ்வில்தான் கழிகின்றது
வாழ்வில் சிறு பகுதியே துன்பம் நம்மை வந்தடைகின்றது

துயரம் நம்மை தூய்மை படுத்துகின்றது
துன்பம் நம்மை சிந்திக்க வைக்கின்றது
துன்பமும் இன்பமும் நீடித்து நிற்பதில்லை

இன்பம் வந்தால் இறைவனை மறக்கிறான்
துன்பம் வந்தால் இறைவனை நினைக்கிறான்

எல்லா நிலையிலும் இறைவனை நினைப்பவன்
எல்லா நிலையிலும் சமநிலையில் இருக்கிறான்

No comments: