Monday, December 31, 2018

இவர்கள் சிறந்த பதிவுகள் இங்கு இருக்கும்

புத்தாண்டே வருக புதுப்பொலிவைத் தருக

புத்தாண்டே வருக
புதுப்பொலிவைத் தருக

புதியதொரு ஆண்டு
பிறக்கட்டும் நாளை
சந்தோஷக் கதவுகளைத்
திறக்கட்டும் காலை

மக்களை நேசிக்கும் அரசு
நாட்டில் மலரட்டும்
மணக்காத மலர்களெல்லாம்
மண்ணில் வாடி உலரட்டும்

வாழ்த்துங்கள். வாழுங்கள்.




Sunday, December 30, 2018

*என்னைக் கவர்ந்த வாசகங்கள்...*

*என்னைக் கவர்ந்த வாசகங்கள்...*
 ✳பேசி தீருங்கள்.
பேசியே வளர்க்காதீர்கள்.
 ✳உரியவர்களிடம் சொல்லுங்கள்.
ஊரெல்லாம் சொல்லாதீர்கள்.
 ✳நடப்பதைப் பாருங்கள்.
நடந்ததைக் கிளறாதீர்கள்.
 ✳உறுதி காட்டுங்கள்.
பிடிவாதம் காட்டாதீர்கள்.
 ✳விவரங்கள் சொல்லுங்கள்.

*எதிர்மறை எண்ணங்களை (Negative Thoughts) களைவது எப்படி?*

🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐

*எதிர்மறை எண்ணங்களை (Negative Thoughts) களைவது எப்படி?*

எவ்வளவு உத்வேகமான ஆளாக இருந்தாலும், எதிர்மறை எண்ணங்கள் அவர்களை புரட்டிப்போட்டுவிடும். எதிர்மறை எண்ணங்கள் நம் மனதிற்குள் ஒரு பயத்தைக்கூட்டும் திரைப்படம் போல ஓடிக்கொண்டிருக்கும். அதை நிறுத்துவது மிகவும் கடினம் போல நமக்கு தோன்றும். அவை நமக்கு விரைவில் கொடுப்பது வலியும் வேதனையும்தான். இதை நான் பலமுறை அனுபவித்திருக்கிறேன்.

Saturday, December 29, 2018

எங்கும் இருப்பவனே


அல்லாஹ் அளவற்ற கருணை உள்ளவன்

இந்துத்துவக் குறுமன வெறியர்களின் எதிர்ப்பை ஒட்டி நோய்டா Sector 58 ல் உள்ள பொதுப் பூங்காவில் இதுகாறும் நடந்து வந்த வெள்ளிக்கிழமைத் தொழுகைக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் நேற்று மூன்று தனியார் நிறுவனங்கள் தங்கள் அலுவலகத்தின் மேல்மாடியைத் தன் முஸ்லிம் ஊழியர்கள் தொழுகை நடத்தத் திறந்துவிட்டன.

பாஜகவின் முத்தலாக் சட்டத்தை எதிர்த்து..

Marx Anthonisamy
பாஜகவின் முத்தலாக் சட்டத்தை எதிர்த்து..
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
இவர் ரஞ்சித் ரஞ்ஜன். பீகார் மாநிலத்திலிருந்து காங்கிரஸ் கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட நாடாளுமன்ற உறுப்பினர். பப்பு யாதவின் மனைவி. முத்தலாக் சட்டத்திற்கு எதிராக இவர் நேற்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மத்திய அரசு தற்போது கொண்டுவந்துள்ள மசோதா என்பது பெண்கள் சம்பந்தப்பட்ட மட்டும் அல்ல அது குடும்பவியல் சார்ந்தது இதன் சாதகம்,பாதகம் குடும்பம் சம்மந்தப்பட்டது.

இந்த மாசோதா விவாதம் பொருட்டு திருக்குர்ஆனை உள்ளார்ந்து பொருள்பட படிக்க நேரிட்டது

Wednesday, December 26, 2018

படித்தால் மட்டும் போதுமா?

மிக நீளமான கடல் பாலம் குவைத்தில் திறக்கப்படுகிறது - காணொளி

உலகின் நான்காவது மிக நீளமான கடல் பாலம் குவைத்தில் 2019 பிப்ரவரி இறுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படுகிறது.

குவைத் தற்போது வளைகுடா நாடுகளில் மிக வேகமாக வளரும் நாடுகளின் பட்டியலில் உள்ளது. இந்த நிலையில் அந்த நாட்டின் வளர்ச்சிக்கு கட்டுமான துறை மிக முக்கியமான காரணமாக உருவெடுத்து இருக்கிறது. அதன் ஒரு கட்டமாக குவைத்தில் உலகிலேயே நான்காவது மிக நீளமான கடல் பாலம் ஷேக் ஜாபர் அல் அஹமது அல் சபாஹ் கடல் பாலம் என்ற பெயரில் கட்டப்பட்டு இருக்கிறது. இந்த பாலம் கடல் மீது கட்டப்பட்டு இருப்பதுதான் வியக்கத்தக்க விஷயம் ஆகும்.

Tuesday, December 25, 2018

ஊருக்காகக் கொடுப்பவர்


செள - யென் - பேட் ( Chow Yun-fat ) ஹாங்காங் சினிமாவின் முன்னோடி நடிகர். ஆஸ்கார் விருது பெற்ற " Pirates of the Caribbean" " A better tomorrow" ஆகிய திரைப்படங்களின் மூலம் மேற்குலகில் எண்ணற்ற இரசிகர்களைப் பெற்றவர்.

Crouching Tiger, Hidden Dragon போன்ற திரைப்படங்களின் வழி பெரும் புகழ் சேர்த்தவர்.

இந்தச் செய்திகள் முக்கியமானவை அல்ல. ஆனால், இவர் அண்மையில் வெளியிட்ட அறிவிப்புத்தான் மிகவும் முக்கியமானது.

" எனது இறப்பிற்குப் பிறகு, எனது சொத்து முழுவதையும் நன்கொடையாகத் தருகிறேன்" என அறிவித்துள்ளார்.

பைசல் கான்

by.dr.Vavar F Habibullah






பைசல் கான்
தம்பி பைசல் கான் திருவனந்தபுரம்
நெய்யாற்றங்கரையில் அமைந்த
புகழ்பெற்ற நிம்ஸ் மெடிசிட்டி மருத்துவமனையின் மேனேஜிங்
டைரக்டர் ஆவார்.

சமீபத்தில்
அவரது மருத்துவமனையின்
சோலார் எனர்ஜி செயல்பாட்டுக்காக
ஐக்கிய நாடுகள் சபையின் பாராட்டு
தல்களை பெற்ற அவருக்கு சில
நாட்கள் முன்பு நமது இந்திய
ஜனாதிபதியிடம் இருந்து ஒரு
சிறப்பு அழைப்பிதழ் வந்தது.

மாலத்தீவு அதிபர் கலந்து கொள்ளும்
ராஷ்டிரபதி மாளிகை முக்கிய
விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள அவரை நமது ஜனாதிபதி அழைத்து இருந்தார்.சரியாக
முப்பது விருந்தினர் மட்டுமே கலந்து
கொண்ட அந்த நிகழ்ச்சியில் நமது
நாட்டின் பிரதமரும் கலந்து சிறப்பித்தார் என்பது மிகவும் இனிப்பான செய்தி.

Sunday, December 23, 2018

மானமும் மார்க்கமும் எங்களுக்கு இரு கண்கள்

NET தேர்வெழுத சென்ற முஸ்லிம் மாணவிகளிடம் தலையை மறைக்க அணிந்திருந்த ஹிஜாபை களைய கூறிய அதிகாரிகளிடம் எங்களுக்கு இவ்வுலகின் தேர்வு மதிப்பெண்ணை விட மறுமையின் கண்ணியம் உயர்ந்தது என்று தேர்வை புறக்கணித்து வெளியேறிய கோவா மற்றும் டெல்லி கல்லூரியில் முதுகலை பயிலும்இரு முஸ்லிம் மாணவிகளின் கம்பீர உணர்வு...

Saturday, December 22, 2018

வாழ்க்கைதான் எத்தனை சுவாரஸ்யமானது .

வாழ்க்கைதான் எத்தனை சுவாரஸ்யமானது ...

ஊரிலிருந்து வந்த அலுப்பின் காரணமாக நேற்று வெளியே எங்கும் போகவில்லை.
இரவு நேரத்தில் சும்மா வெளியே கொஞ்ச நேரம் நடந்து வரலாம் என்று கிளம்பினேன்.
என் பேத்திகள் நாங்களும் கூடவே வருவோம் என்று அடம் பிடிக்க அழைத்துச் சென்றேன்.
பக்கத்திலேயே ஓரு பெரிய சூப்பர் மார்க்கெட்.
ஏதாவது வாங்கலாம் என்று உள்ளே
நுழைந்தேன்.
நமக்குத் தேவையான தேவையில்லாத
எல்லாப் பொருட்களும் அங்கே இருந்தன.

தோற்று போனால் வெற்றி கிடைக்கும் ....

எழுதியது யாருனு தெரியலை...

படித்ததில் பிடித்தது ........

தஞ்சையில் இருந்து, சென்னைக்கு பத்திரிகை பணிக்கு வந்தபோது நல்ல சம்பளம்தான். ஆனாலும் ஊதாரி. வீட்டுக்கு போன் போட்டு, ஏதாவது பொய் சொல்லி, “ ரெண்டாயிரம் மணியார்டரில் அனுப்புங்கப்பா” என்பேன். (அப்போது நெட் பேங்க்கிங் கிடையாது)

அப்பாவும் உடனடியாக அனுப்பிவிடுவார். (சம்பளத்தைவிட அதிகமாக அப்பாவிடம் வாங்கியிருக்கிறேன்.)

மணியார்டரில் பணம் அனுப்பும்போது, அந்த ஃபாரத்தில் சில வரிகள் ஆங்கிலத்தில் எழுதி அனுப்புவார் அப்பா. (ஆங்கிலத்திலும் மிகப் புலமை பெற்றவர்) அதைக் கையால் எழுதாமல், யாரிடமாவது தட்டச்சி அனுப்புவார். அது அவரது வழக்கம்.

Friday, December 21, 2018

Singapore:Ameen visited Bhatkal and met Nawayath community in karnataka

Ameen Singapore:
I and Haja(prince tower Nazar mama son) visited many places of Andra, Telungana, karnataka, Kerala historical places. Insha Allaah I will sent you the videos and photos and information of it. Very interesting historical places and facts
Tippu Sultan mosque in bhatkal in karnataka which was built by Tippu Sultan




Tippu Sultan mosque in bhatkal in karnataka which was built by Tippu Sultan

Tuesday, December 18, 2018

அபு ஹாசிமாவின் ரபியுல் அவ்வல் வசந்தம் நூல் வெளியீடு



"மனதிற்கு மகிழ்சியான நிறைவான நிகழ்வு"

அதிர்வு!

தாங்கி நிற்கத் தளமு மின்றி

தொங்கிக் கொள்ள கயிறு மின்றி

அண்ட வெளியில் அந்தரத் தில்

சுழலும் பூமி அதிரும் போது


தன்னில் தழைத்த இயற்கை வளமும்

மனிதன் அமைத்த செயற்கை யாவும்

குளித்தக் குருவி சிலுப்பும் உடல்போல்

சிலிர்த்து   பூமி, உதிரும் போது

நானொரு மாதுளைப் பழத்தின் இதயத்தில் வசித்து வந்தேன்.

நானொரு மாதுளைப் பழத்தின்
இதயத்தில் வசித்து வந்தேன்.

ஒரு விதை சொன்னது,
"ஒரு நாள் நானொரு பெரிய மரமாவேன்.
காற்று என் கிளைகளுக்கிடையில்
ராகம் பாடும்,
கதிரவன் என் இலைகளின் மேல்
நடனம் புரியும்,
எல்லாக் காலங்களிலும் நான்
அழகும் வலிவும் மாறாமல் கொண்டிருப்பேன்."

சூபிஞானி ஜலாலுத்தீன் ரூமி நினைவு தினம்

டிசம்பர் 17.சூபிஞானி ஜலாலுத்தீன் ரூமி நினைவு தினம்.அல் பாத்திஹா.

1207 ஆம் ஆண்டு முதல் 1273 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த ரூமி என்கின்ற மௌலானா ஜலாலுதீன் ரூமி பதிமூன்றாம் நூற்றாண்டு பாரசீக கவிஞர் ஆவார். மிகவும் பிரபலமான கவிஞர் மட்டுமின்றி விற்பனையிலும் சிறந்து விளங்கிய படைப்புகளைக் கொடுத்தவர். இவரது படைப்புகள் பெரும்பாலும் பாரசீக மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. இருப்பினும் சில சமயங்களில் இவர் துருக்கி, அரபு மற்றும் கிரேக்க மொழிகளையும் பயன்படுத்தியுள்ளார். இவருடைய கவிதைகள் உலகின் பல மொழிகளிலும் பரவலாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்டும், பல்வேறு வடிவங்களில் மாற்றம் பெற்றும் சிறப்படைந்துள்ளன. துருக்கி, அமெரிக்கா மற்றும் தெற்காசிய நாடுகளில் இவரது படைப்புகள் மிகவும் பிரபலம்.

அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது


அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக!
-குர்ஆன்:17:23.

குர்ஆன்17:24. இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக; மேலும், “என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!” என்று கூறிப் பிரார்த்திப்பீராக!

Monday, December 17, 2018

இதயம் ஒரு கண்ணாடி



 அண்மையில் முகநூலில் உந்துலுஸ் நூல் வட்டத்திலிருந்து முகம்மது கீலான் என்பவர் நபிகள் நாயகத்தின் பொன்மொழி ஒன்றைப் பதிவிட்டிருந்தார். “சமூக ஊடகம் மற்றும் தொடர்ச்சியான செய்திப்பரப்பு உள்ள இக்காலத்தில் புழங்குவதற்கு மிகவும் கடினமான ஹதீஸ் இது” என்று அந்த நபிமொழியை அவர் குறிப்பிட்டிருந்தார். நபித்தோழர் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் அந்த ஹதீஸ் இதுவே:
 ”தனக்குத் தேவையற்ற விஷயங்களைத் துறந்துவிடுதல் ஒரு நபரின் அழகிய இஸ்லாத்தில் உள்ளதாகும்” (’மின் ஹுஸ்னி இஸ்லாமில் மர்-இ தர்க்குஹு மா லா யஃனீஹி’ - நூல்: திர்மிதி). இந்த வாசகத்தில் உள்ள ”தர்க்” என்னு சொல்லுக்குத் துறத்தல், விட்டுவிடுதல் என்று அர்த்தம்.

சிற்றின்பமும் ... பேரின்பமும்....*

ஒரு ஈயும், தேனீயும் ஒரு நாள் வழியில் சந்தித்துக் கொண்டன. ஈ , தேனீயிடம் கேட்டது -நண்பா , சாப்பிட்டு விட்டாயா ?
தேனீ சொன்னது ," இல்லை நண்பா , அதற்காகத்தான் பூக்களைத் தேடிப் பறந்து கொண்டிருக்கிறேன்.தேனீயின் பதிலைக் கேட்ட ஈ விழுந்து விழுந்து சிரித்தது .
பூமி முழுக்க சுவையான உணவுகள் இறைந்து கிடக்க நீ பூக்களைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறாயே....?

உனக்குக் கண்களில் கோளாறா இல்லை புத்தியில் கோளாறா....?

Thursday, December 13, 2018

மக்கள் தலைவர் வந்தவாசி கே.ஏ. வகாப் சாகிப்

by சேயன் இப்ராகிம்

மக்கள் தலைவர் வந்தவாசி கே.ஏ. வகாப் சாகிப்


வடஆற்காடு மாவட்டத்திலுள்ள (தற்போது திருவண்ணாமலை மாவட்டம்) வந்தவாசிக்கு இந்திய வரலாற்றில் மிக முக்கியமான இடம் உண்டு. 22.01.1760 அன்று இங்கு நடைபெற்ற மூன்றாவது கர்நாடகப்போரில் அயர்புட் தலைமையிலான ஆங்கிலேயக் கம்பெனிப்படை, தாமஸ் ஆர்தர் தலைமையிலான பிரெஞ்சுப் படையைத் தோற்கடித்தது. 
இப்போரின் மூலம் இந்தியாவில் பிரான்ஸ் நாட்டின் ஆட்சி முடிவுக்கு வந்தது. ஆங்கிலேயர்களின் கை ஓங்கியது. அவர்கள் படிப்படியாக இந்தியாவிலிருந்த அனைத்து பெரிய, சிரிய அரசர்களை வென்று முழு இந்தியாவையும் தங்களது குடையின் கீழ் கொண்டு வந்தனர். இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க வந்தவாசி நகரில் முஸ்லிம்கள் கணிசமாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நகரைப் பூர்வீகமாகக் கொண்ட முஸ்லிம்கள் தவிர, தமிழ் நாட்டின் தென்பகுதியிலிருந்தும் முஸ்லிம்கள் இந்நகருக்குப் பல்வேறு காலகட்டங்களில் வந்து குடியேறியுள்ளனர். இந்நகரில் பிறந்த சமூதாயச் சேவையாளர் ஜனாப் கே.ஏ. வகாப் அவர்களைப்பற்றி இந்த இதழில் பார்க்கவிருக்கிறோம்.

Who will cry when you die in Tamil

Wednesday, December 12, 2018

உலகத்தையே ஜெயிக்க நினைத்த பிரான்ஸ் மாவீரன் நெப்போலியன்

உலகத்தையே ஜெயிக்க நினைத்த பிரான்ஸ் மாவீரன் நெப்போலியன் கடைசி காலத்தில் பிரிட்டனிடம் தோல்வி அடைந்தார். தோல்வி அடைந்த நெப்போலியனை பிரிட்டிஷ் ராணுவம் அவரை சிறை பிடித்து ஆப்பிரிக்க தனிச்சிறையில் தனிமையில் வைத்தது. சிறையில் மன உளைச்சலில் அவரின் கடைசி காலம் கழிந்தது. அவரை பார்க்க வந்த அவரின் நண்பர் ஒருவர் அவரிடம் ஒரு சதுரங்க அட்டையை கொடுத்து “இது உங்களின் சிந்தனையை செயல்பட வைக்கும் தனிமையை போக்கும்” என்று கூறி அவரிடம் கொடுத்தார். ஆனால் சிறை படுத்தி விட்டார்களே என்ற மன உளைச்சலில் இருந்த மாவீரனுக்கு சிந்தனை செயல்படாமல் அதன் மீது கவணம் போகவில்லை. சிறிது காலத்தில் இறந்தும் போனார்.

அப்பா

அப்பா

அன்புள்ள மகனுக்கு,

மூன்று காரணங்களுக்காக நான் இதை உனக்கு எழுதுகிறேன்:

1. வாழ்க்கை, நல்ல வாய்ப்பு, இடையூறுகள் ஆகிய அனைத்தும் முன் மதிப்பிட்டு அறிய(கணிக்க) முடியாதவை. தாம் எவ்வளவு காலம் வாழ்வோம் என்று எவரும் அறிவதில்லை. சில கருத்துக்களை / அறிவுரைகளை சரியான நேரத்தில்(முன் கூட்டியே) கூறிவிடுவது நல்லது.

2. நான் உன்னுடைய தந்தை. நான் உனக்கு இதனை கூறாவிடில் உனக்கு இதனை யாரும் கூறப் போவதில்லை.

3. நான் உனக்கு எழுதுவது யாதெனின், எனக்கேற்பட்ட சிறு அளவிலான சொந்த அனுபவங்களேயாகும். இது ஒரு வேளை தேவையற்ற அதிகப்படியான இதய வலிகளிலிருந்து உன்னைக் காக்க இயலும். .

தந்தி டி.வியை. விட்டு விலகியது ஏன்? Rangaraj Pandey Quits Thanthi TV

��������Why thousands of Palestinian refugees are moving out of Lebanon | Al...

Al Jazeera English | Live

கடந்த வாரம் நடந்த முக்கிய உலக நிகழ்வுகள்

பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 10/12/18 | BBC Tamil TV News 10/...

தமிழ்நாட்டில் முதலீடு செய்வது ஏன்? – லைகா குழுமத் தலைவர் பிரத்யேக பேட்டி

Monday, December 10, 2018

இறைவனை பழிக்காதீர்!!!


 Colachel Azheem
***************************
இறைவன் படைப்பினில்
இயற்கை சிறந்தது.
மனிதனின் சுயநலம்
நாநிலம் நசிந்தது.
காற்று சுழல்வதும்
நிலங்கள் அதிர்வதும்
புயலும் பெருமழையும்
இறைவன் சக்தியே!

ஜெர்மனியரின் இஸ்லாமிய தமிழாய்வு

ஜெர்மனியரின் இஸ்லாமிய தமிழாய்வு
WRITTEN BY நூருத்தீன்.

ஜெர்மனியின் பெர்லினிலுள்ள பல்கலைக்கழத்தின் பேராசிரியர் டாக்டர் டார்ஸ்டன் (Torsten Tschacher). இவரது பாடத்துறை இஸ்லாம். தெற்காசியாவில் குறிப்பாக ‘தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் இஸ்லாம்’ என்பதில் தனது கவனத்தைச் செலுத்தி ஆராய்ச்சிகள் பல செய்துள்ளார்.

தூய்மை - 100%

தங்கம் என்பது ஒரு தனிமையான கனிப்பொருள்: உலக மக்கள் யாவராலும் போற்றப்படும் உலோகம். உலக நாடுகள் அத்தனையும் தங்கள்

புழக்கத்திலுள்ள நாணயமாற்று விகிதத்தை இந்தத் தங்கத்தின் மதிப்புடன் ஒப்பிட்டே நிலைநிறுத்துகின்றன. இப்படிப்பட்ட விலையுயர்ந்த மதிப்புமிக்க உலோகம் 100க்கு 100 தூய்மையுடன் நமக்குக் கிட்டுவதில்லை. ஒரு துண்டு தங்கத்தை நாம் எத்தனை வகையான ரசாயன சுத்திகரிப்புக்கு அதி கவனத்துடன் உட்படுத்திய போதினும், காற்றில் மிதக்கும் தூசு, உருக்கும் கருவியிலுள்ள அழுக்கு அல்லது புழுதி அதில் ஒட்டிக்கொண்டுவிடுகிறது. எனவேதான், தங்கக் கட்டிகளை ‘பிஸ்கட்’டாக (Biscuit) வடித்து விற்கும் ஸ்விட்ஸர்லாந்து நாட்டு ரசாயனக்கூடம், ஒவ்வொரு துண்டும் எத்தனை கிராம் எடை என்பதை அதன்மீது பொறிக்கும்போதே, அது 99% தூய்மையுடையது என்பதையும் உறுதிப்படுத்தியிருப்பதைக் காண்கிறோம். அதாவது 100 கிராம் எடையுள்ள தங்கக் கட்டியில் 99 கிராம் மட்டுமே தங்கம்; மீதி 1 கிராம் வேறு அன்னியப்பொருள் என்பது விளக்கம். இன்னம் சற்றுத் தெளிவாகச் சொல்வதென்றால், 1 கிலோ எடையுள்ள தங்க ‘பிஸ்கட்’ கட்டிகளை வாங்க நாம் கொடுக்கும் பணம், 990 கிராம் தங்கத்துக்கும் 10 கிராம் அழுக்குக்கும் செலுத்தப்படுகிறது என்னலாம். எனவே, 100% தூய்மையான தங்கம் எங்கும் கிடைக்காது; கிடைக்க வழியுமில்லை.

Monday, December 3, 2018

தினம் ஒரு செய்தி - 145 | பகுதி - 02

இந்த ஒரு நிமிட வீடியோவைப் பாருங்கள். நாம் தமிழர் கட்சி யூடியுபில் நாகூர் ரூமியின் தன்னம்பிக்கை வாசகங்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. அதுவும் உலகப் புகழ் பெற்ற மேலை நாட்டு அறிஞர்கள் வரிசையில்.

Arabic Sulaimani Tea Recipe in Tamil | அரபிக் சுலைமானி டீ |Hot & Cold | ...

Sunday, December 2, 2018

அனைவரையும் கலங்கடித்த பிரகாஷ்ராஜ் பேச்சு...Prakash Raj Emotional speech ...

#பூவாது_காய்க்கும்_மரம் #கவி_கா_மு_ஷெரிப்

Abu Haashima
20 hrs ·
#பூவாது_காய்க்கும்_மரம்
#கவி_கா_மு_ஷெரிப்

கா.மு.ஷெரிப் ...
இந்த வார்த்தை தமிழ் இலக்கிய உலகின் கவித்துவம் பொங்கும் கல்வெட்டு வார்த்தை.

கவி. கா.மு. ஷெரிப் உன்னதங்கள் நிறைந்த கவிஞர்.
ஆன்மிக சிகரங்களில் வாழ்ந்தவர்.
ஒழுக்கத்தின் வடிவாகத் திகழ்ந்தவர்.
தனக்குள் வற்றாத கவிதைச் சுனையைக் கொண்டிருந்தவர்.
பண்பாளர்
தாயுள்ளத்தோடு படைப்பாளிகளைப் பாராட்டும் பேராண்மை கொண்டவர்.

"அன்னையைப் போலொரு தெய்வமில்லை- அவள்
அடிதொழ மறுப்பவர் மனிதரில்லை."
"பாட்டும் நானே பாவமும் நானே"
என்பது போன்ற காலத்தால் அழிக்கமுடியாத அரிய பல திரைப்படப் பாடல்களை எழுதி காற்றையும் மணக்கவைத்தவர்.

சிறந்த அறிஞர்கள் பத்து அடையாளம்


வணக்கம் புரிபவரை விட ஓர் அறிஞரின் சிறப்பு நட்சத்திரங்களை விட சந்திரனின் சிறப்பை போன்றதாகும். அறிஞர்கள் இறைத்தூதரின் வாரிசுகள். இறைத்தூதர்கள் தங்கம், வெள்ளி நாணயங்களை அனந்தரப் பொருளாக விட்டுச் செல்லவில்லை. அவர்கள் விட்டுச் சென்றதெல்லாம் “இல்ம்” என்ற ஞானத்தைத்தான். அதை எடுத்துக்கொண்டவர் மாபெரும் நற்பங்கை அடைந்துகொண்டார் என்று மார்க்க அறிஞர்களின் சிறப்பை அகிலத்துக்கு உணர்த்தியுள்ளார்கள் நபி (ஸல்) அவர்கள். (அபூதர்தா(ரலி), அபூதாவுது) அந்த அறிஞர்களின் பத்து அடையாளங்கள் இதோ…
Ø இறை பொருத்தம் பெறும் ஆர்வம்

எம்வழியை ஒளியாக்கு...!


சத்தியசன் மார்க்கமதால்
சாந்திதரும் நோக்கமுடன்
உத்தமநன் நபிவந்தும்
உயர்வடையாதுள்ளோமே!

வேதங்கள் உண்டென்றோம்
விண்ணவரும் உண்டென்றோம்
போதனைகள் பெற்றபின்னும்
பொய்மைகளில் புரள்வதும்ஏன்?

தொழுகைஇலாப் பாவியராய்த்
தொலைவதுவோ? உனக்கஞ்சும்
அழுகையிலாப் பாவியராய்
அழிவதுவோ, அல்லாஹ்வே ....

"நீதிக்கான இருபத்தி ஏழு வருட ஏக்கம்"


புதிய விடியல் டிசம்பர் இதழில் பாபர் மசூதி தொடர்பான  
"நீதிக்கான இருபத்தி ஏழு வருட ஏக்கம்"

ஒரு வெற்றிச் சின்னத்தின் நிழலில்..! / நிஷாமன்சூர்



நெப்போலியனின் பீரங்கித்துளையிலிருந்து உதிரும்
இரும்புத்துருவை விழுங்கி இனியும் பசியாற இயழாதெனக்
கண்கலங்கியழும் அகழி முதலைகளின்
ஒட்டினவயிற்றைத் தடவிக் கொடுத்தான்
சரபோஜி மாமன்னன்

கோட்டைக் காவலர்கள் கண்ணயரும் வேளை
பூக்கார பேரிளம்பெண்ணின் நைந்துகில் களைந்து
சிறுமுயக்கப் புணர்ச்சி கொண்ட கயல் வணிகன்
இடுப்பாடை இறுக்கிப்பின் வெறுங்கூடை சுமந்தான்