Tuesday, February 28, 2012

மக்களுக்குள் மதப் போர்வையில் பிரிந்து நிற்பது ஏன்!


 மக்களுக்குள் மதப் போர்வையில் பிரிந்து நிற்பது ஏன்!

அரசியல் வாதிகளும் இனவெறி கொண்டவர்களும் நம்மை பிரிந்து இருக்க வைத்து தன்னுடைய ஆதாயத்தினை வளர்த்து வைக்க முயற்சிகின்றனர். இப்பொழுது இருக்கும் கல்வி  முறையும் இதனைச் சார்ந்ததாக இருக்க முயற்சி எடுக்கப் படுகின்றது .


 நான் இஸ்லாம் வழியை விரும்பியும் அறிந்தும்  பின்பற்றுபவன் .நான் பிறந்தது இறைவன் அருளால் முஸ்லிமாக. ஆனால் நான் மற்ற மார்க்கத்தினை பின்பற்றுபவரை மதிக்கின்றேன் .எனக்கு  குடும்ப  அளவிலும் தனிப்பட்ட முறையிலும் கணக்கிலடங்காத நண்பர்கள் உண்டு .இதில் நாத்திக கொள்கை கொண்டவர்களும் அடக்கம் . நான் யார் மனதினையும் புண்படுத்தும்படி எழுதுவதில்லை . நான் உலகக்  குடிமகனாக(Citizen Of  The World உலகப் பிறஜையாக) இருக்க விரும்பினாலும் இந்திய பிரஜையாக இருப்பதிலும் தமிழனாக இருப்பதிலும் பெருமையடைகின்றேன்.இஸலாம் என் வழி தமிழ் என் மொழி .     உங்கள் மார்க்கம் உங்களுக்கு உயர்வாக இருக்கலாம்.

உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.”
-குரான் 109:6.

நான் இஸ்லாம் வழியை விரும்பியும் அறிந்தும்  பின்பற்றுபவன்
 நான் பேஸ் புக்கில் நல்ல நண்பர்களைப்  பெற்றுள்ளேன் ஆனால் அது அதிகமாக முஸ்லிம்களாக இருக்கின்றனர்.நான் அனைவரையும் நேசிக்க மற்றும்  யார் விரும்பினாலும் தடையில்லாமல் நண்பர்களாக  ஏற்றுக் கொள்ள விரும்பினாலும் ஏற்றுக் கொள்கின்றேன்  அதில்  அதிகமாக முஸ்லிம்களாக இருக்கின்றனர்.     ஆனால் ட்விட்டரில் அப்படி அல்ல.  ட்விட்டரில் இஸ்லாமிய நண்பர்களை விட அதிகம்  இது ஏன் என்று எனக்கு விளங்கவில்லை. இந்தியாவில்தான் மக்களுக்குள் மதப் போர்வையில் பிரிந்து நிற்கின்றனர் அதில் தமிழ்  நாடும் விதிவிலக்கல்ல . இது மிகவும் வருந்த வேண்டிய செய்தி.எத்தனை மதங்கள்  ஜாதிகள் அவர்களுக்குள் போராட் டங்கள்!

ஒரு நபித்தோழராகிய சஹாபி நாயகத் திருமேனியை நோக்கி, ‘நம் இனத்தின் மீது பற்றுக் கொள்வது, அதிலும் தீவிரமான பற்றுக் கொள்வது தவறா?’ என வினாத் தொடுத்தார். இவ்வினாவுக்கு விடை கூற வந்த அண்ணல் நபிகள் நாயகம் (சல்) அவர்கள் ‘ஒருவர் தன் இனத்தின்மீது பற்றுக்கொள்வது இயற்கை. அது பற்றாக மட்டுமே வளர்ந்து வளமடைய வேண்டுமேயல்லாது, வெறியாக மாறிவிடக் கூடாது’ என்றார்கள்.
     
  உங்கள் மார்க்கம் உங்களுக்கு உயர்வாக இருக்கலாம்.என் மார்க்கம் எனக்கு உயர்ந்தது. இது நல்ல கொள்கையாக இருக்கலாம் என்பதே என் கருத்து. நேசிப்பதற்கும் கருத்து வேறுபாடுகளுக்கும்  நட்பில் எந்த காலத்திலும் மோதல் வரக்கூடாது . நாம் பெரியார் ,அண்ணா ,கலைஞர்  பேராசிரியர் அன்பழகன்  மற்றும் பலர்  கொண்டிருந்த கொள்கை நம்மிடமிருந்து மாறு பட்டிருந்தாலும் அவர்களது   உயரிய எழுத்துக்களை கருத்துகளை    விரும்பி  படிக்கின்றோம்.அதில் நமக்கு கட்டாயம் உடன்பாடு இருக்க வேண்டும்   என்ற அவசியமில்லை.
  நாம் பல சரித்திரங்களை[ப் நம்முடன் வாழும் மக்களைப் பற்றி அறியாமல் இருக்கின்றோம் என்பதுதான் உண்மை . என்னுடன் படித்த கல்லூரி நண்பர் என்னிடம் கேட்டார் .  முஸ்லிம்கள் வீட்டில் சைவ உணவு சாபிடுவார்களா மற்றும் உங்கள் வீட்டில் தமிழ் பேசுவார்களா என்று! நான் பிறப்பால் தமிழன்  வீட்டில் தமிழ் தவிர வேறு மொழி  பேசுவதுமில்லை மற்ற மொழியும் தெரியாது . உலகத்தில் அணைத்து நாட்டிலும் முஸ்லிம்கள் உள்ளனர் அந்தந்த நாட்டில் பிறந்தோர் அந்த மொழிதான் பேசுவர் .கேரளாவில் உள்ளவர்  மலையாளத்திலும் ஆந்திராவிலுல்லோர் தெலுங்கிலும் மற்ற இடங்களில் உள்ளவர் அந்த மொழிதான் அவர்களுக்கு தாய் மொழியாக இருக்கும் என்று விளக்கமளித்தேன். அவர் இத்தனை ஆண்டுகள் தெரியாமல் இருந்தேனே என வருத்தப் பட்டதுடன் .நாம் படிக்கும் பாடத்தில் இவ்வகையான பாடங்களும் அவசியம் சேர்க்கப் படவேண்டும் என சொன்னார். காஸ்மீரில் அதிகமாக வசிக்கும் மக்கள் முஸ்லிம்கள் அவர்கள் உருது பேசுகின்றனர். நம் நேரு அவர்களும் காஸ்மீர் வழியில்   வந்தவர்தான்.அங்கு நடக்கும் ஒரு  தீவிரவாதியும் முஸ்லிம்தான் அதற்கு பலியாவதும் முஸ்லிம்தான். தீவிரவாதத்தில் ஈடுபடுவோர் எல்லா மதத்திலும் உள்ளனர் . ஆனால் சில  தீவரவாதி நடத்தும் செயலை இஸ்லாமிய தீவிரவாதியால்  நடத்தப்பட்டது என்று பெரிதுபடுத்தி எழுதியும்  பேசியும் வருவோர்தான் உண்மையான தீவிரவாத்தினை தீண்டுவோராக உள்ளனர் . இஸ்லாம் தீவிரவாத்தினை  ஆதரிக்கவில்லை . ஜிஹாத் என்பது மனதினை கட்டுப்படுத்துவதுதான். உலகில் சமாதானத்தையும் அமைதியையும் நீதியையும். நிலைநாட்டுவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சியே உண்மையான ஜிஹாத்

"முஃமின்களே!  ஒரு சமூகத்தார் பிறியதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்;

(அவ்வாறே) எந்தப் பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) – ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்;

இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள்,

இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்! ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்!

எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள்."
-திருக்குர்ஆன் 49:11
"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை.

 Friends are like flowers நண்பர்கள் - நட்பு குறள் 

788: உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு.

Monday, February 27, 2012

ஆண்ட்ராய்டு மொபைலில் மக்கா, மதீனா நேரடி ஒளிப்பரப்பு


ஆண்ட்ராய்டு மார்க்கெட்டில் 24 மணி நேரமும் மக்கா, மதீனாவை நேரடி ஒளிப்பரப்பு செய்யும் அப்ளிகேஷன் டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கில் கிளிக் செய்யவும்.


  

Makka Live 24 Hours
Madinah Live 24 Hours






Source : http://vadakaraithariq.blogspot.in/
Makkah latest pictures- SUBHAN ALLAH


பொதுசேவைக்கு பாராட்டு தெரிவித்து மு.க.ஸ்டாலினுக்கு ''கென்டக்கி கர்னல்'' விருது

சென்னை : திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு அமெரிக்க நாட்டின் கென்டக்கி மாகாணத்தின் ‘‘கென்டக்கி கர்னல் விருது’’ வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து திமுக தலைமை நிலையம் நேற்று வெளியிட்ட அறிக்கை: முன்னாள் துணை முதல்வரும் திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலினுக்கு அமெரிக்க நாட்டின் கென்டக்கி மாகாணத்தின் மிக உயரிய ‘‘கென்டக்கி கர்னல் விருது’’ வழங்கப்படுகிறது என்று அந்த மாகான ஆளுநர் ஸ்டீவன் எல். பெஷேர் அறிவித்துள்ளார்.

Sunday, February 26, 2012

ஒரு கழுதையின் கதை


டெரெக் லின் என்ற தாவோ அறிஞர் ஒரு கழுதையின் கதையைக் கூறியதை சமீபத்தில் படிக்க நேர்ந்தது.

பண்டைய சீன தேசத்தில் ஒரு கிராமத்தில் சக்கரவர்த்திக்குக் கோயில் எழுப்ப
தீர்மானிக்கப்பட்டது. அப்பகுதியின் கவர்னர் மிகக் குறுகிய காலத்தில்
கோயிலைக் கட்டி முடிக்க கிராமத்தினருக்குக் கட்டளை இட்டார்.

கோயில் கட்டத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் தடுப்புச் சுவர் இல்லாத
கிணறு ஒன்று இருந்தது. எனவே கட்டிடப் பணி துவங்கும் முன் அக்கிணறை மூட வேண்டி வந்தது.மண்ணைப் போட்டு மூட முடிவெடுத்த கிராம மக்கள், மண்ணைச் சுமக்க ஒரு கழுதையைப் பயன்படுத்தினர். சிறிது பணி புரிந்த பின் ஒரு முறை கழுதை கிணற்றின் விளிம்பு வரை சென்று சறுக்கி கிணற்றுக்குள் விழுந்து விட்டது.கிணற்றுக்குள் விழுந்த கழுதையை மீட்க சில முறை முயற்சித்த மக்கள் அது முடியாமல் போகவே அது உள்ளே இருக்கையிலேயே அந்தக் கிணற்றை மூட முடிவு செய்தனர். கழுதையைக் காப்பாற்ற நேரம் எடுத்துக் கொண்டால் கவர்னர் தந்த காலக் கெடுவுக்குள் கோயில் பணியை முடிக்க முடியாது என்று அவர்கள் எண்ணினர்.

Saturday, February 25, 2012

அத்தா

அத்தா என்பது பழந்தமிழ்ச் சொல்
  அத்தன் என்பதுதான் அத்தா என்று அழைக்கப்படுகிறது. அத்தன் என்றால் தகப்பன் என்று பொருள்.
பழைய இலக்கியங்களில் அத்தா என்ற சொல்லை நிறைய இடங்களில் காணலாம். அத்தா அச்சன் முத்தன் அப்பா என்பதெல்லாம் தகப்பன் என்பதனையே குறிக்கும்.
"அத்தா இது கேள் என ஆரியன் கூறுவான்" கம்பராமாயணம்.
"அத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே" தேவாரம்.




எனது அன்புள்ள அத்தா சி .ஈ .அப்துல் காதர் சாஹிப்.

படத்தில் உள்ளவர் நீடூர். ஹாஜி சி .ஈ .அப்துல் காதர் சாஹிப் அவர்கள்



       தனது சகோதரர்   ஹாஜி சி .ஈ .அப்துல் ரஹ்மான் சாஹிப் அவர்களுடன்


    அப்துல் காதர் மயிலாடுதுறையில் பாத்திரக்கடை வைத்திருந்தார்.  நல்ல வியாபாரம்.  திருமணச் சீர் செய்கிறவர்கள் பட்டியலைக் கொண்டு வந்து கடையில் கொடுத்து விட்டுப் போய் விடுவார்கள்.  பாத்திரங்கள் மாட்டு வண்டியில் போய்த் திருமண வீட்டில் இறங்கிவிடும்.  அவ்வளவு நம்பிக்கை. ஊரில் நல்ல செல்வாக்குடன் இருந்தார். “அவர் கடை வீதியில் வரும் போது மற்றக் கடைக்காரர்கள் எழுந்து நின்று கைகூப்புவார்கள்” என்று, நீடூர் பெரியார் அப்துல் மஜீது தெரிவித்தார்.  அவ்வளவு மதிப்பு, மரியாதை!
ஊரில் என்ன பிரச்சினை என்றாலும், இவரிடம் வந்து முறையிடுவார்கள்.  இவர் விசாரித்துத் தீர்ப்புக் கூறுவார்.  இரு தரப்பாரும் ஏற்றுக் கொள்ளுவார்கள்.  அவ்வளவு நியமயமாக இருக்கும்.  நடுநிலை தவறாத ஒரு நீதிபதிகயாக ஊரில் அவர் விளங்கினார்.

பற்று வேறு, வெறி வேறு

(மணவை முஸ்தபா)
‘இஸ்லாத்துக்கு சம்பந்தமில்லாததை போடுறான்’ என்ற குற்றம் சாட்டுகிறார்களாம் சவுதி சகோதரர்கள். ஆதலால் , பிற மதங்களை ‘மாற்றுச் சமயங்கள்’ என்று குறிப்பிடாமல் ‘சகோதர சமயங்கள்’ என்று குறிப்பிடும் பண்பாளர் மணவை முஸ்தாபாவின் நூல் ஒன்றிலிருந்து கொஞ்சம் பதிவிடுகிறேன். இதில் ரசூல் (ஸல்) இருக்கிறார்கள், சஹாபி (நபித்தோழர்) இருக்கிறார், முக்கியமாக… ஒட்டகம் இருக்கிறது :-) .
***
ஒரு நபித்தோழராகிய சஹாபி நாயகத் திருமேனியை நோக்கி, ‘நம் இனத்தின் மீது பற்றுக் கொள்வது, அதிலும் தீவிரமான பற்றுக் கொள்வது தவறா?’ என வினாத் தொடுத்தார். இவ்வினாவுக்கு விடை கூற வந்த அண்ணல் நபிகள் நாயகம் (சல்) அவர்கள் ‘ஒருவர் தன் இனத்தின்மீது பற்றுக்கொள்வது இயற்கை. அது பற்றாக மட்டுமே வளர்ந்து வளமடைய வேண்டுமேயல்லாது, வெறியாக மாறிவிடக் கூடாது’ என்றார்கள்.
இப்பதிலில் திருப்தியடையாத சஹாபி மேலும் தெளிவு பெறும் பொருட்டு, தொடர்ந்து கேள்வி எழுப்புகிறார்.
‘பற்று கொள்ள வேண்டும் என்று சொல்கிறீர்கள். இனத்தின்மீது தீவிரமாகப் பற்றுக் கொண்டால் அதனை மற்றவர்கள் வெறியாகக் கருதுகிறார்கள். அந்தப் பற்றுக்கும் வெறிக்கும் என்ன வேறுபாடு?’ என்று கேட்டார்.

சாதிக்கத் துடிப்பவர்கள் மறக்க முடியாத சாதனைச் சகோதரி அர்பா கரீம்...


சாதிக்கத் துடிப்பவர்கள் மறக்க முடியாத சாதனைச் சகோதரி அர்பா கரீம்...
RASMIN M.I.Sc


ஆம் தனது ஒன்பது வயதில் உலகமே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு மிகப் பெரும் சாதனையை நிகழ்த்திய சாதனையாளர் தனது 16ம் வயதில் இவ்வுலகை விட்டும் பிரிந்தார் என்பது ஒரு சோகமான உண்மை.

முன்னேற்றத்திற்கு யாரும், எதுவும் தடையல்ல என்பதை நிரூபித்தது மட்டுமன்றி, முயன்றால் இறைவன் அருளால் வெற்றி நிச்சயம் என்பதை பதிய வைத்தவர் தான் இந்த அர்பா கரீம்.

யார் இந்த அர்பா..?

பாகிஸ்தானின் பைசலாபாத்தில் அம்ஜத் கரீம் ராந்தவா, திருமதி. கரீம் ராந்தவா தம்பதியினருக்கு 1995 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி பிறந்தார் அர்பா.

கணிணித் துறைக்கு சற்றும் தொடர்பில்லாத விவசாயத்துடன் தொடர்புடைய குடும்பத்தில் பிறந்தவரானாலும் சிறுவயது முதலே அர்பா, கணினியில் திறமை வாய்ந்த ஒருவராகவே இருந்ததனால் பாடசாலையின் ஆச்சரியமிக்க சிறுமியாகவே ஆசிரியர்களுக்கு அர்பா தன்னை அடையாளப்படுத்தியுள்ளார்.

சாதனைச் சகோதரியின் சாதனைகள்.

5 வயது குழந்தை பருவத்தில் தான் வசித்த பகுதியில் காணப்பட்ட கணினி ஆவகங்களை கடந்து செல்லும் போது என்னுள் ஏற்பட்ட கணினி தொடர்பான எண்ணங்களே என்னை கணனித்துறைக்கு கொண்டுவந்ததாக அர்பா பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். அர்பாவிற்கு குழந்தை பருவத்தில் ஏற்பட்ட இந்த தூண்டலின் துலங்கலாகவே ஆறு வயதில் சொந்தமாக கணனியை இயக்கவும் ஏபிடெக் (AP TECH) எனும் கணினி நிறுவனத்தில் இணையவும் முடிந்துள்ளது.

ஏ.பி.டெக் நிறுனத்தினால் அர்பாவினுடைய அசாத்திய திறமையினை உணர்ந்த ஆசிரியர்கள் முறையான பயிற்சிகள் மூலம் இவரை உச்சத்திற்கு கொண்டு செல்லமுடியும் என நம்பியுள்ளனர். இதன் விளைவாகவே மைக்ரோ சாப்ட் நிறுவனத்தினால் வழங்கப்படும் உயரிய விருதான உயர் தொழில் கணினி Microsoft Certified Professionals (MCPs.) விருதுக்கு அர்பாவை தயார் செய்தனர்.

ஆர்பா மீது ஆசிரியர்கள் கொண்ட நம்பிக்கை வீண் போகவில்லை. தனது 9 ஆவது வயதிலேயே எம்.சி.பி எனப்படும் கணினிக் கற்கையினை பூர்த்தி செய்து உலகின் புகழ் பெற்ற நபர்களில் ஒருவராக 2004ம் ஆண்டு நிரூபித்தார் அர்பா கரீம்.

அவ்வாண்டில் மைக்ரோ சாப்ட் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட உயர் தொழில் கணினி விருதினை உலகின் மிக இளம் வயதுடைய பொறியியலாளர் என்ற சாதனையுடன் தனது 9 ஆவது வயதிலேயே தன் நாட்டிற்கும் தான் வாழும் சமூகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் அவ்விருதினை வென்றெடுத்து தனது வாழ்க்கையினை சிறார்களுக்கு முன்னுதாரணமாக அமையும் வகையில் அமைத்து பாகிஸ்தானிய மக்களை மட்டுமல்லாது உலகமே தன்னை வியந்து பார்க்கும் படி உயர்ந்து நின்றார் அர்பா.

இந்த விருது அர்பாவின் சாதனை வாழ்க்கைக்கான பாதையாக அமைந்தது. எம்.சி.பி விருது வென்ற அர்பாவினை பாராட்டி மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் தலைவர் அமெரிக்காவுக்கு வரவழைத்து அவ்விருதினை தனது கைகளினாலேயே வழங்கி பெருமைப்படுத்தினார்.

எம்.சி.பி விருதினை பெற்ற பிறகு 2005 ஆண்டில் பலரின் கனவு இலட்சியமாக இருக்கும் வாஷிங்டனில் அமைந்துள்ள மைக்ரோ சாப்ட் நிறுவனத்தினுடைய ரெட்மென்ட் வளாக ஆய்வகத்தின் நிர்வாகிகளை பில்கேட்ஸின் அழைப்பின் பெயரில் தனது 10 ஆவது வயதில் சந்தித்தார் அர்பா கரீம்.

2005 ஆண்டு காலப்பகுதியில் முறையே பாகிஸ்தானின் உயரிய விருதுகளில் ஒன்றான பாத்திமா ஜின்னா தங்க விருது, சலாம் பாகிஸ்தான் யௌவன விருது மற்றும் ஜனாதிபதி செயல்திறன் பெருமை விருது போன்ற விருதுகளையும் அள்ளிக் குவித்தார். இந்த விருதுகள் அனைத்தும் தனது 10ஆவது வயதில் வந்து சேரும் வகையில் தனது திறமைகளை வெளிப்படுத்தியதே அர்பாவின் சிறப்பம்சம்.

பாகிஸ்தானின் முக்கியத்துவம் மிக்கவர்களில் முதன்மையானவர்.


கணிணித் துறையில் நடத்தப்பட்ட பல கருத்துக் களங்களுக்கும், கருத்து மோதல்களுக்கும் பாகிஸ்தான் சார்பாக கலந்து கொண்டு நாட்டுக்கும் சமுதாயத்திற்கும் பல பெருமைகளை ஈட்டித் தந்தவர் அர்பா.


துபாயில் நடந்த பாகிஸ்தான் தொழில்நுட்பக் கருத்துக்களம் ஒன்றிற்கு பாகிஸ்தான் நாட்டுத் தூதுவராக அர்பா சென்றிருந்தார். அதில் பல பரிசுகளை அள்ளிக்குவித்து ஏராளமானோரை ஆச்சரித்திற்குள்ளாக்கி வெற்றிபெற்றார்.


தொடர்ந்து 2006 ஆம் ஆண்டில் பார்ஸிலோனாவில் இடம்பெற்ற 5000 தொழில்நுட்ப உருவாக்குனர்கள் (Developers) மட்டுமே பங்கு கொண்ட டெக் எட் உருவாக்குனர் மாநாட்டில் பாகிஸ்தானிலிருந்து சென்ற ஒரே உருவாக்குனர் என்ற பெருமை பெற்றார் அர்பா.


பார்ஸிலோனாவில் இடம்பெற்ற 5000 தொழில்நுட்ப உருவாக்குனர்கள் (Developers) மாநாட்டில் அர்பா உரையாற்றும் காட்சி...



2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பாகிஸ்தான் தொலைத் தொடர்பாடல் நிறுவனத்தின் கம்பியில்லா 3 ஜீ தொழில் நுட்ப சேவையின் தூதுவராக அறிவிக்கப்பட்டார்.


சாதனைச் சகோதரி மரணத்தை நெருங்கிய தருணங்கள்....

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த சாதனைப் பெண் அர்பா கரீம் அவர்களுக்கு எந்தளவுக்கு வேகமாக வெற்றியும், சாதனைகளும் வந்து குவிந்தனவோ அதை விட வேகமாக மரணமும் வந்து சேர்ந்தது என்றால் அது மிகையில்லை.

குறிப்பிட்ட ஐந்து வருடங்களுக்குள் பல சாதனைகளைப் படைத்து உலகின் இளம் வயது சாதனையாளர் என்ற பெயரைத் தனதாக்கி உலகின் பலம் பெரும் தொழினுற்ப வல்லுனர்களையெல்லாம் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த அர்பா அவர்களை ஆச்சரியக் கண்ணுடன் அனைவரும் பார்த்த வேலை கடந்த ஆண்டு டிசம்பர் 22ம் தேதி அனுதாபக் கண்ணுடன் அனைவரும் உற்று நோக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

சாதனையாளர் நோயாளியாக அறியப்பட்ட நிமிடங்கள்...

ஆம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 22ம் தேதி அர்பா கரீம் திடீரென வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டு லாகூர் மருத்துவமனையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அர்பா அனுமதிக்கப்பட்டார்.

அதன் பின்னர் தான் கார்டியல் அரஸ்ட் மற்றும் முயலகப்பீடிப்பு (Epileptic seizure) எனும் மூளை தொடர்பான நோய் அர்பாவை தாக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


அர்பாவின் அனைத்து செலவீனங்களையும் பொருப்பேற்று அமெரிக்காவுக்கு அர்பாவை அழைத்து சிகிச்சை செய்ய மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் உயர் பீடம் தயாராகியது. இதற்கான அறிவிப்பை பில் கேட்ஸ் அறிவித்திருந்தார்.

மரண வேலையிலும் சாதனையைத் தொடர்ந்த சகோதரி.

தான் மரணத் தருவாயில் இருக்கும் போதும் அர்பா அவர்கள் அமெரிக்க வின்வெளி ஆய்வு மையமான நாஸாவுக்காக ஒரு திட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத் தக்கதாகும்.


நோயின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்தது அதே நிலை தொடர்ந்த காரணத்தினால் சென்ற மாதம் (ஜனவரி 2011) 14ம் தேதி இவ்வுலகை விட்டும் பிரிந்தார். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

ஒருவரின் மரணம் மற்றவர்களின் மனதில் இடம் பிடிக்கின்றது.

அர்பா அவர்கள் உயிர் வாழும் போது அவரை அறிந்தவர்களை விட அவரின் மரணத்தின் பின் அவரைப் பற்றி அறிந்து கொண்டவர்கள் தாம் அதிகம் எனலாம். காரணம் ஒருவர் நமக்கு மத்தியில் இருக்கும் போது அவரைப் பற்றிய தேவையை நம்மில் பலர் உணர மாட்டோம்.

சகோதரி அர்பா கரீம் அவர்கள் தனது இளம் வயதில் நிகழ்த்திய சாதனைகளை பார்க்கும் போது இஸ்லாமியர்கள் இவ்வுலகின் அறிவியல் வளர்ச்சிக்கு செய்த சேவைகள் தாம் நினைவுக்கு வருகின்றன.

அர்பாவின் மறைவிற்கு பின்னர் லாகூரில் இருக்கும் பாகிஸ்தானின் தொழில்நுட்பப் பூங்காவின் பெயரை அர்பா மென்பொருள் தொழில்நுட்ப பூங்கா என பெயர் மாற்றம் செய்துள்ளதாக பாகிஸ்தானின் பஞ்சாப் முதலமைச்சர் ஷஹ்பாஸ் ஷெரிப் அறிவித்துள்ளார்.

இவரின் மறைவுக்கு மைக்ரோ சாப்டின் தலைவர் பில் கேட்ஸ், பாகிஸ்தானின் பஞ்சாப் முதலமைச்சர் ஷஹ்பாஸ் ஷெரிப், பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரி மற்றும் பிரமர் யூஸுப் ரஸா கிலானி என பலரும் கவலை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

அர்பா கரீம் அவர்களின் புகைப்படத்துடன் கூடிய தபால் முத்திரையையும் வெளியிடும்படி பாகிஸ்தான் பிரதமர் கிலானி அறிவிப்பை வெளியிட்டுள்ளமையும் இங்கு கவணிக்கத் தக்கதாகும்.

உலக வரலாற்றில் சாதனைகளினால் மக்கள் மனங்களில் இடம் பிடித்த மிகச் சிலரில் உயர்ந்த இடத்தில் வைத்து மதிக்கப்படும் அளவுக்கு கல்வித் துறையில் சாதனை படைத்தவர் தான் சகோதரி அர்பா கரீம் அவர்கள்.

சகோதரி அர்பாவின் மறுமை வாழ்விற்காக நாமும் இறைவனிடம் பிரார்த்திப்போமாக!

wikipedia வில் சகோதரி அர்பா கரீம் தொடர்பான செய்திகளை பார்க்க... இங்கு க்லிக் செய்யுங்கள்.


www.arfakarim.org என்ற பெயரில் சகோதரி அர்பா கரீமின் இணைய தளத்தைப் பார்க்க முடியும்.


சகோதரி அர்பா கரீம் பேஸ்புக்கிலும் தனக்கென தனிப் பகுதியை உருவாக்கியிருந்தார்.

மாணவர்களே! சாதிக்கத் துடிப்பவர்களே!

சாதனைகள் நம்மைத் தேடி வருவதில்லை, நாம் தான் சாதனைகளை தேடிச் செல்ல வேண்டும். சாதிக்கத் துடிப்பவர்களுக்கு அர்பா கரீம் ஒரு முன்மாதிரி.

அறிவின் வாயில்களை இறைவன் அர்பாவுக்கு அதிகமாகவே திறந்து கொடுத்திருந்தான், தான் வாழ்ந்த மிகக் குறைவான காலத்திலேயே உலகை உற்றுப் பார்க்க வைத்தவராக அல்லாஹ் அவரை மாற்றினான்.

முயற்சி செய்பவருக்கு அளவில்லாமல் இறைவன் வாரி வழங்குவான் என்பதை அர்பாவின் வாழ்விலும் நாம் கண்டுகொள்ள முடிகின்றது.

முயற்சி செய்யுங்கள், சிந்தியுங்கள், பாடுபடுங்கள் முஸ்லீம்கள் இவ்வுலகின் அறிவியல் முன்னோடிகள் என்பதை திரும்பத் திரும்ப பதிய வையுங்கள்.

நமது பிறப்பு சம்பவமாக இருந்தாலும், இறப்பு சரித்திரம் படைக்க வேண்டும்.

சாதனைகளை நமதாக்குவோம்..... சரித்திரத்தில் இடம் பிடிப்போம்...


Source : http://rasminmisc.blogspot.in/2012/02/blog-post_22.html

வதந்தி பேசுவதால் வரும் விளைவுகள்


"நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள். உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்." 

-திருக்குர்ஆன் 2:42

'நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் அதை ஏன்டா மற்றவர்களிடம் சொன்னாய். அது பெரிய செய்தியாகப் போய் ஊரெல்லாம் அதைப் பற்றி பேச அந்த குடுப்பம் சிதையும் அளவுக்கு ஆக்கிவிட்டாயே .பாவம்டா உண்மையிலேயே அவங்க நல்லவங்கடா'.. என்று மிகவும் வருந்துபவர்களைப் பற்றி அறிவோம் . தங்கள் நேரத்தினை ஓட்டுவதற்கு வாய் கூசாமல் பேசிவிட்டு வருத்தமடைவதாகச்  சொல்லிவிட்டு சிலநாட்கள் கழித்து அதே வேலையில் ஈடுபடுவார்கள். இது சில மக்கள்  மத்தியில்  இருந்து வரும் வழக்கம் . ஆனால் இப்பொழுது பத்திரிகைக்காரர்களும் அரசியல்வாதிகளும் மிகவும் சிறப்பாக ஈடுபட்டு நாட்டிற்கே அழிவை உண்டாக்குகின்றனர் .(அமேரிக்காவுக்கு இது ஒரு கை வந்த கலை என்பது உலகமே அறியும்) இதில்  பெருமையாக 'கிசு கிசு' என்று  தலைப்பே போட்டும் சிலர் எழுதுகின்றனர்.அதனால்  விளையும் விளைவுகளை பற்றி சிறிதும் சிந்திப்பதில்லை. இதனால் மதக் கலவரம் ஜாதிச் சண்டைகள் வந்து விடுகிறன. சில நாடுகள் மற்ற நாடுகளில் இதனைக் கிளப்பி விட்டு சண்டையை உண்டாக்கி தாங்கள் குளிர் காய்கின்றனர்.

Thursday, February 23, 2012

ஆணுடன் பெண்ணை கணக்கு செய்வோம்!

ஆண் எப்படி? பெண் எப்படி?
காதல் கணிதம்
நல்லவன் + புத்திசாலி பெண் = காதல்
நல்லவன் + ஊமை பெண் = விவகாரம்
ஊமை மனிதன் + புத்திசாலி பெண் = திருமணம்
ஊமை மனிதன் + ஊமை பெண் = கர்ப்பம்
ஆணின் காதல் அலைபாயும்
பெண்ணின் காதல் நிலையானது
ஆண் காதலை வெளிப்படுத்துவான்
பெண் காதலை மறைத்து வைப்பாள்  
=========================================
அலுவலகம் எண் கணிதம்
திறமையான  முதலாளி + திறமையான ஊழியர் = இலாபம்
திறமையான முதலாளி + ஊமை ஊழியர் = உற்பத்தி
ஊமை முதலாளி + திறமையான ஊழியர் = பதவி உயர்வு
ஊமை முதலாளி + ஊமை ஊழியர் = அதிக  வேலை
========================================
வணிக கணிதம்
ஒரு மனிதன் அவன் தேவையான  10 பொருளுக்கு 20 ரூபாய் கொடுப்பார் .
ஒரு பெண் அவள் தேவையில்லாத பொருட்கள் வாங்க  20 ரூபாய் பொருளுக்கு 10 ரூபாய் கொடுப்பாள்
ஒரு மனிதன் ஒரு பொருளைப்  பார்த்து 10 பொருட்கள் வாங்குவார்
 ஒரு பெண் 10 பொருட்கள் ஒரு பொருளை வாங்குவாள்
=================================================
பொது சமன்பாடுகள் & புள்ளியியல்
ஒரு பெண் கணவன் வரும் வரை  எதிர்காலம் பற்றி கவலைப்படுகிறாள்
ஒரு மனிதன் மனைவி கிடைத்த பின்பு  எதிர்காலம் பற்றி கவலைப்படுகிறான்

ஒரு வெற்றிகரமான மனிதன் தன் மனைவி செலவிடும் அளவுக்கு  மேல் அதிகமாக பணத்தை சேர்த்தால் அவன் திறமைசாலி 
ஒரு மகிழ்வான பெண் தன் கணவன் தன் செலவிற்கு அதிகமாக சேர்த்தால் அவள் அதிர்ஷ்டக்காரி
======================================================

Wednesday, February 22, 2012

உலகளாவிய புதிய வலை மூலம் சுற்றுலா


உலகளாவிய புதிய வலை மூலம் சுற்றுலா
உலக சுற்றுலா மற்றும் டிராவல்ஸ்
அனைத்து டிக்கெட் தீர்வு ஒரு முற்றுப்புள்ளி

Subject: Travel By Global New Web


Tuesday, February 21, 2012

அறிவைப் பகிர்ந்து கொள்வதும் திருட்டாகி விடுமோ!

அறிவே சக்தி. அறிவைப் பகிர்ந்து கொள்வது மகத்தான சக்தி.
டேவிட் நெல்சன்

'பொருளைத் திருடலாம் அறிவைத் திருட முடியுமோ!  அதனால் அறிவை வளர்த்துக் கொள்' என்று சொல்வதனைக் கேள்விப் பட்டிருக்கின்றேன். அறிவும் எழுத்து வடிவில் வந்து விட்டால் திருட்டுப் போய்விடுகின்றது   என்பதால் 'காப்பிரெய்ட்'  செய்யும் காலம் வந்து விட்டது. வியாபாரம் 'உலகமயம்' என்ற  மாயம் வந்த காலத்தில் வாழும் நிலை. 
 அறிவு இறைவன் கொடுத்த அருள்களில் ஒன்று. அதனை ஒருவர் சொன்ன கருத்தையோ அல்லது எழுதியவைகளையோ   தான் சொன்னதாக அல்லது தான் எழுதியதாக சொல்வது தவறு.அதனையே நாம் அவர்கள் சொன்னவைகளை அல்லது எழுதியவைகளை அவர்கள் பெயரிலேயே பயன் படுத்துவது தவறாக அல்லது திருட்டாக எண்ணக் கூடாது, அவர் அதனை செய்யக் கூடாது என்று தடை விதித்து சொன்னால் தவிர. இருப்பினும் அறிவு அவரை விட்டு உலகத்திற்கு வந்த பிறகு அவ்விதம் தடை போடுவது சிறப்பாக இருக்காது .அறிவு அனைவரிடமும் சென்றடைய வேண்டும். திருவள்ளுவர் கம்பர் , சித்தர் பாடல்கள் இன்னும் பல தமிழ் காவியங்கள் எழுதியவராலும்  அல்லது அதனை உலகத்திற்கு கண்டு பிடித்து தந்தவர்களும் அவர்கள் அவைகளை இவ்விதம்  தடைவிதித்து இருந்தால் எப்படி நிலைமை இருக்கும் என்பதனை சிந்தித்துப் பாருங்கள். இன்று எல்லாமே தொழில் மயமாக மாறிவிட்டதால் சிந்தனையின் வெளிப்பாட்டின் வழியே வந்த எழுத்துகளும் வியாபாரமாக மாறிவிட்டது . முடிந்தவரை இவைகள் 'காப்பிரெய்ட்' இல்லாமல் இருப்பது சிறப்பாகும்.

"உங்களின் உயர்ந்தவர் தான் பெற்ற கல்வியை மற்றவருக்கு ஏற்றி வைத்தவர்"
விஞ்ஞான வளர்ச்சியின் முடிவு, மனித குலத்தின் அழிவு !
தமிழ்கிறுக்கன்.

 நான் இங்கே எழுதிய கட்டுரை எனது ஆசிரியர்கள் கற்றுத் தந்த அறிவினால் வந்த திருட்டோ! இரண்டு மேற்கோள்களும் இதில் வந்துள்ள படங்களும் அதனைச் சார்ந்தவையோ! இறைவா அப்படியானால் மன்னிப்பாயாக!.

Please click here to read :No Copyright in Islam  

----------------------------------------------------------------------------------

Monday, February 20, 2012

உடலுறவு - தம்பதியர் இருவருக்குமான உரிமை

பாலியல் திருப்தி என்பது கணவன், மனைவி இருவருக்கும் உள்ள உரிமை.

இது கணவனுக்கு மட்டுமே உள்ளது என நினைத்துக்கொள்வது தவறாகும்.

கணவனின் அளவுக்கு மனைவிக்கும் தன் பாலியல் தேவைகளின் நிறைவை எதிர்பார்க்கும் உரிமை உண்டு.

துல்லியமாக சொல்ல வெண்டுமானால், உடலுறவு என்பது தம்பதியர் இருவருக்குமான உரிமையாகும்.

ஒருவர் தம் துணைவியரின் பாலியல் பசியைத் தணிப்பது உடலுறவின், இன்னும் சொல்லப்போனால் மணவாழ்விற்கும்கூட சட்ட ஏற்புக்குறிய வழிமுறையாகும்.

இனி, உடலுறவில் கணவனின் உரிமை என்ன? மனைவியின் உரிமை என்ன? என்பதைப் பார்ப்போம்.

  கணவனின் உரிமை :

ஓர் ஆண் உடலுறவுக்கு விரும்பும்போதெல்லாம் அவர் தம் மனைவியுடன் உடலுறவுகொள்ள உரிமை பெற்றுள்ளார். அவருக்காக தன்னை தயாராக வைத்துக்கொள்வது மனைவியின் மார்க்கக்கடமையில் ஒன்றாகும். நியாயமான காரணமின்றி இதில் தவறவிடுவது பாவச்செயலாகும்.

தம்பதிகளுக்குள் ஏற்படும் இனிய செக்ஸ் ...!

  மேற்கத்திய கலாச்சாரம் கணவன் மனைவி ஒருவருக்கொருவர் பேச மற்றும் விஷயங்கள் பற்றி விவாதிக்க ஊக்குவிக்கிறது.
ஆனால் நம் கலாச்சாரங்களில் ஆண்கள் சொல்வதைக் கேட்டு   மனைவி  வாயை மூடிக்கொண்டு கேட்க  வேண்டும் இதனால்  பெரும்பாலும் அவர்களது மனைவிகள் மனதில் எழும் விஷயங்களை பற்றி பேச (எப்போதும்) தயக்கம் காட்டுகின்றனர்.
மனைவி மீது  அன்பு காட்டுவதில் மேலோங்கி இருப்பினும் கலந்துரையாடுவதில் மகிழ்வுள்ளது என்பதனை அறிய வேண்டும்.
மனதில் உள்ளதனை அறிய சில நேரங்களில் மற்றும் சில நேரங்களில் குறிப்பினால் அறிய முடியும் .அது தம்பதிகளுக்குள் ஏற்படும் இனிய செக்ஸ் .அதனையும் கணவன் வெளிப்படையாக தெரிவித்தாலும் மனைவியிடமிருந்து நடவடிக்கையின்   குறிப்பினால் மட்டும் அறிந்துக் கொள்ள முடியும் . ஆனால் அது மகிழ்வின் உயர்வினையடைய  உரையாடுவதின் மாண்பே இதற்கு தொடர்ச்சியாக இருக்கின்றது. இதற்கென்று சில செயல்பாடு மட்டுமின்றி காதல் நயம்பட அன்பு மிகும்  பேசும் பேச்சும் உள்ளதனை சிலர் அறியாமல் உள்ளனர். .மனைவியுடன் இச்சையை தணிக்க பிச்சை கேட்பதில் தவறல்ல ஆனால்  வெறும் இச்சையை அடக்க வழி உண்டாக்கும்  இயந்திரமல்ல மனைவி . மனைவி நம் இன்ப துன்பங்களுக்கு பங்கு வகிப்பவள். அதனால் நாம் மகிழ்வு அடைய முயலும் போது அவளையும் மகிழ்விக்கும் அளவிலேயே அனைத்துமிருக்க முயல வேண்டும் .
காதலுக்க்ம் காமத்திற்கும் உள்ள வேறுபாட்டினை அருமையாக பலர் பலவிதமாக சொல்லியுள்ளனர் .

Thursday, February 16, 2012

யார் அந்த மருதநாயகம்?

வரலாற்றின் பக்கங்களில் புழுதி படிவதும், காலம் அதனை துடைத்து மானுடத்தின் பார்வைக்கு கொண்டு வருவதும் எப்போதும் நிகழக் கூடியதாகவே இருக்கிறது.

1997ல் கலைஞானி என திரையுலகம் வர்ணிக்கும் பிரபல நடிகர் கமல்ஹாசன் மிகப் பெரிய வரலாற்று படத்தை எடுக்கப் போவதாக அறிவித்தார்.

அப்படத்தின் தொடக்க விழாவுக்கு இங்கிலாந்து ராணி எலிசபெத் சிறப்பு விருந்தினராக வருகை தந்தார். அன்றும் முதல்வராக இருந்த கலைஞர் மூப்பனார் உள்ளிட்ட புகழ் பெற்றவர்கள் எல்லாம் கலந்து கொண்டதால் அப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை பெற்றது.

படத்திற்குப் பெயர் மருதநாகயம்! படமோ நிஜத்தில் நடந்த வரலாறை பின்னணியாகக் கொண்டது. திரையுலகில் வாழக்கையை தொலைக்கும் தமிழகம், இதை பரபரப்பாக விவாதித்தது. யார் அந்த மருத நாயகம்? அவரது போராட்ட வரலாறு என்ன? இந்த கேள்விகள் பலரையும் உசுப்பியது போல் தமிழக முஸ்லிம்களையும் உசுப்பியது.

காரணம், அவர் ஒரு முஸ்லிம். ஆங்கிலேயரை எதிர்த்த விடுதலைப் போராட்ட வீரன்! அடங்க மறுத்த வீரத் தமிழன்! அப்படி பல செய்திகள் கொஞ்சம், கொஞ்சமாய் வெளிவந்தது.

கட்டபொம்மனை போற்றியவர்கள், மருதநாயகத்தை மறந்து விட்டார்கள். ஐந்தாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் கூட அவரது வரலாறு இல்லை. ஒரு நடிகர் அதை படமாக எடுக்காவிட்டால், அவரது வரலாறு வெளியே தெரிந்திருக்காது என்பதுதான் உண்மை. கசப்பான உண்மை!

இனி கான்சாஹிப் மருதநாயகத்தோடு பயணிப்போம்! நீண்டதொரு வரலாறு பொருமையுடன் அறிந்து கொள்வொம்..

ஊரும், பெயரும்

மருதநாயகத்தின் வாழ்க்கை வரலாறு மிகவும் பரபரப்பானது. இவர் பூலித்தேவன் மற்றும் திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலியின் சம காலத்தவர். இவர் பிறந்த ஆண்டு பற்றி துல்லியமாக தெரியாவிடினும், பிரபல தமிழக வரலாற்று ஆய்வாளர் செ. திவான் அவர்கள் கி.பி. 1720க்கும், 1730க்கும் இடையில் பிறந்திருக்கலாம் என கணிக்கிறார்.

Monday, February 13, 2012

மயிலாடுதுறையை தனி மாவட்டமாக ஆக்க வாய்ப்புகள் உண்டா?: உயர் நீதிமன்றம்!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.  இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம், உண்ணாவிரதம் ஆகியவை ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் வழக்கறிஞர் ராஜேந்திரன் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "நாகப்பட்டிணத்தில் உள்ள மயிலாடுதுறை வருவாய் கோட்டத்தில் 4 தாலுக்காக்கள் இருக்கிறது.

மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகையில் அதிகளவில் மயிலாடுதுறையில் வசிக்கின்றனர். எனவே வரலாற்று சிறப்பு மிக்க இந்த பகுதியை புதிய மாவட்டமாக அறிவிக்க மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோரை கொண்ட சென்னை உயர்நீதி மன்ற அமர்வு, "மயிலாடுதுறை மாவட்டம் அமைக்கக் கோரும் கோரிக்கையை தமிழக அரசின் தலைமை செயலாளர் சட்ட விதிகளின்படி பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டனர்.
Source : http://www.inneram.com/news/

காதலர் தினம்


வாழ்த்து அட்டைகளையும்
வேண்டாப் பொருட்களையும்
வாங்கிக் குவிக்காதீர்
காதலர் தினம்
வணிகர் தினம் ஆகிவிடும்

அணைப்புகளின் சூட்டில்
நனையலாம்
முத்தங்களின் ஈரத்தில்
காயலாம்

ஆனால்
இதயங்களை
நிரந்தரமாக்கிக்கொள்ளாமல்
நனைவதும் காய்வதுமாய்க் கிடந்தால்
காதலர் தினம்
காமுகர் தினம் ஆகிவிடும்

அன்புடன் புகாரி

Source : http://anbudanbuhari.blogspot.

Saturday, February 11, 2012

மாணவர்களுக்குக் கடும் தண்டனை கூடாது!

மாணவர்களுக்கு மன உளைச்சலை உண்டாக்கும் விதத்திலான கடும் தண்டனைகள் கூடாது" என மெட்ரிகுலேசன் இயக்ககம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் சென்னை பள்ளி ஒன்றில் இந்தி ஆசிரியை உமா மகேஸ்வரியை 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் குத்திக் கொன்றான். இது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் உருவாக்கியது.

இந்நிலையில், மெட்ரிகுலேசன் இயக்ககம் மாணவர்கள்-ஆசிரியர்கள் இடையே இணக்கம் அதிகரிக்க சில ஆலோசனைகளைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அது வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"ஆசிரியை உமா மகேஸ்வரியின் கொலை சம்பவம் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.  எனவே ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இடையே பிரச்சனை வராதவாறு கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு மன உளைச்சலை உண்டாக்கும் வகையில் கடுமையான தண்டனை கூடாது."

என்று அந்தக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், "இந்தக் கல்வி முறை மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது" என ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Source : http://www.inneram.com

Thursday, February 9, 2012

உலமாக்களின் தகுதி… அந்தக் காலம் எப்போது வரும்

தமிழில் : அ. கான் பாகவி
சுலைமான் அல்கானூனீ
———————————–
துருக்கி நாட்டின் பத்தாவது மன்னர் சுலைமான் அல்கானூனீ. உஸ்மானியப் பேரரசர்களில் மிக முக்கியமானவரான சுலைமான், தமது ஆட்சிக் காலத்தில் (கி.பி.1520-1566) ஐரோப்பா, ஆசியா நாடுகள் மீது 13 முறை நேரடித் தாக்குதலை எதிர் கொண்டு முறியடித்தவர்.
இவரது ஆட்சியில் தலைநகர் இஸ்தான்பூல் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளி வாசலுக்கு இமாமைத் தேர்ந்தெடுக்க நேர்காணல் நடத்துவார்.போட்டி நடக்கும். போட்டியில் வென்று முதலாவதாக வருபவரே இமாமாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.
இந்த உயர்ந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு தகுதிகளை அவர் நிர்ணயித்திருந்தார். அத்தகுதிகள் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்கும் தலைமைப் பண்புக்குச் சிறந்த முன்னுதாரணமாகும். அப்படியானால் அது எவ்வளவு பெரிய பொற்காலம்.
தகுதிகள் என்ன?
1. அரபி, ஃபார்சி, லத்தீன், துருக்கி ஆகிய மொழிகளை நன்கு அறிந்திருக்க வேண்டும். (பேசத் தெரிந்தால் மட்டும் போதாது; மொழியாற்றல் வேண்டும்)
(இவற்றில் ஃபார்சீ, லத்தீன், துருக்கி ஆகியவை அந்நாட்டிற்கும் அக்காலத்திற்கும் அவசியமானவை).
2. திருக்குர்ஆன், தவ்ராத் (தோரா), இன்ஜீல் (பைபிள்) ஆகியவற்றைக் கற்றிருக்க வேண்டும்.
3. தற்காலப் பிரச்சனைகளுக்கு மார்க்கத் தீர்ப்பு (ஃபத்வா) அளிக்கும் ஆற்றல் இருக்க வேண்டும்.
4. தற்காலப் போர்க்கலை அறிந்திருக்க வேண்டும்.
5. கணிதம் (விணீtலீs) இயற்பியல் (றிலீஹ்sவீநீs) ஆகிய கலைகளைப் பள்ளிவாசலில் கற்பிப்பதற்காக நன்கு கற்றிருக்க வேண்டும்.
6. நல்ல தோற்றமுள்ளவராக இருத்தல் வேண்டும்.
7. குரல் வளமிக்கவராக இருத்தல் வேண்டும்.
இமாம் என்பவர் தொழுகை எனும் வழி பாட்டிற்கு வழிகாட்டியாக, தொழுகையாளிகளின் செயல்களுக்குப் பொறுப்பாளியாகத் திகழ்கிறார். அதனால், தொழுகை தொடர்பான எல்லா விசயங்களும் அவருக்கு அத்துப்படியாக இருக்க வேண்டும்.
அதே நேரத்தில், ஜாமிஆ மஸ்ஜிதின் இமாம் என்பவர் சமுதாயத்தின் தகுதி வாய்ந்த முக்கியப் புள்ளி ஆவார். நாட்டிற்கும் சமுதாயத்திற்குமான தோற்றத்தை உருவாக்கும் பொறுப்பு அவருக்கு உள்ளது. எனவே, அவரிடம் வேறுபல தகுதிகளும் இருப்பது அவசியம்.
இமாம்குர்ஆனை மட்டும் கற்றால் போதாது, தவ்ராத், இன்ஜீல் போன்ற முந்தைய வேதங்களையும் அறிந்திருக்க வேண்டும். இன்றும் புவியில் இருக்கும் இரு மதங்கள் அவை. நாம் வாழும் நாட்டிலேயே அம்மதத்தார் வாழ்கின்றனர்.

Wednesday, February 8, 2012

வெட்கப்படுவது ஒரு வெட்கக் கேடா!

வெட்கப்படுவதற்கு வெட்கப் பட்டுத்தானே ஆகவேண்டும். வெட்கப்படும் குணம் மனிதப் பிறவிக்கு கொடுக்கப் பட்ட மகத்தான அருள். வெக்கப் படுவது பெண்களுக்கு மட்டும் தேவையானது என நினைக்க வேண்டாம் . அது ஆணுக்கும் மிகவும் அவசியமானது. அந்த மாண்பு இயற்கையாக 

நல்லோர்களுக்கு தானே வந்தடையும்.வெட்கப்படுவதனை விரும்பாமல் இருப்பவர்களும் உள்ளனர்.அந்த குணம் அவர்களுக்கு இருந்தாலும் அதனை தன்னிடம் வராமல் இருக்க அவர்கள் வாழும் முறையில் ஏற்பட்ட மாற்றத்தினால் வந்ததாகும்.
 
வெட்கப்படும்  போது அந்த நபரின் முகத்தில் மாறுதல் ஏற்பட்டு அவர் முகம்   சிவப்பாக மாறுவதனை நாம் காண முடியும்.வெட்கப்படுவதின் செயல்முறை போது, அந்த நபரின் பரிவு நரம்பு விரிவடைவத்தின் காரணமாக  இரத்தம் தோல் மற்றும் முகத்தில் ஒரு சிவப்பாக்குதல் விளைவாக, இரத்த நாளங்களின் வேலை அதிகரிக்கும்.

Tuesday, February 7, 2012

தவறு யார் மீது?

தவறு யார் மீது
தவறு யார் மீது?

தனிக்குடில் தாம்பத்தியம்
தட்டுமுட்டுக்கும்
தகறாறு இருவருக்கும்

காலையில் சென்று
மாலையில் திரும்பும் பணி
நம்பிக்கைக்கு வாலாட்டும்
நாய் காவல் இருந்தும்

தெருமுனை திரும்பியதும்
திருடவரும் தெருநாய்
இதை கண்காணிக்கும்
இருகண்கள்

”ஒருமுறை”

வேலை முடிந்துவரும் நேரம்
கதவு திறக்க வரும் வேளை
எதிர்வீட்டுக் கிழம்

இடித்த வெத்தலையோடு
இடித்ததுபோல்
எடுத்துரைத்தது

”தவறு யார்மீது”
தெரிந்து திருந்திடுங்கள்
திருந்தி வருந்திடுங்கள்

எடுத்துரைத்த வார்த்தைகள்
இடியாக இறங்கியது
இருவரது நெஞ்சத்திலும்!...


காலத்தின் கோலம்
தன் திசைகளில்
கோளாறென்று
திசையே இல்லாப் பக்கம் 
திசையென நினைத்து 
திசைமாறிப் பறக்கத் துடிக்கும் 
தான்தோன்றி இனங்களாய்-சில
தற்கால மனிதப்பறவைகள் .
 அதனால் எழுதத் தோன்றியது
மேலே உள்ள கவிதை வரிகள்

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

Source : http://niroodai.blogspot.in/2011/03/blog-post_23.html

JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
“Allâh will reward you [with] goodness.”

மீண்டும் மீண்டும் காண எந்தன் கண்கள் ஏங்குதே!
மக்கா மதினாவைச் சுற்றியே எந்தன் நினைவு ஓடுதே!
இறுதிக்கடமை நிறைவேற்ற நெஞ்சம் துடிக்குதே!
இறுதிநபி வாழ்வில் எந்தன் வாழ்வும் தொடருதே!

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

Monday, February 6, 2012

‘என்னைப்பெத்தவனே, என்னைப்பெத்தவனே!’

 ‘என்னைப்பெத்தவனே, என்னைப்பெத்தவனே!’
[ குழந்தைகள் அன்பை சொறிவதில் சலிப்படைவதே இல்லை, சோர்வடைவதே இல்லை. காரணம், அவர்கள் எதிர்ப்பின்றி நேசிக்கும் கலையில் தேர்ந்தவர்களாக உள்ளனர்.
தாம் நேசிப்பவை தம்மை நேசிக்கிறதா என்று அவை சந்தேகப்படுவதில்லை. தாமும் மற்றவைகளால் நேசிக்கப்படுவதாகவே குழந்தைகள் நம்புகின்றன. நாம் தான் இந்தக் கலையை வளர்ந்த பிறகு மறந்துவிட்டோம்.]
ஆண் - பெண் எனும் இரண்டு கழித்தல் கோடுகள், இல்லறக் கணக்கில் சமக்குறியாக இணை சேரும். பின்னர் கோடுகளின் தீண்டல்களில் கூட்டல் வரும், சரியான தப்பான பெருக்கல் வரும், இரண்டு புள்ளிக் கண்களோடு ஒற்றைக் கோடாக, வகுத்தல் குறி போலக் குழந்தை வரும், அந்த வகுத்தலுக்குப் பிறகே அந்த இணையர்க்கு ஈவும், இரக்கமும் வரும்.
கையடக்கப் பவுர்ணமி,

மின்னல் முளைத்த சின்னப் புன்னகை,
தாலாட்டின் இசைக் குறியீடு,
தென்றலால் செய்த விசிறி,
பளிங்கும், நுங்கும் சரிவிகிதத்தில் பிசைந்து செய்த உயிர்ப் பதுமை,
அன்னத்தின் தூவியில் எலும்பு,
அனிச்சம் பூவில் நரம்பு,
வெல்வெட்டுத் தங்க உடம்பு,
சந்தனத் தந்தக் கால்கள்,
பூரித்து இறங்கி வரும் புன்னகை அருவி,
ரோஜாத்தீ வாய்,
உள்ளங்கை பிஞ்சுப் பிறை விரல்,
பிளம்கனி உட்கார்ந்திருக்கும் வெனிலா ஐஸ்கிரீம் கண்கள்,
அதனைச் சப்புக்கொட்டும் உதடுகளாய் மினி இமைகள்,
சொர்க்கப் பூஞ்சிறகுகளாய் இரு செவிகள்,
பாலாடை வாய்,
தாய்ப்பால் குமிழியாய்த் ததும்பிடும் மூக்கு,
கையில் அள்ளினால் காஷ்மீரத்து வெண்பணி,
நொடியில் உயிர் கழுவும் துளிப் பூஞ்சிரி.
வறட்டுத் தரிசினை வசந்தப் பரிசாக்கும் இந்தக் குழந்தைகள் தான் எத்தனை அழகு! (-பேராசிரியர் தி.மு.அப்துல் காதர்)

Saturday, February 4, 2012

"குடி“மக்கள் சிந்தனைக்கு..

by முனைவர். இரா.குணசீலன், தமிழ் விரிவுரையாளர்.

  • உலக நாடுகளோடு இந்தியா எதில் போட்டி போடுகிறதோ இல்லையோ, மது விற்பனையில் போட்டி போட்டு முன்னேறிவருகிறது.
  • குடிப்பவர்கள் தம் உயிரோடு தம்குடும்பத்தின் உயிரையும் வாங்குகிறார்கள் என்பது ஒருபுறமிருக்க குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுவதால் தனக்குத் தொடர்பே இல்லாதவர்களின் உயிர்களையும் பறித்துவருகிறார்கள் என்பது சிந்திக்கத்தக்கதாகவுள்ளது.
  • 2010 – 11-ஆம் ஆண்டுகளில் அரசுமதுபானக்கடைகள் வழியாக  தமிழக அரசுக்கு    கிடைத்த வருவாய் ரூ.14,965 கோடி என்கிறது புள்ளிவிவரம்.
  • இதில் வருந்தத்தக்க உண்மை என்னவென்றால் பள்ளிமாணவர்கள் இன்றைய சூழலில் அதிகமாக மதுவுக்கு அடிமையாகிவருகிறார்கள் என்பதுதான்.
  • சில மாநிலங்களில் 18 வயதுக்கு மேல்தான் மது வாங்கமுடியும் என்றெல்லாம் சட்டங்கள் இருக்கின்றன.