Thursday, March 31, 2022

நூல் அறிமுகம்-8 | விடுதல்களும் தேடல்களும் | நிஷா மன்சூர்


எனது "விடுதல்களும் தேடல்களும்" கட்டுரை நூல் குறித்த மதிப்புரையை அன்புக்குரிய அஜீஸ் வாஹிதி மெளலானா வீடியோவாக வெளியிட்டுள்ளார். 
ஒவ்வொரு கட்டுரைக்குமாக விளக்கம் கொடுத்து விவரிக்க முயன்றிருக்கிறார்,
நூலின் முகப்புக்கு விடுதல்களைத் தேடும் ஞானப்பயணமாக அவர் கொடுத்திருக்கும் மதிப்பீடு,கட்டுரைகளின் இன்னொரு பரிமாணத்தைக் காட்டுவதாக உள்ளது. மெளலானாவுக்கு என் நன்றி 💙
நிஷா மன்சூர்   · 
#விடுதல்களும்_தேடல்களும் 
--------////////--------
நிஷா மன்சூர் அவர்களின் 'விடுதல்களும் தேடல்களும்' 12 கட்டுரைகளின் நூல் பொதியை வாசிக்க நேர்ந்தது. அதன் மதிப்பீட்டை இந்த இணைப்பில் குறைந்த அளவிற்கே கூறியிருக்கின்றேன். 
https://youtu.be/c54TyNXGByM
சொல்வதற்கு இன்னும் இருக்கின்றது..

Wednesday, March 30, 2022

ஐக்கிய அரபு அமீரகம் (United Arab Emirates) சில குறிப்புகள்.

 

ஐக்கிய அரபு அமீரகம் (United Arab Emirates) சில குறிப்புகள்.

அரபு நாடுகளில் சவுதி, குவைத்திற்கு அடுத்த படியாக பெட்ரோல் வளமும், செல்வ வளமும் மிக்க ஒரு நாடு இது.

இது தனித்தனி அமீர்களால் (Rulers) ஆளப்படும் ஏழு அமீரகங்களின்(Emirates)  கூட்டமைவு. இந்தக் கூட்டமைவு 1972ல் உருவானது. ஆரம்ப காலத்தில் இந்தக் கூட்டமைவில் ஓமன் நாடும் ஒரு அங்கமாக இருந்தது. பின்னர் சுல்தான் காபூஸின் தலைமையில் தனி நாடாக செயல்படத் துவங்கியது.

இந்த அமீரகங்களின் கூட்டமைவுக்கு முன் இந்தப் பகுதிகள் Trucial states என வழங்கப்பட்டது. தங்களுக்குள் ஒருவருக்கொருவர் எல்லைப் பிரசினைகளுக்காக அடித்துக் கொண்டிருந்தனர். 1972 வரை இந்திய ரூபாயே இங்கு செலாவணியாக இருந்தது.

இவற்றின் எண்ணை வளம், அதன் எதிர்கால பொருளாதார வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக இவை ஒன்றிணைந்து ஒரே நாடாக செயல்பட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த அபுதாபியின் ஆட்சியாளர் ஷேக் ஸையத் பின் சுல்தான் அல் நஹ்யான் அதற்கான அழைப்பினை விடுத்தார்.

இணைய வானொலி "மருத்துவரைச் சந்திப்போம்" கண்களில் ஏற்படும் பாதிப்புகள்

 

ஜமீன் வரலாற்று உண்மை தன்மையை விளக்கிய ஜமீன் பண்பாளர்...

 

பொறுப்பும் கடமையும் சேர்கின்ற தருணத்தில்தான் வாழ்க்கையின் பயணம் புரியும்!!

 

Tuesday, March 29, 2022

அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் Haja Maideen அவர்களுக்கு அன்புடன் வாழ்த்துக்கள்

 அன்புடன் வாழ்த்துக்கள்    Haja Maideen அவர்களுக்கு



உங்களில் உயர்ந்தோர் தான் பெற்ற கல்வியை மற்றவருக்கு எடுத்து உரைப்பவரே உயர்ந்தோர் ஆவர். அது தன் புகழ் நாடி இல்லாமல் இறையருள் நாடி இருக்கும்போது அந்த சேவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த சேவையை செய்தவருக்கு நன்மை வந்தடைவதுடன் அதனால் மற்றவர்களும் பயனடைகின்றனர்.

 

இறைவன் அருளால் Haja Maideen அவர்கள்  தன்னால் முடிந்த அளவு தான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதில் ஒரு நிறைவு கொள்கின்றார்.சிறந்த ,மனிதநேயம் பெற்ற மிக சிறந்தவர்கள் வரிசையில் 

Haja Maideen ஒருவர்! "

சிறந்த ,மனிதநேயம் பெற்ற மிக சிறந்தவர்கள் வரிசையில்

Haja Maideen அவர்களும் ஒருவராக இருப்பதில் நாம் மகிழ்வடைகின்றோம்  

சிறு வயதிலேயே எழுத்தில் ஆர்வம் அதன் தொடர்ச்சி கவிதைகள் புனைவதும் அதனை தனது இனிய குரலால் தானே இசையமைத்து பாடுவதும் இவரது இயல்பான செயல் .அவரது முகநூல் பதிவுகள் அதற்கு சான்று 

https://www.facebook.com/profile.php?id=100008879012795

Haja Maideen அவர்களை எங்கள் ஊரில் லண்டன் ஹாஜா என்றே பாசத்துடன் அழைப்பார்கள் .

Monday, March 28, 2022

"சிகரத்தை நோக்கி" நிகழ்ச்சி- தொழில் முனைவோரான அனுபவத்தை பேசுகிறார்

 இசைமுரசு FM

இணைய வானொலி

"சிகரத்தை நோக்கி"

நிகழ்ச்சி

சவால்களை எதிர்கொண்டு 500 குடும்பங்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கி

தொழில் முனைவோரான அனுபவத்தை பேசுகிறார்

Queens Land International நிறுவன இயக்குனர்

"சுகைனா மஜ்ஹர்" அவர்கள்.

SUMAZLA/சுமஜ்லா  



Friday, March 25, 2022

A. R. Rahman - Moopilla Thamizhe Thaaye (Official Video Promo)

A. R. Rahman - Moopilla Thamizhe Thaaye (Tamil Anthem)

நாம் உயிரோடு வாழ்வதற்கு பிரியாணி சாட்சி

கீதா மோகன்

நன்றி விஜய் TV சூப்பர் Singer புகழ் Mannargudi Ramesh .....

ஏதோ விளையாட்டா கிறுக்குனதுக்கு தன் கம்பீரக்குரலால் பிரியாணியை பிசைந்தூட்டுகிறார் அருமை நண்பர் மன்னார்குடி ரமேஸ் ... 😬😬

அண்மையில் நானும் என் நெருங்கிய நண்பியும் எமக்குப் பிடித்த பாய் கடையொன்றில் பிரியாணியை பதம் பார்த்துக் கொண்டிருந்த போது அருகே இருந்த வானொலியில் அமர்க்களம் படத்தின் "மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு.... சில மின்னல்கள் என்னை உரசிப்போனதுண்டு..." பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது....

பிடித்தமான பிரியாணி லெக்பீசை கடிக்கையில் சட்டென அம்மெட்டுக்கு சில வரிகள் உதித்தன.... அதை அப்படியே எழுதிவைத்துக் கொண்டேன் ....

அடுத்த நாள் முகநூலில் பதிவாகவும் பதிவு செய்துகொண்டேன் ..... அதைப் பார்த்த நண்பர் ரமேஸ் SPB போன்ற தன் கம்பீரக் குரலால் பாடி அனுப்பி வைத்துள்ளார் ... இதைவிடப் பேறுண்டோ.... 😬😬

(நானும் பாடலாசிரியர் ஆவிட்டேன்.... தாமரை மல்லிகைலாம் ஓரமாப் போகவும்.

Tuesday, March 22, 2022

ஹிஜாப் ஒருபோதும் எங்கள் சகோதரிகளின் முன்னேற்றத்திர்ற்கு தடையாக இருந்ததில்லை.

 

நம்ம வீட்டு தோட்டத்தில் செர்ரி பழங்கள்

 நம்ம வீட்டு தோட்டத்தில் 




What are the benefits of eating cherries?

Image result for cherry fruit benefits

7 Impressive Health Benefits of Cherries

Packed with nutrients. ...

Rich in antioxidants and anti-inflammatory compounds. ...

Can boost exercise recovery. ...

May benefit heart health. ...

May improve symptoms of arthritis and gout. ...

May improve sleep quality. ...

Easy to add to your diet.செர்ரி பழங்கள் உடலின் நரம்புகளில் ஏற்பட்டிருக்கும் இறுக்கத்தை தளர்த்தி, ஆழ்ந்த தூக்கத்தை தருகிறது. மன அழுத்தங்களையும் பெருமளவிற்கு குறைக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி வீரியமிக்கதாக இருக்க தினமும் செர்ரி பழங்களை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி மிகும்


[8:32 AM, 3/23/2022] Mohamed Ali: விட்டமின் சி, ஏ மற்றும் கே போன்றவைகள் காணப்படுகிறது. பொட்டாசியம், மெக்னீசியம் கால்சியம், பீட்டா கரோட்டீன் போன்ற ஆக்ஸினேற்றிகளையும், அத்தியாவசிய ஊட்டச்சத்தான கோலினையும் கொண்டு உள்ளது. இதிலுள்ள விட்டமின் சி நம்முடைய நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சரும ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. பொட்டாசியம் தசைகளின் சுருக்கத்திற்கும், நரம்புகளின் செயல்பாட்டுக்கும், இரத்த அழுத்தத்தை சீராக்கவும் உதவுகிறது.

Sunday, March 20, 2022

Dr.மன்சூா் M.D., அவா்களுக்கு திண்ணை நண்பா்கள் மனம்நிறை நன்றியை பகா்கிறோம். -Ashraf Ali Nidur

 Ashraf Ali Nidur






நேற்று மாலை நீடூா் நெய்வாசல் திண்ணைத் தோழா்கள் ஏற்பாடு செய்திருந்த இலவச மருத்துவ ஆலோசனை முகாமினை இறைவன் சிறப்பாக நிறைவேற்றித் தந்தமைக்கு முதற்கண் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

மருத்துவ ஆலோசனை பெற நாங்கள் எதிா்பாா்த்தை விட கூட்டம் சற்று அதிகமாக இருந்ததால், அவசர அவசரமாக Dr.மன்சூா் M.D. அவா்களின் கிளினிக்கிற்கு எதிரே உள்ள அல் ஹாஜி ஸ்கூலின் தாளாளா் சகோதரா் ரியாஸிடம் பள்ளிகூட வளாகத்தை எங்களுக்காக அரைநாள் திறந்து விடலாமா? என கேட்டபோது, உடனே பள்ளிக்கூட சாவியை எம்மிடம் கொடுத்து, தன் மகனாா் ஜாஸிம் மற்றும் பள்ளிக்கூட ஆயாவையும் அனுப்பி மருத்துவா் ரூமிற்கானமேஜை, நாற்காளி , தடுப்பு பலகைகளை ஒழுங்குபடுத்தியும் தந்தமைக்கு நன்றியை பகா்கிறோம்.

Misbahi Muhsin Bilalibaj speech in English at the graduation ceremony of Nidurneivasal Arabic College

 நீடூர்நெய்வாசல் அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அருமையாக ஆங்கிலத்தில் முஹ்சின் பிலாலிபாஜில் மிஸ்பாஹி


#முஸ்லிம்_பாடகர்கள் .... அபு ஹாஷிமா

 

#முஸ்லிம்_பாடகர்கள் ....



             அபு ஹாஷிமா

அந்த நாளிலே மக்கா நகரம்

இருந்ததைக் கேளுங்கள்

இன்று அன்பின் எல்லையாய்

அறிவின் சிகரமாய்

அமைந்ததைப் பாருங்கள் .... "

பள்ளிக்கூடம் விட்டு வெளியே வரும் சாயங்கால நேரத்தில் பாவாகாசீம் அப்பா பள்ளியிலிருந்து ஒலிக்கும்

அந்த இனிய பாடல் உள்ளத்துக்குள்

ஓர் உற்சாக அருவியை கொட்ட வைத்து

சந்தோஷத்தில் குளிக்க வைக்கும்.

அன்றைக்கு ரஜப் பிறை ஒன்று .

பள்ளி கொடியேற்று விழா ஆரம்பம்.

இனி 12 நாட்களுக்கு மாலைமுதல் இரவுவரை ஹனிபா பாடல்கள் ஒலித்து மனசை துள்ள வைக்கும் என்ற மகிழ்ச்சியே அன்றைய நாட்களில் எங்களுக்கு பேரின்பம் தந்து கொண்டிருந்தது.

Tuesday, March 15, 2022

மலரே அழுந்தாதே & It all starts from a dot! Let it get rid of your mind

 மலரே அழுந்தாதே 

அன்பார்ந்த அன்னையரே

அதிமதியுடைய மகளிரே

மன அழுத்தம் தினம் அழுத்த

அவதியுறும் யுவதிகளே

ஊரெல்லாம் ஓய்ந்துவிட

உறவெல்லாம் உறங்கிவிட

இரவெல்லாம் விழித்திருந்து

எதைத்தான் சிந்திப்பீரோ

Saturday, March 12, 2022

எச்சரிக்கை! #வாசனை_மிகுந்த_பதிவு!

 


Senthilkumar Deenadhayalan

#எச்சரிக்கை!

#வாசனை_மிகுந்த_பதிவு!

தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டம். (தற்போது மயிலாடுதுறையே மாவட்டமாகி விட்டது) மயிலாடுதுறையில் உள்ள கருவாட்டுச் சந்தை மிகவும் பிரபலமான ஒன்று.  இது தமிழகத்தில் முதன் முதலில் தொடங்கப்பட்ட கருவாட்டுச் சந்தையாகும். நூற்றாண்டுகளை கண்ட  மயிலாடுதுறை கருவாட்டுச் சந்தை  இன்னும் தன் இயல்பைத் தொலைக்காமல் கருவாட்டுப் பிரியர்களை கவர்ந்திழுத்து வைத்திருக்கிறது என்றே சொல்லவேண்டும்.

கஞ்சியும் கருவாடும் உழைக்கும் மக்களுக்கு  உற்ற தோழனாக விளங்குகிறது. அடித்தட்டு மக்களுக்கு சுட்டுப்போட்ட ஒரு கருவாடு இருந்தால் போதும், மடக்கு மடக்கு என உள்ளே போகும் பழைய சோறு. அவன் வயிறார சாப்பிட்ட திருப்தி அடைவான். ஆனால், இந்தக் காலத்துப் பிள்ளைகளிடம்கருவாடுஎன்று சொன்னால் இனையதளத்தில் என்னவென்று தேடுகிறார்கள். அந்தளவுக்குக் கருவாட்டுத் தேடல் இப்போது குறைந்துவிட்டது என்றே சொல்லலாம்.

Wednesday, March 9, 2022

கம்பம் அதாயி அரபிக்கல்லூரி வஜ்ர் முஹம்மது அவர்கள் சொற்பொழிவு

கம்பம் அதாயி அரபிக் கல்லூரியில் இருந்து பட்ட வகுப்பு மாணவர்கள்

நீடூர்- நெய்வாசல் ஜாமிஆ மஸ்ஜிதுக்கு வருகை தந்தார்கள் அவர்களில் வஜ்ர்

முஹம்மது அவர்கள் பதினைந்துநிமிடம் அருமையாக பேசினார்

நன்றி :வீடியோ  உதவிய -Abuaiman அவர்களுக்கு

மாயவரம் லாட்ஜ் 🤪இதை விட Best Dosa🔥 இருந்தா சொல்லுங்க ⁉️

 

நீடூர் ஜின்னா தெரு பள்ளிவாசலில் கம்பம் அதாயி கலவிக் குழுமம் மாணவர் சொற்ப...


நீடூர் ஜின்னா தெரு பள்ளிவாசலில் கம்பம் அதாயி கலவிக் குழுமம் மாணவர் சொற்பொழிவு.

Monday, March 7, 2022

உலக அரங்கில் தமிழன் /திருப்பத்தூரைச் சார்ந்த முபாரக்

 

என் கடிதப் பூக்கள் காகிதப் பூக்கள் அல்ல

 Rabiya Jmc

என்

கடிதப் பூக்கள் 

காகிதப் பூக்கள் அல்ல

காலத்தால் அழியாத

காதலெனும் காவியத்தின்

கவின்மிகு கல்வெட்டுகள்


நீ

முழுமதியாய் ஒளிரும்போது

தொட்டுவிடத் துடிக்கும்

என் கரங்கள்

சிங்கப் பெண்ணே,

 Rabiya Jmc



சிங்கப் பெண்ணே,

புன்னகை பூவணிந்து

வாழ்வை வசந்தமாக்கு

வெற்றிச் சிறகுடனே

உலகை வலம் வரலாம்


வண்ணக் கனவுகளால்

பாதை வகுத்த பின்னே

பயணம் தொடங்கிவிடு

பயத்தை உதறிவிடு

Thursday, March 3, 2022

உடற்பயிற்சி

 


உடற்பயிற்சி

என்பதை

உபகரணங்களை

வைத்துத்தான்

செய்ய வேண்டும்

என்பதில்லை!

இப்படியும் கூட...

செய்யலாம் என்பதை

காட்சிப்படுத்தியிருக்கிறது

இந்த நிகழ்படம் 

Samsul Hameed Saleem Mohamed 

நபி ﷺ அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தார்கள் மீதும் ஸலாமும், ஸலவாத்தும் கூறுவோம்.

 


நபி ﷺ அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தார்கள் மீதும் ஸலாமும், ஸலவாத்தும் கூறுவோம்.

'ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் மிக அதிகமாக என் மீது ஸலவாத் சொல்லுங்கள்.

ஏனெனில், என் சமுதாயத்தினர் என் மீது சொல்லும் ஸலவாத் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் என்னிடம் சமர்ப்பிக்கப்படுகின்றன. 

எனவே எவர் எவ்வளவு அதிகமாக என்மீது ஸலவாத் சொல்வாரோ அவர் (கியாமத் நாளன்று) தகுதியால் என்னுடன் மிக நெருக்கமாக இருப்பார்” என்று நபி ﷺ அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூ உமாமா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் :பைஹகீ

ஐந்து நிமிட #பேச்சு போட்டி


டூர் நெய்வாசல் ஜாமிஆ #மிஸ்பாஹுல் அரபிக்கல்லூரியில் 03/03/22 அன்று நடந்த ஐந்து நிமிட #பேச்சு போட்டியில் பரிசு பெற்றவர்A.உமர் அல் ஃபாரூக் புஹாரி ஃபாஜில் மிஸ்பாஹி, B.B.A, M.A சன்மானதந்தவர் #பிரான்ஸ் மௌலவி ஹாஃபிஸ் #பஷீர் அஹமது மிஸ்பாஹி
 


'முரண்பாட்டின் தேசம்' செச்சன்யா தேசத்தின் வரலாறு | Chechnya | Russia