Sunday, March 26, 2023
Friday, March 24, 2023
Thursday, March 23, 2023
பி.எஸ்.அப்துல் ரஹ்மான் அவர்களுக்கும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுக்கும் இடையே நெருக்கமான உறவு இருந்து வந்தது முற்றிலும் உண்மை
கல்வித் தந்தை என போற்றப்படும் பி.எஸ்.அப்துல் ரஹ்மான் அவர்களுக்கும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுக்கும் இடையே நெருக்கமான உறவு இருந்து வந்தது முற்றிலும் உண்மை. இவர்கள் இருவருக்குமிடையே நிலவிய ஆழமான நட்பை எடுத்துச் சொல்ல மூன்று தியரிகளை பலரும் எடுத்துக்காட்டாகச் சொல்வதுண்டு
#முதல்_தியரி
===============
//“சிரித்து வாழ வேண்டும்” படத்தில் முஸ்லிம் வேடத்தில் எம்.ஜி.ஆர். பாடும் "ஒன்றே சொல்வான்; நன்றே செய்வான்; அவனே அப்துல் ரஹ்மானாம்" என்ற பாடல் தன் ஆத்ம நண்பர் பி.எஸ்.அப்துல் ரகுமானுக்கு நன்றி செலுத்தும் விதத்தில் அமைக்கப்பட்ட பாடலிது என்பார்கள்.//
தன் நண்பர் 'அப்துல் ரஹ்மான்' பெயரை இப்பாடலில் சேர்க்க வேண்டும் என்ற எம்.ஜி.ஆரின் வேண்டுகோளுக்கிணங்க பாடலாசிரியர் புலமைப் பித்தன் இவ்வரிகளை பாடலில் இடம்பெற வைத்தார் என்ற கூற்றை பற்பல திரையுலக பிரபலங்கள் உட்பட சொல்வதை நாம் கேள்வியுற்று இருக்கிறோம்.