Friday, June 30, 2017

இவர்கள் கட்டுரைகளை இந்த வலைப்பூவில் பார்க்கலாம்







பிக் பாஸ்

.
1984 என்கிற நாவல் ஜார்ஜ் ஆர்வெல் எனும் ஆங்கிலேய எழுத்தாளர் எழுதியது. ஒரு தேசம் முழுவதும் ஒட்டு மொத்தமாக ஒரு கொடூர சர்வாதிகாரியின் கீழ் வாழ்கிறது. அவருக்கு Big Brother, ‘பெரியண்ணன்’ என்று பெயர். தேசத்தில் எல்லா இடங்களிலும் பெரியண்ணனின் மெகா சைஸ் கட் அவுட்டுகள் வைக்கப் பட்டு அவர் மக்களை கூர்ந்து நோக்கிக் கொண்டு இருப்பது போன்ற படங்கள் இருக்கும். அவற்றின் கீழே ‘Big Brother is watching you!’ என்ற வாசகம் பொறிக்கப் பட்டிருக்கும். ‘பெரியண்ணன் உங்களை கண்காணித்துக் கொண்டு இருக்கிறார்!’. எங்கு நோக்கினும் இந்த வாசகங்கள் இருக்கும். சொன்னபடியே ‘பெரியண்ணனின்’ ஆட்கள் மக்களை கண்காணித்துக் கொண்டே இருப்பார்கள். ஏதாவது ஒரு சிறிய புரட்சிப் பொறி, ஏன் புரட்சி சிந்தனை கூட வந்தால் நீங்கள் காலி. மொழிகளையே திருத்தி புரட்சி மற்றும் சுதந்திரம் சம்பந்தப்பட்ட வார்த்தைகளே கூட மொழியில் இல்லாதபடி பார்த்துக் கொண்டார் பெரியண்ணன்.

பலதாரமணம் -ஒரு வரலாற்று பார்வை...பகுதி - 3


நபி(ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் போதனைகளை சொன்ன போது முதன் முதலாக இஸ்லாத்தை ஏற்றவர்கள் கதீஜா(ரலி) அவர்கள்..அதன் பிறகு நபியின் தோழர் அபுபக்கர்(ரலி) அவர்கள்..
அதனால் தான் அவர் உண்மைபடுத்தப்பட்டவர் என்பதை குறிக்கும் விதமாக அபுபக்கர் ஸித்தீக் என்று அழைக்கப் பட்டார்கள்...
நபிகள் தன் நட்புகளை பலரையும் விட அபுபக்கர் அவர்களை பெரிதும் விரும்பினார்கள்..நபியின் பலதரப்பட்ட பயணங்களில் உடனிருந்தவர்கள் அபுபக்கர் அவர்கள்..பகைவர்கள் சூழ்ந்துக் கொண்ட தெளர் குகையில் கூட உடனிருந்தவர் அபுபக்கர் அவர்கள் தான்..
நபியின் கடைசிகாலத்தில் முடியாமல் வீட்டிலிருந்த போது பள்ளியில் தொழுகை நடத்தியவரும் அவர்கள் தான்..
நபியின் மரணத்திற்கு பிறகு முதல் கலீபாவாக பதவி ஏற்று ஆட்சிச் செய்தவர்களும் அபுபக்கர்(ரலி) அவர்கள் தான்..

Thursday, June 29, 2017

சின்ன_சின்ன அன்பில்தானே ஜீவனிருக்கு

அருகிலிருக்கும் சிறு தென்னிந்திய உணவகத்தில் மதிய உணவிற்காக அமர்ந்திருக்கையில், மிக சோர்ந்த நிலையில் கண்களில் பசியுடன் ஒரு இளைஞன் உள்ளே நுழைந்தான்.
கடை முதலாளியிடம் சென்று, மிகவும் பசிக்கிறது, கையில் காசில்லை, ஏதாவது உணவு கொடுங்கள் என்று ஹிந்தி மொழியில் கேட்க, அவனை ஒரு நிமிடம் உற்றுப்பார்த்து விட்டு, எனக்கெதிரே இருக்கும் டேபிளிற்கு கூட்டி வந்து அமரச்செய்து, அவனைப்பற்றி ஏதேதோ கேள்விகள் கேட்டு விசாரணை செய்தார்.
இதைப்பார்த்த எனக்கு சற்று கோபம் வந்தது. கொஞ்சம் சாப்பாடு கொடுக்குறதுக்கு இவ்வளவு விசாரணை என்ன வேண்டி கிடக்கிறது. அவன் பொய் சொல்லி சாப்பிடுபவனாக இருந்தாலும், கொஞ்சம் சாப்பாடு கொடுப்பதில் அப்படி என்ன ஏமாந்து போய் விடப்போகிறோம்? இதோ, அவனுக்கு பதில் சொல்லக்கூட தெம்பு இல்லை என்பது மிகத்தெளிவாக தெரிகிறதே?

பலதாரமணம் -ஒரு வரலாற்று பார்வை...பகுதி -2

Saif Saif
பலதாரமணம் -ஒரு வரலாற்று பார்வை...பகுதி -2
------------------------------------------------------------
அன்றைய அரேபிய தீபகற்பம் அறியாமையில் மூழ்கி கிடந்த கடுமையான காலம்...
ஒருத்தியோடு பலபேர் சேர்ந்திருக்கும் நிலையும்,திருமணம் செய்யாமலேயே பலபேரோடு சேர்ந்து வாழும் போக்கும் நிறைந்த அறியாமை காலம்.
இந்த நேரத்தில் இறைத்தூதரின் வருகை..அவரை பிறரிடம் இருந்து அவர்களை உயர்வுபடுத்திக் காட்டியது..
நபி(ஸல்) அவர்கள் இளமை பருவத்திலேயே உயர் பண்புடையவராகவும்,மென்மை குணமுடையவராகவும்,அமானிதம் பேணி வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுபவர்களாகவும்,
பிறர் சிரமங்களை தானே தாங்கிக் கொள்பவர்களாகவும் ,அவர்களுக்கு உதவுபவர்களாகவும் இருந்ததால் அல்அமீன் நம்பிக்கையாளர் என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்கள்...
(ஸஹீஹுல் புகாரி)

Wednesday, June 28, 2017

தென்னைகளில் கள்ளெடுப்பவள்


பக்கவாதப் புருஷனுக்கென முதலில்
வீட்டுத் தென்னையில் கள்ளெடுத்தவளின்
தோப்பு மரங்கள்
அத் தடவை காய்த்துக் குலுங்கியது கண்டு
தொடக்கத்தில் ஊர் முழுவதும்
வியப்பாகக் கிசுகிசுத்துக் கொண்டார்கள்
பெண்ணேறும் தென்னைகள்
அதிகமாகக் காய்க்கிறதென

ஒருவருக்கொருவர் விருந்து பரிமாறி மகிழ்வது வாடிக்கை.

தமிழ்நாட்டில் இந்து முஸ்லிம் கிருத்தவர்கள் அனைவரும் அவரவர் பண்டிகைகளுக்கு ஒருவருக்கொருவர் விருந்து பரிமாறி மகிழ்வது வாடிக்கை. புலம்பெயர்ந்த கனடாவிலும் குடும்பங்களுக்கு இடையே இது நடந்துகொண்டுதான் இருக்கிறது.
ஆனாலும் சங்கங்கள் வழியாக தனித்தனியே பண்டிகைகள் கொண்டாடப்பட்டுவந்தாலும், நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டை இதுவரை யாரும் முன்வந்து இங்கே செய்ததில்லை.

FRANCE 24 Live – International Breaking News & Top stories - 24/7 stream

op 3 Strongest Muslim Countries Armies in The World 2017

இந்தியாவில் இஸ்லாம் பரவிய பிறகு எத்தனையோ கலாச்சார மாற்றங்களும்


Abu Haashima 
புதிய நாகரீகங்களும் தோன்றின.
அப்போது இந்தியா ஒரே நாடாக இல்லை.
பல நூற்றுக்கணக்கான நாடுகளாகத்தான் இருந்தது.
தமிழ்நாடே சேர சோழ பாண்டிய நாடுகளாக பிரிந்து கிடந்தது.
ஆன்மீகச் செல்வர்களால் இங்கே இஸ்லாம் பரவுவதற்கு முன்னரே
அரபு நாட்டு வணிகர்களால் தமிழகத்தோடு அவர்களுக்கு வணிகத் தொடர்பு இருந்தது.
அதனால் அவர்களின் உணவு கலாச்சாரமும்
இங்கே அறிமுகமானது.
முஸ்லிம்கள் எண்ணிக்கை இங்கே அதிகரித்தபோது
கல்வி , கலை , கலாச்சாரம் , கட்டிடம் போன்ற துறைகளில் புதிய முன்னேற்றம் ஏற்பட்டது.
உணவு பழக்க வழக்கங்களில் மிகப்பெரிய புரட்சியே ஏற்பட்டது.

Tuesday, June 27, 2017

ஒரு கண்ணீரின் பயணம்....

கருகமணி கட்டிவிட்டு காத தூரம் போனவரே
கருகமணிகளை எண்ணியபடி கண்கலங்கி நிற்கிறேன்
மாதமொன்றை எனக்காகவும்
மீதமானதை பணத்துக்காகவும்
வாழ்பவரே
தவிக்க விட்டுவிட்டு போனீரே
என் தலைவனே 
உன் வாசம் இன்னும் போகலையே
நித்தம் உன்னை
தொலைபேசி வழியே
நான் சுவாசிக்கிறேன்

நண்பருக்காக தனது மடி வழக்கத்தை துறக்கத் தயாராக இருந்த ஐயர்.

அப்பாவுக்கு புதுக்கோட்டையில் எலக்ட்ரிக் கடை. நான் குட்டி பையனா இருந்தப்ப கணேஷ் ஃபேன்னு ஒரு ஃபேன் வந்துச்சு. அதை தமிழ்நாடு முழுக்க சூப்பர் ஸ்டாகிஸ்ட் எடுத்து இருந்தாரு ஒரு ஐயரு. ரொம்ப ஆச்சாரமானவரு. அந்த ஐயரு புதுக்கோட்டை மாவட்டத்துக்கு எங்க அப்பாவை டீலராக்கி இருந்தாரு. இப்ப வரைக்கும் அவரு பேரு எனக்குத் தெரியாது. காரணம் அப்பா அவரை கணேஷ் ஃபேன் சாமினு தான் சொல்லுவாரு கூப்பிடுவாரு. ரெண்டு பேரும் அண்ணன் தம்பி மாதிரி பழகுவாங்க.

பலதாரமணம் -ஒரு வரலாற்று பார்வை...பகுதி - 1

பள்ளியில் படிக்கும் காலத்தில் வாத்தியார் எங்களை (முஸ்லிம் மாணவர்களை) பார்த்து கூறுவார்..உங்களுக்கு என்ன எத்தனை பொண்டாட்டி வேண்டுமானாலும் கட்ட வேண்டியது..ஜாலியா இருக்க வேண்டியது..! இதெல்லாம்
என்ன கணக்கு என்று நக்கலாகவும்,குத்தலாகவும் பேசுவார்..
ஆனால் அன்று அவர் கேள்விக்கு பதில் கூற திராணி இல்லை என்று சொல்வதை விட அதற்குரிய அறிவை பெற்றிருக்கவில்லை என்று சொல்வது ஏற்புடையதாக இருக்கும்....

எல்லா புகமும் இறைவனுக்கே.....

எல்லா புகமும் இறைவனுக்கே.....
பள்ளபட்டியைச் சேர்ந்த ரிபாத் சாருக் கலாம் சாட் என்ற கையடக்க செயற்கைக்கோளை தயாரித்தார் , சமீபத்தில் நாச விண்கலத்தில் ஏவப்பட்டது.
தந்தை இல்லாமல் , தன்னுடைய சொந்த முயற்ச்சியில் , எந்த ஒரு உதவியும் கிடைக்காமல்,குறிப்பாக இஸ்லாமிய சமுதாய மக்களிடம் உதவி கிடைக்கவும் இல்லை, இஸ்லாமிய சமுதாய மக்கள் வழிகாட்டவும் இல்லை அந்த சிறுவனுக்கு......ஆனால் இன்று என் சமுதாயத்தை சேர்ந்த மாணவர் என்று பெருமை மட்டுமே கொள்கிறார்கள் இஸ்லாமிய மக்கள்......!!!!
உண்மையிலேயே ரிபாத் சாருக் போன்ற பல இளம் விஞ்ஞானிகளை மதம் பார்க்காமல் தொடர்ச்சியாக வழிகாட்டுதல் கொடுத்து ,சாதனையாளராக்கியவர் யார் தெரியுமா ?
ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா என்ற அமைப்பை நடத்தி வரும்
சகோதரி, ஸ்ரீமதி கேசன் .
(அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.)
மேலும், கலாம் சாட் செயற்கைக் கோளை தயாரிக்க , ஸ்ரீமதி அவர்களுடைய வழிகாட்டுதலுடன் , இளம் அறிவியல் விஞ்ஞானி ரிபாத் சாருக் தலைமையில்

Yagna Sai ,Lead technician
Mohamed Abdul Kashif
,Lead Engineer
Tanishq Dwivedi ,Flight engineer
Vinay bharadwaj ,Stuctural engineer
Gobinath ,Biologist,
Sivasooriya ,Botanist.
போன்றவர்களும் பணியாற்றி இருக்கிறார்கள்.

Monday, June 26, 2017

இஸ்லாமிய விரோத நாட்டின் நாடாளுமன்றத்தில் அவர், பாங்கு சொன்ன நிகழ்வு காண்பவர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

Bill from Israeli parliamentarian on ban of Azan. a Muslim Parliamenterian in Israel Parliament Recite Azan as a Protest which Shock Parliamenterians . இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் இஸ்லாமியர்கள் பாங்கு சொல்வதற்கு தடைவிதிக்கும் மசோதா தொடர்பாக பேச்சு பிரதமர் நேதன்யாஹூ தலைமையில் நடைபெற்றுள்ளது. அப்பொழுது, அஹமது திபி என்ற இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஒரு இஸ்லாமிய நாடாளுமன்ற உறுப்பினர் எழுந்து சென்று, அழகிய ராகத்தில் பாங்கு சொன்னார். இதனை சற்றும் எதிர்பார்த்திராத யூத விரோதிகள், அவரை அமரும் படி கூச்சலிட்டனர். இருப்பினும் அதனை காதில் வாங்கிக்கொள்ளாத அஹமது திபி பாங்கும், பின்னர் பாங்கு துஆவையும் கூறிய பின்னர் புன்முறுவலுடன் இருக்கையில் அமர்ந்தார். இந்த செயல் யூதர்களை அதிர்ச்சியடைய வைத்தது. அத்தனை இஸ்லாமிய எதிரிகளின் முன்னர், ஒரு இஸ்லாமிய விரோத நாட்டின் நாடாளுமன்றத்தில் அவர், பாங்கு சொன்ன நிகழ்வு காண்பவர்களை மெய்சிலிர்க்க வைத்தது. மாஷா அல்லாஹ்

Sunday, June 25, 2017

இறைவன் தந்த பெருநாள் பரிசு💰

Samsul Hameed Saleem Mohamed
நேற்றைய தினத்தில் "நான் கண்ட பெருநாட்கள்" என்று தலைப்பிட்டு நான் எழுதிய பதிவிற்கு இன்று அந்த பெருநாளை கொண்டாடிக் கொண்டிருக்கும் தினத்தில் ஒரு பெரும் பரிசு கிடைத்தது!
ஆம்..! முகநூல் மெசேன்ஜர் வாய்ஸ் கால் மூலமாக ஒரு அன்புக்குரல் என்னை அழைத்து சலாம் கூறி பிறகு பெருநாள் வாழ்த்தும் கூறுகிறது! அதைக்கேட்ட மாத்திரத்தில் ஒரு இன்ப பேரதிர்ச்சியும் இனம் புரியாத ஒரு சிலிர்ப்பும் என்னை பற்றிப்பிடித்துக்கொண்டது காரணம் அந்த குரலுக்கு சொந்தக்காரர் அப்படிப்பட்டவர் என்பதால்!
அவர் யாரென்று கேட்கிறீர்களா..? அவர்தான் எங்கள் நீடூர்-நெய்வாசலை சேர்ந்த வழக்கறிஞரும், நல்ல கருத்துமிக்க எழுத்தாளரும், கொண்ட தானத்தாலும், தனத்தாலும், குடும்ப பாரம்பரியத்தாலும் பெற்ற அகவையாலும் உயர்ந்து நிற்கும் பெருமதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய '@Mohamed Ali அவர்கள்!

🎉நான் கண்ட பெருநாட்கள்...!!!

Samsul Hameed Saleem Mohamed 
என் வாழ்நாளில் சுமார் பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்புவரை சந்தித்த ஒவ்வொரு பெருநாளையும் நான் என்றுமே மறக்கமுடியாது! அதுவும் பால்ய காலத்தில் கொண்டாடி குதூகலித்த அந்த பெருநாட்களை எண்ணும் போதே மனதிலிருந்து ஆசை அருவி அப்படியே அளவின்றி வழிந்தோடி ஆற்பரித்து காத்து நிற்கும்!
நோன்பு தொடங்கிய ஓரிரு வாரங்களிலேயே பெருநாளைக்கு தேவையான புதுத்துணிமணிகளை தேர்வு செய்ய அம்மாவின் கைபிடித்து மாயவரம் சென்ற நாட்கள் மறக்க முடியாதவை!

Friday, June 23, 2017

வெளியுலகத்திற்கு மகளை அழைத்துச்செல்லுதல்..! #நிஷாமன்சூர்

#நிஷாமன்சூர்
முதன்முதலாக பள்ளியில் தவறிவிழுந்து
ரத்தம் கொப்பளித்த சிராய்ப்புடன் வீடடையும் மகள்
உதடுபிதுக்கி அழத் துவங்குகிறாள்
காயத்தின் வலியைவிட
பதைபதைத்து ஓடிவந்து தூக்கிவிடும்
கரங்களற்ற பள்ளியின் வெறுமை
அதிகம் வலித்திருக்கிறது அவளுக்கு
நாம் அவளை இறுகக் கட்டியணைத்துக் கொள்கிறோம்

நம்பிக்கை மகா வலிமையானது


நம்பிக்கை
மகா வலிமையானது
காடுகடக்கும்
ஒரு சிட்டுக்குருவிக்கு
அடர்த்தியான
இறகுகளைக் கொண்ட
சிறகுகளைப்போல

நம்பிக்கை
இல்லா நிலையில்
மரணம்
மிக நெருக்கமானது
வழுக்கும்
கண்ணாடிச் சிலையை
நடுங்கும் கரங்களில்
ஏந்தி நிற்பதைப்போல

Thursday, June 22, 2017

இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலையில்

தகவல் Pattabi Raman
இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலையில் வேலை செய்யும் ஒருவர், ஒரு நாள் மாலை வேலை முடியும் தருவாயில் இறைச்சி பதப்படுத்தும் coldroom அறைக்குள் எதோ வேலையாக இருந்த போது எதிர்பாராதவிதமாய் அதன் தானியங்கி கதவு பூட்டிக்கொண்டுவிட்டது._
_உடனே பெரும் கூச்சலிட்டாலும் அவர் எழுப்பிய ஓசை வெளியே யாருக்கும் கேட்கவில்லை மேலும் பெரும்பாலானோர் வேலை முடிந்து கிளம்பிவிட்டனர்..._
_இன்னும் சிறிது நேரத்தில் ஐஸில் உறைந்து இறக்கப்போகிறோம் என்று எண்ணி கவலை அடைந்தார் அவர்._

Wednesday, June 21, 2017

திருமணமென்பது,

திருமணமென்பது, இருவர் இச்சமூக உடன்படிக்கையின்படி பரஸ்பரம் தங்கள் உடலையும், மீதமிருக்கும் வாழ்நாட்களையும் ஒப்படைக்கும் சடங்கு. அதற்கு பின்னாக இருவரின் ஆசைகள், எதிர்பார்ப்புகள், ப்ரியங்கள் அனைத்தும் ஒன்று கலந்து பெரும் பிரவாகமாய் புரிதலுடனுன் கூடிய தெள்ளிய காதல் இழையோடத் துவங்கும் பொழுதுதான் விலைமதிப்பில்லாத மனது மானசீகமாக ஒப்படைக்கப் படுகிறது.

நோன்பு_ஒரு_அகப்பார்வை

எளிய மக்களை எப்போதும் வயிறுதான் ஆள்கிறது. தலைதான் மனிதனின் எஜமான் எனினும் வயிற்றின் கட்டளைகள் அல்லது தேவைகளுக்குதான் அடிபணிய நேர்கிறது.
தன்னிறைவடைந்த வயிற்றுக்காரர்களைத்தான் இச்சை(ஹவா நஃப்ஸ்)ஆளமுயற்சிக்கிறது, ஈகோ எனும் தன்முனைப்பு ஆள முனைகிறது.
ஆனால் வயிறு தன்னிறைவடையாதபோதோ நான் எனும் அகந்தையும் ஆசைகளும் செயலற்று ஸ்தம்பித்து விடுகின்றன. ஆகவேதான் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் திருமணம் செய்துகொள்ள வசதி இல்லாதவர்களை நோன்பு வைக்கப் பணித்தார்கள். ரமலான் என்றால் கருக்குதல் என்று பெயர். பாவங்களைக் கருக்குதல் என்று பொருட் கொண்டாலும் எல்லாப் பாவங்களுக்கும் காரணமாக உள்ள ஈகோவையும் இச்சைகளையும் அடக்கிவைக்கும் பயிற்சியாகவே நோன்பு இருக்கிறது

நிஷா மன்சூர்

ஒரு நோன்பாளியின் மரணம் ...

Abu Haashima

உதுமான் ( ரலி ) அவர்கள் கலீபாவாக இருக்கும்போது நாட்டில் குழப்பங்கள் ஏற்பட்டன.
கலகக்காரர்கள் கலீபாவின் வீட்டை சுற்றி முற்றுகை இட்டிருந்தார்கள்.
அது ஹஜ்ஜுடைய காலம்.
ஹஜ்ஜுடைய காலத்தில் யாரும் கலவரம் செய்யமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் மக்களை ஹஜ்ஜுக்கு செல்ல அனுப்பி வைத்தார்
கலீபா உதுமான் ( ரலி ) அவர்கள்.
கலீபாவுக்கு ஆதரவான சஹாபிகள் மதீனாவில் இல்லாத நிலையை பயன் படுத்திக் கொண்ட கலவரக்காரர்கள் கலீபாவின் வீட்டின் பின்புறமாக உள்ளே நுழைந்தார்கள்.
கலீபா உதுமான் அவர்களுக்கு வயது 82 . அறிவு முதிர்ச்சி பெற்ற பெருமகனார் அமைதியாக உட்கார்ந்து குரான் ஓதிக் கொண்டிருந்தார்.
" வயது முதிர்ச்சியால் மூளை மழுங்கிப்போனக் கிழவரே ... " என்று கூறிக் கொண்டே உதுமான் அவர்களின் நீண்ட தாடியை பற்றிப் பிடித்து இழுத்தார் ஒருவர்.
அவர் வேறு யாருமல்ல...
அபூபக்கர் சித்தீக் ( ரலி ) அவர்களின் அன்பு மகன் முஹம்மதிப்னு அபூபக்கர்தான்.

Tuesday, June 20, 2017

புனித ரமலானில் ரஹ்மானிடம் சேர்ந்த கவிக்கோ அப்துல் ரகுமான்

கவிக்கோ அண்ணனோடு எனக்கு பல ஆண்டுகளாகப் பழக்கம். என்மீது நம்பிக்கையும் அன்பும் கொண்டவர். அவரது ”பால்வீதி” என்ற புதுக்கவிதை நூல் எங்களையெல்லாம் புரட்டிப் போட்ட நூலாகும். நாங்கள் அப்போது முதுகலை மாணவர்கள். நான், இயக்குனர் அகத்தியன் போன்றவர்கள். புதுக்கவிதை எழுதுவது எப்படி என்று கற்றுக்கொண்டிருந்த காலமது. பால்வீதி ஒரு புதிய உலகத்தை எங்களுக்குக் காட்டியது. அடடா, இப்படியெல்லாம்கூட எழுத முடியுமா என்று வியக்க வைத்த காலம் அது.

அவருடைய ”ஆலாபனை” தொகுப்புக்கு சாகித்திய அகாடமி விருது கிடைத்தாலும் அது உண்மையில் ”பால்வீதி” தொகுப்புக்கே கொடுக்கப்பட்டிருக்கவேண்டும்.  ”பால்வீதி”தான் அவருடைய மாஸ்டர் பீஸ். ஆனால் எல்லா தேசிய விருதுகளின் பின்னாலும் அரசியல் உள்ளது நமக்குத் தெரிந்ததுதான். பரவாயில்லை. கவிக்கோவுக்கு விருது கொடுக்கப்பட வேண்டும். கொடுத்தாகிவிட்டது. அது எந்தத் தொகுதியாக இருந்தால் என்ன?

Monday, June 19, 2017

ஈமான் என்பதன் பொருள் நம்பிக்கை.

அல்லாஹ்வின் நாட்டமில்லாமல்
யாரும் யாரையும் அழிக்க முடியாது.
யாரையும் வாழ வைக்கவும் முடியாது.
இதுதான் நிஜம்.
இந்த நிஜத்தின் மற்றொரு பெயர் ஈமான்.
ஈமான் என்பதன் பொருள்
நம்பிக்கை.
இறை நம்பிக்கையுள்ளவர்கள்
இறைவனுக்கு மட்டுமே பயப்படுவார்கள்.
மற்ற எதற்கும் பயப்படமாட்டார்கள்.
இறை நம்பிக்கை பலஹீனமானவர்கள்
இறைவனைத் தவிற எல்லாவற்றுக்கும்
பயப்படுவார்கள்.

இது முகநூலுக்கும் ரெம்ப முக்கியம்

காரணமாகவோ..காரணமில்லாமலோ.... யாரையும் காயப்படுத்துவதோ கோபம் கொள்வதோ... கேலி கிண்டல் செய்வதோ...பிறர் மத்தியில் அவதூறு செய்வதோ....
அவரைவிட...தம்மையே அதிகம் பாதிக்கும்...அது அப்பொழுது மகிழ்ச்சியாகவோ,
பழிவாங்கி விட்டோம் என்ற திருப்தியையோ.. நிம்மதியையோ கொடுத்தது போல் இருக்கும்..
ஆனால் அது கொடிய விஷம் போல் நம்மில் நம் மனதில் பரவி... பேரிழப்புகளை ஏற்படுத்திவிடும்....
கோபம் கொள்வதும்.. பழிவாங்குவதும்.. போதை பொட்களுக்கு அடிமையாவது போல் தான்..

சாதுர்யம்

அந்தக் காலத்தில் மிகவும் புகழ் பெற்றிருந்த ஒரு தத்துவ ஞானி முல்லாவைச் சந்திக்க விரும்பி அவரை எப்பொழுது சந்திக்க முடியும் என்று கேட்டு அ,னுப்பியிருந்தார்.

ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வந்தால் தம்மைச் சந்திக்க வசதியாக இருக்கும் என்று முல்லா மறு மொழி அனுப்பியிருந்தார்.

அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் தத்துவ ஞானி முல்லாவின் வீட்டுக்கு வந்தார். ஆனால் தவிர்க்க முடியாத ஒர் அலுவல் காரணமாக அந்த நேரத்தில் முல்லாவினால் வீட்டில் இருக்க இயலாமல் போய் விட்டது.

அன்பைத் தேடி ஒரு தப்பித்தல்

- எம்.ரிஷான் ஷெரீப்

     'ஒவ்வொரு தடவையும் நாம் எமது வாழ்க்கையைப் பற்றிக் கதைக்க முற்படும்போதும், ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. உடனே அவர் கலவரமடைந்து விடுகிறார்'

   
திருமணம் முடிப்பதற்காகப் பேசி வைத்திருக்கும் மணப்பெண்ணான நெகாருடன் தமது வாழ்க்கை பற்றிக் கலந்துரையாட முற்படும் போதெல்லாம் மணமகன் இமானை ஒரு தொலைபேசி அழைப்பு குறுக்கிடுகிறது. அதனைத் தொடர்ந்து அவன் கலவரமடைந்து உடனே அவளை விட்டுவிட்டுப் புறப்பட்டுச் சென்று விடுகிறான். அவள் அவனைச் சந்திக்கும்போதெல்லாம் அவளைப் புதிருக்குள்ளும், குழப்பத்துக்குள்ளும் ஆழ்த்தும் அத் தொலைபேசி அழைப்பு பற்றி வினவுகிறாள். தனது கணவனாகப் போகிறவன் ஏதோ ஒரு பெருந் துயரத்துக்குள் சிக்கியிருப்பதை அவள் உணர்கிறாள். அவளது தொடர்ச்சியான கேள்விகளின் பிறகு அவன், வாழ்நாள் முழுவதும் தான் கூடவே இருந்து கவனித்துக் கொள்ள வேண்டிய இன்னுமொரு நபர் தனது வாழ்வில் இருப்பதாகக் கூறுவதைக் கேட்டு அதிர்ச்சிக்குள்ளாகிறாள். இத் திருமணத்தை அந் நபர் விரும்பவில்லை என்றும் இத் திருமணத்தின் மூலம் அவர் மிகுந்த கவலைக்காளாவார் எனவும் கூறுவது அவளை மென்மேலும் குழப்பத்துக்குள் தள்ளி விடுகிறது. இமான், தனது வீட்டுக்கு அவளை அழைத்துச் செல்கிறான். அவ் வீட்டுக்கு முதன்முதலாக வருகை தந்திருக்கும் நெகாரிடம், இமானின் தாய் அவளுக்குள்ள முக்கிய பொறுப்பினை மிகுந்த பரிதவிப்புடனும் அன்புடனும் விளக்குகிறார். அன்பளிப்பாக ஆபரணங்களை வழங்குகிறார். பின்னர் இமான், அவன் குறிப்பிட்ட அந் நபரைச் சந்திக்க அவளை அழைத்துச் செல்கிறான். அவள் அதிர்ச்சியடைகிறாள். தனது வீட்டுக்குக் கவலையோடு திரும்பும் அவள், அவர்களது திருமணம் குறித்த எந்த முடிவையும் எடுக்க முடியாமல் திணறுகிறாள்.

டி.ஆர்...! ஒரு ஃபிளாஷ்பேக் ஸ்டோரி ?

Gajini Ayub
1982 கால கட்டத்தில் (ஒரு தலை ராகம் திரையிடப்பட்டு ரசிக்கப்பட்ட பின்) தமிழக ரசிகர்கள் டி ராஜேந்தரின் அடுத்த படம் எப்படி இருக்கப்போகிறது என்று எதிர்பார்த்து காத்திருந்த காலமது...
டி ஆர் தன் அடுத்த பட இயக்க வாய்ப்புக்கு சிலரை அணுகியபோது ஜேப்பியார் வாய்ப்பு தந்ததில் புதுசா " வசந்த அழைப்புகள்" என்று தலைப்பிட்டு திரைக் கதை எழுத ஆரம்பித்தார்! ( அதற்கு முன் இந்த படக்கதைக்கு' என் பிரிய வசந்தமே' என்று பெயர்.ஏனோ மாறிவிட்டது)
அதற்கு முன் தன் பொருளாதாரபற்றா குறையால் சென்னை திருவல்லிக்கேணி நல்லதம்பி முதலி தெருவில்( அறங்கக்குடி எஸ்.எம்.சம்சுதீன் அவர்களின் ஹேப்பி மேன்ஷனில்) ஆதரவுகேட்டு தரைவிரிப்பு போட்டு தங்கிகொண்டிருந்த டி ஆர் , தயாரிப்பாளர் அடுத்த வாய்ப்பு கொடுத்ததால் சென்னை மூன்று நட்சத்திர
ஹோட்டலான சுதர்ஸன் இண்டர்நேஷனலில் தங்க வைக்கப்பட்டிருந்தார் ...!

Sunday, June 18, 2017

ஆட்சியாளனை புகழும் இந்த வரிகள் எப்போதுமே என்னை நெகிழ வைக்கும் ! / Abu Haashima


எப்பொழுதும் நான்
உருகுவது 
அவனை எண்ணித்தான் .
எத்தனை முறை படித்தாலும்
அலுப்பே வராத என் ஆத்மாவின்
ஆட்சியாளனை புகழும் இந்த வரிகள் 
எப்போதுமே என்னை நெகிழ வைக்கும் !
*********
இறைவா...
யாவையும் 
பிறக்கவும் இறக்கவும் 
வைப்பவன் நீ !
பிறப்பே இல்லாத 
பேரதிசயமும் 
நீ !
பிரபஞ்சமெங்கும் 
பெருங்காற்றை 
புரள வைப்பவன் நீ !
அதில் 
துளிகூட கொடுக்காமல் 
மூச்சுக் காற்றை 
மூடி விடுபவனும் 
நீ !
காவியமும் 
ஓவியமும் 
எல்லாமும் 
எழுத வைத்து 
அறிய வைப்பவன் நீ !

தலைமுறை இடைவெளி

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை எனக்கும் தந்தைக்கும் 47 வருட வயசு வித்தியாசம். நான் அடிக்கடி சொல்வேன் தலைமுறை இடைவெளி என்று ஆனால் என் மீது அவர் பொழிந்த பாசமும் அன்பும் மிகையானது.
என்னை 6 ம் வகுப்பில் விடுதியில் சேர்த்தார் 10 ம் வகுப்பு வரை விடுதி வாழ்க்கை அதற்கு பிறகு தந்தையுடன் கல்லூரி வரை ஆனால் தாய் ஊரினில். 8 ம் வகுப்பு வரை படித்து அதற்குப்பின் கொழும்பில் இரவு வகுப்பு படித்து தனது ஆங்கில அறிவையும் பட்டை தீட்டிகொண்டவர். அரசியல், ஆன்மிகம், கலை என்று அனைத்து துறையிலும் சரளமாக உரையாடுவார் ஓர் குறிப்பிட்ட காலம் வரை இடது கம்யுனிஸ்ட், அய்யா கல்யாண சுந்தரம் , KT ராஜு , பாப்பா உமாநாத் என்று அவர் வட்டம் தீவீரமானது . SAS என்று செல்லமாக அழைப்பார்கள் அவரது காலம் வரை பொருளுக்குக்காக அவர் தன்னை மாற்றி கொண்டதில்லை.

என் தந்தை.../ Raheema Beevi

Raheema Beevi
நாங்கள் ஆறு பேரும் பெண்களாக பிறந்தும் ஒரு நாள் கூட ஆண் குழந்தை இல்லையே என்று வருத்தப்பட்டதில்லை.எங்களை ஒருபோதும் கடிந்து ஒரு வார்த்தை சொன்னதில்லை. ஒரு அடிகூட அடித்த ஞாபகம் இல்லை.ஒரு ஆண்குழ்தையை எதிர்பார்த்து எதிர்பார்த்து பெண்ணாக பிறக்கும் போது உம்மா ஆதங்கத்தில் அழுவாங்களாம். அல்லாஹ் கைகால் சுகத்துடன் குறையில்லாமல் அழகான குழந்தைகளை தந்திருக்கிறானே என்று அப்போது கூட உம்மாவை ஆறுதல் படுத்துவது வாப்பாதான்.

திரும்பிப்பார்க்கிறேன்_தந்தையே

எல்லாம் வல்ல இறைவன் நம் குருதி வழியே உயிரும் உணர்வும் கொடுத்து உருவாக்கிய உறவில் தந்தை மிகவும் மகத்துவம் மிக்கவர்! தந்தை கொடுத்ததால் தாய் பெறுகிறார் அதன் வழியே இருவரும் பெற்றோர் ஆகின்றனர்.
அதுமட்டும் இன்றி தான் பெற்ற பிள்ளையை எல்லாம் பெற வைப்பதிலும் தந்தையின் பங்களிப்பே மிகைத்து நிற்கும் பல சமயங்களில், அந்த மிகைத்ததலின் விளைவே நாமெல்லாம்!
பொடு போக்கான தாய் தந்தைக்கு பிறந்து தனது மூன்றாம் வகுப்பைக்கூட முழுமை பெற்று முடிக்காமல் பத்து வயது நிரம்பும் முன்பே திருச்சி சென்னையின் திரையரங்குகளின் உள்ளே தன் தோளில் சுமந்து பதார்த்தங்களை விற்கத் துவங்கி அதன் பிறகு உணவகங்களில் சர்வர் பணிக்கு சென்று வஞ்சமில்லாமல் உழைத்து காலம் கொடுத்த பதவி உயர்வுகளின் அடிப்படையில் என் தாய்க்கு கணவராகி! அதன் வழியே என்னைப் பெற்று தந்தையாகி! இந்த உலகில் நான் இயன்றவரை எல்லாம் பெற வைத்து அழகு பார்த்து தாயுமாகி அல்ல யாவுமாகி நின்றவர் என் தந்தையெனும் என் கதை நாயகர்.

தந்தை .../ J Banu Haroon

 J Banu Haroon
=======
என் தந்தையின் மறைவுக்குப்பின் குடும்பத்துடன் பெருநாளைக் கொண்டாடாத வெறுமையான மனநிலையில், செய்வதறியாது இருந்தோம் ...
எப்போதும் போல் சென்னையிலிருந்து சிதம்பரம் வந்திறங்குவதாக பக்கர் மாமாவின் கடிதம் வந்து சேர்ந்த இரவு இரயிலில் வந்திறங்கினவரை அழைத்துவர அண்ணன் கிளம்பிப்போனார் ...
எப்போதும் மாமா எங்கள் வீட்டிற்கு அம்மாவைப் பார்க்க வரும்போதெல்லாம் காலையில் கடிதம் வரும் ...அன்றிரவு இரயிலில் மாமாவே வந்திறங்குவார்கள் ..சிதம்பரத்தில் அப்போதெல்லாம் மாலையில் மீன் விற்பனை அமோகமாக இருக்கும் ...மாமா மீன் விரும்பி .''.நல்ல மீன் வாங்கி ஆக்கி வை'' ...என்கிற வரிகளும் கடிதத்தில் தவறாமல் இடம் பிடித்திருக்கும் ...மாமாவுடன் வரும் நண்பர்களும் மீன் விரும்பிகள்தாம் ...பலவிதங்களில் அம்மா ஆட்களை வைத்துக்கொண்டு மீன்களை சமைத்து வைப்பார்

Saturday, June 17, 2017

தாங்கிக் கொள்ள இயலாத வேதனை என்றால் என்ன?


  நாஷித் அஹமத்

...நாம் தாங்கிக் கொள்ள இயலாத சோதனைகளை அல்லாஹ் நமக்கு தர மாட்டான் என்கிற அல்லாஹ்வின் வாக்குறுதியை நாம் சரியாக புரிந்து வைத்திருக்கிறோமா?

எதையெல்லாம் தாங்க இயலாத சோதனை என்று நாம் கருதுவோமோ அவை எதையும் அல்லாஹ் நமக்கு அளிக்க மாட்டான் என்பது இதன் பொருளல்ல.

பெற்றோருடன் அன்புடன் வாழும் ஒரு பிள்ளை, பெற்றோர் த‌ம்மை பிரிந்து விடுவது தாங்க இயலாத சோதனை தான் என்று கருதுவார்.

மனைவி, குழந்தைகளுடன் மகிழ்ச்சியாய் வாழ்பவரிடம் உங்களுக்கு தாங்கவே இயலாத சோதனை என்றால் எதை கருதுவீர்கள்? என்று கேட்கிற போது, மனைவியோ குழந்தையோ இறந்து விடுவதை என்னால் தாங்கிக் கொள்ள இயலாது என்பார்.

பெயரில் என்ன இருக்கிறது? எவ்வளவோ!

Shahjahan Rahman
குழந்தைக்குப் பெயர் வைக்க வேண்டும். நல்ல பெயராக நீங்கள் சொல்லுங்களேன் என்று கேட்பார்கள். சிலர், குறிப்பிட்ட எழுத்தில் துவங்குகிற பெயரைப் பரிந்துரைக்குமாறு சொல்வார்கள். சிலர், இன்ன பெயர் வைக்கலாம் என்று விரும்புகிறேன், கருத்துக் கூறுங்கள் என்று கேட்பார்கள். இதைப்பற்றி யோசிக்கும்போது பல விஷயங்கள் நினைவுக்கு வந்தன. பெயரில் என்ன இருக்கிறது? ரோஜாவை எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் ரோஜாதான் என்பது ஷேக்ஸ்பியரின் வாதம். ஆனால் பெயரில் எவ்வளவோ இருக்கிறது என்பது சாதியக் கட்டுமானம் கொண்ட நமது சமூகத்தில் எதார்த்தம்.


Friday, June 16, 2017

வேலை வாய்ப்புக்கான தகவலை மற்றும் அது சார்ந்த தரவுகளை பகிர்கிறேன்

வேலை வாய்ப்புக்கான தகவலை மற்றும் அது சார்ந்த தரவுகளை பகிர்கிறேன்
சிலருக்கு இதனை கண்டு அயர்ச்சியாக இருக்கலாம். அன்பர்கள் சிலர் பல ஆண்டுகளாக ஓர் நிறுவனத்தில் இருக்கலாம் அவர்கள் கம்போர்ட் ஜோன் எனப்படும் மனநிலையில் இருப்பவர்கள் சிலர் வேலை தேடும் நேரத்திற்கான நிர்பந்தம் எப்பொழுதும் ஏற்படலாம் . ஆண்டுகள் பல கடந்தும் அங்கீகாரம் இல்லாமல் மாற்றம் விரும்புபவர்கள் சிலர் பொருளாதார தேவைகளுக்காக சிலர் முயற்சிப்பர்.
இன்றைய சூழலில் எந்த நிறுவனமும் உங்களை கொண்டாட தயாரில்லை நான் 8 வருடம் உழைத்த நிறுவனத்தில் எனது ராஜினாமாவை அறிவித்ததும் நடத்தப்பட்ட விதம் மிகவும் வேதனையானது. உங்களது உழைப்பு மற்றும் சாதனைகள் அந்த நேரத்தில் அவர்களின் கண்ணுக்கு தெரியாது சிலர் இதனை தனிபட்ட ஓர் விடயமாக கருதுகின்றனர். அன்றைய காலகட்டத்திற்கு உங்களை நீங்கள் தயார் செய்திடவில்லை எனில் போட்டியான உலகில் நீங்கள் நிற்பது கடினம். 8 வருடம் நான் கற்றுக்கொண்ட வித்தைகளை விட அதிகமான விசயங்களை கடந்த இரண்டு வருட அனுபவத்தில் கற்றேன்

கடமைகளை நிறைவேற்றிட அருள் புரிந்திடு இறைவா

அமீரகம் வந்து 12 ஆண்டுகள் நிறைவடைய போகிறது இதில் ஊருக்கான மூன்று பயணங்கள் தந்தை மற்றும் உடன்பிறப்புகளின் இழப்பிற்காக. இறைவன் பெற்றோர் மற்றும் உடன்பிறப்புகளின் நற்கிரியைகளை பொருந்திகொண்டு அவர்களுக்கு சுவனத்தை அருள் புரியட்டும்.
மனம் கனக்கிறது அமைதி அடைய மறுக்கிறது 4 உடன்பிறப்புகளுடன் பிறந்த நான் இன்று அனைவரையும் இழந்து பெற்றோரையும் இழந்து தனியாக .ஓர் உடன்பிறப்பை பார்த்தது இல்லை மற்ற மூவரும் வளர்ந்து ஒன்றாக திரிந்தோம் இன்று அவர்களும் இல்லை.

Thursday, June 15, 2017

மூன்றரை இலட்சம் பேருக்கும் மேலானோர் பார்த்துக்கொண்டிருக்கும் அந்த வீடியோ

நேற்று இலண்டனில் 24 அடுக்கு மாடிக்குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில், 23வது தளத்தில் அநேகமானோர் சிக்கிக்கொண்டதாகவும், புகை சூழ்ந்து உயிருக்குப் போராடும் ராணியா இப்ராஹிம் எனும் பெண் உதவி கேட்டு ஃபேஸ்புக் 'லைவ்' இல் கதறிய காட்சி
மற்றோருடன் அவரும் அவருடைய மகள்கள் (5 வயது மற்றும் 3 வயது) இருவரும் இறந்து போயிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. :(
இதுவரை சுமார் மூன்றரை இலட்சம் பேருக்கும் மேலானோர் பார்த்துக்கொண்டிருக்கும் அந்த வீடியோ லிங்க் முதல் கமெண்ட்டில்
Rafeeq Sulaiman
https://www.facebook.com/ribrham/videos/1499323993475925/?pnref=story

Wednesday, June 14, 2017

"சார் உங்க பெயர் ரஃபீக் தானே?" என்று அவர் உறுதி செய்துகொண்டதுதான் வியப்பிலாழ்த்திய விசயம்.


2015 ஆம் ஆண்டு (சென்னை) புத்தகக் கண்காட்சி என்று நினைவு. ஒரு அரங்கில் RJ ஒருவர் "நான் கேட்கும் கேள்விகளுக்கு ஆங்கிலம் கலவாமல் தமிழில் இரண்டு நிமிடங்களுக்கு உரையாட உங்களால் முடியுமா?" என்று அங்கு வருவோரையெல்லாம் மடக்கிக் கொண்டிருந்தார்.
நண்பரொருவர் என்னை அந்த அரங்கிற்கு அழைத்துக்கொண்டு போய், "இவரிடம் பேசுங்க...." என்று என்னை மாட்டிவிட்டார் :)
கேட்கும் கேள்விகளுக்கு நிதானமாக மிகவும் யோசித்து யோசித்து.... ஆங்கிலம் சேர்ந்துவிடாதபடி பேசி..இரண்டு அல்ல நான்கு நிமிடங்களைக் கடந்தவுடன்....... அந்த தம்பி, "சார்.. உங்க மொபைல் நம்பர் கொடுங்க ... என்று 60-40% தமிழ் ஆங்கிலம் கலந்து கேட்க எல்லோரும் சிரித்தது அல்ல நாம் இப்போது பேசப் போகும் விசயம். .
எனது எண்ணை அவரிடம் சொன்ன மாத்திரத்தில், "சார் உங்க பெயர் ரஃபீக் தானே?" என்று அவர் உறுதி செய்துகொண்டதுதான் வியப்பிலாழ்த்திய விசயம்.
எனது பெயர் எப்படி உங்களுக்குத் தெரியும்?

சேவைக்கு எல்லையோ முடிவோ கிடையாது.

முகநூலில் GLOBAL SPIRITUAL GARDEN என்ற பெயரில் ஒரு பக்கம் திறந்துள்ளேன். குழுவில் இருக்கும் அனைவரும் அதற்கு வரும்படியும் அவர்களது அலைபேசி எண், மின்னஞ்சல் போன்றவற்றை கொடுக்கும்படியும் கேட்டுக்கொள்கிறேன். முகநூலில் என் நண்பர்களாக இருப்பவர்களும் அங்கே வரும்படி கேட்டுக்கொள்கிறேன். ஆடியோ, வீடியோ போன்றவற்றை எளிதில் பகிர்ந்துகொள்ள இந்தப் பக்கம் வாட்ஸ் அப்பை விட எளிமையானதும் ஆற்றல் மிக்கதுமாக உள்ளது. இக்குழுவின் நோக்கங்கள் பற்றி நான் ஏற்கனவே எழுதியதை மீண்டும் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

மனிதனின் தேவை !- மன அமைதி ..

மனிதனின் தேவை !- மன அமைதி ..
( மவ்லவி அல்ஹாஜ். O.M. அப்துல் காதிர் பாகவி )

“அறிந்து கொள்ளுங்கள் ! அல்லாஹ்வை தியானிப்பது கொண்டு மனங்கள் அமைதியடைகின்றன.” (அல்குர்ஆன் 13: 28)

நோய் என்பது, மனித சமுதாயத்தை முழுவதுமாக ஆட்கொண்டு விட்ட தீமையாகும். நோயற்ற மனிதனே இன்றைய நவயுகத்தில் இல்லையென்று கூறும் அளவிற்கு அங்கிங்கெனாதபடி எங்கும் வியாபித்துள்ளது.


மனிதர்கள் ஏழை, பணக்காரன் பாகுபாடின்றி, சக்திக்கேற்ப தங்கள் சரீரத்தைப் பீடித்த நோய்க்கு சிகிச்சையளிக்கின்றனர். ஆனால் அனைவருமே சிகிச்சையளிக்க வேண்டிய முக்கியமான ஒரு உறுப்பைக் கவனிக்க மறந்து விடுகிறார்கள்.

அந்த உறுப்பு செயலற்றுவிட்டால், ஏனைய உறுப்புக்கள் எவ்வளவு திடகாத்திரமாக இருந்தாலும் பயனில்லை. ‘மையித்து’ என்று இனம் காட்டப்பட்டு ஒதுக்கி தள்ளப்படுகிறது. அந்த உறுப்பு இயங்கிக் கொண்டிருந்தால் மற்ற உறுப்புகள் துண்டாடப்பட்டாலும், புழுத்துக் கொட்டினாலும் மனிதன் என்ற மரியாதையளிக்கப்படுகிறது.

வீடு என்பது இறைவனின் அருட்கொடை!

வீடு என்பது இறைவனின் அருட்கொடை!
ஒரு மனிதன் இவ்வுலகில் பெறுகின்ற மிக முக்கியமான பாக்கியங்களில் ஒன்று வீடாகும். அதிலும் சொந்த வீட்டில் வசிப்பது என்பது மிகப் பெரும் பாக்கியமாகும். ஒரு சொந்த வீட்டைக் கட்டுவதற்காக, கட்டிய மனைவியைப் பிரிந்து பல்லாண்டுகள் பாலைவனத்தில் தன் இளமையைத் தொலைக்கும் மக்கள் கணக்கிலடங்காது. எலி வலையானாலும் தனி வலை வேண்டும், வீட்டை கட்டிப்பார், கல்யாணத்தை நடத்திப் பார் என்பதெல்லாம் வீட்டின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக மனிதனால் உருவாக்கப்பட்ட பழமொழிகளாகும்.

கண்ணீர் வரவழைக்கும் கவிதை :

கண்ணீர் வரவழைக்கும் கவிதை :
👇
உச்சியிலே கண் சுருக்கி,
அண்ணாந்து பாத்து பாத்து

வராத மழைக்காக ஏங்கி நிற்கும்
ஏழை உழவன்,

தூரல் கொஞ்சம் விழுந்ததுமே,
விதைபோட கடன் வாங்கி,

இருப்பதெல்லாம் அடகு வச்சு,
ஏரோட்டி விதைச்சுடுவான்.,

முளை விட்ட பயிர்கண்டு
பிள்ளை பெற்ற ஆனந்தம்

களை வெட்டி உரம் வச்சு
கண்ணைபோல பாதுகாத்து

ஒட்டிப்போன வயிறோடு
மாடாக உழைச்சிடுவான்

போட்டதுல அரைவாசி
வேசையில கருகிடவே

கலங்காம அறுவடைய
காலத்துல செஞ்சிருவான்

அடிச்சு வச்ச மூட்டையெல்லாம்,
மனக்கணக்கு போட்டிடுவான்

படிக்காத மேதை

படிக்காத மேதை ஒசாமா

இன்று இஷா தொழுகையை புனித காஃபாவில் தொழுதுவிட்டு வெளியே வந்த போது..

பள்ளிவாசலின் வெளி வளாகத்தில் “ஒசாமா” என்ற அரபு இளைஞர் டிஸ்ஸு பேப்பர் விற் பனை செய்து கொண்டிருந்தார்.

Tuesday, June 13, 2017

இது 2017


எல்லைக் கோடுகளால்
உடைந்து உடைந்து
உலகம்
சாக்கடையில் விழுந்த
தின்பண்டமாகக் கிடக்கிறது

அன்றெலாம்
மாவீரனென்று அழைக்கப்பட்டவனை
இன்றெலாம்
நான் மனதாரப் புகழ்கிறேன்

அவன்
சிறுசிறு எல்லைக் கோடுகளைச்
சிலந்திக் கூடுகளாய்ச் சிதைத்தான்
இருண்ட வாசல்களை உடைத்தெறிந்தான்
உலகம் ஒற்றைக் கூடுதான் என்று
வீரமுழக்கம் செய்தான்

இந்நாள்
வல்லரசுத் தலைகளோ
சீழ்பிடித்தவை

உலகப் போர் உலகப் போர் என்று
ஒவ்வொரு போரிலும்
பூமியெனும் ஒற்றைப் பந்தைக்
கிழித்துக் கிழித்துக்
கழுத்தில் தொங்கவிட்டுக்
கூத்தாடுகின்றன

சுயநலம் பெருகிப் பெருகி
சொந்தமண் சொந்தமக்கள்
சொந்த இனம் சொந்த நிறம் என்று
நெஞ்சம் சுருங்கச் சுருங்க
நரகப் பாடல்கள் பாடுகின்றன

எந்த மண்ணைக் கொண்டுவந்து
இந்த மண்ணில் இட்டான்
மனிதன்?

இந்த மண் வாய்விழும்போதும்
விழுங்கப் போவது
மண்ணா மனிதனா?

இந்தப் பிரபஞ்சத்தில்
பால்வீதியே ஒரு புழுதிச் சுழல்
அந்தப் புழுதிச் சுழலில்
உற்று உற்றுப் பார்த்தாலும்
இந்த பூமி
தெரியப் போவதே இல்லை

அத்தனைத் துக்கடாத் தூசு
இந்தப் பூமி

அந்தத் தூசுக்குள்
இத்தனைப் பெரும் நாசங்களா?

இந்த உலகம்
எல்லா இனங்களுக்குமானது

இந்த உலகம்
எல்லா மதங்களுக்குமானது

இந்த உலகம்
எல்லா நிறங்களுக்குமானது

இந்த உலகம்
எல்லா உயிர்களுக்குமானது

இந்த உலகம்
ஒரு புழுவுக்கும்
சிறு பழுதுமில்லாதது

- அன்புடன் புகாரி
https://anbudanbuhari.blogspot.in/

ஐக்கிய அரபு அமீரகத்தை இருளடைய விடாமல் காக்கும் கத்தர்!

கத்தரின் மீது சவூதியுடன் இணைந்து பல தடைகளை ஐக்கிய அரபு அமீரகம் ஏற்படுத்தியபோதும் அதே முறையில் பழிதீர்க்காமல், ஐக்கிய அரபு அமீரகத்தை இருளடைய விடாமல் கத்தர் பாதுகாக்கும் விசயம் தற்போது வெளியாகியுள்ளது.

கத்தரின் ஆகாய மற்றும் கடல் வழி போக்குவரத்துகளைச் சவூதியுடன் இணைந்து ஐக்கிய அரபு அமீரகமும் தடை செய்தது. இதனால் ஆப்ரிக்கா மற்றும் இந்தியா முதலான கிழக்கு நாடுகளுக்குக் குறைந்த தூரத்தில் சென்று சேரும் ஆகாய வழித்தடம் கத்தருக்கு மறுக்கப்பட்டது. அதே நேரம், இப்பகுதியின் மிகப் பெரிய துறைமுகங்களான ஜபல் அலி, ஃபுஜைரா போன்றவை கத்தருக்குச் செல்லும் அனைத்து கப்பல்களையும் தடுத்தது. இதனால் கத்தருக்கு வரும் உணவில் சுமார் 40 சதவீதத்துக்கு மேல் குறைந்தது.

Saturday, June 10, 2017

அப்துல் ரகுமான் என்ற கவி ஆளுமை

Shahjahan R


அப்துல் ரகுமான் என்ற கவி ஆளுமை
(தில்லிகை – 10-6-2017 சனிக்கிழமை)
இது கவிஞர் அப்துல் ரகுமான் நினைவில் நடத்தப்படும் கூட்டம்தான். இஸ்லாமியர் பலரிடையே – எங்கள் பகுதியில் ஒரு வழக்கம் உண்டு. இறந்தவரை நல்லடக்கம் செய்த பிறகு, மூன்றாம் நாள் மற்றும் 10-20-40ஆம் நாள், நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்துக்குச் சென்று பாத்திஹா ஓதிவிட்டு நறுமணத் தைலங்களையும் சந்தனத்தையும் பூக்களையும் தூவிவிட்டு வருவதுண்டு. இப்போதெல்லாம் இந்த வழக்குகள் அருகி வருகின்றன என்பது வேறு விஷயம். அப்படிச் செல்லும்போது, கபரஸ்தானில் இறந்தவர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையை ஒட்டியிருக்கும் இதர கல்லறைகளுக்கும் பூக்களைத் தூவுவார்கள். அதுபோல அப்துல் ரகுமான் பற்றிப் பேசுவதற்கு முன் அவருடைய சமகாலக் கவிஞர்கள் சிலரின் கல்லறையிலும் சில சொற் பூக்களைத் தூவ விரும்புகிறேன். ஏனென்றால், அவர்களும் அப்துல் ரகுமானுடன் பயணித்தவர்கள், அப்துல் ரகுமான் போலவே தமிழுக்குப் பெருமை சேர்த்தவர்கள்.

Thursday, June 8, 2017

20 of the most unusual mosques from around the world

முளைவிடும் விதையின் புத்தம்புது வேரினைப்போல ..

முளைவிடும் விதையின்
புத்தம்புது வேரினைப்போல
பாலையில் திரியும்
உடல்வற்றிய பூனையைப்போல
கரையில் எறியப்பட்ட
சின்னஞ்சிறு மீனினைப்போல
உச்சிச் சூரியன் முகம்துடைத்த
வரண்ட காற்றினைப்போல

Tuesday, June 6, 2017

ஏ.ஆர்.ரஹ்மானைப் பற்றி மவுலவி இம்ரான் ரஷீத்!

https://www.facebook.com/nazeersuvanappiriyan/videos/767425913438352/
மார்க்க அறிஞர் ஷேக் மக்சூத் இம்ரான் ரஷீத் வட நாட்டில் பிரபலமானவர். அவருக்கு நியூயார்க்கில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை இங்கு விவரிக்கிறார். அதனை தமிழில் மொழி பெயர்க்கிறேன்.....

'நியூயார்க் ஹோட்டல் ஒன்றில் லிஃப்டுக்காக காத்திருந்த போது எனது அருகில் ஒரு பரிச்சயமான முகம் தென்பட்டது. அட... இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் புன்முறுவலோடு கை கொடுத்தார். நலம் விசாரிப்புக்குப் பிறகு 'எந்த அறையில் தங்கியுள்ளீர்கள்?' என்று கேட்டார்.  நான் அறையின் எண்ணை சொன்னேன். சலாம் கூறி விட்டு பிரிந்து விட்டார்.

Monday, June 5, 2017

“ஃபேஸ் புக் மாவீரர்கள் கவனிக்கவும்”


“ஃபேஸ் புக் மாவீரர்கள் கவனிக்கவும்” என்ற தலைப்பில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ள கருத்து :
முஸ்லிம்களுக்கு ஊடகங்கள் வாய்ப்புகளை மறுக்கினறன என்ற ஏக்கம் ஒரு காலத்தில் இருந்தது. அதைத் தீர்க்கும் வகையில், ஃபேஸ் புக் எல்லோருக்கும் வாய்ப்புகளை வழங்கியது. முஸ்லிம்கள் அதில் அதிகமாக பங்கேற்றனர். ஆனால் அது சமுதாயத்திற்கு நன்மை தருவதற்கு பதில் தீமைகளையும், ஆபத்துகளையும் உருவாக்கி வருகிறது.

வல்லோனே…. ஏகனே இறையோனே ….!

இறையே இறையின் நிறைவே 
=== அருளே அருளின் அருவியே 
ஒளியே ஒளியின் ஒளிர்வே 
=== கருவே கருவின் கர்த்தாவே!
ஆதியே ஆதியின் ஆரம்பமே 
=== உண்மையே உண்மையின் ஊற்றே 
தூய்மையே தூய்மையின் உறைவிடமே 
=== பெருமையே பெருமையின் பிறப்பிடமே!
புனிதமே புனிதத்தின் புண்ணியமே
=== கருணையே கருணையின் கடலே

Sunday, June 4, 2017

அணிந்துரை - கலாம் - உணர்வுகளை உயர்த்திப் பிடித்து எழுது எழுது

கலாம்!

இந்தப் பெயரை நான் அன்று உச்சரித்ததைப்போலவே இன்றும் உச்சரித்துப் பார்க்கிறேன். நெடுங்காலம் கட்டப்பட்டுக் கிடந்த என் ஞாபக முடிச்சுகள் சட்டென்று தளர்ந்து அவிழ்ந்து கொள்கின்றன. அதிலிருந்து சிதறித் தெறித்து ஓடுபவை முத்துக்களா பவளங்களா மாணிக்கங்களா என்று வகை பிரிக்கத் தெரியாமல் மனதில் ஏறும் சுகத்தை தடுக்கவும் முடியாமல் அப்படியே விட்டுவைக்கிறேன். அது நில்லாமல் மேலே மேலே ஏறிக்கொண்டேதான் இருக்கிறது. அந்த சுகத்தின் கால்களில் என் இதயத்தின் சந்துகள் புல்லரித்துச் சிவக்கின்றன.

கலாம் ஒரு கவிஞனாம். அதுவும் மரபு பிறழாமல் வளையாத சொற்களையும் வளைத்துப் பிடித்து தமிழையும் கவிதைகளையும் நிமிர்த்திப் பிடிக்கும் விரல்களைக் கொண்டவனாம்!

கலைஞர் 94 வாழ்த்துரை ....

அப்துல் கபூர் 


அஞ்சுகம் அம்மையாரின் 
கருக்குவளையில் உயிராகி 
தமிழகத்தை ஆண்டிட 
திருக்குவளையில் பிறந்தவனே ....
தடையற்ற உற்சாகமேந்தி 
அகவைப் பயணமதில் 
நூற்றாண்டு கண்டிட 
நடையுற்று முன்னேறும் 
வைரவிழா நாயகனே ....

பற்று வரவு -கவிக்கோ அப்துல்ரகுமான்


இறக்கப்போகிறவனே! நில்
கணக்கை முடித்துவிட்டுப்போ!
வாழ்க்கையெல்லாம் பற்றெழுதியவனே!
உன்பங்குக்கு ஒரு வரவாவது
வைத்துவிட்டுப்போ!
இந்த பூமிக்கு 
ஒரு பிச்சைக்காரனாகவே வந்தாய்!
ஒரு கடனாளியாக
சாகப்போகிறாயா?
என்னுடையதென்று
நீ உரிமைகொண்டாடும் எதுவும்
உன்னுடையதல்ல!
உன் உடல்
உன் பெற்றோரிட்டபிச்சை!

அற்ப_துனியா(உலகம்)

 அற்ப_துனியா(உலகம்)
மேலே உள்ள இந்த வார்த்தையை இதுவரை கேட்டிறாது ஒரு இஸ்லாமியர் கூட இருக்க வாய்ப்பில்லை. தமிழகத்தில் பள்ளிதோறும் முழங்கும் வெள்ளிமேடைகளிலும் இன்னபிற இஸ்லாம் சார்ந்த நிகழ்வுகளிலும் இன்றளவும் இதுவே பிரதானப்பட்டு நிற்கிறது இமாம்கள் எனும் மத குருமார்களின் பிரசங்கங்களில் ஆனால் அவர்கள் கூற்றுப்படியே இந்த அற்ப உலகத்தில் நமக்கானதாக எதை தேர்ந்தெடுத்துக்கொண்டு எப்படி வாழ்வது என்பதில் கிடைக்கும் தெளிவு என்பது குறைவிலும் மிக குறைவு.
இந்த பெரியார் இப்படி இருந்தார், அந்த பெரியார் அப்படி வாழ்ந்தார், இமாம் ஹசன் பஸரி, மாலிக் இப்னு தீனார், ராபியத்துல் பஸரியா, உவைஸ் கருணி, முகைய்யதீன் அப்துல் காதிர் ஜெய்லானி மற்றும் எத்தனையோ பெரியார்களைப்பற்றி சுவாரஸ்யமான அழகான கதைகள் எல்லாம் இன்றளவும் நில்லாது ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இந்த கதைகளை கேட்ட சமுதாயம் இவைகளால் என்ன பலனை அடைந்தது என்று இதுவரை தெரியவில்லை.

நலம் நலமறிய ஆவல்–10– ஸ்வீட் எடு, கொண்டாடு!

by நாகூர் ரூமி
10– ஸ்வீட் எடு, கொண்டாடு!

 எறும்புகள் எப்போதும் இனிப்பான உணவுப் பண்டங்களையே சுவைக்கின்றன. ஆனால் அவைகளுக்கு எப்போதுமே சர்க்கரை நோய் வந்ததில்லையே! – யாரோ.

முன் கதைச் சுருக்கம்

ஒருமுறை நானும் என் எழுத்தாள நண்பர்களும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அப்போது என் நண்பரும் எழுத்தாளருமான ஒருவர் – இப்போது அவர் ஒரு பிரபல பத்திரிக்கையின் ஆசிரியர் – தனது டயபடிஸ் பிரச்சனை பற்றிப் பேசினார். சர்க்கரை நோயை குணப்படுத்த முடியாது, ஆனால் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்க முடியும் என்று சொன்னார். அவருடைய எழுத்து எனக்கு மிகவும் பிடிக்கும். குறிப்பாக சிறுகதைகள். ஆனால் அதற்காக அவர் சொல்லும் ஒரு தவறான கருத்தையும் நான் ஏற்றுக்கொள்ளவேண்டுமா என்ன?

 அப்படியெல்லாம் இல்லை நண்பரே, டயபடிஸ் நோயை முழுமையாக குணப்படுத்த முடியும் என்று நான் சொன்னேன்.

Thursday, June 1, 2017

கவிக்கோ அப்துல் ரஹ்மான் இன்று 02.06.2017 வெள்ளிக்கிழமை அதிகாலை காலமானார் (வஃபாத்தானார்).

சென்னையில் கவிக்கோ அப்துல் ரகுமான் உடல்நலக்குறைவால் காலமானார்
பதிவு: ஜூன் 02, 2017

கவிஞரும், தமிழ்பேராசிரியருமான அப்துல் ரகுமான் (70) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். கவிக்கோ என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படும் அப்துல் ரகுமான் சென்னை பனையூரில் உள்ள அவரது வீட்டில் இரவு 2 மணியளவில் மூச்சுத்திணறலால் உயிரிழந்தார்.

1937-ஆம் ஆண்டு நவம்பர் 9-ல் மதுரை மாவட்டத்தில் பிறந்த அப்துல் ரகுமான் தனது தொடக்கக் கல்வியையும் உயர்நிலைப் பள்ளிக் கல்வியையும் மதுரையில் உள்ள பள்ளிகளில் பயின்றார். பின்னர் மதுரை தியாகராசர் கல்லூரியில் சேர்ந்து இடைநிலை வகுப்பில் தேறினார். தொடர்ந்து அக்கல்லூரியிலேயே பயின்று இளங்கலை, முதுகலை பட்டங்களைப் பெற்றார்.

அழகுத் தமிழில் வண்ணப்படங்கள்

http://www.kaniyam.com/tamil-wallpapers-creativecommons/
இன்று கணினி, மடிக்கணினி, அலைபேசி, கைக்கணினி எனப் பல விதங்களில் கணித்தல் தொடர்புடைய சாதனங்கள் நமக்கு கிடைக்கின்றன. அவை அனைத்தின் முகப்பையும் அழகிய வண்ணப்படங்கள் (Wall Papers) கொண்டு அலங்கரிக்கிறோம்.
நமது சாதனங்களை அலங்கரிப்பதற்குத் தகுந்த படங்கள் அவற்றைக் கையாளும் சுதந்திரத்துடன் (Creative Commons License) நமக்குக் கிடைத்தால் எப்படி இருக்கும்? அதுவும் தமிழில்?

இன்று கணினி, மடிக்கணினி, அலைபேசி, கைக்கணினி எனப் பல விதங்களில் கணித்தல் தொடர்புடைய சாதனங்கள் நமக்கு கிடைக்கின்றன. அவை அனைத்தின் முகப்பையும் அழகிய வண்ணப்படங்கள் (Wall Papers) கொண்டு அலங்கரிக்கிறோம்.