Saturday, December 14, 2013

இந்தியாவில் ஓரின சேர்க்கை வாழ்க்கை முறையை....

இந்தியாவில் ஓரின சேர்க்கை வாழ்க்கை முறையை பல அரசியல் தலைவர்களும் அமைப்புத் தலைவர்களும் வரவேற்றிருக்கிறார்கள்.

இது முஸ்லிம்களுக்கு அதிர்ச்சியைத் தந்திருக்கிறது.
 ஓரினச்சேர்க்கை பற்றி இஸ்லாம்  )
ஆனால் பெரும்பாலான மக்கள் இதை ஒரு மேட்டராகவே எடுத்துக் கொள்ளவில்லை.

காரணம் இருக்கிறது.
இந்திய கலாச்சாரத்தில் ஓரின சேர்க்கைக்கு பெரிய அங்கீகாரமே இருக்கிறது.
பல மன்னர்கள் அதில் ஆர்வமுள்ளவர்களாக இருந்தார்கள்.

மக்களிலும் பலர் திருமணம் செய்யாமல் வாழ்கிறார்கள்.


பொதுவாக... வயிற்றுப்பசியைப்போலதான் உடல் பசியும். வயிற்றுக்கு உணவு கொடுப்பதுபோல் உடலுக்கும் உணவு கொடுக்க வேண்டும்.

இது இறைவன் படைத்த படைப்பின் அற்புதம்.

அதனால்தான் திருமணம் என்ற ஒப்பந்தத்தின் மூலம் ஆணும் பெண்ணும் கணவன் மனைவியாகி இல்லறம் நடத்துகிறார்கள். குழந்தைகள் பெறுகிறார்கள். மனித இனம் அழியாமல் இருப்பதற்கு ஆண்பெண் உறவுதான் அடிப்படை.

சில ஆயிரம் வருசங்களுக்கு முன் வாழ்ந்த மக்கள் பெண்களை விட்டு விட்டு ஓரின சேர்க்கையில் ஈடுபட்டதால் லூத் நபி என்ற இறைத்தூதரை இறைவன் அனுப்பி வைத்தான். அவர் அந்த மக்களை திருத்த மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காமல் போனதால் அந்த சமூகத்தையே இறைவன் அழித்து விட்டான்.

உலகின் பல நாடுகளிலும் இந்த வழக்கம் சட்டபூர்வமாக இருக்கிறது.
நாகரீகத்தின் உச்சியில் இருப்பவர்கள் என்று பெருமை பேசிக் கொள்ளும்
மேலை நாட்டவர் இந்த கீழ்த்தரமான வாழ்க்கைக்கு அடிமைகளாகி இருக்கிறார்கள்.

மேலை கலாச்சாரம் ஊடுருவாத இடமே உலகில் இல்லை. அது இந்தியாவிலும் வேரூன்றி விட்டது. அது இந்திய கலாச்சாரத்துக்கும் ஒத்துப் போவதால் எதிர்ப்பு ஒன்றும் பெரிய அளவில் இல்லை.

இங்கே சொல்ல வந்த செய்தி...
 திருமணம் மனிதனை மனிதனாக வாழ வைக்கிறது. சரியான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கிறது. உடல் பசிக்கு இல்லறம் உணவளிக்கிறது. அது ஒழுக்கத்தை பாதுகாக்கிறது.

மாறாக... பிரம்மச்சரியம் இறைவன் படைப்புக்கு மாறானது. இயற்கைக்கு மாற்றமானது. வீம்புக்காகவோ அல்லது கொள்கைக்காகவோ திருமணம் செய்யாமல் இருப்பவர்களால் என்னதான் முயன்றாலும் காமத்தை அடக்க முடியாது. வாழ்க்கைத் துணை இல்லாத நிலையில் அவர்கள் ரகசியமாக கள்ள உறவுகளை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். அது பெண்ணிடமும் இருக்கலாம்...ஆணிடமும் இருக்கலாம்.

தங்கள் பசியைத் தீர்த்துக் கொள்வதற்காக அவர்கள் பாலியல் பலாத்காரத்திலும் ஈடுபடுகிறார்கள்.
சாமியார்கள் கூட கள்ளக் காதலில் ஈடுபடக் காரணம்... அவர்களாலும் காமத்தை அடக்க முடியாது என்பதால்தான்.

இப்படி கல்யாணமே செய்யாமல் இருப்பவர்கள் ஒருவருக்கொருவர் துணையாகி ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுகிறார்கள்.
இதற்கு ஆன பெண் பேதமெல்லாம் இல்லை.

இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் முன்னரெல்லாம் வெளியே தெரிந்தால் அசிங்கம் என்று நினைத்தார்கள். இப்போது வெளியே வந்து போராடும் அளவுக்கு காமம் முற்றி விட்டது.


இது ஒழுக்கத்தை பேணி வாழக்கூடிய மத நம்பிக்கையாளர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கி இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

இறைமறை போதிக்கும் மனித ஒழுக்கங்களை இந்த சமுதாயத்திற்கு எடுத்துச் சொல்லி வழிகெட்ட அவர்களின் நடத்தையை திருத்த வேண்டியது நம் கடமை...

இல்லையென்றால் ...
லூத் நபியின் கூட்டம் அழிந்ததைப்போல இந்த கூட்டமும் அழிந்து போகும்


ஆக்கம் .Abu Haashima Vaver அபூ ஹாஷிமா வாவர்


No comments: