Tuesday, October 29, 2019

பூவுலகின்_புகழ்_வசந்தம்

Abu Haashima


இருட்டு ...
உள்ளமும்
உலகமும் !

அதோ ...
மெல்லிய
ஒளிக்கீற்று !

அது...
ரபிய்யுல் அவ்வல் நிலவின்
முதல் புன்னகை !

அய்யாமுல் ஜாஹிலிய்யாவின்
அடிவயிற்றில்
இடி மின்னல் !

லேசாக கலைந்தது
குஃப்ரியத்தின்
கர்ப்பம் !

நீடூர்-நெய்வாசல் மஸ்ஜித் தக்வாவின் இமாம் அல்ஹாஃபிள் ஷுஐப் மிஸ்பாஹி அவர்களின் சுப்ஹு பயான்

நீடூர்-நெய்வாசல் மஸ்ஜித் தக்வாவின் இமாம் அல்ஹாஃபிள் ஷுஐப் மிஸ்பாஹி அவர்களின் சுப்ஹு பயான்: சுப்ஹு சிந்தனை 30-10-2019 நீடூர்-நெய்வாசல் மஸ்ஜித் தக்வாவின் இமாம், ஜாமிஆ மிஸ்பாஹுல்ஹுதாவின் பேராசிரியர் அல்ஹாஃபிள் ஷுஐப் மிஸ்பாஹி அவர்களின...

அரசின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் உயிர் பலி வேண்டுமா? - உயர்நீதிமன்றம்

மரணம் வருவதற்கு

Abu Haashima


மரணம் வருவதற்கு
அறுநூறு அடி கிணறுதான்
வேண்டும் என்பதில்லை.
ஆறு அடி டிரம் கூட
போதுமானது ...! — feeling emotional.

அதோ ஒருத்தியின் கண்ணில் உலகத்தின் கண்ணீர்,




அதோ
ஒருத்தியின் கண்ணில்
உலகத்தின் கண்ணீர்,
வந்த மழையும்
இனி எந்த மழையும்
அந்தத் தாயின் கண்ணீர் கறையைக்
கழுவ இயலுமா

அடே சுர்ஜித்
இத்தனை பேர் அழுத கண்ணீரில்
நீ மிதந்து மிதந்து
மேலெழும்பி இருக்கலாம்
ஆனால்
அழுத கண்ணீரெல்லாம்
உன்னை அழுகவைத்து விட்டதே
உன்னை மீட்க
கையில் கயிறு கட்டிப்பார்த்தோம்,
ஆனால்
உன் கால் விரலில்
கயிறு கட்டிவிட்டதே மரணம்

எவன் அவன்
பின்கூட்டிப் பிறந்த குழந்தைக்கு
முன்கூட்டியே சவக்குழி வெட்டியவன்
உலகத்தின் நீளமான சவக்குழி இதுதானோ என்னவோ
நடக்கக்கூடாதது நடந்தேறிவிட்டது
மரணத்தில் பாடம் படிப்பது மடமைச் சமூகம்
மரணத்திலும் கல்லாதது அடிமைச் சமூகம்

Monday, October 28, 2019

36.Surah Yaseen Tamil Translation | Mishary Rashid Alafasy | சூரா யாஸீன்...

பேராசிரியர் அல்ஹாஃபிள் ஷுஐப் மிஸ்பாஹி அவர்களின் சுப்ஹு பயான்

நீடூர்-நெய்வாசல் மஸ்ஜித் தக்வாவின் இமாம், ஜாமிஆ மிஸ்பாஹுல்ஹுதாவின் பேராசிரியர் அல்ஹாஃபிள் ஷுஐப் மிஸ்பாஹி அவர்களின் சுப்ஹு பயான்

Sunday, October 27, 2019

Kampala, Uganda.

Romania (ருமேனியா)

8 மில்லியன்முஸ்லிம்கள் /2260க்கும் அதிகமான இறை இல்லங்கள் பிரான்ஸை கவர்ந்திழுக்கும் இஸ்லாம்

பிரான்ஸ்பற்றி எழுத ஆரம்பிக்கும் போது முஸ்லிம்கள் ஆளாத இஸ்லாமிய நாடு பிரான்ஸ் என்று காலம் சென்ற இஸ்லாமிய பேரறிஞர் அஹ்மத் தீதாத் சொன்ன வார்த்தைகள் தான் என் நினைவுக்கு வருகிறது

அஹ்மத் தீதாத் அவர்கள் வாழ்ந்த காலத்தில் பிரான்ஸ் சுற்று பயணத்தை முடித்து விட்டு அங்குள்ள முஸ்லிம்களின் நிலையையும் அரசின் நிலையையும் பார்த்து விட்டு கூறிய வார்த்தைகள் தான் அவை

ஒரு இஸ்லாமிய அரசு நடை பெற்றால் அங்கு எப்படி அனைத்து மதத்தவர்களும் சமமாக நடத்த படுவார்களோ அது போன்று பிரான்ஸ் மக்கள் நடத்த படுகின்றனர் என்ற கருத்தை தான் அவர் மேல் கூறிய வார்த்தைகளில் குறிப்பிட்டார்

அஹ்மத் தீதாத் எந்த மத சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் சிறப்பித்து சொன்னாரோ அதே கருத்தை தான் கடந்த ஆண்டு பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் தனது பேட்டி ஒன்றில் தெரிவித்தார்
பிரான்ஸ் ஒரு மத சார்பற்ற நாடு அனைத்து மதத்தவர்களையும் மதிக்கும் நாடு இந்த நாட்டில் அண்மை கால குடியேற்றங்களால் முஸ்லிம்களின் எண்ணிக்கை பெருகியுள்ளது

Saturday, October 26, 2019

பேராசிரியர் அல்ஹாஃபிள் ஷுஐப் மிஸ்பாஹி அவர்களின் சுப்ஹு பயான் \

”அறிவுலகப்பேரொளி”இமாம் கஸ்ஸாலி

இமாம் கஸ்ஸாலி (ரஹ்)அவர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர்கள் ”ஹுஜ்ஜத்துல் இஸ்லாம்” - ”அறிவுலகப்பேரொளி” என்று போற்றப்பட்டவர்.இவர் ”இஹ்யாவு உலூமித்தீன்”,”கீமியாயே சாஆதத்” என்ற மாபெரும் நூற்களை புனைந்து வரலாறு போற்றப்படும் பேரறிஞர்.இவர் எழுதிய நூற்கள் காலவெள்ளத்தைக்கடந்தும் நிலைத்து நிற்பவை.

Friday, October 25, 2019

தீபாவளி வாழ்த்துக்கள்

தீபாவளி வாழ்த்துக்கள்

இதுதான் சகோதரத்துவம்

எந்த ஹிந்துவயும் துன்புறுத்தி ரசிக்காது இஸ்லாமிய நாடுகள். /இதுதான் இஸ்லாம் கூறும் சகோதரத்துவம்
எந்தவொரு குறிப்பிட்ட மதத்தின் பெயரால் எந்தவொரு இஸ்லாமிய நாடுகளிலும் இதுவரை ஒரு முஸ்லிமால் தாக்குதல் நடத்தியதில்லை நடத்த போவதில்லை

இதுதான் சகோதரத்துவம்

இதைத்தான் இஸ்லாம் கற்ப்பிக்கிறது

மெளலவி H.அப்துல் ரஹ்மான் பாகவி M.A.M.Phil அவர்களின் ஜும்ஆ பேருரை

தமிழ்மாநில ஜமாஅத்துல் உலமாவின் துணைப் பொதுச்செயலாளர், நீடூர்-நெய்வாசல் ஜாமிஆ மிஸ்பாஹுல்ஹுதாவின் பேராசிரியர் மெளலவி H.அப்துல் ரஹ்மான் பாகவி M.A.M.Phil அவர்களின் ஜும்ஆ பேருரை

Thursday, October 24, 2019

ஒற்றை வார்த்தையால் என் உணர்வுத் ததும்பல்களை வெளிப்படுத்த இயலவே இயலாது.

அன்பு நண்பர்களின் பிறந்தநாள் வாழ்த்துகளில் திக்குமுக்காடிப் போனேன். நன்றி என்கிற ஒற்றை வார்த்தையால் என் உணர்வுத் ததும்பல்களை வெளிப்படுத்த இயலவே இயலாது.

1987-88 வாக்கில் வெளிவந்த படம் "பூக்கள் விடும் தூது". டி.ராஜேந்தரின் இசையில் மோனிஷா என்கிற அழகுப்பெண் நடித்த இளம் காதலர்களின் முக்கோணக் காதல் கதை அது. ஆதரவற்ற அனாதையாக நடித்திருக்கும் படத்தின் நாயகனும் அழகன்தான். நன்றாக நடித்தும் இருந்தான். தமிழ்பட உலகில் ஒரு சுற்று வருவான் என்ற எதிர்பார்ப்பு பொய்த்தது மட்டுமின்றி பின்னர் பிட் பட நாயகனாகவும் மலினப்பட்டு விட்டான்.(பிட்டுப் படங்களைப் ரசித்துப்பார்க்க ஒரு லட்சம் பேர் இருக்கும்போது நடிக்க நாலுபேர் இருந்தா என்ன தப்பு என்கிற சூப்பர் டீலக்ஸ் பட டயலாக் நினைவுக்கு வந்து தொலைக்கிறது) போகட்டும்.

எழில்மிகு சிங்கப்பூரில், சமீபத்தில் ஐந்தாவது சர்வதேச விமான நிலைய முனையம் (international airport terminal 5) திறக்கப்பட்டது.

எங்கும் நிறந்தோனே இருகரம் ஏந்துகிறேன்,
சங்கை மிகுந்தோனே சஞ்சலம் தீர்த்துவிடு யா இறைவனே!

எழில்மிகு சிங்கப்பூரில், சமீபத்தில் ஐந்தாவது சர்வதேச விமான நிலைய முனையம் (international airport terminal 5) திறக்கப்பட்டது. இந்த ஐந்து விமான நிலையத்திற்கும் வரவேற்பு நிலையமாக ஜுவல் (JEWEL) திறக்கப்பட்டது.

இது சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மிகப் பிரமாண்டமாக நீர்வீழ்ச்சி, தொங்கு தோட்டம், நவீன முன்மாதிரி உணவுவிடுதிகள், சிறார்கள் விளையாடும் இடங்கள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் etc.

மொத்தத்தில் அனைத்தும் முத்தான இடங்கள்

எல்லாப் புகழும் இறைவனுக்கே
Hidayathun Nayeem

இமாம் கஸ்ஸாலி (றஹ்) யின் சமூக விமர்சனப் பார்வை


இமாம் கஸ்ஸாலி (றஹ்) அவர்கள் சமூகத்தில் தோன்றிய மகத்தான அறிவாளுமையும், ஆத்மீக புருஷத்துவமும் மிக்க ஒரு மாமனிதர். இஸ்லாமிய சிந்தனையிலும் முஸ்லிம் சமூக வாழ்விலும் மிக ஆழமான தாக்கத்தையும் செல்வாக்கையும் பதித்த ஒரு சிந்தனையாளர். தனது ஆத்மீக அனுபவத்தி னடியாக ஏற்பட்ட சிந்தனைத் தெளிவின் வெளிச்சத்தில் அவரது கால சமூகத்தின் சிந்தனைச் சிக்கலுக்குத் தெளிவு வழங்கிய ஒரு பேரறிஞர்.

இமாம் கஸ்ஸாலி (றஹ்) அவர்களை சமூக வாழ்விலிருந்து ஒதுங்கி, தங்களுக்கென ஒரு தனி உலகைப் படைத்துக்கொண்டு, தத்துவ சிந்தனையில் ஈடுபட்ட வெறுமனே ஒரு சிந்தனை வாதியாக நாம் எந்த வகையிலும் கொள்ளல் முடியாது. அவர்கள் சமூக நீரோட்டத்தோடு நீந்திச் சென்று, சமூக வாழ்வின் வளைவு நெளிவுகளை அவதானித்து, சமூக விவகாரங்களில் தன்னை மிக ஆழமாக ஈடுபடுத்திக்கொண்டு, அவர்களது காலத்தின் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கிய ஒரு சீர்திருத்த வாதியாக விளங்குகின்றார்கள். அவர்களது பன்முக ஆளுமையின் இந்தச் சமூகப் பரிமாணம் பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

அல்-கசாலியின் தத்துவ இறையியல் Al-Ghazali's Philosophical Theology



இமாம் கஸ்ஸாலி ரஹ்மத்துல்லாஹி அலைஹி

இமாம் கஸ்ஸாலி அவர்களின் சமூக சீர்திருத்த பணிகளும் சிந்தனைகளும்

இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய சீர்திருத்தவாதிகள், சிந்தனையாளர்கள் வரிசையில் இமாம் கஸ்ஸாலி (ரஹ்) மிக முக்கிய இடம் பெறுகிறார்கள். பெரும்பாலும் ஓர் ஆத்மிக ஞானியாக மட்டும் அவர்களை அடையாளப்படுத்தும் சிலர், அவர்களது பன்முக ஆளுமையின் பலமுக்கிய பரிமாணங்களை அவதானிக்கத் தவறிவிடுகிறார்கள்.

முஸ்லிம் உலகம் சிலுவைப் போர்கள், மங்கோலியப் படையெடுப்பு போன்ற பாதிப்புகளும் சவால்களுக்கும் ஆளாகியிருந்த காலப்பிரிவில் வாழ்ந்த அவர்களது நூல்களில் இத்தகைய பகைவர்களுக்கு எதிராகப் போர் தொடுக்க முஸ்லிம்களைத் தூண்டும் வகையில் எத்தகைய குறிப்புகளும் காணப்படவில்லை என்பது மட்டுமன்றி முஸ்லிம் உலகில் மங்கோலியர்கள் சிலுவைப் போராளிகள் இழைத்த வன்செயல்கள், படுகொலைகள், அக்கிரமங்கள் பற்றிய எத்தகைய குறிப்புக்களையும் இமாமவர்களின் நூல்கள் பேசவில்லை என்பதும் அவர்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் ஓர் முக்கிய விமர்சனமாகும்.

இப்போது எல்லோர் கைகளிலும் தர்ஜுமா(குர்ஆன் தமிழாக்கம்) இருக்கிறது..

Saif Saif

இப்போது எல்லோர் கைகளிலும் தர்ஜுமா(குர்ஆன் தமிழாக்கம்)
இருக்கிறது..

இந்த குர்ஆன் ஆயத்துக்கு என்ன அர்த்தம் என்று சடாரென புரட்டிச் சொல்லி விடுகிறார்கள்..

போதாக்குறைக்கு முகநூலில் பதிலுக்கு பதில் கமென்ட்
போட்டு அறிவை வெளிப்படுத்துகிறார்கள்..

தெரியாவிட்டால் கூட வலிந்து சொல்ல முனைகிறார்கள்.. எல்லாம் தெரிந்தது
போல் பேசுகிறார்கள்.. இருக்கட்டும்...

கலீபா உமர் (ரலி) காலத்தில் நடந்த ஒரு சம்பவம் உங்கள் பார்வைக்கு...

ஸஹாபாக்கள் கூடியுள்ள அவையில் குர்ஆன் ஆயத்துக்களை சொல்லி இதற்கு என்ன பொருள்.? இது எதனைக் குறிக்கின்றது..? என்று அடிக்கடி வினா எழுப்புவது உமர்
அவர்களின் வழக்கம்..

ஒருமுறை..,

: மயிலாடுதுறையில் மருத்துவக்கல்லூரி அமைக்க மதம் கடந்த மனிதநேயத்தோடு இலவசமாக இடம்தர முன்வந்துள்ளது நீடூர் அரபிக் கல்லூரி.

:
மயிலாடுதுறையில் மருத்துவக்கல்லூரி அமைக்க மதம் கடந்த மனிதநேயத்தோடு இலவசமாக இடம்தர முன்வந்துள்ளது நீடூர் அரபிக் கல்லூரி.

அரபிக்கல்லூரி
மயிலாடுதுறையில் மருத்துவக்கல்லூரி அமைக்க மதம் கடந்த மனிதநேயத்தோடு இலவசமாக இடம்தர முன்வந்த நீடூர் அரபிக் கல்லூரி நிர்வாகத்தினருக்கு மயிலாடுதுறை நுகர்வோர் பாதுகாப்புக் கழகம் பாராட்டு தெரிவித்திருக்கிறது.

எஸ்கொயர்.சாதிக்
நாகை மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு நாகை அருகே ஒரத்தூரில் இடம் தேர்வு செய்துள்ள நிலையில், அக்கல்லூரியை மயிலாடுதுறையில் அமைக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். மருத்துவக்கல்லூரி அமையவேண்டுமானால் சுமார் 20 ஏக்கர் இடவசதி வேண்டும். மயிலாடுதுறை உட்கோட்டத்தில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்களின் நீண்டகால கனவான மருத்துவக்கல்லூரி அமைய இடம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்று கருதிய நீடூர் அரபிக்கல்லூரி நிர்வாகம் 20 ஏக்கர் நிலத்தை இலவசமாக தர முன்வந்துள்ளது. அதற்கு மயிலாடுதுறை நுகர்வோர் பாதுகாப்புக் கழகத்தலைவர் வழக்கறிஞர் ராம.சேயோன் பாராட்டு தெரிவித்துள்ளார்.


ராம.சேயோனிடம் பேசியபோது, ``மயிலாடுதுறை கோட்டத்தில் வசிக்கும் மக்களின் உயிரைக் காப்பதற்காக நீடூர் அரபிக்கல்லூரி முன்வந்தது மனித நேயத்துக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இப்பகுதியில் சாதி, மத இன வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருவதற்கும், மத நல்லிணக்கத்துக்கும் இதுவே நல்ல அடையாளம். நீடூர் அரபிக்கல்லூரி நிர்வாகத்தை வரலாறு போற்றும். மேலும், அரசாங்கமும் நீடூர் அரபிக் கல்லூரி நிர்வாகம் இலவசமாய் இடம் தர முன்வந்ததை ஏற்று, உடனடியாக மயிலாடுதுறையில் மருத்துவக்கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

போஸ்னியாவில் உள்ள புதைகுழிகளில் இருந்து எடுக்கப்பட்ட தனிப்பட்ட பொருட்களின் புகைப்படங்கள்.

Photographs of personal belongings exhumed from mass graves in Bosnia.
By Ziyah Gafic
போஸ்னியாவில் உள்ள புதைகுழிகளில் இருந்து எடுக்கப்பட்ட தனிப்பட்ட பொருட்களின் புகைப்படங்கள்.




உங்களுக்கு கதை எழுத பிடிக்குமா?

கதாசிரியர்
Dr.Fajila Azad




உங்களுக்கு கதை எழுத பிடிக்குமா? உங்கள் பதில் இல்லை என்பதாக இருந்தாலும் நீங்கள் ஒரு பிறவிக் கதாசிரியர் என்பது உங்களுக்கு தெரியுமா?!

என்ன வியக்கிறீர்கள். சற்றே உங்கள் இளவயதிற்கு பின்னோக்கி போய் பாருங்கள். என்றாவது ஒரு நாள் உங்கள் நண்பர்கள் எல்லோரும் சுற்றுலா சென்ற போது உங்களால் மட்டும் போக முடியாத சூழல் ஏற்பட்டதா? அப்போது உங்கள் மனம் என்ன செய்தது என்று யோசித்துப் பாருங்கள். நிச்சயம் அவர்கள் சென்ற சுற்றுலாவையே சுற்றி கதை வடித்திருக்கும். அதாவது வெளியே போன அத்தனை நண்பர்களும் மிக சந்தோஷமாக குதூகலமாக இருப்பதாகவும், நனறாக அரட்டை அடித்து மகிழ்வதாகவும் ஒரு  உல்லாசமான கதை உங்கள் மனதில் பல காட்சிகளாக விரிந்திருக்கும்.

Srebrenicki inferno - Srebrenica (HD) ஸ்ரேப்ரினிகா

Srebrenica Inferno
Text by Džemaludin Latić, music by Đelo Jusić

Majko, majko, još te sanjam
Sestro, brate, još vas sanjam svake noći
Nema vas, nema vas, nema vas
Tražim vas, tražim vas, tražim vas
Gdje god krenem vidim vas
Majko, oče, što vas nema

Bosno moja, ti si moja mati
Bosno moja, majkom ću te zvati
Bosno majko, Srebrenice sestro
Neću biti sam

Wednesday, October 23, 2019

காக்கை சிறகினிலே நந்தலாலா - நின்றன்.

பிபிசி உலகம் முழுவதும் சாதனை படைத்த 100 பெண்களைத் தேர்ந்தெடுத்து கௌரவித்துக் கொண்டிருக்கிறது.

பிபிசி உலகம் முழுவதும் சாதனை படைத்த 100 பெண்களைத் தேர்ந்தெடுத்து கௌரவித்துக் கொண்டிருக்கிறது. இந்த தருணத்தில் உலகையே தங்கள் வியத்தகு சாதனையால் திரும்பிப் பார்க்க வைத்த சில பெண்களை இங்கே காண்போம்

முதியோர் சரணாலயம் / Dr.Vavar F Habibullah அமெரிக்காவிலிருந்து


நேற்று, ஒரு வித்தியாசமான
முதியோர் இல்லம் ஒன்றை பார்வையிட
என்னை அழைத்து சென்றார்கள்.

பிரபல தொழில் அதிபர்கள்,
விஞ்ஞானிகள்,நடிகர்கள்,
கலை, இலக்கிய வித்தகர்கள்,
அதிகாரிகள், அரசியல்வாதிகள்
என ஒரு காலத்தில் தங்கள்
துறைகளில் புகழ்பெற்று விளங்கிய
பிரபலங்கள் உள்ளடங்கும்
நவீன மருத்துவ வசதிகள்
கொண்ட ஹைடெக் விஐபி
சரணாலயமாக இந்த சென்டர்
திகழ்கிறது.

Tuesday, October 22, 2019

இலுமினாட்டிகள் யார்? அவர்கள் செயல்பாடு என்ன?

சூரியனுக்கு கீழே நடக்கும் அனைத்து கபடங்களின் தொகுப்பாக இருக்கும் இல்லுமினாட்டிகள் உலக விவகாரங்களை கட்டுப்படுத்துவதாக, புதிய உலக சிந்தனையை உருவாக்க ரகசியமாகச் செயல்படுவதாக பலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் யார்? அவர்கள் வரலாறு என்ன?

ரஹ்மானை வாழ்த்தி வாலி / புற்று நோய் போக்க செயல்படும் சேவைக்கு



யாதும் ஊரே யாவரும் கேளிர்! செம்மொழியான தமிழ்மொழி!

கணியன் பூங்குன்றனார் அவர்களின் வாழ்கை வரலாறு பாவலர்|தமிழ் இயலன்|முன்னோர்கள்

பழமையான பாடல் ஓன்று...

பழமையான பாடல் ஓன்று...
இன்று
உலகம் முழுவதும்
தேடப்பட்டு, உச்சரிக்கப்படுகிறது.
அது
கணியன் பூங்குன்றனார் எழுதிய
யாதும் ஊரே யாவரும் கேளிர்....

இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது.
பாடலின்
எல்லா வரிகளும் வாழ்வின்
முழு தத்துவத்தைச்
சொல்கிறது.....
முழு பாடலும்... அதன் பொருளும்....
உங்களுக்கா
"யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;.....
சாதலும் புதுவது அன்றே;...
வாழ்தல் இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே;
மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது
கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்காட்சியின் தெளிந்தனம்...
ஆதலின் மாட்சியின்
பெயோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

– கணியன் பூங்குன்றனார்

Monday, October 21, 2019

Abu Haashima எழுதிய இந்தப்பாடலை இறையன்பன்_குத்தூஸ் அவர்கள் இசைபட பாடி இருக்கிறார்.

Abu Haashima


வருகிறது
#ரபிய்யுல்_அவ்வல்_வசந்தம் ...

#ஈமானின்_உணர்வை
#உயிருக்குள்_வார்த்து ...

நெஞ்சம் என்றும்
உம்மை தஞ்சம் கொண்டு வாழுமே
மஹ்ஷர் பெருவெளியிலும்
உங்கள் அன்பு காக்குமே
நெஞ்சம் என்றும்
உம்மை தஞ்சம் கொண்டு வாழுமே ..

மக்க நகர் அன்று
மண்வீசி வதைத்ததே
தாயிப் நகர் சென்றும்
கல்வீச்சு தொடர்ந்ததே
சென்ற இடம் எல்லாம்
ரத்தம் சிந்தும் உங்கள்
பொன்மேனி கண்டு
எம் நெஞ்சும் சாகும்
( நெஞ்சம் )

சாதனையாளர் விருது ....



சமீபத்தில் நிலவிய சந்திப்பில் உலவிய அன்பை நாட்டி விளைந்த நேசத்தை நீட்டி எனது நட்பு வளையத்தில் இணைந்தவர் அருமைக்குரிய சகோதரர்
Zakkir Hussain

குமரி மண்ணில் பிறந்து துபாய் தேசத்தில் தொழில் முனைவோரின் மத்தியில் சிறந்து விளங்கி இவரது நிறுவனத்தில் பணியாற்றி உழைப்பில் நனைவோரின் உள்ளத்தில் இடம் பிடித்தவர் ....

நபி (ஸல்) அவர்களின் பள்ளிவாசல் மஸ்ஜிதுன் நபவி அழகான காணொளியை பாருங்கள்.

இந்த அழகான வடிவமைப்பை நீங்கள் நேரில் சென்றாலும் காணமுடியாது போகலாம்.
நபி (ஸல்) அவர்களின் பள்ளிவாசல் மஸ்ஜிதுன் நபவி அழகான காணொளியை பாருங்கள்.

في السلام على رسول الله صلى الله عليه وسلم

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலாம் உண்டாவதாக

ஒரு அழகான காணொளி

ஒரு அழகான காணொளி இந்த இடம் எமக்கு பார்கக் கிடைப்பது நெரிசலான நேரங்களில் தான் , இது அமைதியான நேரத்தில் எடுக்கப்பட்ட காணொளி, நபிகளாரின் அடக்கஸ்தலத்தையும் பார்க்கலாம்!

திருப்பூர் உருவான விதம்

திருப்பூரில் வாழூம் பல மக்களுக்கு திருப்பூர் உருவான  விதம் தெரியுமா.? அப்படி தெரிய வேண்டும் என்றால்..! இந்த video-வை முழுமையாக பார்க்கவும்.

Sunday, October 20, 2019

தேர்ந்தெடுத்த சட்டைக்கு சாதியுண்டோ மதமுண்டோ இனமுண்டோ....!!

நிஷா மன்சூர்

பஞ்சாப்பில் சீக்கிய விவசாயியால் விளைவிக்கப்பட்ட பருத்தி, கோயம்புத்தூர் ஸ்பின்னிங் மில்லில் உள்ளூர் ஒக்கிலிய கவுண்டர் சமூகத்து சிறுவனால் நூலாக்கப்பட்டுப் பின் சோமனூர் தறிப்பட்டறையில் அருந்ததிய இளைஞன் கையால் துணீயாக்கப்பட்டு ஈரோட்டுச் சலவைப்பட்டறையில் விவசாயம் நொடித்த கவுண்டர் சமூக பெரியவரால் சாயம் பூசப்பட்டு, ஆதரவற்ற பீகாரிய இளைஞனால் பேல் போடப்பட்டு பம்பாய் பனியா வியாபாரியால் கொள்முதல் செய்யப்பட்டு கொல்கத்தா முஸ்லீம் பெரியவரால் தேர்ந்தெடுக்கப்பட்டு பங்களாதேஷில் இளமையிலேயே தாடிநரைத்த எளிய குடும்பத்தலைவனால் சட்டையாகத் தைக்கப்பட்டு பின் குடிசீரழித்த கணவனின் கவலை தோய்ந்த லட்சுமிபாயின் கரங்களால் அயர்ன் செய்யப்பட்டு மீண்டும் பம்பாயில் அஸ்லம் பாய் பில்டிங்கில் கடைவைத்திருக்கும் ராஜஸ்தானிய மார்வாரி வினியோகஸ்தர் மூலம் சுப்ரமன்ய அய்யர் மேலாளராகப் பணிபுரியும் மதுரையிலுள்ள குஜராத்தி மேமன் முசல்மான் கடையில் வில்லாபுரம் முத்துக்குமார் கரங்களால் விற்கப்பட்டு திண்டுக்கல் நாகல்நகர் குமாரசாமி தீபாவளிக்கு ரசித்துத் தேர்ந்தெடுத்த சட்டைக்கு சாதியுண்டோ மதமுண்டோ இனமுண்டோ....!!

#
நிஷா மன்சூர்

கண்கள் இரண்டும் தேடுதே / ஜாமியா மிஸ்பாஹுல் ஹுதா /நீடூர் நெய்வாசல்

உமர் (ரலி) அவர்கள் நபித்தோழர்களில் மிக முக்கியமானவர்கள்..

Saif Saif

உமர் (ரலி) அவர்கள் நபித்தோழர்களில் மிக முக்கியமானவர்கள்..

இவர் இஸ்லாத்திற்கு வந்த பிறகு "அல்லாஹ்வே உமரால் இஸ்லாத்திற்கு உயர்வை கொடு" என்று நபி(ஸல்) அவர்கள் கண்ணியம் செய்தார்கள்..

உமர் முஸ்லிம் ஆனபிறகு பகிரங்கமாக இஸ்லாமிய அழைப்பு விடப்பட்டது..

கஅபாவைத் தவாஃப் செய்வதில் பிரச்சினை வந்தாலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது..

இஸ்லாத்தின் மிகப்பெரிய எதிரி அபூஜஹ்லின் வீட்டு கதவை தட்டி..,

"நான் அல்லாஹ்வையும் அவனது தூதர் முஹம்மதையும் அவர் கொண்டு வந்த மார்க்கத்தையும் நம்புகிறேன்"

தலைமை பதவி அவருக்கு பணிவை தந்தது..எளிமையைக் கொடுத்தது..


Saif Saif
உமர்(ரலி) அவர்கள் இயல்பிலேயே கடின சுபாவமுடையவர்களாக இருந்தார்கள்.

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பிறகும் வெகு காலம் வரை அதன் தாக்கம் நீடித்தது..

"பத்ரு போரில் நிராகரிப்பார்கள் பனுஹாஷிம்களை வற்புறுத்தி அழைத்து வந்திருக்கிறார்கள் அவர்களை கொன்று விடாதீர்கள்"

என நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்..

அந்த நேரத்தில் அபூ ஹுதைபா என்ற சஹாபி..,

Saturday, October 19, 2019

ஸூரத்துல் ஃபஜ்ர் (விடியற் காலை)


அப்துல்லா அவர்கள் பாரிசில் சொற்பொழிவு

ஷேக் ஜயீத் மஸ்ஜித், அபுதாபி Shaikh Zayed Masjid, Abu Dhabi

கணியூர் இஸ்மாயில் ஹஜ்ரத் நாஜி மன்பயீ அவர்கள் சொற்பொழிவு

Iftarஇப்fடார் / உணவுக்கு அழைத்தல்

இப்தார் (அரபு: إفطار, ரோமானிஸ்: ʾifṭār, lit. 'விரதத்தை முறித்தல்'), இது ஃபத்தூர் என்றும் அழைக்கப்படுகிறது (فطور ஃபுர் 'காலை உணவில் இருந்து), முஸ்லிம்கள் தங்கள் அன்றாட ரமலான் நோன்பை சூரிய அஸ்தமனத்தில் முடிக்கிறார்கள். மாலை தொழுகைக்காக அழைப்பு நேரத்தில் அவர்கள் நோன்பை முறித்துக் கொள்கிறார்கள்.

நீடூர்-நெய்வாசல் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா பேராசிரியர்
மௌலானா H.அப்துர் ரஹ்மான் பாகவி
Abdul Rahman M.A.,அவர்கள் சொற்பொழிவு
Iftar (Arabic: إفطار‎, romanized: ʾifṭār, lit. 'break of a fast'), also known as fatoor (from فطور fuṭūr 'breakfast'), is the evening meal with which Muslims end their daily Ramadan fast at sunset. They break their fast at the time of the call to prayer for the evening prayer.

I Stopped Advice to My Son - A. R. Rahman | A. R. Ameen | Hindu Tamil Th...

மகாகவி மறுபிறவி கண்ட நாள்: கவிஞர் வைரமுத்து | Hindu Tamil Thisai

தலைவலி - தீர்க்க முடியாத வலியா? | Dr. Bhuvaneshwari Rajendran - நரம்பியல...

Making of 'Nagore Special Biryani' | Hindu Tamil Thisai

Friday, October 18, 2019

தற்கொலை! ஒரு இஸ்லாமியப் பார்வை!


- நீடூர் A.M.சயீத் (ரஹ்) -

நான் சட்டக் கல்லூரியில் படிக்கிறபோது சட்டக்கல்லூரி மாணவ நண்பர்கள் ''இந்திய தண்டனைச் சட்டத்தில் உள்ள 511 பிரிவுகளில் எந்தக் குற்றத்தை நிறைவேற்றினால் தண்டனை கிடையாது? ஆனால் அந்தக் குற்றத்தை நிறைவேற்ற முயற்சியால் தண்டனை உண்டு'' என்ற புதிர் வினா எழுப்பி விடை கேட்க முயற்சிப்பார்கள்.

ஒரு சிலர் தான் உடடினயாக அதற்கு பதில் தருவார்கள். மற்றவர்கள் யோசித்து தெரிவிப்பார்கள். அதாவது இந்திய தண்டனைச் சட்டம் 309வது பிரிவில்''யாராவது தற்கொலை செய்வதற்கு முயற்சி செய்து, அதற்கென ஏதாவது ஒரு செயலைப் புரிந்திருந்தால் அந்தக் குற்றத்திற்காக ஓர் ஆண்டுக்கு உட்பட வெறுங்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்'' என்று கூறப்பட்டுள்ளது.

நடந்த சம்பவம் / Kaliyamurthy

Kaliyamurthy

உயிரின் கூடாகவும் உணர்ச்சிகளின் வீடாகவும் விளங்கும் நம் உடல் பற்றிய சிறு...

கண்ணதாசன் நினைவுகள் DInakaran News Video

அசுரன் திரைப்படத்தின் இசைவெளிட்டு விழா | Dhanush full speech | Asuran Au...

பெண்கள் வேலைக்கு செல்வதை இஸ்லாம் தடை செய்கிறதா?

பர்தா என்ற கருப்பு நிற ஆடையினால் இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகின்றதா? - A.S.ஃபாத்திமா முஸஃப்பர்

நாயகத்தின் பிறப்பு நானிலத்தின் சிறப்பு

Ms Sultana Parveen Special Speach

Thursday, October 17, 2019

சுப்ஹு சிந்தனை

சுப்ஹு சிந்தனை{17/10/19} வழங்குபவர் நீடூர்நெய்வாசல் ஜினனாத்தெரு பள்ளி இமாம் சுஹைபு மிஸ்பாஹி அவர்கள்

Wednesday, October 16, 2019

ஒண்ணுமே புரியலே, உலகத்திலே!

ஒண்ணுமே புரியலே, உலகத்திலே!
ஒண்ணுமே புரியலே, உலகத்திலே!

என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது..
என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது..
ஒண்ணுமே புரியலே, உலகத்திலே!

கண்ணிலே கண்டதும், கனவாய்த் தோணுது,
காதிலே கேட்டதும், கதைபோல் ஆனது..
கண்ணிலே கண்டதும், கனவாய்த் தோணுது,
காதிலே கேட்டதும், கதைபோல் ஆனது..

உணவு உற்பத்தி செய்யும் விவசாயிகளே பசி பட்டினியில் தவிக்கும் அவலம் | Worl...

அனில் அம்பானி சாம்ராஜ்யம் வீழ்ந்த கதை | Anil Ambani Empire fallen Story

பல்லவர்களின் கதை | Pallavas Story | Pallava dynasty | News 7 Tamil

42 HILARIOUS FOOD TRICKS AND HACKS

Tuesday, October 15, 2019

பாவம் செய்த பின்..........

பாவம் செய்த பின்..........
**********************************
 Kaniyur Ismail Najee Manbayee
சற்று முன் அரபி மொழி ட்விட்டரில் படித்தேன்.
"நீ ஒரு பாவம் செய்த பின் உன் உள்ளத்தில் ஒரு வகையான குற்ற உணர்ச்சி ஏற்பட்டால் சந்தோஷப்படு.
ஏனென்றால்,
உன் உள்ளத்தில் ஈமானின் ஒளி இருக்கிறது.
அது தான் உன் உள்ளத்தின் இருண்ட பகுதியை சுட்டி காட்டுகிறது".

இதனை படித்த பொழுது,
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்ன ஒரு ஹதீஸ் நினைவிற்கு வருகிறது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவரகளிடம் ஒரு மனிதர் வந்து, "நபி அவர்களே! ஈமான் என்றால் என்ன?" என்று கேட்டார். (அவர் கேட்டது ஈமான் இருப்பதற்கான அடையாளத்தை)

NATIVE DEEN Spread the word!


About
NATIVE DEEN Spread the word!

Biography
The story of Native Deen is an inspiring one that began with three Muslim youth possessing unique talents and a passion to spread the uplifting message of Islam. Originally solo artists and active participants of their communities searching for creative ways to educate and inspire Muslim youth, today Native Deen has become a fusion of Hip-hop and R&B flavors, thrilling fans with their eclectic and unique combinations of lyrics, rhythms and sounds. The trio made up of Joshua Salaam, Abdul-Malik Ahmad and Naeem Muhammad came together in 2000 and has embarked upon a professional career in the music industry together in order to highlight issues confronting Muslims living in America.

NO MORE HATE!! Native Deen


"A picture is worth a thousand words" படங்கள் பேசும்



Oh Healer (Ya Shafi) - Voice Only குணப்படுத்துதல் (யா ஷாஃபி) - குரல் மட்டும்

Dhikr Series #6 - This song is based the prophetic invocation (dua) that calls on the God for healing and return to health. "Dear God, Lord of mankind, remove the affliction and send down cure and healing, You are The Healer, so cure in such a way that no trace of illness is left. Narrated by Sahih Muslim
Song by Abdul-Malik Ahmad from Native Deen.

No musical instruments used, only the human voice and vocal effects.

اللهم رب الناس - آشف أنت الشافي
أذهب البأس - اللهم رب الناس
أذهب البأس - لا شفاء إلا شفاؤك
اللهم رب الناس - أذهب البأس
آشف أنت الشافي - اللهم رب الناس
 آشف شفاءً لا يغادر سقماً

ياشافي يا كافي يامعافي ياالله
Oh Healer, oh Sufficient One, oh Curer, oh Allah (God)

ياشافي يا كافي آشف ياالله
Oh Healer, oh Sufficient One, heal us oh Allah (God)

Dear Lord of all of us
Your the one that we believe in
We call to you, and you’re enough
We need your healing, your healing.

Monday, October 14, 2019

நெப்போலியன் பொனபார்ட் வாழ்க்கை வரலாறு


மாவீரர் அலெக்சாண்டரின் வரலாறு


மாவீரன் செங்கிஸ்கான் கதை Genghis Khan


போதி தர்மரின் கதை | Bodhidharma Story in Tamil

40 வருடங்களுக்கு முன்னாள் நம் துபாய் எப்படி இருந்தது

40 வருடங்களுக்கு முன்னாள் நம் துபாய் எப்படி இருந்தது
என்று இந்த காணொளி பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்

TAMILIL DAWAH தமிழில் தாஃவா

Saturday, October 12, 2019

3000 அமெரிக்க படைகள் நவீன ஆயுதங்களுடன் ஈரானை எதிர்க்க சவுதி பயணம் !

அமெரிக்க படைகள் மீதும் துருக்கி தாக்குதல் ! விழுந்தது பொருளாதார தடை!

Tamilrockers வருமானம் என்ன?

ஷி ஜின்பிங்கின் Car, Wife, fav game - 10 important facts | Xi Jinping |...

WELCOME TO THE Gambia / "Gambia -- No Problem."

ஆசியாவின் சாம்ராட் ஜி ஜின்பிங் கதை

மோடி-ஜி ஜின்பிங் சந்திப்பு மாமல்லபுரத்தில் ஏன்?-

மாமல்லபுரத்துக்கு இப்படி ஒரு வரலாறா!!! வியக்க வைக்கும் உண்மைகள்

சீன அதிபர் ஷி ஜின்பிங் மாமல்லபுரத்திற்கு வருவதையொட்டி, அந்நகருக்கும் சீனாவுக்கும் உள்ள தொடர்புகள் குறித்துப் பேசப்படுகிறது. உண்மையில் மாமல்லபுரம் என்ற இந்தப் பழங்கால நகரோடு சீனாவுக்கு நேரடித் தொடர்பு இருந்ததா?

சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும் அக்டோபர் 11 மற்றும் 12ஆம் தேதிகளில் மாமல்லபுரத்தில் சந்தித்துப் பேசி வருகின்றனர். இந்த பயணத்தின்போது சீன அதிபர் மாமல்லபுரத்தையும் சுற்றிப்பார்க்கவிருக்கிறார்.

இதையடுத்து, மாமல்லபுரத்திற்கும், சீனாவுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து சமூக வலைதளங்களில் தீவிரமாக விவாதிக்கப்பட்டுவருகின்றன. உண்மையிலேயே மாமல்லபுரத்திற்கும் சீனாவுக்கும் நேரடியான தொடர்புகள் இருக்கின்றனவா?

விரிவாக படிக்க: https://bbc.in/2MyUpiC

சென்னையில் வியப்பூட்டும் அரண்மனை

Thursday, October 10, 2019

Kelvigal Aayiram: இ-சிகரெட் தொடர்ந்து பயன்படுத்தினால் மாரடைப்பு வரும் | ...

Free calls - க்கு End Card போட்டது ஏன் ? | Jio Free Calls End up Reason ...

வெல்லும் சொல் | தமிழன் ஆளவேண்டும் என்ற சீமானின் கருத்தை நான் ஆதரிக்கிறேன...

ஜியோவின் புது முடிவுக்கு பின் அந்த '13,500 கோடி' - Jio IUC charges expl...

வன்னியர் இடஒதுக்கீடு அரசியல் | VANNIYAR Reservation Politics | News7 Tamil

��LIVE | News7 Tamil Live | Tamil News | Live Tamil News | Tamil Breaking...

பணம் தராவிட்டால் 3 6 மில்லியன் அகதிகள் ஐரோப்பாவிற்குள் துருக்கி மிரட்டல் !

சீன அதிபர், விருந்தில் நரேந்திர மோடியுடன் ரஜினி ! சூப்ப ஸ்டார் அரசியல் !

Tubetamilfm 💐காற்றின் மொழி💐

உங்களுக்குப்பிடித்த பெண் சாதனையாளர் யார்? ஏன் பிடிக்கும்?
இணையுங்கள். www.tubetamil.fm
Viber 075 06 70 700
IMO 0762626730
Divaniya
 http://tubetamil.fm/?

பிரதமர் மோடி - சீன அதிபர் சந்திப்பு மாமல்லபுரத்தில் ஏன்? அதன் வரலாற்று பின்னணி என்ன!!

#லெபனான் இருந்து , அழகு, இயற்கை மற்றும் பண்டைய வரலாறு

Wednesday, October 9, 2019

அறிஞர் அண்ணா – ஒரு ஆச்சரியம்

World's Oldest University?!

அன்பிற்குண்டோ அடைக்குந்தாழ்!!


நூறாண்டுகளைக் கடந்து மங்காத பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டு வரும் மில்லி கிராம் மெட்டல் பாக்ஸ்

மயிலாடுதுறை அருகே 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த மிகக் குறைவான எடையில் தயாரிக்கப்பட்ட மெட்டல் பாக்ஸ் இன்றளவும் மங்காமல் உள்ளதால் பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. நாகை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த நீடூர் பகுதியை சேர்ந்தவர் அமினுல்லா. இவர் தனது மூதாதையர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்ட மிக சிறிய மெட்டல் பாக்ஸ் ஒன்றை பாதுகாத்து வருகிறார். இந்த மெட்டல் பாக்ஸ் குளோரின், காப்பர், கார்பன், நிக்கல் சிங், அயன், சிலிக்கான் பொட்டாசியம், அலுமினியம் உட்பட சுமார் 20 மூலப்பொருட்களை கொண்டு இது தயாரிக்கப்பட்டுள்ளது. 14.7 மில்லி கிராம் மட்டுமே எடைகொண்ட இந்த மெட்டல் பாக்ஸ் 4 சென்டி மீட்டர் நீளமும் 3.75 சென்டி மீட்டர் அகலமும் உள்ளது. வெள்ளி நிறத்தில் காணப்படும் இந்த மெட்டல் பாக்ஸ் உருவாக்கப்பட்டு 100 ஆண்டுகளுக்கும் மேல் இருக்கும். இன்றளவும் அதன் நிறம் மங்காமல் இருப்பதை உணர்ந்த அமினுல்லா அதனுடைய சிறப்பு அம்சங்களை தெரிந்து கொள்ளும் நோக்கோடு சென்னையிலுள்ள இந்திய தொழில் நுட்பக் கழக உலோகவியல் மற்றும் பொருட்கள் பொறியியல்துறையில் ஆய்விற்காக அனுப்பி அதனுடைய ஆய்வறிக்கையையும் பெற்றுள்ளார். இதேபோல அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் மெட்டல் பாக்ஸ்ன் தன்மை குறித்து ஆய்வு செய்து அதனுடைய அறிக்கைகளையும் பத்திரமாக வைத்துள்ளார்.
மேலும் படிக்க http://mayilaiguru.com http://mayilaiguru.com/2019/10/08/met...

Tuesday, October 8, 2019

புன்னகை


புன்னகை...
உதடுகள் புரியும் உன்னத மொழி !
உலகத்தார் அனைவருக்கும் புரிந்த மொழி
காதலின் பிள்ளையார் சுழி !
கல்லையும் கனியாக்கும் மந்திரக் கழி !!

உச்சரிப்பே இல்லாத ஒரே மொழி
உலகில் புன்னகை மட்டும்தானே !!

புன்னகைக்கு மொழிபெயர்ப்பு தேவையில்லை !
இந்த நாலெழுத்து மந்திரம்
யாரையும் நட்டப்படுத்தியதில்லை !

Monday, October 7, 2019

சுப்ஹு சிந்தனை 08/10/19 நீடூர்நெய்வாசல் ஜின்னாத்தெரு பள்ளி இமாம் சுஹைபு மிஸ்பாஹி

Nidur AbuAyman

ஷார்ஜாவில் தமிழக இளைஞருக்கு விருது



ஷார்ஜா : ஷார்ஜா இந்திய சங்கத்தில் நடந்த ஓணம் பண்டிக்கை சிறப்பு நிகழ்ச்சியில் இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணத்தைச் சேர்ந்த இளைஞர் ஜே. ஆஷிக் அஹமது பொது நல சேவைக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
ஜே. ஆஷிக் அஹமது திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் இளநிலை வேதியியல் பட்டம் பயின்றவர். தற்போது ஷார்ஜாவில் உள்ள குவைத்தி ஆஸ்பத்திரியில் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது பணியின் ஒரு பகுதியாக எதிர்பாராத நிலையில் மரணமடைபவர்களின் குடும்பத்தினருடன் இணைந்து பணியாற்றி ஷார்ஜாவில் நல்லடக்கம் செய்யவோ அல்லது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கவோ தேவையான உதவிகளை செய்து வருகிறார்.
மேலும் பொருளாதார வசதியில்லாமல் சிகிச்சை பெறுபவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்கள், அமீரகத்தில் பொது மன்னிப்பு காலத்தில் சொந்த ஊருக்கு செல்ல விரும்புவோருக்கு நண்பர்களின் ஒத்துழைப்புடன் உதவிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை தன்னார்வத்துடன் செய்து வருகிறார்.

மாணவர்கள் தரும் விபரீத பாடம்

Child & balloon

மாணவர்கள் தரும் விபரீத பாடம்

உங்கள் குழந்தைகள் உங்களிடமிருந்து வந்தவர்கள் அல்ல, உங்கள் மூலமாக வந்தவர்கள். அவர்களுக்கு நீங்கள், எவ்வளவு வேண்டுமானாலும் உங்கள் அன்பை அள்ளிக் கொடுக்கலாம். ஆனால் உங்கள் எண்ணங்களை திணித்து விடாதீர்கள் என்கிறார் கலீல் ஜிப்ரான்.

பாருக்குள்ளே சிறந்த நாடாம் நம் பாரத திருநாட்டில், ஒரு மணித்துளிக்கு ஒரு மாணவன் தன்னை மாய்த்துக் கொள்கிறான் என ‘ஹிந்துஸ்தான் டைம்ஸின்’ அறிக்கையைப் படிக்கும் போது, கலீல் ஜிப்ரான் சொன்னதை நினைவு கொள்ளாமல் இருக்க முடியவில்லை.

Saturday, October 5, 2019

ஆடிட்டர் மிஸ்கீன் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்..!!

S.M.Miskeen
Oct 5, 2019, 3:10 PM (17 hours ago)

from: S.M.Miskeen
to me
My dear Brother,
After a long time I have heared the aged voice of brother Abdul Hakim yesterday. Now your kind and noble words
in your usual poetic version made me extremely happy. I still remember the majestic appearance of your
father. Every time I visit Mayuram I never missed the homely meals with Shabbir Annan. Our Syed was a legend . I never forget Latiff
and his jovial words. I was one of the family members. R.Aziz and his brothers , Adelpy Hoted Hameed Annan are still live with me.
I once again thank you for your love and affection.
From: Mohamed Ali Jinnah
Sent: Thu, 03 Oct 2019 10:45:23
To: "S.M.Miskeen"
Subject: Re:
ஆடிட்டர் மிஸ்கீன் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்..!!

https://nidurseasons.blogspot.com/2019/10/blog-post_93.html

அங்கிகாரம்

பொதுவாக எந்த ஒன்றை செய்யும்போதும் அதற்கான அங்கீகாரத்திற்காக மனம் ஏங்கும். வெளியிலிருந்து அங்கீகாரம் கிடைத்தாலே தவிர நீங்கள் செய்வதை உங்களாலேயே அங்கீகரிக்க முடியாமல் மனம் தவிக்கும்.
அங்கீகரிக்கப் படாத எந்த ஒரு செயலுமே உங்களுக்கு சாதனையாகவே தெரிய மறுக்கிறது. ஆனால் அந்த அங்கீகாரத்திற்கான ஏக்கமே, அது கிடைக்காத போது உங்களுக்கு ஒரு சலிப்பை ஏற்படுத்தி விடுகிறது. அங்கீகாரத்தை எதிர்பார்ப்பது தவறல்ல. ஆனால் பிறரது அங்கீகாரமென்பது அவர்களின் விருப்பு வெறுப்பிற்கும் பல் வேறு விதமான கோணங்களுக்கும்  உட்பட்டது என்பதை புரிந்து கொண்டால் அங்கீகாரத்திற்காக இல்லாமல் ஆத்ம திருப்திக்காக செயல் படத் தொடங்கி விடுவீர்கள்.
அதனால், எதை செய்தாலும் நீங்கள் செய்யக் கூடிய அந்த விஷயம் முதலில் உங்களுக்கு திருப்தி தரக் கூடிய ஒன்றாக இருக்க வேண்டும் என்பதை மனதில் எண்ணிக் கொள்ளுங்கள், இது நிச்சயம் வெற்றி அடையும் என்ற தன்னம்பிக்கையோடு செயலைத் தொடருங்கள்.

கலைஞரும் சிறுகதைகளும்!

எழுதியவர் யுவகிருஷ்ணா

அரசியல்தான் தான் விரும்பித் தேர்ந்தெடுத்து பணிபுரியும் துறை என்று கலைஞர் அடிக்கடி சொன்னாலும், “அரசியல்/ஆட்சி அழுத்தங்களில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவே கலை இலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபடுகிறேன்” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

இலக்கியத்தின் பல்வேறு பரிணாமங்களிலும் அவருடைய ஆர்வமான செயல்பாடு இருந்திருக்கிறது. தன்னை முதன்மையாக பத்திரிகையாளர் என்று அவர் பெருமையாக அடையாளப் படுத்திக் கொண்டாலும், இதழியல் மட்டுமின்றி சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், திரைப்படம், தன்வரலாறு, பேச்சு என்று கிளைவிரித்து தமிழ் பரப்பியிருக்கிறார்.

கலைஞரின் தமிழ்ப் பணிகளில் அதிகம் பேசப்படாதவையாக அவரது சிறுகதைகள் அமைந்திருக்கின்றன.

Friday, October 4, 2019

Welcome YouTube Creators

Intro to Making Money on YouTube

’How Dare You...?’ உலகையே அதிரவைத்த கிரெட்டா... | How dare you': Greta T...

Greta Thunberg Rips World Leaders at the U.N. Over Climate Change

யார் இந்த கிரேட்டா தன்பர்க்? | Greta Thunberg

Sun Singer Rihana -தாய்ப்பாலும் தண்ணீரும் Palum Thaneerum


எந்தத்_தாயும்_பெற_முடியாத அழகானக்_குழந்தை !

எளிய_தமிழில் தந்தவர்   Abu Haashima அவர்கள்


அண்ணலே யா ரசூலல்லாஹ் ...
உங்கள் கண்களை விட
அழகான கண்கள்
யாருக்கும் இல்லை !

எந்தத் தாயும்
தங்களை விட
அழகானக் குழந்தையை
பெற்றதேயில்லை !

தாங்கள்
குறையே இல்லாமல்
படைக்கப்பட்டீர்கள் ...
தாங்கள்
எப்படிப் படைக்கப்பட வேண்டும்
என்று விரும்புவீர்களோ
அப்படி !

பிள்ளைகளுக்காக ஓரு தந்தை யின் துஆ

அல்லாஹும்ம லக ல் ஹம்து வலகஷ் ஷுக்ர்
رَبَّنَا هَبْ لَـنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّيّٰتِنَا قُرَّةَ اَعْيُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا‏ 
“எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக!. 25:74

ஏக இறைவா!
உனக்கே எல்லாப்புகழும்.
உனது அளவில்லா கருணையினால் எங்களுக்கு குழந்தைச் செல்வத்தைக் கொடுத்த வல்லவனே!உனக்கே எல்லாப் புகழும்.

எங்கள் பிள்ளைகளை உடல் நோய் , மன நோய்களை விட்டும் காப்பாயாக!
எங்களின் ஆண் பிள்ளைகளும்,பெண்பிள்ளைகளும் இம்மை மறுமைக்கான கல்விகளை கற்பவர்களாக ஆக்குவாயாக!
அவர்களுக்கு நல்ல நண்பர்களை த் தருவாயாக!
வழி கெடுக்கும் தோழர்களை விட்டும் அவர்களைப் பாதுகாப்பாயாக!
திருமண வயதை அடைந்து விட்ட எங்கள் பிள்ளைகளுக்கு நல்ல மண வாழ்க்கையை அமைத்துத் தருவாயாக!
பள்ளிகளுக்கும் பணியிடங்களுக்கும் செல்லும் எங்கள் செல்வங்கள் எவ்வித ஆபத்துமின்றி வீடு திரும்ப நீ பாதுகாவலானக இருப்பாயாக!
எங்களின் ரப்பே! எங்களின் பிள்ளைகளை எங்களுக்கு சோதனையாக ஆக்கிவிடாதே!

Wednesday, October 2, 2019

நேர்மை தலைவர்களுக்கு மட்டும்தானா ?

DISEASE Short Film / Nominated For International Short Film Festivals Dr...

DISEASE Short Film / Nominated For International Short Film Festivals Dr...

Top 10 OLDEST CITIES in the WORLD / Top 10 Richest Countries

எஸ்.ஏ.அப்துல் மஜீது (சினாஅனா)



ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது என்று கூறுவார்கள்.மாயூரத்தின் பக்கபலமாக இருக்கிற ஊர்களில் கிளியனூருக்கு மட்டும் பெரும் சிறப்பு உண்டு.

1955 ஆம் ஆண்டிலேயே சுய தேவை பூர்த்தியில் தன்னிறைவு அடைந்த இந்திய கிராமங்களின் வரிசையில் முதலிடம் பெற்ற கிராமமாக மாதிரி கிராமம் என்ற சிறப்பை பெற்று அன்றைய முதல்வர் கர்மவீரர் காமராஜ் அவர்களின் கரங்களால் நேருவிருது வாங்கிய பெருமை நமது கிளியனூருக்கு மட்டுமே உண்டு.

சும்மா வந்துவிடவில்லை இந்த பெருமை.முற்றிலும் உள்@ர்காரர்களின் தன்னலமற்ற உழைப்பால் சி.அ.முதலாளி எஸ்.ஏ.மஜீது அவர்களின் கொடை உள்ளத்தால் ஹாஜியார் மர்ஹ_ம் ஓ.முஹம்மது ஷரீப் அவர்களின் கடுமையான முயற்சியால் சைக்கிள் இராவுத்தர் மர்ஹ_ம் முஹம்மது இபுராஹிம் அவர்களின் சிறப்பான நிர்வாகத்தால் கம்பீரமான கட்டிடங்களை சுயமாகக் கொண்ட பள்ளிக்கூடம் மருத்துவர் குடும்பத்தோடு சகல வசதிகளோடு தங்கும் மருத்துவமனை எல்லா வாகனங்களும் எளிதில் சென்று வரதக்க கப்பிச் சாலைகள் அமைந்த அழகியத் தெருக்கள் ஊரையே வளைத்துப் போட்டதைப் போன்ற அழகிய பெரிய குளம் எழில் கொஞ்சும் பள்ளிவாசல் என ஊரின் நலத்திட்டங்கள் அனைத்தும் நிறைவேறிய மாதிரி கிராமத்தை உருவாக்கிய சிற்பிகள் எஸ்.ஏ.மஜீது அவர்களும் ஹாஜியாரும் தான் என்றால் மிகையாகாது.

எந்த ஊர் என்றவனே......அந்த ஊர் அறிந்த ஊர் அல்லவா

எந்த ஊர் என்றவனே......
(சுய விமர்சனமா என்றால், யாவரும் சுயம் அறியும் விமர்சனம்)

இனி ஒரு முக்கியமான வேலை பாக்கி இருக்கிறது. சிறிய வயதிலிருந்தே கேள்வி படும், நெடும் தொலைவில் இருக்குமோ என்று நினைக்கும் ஒரு புதிய ஊருக்கு போக; புதுப்பிக்கும் பாஸ்போர்ட்டில், அந்த ஊருக்கான எண்டார்ஸ்மென்ட் செய்ய வேண்டும். வயது 23-ல் இருந்து ஆரம்பித்து, சில நாடுகளை பார்த்தும், அவைகளிலிருந்து உழைத்தும் பிழைத்தும் எல்லாம் ஆயிற்று, இனி அந்த புதிய ஊரையும் அதற்கான பாதையையும் பார்த்து விடத்தான் வேண்டும். அது எந்த ஊர் என்பவரே, அந்த ஊர் நீயும்(ங்களும்) கூட அறிந்த ஊர் அல்லவா என்று சொல்லி விடும் நோக்கம்தான் இந்த பதிவு !

பில் கேட்ஸின் கதை


Tuesday, October 1, 2019

ஆடிட்டர் மிஸ்கீன் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்..!!


பட்டய கிளப்பும் இந்த
பட்டய கணக்காளர்,அறுபது
ஆண்டுகள் தன் தொழிலில்
வெற்றி கொடி நாட்டியவர்..

தள்ளாத வயதென்று,ஓரறையில்
முடங்காமல்,கல்வி தாகம்
அடங்காமல்,கல்லூரி ஒன்றை
திறம்பட நடத்தும் கல்வித்தந்தை..

தொண்ணுறு வயதில் இன்று
வணிகவியலில்,முனைவர் பட்டம்
பெற்று,இளைஞர்கள் பலருக்கு
உத்வேகம் ஊட்டியுள்ளார்...

பணக்கார முஸ்லிம்கள்

Vavar F Habibullah

                                                        Dr .Vavar F Habibullah
சாதாரண நோய்களுக்கு
கூட திருவனந்தபுரம்
கிம்ஸ் மருத்துவமனை சென்று
சிகிச்சை பெறுவது என்பது
நாகர்கோவில் முஸ்லிம் மக்களிடம்
ஒரு பிரிஸ்டிஜ் இஸ்ஸூவாகவே
மாறி விட்டது.

ஒரு நோய் வாய்ப்பட்ட பெண்மணியை
சமீபத்தில்,கல்ஃபில் வசிக்கும் மகன்
செலவில்... கிம்ஸில், சூப்பர் விஐபி அறையை நாளொன்றுக்கு பதினைந்தாயிரம் செலவில் புக் செய்து பத்து நாட்கள் சிகிச்சை அளித்த கதையை அந்த பிரமுகர் விவரித்த விதம்......
நோய் சரியாகாவிட்டாலும் பல
லட்சம் செலவு செய்த பெருமிதம்
அவரது பேச்சில் வெளிப்பட்டதை
என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

முதியவர்கள்

Abu Haashima


பழுத்த இலையானாலும்
பயிருக்கு உரமாகி
விளைச்சல் தருபவர்கள்
முதியவர்கள் !

#அப்துல்_முத்தலிப் ஒரு முதியவர் !
#ஹாஷிம்_குடும்பத்தின் மூத்த குடிமகன் !
அன்றைய அரபு தேசத்தின் மக்களெல்லாம் அவரைத்தான் தலைவராக மதித்தார்கள் !
அவர் சொன்னால்
அந்த சொல்லுக்கு கட்டுப்பட்டார்கள் .
இறை நம்பிக்கையாளர்.
மக்காவுக்கு வரும் யாத்திரீகர்களுக்கு
தண்ணீர் உட்பட தேவையான உதவிகளை செய்து வந்தவர் அவர்.
வற்றாத சுனையாக பொங்கிக் கொண்டிருந்த
#ஜம்ஜம்_கிணறு
இருந்த இடம் தெரியாமல் மண்மூடிப் போய்விட்டது.
மக்கத்து மக்களுக்கும்
யாத்திரீகர்களுக்கும்
பெரும் துன்பம் ஏற்பட்டது.