Wednesday, May 31, 2017

எமது மக்களுக்காக உங்களால் இயன்ற உதவியைச் செய்ய இணைந்து கொள்ள வேண்டுகிறேன்.

இது கொழும்பு மருதானை புகையிரத நிலையத்தின் நுழைவு வாயில். ஏனைய நாட்களைப் போல அல்லாது இன்றைய தினம் காலை நேரம் அதன் தோற்றம் சற்று மாறியிருந்தது.

வாயில் முழுவதும் உணவுப் பொதிகளும், தண்ணீர் போத்தல்களும் நிறைந்திருந்தன. அவை, எமது தேசத்தில் மண்சரிவு மற்றும் வெள்ளப் பாதிப்புக்குள்ளாகி உயிர் பிழைத்திருக்கும் மக்களுக்காக, நாட்டின் பல பாகங்களிலிருந்தும் தொழில் நிமித்தம் கொழும்புக்கு வந்தவர்கள் தந்து சென்றவை.

அன்புடன் வாழ்த்தும் ராஜா வாவுபிள்ளை

நட்பின் இலக்கணம்
இரக்கத்தின் இருப்பிடம்
இன்முகத்தின் இனியவர்
அன்பான குழந்தைக்குணம்
அறிந்ததை பகிரும் பெருந்தன்மை
இளையோரை தூக்கிவிடுவார்
நல்ல மனதுடன் வாழ்த்திடுவார்
நன்மக்கள் நட்பு நன்மைகள் தரும்
அத்தனையும் ஒருங்கே கொண்ட
சகோதரநட்பு Mohamed Ali

நோய்நொடியின்றி இறையருளுடன் மனமகிழ்வுடன்
பல்லாண்டு வாழ ஏகன் இறையோனை வேண்டுகிறேன்.
ஆமீன்.
நட்பில் தொடர நாளும் மட்டற்ற மகிழ்வுடன் நாடுகிறேன்.

ராஜா வாவுபிள்ளை with Mohamed Ali..
வாவுபிள்ளை and Mohamed are celebrating 3 years of friendship on Facebook!



https://www.facebook.com/kanakkan.kanakkan/videos/2004764529747334/

Tuesday, May 30, 2017

பன்றி இறைச்சி தடை ஏன் ?


பன்றி இறைச்சியை உண்பதால், 70 விதமான, சிறிய மற்றும் பெரிய நோய்கள் உண்டாகின்றன என்பது ஒரு அறிவியல் ரீதியான உண்மை.அதில் முக்கிய‌மான சில வ‌கைககளை ம‌ட்டும் இங்கே பார்ப்போம்.

ம‌னித‌ உட‌லில் ஏற்கென‌வே ப‌ல்வ‌கை புழுஇன‌ங்க‌ள் ப‌ல‌ நாட்க‌ளாக‌ விருந்தாளி போல‌ குடியிருந்து வ‌ருகின்ற‌ன என்று ப‌ள்ளி பாட‌ புத்தக‌ங்களிலேயே நாம் ப‌டித்திருக்கிறோம்.சில‌ புழுக்க‌ள் ந‌ம் உட‌ல் செரிமான‌த்திற்கு ப‌ய‌ன்ப‌டுகின்றன‌ என்ப‌தும் நாம‌றிந்த‌ செய்தியே...
"டேனியா சோலிய‌ம்" Taenia solium (pork tapeworm) என்ற‌வொரு புழு, ப‌ன்றி இறைச்சியை உண்ப‌தால் ந‌ம் உண‌வுக்குழ‌லின் அடிபாகத்தில் வாட‌கையின்றி குடியேறி விடுகிறது.

Monday, May 29, 2017

உகாண்டாவின் மண்ணின் மைந்தன். முன்னாள் அதிபர் ஈத் அமீனின் இனத்தை சார்ந்தவர்

எனக்குத் தெரிந்து ....!
குடும்ப நிறுவன நிலைப்பாடு.
எனக்குத் தெரிந்து, நேர்மையுடன் திறமையும் கொண்டு கடினமாக உழைப்பவர்களுக்கு வளர்ச்சியும் உயர்ச்சியும் நிச்சையம் கிடைக்கும்.
ஆனால் அதை தக்கவைத்து முன்செல்ல வேண்டுமானால் அவரால் மட்டுமே முடிவதில்லை.
உற்றார் உறவினர் உறுதுணை கண்டிப்பாக தேவைப்படும்.
இன்றும் எனது தொழில்வழி நட்ப்பில் இருக்கும் ஒருவர் உகாண்டாவின் மண்ணின் மைந்தன். முன்னாள் அதிபர் ஈத் அமீனின் இனத்தை சார்ந்தவர். இப்போது பெரும் செல்வந்தர் தொண்ணூறுகளின் தொடக்கத்தில் நான் அவரை அறியவரும்போது அரசியல் மாற்றங்களில் அடிபட்டு குடும்பமே சிதைந்து சின்னாபின்னமாக நிலையில் இருந்தார்.

இது என் சந்தோஷக் கவிதை./ Abu Haashima

இது என் சந்தோஷக் கவிதை.
*******
விசித்திரமானவர்கள் 
முசல்மான்கள் !
பொழுது விடிந்தால்
சாயா காப்பியிலிருந்து
பொழுது அடைந்தால் பேயம்பழம்வரை 
ஆகாரங்களால் 
வயிற்றை அடைத்தே வாழ்பவர்கள் 
நாங்கள் !
காலை பத்து மணிக்குள்
இடியாப்பமோ
ரொட்டியோ 
முறுகின முறுவலோ 
உள்ளே போகாவிட்டால் 
க்ஷீணம் வந்து விடும் எங்களுக்கு !
மதிய வேளை 
மணக்க மணக்க 
பொரிச்ச மீனும் 
கறிவச்ச மீனும் 
இருந்தால்தான் 
தொண்டையில் இறங்கும் சோறு !
ராத்திரிக்கு 
இருக்கவே இருக்கு 
பானு சிக்கன் புரோட்டாவும் 
மட.டன் சால்னாவும் !
ராத்திரி ஒரு நேரம் 
கொஞ்சம் குறைந்தாலும் 
வயிறு பொறுக்காது 
குப்புறப் படுத்தாலும் 
தூக்கம் வரவே வராது !
வக்கணையாய் 
மூணு நேரம் உண்டாலும்
ஏத்தங்காய் சிப்சும்
மயில்கடை சமோசாவும்
அக்காம்மா கொடுத்துவிட்ட 
ஆட்டுக்கால் கேக்கும் 
தின்று முடிச்சுதான் 
சாயங்காலம் 
சாயா குடிப்போம் !

Saturday, May 27, 2017

எனது புத்தகம் விரைவில் கிடைக்க துஆ செய்யுங்கள்/ MOHAMED RABIK

ஒரு முறை எனது புத்தகம் வெளியிடும் நிகழ்ச்சியில் நான் முமுவதுமாக புறக்கணிக்கப்பட்டேன்.நான் தான் அந்த புத்தகத்தை எமுதினேன் என்பதை பலருக்கும் தெரியாது, வெளியிட்டு நிகழ்ச்சியில் நான்காவது வரிசையில் இருந்தேன். இருந்தாலும் அந்த புத்தகத்தை எமுதியதற்க்கான உயர்வை வல்ல இறைவன் எனக்கு தான் கொடுத்தான். புத்தகம் வெளியிட்டு நிகழ்ச்சிக்கு வந்த என் மாணவர் மிகவும் வருத்தம் அடைந்தான்.அவன் எனக்கு தம்பி மற்றும் நல்ல நண்பர் கூட. அவனுக்காகவே எனது கல்வி நிகழ்ச்சிகளை தனியாக நடத்த ஆரம்பித்தேன் மற்றும் புத்தகங்களை தனியாக வெளியிட்டேன்.
கல்வி நிகழ்ச்சிகள் மற்றும் புகைபடங்களை பதிவு செய்ய ஆரம்பித்தேன்.(வரலாறு ரொம்ப முக்கியம்) .அப்போது இருந்துதான் சமூக வலைதளங்களை என் கல்வி செய்திகளை அனுப்ப கற்றுக் கொண்டேன்.ஒவ்வோரு நிகழ்ச்சிகளையும் பதிவு செய்தேன்.

ரமளானே வருக ....


விண்ணுலக தலைவனின்
இதயமது பொழிகிற
அருள்தனை சுமந்து
மண்ணுலகம் புறப்படும்
ரமளானே வருக ....
ஈமானிய மனங்கள்
புனிதமதை பருக

Sunday, May 21, 2017

அம்மா என் அம்மா / அன்புடன் புகாரி

அம்மா
என் அம்மா

ஓடி விளையாடிக்கொண்டிருந்த
உன்னை
தூக்கிக்கொண்டுவந்து
மணக்கோலத்தில்
உட்கார வைத்தபோது
உனக்கு வயது 13 - 1955

நீ
அக்காவைப்
பெற்றெடுத்தபோது
உனக்கு வயது 16 - 1958

நீ
என்னைப்
பெற்றெடுத்தபோது
உனக்கு வயது 18 - 1960

Friday, May 19, 2017

சிங்கப்பூர் பயணம்./ Mohamed Salahudeen

சிங்கப்பூர் பரப்பளவில் மிகச் சிறிய நாடுதான் ஆனால் உலகின் பல பெரிய நாடுகள் இந்த நாட்டிடமிருந்து கற்றுக் கொள்வதற்கு ஏராளமானத் திட்டங்களை
செயல்படுத்தி வருகிறது.
எங்கே மக்கள் பாதுகாப்பாக உணர்கிறார்களோ அங்கே மக்களின் செயலூக்கமும் திறனும் முன்னேற்றத்தை நோக்கிப் பயணிக்கிறது.
இங்கே மூன்று இன மக்கள், நான்கு பெரும் மதங்களைப் பின்பற்றும் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள், பிணக்குகள் இல்லை.
மத நல்லிணக்கத்தைப் பேணுவதில் அரசு அக்கரையோடுச் செயல்படுகிறது.
மக்களிடமும் அந்த எண்ணம் இருக்கிறது.
நான் பயணித்தக் காரில் காரோட்டி வந்த சீனப் பெண்மணி சொன்ன வார்த்தை இது.
" we are united family la"
நாங்கள் ஒன்றுப்பட்டக் குடும்பம்.
கேட்பதற்குத்தான் எத்துணை மகிழ்ச்சியாய் இருக்கிறது.

Thursday, May 18, 2017

முத்தம்'


Noor Mohamed
முத்தம்'
**********
முத்தம்
மெல்லிய சத்தம்
கேட்குது உலகில் நித்தம்!
அன்னையின் முத்தம்
அன்பைப் பொழியும்
கன்னியின் முத்தம்
காதலைப் பொழியும்
கல்வியில் முத்தம்
அறிவை வளர்க்கும்
கலவியில் முத்தம்
காமத்தைப் பெருக்கும்
மேகங்கள் தம்மோடு முத்தமிட
பேரொலியாய் இடியானது

குதூகலம் ....

இறையளிக்கும் ஆற்றலில் 
மேகங்கள் பாட்டெழுதி
ஆகாயம் இசையமைக்க 
மழையெனும் இன்னிசை 
பொழிவதில் குதூகலம் ....
பிஞ்சு குழந்தைகள்
வெண்மையாய் புன்னகைத்து
நாவினில் கனிந்திடும் 
பஞ்சு மொழிகளை
மொழிவதில் குதூகலம் ....

சொல்ல முடியாதுங்...

பாத்தரம் கழுவறது கூட்டித் தொடைக்கறது சுத்தம்பண்றது எல்லா வேலயும் பாப்பனுங்
ஒன்பது மணிக்கு வந்துரணும்மா
இல்லீங்,பத்து மணிக்கி வந்துருவனுங்.
இல்லம்மா,கம்பனி டைம் ஒன்பது மணிதான்
அந்தாளு படுத்துக் கெடப்பானுங்,புள்ளகள பள்ளிக்கோடமனுப்பீட்டு அந்தாளு கெளம்பனவுன்ன வந்திருவங்
யாரும்மா அந்தாளு
புருசங்காரந்தாங்
ஓ....புருசனா என்ன வேலை பாக்கறாரு ?

✒நலம் நலமறிய ஆவல்✒

✒நலம் நலமறிய ஆவல்✒
................................................
மேற்சொன்ன அவ்வாசகம் எத்தனை பேருக்கு பரீட்சையமானதோ என்னவோ எனக்கு பல ஆண்டுகள் என் வாழ்வில் நிறைந்து நின்ற ஒன்று. நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அதிலும் குறிப்பாக என் தந்தை அவர்களுக்கும் எழுதிய எல்லா கடிதங்களிலும் இந்த வாசகமே பிரதானம்.
இன்று கடிதம் எழுதுவது என்பது உறவுகளிலும் நட்பு வட்டங்களிலும் அற்றுப்போன ஒன்றாக இருக்கலாம் ஆனால் என் பள்ளி கல்லூரி நாட்களில் வெளியூரிலும் வெளிநாட்டிலும் இருப்பவர்கள் ஒருவரையொருவர் தொடர்பு கொள்ள இதுமட்டுமே பிரதான வழி. இன்று காலசக்கரத்தின் சுழற்சியால் கடிதங்கள் எல்லாம் காணாமல் போய்விட்டன. காலம் மாறி காளன் வரும்வரை வரும் எல்லா மாற்றங்களையும் ஆமோதித்து அனுமதித்தே ஆகவேண்டும் என்பது ஏட்டில் எழுதப்படாத நியதி!☺

வாழ்த்துக்கள் ஆயிஷா பேகம் !

முகநூலில் மூழ்கி விடாமல் , இளமையை இழிவான மிருகங்களிடம் இழந்து விடாமல் , தனது தாயை இழந்த நிலையில் , ஏழைத் தந்தைக்கு உதவியாக சைக்கிளில் வியாபாரம் செய்து + 2 தேர்வில் 1101 மதிப்பெண்கள் பெற்ற தங்கை ஆயிஷா பேகம் .... வாழ்த்துக்கள் என்று ஒற்றை வரியில் நகர்ந்து விட முடியவில்லை ......

Wednesday, May 17, 2017

மெட்ரோ இரயில் மற்றும் பேருந்து வசதிகள் சிறப்பாக


Mohamed Salahudeen

சிங்கப்பூரில் மக்களின் போக்குவரத்துக்கான மெட்ரோ இரயில் மற்றும் பேருந்து வசதிகள் சிறப்பாக இருப்பது எல்லோரும் அறிந்ததுதான் ஆனால் அது இத்தனைச் சிறப்பாக இருக்குமென்று நான் நினைக்கவில்லை.
இன்று பேருந்து நிறுத்தத்தில் நின்றுக்கொண்டிருந்தேன், என் அருகே ஒரு வயதான முதியவர் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தார்.

Sunday, May 14, 2017

எனக்குத் தெரிந்து ....! கைக்கு எட்டும் சிகரம் .

எனக்குத் தெரிந்து ....!
கைக்கு எட்டும் சிகரம் .
எனக்குத் தெரிந்து, மக்கள் மத்தியில் பிரபலம் ஆவதும் செய்யும் தொழிலில் சிறப்புகளுடன் உயர்நிலையை அடைவதும் கூடவே பெரும்பணம் சம்பாதிப்பதும் யாரும் படிப்பித்து வருவதில்லை.
மேலும், ஒரே நாளில் உச்சம் தொட்டவர்களும் அல்ல.
அறியாப்பருவத்திலேயே ஆழ்மனதில் விருப்பு விதைக்கப்பட்டு செயலெனும் நீரூற்றி திட்டமிடுதலெனும் பக்குவம் பார்த்து அறுவடைசெய்யும் ஆயிரம் காலத்து பயிரென்றே பார்த்துப் படித்ததில் அறிந்துகொண்டேன்.

ஒரு விநோதத் தாய் விந்தைத் தனயன்…!

ஒரு விநோதத் தாய்
விந்தைத் தனயன்…!
1963ஆம் ஆண்டு காலகட்டமாக இருக்கலாம், உரிமைக்குரல் வார இதழ் காயிதெ மில்லத்தை நிறுவநராகவும் என் தந்தை அ.க. ரிபாயி சாஹிபை ஆசிரியராகவும் கொண்டு உதயமானது. இதுதான் முஸ்லீம் லீக் இயக்கத்தின் அதிகாரப்பூர்வமான தமிழ் வார இதழ்.
நிறுவநருக்கும் எந்தப் பணமும் வாராது, ஆசிரியருக்கும் எந்தச் சம்பளமும் கிடையாது.
எங்கள் தந்தையார் சென்னையிலும் நாங்களெல்லாம் தென்காசியிலும்(நெல்லை) வாழ்ந்துவந்தோம்.
ஒரு முறை எங்கள் தந்தையார் ஒரு வாரம் தென்காசியில் வந்து தங்கினார்.
சென்னைக்கு மீண்டும் செல்கிறார். எனக்கும், என் சகோதரர்களுக்கும் ஆளுக்கு ஒரு ரூபாய் கொடுத்தார்.

நீ ஹீரோ ஆக வேண்டுமா

நீ ஹீரோ
ஆக வேண்டுமா

அது
ரொம்ப சுலபம்

ஒரு
நல்லவனைத் தேடிப்பிடி
அவன்
வில்லன் வில்லன் என்று
பொய்கள் புனைந்துகொண்டே
இரு

கட்டுக்கதைகளால்
அவனைச் சுற்றிச் சுற்றி
இறுக்கிக் கட்டு

முதலில்
மக்கள்
நம்பமாட்டார்கள்தான்

சிந்தனையாடுது ...

மழையினிலே மயிலாடும் 
பாட்டினிலே குயிலாடும் 
அணலினிலே வெயிலாடும்
கனவினிலே துயிலாடும் ....
இருட்டினிலே திகிலாடும் 
காற்றினிலே துகிலாடும் 
வானிலே முகிலாடும் ....
காதலிலே மோகமாடும் 

Wednesday, May 10, 2017

மனிதர்கள் வசிக்க உகந்த இடம் பூமியா???


டீக்கடை என்னும் முகநூல் குழுமம் நடத்திய அறிவியல் கட்டுரைப் போட்டிகளில் பெண்கள் எழுதிய கட்டுரை பிரத்யேக அனுமதியுடன் உங்கள் இஸ்லாமிய பெண்மணியில் வெளியிடப்படுகிறது. அனைவரும் படித்து உங்கள் அறிவியல் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.

மனிதர்கள் வசிக்க உகந்த இடம் பூமியா??? - எழுதியவர். Shakila Kadher
"மனிதர்களே நிச்சயமாக நாம் உங்களை பூமியில் வசிக்கச் செய்தோம். அதில் உங்களுக்கு வாழ்க்கை வசதிகளையும் ஆக்கித் தந்தோம்.எனினும் நீங்கள் மிகக் குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள். (திருக்குர்ஆன்-7:10) என்பது இறைவாக்கு.

Tuesday, May 9, 2017

இயல்பும் , இழுப்பும் , இயலாமையும் !...

இயல்பும் , இழுப்பும் , இயலாமையும் !...

விவாதத்தை
எதிர் கொள்பவர்கள்
இயல்பாகவே
எழுதுகிறார்கள் !

வீண் விவாதத்தை
செய்பவர்கள்
ஒரு வெறியோட
குதறுகிறார்கள் !

காற்றுக்கு
உருவம்
உண்டென்கிறான்

குயிலுக்கும்
தோகை
உண்டென்கிறான்

படச்சவன் நமக்கு விதிச்சதை சந்தோசமா ஏத்துகிட்டு நாம வாழணும்


அபு ஹ்ஷீமா வாவர்
இந்த முகநூல்ல
எவ்வளவோ எழுதி இருக்கேன்.
எழுதிகிட்டும் இருக்கேன்.
எழுதுவது எல்லாமே ஞாபகத்தில் இருப்பதில்லை.
சில சமயங்களில் எப்போதோ எழுதியதைக்
காணக் கிடைக்கும்போது
எனக்கே ஒரு பிரமிப்பு ஏற்படுவதை
தவிர்க்க முடியவில்லை.
அப்படிப்பட்ட பதிவுகளில் இதுவும் ஒன்று.
#மரிச்சாலும்_அழமாட்டாயா_உம்மா ...?
நூறு வயசுக்கு மேலிருக்கும் உம்மாவுக்கு...!
ஆனாலும் ..

Monday, May 8, 2017

சமூக ஒற்றுமைக்காக ஏங்கும் இதயங்கள்...

சமூக ஒற்றுமைக்காக ஏங்கும் இதயங்கள்...

இஸ்லாமிய சமுதாயத்தின் வரலாற்றைப் புரட்டிப்பார்க்கும் போது, அல்லாஹ்வின் இறுதி தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்தோடு ஒன்றுபட்ட, ஒரே சமுதாயம் என்ற கட்டமைப்பு முற்றுப் புள்ளி பெற்றுவிட்டது. நபிகளார் இந்த உலகைப் பிரிந்த நேரத்திலிருந்தே பிரிவினை சக்திகள் சமூகத்திற்குள் ஊடுருவி பிளவு ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த சமூகம் ஒன்று பட்டுவிடக் கூடாது என்பதில் யூதர்களும், கிருத்தவர்களும் குறியாக இருந்தனர். அவர்கள் எவ்வாறு வேதம் அருளப்பட்டபின்னரும் தங்களுக்குள் வேற்றுமையை ஏற்படுத்தி சிதறிப்போனார்களோ அதைப்போன்றே மற்ற சமூகங்களும் ஆகிவிட வேண்டும் என்பதுதான் அவர்களுடைய திட்டம்.

சுகப்பிரசவம் சுலபமே!

பிரசவம் என்பது அற்புதம். வலி நிறைந்த ஒரு பயணம் இது. ஆனாலும், வலிகளைத் தாங்கிக்கொண்டு பெற்றெடுத்த குழந்தையின் முகத்தைப் பார்த்தவுடன் பட்ட வேதனை எல்லாம் தாயானவளுக்குப் பறந்தோடிவிடும்.

உதிரமும் பனிக்குட நீருமாக அந்தச் சிசு வெளியே வருகையில், உடல் வலி மறந்து உலகத்தின் அதிசிறந்த படைப்பாளியாக ஆகிவிட்ட நெகிழ்வில் பெற்ற வயிறு சிலிர்க்கும். ஆனால், இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்குப் பிரசவங்கள் அறுவைச் சிகிச்சை மூலமே நடைபெறுகின்றன. வலியையும் வாகை சூடிய நெகிழ்வையும் ஒருசேர உணர இன்றைய காலகட்டத்தில் எத்தனை தாய்களால் முடிகிறது?

Sunday, May 7, 2017

S.E.A.MOHAMED ALI JINNAH

S.E.A.Mohamed Ali (Jinnah)B.A.,B.L., (nidurali) Nidur. Indeed all the praises are due to Allah, we praise him and we seek his assistance and forgiveness, and we seek refuge in Allah. Personal Links * Screenshotநீடூர் சீசன்ஸ் * Screenshotseasonsali * Screenshotseasonsnidur - சீசன்ஸ் நீடூர் * Screenshotseasonsali.wordpress.com * Screenshotnidurseason * ScreenshotSeasons Ali Video * Screenshotnidurseasons.ucoz.com * Screenshotnidurali * ScreenshotNidurali * Screenshotseasonsnidursite * ScreenshotSEASONS-NIDUR * Screenshot nidurseasons * Screenshotniduraliseasons. # Blogroll * NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ் * Nidurali * nidurseasons.com * nidurseasons.ucoz.com * Seasons Ali Video * seasonsali * Seasonsali Blogger * seasonsnidur -- சீசன்ஸ் நீடூர் * SEASONSNIDUR.wordpress.com/category/english-article/ * seasonsnidursite S.E.A. முஹம்மது அலி ஜின்னா Jazakkallahu Hairan நன்றிS.E.A.MOHAMED ALI JINNAH

Friday, May 5, 2017

தீக்குச்சியாய் இருப்பது எளிது

தீக்குச்சியாய் இருப்பது
எளிது
தீயணைப்புப் படையாய்
இருப்பதோ கடினம்

தீக்குச்சி தன் தலையில்
கொல்லி நெருப்பின்
கனத்தோடு
இருப்பது சுலபம்தான்

வெட்டி எண்ணங்களை வெட்டுவது எப்படி

Thursday, May 4, 2017

ஆக, எங்கேயும் எல்லாமும் அப்படித்தான் இருக்கிறது போலும்.


Raheemullah Mohamed Vavar 
ஆக, எங்கேயும் எல்லாமும் அப்படித்தான் இருக்கிறது போலும். ஓரளவுக்கு எதிர்பார்த்ததுதான் என்றாலும் இவ்வளவு தள்ளுமுள்ளு ஏற்படும் என்று நினைக்கவேயில்லை. அவர்களைப் போன்றவர்கள் அன்றிலிருந்து இன்றுவரை எவ்வித மாற்றமுமின்றி அப்படியேதான் தங்கள் தீண்டாமை நிலைப்பாட்டை பேணிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில்….

மாமியாரும்_மருமகளும்...!


மாமியார் தன் மருமகளை எவ்வாறெல்லாம் மனவருத்தத்திற்கும், உளைச்சலுக்கும் ஆளாக்குகிறார் என்பதற்கான சற்று விரிவான காரணங்களை பார்ப்போம்:
• மருமகள் அந்தியில் மல்லிகை சூடி அதனால் அதிகாலை தலை குளித்தல் கூடிப்போனால் ஆகாமல் போகும் சில மாமியாருக்கு.
• மகனுக்கு மருமகளுக்கும் ஏதாவது ஒரு கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட்டாகி அன்யோன்யம் கூடினால் சில மாமியார்கள் கேட்கும் அறிவார்ந்த கேள்வி யாதெனின் 'எதைக்காட்டி மயக்கினாய் என் மகனை'...?
• மருமகள் ஆடை மாற்றி அலங்காரம் செய்தாலும் ஆகாது என பேசும் சில மாமியாரும் உண்டு்

Wednesday, May 3, 2017

துபாயில் தலப்பாக்கட்டு பிரியாணி

தலப்பாக்கட்டு பிரியாணி இன்று தான் முதல் முறையாக சாப்பிட்டேன் . துபாயில் மற்ற செட்டிநாடு உணவகங்களுக்கு வியாபாரம் இவர்களால் சிறிது குறைந்துள்ளது.
இந்த பிரியாணி திருச்சி தக்னி வீட்டு பிரியாணியை நினைவுபடுத்தியது. இங்கே பாஸ்மதி அரிசிக்கே அனைவரிடமும் வரவேற்பு இருக்கும் ஆயினும் மலையாளிகளையும் பார்க்க முடிந்தது. சாப்பிட்டு முடித்தவுடன் கையை முகர்ந்து பார்த்தால் வாசனை பெரிதாக இல்லை.

Monday, May 1, 2017

திறக்கப்படாத ஒரு கடையின் தூசி படிந்த திண்ணை

திறக்கப்படாத
ஒரு கடையின்
தூசி படிந்த திண்ணை
எனக்குத் தரும்
தனிமை சுகம்
பங்களாவின்
குளிரூட்டப்பட்ட உன் அறைகளில்
உனக்குக் கிடைப்பதில்லை என்பதை
கோபம் வழியும்
உன் கண்களின் வழியே
நான் அறிவேன்