Monday, October 31, 2011

கைப்பேசிகள்(செல்போன் )கல்லூரி மாணவர்கள் வாழ்க்கையில்...விளக்கப்படம் பாருங்கள்

கைப்பேசிகள்(செல்போன் )கல்லூரி மாணவர்கள் வாழ்க்கையில் விளையாடும் விதம் எப்படி!
வகுப்பில் கைப்பேசிகள் கொண்டு வரவும் அதனைப் பயன்படுத்தவும்  கூடாது என்பது  கல்லூரியில்ஆணை இருந்தும் சில மாணவர்கள் வகுப்பில்  கைப்பேசி உபயோகப்படுத்தியதால் கல்லூரி அவர்களை இடைநீக்கம் செய்துள்ள செய்திகள் வந்துக் கொண்டே உள்ளன .கல்லூரி மாணவர்கள் எப்பொழுதும் குறுஞ்செய்திகள் அனுப்புவதும்,  படிப்பதும் போன்று  தினசரி பல  மணி  நேரம் செலவிடுகிறார்கள் என்ற கருத்து  பரவலாக இருப்பதாக சொல்கின்றார்கள். செல்போன் கல்லூரிகளில் பயன்படுத்தவும்  கூடாது என்ற அறிவிப்பின் மூலம் பெற்றோர்கள் மகிழ்ச்சி கொள்வதாகவும்
கூறுகிறார்கள். 
This infographic highlights the use of cellphones amongst college students and just how the advanced technology has become part of them as much as anything else.

Saturday, October 29, 2011

ஊர் பெருமை…!

டிசம்பர் 2010 முஸ்லிம் முரசு
சமீபத்தில் ஒருநாள் தொலைக்காட்சி இரவுக் காட்சியில் ஒரு ஊரின் பெருமையை வழக்கம் போலவே பேசியது அச்சேனல். எந்த ஊருக்குச் சென்றாலும் அந்த ஊரைப் பெருமைப்படுத்தி பேசுவது அதன் கொள்கை. அப்படிப் பேசிய ஒரு ஊர் வரலாற்றில் அதன் நிறைகுறைகள் அலசப்படாமல் ஒரு பக்கப் பார்வையோடு காட்சிகள் ஓடியதை காண நேர்ந்தது. டி.விக்கு ஊதுகுழலாக சிலர் வந்து அதிகப்படியாக தம்மூர் பெருமைகளை அளந்தனர்.
பெருமை பேசியோரிடம் தமிழக மக்கள் முன்வைக்கும் சில கருத்துக்கள். ‘‘உலகத்திலேயே தங்கள் ஊர் சிறந்த ஊர்’’ என்கிறீர்கள். மகிழ்ச்சி. அவ்வூரை விட்டு எதற்காகவும் வெளியேறாதீர்கள்.

கல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்? இல்லறத்தில் இணைந்தால் இனிமையாக வாழலாம்!

கல்யாணமென்றால் பயப்படும் ஆண்களே, இல்லறத்தில் இணைந்தால் இனிமையாக வாழலாம்!

ஏப்பா தம்பி கல்யாணம் செய்து கொள்கிறாயா என்று ஆண்களிடம் கேட்டால், பெரும்பாலானவர்கள் ஐயோ, ஆளவிடுங்கன்னு ஓடுவது வழக்கமாகி வருகிறது. அப்படி அவங்க தலைதெறிக்க ஓடுற அளவு்ககு கல்யாணத்துல என்ன இருக்கிறது என்று பார்ப்போம்.
கசப்பான அனுபவங்கள்: ஏற்கனவே திருமணம் ஆகி அது பிரிவில் முடிந்திருந்தால் மறுபடியும் திருமணம் செய்துகொள்ள தயங்குவார்கள். காதல் தோல்வி ஏற்பட்டிருந்தால் ஆமா, இனி என்னத்த கல்யாணம் செய்ய என்று ஆண்கள் விரக்தி அடைவார்கள்.
சுதந்திரம்:  திருமணம் ஆகாத ஆண்கள் நினைத்தபடி ஜாலியாக இருக்கலாம். நினைக்கும் போதெல்லாம் நண்பர்களுடன் ஊர் சுற்றலாம். திருமணம் என்றாலே கால் கட்டு என்று நினைக்கிறார்கள். என்ன எப்ப பார்த்தாலும் நண்பர்கள், நண்பர்கள்னு ஓடுறீங்க, உங்களுக்கு நான் முக்கியமா, இல்லை உங்கள் நண்பர்கள் முக்கியமா என்று மனைவி கேட்பாள் அல்லவா. அதுக்கு தான் பயம்.

Thursday, October 27, 2011

நீங்கள் நீங்களாகவே இருங்கள்!

 உங்களுக்குள் உள்ள படைப்பாற்றலை  நீங்கள் கண்டுபிடித்ததாக வேண்டும் உங்களது ஆய்வுகளையும் வளர்ந்துக்  கொண்டு இடர்பாடுகளை  உடைத்து, தவறுகளை திருத்தி , சந்தோஷமாக வாழ சக்தி வாய்ந்த மன ஆற்றலை நீங்கள் பெற முயற்சிக் கொள்ளவும்

உணர்ச்சியும் உணர்வு
ம் உள்மனதில் முடக்கப் படாமல் வார்த்தைகளால் பயன்படுத்தி உன்னிடம் ஒளிந்திருக்கும் இறைவன் கொடுத்த ஆற்றலை ஒளி விடச் செய்தில் ஒரு  உந்து சக்தியினை நீ பெறுவாய் 

ஆழ் மனதில் இது  மிகவும்  நினைவுகளில் செயல்படுகிறது. 
உங்கள் வார்த்தைகள் மிகவும் சக்தி கொடுக்க ஆற்றல் மற்றும் பேரார்வம், மேலும் உந்தப்பட்டு வந்த வார்த்தைகள் மிகவும் சக்தி வாய்ந்தது . 'நம்பமுடியாத'  'அற்புதம்',  'ஆர்வமிக்க' 'உணர்ச்சி', 'அன்பாக' போன்ற வார்த்தைகளை மனதில் பயன்படுத்தும் போது   அமைதியாக, வேகமாக மற்றும் மகிழ்வாக நம்மால் இருக்க முடியும்
 
  புதிய எண்ணங்கள் எதிர்கால நம்பிக்கை மற்றும் உற்சாகத்தை ஒரு உணர்வை வழங்க வேண்டும். நமது    நடவடிக்கை ம்மை  ஊக்குவிக்கவும்  வேண்டும். அது உந்துதல் சக்தியாக மாற வேண்டும். சரியான  நினைவு மனதில் பயன்படுத்தவும் வார்த்தைகள்  கற்பனை வளம் தந்து இதயத்திற்கு இனிமை தர வேண்டும் .

நகைச்சுவை எண்ணங்கள் உருவாகும்போது கற்பனை ஊற்று பெறுகும்.
புன்னகை உருவாக்கும். ஒளி தந்து வெளிச்சம் தரும் வார்த்தைகள் சிரிக்க வைக்க வேண்டும்.
   முடிந்தவரை உறுதிப்படுத்திய முழு செயல்முறை வைத்திருக்கவும். .


நான் ஒரு அழகான புதிய வீட்டிற்கு வருகிறேன்.
என் புதிய வீட்டிற்கு பல ஜன்னல்கள்  உள்ளது.
என் சமையலறை பல நவீன உபகரணங்கள், கொண்டிருக்கிறது.
தேவையான  படுக்கையறைகள் கொண்டிருக்கிறோம் - குடும்பம் மற்றும் நண்பர்கள் அறை நிறைய உள்ளனர்
  அழகான மரங்கள் மற்றும் பூ செடிகள் தோட்டத்தில் மிகவும் நிறைந்து காண மகிழ்வாக உள்ளது

பரபரப்பின்றி வாழ்கின்றேன் .  இறைவன் கொடுத்த ஆத்ம திருப்தி என்றும் என் மனதில் நிறைந்துள்ளது ஆண்டவன் மிகவும் கருணையுள்ளவன் . நாம்
நம்மைப் பற்றி எதுவும் சொல்ல வேண்டும் என்றால், நாம் நமது முன்னோர்களின் ஆற்றல் பற்றி பேசுவதை தவிர்க்க வேண்டும். நீங்கள் சம்பாதித்து அதனை அனுபவியுங்கள் ஆனால் மூதாதையர்கள் பண்புகள் மற்றும் அவர்கள் விட்டுச் சென்ற சொத்துப்  பற்றி யோசிக்க கூடாது அது உங்களை செயல் அற்றவர் ஆக்கிவிடும்
  உங்களைப் பற்றி சொல்ல ஒன்றுமில்லை என்றால் உங்கள் மூதாதையர்களைப்பற்றி மற்றும் பரம்பரைகளைப் பற்றி பேச முனைந்து விடுவீர்கள் .
நீங்கள் நீங்களாகவே இருங்கள் . உங்களுக்கென்று ஒரு முத்திரை பதித்து விடுங்கள் . இறைவன் உங்களை விளையாட்டுக்கு படைக்கவில்லை. ஒரு காரணத்திற்காகவே நீங்கள் படைக்கப் பட்டுள்ளீர்கள் . 'உனக்கு கொடுத்த வழங்கிய அருளை முறையாக பயன்படுத்தி வாழ்ந்தாயா' என இறைவன் கேட்பான் அப்பொழுது 'இறைவா எனக்கு உன்னால் அருளப்பட்ட  அருளினை முறையாக  பயன்படுத்தினேன்'  என்பது நம் பதிலாக இருக்க வேண்டும் . அதற்கு இறைவன் அருள பிரார்த்திப்போம்.

தாய்லாந்து வெள்ளம் நெருக்கடி மோசமாகிறது


 தாய்லாந்து வெள்ளம் நெருக்கடி மிகவும் மோசமாகிறது. வெள்ளம் நீர் மூன்று பக்கங்களிலும் இருந்து பாங்காக் நகரத்தை நோக்கி ஓடுவதால்  பாங்காக்கில் அழிவை ஏற்படுத்துகின்றன. தாய்லாந்தின் மிக மோசமான வெள்ளப்பெருக்கு ஆறு வாரங்கள் வரை நீடிக்கும் என நம்பப் படுகின்றது . தாய் மக்கள் வெள்ளம் பரவியதன்  காரணத்தினால்  பாங்காக் விட்டு தப்பிக்க முயல்கின்றனர் தாழ்வான பகுதியில் குடுபத்துடன் வசிக்கும் இந்திய மக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். 

Please clik here to read more உங்க வீட்டு வெள்ளம், எங்க வீட்டு வெள்ளம் அல்ல இது!

 

Tuesday, October 25, 2011

கடாஃபி செய்த குற்றமென்ன?

லிபியாவின் அதிபர் கர்ணல் கடாஃபி செய்த குற்றமென்ன? !!  
   

  கர்ணல் கடாஃபி கொல்லப்பட்ட விதம் தொடர்பில் முழுமையான விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். 
   கச்சா எண்ணெய் நிரம்பி வழியும் இந்த வடக்கு ஆப்பிரிக்க நாட்டின் அதிபராக 40 ஆண்டுகாலம் ஆட்சி செய்து வந்தார் கடாஃபி.அமெரிக்காவுடன் அடிபணிந்து போகாதது ஒரு பெரிய குற்றம். தான் அரபு மக்களுடன் சேர்ந்தவனல்ல தான் ஒரு ஆப்ரிகன் என பெருமையாக சொன்னது மகா பெரிய குற்றம். 
"I am an international leader, the dean of the Arab rulers, the king of kings of Africa and the imam of Muslims, and my international status does not allow me to descend to a lower level." - Remarks after his microphone was cut for denouncing King Abdullah of Saudi Arabia during a meeting of the Arab League in 2009.
"[Abraham] Lincoln was a man who created himself from nothing without any help from outside or other people. I followed his struggles. I see certain similarities between him and me." - Quoted in The Pittsburgh Press in 1986.
Source
When the African Union was formed in 1999, loosely modeled on the European Union though essentially as toothless as its predecessor, Qaddafi provided a seemingly endless bankroll for the organization, which in turn treated him as a visionary godfather.
Sourceகூடாரத்தில் வாழ்ந்தது அரசர்களை, ஆட்சியாளர்களை அவமானப் படுத்திய குற்றம். சதாம்குசேனுக்கு ஆதரவு தந்ததும் சவூதி  மன்னருக்கு வருத்தம் வருமாறு பேசியது சகித்துக் கொள்ள முடியாத தவறு .   சர்வதேசப் போர் விதி முறைகளை மதிக்காத போர்க்குற்றவாளியாக அமெரிக்காவின் பார்வைக்கு தெரியும்படி நடந்தது மிகப் பெரிய தவறு .ஆப்பிரிக்க நாடான லிபியாவின் சர்வாதிகாரியாக காலமெல்லாம் ஓட்டிவிடலாம் என்ற நினைவு. உலகப் பாடம் கொடுத்து வரும் படிப்பினை அறியாமல் வீர மரணம் அடைவேன் என்று இறுதியில்  கேவலமான நிலை உண்டாகும் படியான நிலையில் மரணத்தினை தழுவியது வேதனையானது.
 

  கடாபியை கொன்ற சம்பவம் கண்டிக்கத்தக்கது. அவரை வேண்டுமென்றே திட்டமிட்டு அமெரிக்கா தலைமையின நாடுகள் கொன்று விட்டன என்று வெனிசூலா அதிபர் ஹுயூகோ சாவெஸ் கூறியுள்ளார். 

  இன்று லிபியா விடயத்தில் காட்டிய அவசரத்தினை அன்று தமிழர் விடயத்தில் ஐக்கிய நாடுகள் வெளிக்காட்டவில்லை என ஐநா மனிதஉரிமைகள் கவுன்சிலின் கூட்டத் தொடரில் பங்கேற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதி சிறிசஜீதா சிவராஜா குற்றஞ்சாட்டியுள்ளார்.
Picture Source  Raw video on capture and death of Gaddafi (Warning Graphic):

இதோ இதுதான் கடாபியின் டெத் சர்ட்டிபிக்கேட்! இறந்த காரணத்தை பாருங்கள்!! |

Monday, October 24, 2011

பள்ளிகள் இண்டர்நெட் தளங்களை வலை ஆட்சி செய்கின்றன

இண்டர்நெட் பயன்படுத்தி, சிறந்த கல்வி தளங்கள் ' பல்கலைக்கழக சமூக ஊடகம்   முழு ஆய்வு எல்லாவற்றையும் காட்டுகின்றன.
முழு ஆய்வு  பார்த்து தேவையானதை  எடுக்க உங்களுக்கு உதவ ...


Schools That Rule the Web
Created by: Best Education Sites
by mail from  Tony Shin

உலகத்தில் முஸ்லிம்கள் ( இஸ்லாம் ) இருக்கும் நாடுகள் - வரைபடங்கள்



உலகத்தில் முஸ்லிம்கள்  ( இஸ்லாம் ) இருக்கும் நாடுகள் - வரைபடங்கள் 
முஸ்லீம் உலகம் 750

போராட்டங்கள்(குருசேட்ஸ்) The Crusades 1096 to 1289

ஒட்டோமான் பேரரசு: 1350 to 1918

மேற்கு ஐரோப்பா:: முஸ்லீம் மக்கள் தொகை தோராயமாக 2000
 



 
ஆப்பிரிக்கா, ஆசியா, மத்திய கிழக்கு முஸ்லீம் நாடுகள், தென் கிழக்கு ஆசியா முஸ்லீம் மக்கள் தொகை 2000


ஐக்கிய அமெரிக்கா முஸ்லீம் மக்கள் தொகை 2000
 

தென் அமெரிக்கா முஸ்லீம் மக்கள் தொகை 2000
 Source : http://www.islamproject.org
------------------------------------------------------------------------------------------------------------------
இராக், ஆப்கானிஸ்தான், கொசோவோ மற்றும் அல்பேனியா, பொஸ்னியா, துருக்கி, சவூதி அரேபியா, ஏமன், சிரியா, லிபியா, சூடான், சொமாலியா, எத்தியோப்பியா, ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஸ்பெயின், ஆஸ்திரியா, பாக்கிஸ்தான், வங்காளம், வரம்பு முஸ்லிம்கள் தாய்லாந்து, நேபால், இந்தியா, சீனா, ரஷ்யா, பல்கேரியா, பஹ்ரைன், ஓமன், எகிப்து, அல்ஜீரியா, மொராக்கோ, டுனிசியா, இந்தோனேஷியா, லெபனான், ஓமன், துபாய், மலேஷியா மற்றும் மேலும் ..பல நாடுகளில்  வாழும் முஸ்லிம்கள். 

உலக ஒவ்வொரு நாடு எங்கும் முஸ்லிம்கள் உள்ளனர் , ஒவ்வொரு இனம், நிறம், பிறப்பிடம், மொழி உலகில் உள்ள அனைவருக்கும் இது சமர்பிக்க ...

உருவாக்குவதில் இருமை (ஜோடி) - Duality in Creation

குர்ஆன் 36:36. பூமி முளைப்பிக்கின்ற (புற்பூண்டுகள்) எல்லாவற்றையும், (மனிதர்களாகிய) இவர்களையும், இவர்கள் அறியாதவற்றையும் ஜோடி ஜோடியாகப் படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன்.

குர்ஆன் 31:10. அவன் வானங்களைத் தூண்களின்றியே படைத்துள்ளான். அதனை நீங்களும் பார்க்கிறீர்கள். உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக அவன் அதன் மேல் மலைகளை உறுதியாக நிறுத்தினான்; மேலும் அதன் மீது எல்லா விதமான பிராணிகளையும் அவன் பரவவிட்டிருக்கின்றான்; இன்னும் நாமே வானத்திலிருந்து மழையை பொழியச் செய்து அதில் சங்கையான, வகை வகையான (மரம், செடி, கொடி ஆகியவற்றை) ஜோடி ஜோடியாக முளைப்பித்திருக்கின்றோம்.

குர்ஆன் 20:53. “(அவனே) உங்களுக்காக இப்பூமியை ஒரு விரிப்பாக அமைத்தான்; இன்னும் அதில் உங்களுக்குப் பாதைகளை இலேசாக்கினான்; மேலும் வானத்திலிருந்து நீரையும் இறக்கினான்; இம் மழை நீரைக் கொண்டு நாம் பல விதமான தாவரவர்க்கங்களை ஜோடி ஜோடியாக வெளிப்படுத்துகிறோம்” (என்று இறைவன் கூறுகிறான்).

மேலும், அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து, அதில் உறுதியான மலைகளையும், ஆறுகளையும் உண்டாக்கினான். இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் இரண்டு இரண்டாக ஜோடிகளை உண்டாக்கினான். அவனே இரவைப் பகலால் மூடுகிறான் - நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. அல்குர்ஆன் 13:3

36:36. பூமி முளைப்பிக்கின்ற (புற்பூண்டுகள்) எல்லாவற்றையும், (மனிதர்களாகிய) இவர்களையும், இவர்கள் அறியாதவற்றையும் ஜோடி ஜோடியாகப் படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன்.

51:49. நீங்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறுவதற்காக ஒவ்வொரு பொருளையும் ஜோடி ஜோடியாக நாம் படைத்தோம்.

36:24. “(எனவே, நான் அவன் ஒருவனையே வணங்காவிட்டால்) அப்போது நான் நிச்சயமாக, வெளிப்படையான வழிகேட்டில் இருப்பேன்.

Saturday, October 22, 2011

நைஜீரியா

                                                  அபுஜா தேசிய பள்ளிவாசல்
நைஜீரியாவின் தலைநகரம் அபுஜா
பெரிய நகரம் லாகோஸ் .இஸ்லாமும் ,கிறிஸ்துவமும் முக்கிய மதம் மற்றும் பல உள்நாட்டு மத வழிபாடுகளும் உண்டு  
பேசும் மொழி  English (official), Hausa, Igbo, Yoruba, Fulani, Kanuri, others.
கல்வி --ஆண்  32%, பெண்  27%. படித்தவர் --39%-51%.
உடல்நலம் Life expectancy (2010)--47 years.

அழகான பறவைகள் பல விதம்! காக்காயில் சில விதம்!


  நாம் நினைப்பது காக்கை என்றால் கருப்பாக மட்டும் இருக்குமென்று .வெள்ளை  காக்கை பல நாடுகளில்  உண்டு. நம் நாட்டில்அபூர்வமாக, சில காக்கைகள் வெள்ளை நிறத்தில் காணப்படுகின்றன.  .காம்பியாவில் கருப்பு   காக்கைகள் கிடையாது .எல்லாம் வெள்ளை காக்கைகள்தான். ஆனால் அந்த நாட்டு மக்கள் கருப்பு (நிறம் உடையவர்கள்) இனத்தவர்.
முன்பெல்லாம் காக்கை கரைந்தால் விருந்தாளிகள் வருவதாக நம்பிகையுடன் சொல்வார்கள் .இப்பொழுது  காக்கை மறந்து காக்கா பிடித்தால்தான் காரியம் ஆகும் என்ற நம்பிகையுடன் செயல்படுகிறார்கள்.


பறவைகள் பல நாட்களுக்கு தேவையான உணவுகளை சேர்த்து வைப்பதில்லை. அன்றாடம்   அதற்கு தேவையான உணவுகளை அது நாடி செல்கின்றது. அதற்கு தேவையான உணவும் அதற்கு கிடைத்து விடுகின்றது . மனிதர்களுக்கு மட்டும் அந்த நம்பிக்கை கிடையாது . வீணே விரயம் செய்கிறான். தேவைக்கு அதிகமாக சேர்க்க  முயல்கின்றான் அதற்காக  பலவித விதமான வழிகளையும் கையாளுகின்றான். அதில் ஒரு வகை காக்கா பிடிக்கும் முறை. தேர்தல் வந்தது  வாக்கு வாங்க எத்தனை  வகை குழைவுகளும் காக்கா பிடிக்கும் விதமும் கண்டோம்.
காக்கா உணவும் கிடைப்பதாக  படங்களில் வேடிக்கையாக சொல்ல அது உண்மையாகி விடுமோ? என்ற நிலை!





காக்கை சிறகினிலே நந்தலாலா - நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா


பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா - நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா


கேட்கும் ஒளியில் எல்லாம் நந்தலாலா - நின்றன்
கீதம் இசைக்குதடா நந்தலாலா


தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா - நின்னை
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா



--பாரதியார்

உங்கள் ஊர் (தமிழக )உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் பார்க்க ...

உங்கள் ஊர் (தமிழக )உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் பார்க்க ...

 

தயவு செய்து இங்கு கிளிக் செய்யுங்கள் 

Please Click Here to see Election Commision’s Declaration 

Thursday, October 20, 2011

கதிரியக்கத்தினால் உடலில் ஏற்படும் பாதிப்புகளை இயல்பாகவே நீக்குவது எப்படி!

           கதிரியக்கத்தினால் (Radiation) உடலில் ஏற்படும் பாதிப்புகள்
ஸ்கேன், எக்ஸ் கதிர்கள், செல் தொலைபேசிகள், நுணுக்கலைகள், தோல் பதனிடுதல் படுக்கைகள், விமானம், விமான பயணத்தினால் மற்றும் முழு உடல் ஸ்கேனர்கள் இவைகளால்  கதிர்வீச்சு தீங்கு நம் உடலில் பாதிப்பு வெளிப்படுத்த வாய்புகள் உண்டு,  கதிர்வீச்சு வெளிப்பாட்டினால் பல பாதிப்புகள் ஏற்படும்.  சோர்வு,பசியின்மை மற்றும்  குறிப்பிடத்தக்க சுகாதார ஆபத்து, பலவீனமடைந்த நோய் எதிர்ப்பு சக்தியும் , கட்டிகள், விவரிக்கமுடியாத நோய்கள், இரத்த சோகை, புற்றுநோய் மற்றும் பிறந்த குழந்தைகளுக்கு பிறப்பு குறைபாடுகள்  மற்றும் பல நோய்கள் நம்மை வந்தடைய வாய்புகள் அதிகம்.நாம் எல்லோருமே ஏதாவது ஒரு வழியில் கதிரியக்கத்தின்  அறிந்தோ, அறியாமலோ மாட்டிக் கொண்டிருக்கிறோம்!
கதிரியக்கத்தைக் கண்களால் காண முடியாது! மூக்கால் நுகர முடியாது! உடம்புத் தோலால் உணரவும் முடியாது! அறிந்தோ, அறியாமலோ உடம்புக்குள் நுழைந்து, அது கரையான் போல் உறுப்புகளைச் சிதைக்கும் போதுதான், அதன் தாக்குதலைப் புரிந்து கொள்ள முடியும்!   
கதிர்வீச்சு இயற்கை முறைகள் மூலம் திறம்பட மற்றும் முற்றிலும் உங்கள் உடலில் இருந்து நீக்க முடியும்.
எப்படி என்பதனை அறிய இந்த வீடியோ பார்க்கவும்.

 

ஆயிரம் ஆனாலும் மாயவரம் ஆகுமா! இது ஒரு கேள்விக் குறியா?

"ஆயிரம் ஆனாலும் மாயவரம் ஆகுமா" என்பது பழமொழி . மாயவரம் மறந்து மறைந்து போக முயலும் நிலை.
"மயூரபுரி"  மாயவரமாகி, மாயவரம் மாயூரமாக மாறி தற்போது மயிலாடுதுறையாக வந்து அரசியல்வாதிகளின் அலட்சியப் போக்கினால் முன்னேற்ற நடைபோட முடியாமல் தடுமாறுகின்றது .
   மயில்கள் ஆடியதால் மயிலாடுதுறை என்று பெயர் பெற்றது என்றும் சொல்வார்கள். தமிழின் முதல் புதினமான பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதிய வேதநாயகம் பிள்ளை அவர்கள் மாயவரம் மாவட்ட முனிசீப்பாக 13 ஆண்டுகள் பணி செய்தார்கள். திரு .கிட்டப்பாவின் முயற்சியால் மாயூரம் என்ற பெயர் மயிலாடுதுறை என்று மாற்றப்பட்டது. 
 
  தஞ்சை மாவட்டத்தில்  மயிலாடுதுறை (Mayiladuthurai) புகைவண்டி நிலையம் மிகவும் பெரியதாகவும் அகாகவும் அமைக்கப்பட்ட அருமையான பல புகைவண்டிகள்  சந்திக்கும் நிலையம்  
   
   தஞ்சை மாவட்டம் நிர்வாக வசதிக்காக பிரிக்கும் பொழுதெல்லாம் மயிலாடுதுறை ஒரு தனி மாவட்டமாக மாறும் என்று பலர் மிகவும் ஆவலோடு இருந்தனர். அரசியல் விளையாடி அது நாகப்பட்டினத்திற்கும்  திருவாரூருக்கும் வாய்ப்பாகிவிட்டது.  திருவாரூருக்கும் நாகப்பட்டினத்திற்கும்24 கி.மீ.தான்.
இவைகளுக்கு
மாவட்ட அதிகாரம் (அந்தஸ்து). 
பலவகையிலும் நடு நாயகமாக இருக்கும்,எல்லோரும்  எளிதில் வரும் வசதியுடைய மயிலாடுதுறைக்கு மாவட்ட அதிகாரம் (அந்தஸ்து) கொடுக்கப்படாமல் இருப்பது மிகவும் வேதனையானது. மயிலாடுதுறை மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறை வேறாமல் ஆட்சியாளர்களின் அலட்சியத்தினால் தடுக்கப்படுகின்றது. அதற்கு முக்கிய காரணம் ஆளும் கட்சி வேட்பாளர்கள்  மயிலாடுதுறை தொகுதியிலிருந்து  நெடுங்காலமாக தேர்வு செய்யப்படாமல் போனதுதான்.  
இப்பொழுது உள்ள அரசாவது மயிலாடுதுறையை  மாவட்டமாக ஆக்க முயலட்டும்.
---------------------------------------------------------------------------------------------------------



மயிலாடுதுறையில் தீ விபத்து

இங்கு கிளிக் செய்து பாருங்கள்  

மயிலாடுதுறை பட்டமங்கலத்தெருவில் அமைந்துள்ள ஜனதா புட்வேர் கடை இன்று இரவு பெரும் தீ விபத்தில் சேதமடைந்ததுள்ளது. தீ அக்கம்பக்கத்து கடைகளுக்கும் பரவியதாகத் தகவல்கள் கூறுகின்றன. மயிலாடுதுறையே இருள்மயமாக காட்சியளித்துள்ளது. விபத்திற்கான காரணமும், சேத மதிப்பும் விரைவில் தெரிய வரலாம்.
Source


Wednesday, October 19, 2011

பயணம் செய்ய படங்கள் மற்றும் காணொளிகள் தூண்ட பார்த்து மகிழுங்கள் !



   பயணம் செய்வதில் ஒரு குறிக்கோள் இருக்க வேண்டும். அது பணத்தினை வீண் செலவு செய்வதாக அமைந்துவிடக் கூடாது. நம்மை நாமே சுற்றிக் கொண்டிருக்காமல் பல்வேறு மக்களை சந்தித்து பலவிதமான மக்களின் அறிவினை உள்வாங்கிக் கொள்வதில் நோக்கமாக பயணம் செய்வது சிறந்த முறையாகும் . எந்த எண்ணத்தில் உங்கள்  பயணம் உள்ளதோ அதுதான் உங்களுக்கு கிடைக்கும். உல்லாசம் தேடி மட்டும் நம் பயணம் அமைந்தால் அதில் ஒரு பயனுமில்லை. 

பயணம் செய்து பார்த்து கிடைக்கும் அறிவு  மனதில் ஆமாக பதியும்.
உலக புத்தகத்தில் ஒரு பக்கம் வாசிக்க ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம். பயணம்  மனதிற்கு மகிழ்வுடன் அறிவினையும் தரும்
 -----------------
குர்ஆன்10:22. அவனே உங்களைத் தரையிலும், கடலிலும் பயணம் செய்யவைக்கிறான்; (சில சமயம்) நீங்கள் கப்பலில் இருக்கும்போது - சாதகமான நல்ல காற்றினால் (கப்பலிலுள்ள) அவர்களைக் கப்பல்கள் (சுமந்து) செல்லும்போது அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்; பின்னர் புயல் காற்று வீசி எல்லாப்பக்கங்களிலிருந்தும் அலைகள் மோதும் போது, நிச்சயமாக (அலைகளால்) சூழப்பட்டோம் (தப்ப வழியில்லையே)” என்று எண்ணுகிறார்கள்; அச்சமயத்தில் தூய உள்ளத்துடன், “நீ எங்களை இதிலிருந்து காப்பாற்றி விட்டால், மெய்யாகவே நாங்கள் உனக்கு நன்றி செலுத்துபவர்களாக இருப்போம்” என்று அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றார்கள்.  

Tuesday, October 18, 2011

Amarkalam latest mix காலை எழுந்ததும் காபி கேட்பேன் காபி இல்லாட்டி டீ கேட்பேன்

புதிய தலைமுறையில் நான் - by நாகூர் ரூமி

புதிய தலைமுறையில் நான்

நான் பழைய தலைமுறையைச் சேர்ந்தவனாகிவிட்டாலும் புதிய தலைமுறையோடு எனக்கொரு நட்பு ஏற்பட்டுவிட்டது என்னவோ உண்மைதான். ஆமாம். பா.ராகவனின் எழுத்தில் அல்லது தலைமையில் வாராவாரம் புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சி சானலில் கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. (விரைவில் என்.டி.டிவி போன்ற தகுதி வாய்ந்த செய்தி ஒளிபரப்பு மீடியாவாக வருமென்று நம்ப வைக்கும் அளவுக்கு நன்றாகவே இருக்கிறது புதிய தலைமுறை).

சென்ற செவ்வாயன்று கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறுக்காக இயக்குனர் / தயாரிப்பாளர் விக்ரம், ஆங்கர் ஹரி ஆகியோருடன் புதிய தலைமுறையைச் சேர்ந்த ஒரு குழு ஆம்பூருக்கு வருகை புரிந்தது. ஆம்பூர் பிரியாணி பற்றியும் இஸ்லாமிய கலாச்சாரம் பற்றியும் ஒரு வீடியோ பதிவு செய்வதற்காக. நான் அவர்களுக்கு உதவினேன்.

ஒரிஜினல் ஆம்பூர் பிரியாணி ஆம்பூர் கடைகளில் கிடைக்காது. திருமணம் போன்ற வைபவங்களில் ஆம்பூரில் உள்ள ’பக்காத்தி’ (நாகூரில் பண்டாரி) எனப்படும் நளபாகர்களால் தயாரிக்கப்படும் பிரியாணிதான் ஆம்பூர் பிரியாணி. அப்படி ஒரு பக்காத்தி ஒருவரை ஏற்பாடு செய்யக் கேட்டேன். ஆனால் பக்காத்திகள் ஞாயிறுவரை ‘பிஸி’யாக இருந்ததால் அவர்கள் யாரையும் வைத்து ப்ரோக்ராம் எடுக்க முடியவில்லை.

எனவே ஆம்பூர் கடைகளில் கிடைக்கும் பிரியாணிகளிலேயே சிறந்ததாக உள்ள ஸ்டார் பிரியாணி முனீர் அவர்களிடம் பேசி ஏற்பாடு செய்தேன். அவரும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். டிவி குழு வரும் வரையில் அடுப்பைக் கூட – என்  வேண்டுகோளின்படி – பற்ற வைக்காமல் இருந்தார். காலை பத்து மணி நெருக்கத்தில் குழு வந்து சேர்ந்தது. இரண்டு மணி நேரத்துக்கும் மேல் வீடியோவும் பேட்டியும் எடுக்கப்பட்டது.(ஸ்டார் பிரியாணி முனீரின் சகோதரர் என் மாணவர்).

பின்பு பள்ளிவாசல்களைப் பற்றி கொஞ்சம் எடுக்கலாம் என்றார்கள். உடனே சின்ன மசூதி ஞாபகம் வந்தது. தமிழ் நாட்டில் உள்ள மிகக்குறைந்த எண்ணிக்கையிலான பள்ளிவாசல்களுக்குள்ள ஒரு சிறப்பு அதற்கு உள்ளது. அது புனர்நிர்மாணம் செய்யப்பட்டது 1968ல்.

பள்ளி வாசலுக்குள் நுழையுமுன் கீழ்க்கண்ட ஹதீஸ் பொறிக்கப்பட்டிருக்கும்:

மன் பனாலில்லாஹி மஸ்ஜிதன் பனல்லாஹு லஹு பைதுன் ஃபில் ஜன்னா

இந்த நபிமொழிக்கான அர்த்தம்:

எவர் அல்லாஹ்வுக்காக ஒரு பள்ளிவாசலை இந்த உலகில் கட்டுகிறாரோ, அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டிக் கொடுப்பான்

என்பதாகும்.

Monday, October 17, 2011

இயற்கையோடு ஒன்றிய இனிமையான வழி.!

நான் யாருடனும் போட்டிபோட விரும்பவில்லை. நான் ஓட்டப் பந்தயத்தில் போட்டிபோடவும் விரும்பவில்லை. நான் நானாகவே இருக்க விரும்புகிறேன். நான் வேகமாக கடந்து மற்றவர்களுடன் போட்டி போடும் போது நான் பலவற்றினை இழக்க நேரிடுகின்றது . இறைவன் கொடுத்த நல்ல விஷயங்களை, இயற்கைகளை அனுபவிக்க வேண்டும்.
என் வழி தனி வழி இயற்கையோடு ஒன்றிய இனிமையான வழி.
 இயற்கையோடு இயைந்த வாழ்வு இனிய ஆரோக்யமான, மகிழ்வான வாழ்வு.








• "சீனக் கோடைக்காலம்":மாபெரும் புல்வெளிகள்









• "சீனக் கோடைகாலம்":ஷிஹு ஏரி
Photo source










ஓடு ஓடு நிற்காமல் ஓடு லட்சியம் அடையும் வரைஓடு

               அ முஹம்மது அலி ஜின்னா     ('நீடுர் அலி' ) பாரிசில்- படகில் உல்லாசப்  பயணம்

கல்யாண வாழ்க்கை


இப்பொழுதெல்லாம் கட்டுரைத் தலைப்பை தேர்ந்தெடுப்பதற்கு முன்பு பலமுறை யோசிக்க வேண்டியதாக இருக்கிறது. “சொந்த அனுபவமா?” என்று இரண்டே வார்த்தையில் கேள்வியைத் தொடுத்து குடும்பத்தில் குழப்பத்தை உண்டு பண்ணிவிடுகிறார்கள் என் ஆத்ம நண்பர்கள்.
கல்யாண வாழ்க்கையைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று துழாவிப் பார்த்தேன்.
சாக்ரடீஸ் சொல்கிறார், “தாராளமாக கல்யாணம் பண்ணிக் கொள். நல்ல மனைவி கிடைத்தால் சந்தோஷக் கடலில் நீந்துவாய். மோசமான மனைவி கிடைத்தால் தத்துவவாதி ஆகி விடுவாய்”.  சாக்ரடீஸ் தத்துவவாதி என்பது நாம் எல்லோரும் அறிந்த செய்தி.
காரில் தன் மனைவியுடன் வந்திறங்கும் ஒருவன் ஓடிப்போய் தன் மனைவிக்காக கார் கதவை பவ்யமாகத் திறக்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்படியென்றால் ஒன்று, அவள் மனைவி புதுசு என்று அர்த்தமாம் அல்லது அவன் கார் புதுசு என்று அர்த்தமாம்.
‘கல்யாணம்’ என்பது ஒரு சொல் அல்லவாம். வாக்கியமாம். “Marriage is not a word. It is a sentence” என்று நண்பன் ஆங்கிலத்தில் சொன்னபோதுதான் “Sentence” என்பதற்கு தண்டனை  என்ற மற்றொரு பொருள் உண்டென்பது புரிந்தது.
“கல்யாணத்தின் போது ஒருத்தன் தன் Bachelor’s பட்டத்தை இழக்க, வந்தவளோ Master’s பட்டத்தை பெற்று விடுகிறாள்” என்கிறார்கள். உண்மைதான். ஏகப்பட்ட இல்லத்தில் தாய்க்குலம்தானே மாஸ்டர்களாக இருக்கிறார்கள். உங்க வீட்லே எப்படிங்க? என்று நண்பர் பாண்டியனிடம் கேட்டால் “I am in total control, but don’t tell my wife” என்கிறார்.

Saturday, October 15, 2011

யாருக்கு ஓட்டளிப்பது ? ஊரை அடித்து உலையில் போடுபவருக்கு ஓட்டளிக்காதீர்!

ஊரை அடித்து உலையில் போடுபவருக்கு ஓட்டளிக்காதீர்! -Dr.Rafiudeen



Source

இறைவணக்க இடமான பள்ளிவாசலிலும் தேர்தல் பிரசாரங்களால்    மக்கள் அவதி . நீடூர்  பள்ளிவாசல் சுற்றிலும் வேட்பாளர்கள்.தொழுவதும், அல்குரானையும்  ,கிதாபினையும் ஒத  வேண்டிய இடத்தில தேர்தல் விளம்பரங்கள் (நோட்டிஸ்) படிக்கும்  நிலைக்கு தள்ளப் பட்டு விட்டார்கள் 


------------------------------------------------------------------------------------

யாருக்கு ஓட்டளிப்பது ?



தமிழகம் மீண்டுமொரு தேர்தல் திருவிழாவினை சந்தித்துக்கொண்டிருக்கிறது. அரசியல்வாதிகள் மீண்டுமொருமுறை மக்களை சந்திக்க வந்துக்கொண்டிருக்கிறார்கள். வாக்குறுதிகளை தாராளமாக தந்துக்கொண்டிருக்கிறார்கள். வெற்றிக்கு பின் இது தொடருமா என்பது பற்றி வாக்காளர்கள் அனைவரும் நன்கு அறிவர். 

வாக்குறுதி பற்றி அல்லாஹ் தன்னுடைய திருமறையில்