Wednesday, December 18, 2013

தும்மல் வருவது ...

பனியோடு தூசி கலக்க
நாசி அடைக்க
தும்மல் வர
தும்மலை நிறுத்த
மருந்து சாப்பிட
தும்மல் நிற்க
ஜுரம் வர
மருத்துவர் ஆலோசனை பெற
கூட்டம் அலை மோதும் நிலை

சாதிப்பது மனது
வலிமையான மனது நம்மை பாதுகாக்கும்
சாதாரண தும்மல் வந்தால் பயம்
தும்மலை துயரமாக்கி மனதை கலங்க வைப்பது தேவையற்றது
தொடர் தும்மல் வந்தால்
தொல்லைகள் அதிகமானால்
மருத்துவரை அணுகலாம்
ஒவ்வாமையும் தும்மலுக்கு ஒரு காரணமாகலாம்

தும்மலை நிறுத்துவது நல்லதல்ல
தும்மல் ஒரு பாதுகாப்பு
தும்மல் இறைவன் கொடுத்த அருள்
தும்மல் வந்தால் நன்றாக தும்ம வேண்டும்
நாசியில் முடி இருப்பது தூசியை தடுக்க
அதனையும் மீறி உட்புகும் தூசியால் வரும் தொந்தரவுகளை
தடுத்து தும்மலாக வருகின்றது
தும்மளால் பல கிருமிகள் வெளிப்படுவாதால் அந்த கிருமிகள் அடுத்தவருக்கு பரவாமல் இருக்க ஒரு துணியை வைத்துக் கொள்வது சிறப்பு .

உங்களில் ஒருவர் தும்பினால் அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப்புகழும்அல்லாஹ்வுக்கு) என்று கூறட்டும். அவருடைய சகோதரர் அல்லது அவரது நண்பர் அவருக்கு ‘யர்ஹமுக்கல்லாஹ்’  (இறைவன்உங்களுக்கு கருணை புரிவானாக) என்று அவருக்காக மறுமொழி கூறட்டும். எர்ஹமுக்கல்லாஹ் என்று அவர் கூறினால்(தும்பியவர்) அவருக்கு யஹ்தீகுமுல்லாஹு வயுஸ்லிஹு பாலகும் (இறைவன் உங்களுக்கு நேர்வழி காட்டுவானாக. உங்கள் நிலையை சீர்செய்வானாக.) என்றுகூறட்டும்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி 6224

No comments: