Friday, December 30, 2016

ஒரு புதிய தாள் மீண்டும் எழுத -


வாழ்க்கை புத்தகத்தை .....
நீங்கள் திறக்க  இருக்கிறீர்கள் -

நாம் எதைப் பெற்று கொண்டு ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கிறோம் ...

பணம்,

சொத்து,

கௌரவம்???

  நாம் இறக்கும்  போது,

நம் பணம், சக்தி , சொத்து ...

மற்றும் நம் அனைத்து உடைமைகளும் நம்மை விட்டு செல்கின்றன ...

வேறு யாருக்காவது  சொந்தமாக!

 மீதி நாம்  நமக்காக விட்டுச் செல்வது  என்ன உள்ளது?

நினைவுகள் மட்டுமே, இருக்கின்றன. அதுவும் நாம் மற்றவருக்கு உதவி செய்திருந்தால் அதுவும் காலத்தால் மறக்க முடியாத நிலையாக இருக்கக் கூடியதாக இருந்தால்!

அந்த மக்கள் மனதில் நிற்கும் !

புத்தாண்டு 2017 நம்பிக்கை - இறைவன் மீது வைத்த நம்பிக்கை நம் மீது வைத்த நம்பிக்கை

 நம்பிக்கையே வாழ்வு.
இறைவன் மீது வைத்த நம்பிக்கை நம் மீது வைத்த நம்பிக்கை.
நல்லதையே நாடுவோம்.நல்லதையே செய்வோம்.வருவதை எதிர்கொள்வோம் .
 நிகழ்வது நிகழட்டும்.புதிய ஆண்டு என்று ஒரு கற்பனை கொண்டு நிகழும் நாளை ஒதுக்க வேண்டாம். இன்றைய நாளில் செய்வதை  செய்து  அதன் விளைவை  இறைவனிடம் விட்டு விடுவோம் .
கடமையை ஒதுக்கி பலனை தேடுவதில் பயனில்லை.
 ஒட்டகத்தைக் கட்டு இறைவனிடம் பாதுகாப்பு கேள்.-நபிமொழி

 Anas (radi Allahu anhu) reported that a person asked Rasul Allah (sal Allahu alaihi wa sallam), “Should I tie my camel and have Tawakkul (trust in Allah for her protection) or should I leave her untied and have Tawakkul.” Rasul Allah (sal Allahu alaihi wa sallam) replied, “Tie her and have Tawakkul.” (Hasan) [Jami At-Tirmidhi]



இன்புடன் வாழலாம் !

 ( எம். ஜெயராமசர்மா …… மெல்பேண் …. அவுஸ்திரேலியா )
 நடந்துநீ திரிந்தால் நலனுன்னைச் சேரும்
          கிடந்துநீ இருந்தால் கிழடுன்னை நாடும்
          பழங்களை உண்டால் பலனுன்னை சேரும்
          இழப்புகழ் தவிர்க்க இயற்கையை நாடு !

          பயிர்ச்சிகள் செய்தால் உயர்ச்சியைத் தொடுவாய்
          அயர்ச்சிநீ அடைந்தால் முயர்ச்சிகள் விடுவாய்
          தளர்ச்சியை தவிர்த்தால் தலை உயர்ந்திடுவாய்
          வளர்ச்சியை  நினைத்து வாழ்வினை அமைப்பாய் !

உலகத்தை நினச்சேன்....சிரிச்சேன்

Dr.Vavar F Habibullah
வாரிசு விவகாரத்தில்... கிரேக்க, ரோம
சாம்ராஜ்யம் தொட்டு அனைத்து உலக அரசியல்
கோபுரங்களும் தலைகீழாக புரண்ட வரலாறுகள் சிந்திக்க தூண்டுகிறதோ இல்லையோ நம்மை வாய் விட்டு சிரிக்கவும் வைக்கிறது.
மகன், மகா அலக்சாண்டரை பதவியில் அமர்த்த கணவன்.. மன்னன் பிலிப்பை மகாராணியார் ஒலிம்பியா கொன்றாராம்.இளம் வயதிலேயே மாண்டு போன மகனின் வாரிசுகள் எதுவும் அலக்சாண்டரைப் போல் கிரேக்கத்தை கட்டியாள முடியவில்லை.மகாராணியாரை நாட்டு மக்களே கல்லால் அடித்து கொன்றது தான் கிரேக்க சாம்ராஜ்ய வரலாறு.
ரோமில், ஜூலியஸ் சீசர் மன்னனாக முடி சூட பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல.நண்பர்களை கொன்றே பதவிக்கு வந்த சீசர்... நண்பன்,
புரூட்டஸ் கரங்களால் கொல்லப்பட்டது தான் வேடிக்கை.சீசருக்கும் அவன் காதலி எகிப்திய பேரழகி கிளியோபாட்ராவுக்கும் பிறந்த மகன் ரோமை அரசாள்வான் என்று பார்த்தால்... அவனை கொன்றொழித்து ஆட்சியை கை
பற்றுவதில் குறியாக இருந்தான் சீசரின்
மருமகன் அகஸ்டஸ். கிளியோபாட்ரா தற்கொலை செய்தது வேறு விஷயம்.
ரஷயாவின், ஜார் மன்னனை விட்டார்களா அவனது எதிரிகள். இல்லை... அவனது
வாரிசுகளைத்தான் விட்டு வைத்தார்களா...

நகரத்து தார்ச்சாலை ....!

ஒரு பகல்நேர வேணாவெயிலில்
கொதிக்கும் தார்சாலையில்
கானல்நீர் வழிந்தோடி
வெம்மையின் தணலை
பதம்பார்த்துக் கொண்டிருந்தது
பரபரப்பாக விரைந்தோடும்
வாகனங்கள் வரிசையை
விட்டுவிலக்காமல்
குளிரூட்டலில் வெளிவெக்கையை
அறியாத பயணிகளை சுமந்தபடி
நேர்கோட்டில் பயணிக்கின்றன
பக்கவாட்டுப் பாதையில்
பாதசாரிகள் நடைபோடுகின்றனர்

கொஞ்சம் யோசித்தேன் ...

முயன்றிடு
வெற்றி கொள்வாய் ...
பயின்றிடு
அறிவை பெருக்குவாய் ...
பயிரிடு
அறுவடை செய்வாய் ...
உழைத்திடு
உயர்வை அடைவாய் ...
துணிந்திடு
அச்சம் தவிர்ப்பாய் ...
பணிந்திடு

முஹம்மது அசத் (Leopold Weiss)யூதராக பிறந்து இஸ்லாத்தை தழுவியவர்

பட உதவி /source
முஹம்மது அசத் - யூதராக பிறந்து இஸ்லாத்தை தழுவியவர். இவரின் இயற்பெயர் Leopold Weiss. அரசு தூதரும், பத்திரிக்கையாளரும், எழுத்தாளரும் ஆகிய இவர் தற்போது உக்ரைன் நாட்டில் உள்ள லேம்பெர்க் என்ற பகுதியில் 1900 இல் பிறந்தார். ஜெர்மனி நாட்டில் 1926 இல் இஸ்லாத்தை தழுவிய இவர், 1947 ஆம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டு பிரஜை ஆனார். தனது 92 ஆம் வயதில், ஸ்பெயினில் இவர் காலமானார். இவர் எழுதிய இரு புத்தகங்கள் பிரபலமானவை:

பட உதவி /source
ஒன்று, The Road to Mecca. மற்றொன்று, The Message of the Quran.
The Road to Mecca 

வாட்ஸ்அப்பில் உருவாக்கினானாம், ஃபேஸ்புக்கில் பரப்பிவிட்டானாம்

வாட்ஸ்அப்பில் உருவாக்கினானாம், ஃபேஸ்புக்கில் பரப்பிவிட்டானாம் என்கிற கதையாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பற்பல கதைகள் ஆதாரமின்றியும், ஆதாரங்கள் போல காட்டியும் உலா வந்தவண்ணமிருக்கின்றன.
இன்னொரு பக்கம்,உண்மையா பொய்யா என்பதை ஆராயாமல் 'கைப்பேசியில் கிடைப்பது கட்டாயம் ஃபார்வர்டு செய்வதற்கே'என்ற அடிப்படையில் ஒரு கூட்டம் உடனடியாக முன்னெடுத்து அனுப்பிப் பரப்பிக் கொண்டேயிருக்கிறது. இவர்கள் தாம் Forward Community ஆக ஆசைப்படுபவர்கள்.
நகைச்சுவை என்ற பெயரில் நகைச்சு வை என்று வலுக்கட்டாயப்படுத்தும் வாதச் சிரிப்புகளுக்குக் கூட வாய்கோணிச் சிரித்துத் தொலைத்துவிடலாம், இந்த யூக அடிப்படையிலான கதைகளுக்கேனும் யாராவது கடிவாளம் போட வேண்டியிருக்கிறது.

Thursday, December 29, 2016

நாற்பதுகளை நெருங்குகையில்

நாற்பதுகளை நெருங்குகையில்
நீ மிகுந்த பதட்டத்துடன் உன் உடலை
மீண்டும் மீண்டும் பரிசோதித்துக் கொள்கிறாய்
உன் பால்யகால தோழிகளை
விசேஷ வீடுகளில் சந்திக்க நேர்கையில்
புத்தம்புதிய நோய்களை அறிந்து கொள்கிறாய்
அந்நோய்கள் உன் படுக்கையறைக்குள் பதுங்கியிருந்து
தாக்குவதாகக் கனவுகண்டு
திடுக்கிட்டெழுந்து வியர்த்து விதிவிதிர்க்கிறாய்
இன்னும் முதுமையின் நிழல் படியாத கணவனின்
வேகத்துக்கு ஒத்துழைக்க முடியாத இயலாமை உறுத்த
அவன் வேறுயாரோ ஒரு பெண்ணைக் காதலிப்பதாகவும்
திருமணம் செய்துகொள்வதாகவும்
மதியச் சிற்றுறக்கத்தில் பகல்கனவு கண்டு நிம்மதி தொலைக்கிறாய்

ஓர் ஒற்றைக் குயிலின் ஓலம்.....! .................................கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

சோலையிலே ஓர் ஒற்றைக் குயில்
சோகக் குரலிலே கூவுதடி
மாலையிலும் அதிகாலையிலும் - அது
வாடி மனம் வெந்து கூவுதடி.....!
சின்னஞ் சிறு பராயத்திலே
சேர்ந்த துணை மறைந்தோடியது
வண்ணக் கருங்குயில் தன்துணையை - கிட்டே
வாவென்ற ழைத்துமே கூவுதடி.....!

Tuesday, December 27, 2016

வாழ்த்துக்களால் மனங்களுக்கு மகிழ்ச்சியூட்டுவதே மனிதச் செயல்.

பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் புதிய யூத குடியிருப்புகளை அமைக்க ஐ.நா. சபை எதிர்ப்பு தெரிவித்து தர்மானம் நிறைவேற்றி இருக்கிறது.
இந்த தீர்மானம் நிறைவேற காரணமாக இருந்த நாடுகளெல்லாம் முஸ்லிம் நாடுகளில்லை.
கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் நாடுகளும் உண்டு. அமெரிக்காவே இந்த தீர்மானத்தை தடுத்து நிறுத்தவில்லை.
இங்கேயும் எங்கேயும் நாம் எல்லோரோடும் இணங்கி வாழ வேண்டிய சூழல் தான் நிலவுகிறது.
எல்லா நாடுகளும் இஸ்ரேலைப்போல வெறிகொண்டலைந்தால் உலகம் அழிந்தே போகும்.

Saturday, December 24, 2016

சூழலை புரிந்து வாழ்வோம் ...

J Banu Haroon

சூழலை புரிந்து வாழ்வோம் ...
இப்போதுள்ள சூழலில் அடிக்கடியான விழாக்கள் , விருந்துகள் ,ஆடம்பரங்கள் குறைந்து காணப்பட்டாலும் ...என்றுமே கேளிக்கைகளும் ,விருந்தும் ,வெட்டி ஆடம்பரங்களும் மட்டுமே வாழ்க்கையல்ல என்பதை நம்மவர்கள் தயவு செய்து புரிந்துகொள்ள வேண்டும் ...
பெரிய பணக்காரர் தேவையில்லாமல் பதினெட்டு வயது நிரம்பாத தன் வீட்டுப்பிள்ளைகளுக்கு டூ வீலர் வாங்கித்தந்து வெற்று ஆடம்பரத்திற்காக உலா வர செய்தாரென்றால்....இல்லாதவரும் தன் பிள்ளைக்கு கடன் பட்டு வண்டி வாங்கித்தந்து பதில் ஆடம்பரம் செய்கிறார் ...படிப்பில் கவனம் கொள்ள வேண்டிய வயதில் ஓட்டுனராக்கி அழகு பார்ப்பதில் என்ன ஒரு ஆனந்தம் ...பெற்றவர்களுக்கு !..அறியாமைதான் ....
முதலில் பிள்ளைகளின் படிப்பு விஷயத்தில் அதீத கவனம் வையுங்கள் .கார் ஓட்டிப்பழகுவதில் வேண்டாம் ...பிறகு தானே தேவைப்படும்போது அதையெல்லாம் கற்றுக்கொள்வார்கள் .

Friday, December 23, 2016

வாசிப்பு - ஒரு கலை !


   
     'வாசிப்பு மனிதனைப் பூரணப்படுத்தும்' என ஒரு பழமொழி இருக்கிறது. உண்மைதான். மனிதனின் உடல் வளர்ச்சிக்கு உணவும் மருந்தும் எவ்வளவு உதவி செய்கின்றனவோ, அது போலவே மனிதனின் மன வளர்ச்சிக்கும், ஆளுமை விருத்திக்கும் புத்தகங்கள் உதவுகின்றன. புத்தகங்கள் வாசிக்கும்போது சில படிமுறைகள் பின்பற்றப்பட வேண்டுமென்பது உங்களில் பலருக்குத் தெரியாமலிருக்கும். அது 'வாசிக்கும் கலை' எனப்படுகிறது.

            வாசிக்கும் கலை குறித்து வெவ்வேறு அறிஞர்கள் வெவ்வேறு கருத்துக்களைக் குறிப்பிட்டுள்ளனர். அவற்றுள் 1972 இல் தோமஸ் மற்றும் ரொபின்சன் ஆகியோரால் அறிமுகப்படுத்தப்பட்ட SQ3R (எஸ்.க்யூ.த்ரீ.ஆர்) முறை பிரபலமான ஒரு முறை. இங்கு SQ3R முறையின் கீழ் புத்தகமொன்றை வெற்றிகரமாக வாசித்து முடிப்பதற்கு ஐந்து படிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

S - Survey ( தேடிப் பார்த்தல்)
Q - Question ( கேள்வி எழுப்புதல்)
R - Read (வாசித்தல்)
R - Retrive ( மீளவும் பார்த்தல்)
R - Review (விமர்சித்தல்)

Thursday, December 22, 2016

யா அல்லாஹ் ....!

ராஜா வாவுபிள்ளை
பழிபாவம் அறியா
பவித்திர பாலகனாய்
பிறப்பித்து வாழ்ந்திடவே
வழி செய்தாய் யாஅல்லாஹ் !
வளர்ந்து ஆளாகி
பாவங்கள் பலசெய்து
சுமைகளாய் தோளில்
ஏற்றியதை இறக்கிடுவாய் யாஅல்லாஹ் !
பழிக்கு அஞ்சாத
பாவிகள் மத்தியில்
உந்தன் பாதம் பார்த்து
நடந்திட அருள்வாயே யாஅல்லாஹ் !
புண்ணியங்கள் இருக்க
பாவத்தை கையேந்தாமல்
புனிதமாய் வாழ்ந்திடவே
நல்வழி காட்டிடுவாயே யாஅல்லாஹ் !
உனது கட்டளைகளை
சிரமேற் கொண்டு
சிரத்தையாய் செய்திடவே
சிந்தையை செப்பனிட்டு தருவாயே யாஅல்லாஹ் !

பெண்ணீயம் என்கிற பித்தலாட்டம்

'பெண்களுக்கு சம உரிமை வேண்டும்’ என்று நம் நாட்டில்
சில சமூக அமைப்புக்கள் போராடி வருகின்றன. இதில் சேலை கட்டிய ஆண்களும் பேண்ட் போட்ட பெண்களும்தான் அங்கம் வகிக்கின்றார்கள்.
சில அரசியல் இயக்கங்களும் அரசியல் ஆதாயத்துக்காக அவ்வப்பொழுது இதைக் கையில் எடுத்து கொண்டு ஆர்ப்பரித்து வருவதையும் காண்கிறோம்.
உண்மையில் சிந்தித்துப் பார்த்தால்,
நமது தேசத்தில் பெண்களுக்கு இயல்பாகவே தரப்படும் அன்பும் மரியாதையும் பாசமும் நேசமும் ஆண்களுக்குக் கிடைக்கும் உரிமைகளை விட அதிகம்.
பெண்களைத் தாயாகவும் சகோதரியாகவும்தான் நாமெல்லோரும் பார்க்கிறோம்;நினைக்கிறோம்.

Monday, December 19, 2016

கைக்கடிகாரம் ....!

கையில் கைக்கடிகாரம் கட்டிக் கொள்ளவேண்டும் என்பது நடுநிலைப்பள்ளி மாணவனாக இருக்கும்போது பதிமன் பருவத்து இயல்பான ஆசைகளில் ஒன்றாகும்.
வயது இருபதை தொட்டு வேலையிலும் சேர்ந்துவிட்டால் விதவிதமான கைக்கடிகாரம் வாங்கியணிந்து அழகு பார்ப்பது எண்பதுகளில் இளைஞர்களுக்கு ஒரு ஆடம்பர மோகமாக இருந்தாலும் அதில் தீங்குகள் ஏதுமில்லை.
மேற்சொன்ன அந்த ஆனந்த நிகழ்வுகளை அனுபவித்தவர்களில் நானும் ஒருவன்.
ஆனால் பாருங்கள், எண்பதுகளில் உகாண்டாவின் பாதுபாப்பு சூழ்நிலைகள் அச்சுறுத்துவதாக இருந்தது. பலமுறை வன்முறை சாவுகளை நேரில் பார்த்தும், துப்பாக்கி முனையில் கணங்களை கழித்தும் உண்டு.

Thursday, December 15, 2016

தமிழ் கற்பிக்க உதவும் அட்டைகள்

அந்த வழியில் கீழுள்ள எனது காணொளிகளை HD வடிவில் மாற்றி  Youtube ல் இணைத்தேன். காணொளிகள் சிறப்பாக இருந்தன. கருத்தைத் தெளிவாக விளங்கிக் கொள்ள முடிந்தது. இணைத்த காணொளிகளின் பட்டியலைக் கீழே தந்துள்ளேன். பார்த்துப் பயனடையவும்.

32 தமிழ் கற்பிக்க உதவும் அட்டைகளை பயன்படுத்தும் முறை.
How to teach  "32 Tamil Teaching Cards - HD"

Wednesday, December 14, 2016

மறுநாள் காலையில்

மறுநாள் காலையில்
----------------------------------
நேத்து காலை 11 மணிக்கு போன மின்சாரம் இன்னும் வரல. கொசுவோட ராத்ரி பூரா போராட்டம். தூக்கம் போச்.
விடிஞ்சதும் விடியாததுமா சிடி ரவுண்ட்ஸ். எங்க பாத்தாலும் மரங்கள். வேரோடு சாஞ்சு கெடக்கு. எங்க ஏரியால மட்டும் 60 மரத்துக்கு மேல டவுன். பார்க்ல யாரோ ராட்சசன் சடுகுடு ஆடின மாதிரி இருக்கு.
பக்கத்துல குஷ்பு வீடு. தெரு முனைல இருந்து பாத்தா வீரப்பன் காடு மாதிரி தெரிஞ்சுது. அடுத்தாப்ல மினிஸ்டர் ஜெயகுமார் இருக்கார். அதனால அந்த நேரத்துக்கே ஆபீசர்ஸ் ஆஜர்.
எம்.எஸ்.வி வீட்டுக்கு எதிர்ல ஒரு தெரு. சாந்தோம் ஐரோடையும் ராமகிருஷ்ண மடம் ரோடையும் லிங் பண்ற மந்தவெளி தெரு. எண்ணிகிட்டே போனா 29 மரம் சாஞ்சிருக்கு. அது பெருசுல்ல. 51 மரம் அப்டியே நின்னுது. ஒரு தெரு இப்டின்னா மொத்த சிட்டி ஊகிச்சுக்கலாம்.
எல்லா தெருவுலயும் டீம் டீமா வந்த ஆளுங்க பெரிய எலக்ட்ரிக் பிளேடு வச்சு மரத்த வெட்டி ஓரமா தள்ளிட்டு போய்ட்டே இருந்தாங்க. ஆட்கள் நடக்கவும் டூவீலர் போகவும் கேப் கிடைச்சா அதோட போயிட்றாங்க. க்ளீனப்புக்கு அடுத்த டீம் வரும்னு ஒரு ஆபீசர் சொன்னார்.
பால் சப்ளை பாதிக்காதுனு மினிஸ்டர் சொன்னதா தந்தி பேப்பர் நியூஸ். ஆனா பால் வராம பல இடங்கள்ல கூட்டம் கூச்சல். மின்சாரம்கூட ராத்திரியே குடுத்துருவோம்னு இன்னொரு மினிஸ்டர் தந்தில சொல்லிருந்தார். சொல்லி 18 மணி நேரம் தாண்டியும் வரல.

Tuesday, December 13, 2016

ஆறுதலாய் ஆயிஷா ரஃபீக் எழுதிய அருமை வரிகள்.

இதுதான் ஆயிஷா ரஃபீக் எழுதிய  வரிகள்....
"அடித்த காற்றில், அருகிலிருந்த மரங்ககளில் அயர்ந்திருந்த பறவைகள் தூக்கிவிசப்பட்டது. எனக்கு வீடிருக்கு... பாதுகாப்பாய் இருக்கிறேன். பாவம் அந்த பறவைகள். எங்குதான் செல்லும்? அழுகை வந்தது. அதற்கு ஆறுதலாய் எழுதினேன்....."
                                  ஆயிஷா ரஃபீக்                               Rafeeq Sulaiman 
                       

பிறவிப் பயனை அடைவேன்....!


விழித்தே இருந்தேன்
உயிர்ப்பெறும் கனவுகள்
கண்டிருந்தேன்

உழைத்தே இருந்தேன்
வியர்வையின் வலியை
அறிந்தேன்

நடந்துகொண்டே இருந்தேன்
நல்வழிகள் பலவும்
கண்டேன்

Friday, December 9, 2016

COPY AND PASTE

Dr.Vavar F Habibullah
எல்லோருமே ஏதோ ஒரு விதத்தில் பிறரை சில விசயங்களில் காப்பி அடிக்கிறோம்.அது இயற்கை.
நடை, உடை, பாவனை, பழக்க வழக்கங்கள் எல்லாவற்றையும் நம் அருகில் உள்ளோரிடம் இருந்தே முழுமையாக கற்றுக் கொள்கிறோம்.குழந்தைகள் தங்கள்
பெற்றோரிடம் இருந்தே வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை விசயங்களை கற்று தேர்கின்றன.
நம் கல்வி அறிவும் பிறர் கருத்துக்களை
கேட்டறிந்தே விருத்தியடைகிறது. பிறரது படைப்புகளை ரசிப்பது மேற்கோள் காட்டுவது எல்லாம் அறிவு வளர துணை புரிகின்றன.
பிறரது அயராத உழைப்பின் பலனே நாம் இன்று கட்டி காக்கும் பொக்கிஷங்கள், நாம் காணும் பண்பாடுகள், நாகரீகங்கள் புதிய கண்டு பிடிப்புகள் தொழில் நுட்பங்கள் எல்லாம் ஆகும்.

Thursday, December 8, 2016

வாட்ஸ்அப்பில் உருவாக்கினானாம், ஃபேஸ்புக்கில் பரப்பிவிட்டானாம்

வாட்ஸ்அப்பில் உருவாக்கினானாம், ஃபேஸ்புக்கில் பரப்பிவிட்டானாம் என்கிற கதையாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பற்பல கதைகள் ஆதாரமின்றியும், ஆதாரங்கள் போல காட்டியும் உலா வந்தவண்ணமிருக்கின்றன.
இன்னொரு பக்கம்,உண்மையா பொய்யா என்பதை ஆராயாமல் 'கைப்பேசியில் கிடைப்பது கட்டாயம் ஃபார்வர்டு செய்வதற்கே'என்ற அடிப்படையில் ஒரு கூட்டம் உடனடியாக முன்னெடுத்து அனுப்பிப் பரப்பிக் கொண்டேயிருக்கிறது. இவர்கள் தாம் Forward Community ஆக ஆசைப்படுபவர்கள்.
நகைச்சுவை என்ற பெயரில் நகைச்சு வை என்று வலுக்கட்டாயப்படுத்தும் வாதச் சிரிப்புகளுக்குக் கூட வாய்கோணிச் சிரித்துத் தொலைத்துவிடலாம், இந்த யூக அடிப்படையிலான கதைகளுக்கேனும் யாராவது கடிவாளம் போட வேண்டியிருக்கிறது.

ஊடகங்களின்_காழ்ப்புணா்ச்சி!!



தமிழக முதல்வா் செல்வி ஜெயலலிதா அவா்கள் உடலுக்கு #முன்னாள்_தமிழகத்தின்_கவர்னர்_பாத்திமா_பீவி அவர்கள் அஞ்சலி செலுத்த வந்திருந்தார். நான் அதனை பார்த்தேன். ஆனால் ஒரு மீடியா கூட பெயரை உச்சரிக்கவில்லை்
இந்தியாவின் சுப்ரிம் கோர்ட் முதல் பெண் தலைமை நீதிபதி பாத்திமா பீவி அவர்கள். அவர்களின் திறமையை அங்கீகரிக்கும் விதமாக அவருக்கு தமிழக கவர்னராக பதவி கொடுக்கப்பட்டது. அவ்வளவு சாதாரணமா இவர்களுக்கு ஆகிவிட்டது. அவர்கள் பெயரை உச்சரிக்க கூட முடியவில்லை. இதுவெல்லாம் காழ்ப்புணர்வின் உச்சம் என்றுதான் சொல்ல தோன்றுகிறது.

*நமது முதல்வரின் உண்மையான முகம்.*

*நமது முதல்வரின் உண்மையான முகம்.*

இந்திய அரசியலின் நெருங்க முடியாத பெண்மணியாக இன்றும் பார்க்கப்படும் முதல்வர் ஜெயலலிதாவின், மிகப்பிரபலமான பேட்டி இது.

செய்தியாளர்கள் சந்திப்பில் ஜெ. எப்படி பேசுவார் என்பது கூட இன்றைய தலைமுறைக்கு தெரியாத சூழலில், அவரின் மிக உண்மையான பக்கத்தை காட்டும்வகையிலான ஒரே ஒரு வீடியோ பேட்டி என்றால், அது இதுவாக மட்டுமே இருக்கும்.

Rendezvous With Simi Garewal என்ற இந்த நிகழ்ச்சியில், வெட்கப்படும், புன்னகைக்கும், உணர்ச்சிவசப்படும், பாட்டு பாடும், ஒரு சராசரிப் பெண்ணாக ஜெயலலிதாவைப் பார்க்கலாம். தன் இளைமைக்காலம் முதலான சுயசரிதம் பற்றி பேட்டியாளரான அவரது தோழியும் அவர் காலத்து இந்தி நடிகையுமான சிமி க்ரேவல் என்பவரிடம் அவரே கூறும் பேட்டி இது...

இந்த பேட்டியின் தமிழாக்கம் கீழே.

Wednesday, December 7, 2016

பிறகும் தொடரும் தீவின் மழை

மழை வெளி நிலத்தின் பட்சிகள்
ஈர இறகை  உலர்த்தும் புற்பாதையில்
மீதமிருக்கும்  நம் பாதச்சுவடுகள் இன்னும்

எப்பொழுதும் மழைபெய்யும் ஊரின் பகல்வேளை
மென்குளிரைப் பரப்பியிருக்க
நனைந்திடாதபடி முழுவதுமாக மறைத்த நாம்
நடந்து வந்த பாதையது

தீவின் எல்லாத் திசைகளிலும்
கடலை நோக்கி நதிகள் வழிந்தோடும்
அவ் வழியே பிரம்பு கொண்டு பின்னப்பட்ட
கூடைத் தொப்பியை அணிந்து வந்த முதியவள்
‘கருமேகக் கூட்டங்களற்ற வானை
ஒருபோதும் கண்டதில்லை’ என்றதும்
சிரட்டைகளால் செதுக்கப்பட்ட
அவளது சிற்பங்களை முழுவதுமாக வாங்கிக் கொண்டாய்
இவ்வாறாக

பெண் மனது மற்றும் ஆட்சிகள் உனதாக...

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியான 'விகடன் மகளிர் சக்தி' மற்றும் 'மனிதம்' இதழ்களில் பிரசுரிக்கப்பட்ட எனது இரு கவிதைகள்.

 -எம்.ரிஷான் ஷெரீப்,

பெண் மனது

அவர்கள் வரட்டும்
எது கொண்டோ உடைத்துப் போன
ஓர் ஆழ்துயர் மனதை
எப்படிச் சரிப்படுத்துகிறார்களென
வேடிக்கை பார்க்கலாம்

அது ஒரு பெண் மனது
பால்யம் முதலாய்ப் பலர் சேர்ந்து
பருவங்கள் தோறும்
பல எல்லைகளையும் அணைகளையும்
வளையங்களையுமிட்டு
இன்னும் பல இடர்களை ஒன்றாய்ப் பின்னி
இறுக இறுகச் சேர்த்துக்
கட்டிய மனது

முன்பும் அது சிதைந்தது
சிறுகச் சிறுகச் சிதைந்து வருகையில்
திரும்பவும் வந்து
பெருந்துயரொன்று கொண்டு
அவர்கள்
அதனை மீளச் செப்பனிட்டார்கள்

காலத்திற்கு என்ன தெரியும் - அவளது
கண்ணீர் பிசைந்து
அவர்கள் சீர்படுத்தப் படுத்த
மீண்டும் சிதிலமாகவே செய்தது
இப்பொழுதைப் போல

அவர்களும் வந்தனர்
ஓட்டைகள் வழியே நழுவிய துயர்களை
நினைவுகள் கொண்டு மீள அடைத்தனர்
மறதியில் உதிர்ந்து
காணாமல் போனவற்றை
மீளப் பெறமுடியாமல் போக
அவதூறுகள் கொண்டும்
கடுஞ்சொற்கள் கொண்டும்
அவளுக்கு வலிக்க வலிக்க
மகிழ்வோடும் அலுப்பில்லாமலும்
இதயம் நிறைந்த குரூரத்தோடும்
மீளவும் மெருகேற்றினர்

அவர்கள் பார்வையில் இக்கணத்தில்
அழகு பெற்றதாகி விட்டது அது

அது ஒரு பெண்மனது
ஆம் அவள் ஒரு பெண்

நன்றி
# விகடன் மகளிர் சக்தி
# பெண்ணியம்


-----------------------------------------------------

Monday, December 5, 2016

வரலாறு படைத்த பெண்களில் நீங்கள் இருப்பீர்கள்


உமது புகழ் காலமெல்லாம் தொடரும்
முதல்வரின்  ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
செய்த சேவைகள் ,மக்கள் தரும் வாழ்த்துகள் உமது நன்மைகளாக உம்மை
உமது இறப்புக்கும் பின்னும் தொடரும் .
அடுத்த இனத்தவரை தன் உடன்பிறவாத சகோதரராக/சகோதரியாக ஏற்றுக்கொள்ளும் மனம் உம்மோடு இருந்தது
இந்தியாவில் மறக்க முடியாத
வரலாறு படைத்த பெண்களில் நீங்கள் இருப்பீர்கள்
நற்செயல்களுக்கு போராடும் குணம் உங்களோடு இருந்தது

Friday, December 2, 2016

தங்கங்களே...

தங்கம் குறித்த சட்டத்தை கேலி செய்ய வேண்டாம், என்று இன்பாக்சில் ஆலோசனைகள் வருகின்றன. உங்களிடம் வருமானத்துக்கு அதிகமான தங்கம் இருக்கிறதா? இல்லை என்றால் பிறகென்ன கவலை என்று கேள்விகள் வருகின்றன.
என்னிடம் கவலைப்பட வேண்டிய அளவுக்கு ஏதும் கிடையாது. (வங்கியில் அடகு வைக்கப்பட்டுள்ளதை மீட்க அரசு ஏதாவது உதவி செய்யுமானால் மகிழ்வேன்.) புழக்கத்திலிருக்க வேண்டிய பணத்தை தங்கமாக முதலீடு செய்வது பொருளாதாரத்துக்கு நல்லதல்ல என்கிற தத்துவங்கள் எனக்கும் தெரியும். வாயைக் கட்டி சேமித்து வாங்கும் தங்கத்தை ஒரு ஃபால்பேக் ஆப்ஷனாகவே மக்கள் கருதுகிறார்கள் என்கிற நடப்பும் தெரியும்.
அவ்வளவு ஏன், என் மனைவிக்கு மாமானார் கொடுத்த 10 பவுன் தங்கத்தை விற்றுத்தான் சென்னையில் மனை வாங்கினேன். அந்த மனையை விற்றுத்தான் இப்போதைய தொழிலுக்கு முதல் லேசர் பிரின்டர் வாங்கினேன்.
அதுவல்ல இப்போதைய விஷயம்.

Thursday, December 1, 2016

தருணங்களின் தலைவர்...! ( ---3--- )


Hilal Musthafa
எம். ஏ. லத்தீப் சாஹிபின் மாணவப் பருவம் தி.மு.க. சார்புடையதாக இருந்தது.பின்னைய நாள்களில் தி.மு.க. அமைச்சராக இருந்த அக் கட்சியின் இன்றைய மூத்த தலைவர் துரைமுருகன் இவரின் சட்டக் கல்லூரி மாணவத் தோழர். நீடூர் செய்யது அண்ணன் சகோதரர் முகமது அலி
சாஹிபும், லத்தீப் சாஹிபிற்குச் சட்டக் கல்லூரித் தோழர்தான்.
துரைமுருகனும், லத்தீபும் சந்திக்கும் போதெல்லாம் வாடா போடா என்று ஒருமையில் பேசிக் கொள்வார்கள். நட்பிலும் தோழர்கள். தி.மு.க. அபிமானத்திலும் கொஞ்சம் அணுக்கமானவர்கள்.
இதற்காக எவரும் லத்தீப் சாஹிபைக் குற்றம் பிடிக்க முடியாது.
முஸ்லிம் லீகின் மூத்த தலைவர்களில் பலரும் , காயிதெ மில்லத் உட்பட, காஙகிரஸ்காரர்களாக இருந்து முஸ்லிம் லீகர்களாகப் பரிணாமங் கண்டவர்கள்தாம்.
காயிதெ மில்லத்தின் தம்பியும், தாய்ச்சபையின் முன்னாள் மாநிலப் பொதுச் செயலாளருமான K.T.M. அஹமது இப்றாஹிம் சாஹிப் மட்டும் ஆரம்பத்திலிருந்தே முஸ்லிம் லீகர்.
காயிதெ மில்லத்தைப் பற்றி நகைக் சுவைக்காக் குறிப்பிடுவார். " இவர் பழைய காங்கிரஸ்காரர். நான் மட்டும்தான் எல்லாக் காலத்திலும் முஸ்லிம் லீகன்" என்று கே.டி.எம். குறிப்பிடுவார்.
மீண்டும் வாணியம்பாடி தொகுதியில் லத்தீப் சாஹிப் வெற்றி பெற்றார்
இந்தக் கால கட்டங்களில் எல்லாம் முஸ்லிம் லீகின் அனல் தெறிக்கும்
மேடைப் பேச்சாளராக வீரியம் பெற்று விட்டார். தமிழகமெங்கும் பட்டி தொட்டிகள் தோறும், பட்டிணங்கள் நகரங்கள் அனைத்தும் லத்தீப் சாஹிப் மேடை அணிவகுத்தன. தமிழகத்தைத் தாண்டியும் அண்டை மாநிலங்கள்
வெளிநாடுகள் பலவற்றுள்ளும் பலப்பல முறைகள் அவரின் மேடைகள் அதிசயங்கள் நிகழ்த்தின.
இறைவன் அவருக்கு மிகப் பெரிய அருள் வழங்கி இருந்தான், பல மொழி களைச் சரளமாகப் பேசும் ஆற்றல்தான் அது.
சுமார் ஒன்பது மொழிகளுக்கு மேல் பேசக் கற்றிருந்தார். ஒரு முறை அவரும் கவிஞர் தா.காசிமும் இஜட். ஜபருல்லாஹ்வும் நானும் மேல் விசாரத்திற்குப் பொதுக் கூட்டத்திற்குப் போய்க் கொண்டிருந்தோம்.
வழியில் அவருக்கு சிறுநீர் கழிக்க வேண்டிய அவசியம். சர்க்கரை
நோய்க்காரர். காரை சாலை ஓரமாக ஒதுக்குப் புறத்தில் நிறுத்தச் சொன்னார். கார் நின்றது. உபாதை கழித்து விட்டு வந்தார்.
காரில் ஏறும் போது சில நரிக்குறவச் சிறுவர்கள் காசுக்குக் கூடிவிட்டார்கள்.
லத்தீப் சாஹிப் அந்தச் சிறுவர்களுடன் அவர்கள் மொழியில் பேச ஆரம்பித்து விட்டார். அவர்களுக்குப் படு குஷி. சிறிது நேரத்தில் ஒரு கூட்டம் எங்களைச் சூழ்ந்து கொண்டது.
மீண்டும் காரில் புறப்பட்டோம். கவிஞர் தா.காசிம் , கேட்டார் " இது எப்போது.? இந்த மொழியும் பேச ஆரம்பிச்சிட்டாங்களா "? என்று.
லத்தீப் புன்முறுவலுடன் சொன்னார். " அது ஒன்னுமில்ல கவிஞரே! என் வீட்டுப் பக்கம் (சென்னை ) இவர்கள் வசிக்கிறார்கள்.சில நேரம் அவர்களுடன் பழகிப் பேச ஆரம்பிச்சுட்டேன் " என்று.
இதன் பின் நரிக்குறவர் பற்றி ஆய்வு செய்த அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியில் துறை அறிஞர் பேராசிரியர் டாக்டர் திண்ணப்பனாரிடம் நரிக்குறவர் மொழி பற்றிக் கேட்டேன். அவர் சொன்னது இன்னும் ஆச்சர்யம் கலந்திருந்தது. அதைத் தனிப் பதிவில் போடுகிறேன்.
லத்தீப் சாஹிப் இறுதியாக் கற்ற மொழி அநேகமாக அதுவாகத்தான் இருக்க முடியும்.
மகத்தான பேச்சாளர். என் போன்றோர் அவர் பேச்சில் பிரமித்திருக்கிறோம்.
ஆனால் அவற்றால் சமூகம் பெற்றிருந்த ஆக்கப் பூர்வமான நன்மைகள் எத்தனை?
சதா சமுதாயப் பணிகள் ஆற்றியிருக்கிறார். பேச்சினால் புரிந்திருக்கிறாரா?
ஒரு கட்டத்தில் பேரணாம் பேட்டைத் தொகுதிக்குள் இந்து முஸ்லிம் கலவரத்தைத் தூண்டி விட்டார்கள். பெரும்பான்மையான முஸ்லிம்கள் தோல் தொழிலும் அது சம்பந்தமான தொழிலும் செய்து வந்தனர். வசதியும் பரவாயில்லை என்ற நிலைதான். தலித்துகள் தொண்டுத் தொழில் செய்து வந்த பாமர மக்கள் . இவர்களுக்கு மத்தியில் சமூக விரோதிகள் விஷத்தைக் தூவி விட்டார்கள். முஸ்லிம்களுக்கு எதிராகத் தலித் பெருமக்களைக் கலவரத்துக்குத் தூண்டி விட்டார்கள்.
முஸ்லிம்கள் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. வயல் வெளிகளில் தீ நர்த்தன மாடியது.
அந்தக் கலவரப் பகுதிக்கு உடனே நேரடியாகச் சென்ற ஒரே சட்டமன்ற உறுப்பினர் லத்தீப் சாஹிப்தான். பேரணாம் பேட்டை அவர் தொகுதி இல்லை. ஆனாலும் அங்கே பாய்ந்து சென்றார்.
இரு பக்கத் தலைவர்களையும் அழைத்து சமாதனம் பேசிக் கொண்டிருந்தார். சமாதானக் கூட்டம் இரவு 8 - மணிக்குக் கூடியது.
பேச்சு வார்த்தை நீண்டு கொண்டே போனது. இரவு 12--மணிக்கு நல்ல விதமாகச் சமாதானதக் கூட்டம் முடிவு அடைந்தது.
அந்த நேரத்தில் முஸ்லிம்கள் சிலர் பதறி அடித்துக் கொண்டு ஓடி வருகிறார்கள். வயல் வெளிகளில் தீப்பற்றி எரிவதாகக் கதறுகிறார்கள்.
செய்தி கேட்டு லத்தீப் சாஹிப் அந்தப் பகுதிக்கு விரைந்து செல்லத் துடிக்கிறார் . சமாதானக் கூட்டத்தார் இருபாலரும் நிலைமை உணர்ந்து
லத்தீப் சாஹிபைத் தடுக்கிறார்கள். எதிர்பாராத நேரத்தில் அருகில் நின்றிருந்த எவருடைய சைக்கிளையோ படீரென்று எடுத்துக் கொண்டு தானே ஓட்டிக் கொண்டே தனியாக விரைந்து விட்டார். அங்கிருந்தவர்கள் பயந்து விட்டார்கள். நள்ளிரவு 12--மணிக்கு மேல் சைக்கிளில் தனியே செல்கிறார்.
நின்றிருந்த சில போலிசாரும் இன்னும் சிலரும் நிலைமை அறிந்து புறப்பட்டனர். தூரத்தில் சிறு கூட்டம் வருவதைப் பார்த்து சமூக விரோதிகள் ஓடியே விட்டார்கள். மீதி வயல்கள் பாதுகாக்கப் பட்டன.
லத்தீப் சாஹிபிற்கு முன்னரும் பின்னரும், இன்றுவரை எந்த ஒரு சமுதாயத் தலைவரும் சட்ட மன்ற உறுப்பினரும் இப்படி ஒரு சாதனையை நிகழ்த்திக் காட்டியதில்லை.

THE INTERVIEW

Vavar F Habibullah
THE INTERVIEW
பணத் தட்டுப்பாடு காரணமாக அகில இந்தியாவும், பேஸ்புக் உலகும், மீடியாவும் மக்களும் தங்கள் உள்ளக் குமறலை
தினந்தோறும் வெளிப்படுத்திக்
கொண்டிருக்கும் வேளையில்......
டி.வி பக்கமே போகாத நான், இன்று பட்டனை
தட்டிய நேரம்... என்னை கவர்ந்த ஒரு சினிமா டைட்டில் தான் - "தி இண்டர்வியோ".
தொடக்கமே விரு விருப்பாக இருக்கவே கதை ஓட்டத்தை, வசனத்தை கூர்ந்து கவனிக்க துவங்கினேன்.
இது முழுக்க ஒரு அரசியல் படம்.
நார்த் கொரியாவின் டிக்டேடர் கிம் ஜாங்க் பற்றிய படம்.
அதிபரை இண்டர்வியோ செய்ய அமெரிக்க நாட்டின் இரு ஜர்னலிஸ்ட் வருகிறார்கள்.
சற்று காட்டமாகவே துவங்கும் பேட்டியில் கிம் ஜாங்க் கொடூரமாகவும் கோபமாகவுமே பதில் தருகிறார்.
இண்டர்வியோ பாணியை திடீரென்று மாற்றும் நிருபர்கள், கிம் ஜாங்கின் கடந்த கால இளமை பருவத்தில் நிகழ்ந்த துயர சம்பவங்களை ஓவ்வொன்றாக விவரிக்க (early days physical and mental abuse especially by the father) வேதனை தாள இயலாத கிம் ஜாங்க் டி.வி.யின் முன் ஒரு குழந்தையை போல் தேம்பி தேம்பி அழுகிறார்.
அந்த காட்சியை கோடிக்கணக்கான மக்கள் உலகெங்கும் பார்த்து அதிசயிக்கிறார்கள். முடிவில் பயத்தில் உரைந்து போன கிம் ஜாங்க் சிறுநீரை பாண்டிலேயே கழித்து விடுகிறார். உலகையே அச்சுறுத்தும் கிம் ஜாங்கின் மற்றொரு கோழைமுகம் பார்த்து மக்கள் சிரிக்கிறார்கள்.
தன்னை 'கடவுள்' என்று மக்களை நம்ப
வைக்கும் தலைவன் (the cult personality of the leader) கூட பயந்தால் சாதாரண மனிதனைப் போல் தான் சிறுநீர் கழிக்க வேண்டியது வரும்.
வசனங்கள் கேட்க மிகவும் அருமை....
கோடிக்கணக்கான பணத்தை வசூலில் அள்ளி குவித்த இந்த படம் சோனி நிறுவனத்தின் ஒரு மெகா ஹிட் ஆகும்.
டி.வி சேனல்கூட மக்கள் மனம் அறிந்தே சில படங்களை தேர்வு செய்கின்றன.
THE INTERVIEW
பணத் தட்டுப்பாடு காரணமாக அகில இந்தியாவும், பேஸ்புக் உலகும், மீடியாவும் மக்களும் தங்கள் உள்ளக் குமறலை
தினந்தோறும் வெளிப்படுத்திக்
கொண்டிருக்கும் வேளையில்......
டி.வி பக்கமே போகாத நான், இன்று பட்டனை
தட்டிய நேரம்... என்னை கவர்ந்த ஒரு சினிமா டைட்டில் தான் - "தி இண்டர்வியோ".
தொடக்கமே விரு விருப்பாக இருக்கவே கதை ஓட்டத்தை, வசனத்தை கூர்ந்து கவனிக்க துவங்கினேன்.
இது முழுக்க ஒரு அரசியல் படம்.
நார்த் கொரியாவின் டிக்டேடர் கிம் ஜாங்க் பற்றிய படம்.
அதிபரை இண்டர்வியோ செய்ய அமெரிக்க நாட்டின் இரு ஜர்னலிஸ்ட் வருகிறார்கள்.
சற்று காட்டமாகவே துவங்கும் பேட்டியில் கிம் ஜாங்க் கொடூரமாகவும் கோபமாகவுமே பதில் தருகிறார்.
இண்டர்வியோ பாணியை திடீரென்று மாற்றும் நிருபர்கள், கிம் ஜாங்கின் கடந்த கால இளமை பருவத்தில் நிகழ்ந்த துயர சம்பவங்களை ஓவ்வொன்றாக விவரிக்க (early days physical and mental abuse especially by the father) வேதனை தாள இயலாத கிம் ஜாங்க் டி.வி.யின் முன் ஒரு குழந்தையை போல் தேம்பி தேம்பி அழுகிறார்.