Thursday, December 5, 2013

மடி தேடும் கரு ...!













சிந்தனைக் கருவிலுள்ள
எழுத்துப் பிறப்புக்கள் -
உன் மடி
தேடுகின்றன ...!.

பேனா முனையில்
அலங்கரிக்கப்பட்டுள்ள
கூர் (மை) துளிகள் ,
உன் பெயரையே
எழுதுகின்றன ...!

மாறும் உலக மாற்றத்தில்
மாறாத ஓசையாய் -
ஓலமிட்டுக் கொண்டிருக்கும் ...,
கடல் கீதங்களும்
அலை இன்னிசைகளும்
உன்னை -
போற்றிப் புகழ்கின்றன ..!

சங்கிலித் தொடராய் நீண்டு செல்லும்
அடம்பன் கொடிகளும் ,
வீடு கட்டி
உடைத்து மகிழும்
சின்னஞ் சிறுசுகளின் சந்தோஷங்கழும்

மீன்களை பாதுகாக்கும்
வாடிக் குடிசைகளின்
ஐஸ் கட்டிகளும் ,

கருவாட்டு நாற்றங்களும்
தோனில்
படகு
வலை
இன்னும் பல
இத்தியாதிகளும்
என் கற்பனைக்கு
பல நூறு கரு கொடுக்கும் ..!


அதில் -
உன் நினைவுகளே
கரையை தொடும் அலையாய்
மனத் தரையை முத்தமிட்டுக் கொண்டிருக்கின்றன ,

உன் -
தூய்மையான பாசம்
விரும்பி நேசிக்கும்
என்-
சுவாச மூச்சு
உடல் உறுப்புக்களில்
உயிர் கொடுத்து
வாழ வைப்பது போல்

உயிருக்கு உயிரானவளே .....,

உண்மையாக நான்
கவிதா வானில்
சிறு மழைத் துளிதான்
சொல்லப் போனால்
கடுகு போல் சிறிதானவளல்ல
நான்,
உன் நாவின் ருசியில்
காரமானவள்
உப்பு
புளிப்பு
உரைப்பு சேர்ந்தது போல் ..!

கவிதா உலகில்
கோடிக் குழாய்கள்
தாகத்தை தீர்க்க ...
நீர் கொடுக்க..
.
நீர்விழ்ச்சியல்ல....,
நான் ,
உன் அன்புக் கிணற்றினுள்
உற்றெடுக்கும் வற்றாத ஊற்று ...!

முக நூலின்
விலாசத்துக்கு -ஒரு
ஆத்மதிருப்தியை
கற்றுத் தந்தவளே ....

இன்று
எல்லோரது நட்பு றவுகளையும்
என் -மனம்
அனைத்துக் கொள்ளும் !
நீ -
நாட்டி வைத்துள்ள
நட்புச் செடிகளில்
என்-
மனதின் வாசங்கள்
கலந்துள்ளமையால் ..!


நீ -
இதழ் விரித்துள்ள
நடப்பு (பூ)க்கு
என் -
இதயத் துடிப்பால
உயிர் வாசத்தினைக் கொடுக்கின்றேன் ..!


உயிரின் உயிரே

இந்த -
போலி உறவுகளும்
சாதி வெறிகளும்
மனச் செடியில்
வளர்வதை தடுத்துவிடு
என் -வாட்டத்துக்கு
செழிப்பை காட்டி விடு ..!

சர்வேதேச உறவுகளும்
சிந்திக்கட்டும் -இந்த
சாக்கடை நாற்றங்களை

என் -
ஆற்றல் மிகு மூளைக்குள்
ஒட்டியிருக்கும் இந்த
சிந்தனைத்துளிகளை
அல்லாஹ் நீயே
பேணகளுக்கு குருதித் துளியாக
மாற்றி விடு ..!

அப்போது தான் ..
நம் -
மானிட தலைகளின் புற்றிலிருக்கும்
போலி உறவுகளின்
எச்சங்கள் மாறும்
நிம்மதி பிறக்கும் !

தீயவற்றை அகற்றி
நல்லவற்றைகாண்போம் ..!
நன்மையானவற்றைப் பெறுவோம் !


< கவிதை யாத்தவர் : கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

No comments: