Friday, August 31, 2012

முஸ்லிம் பெண்கள் ஏன் கல்வியில் பின்தங்கியவர்களாய் இருக்கிறார்கள்?


இஸ்லாம் என்பது மதப் பிரச்சாரத்தில்தான் இருக்கிறது என்று சிலர் நினைக்கிறார்கள். நாம் மதப்பிரச்சாரம் செய்தால் நமக்கு ஆயிரம் நன்மைகள் கோடி நன்மைகள் என்று வந்து குவியும் இறைவன் நம்மை நேரே சொர்க்கத்துக்கு அழைத்துக்கொள்வான் என்று தவறாக நினைக்கிறார்கள்.

இறைவன் மனிதர்களின் உயர்வினையே நிச்சயமாக விரும்புவான். தன்னை, தன் உறவுகளை, தன் சமுதாயத்தை உயர்த்துவதற்கு எவன் ஒருவன் பாடுபடுகிறானோ அதற்கான வெகுமதியாகத்தான் அவனை சொர்க்கத்துக்கு அழைத்துக்கொள்வான்.

இறை நம்பிக்கை கொள்வது, தொழுவது, நோன்பு நோற்பது, ஈகை அளிப்பது, ஹஜ் என்னும் புனிதப்பயணம் செல்வது என்ற ஐந்து கடமைகளை மட்டும் செய்துவிட்டால் போதும் நமக்கு சொர்க்கம் நிச்சயம் என்று நினைத்துக்கொள்கிறார்கள் சிலர்.

தன் முன்னேற்றம், தன் உறவுகளின் முன்னேற்றம், தன் சமுதாய முன்னேற்றம், பொது மக்கள் முன்னேற்றம், உயர் கல்வி, அறிவுடைமை, பெண் விடுதலை, முற்போக்கு எண்ணங்கள் போன்று எந்த முன்னேற்றத்திற்கும் தன்னால் இயன்றதைச் செய்யாது சிலர் இருந்துவிடுகிறார்கள்.

அப்படியாய் வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோர் சொர்க்கம் செல்வது இயலுமா? உலகம் முழுவதும் முஸ்லிம் பெண்கள் கல்வியில் பின் தங்கியவர்களாக இருக்கிறார்கள். ஏன் என்ற காரணம் அலசப்படவேண்டும்.

ஒன்றை நாம் துவக்கத்திலேயே அறிந்துகொள்ள வேண்டும். ஆரம்பக் காலங்களில் உலகில் முஸ்லிம்கள் என்றில்லை எந்தப் பெண்ணுமே கற்றவளாய் இல்லை. அப்படி கற்றவள் மிகக் குறைவாகவே இருந்தாள். பின் ஒவ்வொரு சமுதாயமாக முன்னேறியது. ஆனால் முஸ்லிம் பெண்களோ இதில் கடை நிலையில்தான் இன்னமும் இருக்கிறார்கள்.

முஸ்லிம் பெண்கள் சிறு வயதிலேயே திருமணம் செய்துகொள்கிறார்கள். 16 லிருந்து 18க்குள் திருமணம் முடிந்துவிடுகிறது. இந்திய சட்டம் 18 என்று சொல்வதால் போலி பிறப்புச் சான்றிதழ்களும் தயாரிக்கிறார்கள்.

பதின்ம வயது நிறைவடைவதற்குள் திருமணம் செய்துவிட வேண்டும் என்று கட்டாயமாகப் பெண்களின் படிப்பை நிறுத்துகிறார்கள். 18 வயதைத் தாண்டிவிட்டால் மாப்பிள்ளை கிடைக்காது என்று அறிவில்லாமல் கவலைப்படுகிறார்கள். அவசியமே இல்லாமல் பயத்தில் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொள்கிறார்கள்.

அடுத்தது, குழந்தை பெற்றுக்கொள்வதில் எந்தக் கட்டுப்பாடும் இருப்பதில்லை. 24 மணி நேரமும் பிள்ளைகளோடு போரடும் வாழ்வையே பெண்கள் பெறுகிறார்கள். ஏன் இத்தனை பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டு அவதிபடுகிறீர்கள் என்றால் இறைவன் கொடுத்தான் என்று பொறுப்பில்லாமல் சிலர் சொல்வது வேடிக்கையிலும் வேடிக்கை.

பல வீடுகளில் கணவன் தன் மனைவியை வீட்டில் பூட்டி வைப்பதையே விரும்புகிறான். கேட்டால் அது ஒன்றுதான் அவளுக்குப் பாதுகாப்பு என்கிறான். உண்மையில் அது அவளின் பாதுகாப்பா அல்லது அவனது சுயநலமா என்பதை ஆலோசிக்கவேண்டும்.

இஸ்லாமிய குடும்பங்களின் பெரியோர்கள் பெண்களை அதைச் செய்யாதே இதைச் செய்யாதே என்று செய்யாதே பட்டியலைத்தான் பெரிதாக முன்வைக்கின்றனர். அதைச் செய் இதைச் செய் என்ற பெண் முன்னேற்ற வழிகளை கற்றுத் தருவதே இல்லை.

முஸ்லிம்கள் ஏன் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளார்கள்?


 உலகளவில் முஸ்லிம்கள் ஏன் மிகவும்  பின்தங்கிய நிலையிலும், திறனற்றும் மற்றும்  பலமற்றும் உள்ளார்கள்?
உலகில் பலர் இஸ்லாத்தில் இணைந்துக் கொண்டிருக்கிறார்கள். இஸ்லாத்தின் அருமையான தத்துவம் அவர்களை இஸ்லாத்தில் இணைய வைக்கின்றது.

இஸ்லாம் வளர்கின்றது . உண்மைதான். வெறும் வளர்ச்சி மட்டும் போதாது . கடந்த காலத்தில் இஸ்லாம் ஸ்பெயினில்  காணாத வளர்ச்சியா!
கி.பி 712 லிருந்து கி.பி 1492 வரை ஸ்பெயினில் முஸ்லிம்களின் ஆட்சி. 780 ஆண்டுகள் அந்த மண்ணில் நீதி மிக்கதொரு ஆட்சி நிலைத்திருந்தது.

இஸ்லாமிய ஆட்சியில் இஸ்பெயினில் 780  ஆண்டுகள் இருந்தன! இப்பொழுது மாறிப்போனது!  வளர்ச்சியுடன் அறிவையும் பயன்படுத்தக் கூ டிய ஆற்றலும் பெற்றிருக்க வேண்டும்

 
(  "ஒரு முஸ்லிம் என்பவன் மார்க்கத்தில்  மட்டுமே சிறந்தவனாக இருக்க வேண்டுமா? உலக
அரங்கில் முன்னுக்கு நிற்பவனாக அவன் இருக்கக் கூடாதா?
ஏன்?
உலக அரங்கில் பல மதத்தவர்கள் இருக்கின்றார்கள். இவர்களுள் முஸ்லிம்களின்
சாதனைகள் என்ன? எத்தனை புதிய கண்டுபிடிப்புகளைச் செய்திருக்கிறார்கள்.
எத்தனை பேர் ஆய்வாளர்களாக இருக்கிறார்கள்? எத்தனை பேர் அறிவியல்,
பொருளாதாரம், விண்வெளி ஆராச்சி போன்ற பல துறைகளிலும் நோபல் பரிசுகளைப்
பெற்றவர்களாக இருக்கிறார்கள் அல்லது பெறுகின்ற தகுதியுடையவர்களாக
இருக்கிறார்கள். அவர்களெல்லாம் எந்தெந்த நாடுகளில் அதிகம் இருக்கிறார்கள்.
உலக அரங்கில் ஒரு முஸ்லிமின் முகம் எது?")

உலகில்  ஒரு மதிப்பீட்டின்படி 1.476.233.470 முஸ்லிம்கள் உள்ளனர்
ஆசியாவில் ஒரு பில்லியன், ஆப்பிரிக்காவில் 400 மில்லியன்,
அமெரிக்க, ஐரோப்பாவில் 44 மில்லியன் மற்றும் ஆறு மில்லியன்.

நம்மைப்  போன்ற முஸ்லிம்கள் விநோதமாக ,அதிசியமாக மற்றும்  அதிர்ச்சியுடனும் பார்க்கும் பார்வை!>>>

ஏன் ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் லிபியா போன்ற  முஸ்லீம் நாடுகள் மட்டுமே மேற்கு நாட்டு கிரிஸ்துவர்களால்   தாக்கப்பட்டு  வருகின்றன என்பதனை நினைத்து.  இது  ஒன்றும் அதிசியமான செய்தி அல்ல.

இஸ்லாத்தினை வளர விடாமல் பல்லாண்டுகளாக தொடந்து வந்த முயற்சி இப்பொழுதும் தொடர்கின்றது.

இஸ்லாத்தினை வளர விடாமல் தடுப்பது   புனிதப் போராகவே கிரிஸ்துவர்களால் கருதப்படுகின்றது .

பிறைக்கும் சிலுவைக்கும்(wars between Christians and Muslims ... Crescent and the Cross,) நடந்த சரித்திரப்போரில்இதனையும்  கிரிஸ்துவர்கள் இணைத்து விட்டார்கள் அதற்க்கு முத்தாய்ப்பு வைத்தது போல் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் அதை சுற்றி வளைத்து ஒரு சிலுவை போர் என அத்தாட்சி கொடுத்து விட்டார்.

. முஸ்லீம் நாடுகள் பெரும்பாலும் உயிர்வாழ மேற்கு நாடுகளை சார்ந்து இருக்கும் நிலை.

Wednesday, August 29, 2012

அரபி தெரிந்தால்தான் குர்ஆனை விளங்கமுடியும்

அரபி தெரிந்தால்தான் குர்ஆனை விளங்கமுடியும்
இறைவன் நம்மைக் குர்-ஆனை ஆராயச் சொன்னான். அதில் கேள்விகள் கேட்கச் சொன்னான். ஆனால் நமக்குத் தெரியாவிட்டால் அரபு கற்றவர்களிடம் விளக்கம் கேட்கச் சொன்னான் என்று ஓர் நண்பர் கூறினார்.

அதற்கு ஆதாரமாக கீழே உள்ள இறை வசனத்தையும் அனுப்பி வைத்தார்.

And We sent not (as Our Messengers) before you (O Muhammad ) any but men, whom We inspired, (to preach and invite mankind to believe in the Oneness of Allah). So ask of those who know the Scripture [learned men of the Taurat (Torah) and the Injeel (Gospel)], if you know not. (16:43)

சரியான மொழிபெயர்ப்பு கிடைத்துவிட்டால் அரபி தெரிந்தவர்களும் அரபி தெரியாதவர்களும் ஒன்றுதான் என்பது என் கருத்து.

ஏனெனில் வசனங்களின் பொருளை விளங்கிக் கொள்ளத்தான் ஆய்ந்தறியும் அறிவு தேவையே தவிர வெறுமனே மொழிபெயர்ப்பு செய்வதற்கு அல்ல.

மொழிபெயர்க்க அரபி தெரிந்திருக்க வேண்டும்தான். ஆனால் விளக்கம் சொல்ல அரபி தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

இதனை விளக்கும் வகையில், நண்பருக்கு நான் அளித்த பதில் கீழே உள்ளது. இனி உங்கள் கருத்துக்களையும் பதியுங்கள், வளரலாம்!

*
16-43 ஐ அனுப்பித் தந்தமைக்கு நன்றி. ஆனால் அதே வசனத்திற்கு மற்றவர்களின் மொழி பெயர்ப்புகளையும் பாருங்கள்.

http://www.tamililquran.com/qurandisp.php?start=16#16:43


16:43. (நபியே!) இன்னும் உமக்கு முன்னர் வஹீ கொடுத்து நாம் அவர்களிடம் அனுப்பி வைத்த தூதர்கள் எல்லோரும் ஆடவரே தவிர வேறல்லர்; ஆகவே (அவர்களை நோக்கி) “நீங்கள் (இதனை) அறிந்து கொள்ளாமலிருந்தால். (முந்திய) வேத ஞானம் பெற்றோரிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள்” (என்று கூறுவீராக).

16:44. தெளிவான அத்தாட்சிகளையும் வேதங்களையும் (அத்தூதர்களுக்கும் கொடுத்தனுப்பினோம்; நபியே!) மனிதர்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம்.

இதன்படி முந்தைய வேதத்தில் ஞானம் பெற்றோரிடம் தெரிந்துகொள்ள வேண்டும் என்றுதான் இருக்கிறதல்லவா?

இந்தத் தமிழ் மொழியாக்கத்தோடு நான் நின்றுவிடவில்லை. மேலும் தேடினேன்.

இறைவன் தடுக்காதவற்றைத் தடுக்கப்பட்டதாய்க் கூறலாமா?

இறைவன் தடுக்காதவற்றைத் தடுக்கப்பட்டதாய்க் கூறலாமா?
ஹதீசுகள் பற்றி ஓர் உரையாடல் எழுந்தது.

இறைவன் ஹதீசுகளைப் பற்றி ஏதும் குர்-ஆனில் சொல்லவில்லை என்ற கருத்தை முன்வைத்தேன். அதற்கு மறுமொழ்யாக நண்பர் ஒருவர் இப்படி கூறினார்.

*

எனக்குத் தெரிந்தவரையில் இது உண்மை இல்லை, சுன்னா ஹதீசுகள் என்ற வடிவில் இருக்கின்றது. அது இஸ்லாமின் முக்கியமான ஓர் அங்கம். பல வசனங்களில் இறைவன் சுன்னாவைப் பின்பற்றச் சொல்கிறான். கீழே உள்ள இறைவசனம் அதற்கு ஓர் எடுத்துக்காட்டு.
========




Sahih International
[We sent them] with clear proofs and written ordinances. And We revealed to you the message that you may make clear to the people what was sent down to them and that they might give thought.
Tamil
தெளிவான அத்தாட்சிகளையும் வேதங்களையும் (அத்தூதர்களுக்கும் கொடுத்தனுப்பினோம்; நபியே!) மனிதர்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம்
Source :http://quran.com/16/44
 ==========
“We have revealed unto you the Remembrance that you may explain to mankind that which has been revealed for them” (16: 44).

உதாரணமாக, குர்-ஆனில் தொழவேண்டும் என்று மட்டும்தான் இருக்கிறது. எப்படித் தொழுவது என்பதை இறைத்தூதர்தான் சொல்லித்தந்தார்.

*

இதற்கான என் பதில்:

மேலே உள்ள இறைவனின் வசனம் தெளிவாக இருக்கிறது.

அறியாதவர்களுக்கு குர்-ஆன் வரிகளுக்கான விளக்கத்தைக் கூறுங்கள் என்றே இறைவன் தன் தூதரிடம் கூறுகிறான்.

குர்-ஆனுக்கு மாற்றமான விசயங்களை போதிக்கச் சொல்லவே இல்லை.

இறைதூதர், தான் வாழுகின்ற காலத்தில் உள்ள மனிதர்களுக்கு விளக்கம் கூறினார்கள். அவை மட்டுமே ஹதீசுகள்.

அவை தவிர குர்-ஆனை விட்டு விலகிய எதுவும் ஹதீசாக முடியாது. மற்றவையெல்லாம் இறைவனின் கருத்துக்கள் ஆக முடியாது. இதை நாம் புரிந்துகோள்ள வேண்டும்.

இறைவன் கூறிய கருத்துக்களை விட்டுவிட்டு மற்றவர்களின் கருத்துக்களை நாம் எடுத்துக்கொண்டால் அதுதான் உண்மையிலேயே இணைவைப்பதாகும்.

இறைவன் தொழச் சொன்னான். தொழுகையை இறைத்தூதர் விளக்கினார்.  நிச்சயமாக அது சுன்னாதான், ஹதீசுதான்.

இறைத்தூதர் சொன்ன ஹதீசுகளும் செய்த விளக்கங்களும் அப்படியே மாற்றுக்குறையாமல் நமக்குக் கிடைக்க வேண்டும்.

அதுவன்றி வந்தவர் போனவரெல்லாம் சொல்லும் கருத்துக்கள், அதுவும் குர்-ஆனில் குறிப்பிடப்படாத விசயங்களை எவர் பேசினாலும் அது ஏற்றுக்கொள்ளப்படாது.

உதாரணமாக இசை கூடாது என்று குர்-ஆனில் கூறப்படவில்லை. அதை ஹதீசு கூறுகிறது என்று சொன்னால், அங்கே பெரிய சந்தேகம் எழுந்துவிடுகிறது.

அந்த ஹதூசுகள் எதன் அடிப்படையில் உருவாகின என்ற கேள்வி வந்துவிடுகிறது. அது இறைவனுக்குப் புறம்பானது என்று ஆகிறது.

நான் தடுக்காதவற்றைத் தடுக்கப்பட்டதாய்க் கூறுவது கூடாது என்று இறைவனே கூறுகிறான்.

10:59. (நபியே!) நீர் கூறும்: “அல்லாஹ் உங்களுக்கு இறக்கிவைத்த ஆகாரங்களை நீங்கள் கவனித்தீர்களா? அவற்றில் சிலவற்றை ஹராமாகவும், சிலவற்றை ஹலாலாகவும் நீங்களே ஆக்கிக் கொள்கிறீர்கள்; (இப்படித் தீர்மானித்துக் கொள்ள) அல்லாஹ் உங்களுக்கு அனுமதி அளித்துள்ளானா? அல்லது அல்லாஹ்வின் மீது நீங்கள் பொய்க்கற்பனை செய்கின்றீர்களா?”

இறைதூதர் இறைவனின் வசனத்திற்கு மாற்றாக எந்த ஒன்றையும் கூறியிருக்கவே மாட்டார். அந்தத் தவறை ஒருக்காலும் இறைத் தூதர் செய்யமாட்டார்.

அப்படிச் செய்தவர்களெல்லாம் இஸ்லாமை அழிக்க நினைத்தவர்களும், தங்களின் சொந்தக் கருத்துக்களை இறைவன் கருத்தென்றும் இறைத் தூதர் கருத்தென்றும் சொல்லும் பொய்யர்களே என்று நம்புவோமாக!

இதோ நீங்கள் இட்ட இறைவசனத்தின் தமிழ் வடிவம்:

16:44. தெளிவான அத்தாட்சிகளையும் வேதங்களையும் (அத்தூதர்களுக்கும் கொடுத்தனுப்பினோம்; நபியே!) மனிதர்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம்.

மேலும் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் கீழே வருகின்றன:

துன்பம் துவள இறைவனை அணுகும்போது இறைவனோடு ஒன்றுபடுதல் முழுமையாக இருக்கும்

விரும்பாததின் மேல் விருப்பப்படு!
துயரமும் நன்மையைத் தரும் ஆற்றல் உள்ளது .அது உன்னை இறைவன் பக்கம் இழுக்கும்.  துன்பம்  துவள  இறைவனை  அணுகும்போது இறைவனோடு ஒன்றுபடுதல் முழுமையாக இருக்கும்  நீ விரும்பாத மனைவி உனக்கு கிடைத்து விட்டால் அவளை ஒதுக்க வேண்டிய அவசியமில்லை .அதற்க்கு மாறாக அன்பை கொடுத்து அவளை உன் மனதோடு ஒன்ற வழியை நாடு! . நம் குழ்ந்தை தவறு செய்தால் நாம் அவனை ஒடுக்குவோமா! அல்லது ஒதுக்கிவிடுவோமா! அவனிடத்து உள்ள பாசம் போய் விடுமா ?  நாம் நினைத்தது நடக்கவில்லை என்பதால் இறைவனை குறை சொல்வதுபோல் உள்ளது, எந்த காரியமும் ஒரு நன்மைக்காகவே  இருக்கும் என்பதனை நம்பாதவனுக்கு காலம் முழுதும் கவலைதான்
நினைத்ததெல்லாம் கிடைத்துவிட்டால் மகிழ்வில்லை .வாடைக்குப்பின் தென்றல்  வரும் .தென்றல் முடிய கோடை வரும் . தென்றல் மட்டும் இருந்தால் கோடைகாலத்தில் கிடைக்கும் பலன் கிடைக்காமல் போய்விடும் . நல்ல கொடையில்தான் நிலங்கள் பாலமாக வெடித்து பயிர் வளர வழி வகுக்கும் . பின்பு மழை வந்தால் செடிகள் தழைக்கும் .
காலமே மாறி, மாறி வரும் நிலையினை நாம் விரும்பும் போது மனதில் மட்டும் மகிழ்வு மட்டும் குடி இருக்க வேண்டும்
என்ற பேராசை ஏன்? நிழலின்  அருமையை  வெயிலுக்குப் பின் அறியமுடிகின்றது . வாழ்வின் நிலையும் அதுதான் .துன்பம் வந்து மறையும்  போதுதான் மகிழ்வினை  முழுமையாக அறிய முடியும் இருளுக்குப் பின் ஒளி உண்டு.
  110:3. உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக; மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக - நிச்சயமாக அவன் “தவ்பாவை” (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான்.

Tuesday, August 28, 2012

‘இஸ்லாமிய பெண்கள் குறித்த பாகத்தை படித்த போது வியந்து போனேன்...

‘இஸ்லாமிய பெண்கள் குறித்த பாகத்தை படித்த போது வியந்து போனேன்...
சாட் ரூம் (chat room) வழியாக "ஷஹாதா கலிமா" மொழிந்து இஸ்லாத்தை ஏற்ற பிரிட்டனின் கிறிஸ்தவ சகோதரி சோஃபி ஜென்கின்ஸ்!

[ நான் சிறுமியாக இருந்தபோது "இஸ்லாமிய அடிப்படைவாதம் என்பதைப்
பற்றி அதிகமாகப் பயம் காட்டப்பட்டேன்". பொதுவாக நான் முஸ்லிம்களைப் பற்றி அதிகமாக பயந்தேன். குறிப்பாக அன்றைய காலக்கட்டத்தில் மக்கள் மனிதில் நின்ற சல்மான் ருஷ்டி விவகாரத்தைக் கூறலாம். பொதுவாக முஸ்லிம்கள் என்றாலே எனக்கு மிகவும் பயமாக இருந்தது.]

நான் ஒரு ஆங்கில கீழ்-நடுத்தர குடும்பத்தில் பிறந்தேன். என் தாய் ஒரு குடும்பத்தலைவி. என் தந்தை மின்னனுவியல் துரையில் ஒரு விரிவுரையாளராக இருக்கிறார். என் தந்தை கத்தோலிக்க பின்னனியில் இருந்தும் என் தாய் புராட்டஸ்டண்ட் பின்னனியில் இருந்தும் வந்தவர்கள். அவர்கள் 1970 ஆரம்பத்தில் திருமணம் முடித்தனர். நான் வளர்ந்த வந்த போது அவர்கள் கடவுளை நம்பாதவர்களாகவும் மதம் என்பது பெயருக்கு கூட வீட்டில் இல்லாமல் இருந்து. நான் வளர்ந்து கொண்டிருக்கும் போது மத அடிப்படையில் வாழ விரும்பினால் என் பெற்றோர்கள் எனக்கு ஆதரவு தர முடிவு செய்தனர்.

சிறு வயதில் இருந்தே மதம் சார்ந்த அடிப்படையில் நான் வளர்க்கப்படவில்லை என்றாலும் கூட நான் கடவுளை நம்பினேன். ஆயினும் நான் பயின்று வந்த கிறிஸ்தவ பாட சாலையில் போதித்தவைகள் ஏதோ ஒரு வகையில் தவறானவை என்று எனக்குத் தோன்றியது. இயேசுவின் மீதோ அல்லது பரிசுத்த ஆவியின் மீதோ எனக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. இவை அனைத்தும் தவறாக எனக்கு தோன்றின. ஆனால் பள்ளிக்கூடத்தில் இவைகள் தான் சரியான வழி என்றும் மற்ற மதங்கள் அனைத்தும் தவறானவை என்றும் எனக்கு போதிக்கப்பட்டது. ஆகையால் நான் மிகவும் குழப்பமடைந்தேன்.

Monday, August 27, 2012

வெற்றிமேல் வெற்றி தொடர நீ என்ன செய்ய வேண்டும் ?

 முஹம்மத் அலி ஐ பீ எஸ் (ஓ)

 என் சமீபத்திய(ஜூலை, 2010) அமெரிக்கா சுற்றுப்பயணத்தில் சான்டியாகோ நகரில் தமிழ் முஸ்லிம் தொண்டு நிறுவன நண்பர் சாதிக் அவர்களைக் காண சந்தர்ப்பம் கிடைத்தது. அவரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது ‘நமது சமுதாய இளைஞர்களிடையே நம்பிக்கை குறைந்து வருகிறது. ஆகவே அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கட்டுரை எழுதுங்கள’ என்று கேட்டுக் கொண்டார். அந்த வேண்டுகோள் உண்மைதான் என்று சமீபத்திய பிளஸ் 2 பரிட்சையில் முஸ்லிம் மாணவிகள் அபார வெற்றி யடைந்தது போன்று மாணவர்கள் சோபிக்க வில்லை. உதாரணத்திற்கு நெல்லையைச் சார்ந்த கார்ப்பரேஷன் பள்ளியில் படித்த மாணவி யாஸ்மின் மாநிலத்திலே முதல் மாணவியாக வெற்றி பெற்றது போல பணத்தினைக் கொட்டி பல்வேறு டூயூஷன் வைத்தாலும் மாணவர்கள் சிறப்புடன் வெற்றியடைவில்லை. இளையான்குடி மேலப்பள்ளிவாசல் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் பள்ளி இறுதிப்பரீட்சை எழுதிய 170 மாணவிகளும் 117 பத்தாம் வகுப்பு எழுதிய மாணவிகளும் வெற்றியடைந்திருப்பது பாராட்டலுக்குரியது. ஆனால் ஆண்கள் படிக்கும் தமிழக பள்ளிகளின் வெற்றி சதவீதம் பாராட்டுவதுக்குரியதாக இல்லை. கல்வியறிஞர் ‘யாஸ்பால’ அறிக்கைப்படி நாட்டில் பள்ளி இறுதி வகுப்பு எழுதிய 70 லட்ச மாணவர்களில் வெறும் 30 லட்சம் பேர்கள் தான் உயர்கல்விக்குச் செல்கிறார்கள் என்று தெரிகிறது. மற்றவர்கள் பள்ளிப்படிப்பினை பாதியில் நிறுத்தி வேலை தேடி ஆரம்பித்து விடுகிறார்கள். காரணம் மாணவிகளை பெற்றோர் கண்டிப்புடன் வளர்ப்பது போல மாணவர்களை பெற்றோர் கண்டிக்காமல் பேனிக்காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதன் அர்த்தம் என்னவென்றால் அவர்களெல்லாம் சம்பாதிக்கும் மிஷினாகவும், திருமண வியார சந்தையில் அதிக விளை போகும் பொருளாக கருதப்படுவதால்தானே அந்த நிலை! மாணவன் படிப்பில் கவனம் செலுத்தாததிற்கு டி.வி. சினிமா, விளையாட்டு, தந்தையின் செல்வக்கொழிப்பும் ஒரு காரணமாக அமைந்து விடுகிறது. தமிழக அரசு 3.5 சதவீதம் வேலை வாய்ப்பில் முஸ்லிம்களுக்கு வாய்ப்புக் கொடுத்தாலும் பணியிடங்களில் ஆட்களை நிரப்ப தகுதியான முஸ்லிம்களில்லை என இடங்கள் காலியாக வைக்கப்பட்டு அதனில் வேறு பிரிவினருக்கு ஒதுக்கும் நிலை பரிதாபமானது என உங்களுக்குத் தோன்றவில்லையா? நமது மாணவர்களும், பட்டதாரிகளும் தங்கள் முயற்சியில் தோல்வியடைந்தால் சோர்ந்து விடுவதினை விட்டு மறுபடியும் அந்தத்தோல்விக்கான காரணங்கள் கண்டுபிடித்து வெற்றிக்கனியினைப் பறிக்க உதவுவதிற்காக தீட்டப்பட்டதே இந்த தன்னம்பிக்கைக் கட்டுரை. 

Sunday, August 26, 2012

இறைவா! நான் உன்னுள் அடக்கம் ,நீயே என் வழிகாட்டி

இறைவா! நான் உன்னுள் அடக்கம் ,நீயே என் வழிகாட்டி.
என் வலியை குறைத்து, என்னை வலுவடையச்  செய்.

என் ஆத்மாவின் இருண்ட இரவு முழுவதும் உன்  உதவி நாடி நிற்கின்றது
என் தாயகம் எனக்கு  நீ அளித்த பரிசு
 என் மனம் சிக்கலில் உள்ளது
உன் அருள் நாடி, அமைதி நாடி உன்னை தொழுகின்றேன்
காதலில்  பல மகிழ்வு  தந்தது நீயே!
உன்னை நேசிப்பதைவிட உயர்ந்த காதலி உண்டோ ?
அவள் வருவாள் திரும்பி என்னை விட்டு அவள் உன்னிடமே வந்து விடுவாள் !
அவளால் கிடைத்த சிற்றின்பம் சிதறும்!
உன்னை நேசிப்பதிலேயே  பேரின்பம் நிலைத்து நிற்கும்

என் ஆத்மாவின் திறவுகோல் நீ தான்
சொர்கத்தின் திறவுகோல் உன்னிடம் இருக்க
நீ அதைக் கொண்டு  அந்த  சொர்க்கத்தில்  என்னை நுழையச் செய்
பூமிக்கு நீ அனுப்பியதே உன்னை அறியவே !
உன்னிடம்   திரும்பி வரும் நாள் நான்  அறியாமல்  என்னை ஏன் நீ அனுப்பினாய்!

என் வலி நீ அறிவாய் அதைப் போக்க நீ வழியைக் காட்டு!
நீ கொடுத்த குர்ஆனும், நபிவழியும் வாழ்கையின் வழியன அறிந்தும்
நான் வாழ்க்கையில் உன்னை பிரார்த்தனை செய்தும்
தடுமாறி தத்தளிக்க வைக்கும் உடன் வாழும் மக்களால் சீரழிக்கப் படுவதிலிருந்து உன்னிடம் உதவி நாடி நிற்கின்றேன்!
இறைவா! என் வலியை குறைத்து, என்னை வலுவடையச்  செய்.

Tuesday, August 14, 2012

எது சுதந்திரம் ?

எது சுதந்திரம் ?
நல்ல நாள் கெட்ட நாள் என்பது  கிடையாது .வாழும் நாள் அனைத்தும் உயர்வான நாட்கள்தான்.
அழுக்கு சேர அதனை நீக்க முயல்கின்றோம் மனதில் அழுக்கு சேர நல்லவைகளை  கேட்டும், படித்தும்  மனதில்  படிந்த அழுக்கை அகற்ற முயல வேண்டும் . இவை நம் அனைவருக்கும் தெரிந்ததுதான். இருப்பினும் தொடர் முயற்சி  தேவை. நீண்ட நேரம் இறைவனை வணங்கி சோர்வு அடைவதை விட தொடர்ந்த தொழுகை வாழ்கையை பண்படுத்தும்
நல்லதை செய் அதை இன்றே செய் .
வாழு, வாழ விடு
இன்று உனக்கு தேவைப் படாதது நாளை அது அவசியமாகிவிடலாம் .
விரயம் செய்வதைக் காட்டிலும் தர்மம்  செய்து நன்மையை அடைந்துக் கொள் .
பிறக்கும்போது சுதந்திரமாக பிறந்தாய் பின் அன்பினால் பிணைக்கப் பட்டாய்.
உன் சுதந்திரம் மற்றவருக்கு இடையூறு வராமல் பார்த்துக் கொள்
கொடை பிடிக்க உனக்கு உரிமை உண்டு ஆனால் அந்த குடை மற்றவர் மூக்கில் குத்தாமல் இருக்கும் வரைதான் உனக்கு சுதந்திர  உரிமை கொடுக்கப் பட்டுள்ளது. கடமையை செய்யாதவனுக்கு உரிமை கிடையாது. 

கொண்டாட்டங்கள் உற்சாகப் படுத்துவதாக இருக்க வேண்டும் .அதுவே உபத்திரவம் தருவதாக இருந்தால் உனக்கு பக்குவம் வருவதற்கு முன்பே கொடுக்கப் பட்ட சுதந்திரம் என நினைக்க முற்பட்டு அதனால் உன் சுதந்திரம் பறிக்கப் பட்டுவிடும்.
உலகம் சுற்றுவதுபோல்தான் அரசியல் வாழ்வும் .அது மாறி, மாறி வரும் . தனி மனிதனது  ஆட்சி கொடுமையானால் அதனை மக்கள் எடுத்துக் கொள்வர் . மக்களும் மாக்களாக மாற அராஜகம் செய்ய முற்படும் பொது திரும்பவும் அடக்கு முறை பயன்படுத்தப் பட்டு ஆட்சி மாறும் . முடியாட்சி ,பிரபுக்கள் ஆட்சி , கொடுங்கோலன் ஆட்சி பின்பு மக்களாட்சி .இந்த சுழலும் முறைதான் சரித்திரம் . நமக்கு கிடைத்த சிறந்த சுதந்திரத்தினை (நம் நலம் கருதி சில கட்டுப் பாடுகளுடன் அமையப் பெற்றதனை) இழந்து விடாமல் பார்த்துக் கொள்வது அனைத்து மனிதனின் கடமை . நம் கையில்தான் அது உள்ளது .அதனை தவறாக பயன்படுத்தாமல் இருக்க வேண்டியது நம் கடமை .
தவறு செய்யாமல் இருப்பதும் தவறு நடக்காமல் பார்த்துக் கொள்வதும்தான் உண்மையான சுதந்திரத்தின் மாண்பு.தவறு நடக்கும் போது ஒதுங்கிப் போனால் உன் சுதந்திரம் பறிபோகி விடும்.
ஓட்டுரிமை அனைவருக்கும் உண்டு . படித்தவர் படிக்காதவர் என்ற வேறுபாடில்லை. நமக்கு சமைக்க தெரியாது ஆனால் சமைத்த உணவை சுவைக்கத் தெரியும். ஆள்பவர் ஆட்சி நற்பயன் கொடுக்கவில்லையென்றால் நாம் பட்ட துயரமும் துன்பமும் அறிவோம் .இதனை அறிய படிப்பு மட்டும் அவசியமில்லை. அதனால் தான் அனைவருக்கும் உரிமை வழங்கப் பட்டுள்ளது . கால ஓட்டத்தில் அடக்கு முறையில் வாடிய மக்களும் கல்வியைப் பெற்றிடுவர். படித்தவன் தவறை பாதுகாவலோடு செய்வான் , (இன்று நடக்கும் பெரிய தவறுகள் அனைத்தும் கற்றோர்கள்
செய்தவைகளாகவே உள்ளன .மனது  பண்பட வேண்டும் . வழிகாட்டி உயர்வோராக இருக்க வேண்டும் .தலைவன் வழியே மக்கள் வழியாக மாறி விடுகின்றது)
இறைவா! நீ மக்களுக்கு நல் வழி காட்டி விட்டாய்.  நாங்கள் தவறு செய்து விட்டோம். நீ மன்னிப்பவன் மற்றும் மன்னிப்பை விரும்புபவன் நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து விடு . இனி உன் வழியிலேயே உயர்வான நற்காரியங்கள் செய்து நன்மையை அள்ளிக் குவிகின்றோம் அதற்க்கு உன் அருளை நாடி நிற்கின்றோம்.   உன்னிடமே பாதுகாவல் தேடுகின்றேன்.  

Monday, August 13, 2012

கனவும் நினைவும் ஒன்றுபட முடியுமா! ஒரு கருத்தோட்டம் (வீடியோ இணைப்புடன்)

எனது கற்பனை,  என்னைப் பொறுத்தவரை,  ஒரு காலகட்டத்தில் நெறிப்படுத்தும் நிகழ்வுகளாக அமைய வாய்ப்பும் உண்டு! 

 நுண்ணுணர்வின் மாபெரும் சக்தி

நீங்கள் எந்த உடல் தொடர்பு அல்லது கருவிகளின் பயன்பாடு இல்லாமல் மற்றொரு நபருக்கு தகவலை அனுப்பும் திறன் உங்களிடத்து ஒன்றி இருக்கும் சக்தி .இரண்டு உள்ளங்களில் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியாக ஏக்கமா! ஒடுக்கமா! ஒதுக்கமா! ஏமாற்றமா ! எதுவும் நடக்கும்.'உன்னை நினைத்தேன் நீ வந்தாய் ஆமாம் நானும் உன்னையே நினைத்தேன்'. இரண்டும் ஒரே நேரத்தில் நடக்கும் நிகழ்வு இது ஒரு மின்சார தொடர்பு . மின்னலாக வந்து மறையும். மன ஓட்டத்தில் புலன்கள் தொடர்பின்றி தன் உள்ளத்தில் உள்ள எண்ணங்களை செயல்படுத்துதல் நிலை வர இது தோன்றலாம்

Friday, August 10, 2012

வெளிப்படையாக நன்மையாக இருப்பினும் அது வீணாவது இறைவன் பார்வையில்

Vain Despite Apparently Good
வெளிப்படையாக நன்மையாக இருப்பினும் அது வீணாவது இறைவன் பார்வையில்

பெருமைக்கு ஆசைப்பட்டு , ஆடம்பரத்திற்காக செயல்பட்டு விளம்பரதிற்க்காக தர்மம் ,சேவை, ஜகாத் ,உதவுதல் இவைகள் அனைத்தும் செய்து அதனை இறைவனது
நன்மையான  கணக்கில் சேர்க்க முடியாது மாறாக  அவைகள் தீமையாகி தண்டனையும் பெற்றுத் தரலாம். காரணம் அவைகள் அனைத்தும் இறைவனது அருள் நாடி
செய்யப்பட்டவையல்ல பெருமைக்காக செய்த அனைத்து நன்மைகளும் அதனால் விளைந்த ஆதாயங்களும் இங்கேயே பலவகையில் பெற்றிருக்க இறைவன் அருள் கிடைக்காமல் போய்விடும்.

Wednesday, August 8, 2012

சறுக் சறுக்கென்ன குத்துராங்க

கல்லையெல்லாம் காவியுடுத்தி
கடவுள் என்று சொல்றாங்க
கடவுள் பெயரில் கொலைகள்செய்து
கடவுள்பெயரை கொல்றாங்க

மாட்டை அறுத்தல் பாவம் என்போர்
மனிசன் தலையை வெட்றாங்க
மாசா மாசம் சேத்த காசை
திருடன் காலில் கொட்டுறாங்க

உண்மைய சொன்னா பைத்தியமென்னு
ஊரே சேர்ந்து திட்டுறாங்க...
உரிமைய கேட்டா கொல்வோமுன்னு
ஊரைய விட்டு வெரட்டுறாங்க

வாக்கு வாங்கி போனவரெல்லாம்
வாயப் பாத்து நிக்குறாங்க
நாசகாரன் போட்டதையெல்லாம்
நாயப்போல நக்குறாங்க

மக்கள் வாழ்வை பேரம்பேசி
மாடிவீடு கட்டுறாங்க
மக்கள் பின்னர் ரோசம் பறந்து
வோட்டுப்போட நிக்கிறாங்க

சரக்கு கொடுத்தா கழுதைக்கும் கூட
சறுக் சறுக்கென்ன குத்துராங்க
பின்னர் பெரிசா பிரச்சின வந்தா
எம்பிக்கு ஏசி கத்துறாங்க













கவிஞர் அஸ்மின்

சிங்கப்பூர் அமைச்சரிடம் ‘சபாஷ்’ வாங்கிய கல்லூரி மாணவர்கள்

திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்க சிங்கப்பூர் கிளை நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி 4-8-2012 அன்று மாலை சிங்கப்பூரில் உள்ள பென்கூலன் பள்ளிவாசலில் நடைபெற்றது.

ஹமீது கௌஸ் கிராஅத்துடன் துவங்கிய நிகழ்ச்சியில் சிங்கப்பூரின் சட்ட, வெளியுறவுத் துறை அமைச்சர்
சிங்கப்பூர் அமைச்சரிடம் ‘சபாஷ்’ வாங்கிய கல்லூரி மாணவர்கள்
கா. சண்முகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் தனது சிறப்புரையில், சங்கத்தின் கல்விப் பணிகளை பாராட்டி பேசியதுடன், கல்வி தான் முன்னேற்றத்திற்கு சிறந்த வழி என்றும், ஒன்றுப்பட்டு சமூகமாக திகழ்வது அவசியம் என்றும் தெரிவித்தார்.

அம்மா என்றழைக்காத உயிரில்லையே

அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை மதிக்காது உயர் வில்லையே
நெஞ்சில்  நின்று வாழும் ரூபம்
பெற்ற தாயன்றி வேரொன்று ஏது ? 
                                            - அம்மா

அகமதர்  நபிதொட்டு அனைத்துயர் மேதைகளை
அகிலத்திற் களித்தது  தாய் தானம்மா
மகன் பெற்ற புகழ் கண்டு போறாமை உலகத்தில்
மனம் பொங்கி மகிழ்வதும் தாய் தானம்மா
பேருச்சி மலை மீது புகழ் ஓங்கி நின்றாலும்
நான் எந்தன்  தாய் பாதம் கீழ் தானம்மா
தாயை நான் மறந்தாலும் தாய் என்னை மறக்காத 
தருமத்தை  யான்  மறவா   நிலை வேண்டுமே !
என் தாயே பொறுப்பாயே
                                               - அம்மா

உன் தாயின் பாதத்தில் உன் சொர்க்கம் நபிசொன்ன
பொன் வாக்கு என் நெஞ்சின் அலை யானதே
பொற் தாயின் பணிவிடையால் பேருவை   சுல் கர்ணிக்கு
பெருமானை தரிசிக்கும் நிலை போனதே
வயதான தாய் வீட்டில் பணிவிடை என் பொருப்பில்
உயர்வான கடன் ஹஜ்ஜும் கடனில்லையே
இறைபொருத்தம் யான் வேண்டின் எனை ஈன்ற தாய் பொருத்தம்
கிடைத்தாலே புவிவாழ்வில் அது போதுமே !
                                  
  என் தாயே பொருந்துவாயே !
                                                                                  - அம்மா 

பொன் முத்து மணி என்ன  பூலோக செல்வங்கள்
பூராவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா!
மலை போன்று விலை வைத்து புவி சந்தை எங்கிலும்
கேட்டாலும் தாயன்பு கிடைக்காதம்மா
ஈரைந்து மாதங்கள் உன் வயிற்றில் எனை சுமந்து
நீ பட்ட பெரும் பாட்டை மறை கூறுதே !
காலங்கள் எல்லாமும் நொடி நொடியாய் நன்றி கடன்
செய்தாலும் பெற்றெடுத்த கடன் தீருமா ?
                                  என் தாயே என்னுயிரே  !
                                                                                  - அம்மா 

தாயில்லா பிள்ளைகள் தவிக்கின்ற நிலை கண்டு
கரையாத கல் நெஞ்சும் கரையுதம்மா.
நோய் பட்டு தன் பிள்ளை பாய் தன்னில்  கிடக்கையில்
வாய் விட்டு அழுவதும் தாய் தானம்மா
பாலூட்டி  சோறு(ruu)ட்டி  ஈ எறும்பு கடிக்காமல்
இரவெல்லாம் விழித்ததும் தாய் தானம்மா
தாயே உன் பொன் மனம் கலங்காமல் பார்த்துன்னை
தலை மீது வைத்தல் என் கடமை அம்மா
                                                  என் தாயே இதயமே
                                                                     -அம்மா.

முதற்கடமை யார் மீது என கேட்க மும்முறை
அருந்தாயைச் சொன்னார்கள்  நபி நாதரே
நபி  மூஸா  சுவனத்து தோழராய் ஆனவர்
முதிர் தாய்க்கு பணி செய்த அரும் தோழரே 
மறை வேதம் கிரந்தங்கள் இறைத்தூதர்  உயர்வாக
உரைக்கின்ற தாய்மைதான் லேசானதா?
என்ன ஈன்ற தாயே  உன் ஆசியே என் வாழ்வு
தாயே உன் நல்லாசி தா என் தாயே !
                                             என் தாயே என் மூச்சு!
                                                       அம்மா ....


 பாடல் - கொள்ளுமேடு, ஹாபீஸ் பாருக் ஹஜ்ரத் அவர்கள்.
பாடல் பாடியவர் -தேரிழந்தூர் தாஜுதீன் அவர்கள்.
வீடியோ - S.E.A. முஹம்மது அலி ஜின்னா, நீடூர்.



தீனிசைத் தென்றல், தேரிழந்தூர் தாஜுதீன் தனது தேனிசைக் குரலால் செறிவுமிக்க இஸ்லாமியப் பாடலைப் பாடி சமூக நலத்தொண்டாற்றி வருகின்றார்.
S.E.A. முஹம்மது அலி ஜின்னா
நீடூர்.
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
"Allah will reward you [with] goodness."
நன்றி







அல்லாவை அல்லாமல் இறையோனில்லை


அல்லாவை அல்லாமல் இறையோனில்லை
அம்மாவைப் போலிங்கு சொந்தம் இல்லை
சொந்த பந்தம் வாழ்வில் உண்டு - பெற்ற
பெற்ற தாய் போல சொந்தம் ஏது?
                            
                                அல்லாஹ்வைப்...

உயிர் ஒன்று உயிர் செய்ய இறை செய்யும் ஒரு மாயம்
உடல் கொண்டு தாய் செய்ய வைத்தானம்மா

தாய்யுண்ணும் உணவோடு உணர்வெல்லாம் குழந்தைக்கும்
தரமாகப் சேர வைத்தானம்மா!  

தாயாரின் காலுக்குக் கீழ் சொர்க்கம் உண்டென்று
தாஹா நபி சொன்ன மொழி தானம்மா!

தாய் தந்த அன்புக்கும் தாலாட்டுப் பாட்டுக்கும்
யார் என்ன செய்தாலும் நிகராகுமா?
எப்போதும் மெய்தானே !
                                                       அல்லாஹ்வைப்...





அல்லாவை அல்லாமல் இறையோனில்லை !
அம்மாவைப் போலிங்கு சொந்தம் இல்லை
சொந்த பந்தம் வாழ்வில் உண்டு - பெற்ற
பெற்ற தாய் போல சொந்தம் ஏது?
                              



                               அல்லாஹ்வைப்...

Monday, August 6, 2012

ஃபேஸ்புக் உலகின் ஒரே சமூக நெட்வொர்க் அல்ல.

Salamworld ஓர் சமூக வலைப்பின்னல் ஆகும். இதனை  விரைவில் திறக்க இருக்கிறார்கள்!

Salamworld பற்றிய தகவல்கள்
Salamworld என்பது  என்ன?
Salamworld "ஒத்துழைப்பு" இஸ்லாமிய யோசனை அடிப்படையில் ஓர் உலகளாவிய சமூக நெட்வொர்க் ஆகும்.
Salamworld வெவ்வேறு சமூகங்கள் மூலம் உங்கள் தனித்தன்மையை வெளிப்படுத்த அனுமதிக்கிறது.
Salamworld அதன் சமூக ஒருமைப்பாடு மற்றும் நலன்களை பற்றி கூறுவது ஒவ்வொருவருக்கும் (பயனர்களுக்கும்) நல்ல  வாய்ப்பு.


வெகு காலமாக தங்களுக்கு ஒரு சொந்த இணைய மற்றும் சமூக வலைப்பின்னல்கள் வேண்டும்  என்று ஆவலோடு இருந்த முஸ்லிம்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு.
    
மேலும் வாசிக்க ... Read more… 130 more words

Saturday, August 4, 2012

ஆசையாக ஓடிவந்தேன் அமெரிக்காவே

 ஆசையாக ஓடிவந்தேன் அமெரிக்காவே
2012 பெட்னா வெள்ளிவிழா கவியரங்கத்தில் பாடிய பாடல். வாழ்வாங்கு வாழ்வதற்காக அமெரிக்கா வந்த ஒரு தமிழன் வருத்தத்தோடு பாடும் தெருப்பாடல். டை கட்டி கோட்டு சூட்டு போட்ட அமெரிக்கத் தமிழன் மனம் நொந்தால் சென்னை மெரினாவில் நிற்பதாய் நினைத்து இப்படிப் பாடுவானோ என்ற கற்பனையில் உருவான பாடல்.




ஆசையாக ஓடிவந்தேன் அமெரிக்காவே - இப்போ
    அத்தனையும் ஒடஞ்சிபோச்சே அமெரிக்காவே
பாசமான ஊரை விட்டேன் அமெரிக்காவே - இப்போ
    படுறபாடு கொஞ்சமில்லே அமெரிக்காவே

காதலிச்சேன் வெள்ளைக்காரி அமெரிக்காவே - அவ
    கழுத்தறுத்துப் போட்டுட்டாளே அமெரிக்காவே
வளைஞ்சி நெளிஞ்சி ஒருத்தன் வந்தான் அமெரிக்காவே - வந்து
    கட்டிக்கலாம் வாரியான்னு கேட்டுட்டானே

வீடு வாங்கி செட்டில் ஆனேன் அமெரிக்காவே - அதை
    வங்கிக்காரன் ஆட்டைபோட்டான் அமெரிக்காவே
காலமெல்லாம் உழைச்ச காசு அமெரிக்காவே - இப்போ
    கடங்காரன் ஆயிப்புட்டேன் அமெரிக்காவே

காலையில வேலையில சேத்துக்கறான் - அந்த
    ராத்திரிக்கே வேலைவிட்டு தூக்கிடறான்
வெள்ளக்காரன் மேனேஜரா இருந்துக்கரான் - நான்
    மேல போனா காலவாரி விட்டுடுறான்

சேந்து படிச்ச பசங்க எல்லாம் அமெரிக்காவே - அங்க
    ஜில்லா கலெக்டர் ஆயிட்டாங்க அமெரிக்காவே
சொந்த ஊரப் போல சொகம் ஏதும் இல்லே - இதை
    சொல்லப் போனாக் கேட்க ஒரு நாதி இல்லே


Source : http://anbudanbuhari.blogspot.in

Friday, August 3, 2012

சொன்னான் செய்தேன் .. நோன்பும் உண்ணாவிரதமும்


"அறிது அறிது மானிடராதல் அறிது...
மானிடராய் பிறந்தும் கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அறிது
கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அறிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும்தான் செய்தல் அறிது
தானமும் தவமும்தான் செய்தலாயினும் வானவர் நாடு வழி திறந்திடுமே" - ஔவ்வயார்

மனிதனாய் பிறந்தாலும் பல கடமைகளும் இருந்து சில உரிமைகளும் பெற்றிருந்தாலும் நிம்மதியாய் வாழ பல போராடங்களையும் அளவற்ற தொல்லைகளுக்கும் உட்படுத்தப்படுகின்றோம்.  பார்த்தால் மன்னன் பசித்தால் பரதேசி.
'உனக்கென்ன நீ கொடுத்து வைத்தவன்' என்று  நாம் சொல்ல எல்லாம் இறைவன் அருள் என்று சொல்பவனும் 'உம....வீட்டுக்கு வீடு வாசப்படி' என்று புலம்புவனும் உண்டு . எங்கு நிம்மதியாக வாழ விடுகிறார்கள். இந்த உலகில் நிம்மதியாக இருக்க விடமாட்டார்கள் என்பர் சிலர். 'சரிப்பா வேறு உலகம் ஒன்று உள்ளதே அதற்கு  ஏதாவது உருப்படியா ஒரு வழி வகுத்து வாழ்கின்றாயா?' அதற்கும் சரியான பதில் கொடுக்க முடியவில்லை.

எதற்கு எடுத்தாலும் போராட்டம். அதிலும் பலவகை போராட்டங்கள்.
கையூட்டு , இலஞ்சம், ஊழல் இவைகளை ஒழிக்க போராடுகின்றோம்  என்று  சிலர் திரண்டு அதற்காக நினைத்ததை சாதிக்க பல வழிகள் கையாளப்படுகின்றன . முதலில் உண்ணாவிரதம் அது வேறு விதமாக மாறுவதனை பார்க்கின்றோம். சாத்வீகம் போய், சமாதானமும் முடியாமல் இருதியில்  அது எங்கு போய் நிற்குமோ! அவர்களுக்கே வெளிச்சம்.
ஒருவர் குடியை ஒழிப்பேன் என்கிறார் மற்றவர் அதை வியாபாரமாக்கி விட முயல்கின்றனர் . அப்பப்பா ஒரே குழப்பம்!

சோகம் ஏன்! மனதில் மகிழ்வை நாடு.



 செல்வம், தோற்றம், குழந்தைகள், வீடு, மற்றும் திறமைகள் அனைத்தும் நாம் பெற்றிருந்தும் கவலை ஏன் மனதில் ஆட்டிப்படைகின்றது. பேராசை பெற்ற மனம் இன்னும் அதிகமாக அடைய முயலுகின்றது . அதிகம் பெற முயல்வது நன்மையை நாடி இருப்பின் தவறில்லை. ஆனால் அது அடுத்தவருடன் கணக்குப்போட்டு நமக்குள் ஓர் சோகம் வந்து ஒட்டிக்கொள்வதின் காரணமென்ன. அது மனதில் நிறைவு வராமல் வாட்டிப் படைப்பதுதான். நம்மையே நினைத்து காலத்தை ஒட்டுகின்றோம் நம்மை விட தாழ்ந்தவர் கோடானுகோடி இருப்பதனை நினைவிற்கு கொண்டு வருவதில்லை.  
 

" நான் உமக்குக் கொடுத்ததை (உறுதியாகப்) பிடித்துக் கொள்ளும்; (எனக்கு) நன்றி செலுத்துபவர்களில் (ஒருவராகவும்) இருப்பீராக"
(
குர்ஆன் 7:144)

Wednesday, August 1, 2012

திருட்டா? காணவில்லையா? ஓட்டமா ! முடிவுக்கு வாருங்கள்.

 காணவில்லை! கண்டு பிடித்து கொடுப்பவருக்கு அன்பளிப்பு வழங்கப்படும். இது அக்காலத்தில் குழந்தை  காணாமல் போனால் வரும் செய்தி. அதை வைத்து 'மாக்கான் பிடிச்சிட்டு போய்டுவான்' என்று அச்சமூட்டுவோம். அக்காலத்தில் வாசலில் தொங்கும் பல்பு திருட்டு போகும் . காலம் மாறிவிட்டது இப்பொழுது சிறிய திருட்டுக்கு யாரும் ஆசைப்படுவதில்லை அதேபோல் குழந்தைகளை  தூக்குவதற்கும்  விரும்புவதில்லை. நாகரீக திருட்டு நடைபெருகின்றது. வீட்டில் புகுந்த திருடன் நகைகள் மற்றும் பணத்தினைத் தவிர மட்ற  பொருட்களை திருடுவதில்லை.
அந்த கதிதான் பெண்களுக்கும் வந்துவிட்டது.
திருட்டானால் அல்லது காணாமல் போனால் அரசிடம் முறையிட வேண்டும்.
  இதனை கிளிக் செய்து படியுங்கள்   கையூட்டை கலைவது கைக்கூடுமா!
ஓடிப்போனால் இறைவனிடம்தான்  முறையிட வேண்டும்.நாமும் அதற்கு காரணமாக இருந்தால்  இறைவனிடம் பாவ மன்னிப்பு நாடி இனி அவ்விதம் நடக்காமல் இருக்க வழி தேடிக்கொள்ள வேண்டும் . 
  இதனை கிளிக் செய்து படியுங்கள்   ஓடிப்போவது ஏன்? எதற்காக?  

தவறுகள் ஆணிடமில்லை பெண்ணிடமில்லை. இது  காலத்தின் மாற்றம்,
நாம் வாழும் காலம் மறுமலர்ச்சி காலம், இங்கு என்ன புரட்சியா  நடந்துவிட்டது? எகிப்தில் கமால் பாட்சா புரட்சி வழி கொண்டு  பெண்களுக்கு உரிமை கொடுத்து மாற்றம் கொடுத்தார் . இஸ்லாம் அனைத்து உரிமையும்  பெண்களுக்கு தந்திருந்தபோதும் அதனை முறையே பயன்படுத்தாமல் ஒரு சில முல்லாக்களின்  தவறான பிரசங்கத்தினால் பெண்களை கல்வி கற்க விடாமல் செய்து வீட்டிற்குள் முடக்கி விட்டோம். தற்பொழுது  அந்த நிலையில் மாற்றம் வர பெண்களும் உயர் கல்வி பெற்று வருகின்றனர். கல்வி பெற கல்லூரி   சென்றால் கெட்டுவிடுவார்கள் என்ற தவறான பிடிவாதத்திலிருந்து இப்பொழுதுதான் மீண்டு வருகின்றோம். மறுமலர்ச்சி காலத்தில் ஒரு சில தவறு நடக்கத்தான் செய்யும் அதற்காக அனைத்துமே தவறாகி விடும் என்ற முடிவுக்கு வருவது  மூடத்தனம்.காக்காய் அனைத்துமே கருப்பல்ல    பல நாடுகளில் வெள்ளை காக்கைகள் உண்டு. ஒரு சிலர் பாடசாலைக்கு வரும்போது தர்ணாவில் ஆரம்பிக்க அது அனைவருக்குமே உடந்தையானது என்ற  முடிவுக்கு வர வேண்டாம்.
இலட்சத்தில் ஒரு பெண் ஓடிபோனால் அதற்காக அனைத்துப் பெண்களும் ஓடிப்போவார்கள் என்ற முடிவுக்கு வந்தால் ஒருவரும் திருமணம் செய்துக்கொள்ள முடியாது . உலகமே நிலை தடுமாறி விடும் .(மேற்கோள்களும் பழமொழிகளும்  கொடுத்தால் கட்டுரை இன்னும் நீண்டுவிடும்)