Monday, December 16, 2013

எத்தனை முக்கியத்துவம் வாய்ந்த மகிழ்ச்சிகள் இங்கே நிகழ்ந்து விட்டன !

சில மணி நேரம் நான் தொடர்பில் இல்லை...

அதற்குள்தான்
எத்தனை முக்கியத்துவம் வாய்ந்த மகிழ்ச்சிகள்
இங்கே நிகழ்ந்து விட்டன !

காங்கிரசுடனோ..
காவிகளுடனோ
கூட்டணி இல்லை என்ற
திமுகவின் பொதுக்குழு முடிவு ...



முழுகிப்போகுமோ கழகம்
என்ற கலக்கத்தை
ஒரு மாதமாக சுமந்து கொண்டிருந்த
கழக உடன் பிறப்புக்களின்
நெஞ்சிலிருந்து இறக்கி வைத்து விட்டதே !

கலைஞரை ...
கழகத்தை ..
உயிரைப்போல் நேசித்த
உண்மைத் தொண்டர்கள்
தீயில் மிதப்பதப்போல் மிதந்ததை
நாமறிவோம் !

இப்போது ...
சூரியன் உதித்தே விட்டது !
இருள் மறைந்து விட்டது !

பகுத்தறிவும்
பகுத்து அறியும்
பக்குவ அறிவும்
இந்த தமிழ் மண்ணில்
பாசிசத்துக்கு இடம் தரமாட்டோம் என
பறை அடித்து
பறை சாற்றி விட்டது !

இந்த இடியோசைத்தான்
நாங்கள்
எதிர்பார்த்திருந்தோம் !

இனி ...
வெற்றியோ
தோல்வியோ
கவலையில்லை...
களவு போக இருந்த ஒரு
கைப்பொருள்
களவு போகவில்லை என்பதே
எங்களுக்கு
நிம்மதி !

இப்போதைக்கு
அதுவே போதும் !

நாடும்
நாட்டு மக்களும்
வாழ்க !


 Abu Haashima Vaver

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

நாடும் நாட்டு மக்களும் வாழ்க...