Thursday, January 31, 2013

உங்களை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.

உங்கள் திறமை உங்களுக்கு தெரிந்து விட்டது. அதனை அருமையாக செயல்படுத்துவது உங்களுக்குக்காக மட்டுமா அல்லது அது மற்றவருக்கும் பயன்தருமா அல்லது மற்றவருக்கு பாதகம் மனசாலோ,உள்ளத்தாலோ  அல்லது உடலாலோ பாதிக்குமா என்பதனையும் நீங்கள் அறிந்துக் கொள்ளுங்கள்.

நம்மை நாம் அறிந்துகொண்டோம்! நம்மை மற்றவர் எவ்விதம் அறிந்து கொண்டார்கள் என்பதில்தான் உயர்வே உள்ளது. நம் அறிவின் ஆற்றல் உயர்வாக உள்ளதாக நாமே ஒரு எடை போட்டுக்கொண்டு அதனை தவறாக செயல்படுத்தும் போது  அனைத்தும் விரயமாகின்றது. பொது வாழ்வில் வந்த பின்பும் பொதுவாக ஒரு கருத்தை வெளியே கொடுத்த பின்பும் அது உங்கள் உரிமையோடு மட்டும் நிற்பதில்லை . மக்களின் விமர்சனத்திற்கு அது உள்ளாகின்றது .விமர்சனம் நம்மை மேன்மை படுத்தவும் மற்றும் திருத்திக் கொள்ளவும் உதவுகின்றது. கத்தியை எடுத்து காயை வெட்டுவதுபோல் கருத்தைக் கொண்டு அடுத்தவர் மனதை வெட்ட முயல்வது சிறப்பாக முடியாது. சமூகத்தில் நாமும் ஒருவன்.நாம் நலமுடன் அமைதியாக வாழ சமூகத்தின் ஒற்றுமையை குலைப்பதில் நாம் ஒருவராகிவிடக் கூடாது . அதற்கு உங்களை நீங்களே அறிந்துக் கொள்ளுங்கள் .

பாயிரம் பார்த்த உடன் உள்ளிருப்பது இதுதான் என விளங்கிவிடும் ஆற்றோர் நிறைந்த காலத்தில் நாம் நம் செயல்பாட்டை அறிவதற்கு முன் நம்மைப் பற்றி மற்றோர் அறியும் திறம் படைத்தோர் அதிகம். அதனால் உங்களை முதலில் நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்.

 உங்களது கடந்த கால செயல்பாடு உங்களை காட்டிக் கொடுத்து விடும்.
வல்லவனுக்கு வல்லோன் வையகத்தில் உண்டு . தவறு இருப்பின் திருத்திக் கொள்ளுங்கள் .வீணான அகம்பாவமும் பிடிவாதமும் வேண்டாம்.
 வயிற்றின் பசி உழைப்பை தேடும் .ஆத்மாவின் பசி இறைவனை நாடும்

விஸ்வரூப விவகாரம் - முதல்வர் பேசியதின் விபரம்

 நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்

விஸ்வரூபம் படம் தொடர்பாக ஊடகங்களில் நிலவிவரும் பல்வேறு கருத்துக்களுக்கு விடையளிக்குமாறு இருந்தது முதல்வர் ஜெயலலிதாவின் இன்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பு. ஆங்கிலத்தில் அமைந்த அந்த உரையின் தமிழாக்கம் பின்வருகின்றது.

"விஸ்வரூபம் படத்தை கண்ட முஸ்லிம் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் இது தொடர்பான மனுவை தலைமை செயலரிடம் கொடுத்தார்கள். கூட்டமைப்பு சார்பாகவும், கூட்டமைப்பில் இல்லாத சில அமைப்புகள் சார்பாகவும், படம் வெளிவந்தால் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. உளவுத்துறையின் அறிக்கையையும் இதையே பிரதிபலித்தது. இந்நிலையில், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவேண்டியது என் கடமையாகின்றது.

Wednesday, January 30, 2013

ஏன் 9/11? Why 9/11?


Why 9/11? from Daniel McGowan on Vimeo.
PLEASE FEEL FREE TO SHARE OR LINK TO THIS VIDEO. Eleven years after the worst terrorist attack ever on their homeland, most Americans are still fuzzy about the terrorists' motives. Why 9/11? cuts through this fog to reveal what most angered the terrorists. Until we Americans clearly understand the motives for the September 11 attacks, just getting rid of terrorists like Osama bin Laden is unlikely to bring us enduring security. Until the real purpose of such anti-American terrorism comes out, terror may continue to stalk us; until we end our denial of why 9/11 happened, the interminable war on terror may continue. These attacks have everything to do with America's Middle East policies. The influence of the Israel lobby – especially AIPAC – on these policies warrants closest scrutiny. IMPORTANT NOTE: reference to “AIPAC's money” near the end of the video seems to imply that AIPAC makes political campaign contributions. It does not. But it advises other pro-Israel organizations regarding which campaigns to contribute to.
-----------------------------------------------------------------------------------
Click below and watch the speech by Dan McGowan, Professor Emeritus of
Hobart &William Smith Colleges in the United States of America.

While millions upon millions of people in the US and around the world
believe that 9/11 was an inside job by the Bush/Cheny/Rumsfeld
Administration (for and on behalf of the Israeli and defence industry
interests), listen to the shocking atrocities committed by the Israelis..
And listen to what Mahatma Gandhi said about forced occupation by the Israel
backed by the governments of US and UK


CLICK BELOW
http://vimeo.com/15528714

அபுதாபி இளவரசர் தனியாக நின்று கொண்டிருந்த சிறுமியின் பெற்றோர் வரும் வரை சாலையோரத்தில் அமர்ந்திருந்தார்.


 source


பள்ளி சிறுமிக்காக தெருவோரம் உட்கார்ந்திருந்த அபுதாபி இளவரசர்!

பள்ளிக்கு வெளியே செய்வதறியாது தனியாக நின்று கொண்டிருந்த சிறுமியின் பெற்றோர் வரும் வரை அவருக்கு துணையாக அபுதாபி இளவரசர் ஜெனரல் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யான் சாலையோரத்தில் அமர்ந்திருந்தார்.

அபுதாபியின் இளவரசரும், ராணுவ துணை தளபதியுமான ஜெனரல் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யான் காரில் சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது ஒரு பள்ளிக்கு வெளியே சிறுமி ஒருவர் தொலைந்தது போன்று தனியாக நின்று கொண்டிருந்திருக்கிறார். இதைப் பார்த்த இளவரசர் காரை நிறுத்துமாறு கூறி தனது உதவியாளருடன் அந்த சிறுமி அருகே சென்று நீ ஏன் இங்கு நின்று கொண்டிருக்கிறாய் என்று கேட்டார்.

Tuesday, January 29, 2013

விஸ்வரூபமாக தமிநாட்டில் ஒரு கால் அடுத்த கால் அமரிக்காவில்

தொடரும் நிகழ்வுகள்... இன்னும் எத்தனையோ!
இது என் உரிமை! 
பணத்துக்கும் புகழுக்கும் ஆசை!
கூழுக்கும் மீசைக்கும் ஆசை!
மற்றவர்கள் அதனைப் பார்க்க ஆசைப்படுவதும் என் ஆசை!
அதைப் பார்க்கச் சொல்லிவிட்டு அமெரிக்காவுக்கு போய் அடுத்தது பண்ண ஆசை!
விஸ்வரூபமாக   தமிநாட்டில் ஒரு கால் அடுத்த கால் அமரிக்காவில்
=============================================================
விஸ்வரூபம் - சென்சார் சான்றிதழ் வழங்கியதில் பெரும் ஊழல் - தமிழக அரசு பரபரப்புப் புகார்

விஸ்வரூபம் தணிக்கை செய்யப் பட்டதில் முறைகேடு!

-------------------------
படத்தில் பிராமணப் பெண்களையும் கேவலப் படுத்தி காட்சிகள் அமைக்கப் பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தன் கணவனை ஏமாற்றி தான் வேலை செய்யும் நிறுவனத்தின் முதலாளியுடன் ஊர் சுற்றும் பிராமணப் பெண் ஒருவர் தன் கணவரை உளவு பார்க்க ஒரு ஆளை நியமிப்பதாகவும் விஸ்வரூபம் திரைப் படத்தில் காட்சிகள் அமைக்கப் பட்டுள்ளதாம்.

பெண்களை கேவலப் படுத்தி காட்சிகள் வைக்கப் பட்டுள்ள விஸ்வரூபம் திரைப் படத்துக்கான தடையை விலக்குமாறு சில மகளிர் அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத் தக்கது.

விஸ்வரூபம் திரைப் படத்தில் பெண்களைக் கேவலப் படுத்தும் காட்சிகள்!

இண்டர்நெட்டுக்கு வயது முப்பது

ஜனவரி 1, 1983. இண்டர்நெட் பிறந்தது. அமெரிக்க அதிபரில் தொடங்கி ஆப்பிரிக்காவின் ஏதோ ஒரு ஏழைநாட்டு குடிமகன் வரை இன்று இண்டர்நெட்டை ஏதோ ஒரு வகையில் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. ‘உலகம் ஒரே கிராமம்’ எனும் கோஷம் தற்போது ஓங்கி ஒலிப்பது இண்டர்நெட்டால்தான்.

Monday, January 28, 2013

நடிகர் கமலுக்கு ஒரு விஸ்வரூப கடிதம்!

அன்புள்ள நடிகர் கமலுக்கு,

நான் உங்கள் ரசிகன் அல்ல. ஆனாலும் உங்கள் படங்கள் எனக்குப் பிடிக்கும். உங்களுக்கு மட்டுமல்ல பன்முகம் கொண்ட சினிமா நடிகர்களில் நான் யாருடைய ரசிகனும் அல்ல.

விஸ்வரூபம் படம் பார்ப்பதற்கு முன்பே விஸ்வரூபமாய் வெளியாகும் செய்திகள் மூலம் அந்தப் படத்தின் கரு வியாபாரத் தந்திரமான தீவிரவாதக் கதை என்பதை அறிந்தேன். உலகையே உலுக்கிக் கொண்டு இருக்கும் முக்கியப் பிரச்னை தீவிரவாதம். தீவிரவாதத்துக்கு மதம், இனம், மொழி நிறம் கிடையாது. நான் அறிந்து எந்த மதமோ, மொழியோ, தீவிரவாதத்தை வலியுறுத்தவில்லை. அதனாலேயே தீவிரவாதிகளின் மதம் சார்ந்து தீவிரவாதம் வேறுபடுத்தப் படுவதிலும் எனக்கு விருப்பமில்லை.

தீவிரவாதத்துக்கு பல்வேறு நியாய/அநியாய காரணங்களும் உண்டு. அதில் உள்நுழைய நான் விரும்பவில்லை. ஆனால் உலகம் முழுவதும் ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டும் தொடர்ந்து தீவிரவாதியாக்கி வேடிக்கை பார்த்து வருகிறது. அதற்கு முற்போக்குச் சிந்தனைவாதியான நீங்களும் விதி விலக்கல்ல; காரணம் நடிகர்கள் இன்று கேட்கும் கோடிக் கணக்கான சம்பளத்துக்கு உலக அளவில் அந்தப் படம் வியாபாரமானால்தான் தயாரிப்பாளர் தற்கொலை செய்து கொள்ளாமல் பிழைப்பார். இதன் காரணமாகவே ஏ.வி.எம் போன்ற பல தயாரிப்பு நிறுவனங்களும் படத் தயாரிப்பையே விட்டு ஓடி விட்டன.

நடிகர்கள் வாங்கும் கோடிகள்  காரணமாகவே (வாங்கும் கோடிகளுக்கு ஒழுங்காக வரி கட்டி தங்கள் தேசப் பற்றை நடிகர்கள் நிரூபிக்கிறார்களா என்பது வேறு விஷயம்) அந்தப் படம் தமிழகம், கேரளா, ஆந்திரம், கர்நாடகம், மும்பை எனப் பல மாநிலங்களிலும் மொழி மாற்றம் செய்யப் பட்டு வெளியிடப் படும். பல மாநிலங்களில் பிழைப்பு உள்ளதால், விவசாயிகளை தற்கொலைக்குத் தள்ளும் காவிரி பிரச்னை, முல்லைப் பெரியாறு என தமிழர்களைப் பாதிக்கும் நியாயமான கோரிக்கைகளில்கூட எந்த நடிகரும் வாய் திறப்பது கிடையாது. வாய் திறந்தால் அங்குள்ள மக்கள் படம் பார்க்க மாட்டார்களே! கோடிகளில் குளிக்க முடியாதே!

"சினிமாவை சினிமாவாகப் பார்க்க வேண்டும்", "கருத்துச் சுதந்திரம் காக்கப் பட வேண்டும்" என்ற கருத்துகள் பலமாகப் பேசப் பட்டு வருகின்றன. சினிமாவை சினிமாவாகப் பார்க்க வேண்டுமெனில் டேம் 999 படத்தை ஏன் எதிர்க்க வேண்டும்? என்னுடைய கருத்துச் சுதந்திரம் என்பது அடுத்தவரின் உணர்வுகளைக் காயப் படுத்தும் வகையில் அமையக் கூடாது.
'.................


நேராக மேட்டருக்கு வருவோம். விஸ்வரூபம் படத்துக்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்த போது ''தேசப் பற்றுள்ள எந்த நடுநிலை முஸ்லீமும் இந்தப் படத்தை எதிர்க்க மாட்டான்" என்றும் "விஸ்வரூபம் திரைப் படத்தை எதிர்ப்பவர்கள் கலாச்சார தீவிரவாதிகள்" என்றும் நீங்கள் தெரிவித்துள்ளதாகச் செய்திகளில் படித்தேன்.

கமல் சார், தெரியாமல் தான் கேட்கிறேன் தேசப்பற்றின் இலக்கணம் எது? தீவிரவாதிகள், கறுப்பு பண முதலைகள், ஊழல் அரசியல்வாதிகளை விடவா விஸ்வரூபத்தை எதிர்ப்பவர்கள் தேசப்பற்று அற்றவர்கள்? தீவிரவாதம் எந்த மதத்திலும் இல்லை; ஆனால் தீவிரவாதிகள் எல்லா மதங்களிலும் உள்ளனர். அதைப் புரிந்து கொள்ளுங்கள்.

இஸ்லாமியத் தலைவர்களிடம் படம் போட்டுக் காண்பித்த போது இந்தப் படத்தை ராமகோபாலன் எதிர்ப்பார் என்று கூறியதாக ஒரு வாரஇதழில் படித்தேன். ஏன் சார்? யாருமே எதிர்க்காமல் ஒரு படத்தை உங்களால் எடுக்க முடியாதா? அடுத்தவனின் மத உணர்வைப் புண் படுத்திதான் நீங்கள் புசிக்க வேண்டுமா?

டைட்டிலில் தேசிய கீதம் வேறு வைத்து இருக்கிறீர்களாம். ஆப்கானிலும் அமெரிக்காவிலும் நடக்கும் கதைக்கு ஏன் டைட்டிலில் இந்திய தேசிய கீதம்? தேசப்பற்று மிக்க ரசிகர்கள் எழுந்து நின்று தான் படம் பார்க்கின்றனரா? தேசப்பற்றுமிக்க நடுநிலையான முஸ்லிம்கள் உங்கள் படத்தை எதிர்க்கமாட்டார்கள் என்று கூறியதற்கும் இந்த டைட்டில் தேசிய கீதத்துக்கும் இடையிலான உள் அரசியல் என்ன?

விஸ்வரூபம் படத்தில் அமெரிக்காவைக் காப்பாற்ற ஆப்கன் தீவிரவாதிகளை முறியடிக்கும் நீங்கள் கூட ஹாசன் என்ற பெயர் காரணமாக அமெரிக்காவில் சோதனை நிகழ்த்தப் பட்ட வரலாறும் உண்டு. இந்திய நாட்டின் குடியரசுத் தலைவரானாலும் கூட முஸ்லீம் பெயர் சூட்டினால் அமெரிக்கா காரன் ஜட்டியை அவுத்து தான் சோதனை இடுவான். இது தான் உலக யதார்த்தம்.

தணிக்கைக் குழு சான்றிதழ் அளித்து விட்டது என்பதற்காகவே அந்தப் படத்தில் எந்த நச்சுக் கருத்துகளும் இல்லை என்றாகி விடாது. ஊழல் நிறைந்த இந்திய தேசத்தில் மறைந்த தேசப் பிதா காந்தியின் பெயரில்கூட பத்திரம் பதிவு செய்ய முடியும். இது போன்ற படங்களுக்கு தணிக்கைக் குழுவின் சான்றிதழ் வாங்குவது பெரிய விசயமல்ல.

படத்தின் இறுதியில் இந்தியாவில் தொடரும் என்று முடித்துள்ளதாக கேள்வி பட்டேன். இன்னொரு விஸ்வரூபம் எடுத்தால் ரூ 100 கோடி பட்ஜெட்டில் பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தையோ, அல்லது மாலேகான் குண்டு வெடிப்பு சாமியாரிணி கதையையோ உங்களால் படமாக எடுத்து வெளியிட முடியுமா? விடத் தான் விடுவார்களா கலாச்சாரத் தீவிரவாதிகள்? அப்படிப் பார்க்கவேண்டாம், உங்கள் வார்த்தை தான்! அப்படி ஒரு படம் எடுக்க நீங்கள் தயார் எனில் கமல் ஒரு ஆண்மகன் தான்.

உங்கள் படம் தமிழகத்தில் ஓடாது என்று ஒரு முஸ்லீம் அமைப்பு போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளது. ஒரு படத்தை ஓட விட மாட்டோம் என்று சொல்வதற்கு இவர்கள் யார்? உங்களின் உழைப்பைப் பறித்து வேதனையை உண்டாக்கத்தான் இஸ்லாம் சொல்லிக் கொடுக்கிறதா? அப்படி செய்வார்கள் எனில் உங்கள் இருவருக்குமே பெரிய வித்தியாசம் இல்லை.

ஜனநாயக நாட்டில் யாரும் எதையும் பேசலாம்; எழுதலாம். பட் ஒன் கண்டிசன். அது அடுத்தவரைக் காயப் படுத்துவதாக இருக்கக் கூடாது. பேசுங்கள்; தேவையற்ற காட்சிகளை நீக்குங்கள். படத்தை வெளியிட முன் வாருங்கள். ஹாலிவுட் ரேஞ்சுக்கு நீங்கள் எடுத்த திரைப்படம் விழலுக்கு இறைத்த நீர் ஆகி விடக் கூடாது என்பது தான் எனது வருத்தம். செய்வீர்கள் என்ற நம்பிக்கையில்...........

- தேசப் பற்றுள்ள இந்தியன்

(குறிப்பு: உங்கள் படத்தை எதிர்ப்பதால் உங்கள் பார்வையில் நான் தேசப் பற்று அற்றவன் என்றால் அதற்கு நான் பொறுப்பாக முடியாது.)
Source : http://www.inneram.com/

விஸ்வரூபம் - திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் அமீர் பேச்சு

விஸ்வரூபம் - திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் அமீர் பேச்சு
விஸ்வரூபம் பிரச்னை தொடர்பாக பல்வேறு தரப்பிலிருந்தும் கருத்துகள் வெளியாகியுள்ள நிலையில் தமிழக திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் அமீர் தன்னுடைய கருத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

விஸ்வரூபம் –அடுத்தது என்ன? – TNTJ மாநில தலைவர் பீஜே அவர்களின் உரை

விஷரூபத்திற்கு
பாரதிராஜா, ராமதாஸ், தா.பாண்டியண், கமலஹாசன்
விஷகருத்துகள் முறைதனா?

விஷ்வரூபம் கருத்து சுதந்திரமா?
உங்களுக்கு மட்டும் தான் கருத்து சுதந்திரமா?

கமலஹாஸன், பாரதிராஜா, ராமதாஸ், தா.பாண்டியண்
இவர்களுக்கு மட்டும் தானா க‌ருத்து சுதந்திரம் ?


விடியோ உரையின் சில பகுதிகள். .....


இங்கு சொடுக்கி //////////விஸ்வரூபம் - அடுத்தது என்ன? என்ற தலைப்பில் //////////
*******************

SOURCE: 2.

இங்கு சொடுக்கி //////////////  விஷரூபத்திற்கு பாரதிராஜா, ராமதாஸ், தா.பாண்டியண், கமலஹாசன் விஷகருத்துகள் முறைதனா? மற்றும் முஸ்லீம்களுக்கு எதிராக பரப்படும் நச்சு கருத்துகளை…. முழுமையான‌ உரை கேளுங்கள்  ;  ////////////////


 விடியோ லோட் ஆக சற்று நேரம் எடுக்கலாம்.
பொறுத்துக்கொள்ளுங்கள்.

விடியோவை முழுமையாக பார்த்தால்

முஸ்லீம்களுக்கு எதிராக பரப்படும் நச்சு கருத்துகளை விளங்கிக்கொள்வீர்கள்

Source : http://vanjoor-vanjoor.blogspot.in

Saturday, January 26, 2013

விஸ்வரூபம் படம் - நாம் என்ன செய்ய வேண்டும்! காணொளியை பாருங்கள்.

விஸ்வரூபம் படம் - நான் என்ன செய்ய வேண்டும்! காணொளியை பாருங்கள்.
Vishparoopam Movie - What should you do in this time? MUST WATCH



நடிகர் வடிவேலு,நடிகர் விவேக் இவர்களை புதிய படங்களில் பார்க்க முடியவில்லை.
நடிகர் சந்தானம் அதிக படங்களில் வருகிறார். சந்தானம் மற்ற இருவரையும் விட திறமையானவரா!
படம்(சினிமா) வேறு அரசியல் வேறு என்று பேசுபவர்கள் ஒரு சமூகத்தையே கேவலப்படுத்தும் முறையில்  விஸ்வரூபம் படம் தயாரித்த கமல் அவர்களை எதில் கொண்டு இணைப்பது.
சந்தானமும் கமலும் திறமையுள்ளவர்கள்! இதற்கும் வேறு காரணம் !
வடிவேலுவும் விவேக்கும் திறமை இல்லாதவர்கள்! இதற்கும் வேறு காரணம்!

Friday, January 25, 2013

சிவாஜி கணேசன் நடித்த விஸ்வரூபம் படமும் கமல் நடித்த விஸ்வரூபம் படமும்!

 விஸ்வரூபம் என்ற வார்த்தைக்கு எத்தனை பேருக்கு பொருள் விளங்கும்!
பாபர் மசூதி பிரச்சனை தீர்ந்தபாடில்லை. அடுத்தது விஸ்வரூபம் !
விஸ்வரூபம் படத்திற்கு ஏன் இந்த பிரச்சனை? இப்படி ஒரு பிரச்சனை இனி தொடரக் கூடாது!
இஸ்லாமிய தீவிரவாதம் மட்டுமல்ல இந்துத்வா தீவிரவாதங்கள், தமிழ் தீவிரவாதங்கள் எதையும் உருவாக்குவதற்கு யாரும் ஒரு கருவியாகி விடாதீர்கள்.
அமெரிக்காதான் தீவிரவாதம் உருவாக்குவதற்கு வித்திடுகிறது. யாரும் துப்பாக்கி வைத்துக் கொள்ளலாம் .அது அவர்களது உரிமையாம் .விளைவு தினம் அதன் பலனை அது கண்டு வருகின்றது.
அந்த 'உரிமை' என்ற பெயரில் மற்ற நாடுகளில் அமெரிக்கா புகுந்து விளையாடுகின்றது.

1980 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் நடித்து  வெளிவந்த தமிழ்த் திரைப்படம் 'விஸ்வரூபம்' ஒன்று அதில் ஏதாவது பிரச்சனை இருந்ததா?
கமல் நடித்த விஸ்வரூபதிற்கு ஏன் இந்த பிரச்சனை?
கமல் ஒரு நல்ல மனிதராக ,உயர்ந்த சிந்தனையாளராக நல்ல நடிகராக இருக்கலாம் .
அவர் பல கோடிகள் செலவு செய்து படம் எடுத்திருக்கலாம் .அந்த விஸ்வரூபம் படம் எந்த வகையில் மக்களுக்கு நன்மையான செய்தியை ,கருத்தை தருகின்றது என்பதனை அவரே சொல்லட்டும் .பொழுது போக்கு படமா! மனித மனதை திருத்துவதற்கு வழி வகுக்கின்றதா! மனிதநேயத்தை வளர்கின்றதா! நெஞ்சை வருடி விடுகின்றதா!

கொலை வெறி பாடல் வந்து அந்த பாடலை பொருள் விளங்காத குழந்தைகளும்  பாடினார்கள் .விதையிலேயே  நச்சுப் பொருள் கல்ந்துவிட்டது போல் அது அமைந்து விட்டது.
விஸ்வரூபம் என்ற வார்த்தைக்கு எத்தனை பேருக்கு பொருள் விளங்கும் 
 (விஸ்வரூபம் என்பது கடவுளாக அவதாரம் எடுத்தவர் தன்னை மிகப் பெரிய உருவமாக்கிக் கடவுளாகக் காட்டுவது.)
.காரணம் விஸ்வரூபம் என்ற பெயர் தமிழ் பெயர் இல்லை.நடிகர்களை இஸ்லாமிய பெயர் வைத்து நடிக்க வைத்து (தீவிரவாத கருத்துக்கு எதிர்ப்பாகவோ!) அதற்கு ஏன் விஸ்வரூபம் என்ற படத்தின் பெயர் கொடுக்க வேண்டும்! விஸ்வரூபம் அமெரிக்காவுக்கு ஆதரவான படம் அதனால்தான் அமெரிக்காவில் போய் தங்கி அதனை அங்கும் வெளியிடுகிறார்

கவியரசு வைரமுத்து அவர்கள் தான் எழுதிய சில வரிகளை நீக்கினார் கிருத்துவ சகோதரர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க. அது பெருந்தன்மை. தவறு செய்பது இயல்பு .அதனை திருத்திக் கொள்வது உயர்வு . அதே வழியை கமல் அவர்களும் கடைபிடிக்கலாம். கமல் என்ற தனி  நபர் மீது  யாருக்கும் வருத்தமில்லை . படத்தில் தவறு இருப்பதாக சொல்கிறார்கள்.அதனை அவர் சிறிது சிந்தித்து செயல்பட்டு உயர்வடையட்டும்.அதுதான் நம் விருப்பம் . .தமிழ் நாட்டில் நல்ல குடும்பத்தில் பிறந்து  வளர்ந்தவர், தன்னோடு கூடி வாழும் இஸ்லாமிய சகோதரர்களின் மனம் புண் படாமல் செயல்படட்டும் என்பதே நமது விருப்பம் .சகோதரத்துவம் தொடரட்டும் .

Who created the universe? Who is the cause for this ‘VISWAROOPAM’ (Universe)? GOD?
விஸ்வரூபம் என்பது கடவுளாக அவதாரம் எடுத்தவர் தன்னை மிகப் பெரிய உருவமாக்கிக் கடவுளாகக் காட்டுவது.

Thursday, January 24, 2013

மனம் மகிழ, வாசகர்களுக்குப் பயனுள்ள நூல்கள் சில...

மனம் மகிழுங்கள்
ஆசிரியர்: நூருத்தீன்

பதிப்பகம்: பழனியப்பா பிரதர்ஸ்

பதிப்பு: 2012

பக்கங்கள்: 195

விலை: ரூ. 140.00
ISBN: 978-81-8379-584-5



இந்நூலைப் பற்றி

இன்பம். மகிழ்ச்சி! ஆண்டிமுதல் ஆள்பவன்வரை, மூட்டை தூக்கும் முனுசாமிமுதல் மூட்டை மூட்டையாய்ப் பணம் வைத்துக் கொண்டிருக்கும் அம்பானிவரை, எல்லோருக்கும் அது பொதுவான தேடல். அனைவரும் அதைத் தேடி அலைந்து, திரிந்து, ஆன்மீகம், பெண் மோகம், போதை என்று என்னென்னவோ முயற்சி செய்துவிட்டு கடைசியில் ஞானமாய் வார்த்தை வரும் - "எல்லாம் மனசுல இருக்குபா!"

மனசு! அதுதான் எல்லோருக்கும் இருக்கிறதே! ஆனால் மன நிறைவு? இன்பம்?

மன மகிழ்வு என்பது என்ன என்பதை எல்லோரும் உணர்ந்து வாழ ஆரம்பித்தால் பாலாறும் தேனாறும் ஓடி, நாடு வளம் பெறும்; உலகம் சுபிட்சம் அடையும்; அமெரிக்கா நல்ல பிள்ளையாகிவிடும்; உலகில் தீவிரவாதம் குறையும் என்றெல்லாம் அதீத நம்பிக்கைக்கு நாம் ஆளாகி விடக்கூடாது. குறைந்த பட்சம், அவரவரும் மெய் மகிழ்வுடன் வாழ்க்கையை அணுகலாம்; உய்யலாம்; சமர்த்தாய் வாழப் பழகலாம். அவ்வளவே!

மனசு, நெஞ்சு, மூளை, இதயம் இவை எல்லாவற்றையும் கூறுபோட்டு, அனாடமி, தத்துவ ஆராய்ச்சி என்றெல்லாம் பண்ணாமல், பொதுவாய் மனசு, மகிழ்ச்சி, அர்த்தமுள்ள வாழ்க்கை என்பதை அடிப்படையாய் அமைத்துக் கொண்டு,

மனம் மகிழும் முயற்சி, இந்நூல். அவ்வளவே! அளவளாவிக் கொள்வோம்.

- நூருத்தீன்
-------------------------------------------------------------
 அன்பிற்குரிய அண்ணன் ஜின்னா அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்.

இந்நேரம்.காம் இணைய தளத்தில் நான் எழுதிய மனம் மகிழுங்கள் அல்லாஹ்வின் அருளால் நூலாக வெளிவந்துள்ளது. சென்னையிலுள்ள பழம்பெரும் புத்தக நிறுவனமான பழனியப்பா பிரதர்ஸ் இதனை வெளியிட்டுள்ளனர்.

வாசகர்களுக்குப் பயனுள்ள நூலாக இது அமையும் என்பது என் தாழ்மையான கருத்து. இன்ஷா அல்லாஹ் இதை வாங்கவும் பரிசளிக்கவும் பரிந்துரைக்கவும் கேட்டுக்கொள்கிறேன்.



அன்புடன்,
-நூருத்தீன்
 www.darulislamfamily.com
------------------------------------------------------------------------------------
  
- தோழர்கள்!

புனிதர்களின் அற்புத வரலாறு!

முதலாம் பாகம் ஆசிரியர்: நூருத்தீன்

பதிப்பகம்: சத்தியமார்க்கம் பப்ளிகேஷன்ஸ்

பதிப்பு: 2011 பக்கங்கள்: 372  விலை: Rs. 150.00

இந்நூலைப் பற்றி

 இறைவனின் இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மூலம் இஸ்லாமிய மீளெழுச்சி துவங்கியபின், நாகரீக இலக்கணத்திற்கு உட்படாத முறையற்ற வாழ்வை வாழ்ந்து கொண்டிருந்த அதே அரேபியர்கள் சுடர் விடும் நாயகர்களாக உலா வந்தனர்.

முஹம்மது (ஸல்) அவர்களின் புகழ்பெற்ற தோழர்களின் வரலாறுகள் தமிழில் நிறைய உண்டு. ஆனால் பரவலாக அறியப்படாத தோழர்களின் வரலாற்றைக் கூறும் முதல் தொகுப்பு இது எனக் கூறலாம்.

இஸ்லாமிய தமிழ் இதழியலின் முன்னோடிகளில் ஒருவரான அறிஞர் பா. தாவூத்ஷா அவர்களின் பேரனும் பா.தா. அவர்களின் இதழியல் சேவையில் தம்மை முற்றிலும் ஈடுபடுத்திக்கொண்ட அவர்தம் மகனார் என்.பி. அப்துல் ஜப்பார் அவர்களின் மகனுமான சகோ. நூருத்தீன் அவர்கள் இந்நூலை யாத்திருக்கிறார்.

பன்னூலாசிரியர் சகோ. அதிரை அஹ்மது அவர்கள் மதிப்புரையில் கூறியிருப்பது போன்று...

“இந்நூலை, நபித்தோழர்கள் வரலாற்றைத் தெரிந்து கொள்வதற்காக ஒருமுறை வாசிக்க வேண்டும். இத்தொகுப்பை எத்தகைய அருமையான மொழி நடையில் அமைத்துள்ளார் என்பதை அறிந்துணர்வதற்காக இன்னொரு முறை படிக்க வேண்டும். மேன்மக்களான தோழர்களின் வரலாறுகள் மூலம் படிப்பினை பெறுவதற்காக மேலும் மேலும் படிக்க வேண்டும்.
---------------------------------------------------------------------------------------------------------------


 நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக.,.

நீங்கள் ஆர்வமுடன் கையில் தாங்கியிருக்கும் இந்த புத்தகம் பல வகைகளில் தனித்துவமிக்கதாக திகழப்போகின்றது (இறைவன் நாடினால்). ஒரே எழுத்தாளரின் நடை, சிந்தனை ஓட்டத்திலிருந்து விலகி உங்களுக்கு புதுவித அனுபவத்தை கொடுக்கும் இந்நூல், இணையத்தில் செயலாற்றும் பல்வேறு முஸ்லிம் பதிவர்களின் சிறந்த படைப்புகளை ஒருசேர இங்கு கொண்டுவந்து சேர்க்கின்றது.

வெவ்வேறு விதமான எழுத்து நடைகள், வித்தியாசமான சிந்தனைகள், பலதரப்பட்ட பார்வைகள். இப்படியான ஒரு பயணத்திற்கு தான் நீங்கள் ஆயத்தமாகி கொண்டிருக்கின்றீர்கள். ஒரு தலைப்பிலிருந்து அடுத்த தலைப்பிற்கு மாறும் போது நீங்கள் உணரப்போகும் தனித்துவத்தையும், வாசிப்பு  அனுபவத்தையும் உங்கள் பார்வைக்கே விட்டுவிடுகின்றேன்.

முஸ்லிம் பதிவர்களின் நூலான "எதிர்க்குரல்" கிடைக்கும் இடங்கள் குறித்த விபரங்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. பார்க்க 
http://www.ethirkkural.com/2013/01/blog-post_10.html
 ----------------------------------------------------------------------------------------------------------------  அழிக்கப் பிறந்தவனின் கதை!
 

போன வருடம் புத்தகக் காட்சியின் போது கிழக்கு முட்டுச் சந்தில் பாரா சொன்னார். “இந்த வருஷம் ஒரு கதை எழுதுடா! கதைப் புஸ்தகம் இப்போ நல்லா சேல்ஸ் ஆவுது”. நான் ஒரு மோசமான கதை சொல்லி என்று எனக்கே தெரியும். எனவே நழுவப் பார்த்தேன்.

பிப்ரவரி முதல் வாரத்தில் ஒரு நாள் கூப்பிட்டார். “கதை எழுத சொன்னேனே? என்ன டாபிக்குன்னு முடிவு பண்ணிட்டியா?”

“இல்லை சார். எனக்கு கதையெல்லாம் எழுத வராது”

“எல்லாம் வரும். ஒன்லைனர் சொல்றேன். அப்படியே நூல் புடிச்சி போய், ஒரு இருவத்தி ரெண்டாயிரம் வார்த்தைலே எழுதிடு”

 
   பார்க்க   http://www.luckylookonline.com
 

மூளைக்குள் ஒரு பயணம் செய்வோம்

 மூளை செய்யும் வேலை
மூளைக்குள் ஒரு பயணம் செய்து அதன் வேலையை அறிவோம்
 பயணத்தை தொடர இங்கு சொடுக்கு செய்யுங்கள்   

படமும் ,விளக்கமும் ஆங்கிலத்தில் இருக்கும்

மனித மூளை மனித நரம்பு மண்டலத்தின் தலைமையானதும், மனித உறுப்புகளில் சிக்கலானதும் ஆகும். மனித மூளை, விழிப்புணர்வு இன்றியும் நிகழும், இச்சை இன்றிய செயற்பாடுகளான மூச்சுவிடுதல், சமிபாடு(செரிமானம்),இதயத்துடிப்பு, கொட்டாவி[1] போன்ற செயற்பாடுகளையும்,[2] விழிப்புணர்வுடன் நிகழும் சிந்தனை, புரிதல், ஏரணம் போன்ற சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது. மற்ற எல்லா உயிர்களையும் விட இத்தகைய சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளைச் சிறப்பாக கையாளும் திறனை மனித மூளை பெற்றிருக்கிறது.

மனிதனின் மூளை, மற்ற பாலூட்டிகளின் மூளையின் பொது வடிவத்தினை பலவாறு ஒத்திருப்பினும், அவற்றின் மூளைகளைக் காட்டிலும் உடல் எடை-மூளை அளவு விகிதத்தில் குறைந்தது ஐந்து மடங்கு பெரியது. இதற்குக் காரணம், மனித மூளையின் நன்கு விரிவடைந்த பெருமூளைப் புறணிப் (cerebral cortex) பகுதியாகும். நரம்பிழையத்தால் (neural tissue) உருவாகி, பல தொடர் மடிப்புகளை கொண்ட இப்பகுதி மனிதனின் முன்மூளையில் அமைந்துள்ளது. குறிப்பாக, பிற விலங்குகளில் இருந்து மனிதனைப் பிரித்துக்காட்டும் சிறப்பு செயல்பாடுகளான, தற்கட்டுப்பாடு, திட்டமிடல்,பகுத்தறிதல், கற்றறிதல் ஆகியவற்றிக்குக் காரணமான மூளையின் முன் மடல்கள் மனித மூளையில் நன்கு விரிவடைந்து காணப்படுகின்றன. மேலும், கண் பார்வைக்குக் காரணமான பகுதியும் மனித மூளையில் நன்கு வளர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது.

          தொடர்ந்து படிக்க
மூளை - 1
மூளை - 2

விஸ்வரூபம் திரைப்படத்தை ஏன் எதிர்கிறார்கள்?

விஸ்வரூபம் பார்த்தவர்கள் அது திரையிடக் கூடாது  என்று சொல்லும் காரணத்தை வீடியோவில் பாருங்கள்
25ந்தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்த சூழலில் படத்தில் இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்து இருப்பதாக முஸ்லீம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு

Wednesday, January 23, 2013

கல்யாணமாம் கல்யாணம்

 கல்யாணமாம் கல்யாணம்

ஊரலசி உறவலசி
      உண்மையான நட்பலசி
பாரலசிப் பார்த்துவொரு
      பசுங்கிளியக் கண்டெடுத்து

வேரலசி விழுதலசி
      வெளியெங்கும் கேட்டலசி
ஆறேழு உறவோடு
      அணிவகுப்பார் பெண்பார்க்க

மூடிவச்ச முக்காடு
      முழுநிலவோ தெரியாது
தேடிவந்த ஆண்விழிக்கு
      தரிசனமும் கிடையாது

ஆடியோடி நிக்கயிலே
      ஆளரவம் காட்டாமல்
ஓடிப்போய் பாத்தாலோ
      உதைபடவும் வழியுண்டு

பாத்துவந்த பெரியம்மா
      பழகிவந்த தங்கச்சி
நூத்தியொரு முறைகேட்டா
      நல்லழகுப் பெண்ணென்பார்

Friday, January 18, 2013

வாழ்த்துகள் கவிஞர் புகாரிக்கு

வாழ்த்துகள் கவிஞர் புகாரிக்கு

அன்புடன் புகாரி
நான் பிறந்த ஊர்
வானூறி மழை பொழியும் வயலூறி கதிர் வளையும் தேனூறி பூவசையும் தினம்பாடி வண்டாடும் காலூறி அழகுநதி கவிபாடிக் கரையேறும் பாலூறி நிலங்கூட பசியாறும் உரந்தையில் நான் பிறந்தேன்

தஞ்சாவூரையும் பட்டுக்கோட்டையையும் இணைத்து ஒரு கோலம் போட்டால் சிரிக்கும் பூசணிப்பூவை நீங்கள் ஒரத்தநாட்டின் கொண்டையில்தான் செருகவேண்டும்.

தென்னங்கீற்றைப் போல வாரி வகிடெடுத்த தெருக்கள் ஒரத்தநாட்டிற்குப் பேரழகு. உரந்தை என்று சுருக்கமாக அதன் பெயர் கொஞ்சப்படும்.

என் ஊரைப்பற்றி நான் சொல்லிவிட்டேன் என்னைப்பற்றி என் கவிதைகள் சொல்லட்டும்.
 அன்புடன் புகாரி
http://anbudanbuhari.blogspot.in/

JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
"Allah will reward you [with] goodness."

S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.

Thursday, January 17, 2013

தலைமகன்

அப்பாவின் போனஸ் காசோலையாய் வந்தது
அம்மாவின் நகைகளோ கரன்சியாக மாறியது
வீட்டுப்பத்திரமோ வங்கியில் சரணம்
அம்மாவுக்கு தந்த சீதனக் காணி
சடுதியில் கைகள் மாறி
காந்தி தாத்தாபடம் போட்ட
சலவைத்தாளாய் ஆனது

இத்தனையும் போதாதென்று
அக்காவின் திருமணத்திற்கு
சேர்த்துவைத்த பொன்னகை சல்லிசாக
சென்றன சேட்டுக்கடை நோக்கியே
பாட்டி காதில் மினுமினுத்த வைரகம்மலும்
செவிமடலை விட்டு கழன்று போனது

வந்திருந்த தீபாவளி புத்தாடை காணவில்லை
வருடந்தோறும் செய்து வந்த பட்சணங்கள்
சுவைக்கவில்லை
பட்டாசு ஒன்றைக்கூட கையாலே
தொட்டதில்லை
அத்தனையும் விட்டுக்கொடுத்து
குடும்பத்தினர் தலைமகனை
மேல்நாடு அனுப்பிவைத்தர்

மேல்படிப்பு முடித்தமகன்
அத்தனையும் மீட்டிடுவான்
அமோகமாக வாழ்ந்திடுவான்
சென்ற செல்வம் திரும்பி வரும்
செல்லமகள் கரைசேர்வாள்
சோர்ந்த உள்ளம் மலர்ச்சி கொள்ளும்
எண்ணில்லா கனவுகளுடன்
நாளதனை எண்ணிக்கொண்டு
நல் வழியை எதிர்பார்த்து
ஆவலுடன் காத்திருந்தர்

Wednesday, January 16, 2013

சௌதி மரண தண்டனை நடைமுறையும், ஷரியா சட்டமும்

மரண தண்டனைகள் அதிகம் நிறைவேற்றப்படும் நாடுகளில் ஒன்றான சௌதி அரேபியாவும் ஷரியா சட்டமும்-- ஒரு கண்ணோட்டம்

குற்றவியல் ஒரு பகுதி  
மரண தண்டனை பற்றி விளக்கம் ஒலியில் கேளுங்கள்
மரண தண்டனை எங்கள் அரசால் உண்டாக்கப் பட்டதல்ல ..இது மார்க்கத்தின் ஒரு பகுதி. நாங்கள் குர்ஆனை .  நம்புகின்றோம்
இதனை கிளிக் செய்து  ஒலியில் கேளுங்கள்
---------------------------------------------------------------------------------------
ஷாரியா சட்டமும் சவுதி அரேபியாவும்
சீனாவில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் மரண தண்டனைக்குட்படுத்தப்படுகின்றனர். ஆனால் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்ற விபரத்தை அந்நாடு வெளியிடுவது கிடையாது. சீனாவைத் தவிற மற்ற நாடுகளில் கடந்த 2010 ஆம் ஆண்டு 527 பேர் மரண தண்டனைக்கு உட்படுத்த்தப்பட்டனர். 2011 ஆம் ஆண்டு இத்தண்டனை 676 ஆக உயர்ந்து விட்டது. அதிக அளவில் மரண தண்டனைகள் நிறைவேற்றப்படும் நாடுகள் பட்டியலில் சீனாவுடன், இரான், இராக், சவுதி அரேபியா, வட கொரியா, சோமாலியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இருக்கின்றன.

  மேலும் படிக்க இதனை கிளிக் செய்து படியுங்கள்  http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/01/130116_saudikilling.shtml

Monday, January 14, 2013

எழுத்தாற்றலை வளர்த்துக் கொள்வோம் வாருங்கள்.பா-2

இந்த தொடரின் முதல் பாகத்தை வாசிக்க   இங்கே அழுத்துங்கள்
இனி எழுத்தாளர்களுக்கு ஏற்படும் பிரச்சனைககளைப் பற்றிப் பார்ப்போம்.

                                                              2. பிரச்சனைகள்

எழுத்துத் துறையில் தொழில்நுட்பம் சார்ந்த விடயங்களை முடிந்த வரை தெரிந்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.உதாரணத்திற்கு ‘சீனாவில் சாய்லுன்’ என்பவர் முதன்முதலில் காகிதத்தை கண்டுபிடித்த பிறகு தான் அக்காலக்கட்டத்தில் சீனா பண்பாட்டுத்துறையில் மேலைநாடுகளை விட முன்னேற்றமடைய ஆரம்பித்தது. ஒரு சீனா அறிஞர் தமக்கு தேவையான மூங்கிலால் செய்யப்பட்ட  நூல்களை எடுத்துச் செல்வதாக இருந்தால் கூட அவற்றை பெரிய பார வண்டியில் ஏற்றிச் செல்ல வேண்டியிருந்தது.இந்த அடிப்படையில் ஓர் அரசின் நிர்வாகத்தை நடத்துவது எத்துணை கடினமாக இருந்திருக்கும் என்பதை ஊகித்துக் கொள்ளலாம்.


                                                                    மரநூல்

மூங்கில் கழிகளை வெட்டி கூழாக்கி ககிதம் தயாரிக்கும் ‘சாய் லுன்’ ஒவியம்.
                    மேலும் விபரங்கள் அறிய இந்த வீடியோவைப் பாருங்கள்

சவூதி ஆட்சிக்குள் (காணொளி ஆங்கிலத்தில்) Inside the Saudi Kingdom (BBC Documentary)

சவூதி ஆட்சிக்குள் (காணொளி ஆங்கிலத்தில்) Inside the Saudi Kingdom (BBC Documentary)

Sunday, January 13, 2013

கருத்தைச் சொல்லுங்கள்!

கருத்து வேறுபாடுகள் கலங்க வைக்காது கலக்க வைக்கும்
கருத்தை சொல்வதுவரை பொறுத்திரு
கருத்தை சொல்வதற்கு முன் சிந்தி
கருத்தை கத்தி சொல்லாதே
கருத்தை அறிந்து கொள்! அறிய வை !
கருத்துக்கு ஒரு கரு வேண்டும்
கருத்து அனைத்தும் உடன்பாடாகிவிடாது
கருத்து சொல்லப்பட்டால் ஆய்வு செய்
கருத்து நிலையானதல்ல
கருத்தை ஆய்வை உருவாக்கும்
கருத்தை களையெடுத்து புதிய கருத்தை உருவாக்கு
கருத்தை சொல்வதால் பிரச்சனைகள் வரலாம்
கருத்தினால் வரும் பிரச்சனையை எதிர்  கொள்
கருத்து  சொல்வதின் ஆற்றல் இறைவனால் கொடுக்கப்பட்ட ஆற்றல்
கருத்து சொல்வதற்கும் ஒரு திறமை வேண்டும்
கருத்து சொல்வது மக்களுக்கு கொடுக்கப்பட்ட குடியுரிமை

Saturday, January 12, 2013

ஆஸ்கர் பரிந்துரை "Life of Pi" (3-D) லைஃப் ஆஃப் பை படம்


"Life of Pi" (3-D) படம் பார்த்தேன். மிகவும் பிரமாண்டம். என்னை மிகவும் பாதித்தது. படத்தின் ஆரம்பத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள் யாவும் தமிழ்நாட்டில்தான். அதில் ஒரு பள்ளிவாயிலில் தொழுகை நடைபெறுவதைக் காட்டுகிறார்கள். "குத்பா பள்ளி" என்று தமிழில் பெயர்ப்பலகையில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்திலுள்ள பள்ளி என்று நினக்கிறேன். வெள்ளைத் துப்பட்டி அணிந்த பெண்களின் நடமாட்டம் வீதியில் இருக்கிறது. இது எந்த ஊர் பள்ளி என்ற விவரம் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்.

Abdul Qaiyum s
----------------------------------------
 இந்தியர்களின் கனவாக இருந்த ஆஸ்கர் விருதை நனவாக்கியவர் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். தற்போது ஆங்கிலத் திரைப்படத்தில், தமிழில் தாலாட்டுப் பாடலை எழுதி, பாடிய பின்னணிப் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ‌, ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். லைப் ஆப் பை என்ற படத்தில், அந்த பாடலை பாம்பே ஜெயஸ்ரீ எழுதி இசையமைத்து பாடியுள்ளார். இந்த பாடலை எழுதியதற்காக அவர் பெயர் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது


--------------------------------------------------

வேண்டாதவர் இருந்தால் விவசாயம் செய்ய இடம் கொடு!

விவசாயம் செய்ய அப்பா விட்டுப் போன நிலமிருக்கு
விவசாயம் செய்ய ஆசையிருக்கு
விவசாயம் செய்ய பணமிருக்கு
விவசாயத்திற்கு வேண்டிய விதையிருக்கு

விவசாயம் செய்தால் நீர் வேண்டும்
விவசாயம் செய்து கிடைத்த நெற்களை விற்க வேண்டும்
விவசாயம் செய்தால் வேலிதான் மிஞ்சுமாம்
விவசாயம் செய்வதை விட்டு மனையாக்கி விற்றால் பணம் கிடைக்குமாம்

வேண்டாதவர் இருந்தால் விவசாயம் செய்ய இடம் கொடு
வேண்டாதவர் விவசாயம் செய்து பணத்தை விடுவார்
வேதனையடைந்து மனம் நோவார்
வேதனை வேண்டாம் அரசைக் கேள் பணம் தருவார் எனத் தப்பித்துவிடு

விவசாயம் செய்ய விட்ட நிலத்தை வாங்க நீதிமன்றம் அலைய வேண்டும்
விவசாயம் செய்ய விட்ட நிலத்தை விலை கொடுத்து நாம் வாங்க வேண்டும்
விவசாயமும் வேண்டாம் வேண்டாத தொல்லையும் வேண்டாம்
விவசாய நிலத்தை பல மனையாக்கி விற்று பணம் சேர்ப்போம்

Friday, January 11, 2013

உன்னையே நேசிக்கிறேன்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
112:1 قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ
112:1. (நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
112:2 اللَّهُ الصَّمَدُ
112:2. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
112:3 لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ
112:3. அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.
112:4 وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ
112:4. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை - குர்ஆன்

=======================================================================

உன்னையே நேசிக்கிறேன்
உன்னையே .(உன்னிடமே) யாசிக்கிறேன்
உன்னையே நாடுகிறேன்
உன்னையே போற்றுகிறேன்

உன்னையல்லால் யார் உதவுவார்
உன்னையல்லால் யாரைக் கேட்போம்
உன்னை நாடியோர் கை விடப்படார்
உன்னை நோக்கி ஓர் அடி வைத்தால்
என்னை நோக்கி ஓடி வருவாய்

சிந்தனைகள் ,கருத்துகள் .தூண்டுதல்கள்  அனைத்தும்  இறைவனது அருட்கொடை அது  உங்களின் ஒருவனாக நானும்  இருப்பதின்  வெளிப்பாடு . தனியே பிறப்பது இருவரின் கூட்டு முயற்சி. வந்தவுடன் அரவணைத்து  வாழ்த்துவோர் அநேகம் . அவர்களின்  நன்மையை  நாடும் ஒருவனாக  இருப்பதிலேயே  என்  உயர்வின்  அடித்தளமாக அமையும் . தூற்றுவோர்  இருக்க துவள வேண்டியதின்  நிலைப்பாடு  வேண்டாம் . தூக்கிச்  செல்வோர்  வசை பாடி இசை பாட  இறைவனும்  என்னை  கனலில் விட்டு  விடுவதை நான் அஞ்சுகிறேன். தென்றலாய்,  தேன் மதுரச் சுவையாய்  இருக்கட்டும்  உங்கள்  வாய்  மொழி.

நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களுக்கு எவ்வித அநியாயமும் செய்வதில்லை - எனினும் மனிதர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொள்கிறார்கள் [குர்ஆன் 10:44]

மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும்; தூய்மையும்) உடையோராகலாம்.
குர்ஆன் 2:21


Habibi means 'My love' or 'My beloved'. .

Thursday, January 10, 2013

தொட்டால் சுருங்கி செடிபோல் தொட்டால் சிணுங்குகிறாய்

பாவையின் வருகையால் கண்கள் குளிர்ந்திட
பாதையோர் வருகையால் பார்வை குனிந்தது
முகிலின் வருகை நிலாவை மறைத்தது
செவ்வாய் உதடுகள் பற்களை மறைத்தன

தொட்டால் சுருங்கி  செடிபோல் தொட்டால்  சிணுங்குகிறாய்
சூரிய ஒளி காணாமல் சூரியகாந்திப் போல் தொய்வாகிறாய்
மூங்கில் தோளைக் கொண்டவளே உன் தோளில் தாடை  வைப்பேன்
முல்லை அரும்பின் கோர்வைப்  பற்கள் காண குலுங்கிச் சிரித்திடு

ஓடி ஒலிவதால் உள்ளம் துவண்டிடுமோ
தேடிப்  படித்து தேர்வில் தோற்றதால் தொய்வு வந்திடுமோ
திரும்பத் திரும்ப படித்து தேர்வில் வெற்றி பெறுவேன்
தேடி வந்து உன்னை உயர்வாக்கி வைப்பேன்


தோல்வியைக் கண்டு  துவளவுமில்லை துறவரமுமில்லை 
தோல்வியில்  தவறியது திரும்பக் கிடைக்க திமிர் கொண்டேழுவேன் 
தோல்வி துவண்டுவிடுவதால்  வந்ததல்ல
தோல்வி திரும்பவும் எழ முடியாமையால் வருவது

தவிக்கவிட்ட என் தந்தையே!


மு.ஹாஜரா, இரண்டும் ஆண்டு  ஆங்கிலம் இலக்கியம்
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி

20-11-2012 இன்று என் அத்தாவுடன் சேர்த்து, என் சந்தோஷங்களையும் அடக்கிய நாள்.

அத்தா! உங்கள் அழகு முகத்தைப் பார்த்த இறுதி நாள். நான் உங்களிடம் மனம்விட்டு பேசி. அதை நீங்கள் கவனிக்காமல் படுத்திருந்த முதல் நாள்!

 என்னை முதன் முதலாக பள்ளியில் சேர்க்கும்போது, ஆசிரியரிடம் "என் மகளை அடித்துவிடாதீர்கள் !" என்று பாவமாகக்  கேட்ட உங்கள் முகம் இன்னும் என் ஞாபகத்தில்! இந்த வயதிலும் என்னை சிறு பிள்ளையாக நினைத்து கொஞ்சுவீகள்.பத்து வயது வரை என்னைத் தூக்கிக் கொண்டே பள்ளிக்கூடம் போவீர்கள். அம்மா என்னைக் கடிந்து பேசும் போதெல்லாம் எனக்காகப் பரிந்து பேச வருவீர்கள், எனக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்து என்னைத் திட்டியதோ அடித்ததோ இல்லை நீங்கள்!

  பழங்களை உரித்து வாயில் ஊட்டிவிடுவீர்கள். சின்ன சிரமங்களைக் கூட எனக்குக்  கொடுக்காமல் இருந்துவிட்டீர்கள். பதினெட்டு வருடம் கழித்துப் பெற்றது. இந்த தவிப்புகளை எல்லாம் எதிர் கொள்ளத்தானா அத்தா? எல்லோரும் சொல்வார்கள், நான் குழந்தையாக இருந்த பொது, என்னிடம் கேட்பீர்களாம், "எப்போது என்னை அத்தா என்று கூப்பிடுவாய் ?" என்று! இப்போது 'அத்தா அத்தா ' எனக் கதறுகிறேன் , என் கதறல்களைக் கேட்க முடியாத தூரத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை மறந்து!

  சிறு வயதில்என்னைத் தூக்கிக் கொண்டு நிலா காட்டுவீர்கள். நிலா கடித்து விடும் எனப் பயந்து , உங்கள் தோளில் சாய்ந்து கொள்வேன் . அப்போதே எனக்குத் தெரிந்திருக்கிறது.  எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் உறுதுணையாக உங்கள் தோள் இருக்கிறது என்று, என் வாழ்நாளில்,எதற்கும் நீங்கள் வருத்தப்பட்டோ , சோர்ந்திருந்தோ  பார்த்ததில்லை. எத்தனை தொல்லைகள்  வந்தாலும் , எப்பொழுதும் உங்களுக்கே உரித்தான குறும்புப் பேச்சுடன் அமைதியாக சிரித்துக் கொண்டிருப்பீர்கள்.

  ஒரு நாள் இரவு கொசுக்கடியால் அவதிப்பட்டேன் . நடு இரவு என்றும் பாராமல் உங்கள் மகளுக்காக எழுந்துவந்து , போர்வை போர்த்திவிட்டீர்கள். தூங்கிக் கொண்டிருப்பது போல் நடித்துக் கொண்டு  உள்ளுக்குள் எவ்வளவு பூரித்தேன் என்று தெரியுமா அத்தா? பலமுறை என்னிடம் கேட்டுள்ளீர்கள்.  வயதான காலங்களில் எங்களைக் கவணிப்பாயா ? என்று! நான் நக்கலாகச் சிரித்துவிட்டு, மனதிற்குள் நினைப்பேன். சொல்லில் காட்டாமல் செயலில் காட்டவேண்டும்  என்று! நான் சம்பாதித்து உங்களை ராஜாவாக வாழ வைக்க வேண்டும் என்று நினைப்பேன். ஆனால் என் ஆசைகளை சொல்லாமல் கூட விட்டுவிட்டேன்.

 நீங்கள் மும்பை போன அந்த பதினைந்து நாட்களும் நரகமாய் கழிந்தன. "நாளை வந்து விடுவீர்கள் நாளை வந்து விடுவீர்கள்" என சொல்லிக் கொண்டே நாட்களை நகர்த்தினேன். நீங்கள் என்னை நினைத்துக் கவலைப்படாதீர்கள்  அத்தா ! இனியும் அதே வார்த்தைகளைச் சொல்லியே  என்னை சமாதானப்படுத்திக் கொள்வேன்

 "கூரிய விழிகள் உன்  விழிகள்! கூர்ந்து பார்த்தால் என் விழிகள்!" என்னைப் பார்த்து கவிதைப் பாடினீர்கள் . இன்று இந்த நகல்  விழிகளில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது.அசல் விழிகளோ அசைவில்லாமல் தூங்குகிறது  . "சோர்ந்து போன நேரத்தில் சொத்தாய்  வந்து சேர்ந்தாயே " என்று கூறுவீர்கள் என்னைப் பார்த்து ! இன்று இந்த சொத்து தன்  சொத்தை இழந்து சோர்ந்து நிற்கிறது. எனக்குள் ஒரு சின்ன கர்வம் இருந்ததுண்டு . எனக்குக் கிடைத்த மாதிரி ஒரு அத்தா வேறு யாருக்கும் கிடைத்திருக்காது என்று ! கர்வம் கொண்டதாலோ என்னவோ என் கண்ணிலிருந்து அல்லாஹ் உங்களை தூரமாக்கிவிட்டான் .

 அந்தக் கடைசி தருணத்தில் மருத்துவர்  உங்களிடம், உங்கள் பெயர் கேட்டதும் , நீங்கள் பெயரைக் கூறாமல் ,கலிமா சொன்னதுமே நான் புரிந்து கொண்டேன் அத்தா! அம்மாவின் கண்களில் தெரிந்த பரிதவிப்பு. 'ஏதோ சூரா சொன்னார்கள் ' என்று என்னை பொய் சொல்ல வைத்தது ! நான் இறுதியாக உங்களை அத்தா என்று கூப்பிட்டபோது, என்னைத் திரும்பிப் பார்த்து கண்களாலே சிரித்தீர்கள் . கவலைப்படாதே " நான் நிம்மதியான சந்தோஷமான இடத்திற்குத்தான் போகிறேன்" என்று என்னை சமாதானம் சொல்வதுபோல் இருந்தது .

Tuesday, January 8, 2013

அனைத்து மொழிகளிலும் புனித குர்ஆன் .. ! The Holy QUR'AN in All language..!

அனைத்தையும் அறிவேன்! அடுத்தவனை அறியேன்!

கல்யாணராமன் வேலைத் தேடி ஒரு அலுவலகத்திற்கு போகிறார். அங்கு பேட்டி காண்பவர்கள்  கேள்விக்கு மேல் கேள்வி கேட்கின்றனர். அங்கே கேட்ட கேள்வியும் கல்யாணராமன் சொன்ன பதிலும் மற்றும் அவருக்கு வேலைத் தருவதற்கு இறுதியாக கொடுத்த விவரமும் அறிய தொடர்ந்து படியுங்கள்!

உன் பெயர் ?
கல்யாணராமன்
உன் தந்தையின் பெயர்?
கல்யாணம்.
உன் தாயின்  பெயர்?
சீதா தேவி.
உன் பெயரில்  உன் தந்தை  பெயர் சேர்ந்துள்ளதே!
அது நாங்கள் தொடர்ந்து செய்வது.
ஏன் உங்கள் தாயின் பெயரை சேர்ப்பதில்லையா!
பழக்கமில்லை .பெண்ணாயிருந்தால் கணவன் பெயரில் சேர்த்துக் கொள்வார்கள்.
ஓகோ!  பெண்ணாயிருந்தால் பெயரில் கூட தனித்து நிற்க முடியாதோ!
அப்படியில்லை. இது தொடர்ந்து வரும் பழக்கம்.
நீ என்ன படித்திருக்கிறாய்? முன்  வேலைப் பார்த்த அனுபவம் உண்டா ?
நான் கணினி பொறியாளர்  படிப்பு படித்துள்ளேன். மதிப்பெண்களும் அதிகம் வாங்கி உள்ளேன் அனால் வேலைப் பார்த்த அனுபவமில்லை,

மற்ற அனுபவங்கள் மற்றும் பொது அறிவைப் பற்றி பேட்டி தொடர்கிறது..

Monday, January 7, 2013

பெண்களுக்கு சமூகத்தில் பாதுகாப்பு வருவது நம்மிடமே!

 பெண் குழ்ந்தை வேண்டாம் என்ற காலம் மறைந்து வரும் காலம். அதற்கு முக்கிய காரணமாய் இருப்பது ஆண் மகனுக்கு திருமணம் செய்விக்க பெண் கிடைப்பது முன் மாதிரி இப்பொழுது அவ்வளவு எளிதாக இல்லை.முன்பெல்லாம் வரதட்சணை கொடுமை வாட்டி எடுத்தது. தம்பதிகளுக்குள் உறவு முறை சரியாக இல்லையென்றாலும் அடங்கிப் போகும் கட்டாயம். கணவன் இறந்தாலோ அல்லது மணமுறிவு நிகழ்ந்தாலோ பெண்ணின் நிலை சீரழிந்த நிலை. மறுமலர்ச்சி காலத்தில் அடியெடுத்து வைத்து விட்டோம் . அவசியமானால் மறுமணமும் வந்துவிட்டது மற்றும் வரதட்சணை கொடுமையும் ஒழிந்து வருகின்றது. எங்கு போய் பெண் கேட்டாலும் ஆண் மகன் என்ன படித்திருக்கிறார்? என்ன வருமானம் அவருக்கு வருகிறது? குடும்ப கௌரவமானதா இப்படி அலசுகிறார்கள்!
பெண் படித்துக் கொண்டிருக்கிறாள் அதனால் அவள் படிப்பு முடிந்துதான் திருமணம் செய்ய விருப்பம், இன்னும் சிலர் படித்தபின் அவளுக்கென்று உள்ள வேலையை தொடர்வாள் அதற்கு ஒத்து வருவதாக இருந்தால் பார்ப்போம். சில இடங்களில் பெண்ணே தனக்கு தேவையான கணவன் தகுதியுடையவனா? என்பதில் கவனம் செலுத்தும் ஆற்றல்
இத்தனைக்கும் அடிப்படைக் காரணம் பெண்கல்வியின் அருமை அறிய வந்து அதன்படி செயல்படும் நிலை உருவாகியதுதான்.
பொதுவாக பெற்றோர்களுக்கு பெண் குழந்தைகள் மீது பாசம் அதிகம். அந்த பாச உணர்வு அவர்களை மிகவும் பாதுகாப்பாக வளர்க்க விரும்புகின்றது. ஆனால் பாச உணர்வு அவர்களை சமூகத்துடன் திறந்த மனதுடன் பழக தடை போடுகின்றது. சமூகத்தின் நிலையை அவர்களோடு மனம் திறந்து பெற்றோகள் பேசுவதில்லை இதன் காராமாகவே

பெண்ணின் மனது இறக்கம் கொண்டது அன்பிற்கு அடிமையாகக் கூடியது. பணிந்து பேசும் தன்மையுடையது.வெட்கத்தோடு நளினமாகப் பேசக் கூடியது. இதனை மற்றோர் மாறுவிதமாக கற்பனை செய்யத் தூண்ட வழி வகுத்துவிடுகின்றது .செல் போன் காலத்தில் வாழும் பெண்கள் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டுமென்ற நிலையை பெற்றோர்கள் அவர்களுக்கு அறிய வைக்க வேண்டும். குழந்தையாய் இருக்கும்போது விளையாட்டுக்கு செல் போன் வாங்கிக் கொடுத்து விளையாட்டாக நாம் அறிந்தவர்களிடமெல்லாம் அவர்களை பேச வைத்து ஆசைப் பார்த்தது அவர்கள் பெரியவர்கள் ஆனா பின்பும் தொடர்கின்றது . வீட்டுக்கு வரும் அன்னிய ஆண்களோடும் அவர்களை கணிய பேச வைக்கத் தூண்டியது தொடர்கிறது. நாணமற்ற தன்மையை வளர்க்கும் ஆடைகளை வாங்கிக் கொடுத்து ஆசைப் பார்த்தது தொடர்கிறது

நீயா ! நானா !

 ஆண்கள் பலசாலிகளா!
அனைத்தையும் மற்றவர்களிடம் பகிர்ந்துக் கொள்வதில்லை. ஆண்களின் பலம் அவர்களது  வருமானம்
அவர்களது பலவீனம் அவர்கள் அதனை செலவு செய்வது .வருமானம் அதிகமாக இருக்க  கடன் கேட்பார்கள் வருமானம் குறைவாக இருப்பின் நட்பும் பாசமும் மற்றும் மற்ற  தொல்லைகளும்  அதிகமாகும் என்பதால் அதனை மறைத்தே வைப்பார்கள். அலைப்பாயும் மனதை மறைப்பார்கள். மறைவாக அத்தனையும் நடக்கும்.  hypocrite  இறைபக்தி ஒழுக்கமானவன் நம்பிக்கையாளன் இத்தனையும் இவனிடம் இருப்பதாக காட்டிக் கொள்வான். தவறான செயல்களிலிருந்து தப்பிப்பதில் திறமையாளன்

பெண்கள்  பலசாலிகளா!
அனைத்தையும் மற்றவர்களிடம் 'சூது வாது. தெரியாமல் பகிர்ந்துக் கொள்வார்கள். பின்பு மிகவும் வருந்துவார்கள்.
உணர்ச்சி வசப்பட்டவர்கள். அவர்கள் அதிகமாக பெறுவது அனைத்தும் தாய் வழி வந்தவை.எடுத்துச் செல்வது கணவன் வீட்டிலிருந்து. மனதில் இச்சை இருப்பினும் காட்டிக் கொள்ளமாட்டார்கள். ஆண்கள் அவர்களை தொடர வேண்டும் ஆனால் ஆணுக்கு தான் அடங்கி நடப்பதாக காட்டுவதில் திறமை அதிகம் . நம்பிக்கை இருக்கும் அதில் சந்தேகமும் உள்ளடக்கம். கண்ணீர் அவர்கள் சொத்து .அந்த சொத்து பல சொத்துகளை பெற வழி வகுக்கும்
இரகசியம் காப்பது குறைவு. நடிக்கவும் தெரியும் நேர்மையாக இருக்கவும் தெரியும். 

பி . கு: அனைத்தும் உண்மையாகிவிட முடியாது . ஒருவரின் கருத்து மற்றவருடன் மாறுபடும் . விவாதத்தில் வெற்றி தோல்வி இல்லை . இது விவாதமும் அல்ல .ஒருவர் மனதை ஒருவர் விவாதத்தால் மாற்றுவது இயலாதது.
உடன் வாழ்வோர் கருத்து உடன்பட்டால் உலகம் இயங்காது . ஆய்வும் ,தத்துவமும் விஞ்ஞானத்திற்கு வழி வகுக்கும் . 
இன்றைய அரசியல் நாளைய சரித்திரம் . இன்றைய ஆய்வு விஞ்ஞானத்தின் முடிவு. காயிலிருந்து பழம் வரும்.பழம் நேரடியாக வராது.
கணவனும் மனைவியும் பல கருத்து வேறுபாடுகள்  இருப்பினும் தொடர்ந்து மகிழ்வாக வாழ்கிறார்கள்( தமிழ்நாடு அரசியல் இதற்கு விதிவிலக்கு)

Friday, January 4, 2013

உங்கள் தேடுதலை எளிமைப் படுத்த உதவும் முக்கிய இணையதளங்கள்.

எதுவும் தலைநகரில் நடந்தால் தான் தலையில் ஏறுமோ!

எதுவும் தலைநகரில் நடந்தால் தான் தலையில் ஏறுமோ!
இப்பொழுதாவது தலையில் ஏறியதே!

நமது கடமை தவறை தடுப்பது
குஜராத் குல்பர்க்கா சொசைட்டி முஸ்லிம் பெண்கள் பனிரெண்டு பேர் நிர்வாணமாக்கப் பட்டு கேவலப் படுத்தப் பட்டனர்.
வயிற்றை கிழித்து குழந்தையை கொன்று தாயையும் கொன்ற கொடுமை.
இதற்கு அத்தனை முக்கியப் படுத்தி செயல்பட நிதானம்
அதனை மறந்த நிலை.

நன்மையான செயல் செய்ய தாமதமும் வேண்டாம்
தீமையான செயலை தடுக்க தாமதமும் வேண்டாம்

பெண்ணியம் பேசும் மாந்தர் பெண்களுக்கு உரிமை கேட்டனர்
பெண்ணியம் பேசும் சில மாந்தர் பெண்களுக்கு கவரும் ஆடை உடுத்துவதிலும் உரிமை கேட்டனர்
பெண்ணியம் பேசும் மாந்தர் பெண்கள் இப்பொழுது ஆடை உடுத்துவதில் முறை வேண்டும்மென்று விரும்புகின்றனர்

ஒரு குழந்தை பிறந்த பின் அதனை பாதுகாக்க தாய் படும் சிரமங்களை நினைத்துப் பாருங்கள்
நம்மைப் பெற்றவரும் ஒரு தாய்தான் அவளும் பெண்தான் தாய் என்ற சொல்லுக்கு மதம் என்ற பொருளில்லை மதமில்லை. அவளையும் மத வேறுபாடு கற்பிக்கும் கொடுமை .மனித நேயத்தை தாயோடு புதைக்க முயலும் பேதமை அழியட்டும் .

Wednesday, January 2, 2013

சலாம் ஆல்பத்தின் முக்கிய அம்சங்கள் Salaam Album Highlights


இசையை ரசிக்க மொழி முக்கியமல்ல. அருமையான கருத்தாழமுள்ள பாடல்களை பலர் பாடுவதையும் இந்த காணொளியில் காணுங்கள். இசை (music) என்பது ஒழுங்கு செய்யப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட, அழகு ஒலியாகும்.
---------------------------------------------------------
காடுகள் காற்றில் இசைக்கின்றன.
கடலின் அலைகள் இசைக்கின்றன
முகிலினங்கள் மோதி மோதி இசைக்கின்றன.
மழை ஒரு கச்சேரியே வைக்கிறது

தாய் தன் பிள்ளையின் வயிற்றில் வாயை வைத்து முகத்தை ஆட்டி ஊதுவாள். அப்போது எழும் இசைகேட்டு குழந்தை இசை நயத்தோடு சிரிக்கும். இங்கே இசைகள் எத்தனை கருவிகள் எத்தனை என்று கணக்கிட்டுப் பார்க்கலாம். சுவாரசியமாய் இருக்கும்!

மனிதன்தான் மனிதனை அடிமைப்படுத்துகிறான். கலையும் இலக்கியமும் எவரையும் அடிமைப்படுத்துவதில்லை. மனிதர்களுக்குப் புத்துணர்ச்சியையே தருகின்றன.

பறவைகளின் படபடக்கும் சிறகுகள் இசைக்கின்றன
இசையானால் என்ன, கவிதையானால் என்ன அல்லது வேறு கலைகளானால் என்ன, உன்னை முழுவதும் இழந்துவிடாத கட்டுப்பாட்டோடு மகிழ்ச்சியாய் வாழ். உண்ணு, பருகு, ஆனால் வரம்பு மீறினால் இறைவன் உன்னை மன்னிக்கமாட்டான்.

`A'ishah (may Allah be pleased with her) narrated: “Allah's Messenger (peace and blessings be upon him, came to my house while two girls were singing beside me the songs of Bu`ath (a story about the pre-Islamic war between the two tribes of the Ansar, the Khazraj and the Awus). The Prophet (peace and blessings be upon him) laid down and turned his face to the other side. Then Abu Bakr came and spoke to me harshly saying, ‘Musical instruments of Satan near the Prophet (peace and blessings be upon him)?' Thereupon, Allah's Messenger (peace and blessings be upon him) turned his face towards him and said, ‘Leave them.' When Abu Bakr became inattentive, I signaled to those girls to go out and they left.” (Reported by Al-Bukhari)

ஆயிசா (ரலி) கூறினார்: என்னருகில் இரு பெண்கள் இஸ்லாமிற்கு முந்தைய கால பழங்குடியினரின் யுத்தம் பற்றிப் பாடிக்கொண்டிருக்கும்போது இறைதூதர் என் வீடு வந்தார், முகத்தை மறுபுறமாகத் திரும்பிய நிலையில் கீழே அமர்ந்தார். அப்போது அபுபக்கர் வந்து ரசூலுக்கு அருகில் சாத்தான்களின் இசைக்கருவிகளா என்று என்னைக் கடிந்துகொண்டார். அப்போது நபிகள் நாயகம், அபுபக்கரின்(ரலி) முகமாகத் திரும்பி, ”அவர்களை விட்டுவிடுங்கள்” என்றார். இதனால், அபு பக்கர் (ரலி) சுரத்தின்றி போனதும், நான் செய்கையால் அந்தப் பெண்களை வெளியேறச் சொன்னேன், அவர்களும் வெளியேறினார்கள்.

- இசைக்கருவிகளை இசைத்தனர் பெண்கள்
- அவற்றைக் கேட்டு மகிழ்ந்திருந்தார் நாயகத்தின் மனைவி
- அங்குவந்த நபிகள் நாயகம் அதைத் தடுக்கவில்லை
- தடுக்க வந்த மாமனாரையும் நபிகள் தடுக்காதீர் என்றார்
* * * * அன்புடன் புகாரி புதிய பதிவுகள் * * *

இசையைப் பற்றியும் பாடல் பற்றியும் இஸ்லாம் சொல்வதனை ...


உப்பில் கட்டிய பாவை மழைவர கரையும்

உப்பில் கட்டிய பாவை மழைவர கரையும்
இதயம் கட்டிய உறவு உயிருடன் உறையும்
அன்பால் கட்டிய பாசம் நிலைத்து நிற்கும்
பாவையின் பார்வை பாசத்தில் திரும்ப நிலைத்து நிற்பேன்
 

நான் பேசியதை நானே அறியேன்
நீ பேசியதை நான் அறிவேன்
நான் பேசியதில் நீ குற்றம் கண்டாய்
நீ பேசியதில் நான் சுற்றம் கண்டேன்

நமக்குள் உறவு நீடிக்க விரும்பினேன்
இருக்கும் உறவை உடைக்க விரும்பினாய்
இயந்திரமாய் இயங்கி இருக்கும் இடம் திரும்புகிறேன்
உடைந்த இயந்திரத்தை இயக்க முயல்வதாய் இயம்புகிறாய்

இருமனம் ஒன்றுசேர இயன்றவரை முயல்கிறேன்
ஒருதலைக் காதலாய் முடக்கிட முயல்கிறாய்
நாளாகும் நட்பை வளர்க்க நிமிடம் போதும் நறுக்க
தொடரும் நட்பில் தொய்வு வேண்டாம்

தனிமையின் நிலை சுமையாய் இருக்க
சுமையை தவிர்க்க சுமைதாங்கியாய் இருந்திடு
பனியைத் தூவும் மேகமாய் வந்திடு
பசுமையாய் துளிரும் செடியாய் இருந்திடு

பார்வையின் பிம்பம் கனவிலும் காட்சியாய்
தனிமையின் நினைவு சுமையாய் மாறியதேன்!
தனிமையின் நினைவு மறைந்துப் போக
இறையின் நினைவில் உறைந்துப் போவேன்!

Tuesday, January 1, 2013

வாழ்த்துகள் to நஸ்ருல் முஸ்லிமீன் பள்ளிக்கூடம்


And [you will obtain] another [favor] that you love - victory from Allah and an imminent conquest; and give good tidings to the believers.
-Quran :61:13
அன்றியும் நீங்கள் நேசிக்கும் வேறொன்றும் உண்டு, (அதுதான்) அல்லாஹ்விடமிருந்து உதவியும், நெருங்கி வரும் வெற்றியுமாகும், எனவே ஈமான் கொண்டவர்களுக்கு (இதைக் கொண்டு) நன்மாராயம் கூறுவீராக! -குர் ஆன் 61:13

தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.

JazakAllah Khayr : جزاك اللهُ خيراً
"Allah will reward you [with] goodness."
To all my sisters , brothers and friends. நன்றி Jazakallah Khayran
JazakAllah Khayr (Arabic: جزاك اللهُ خيراً) is an Arabic term and Islamic expression of gratitude meaning "May Allâh reward you [in] goodness." Although the common Arabic word for thanks is shukran (شكراً), jazakallahu khayran is often used by Muslims instead in the belief that one cannot repay a person enough, and that Allâh Ta'ala is able to reward the person best. Often the response to jazakallahu khayran is Wa Iyyakum

 
S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.
 S.E.A. முகம்மது அலி ஜின்னா.
நீடூர்

JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎

"Allah will reward you [with] goodness."

எழுத்தாற்றலை வளர்த்துக் கொள்வோம் வாருங்கள்


 'எழுத்தாற்றலை வளர்த்துக் கொள்வோம் வாருங்கள்' என்ற தலைப்பு வைத்தவுடன் உங்கள் புருவங்கள் ஆச்சரியத்தில் விரியலாம். எழுத்துத் துறையில் பழுத்த அனுபவமுள்ளவர்கள் ஒய்வுபெற போகும் போது தனது அனுபவக் குறிப்புகள் இளைய தலைமுறைக்கு பயன்பட வேண்டும் எனும் நோக்கில் 'கற்றுக் கொள்ளுங்கள்' என்று பெரும்புத்தகம் எழுதுவது நடைமுறை.

நான் இந்த தொடரை ஏன் எழுதுகிறேன்? எனில், எப்படி எழுதுவது என்று கற்றுக் கொண்டு இருக்கிறேன். ஒரு விடயத்தை கற்றுக் கொள்ளும் போது, அதை கற்றுக் கொண்டே பிறருக்கு சொல்லிக் கொடுக்கும் போது இன்னும் ஆழமாக எனது மனதில் பதியும். படிப்பதை எழுதும் போது அதுவும் நல்ல பலனை கொடுக்கும்.என்னைப் போல் இணையத்தில் எழுத ஆரம்பித்திருக்கிற நண்பர்களுக்கும் பயன்படலாம்.

ஒலைச் சுவடியின் மீது எழுத்தாணியால் கீறத் தெரிந்தவர்களெல்லாம் ‘வலையேற்றம்’ செய்யும் வாய்ப்பு அன்று இல்லை, இன்று இருக்கிறது. ஒரு கணினியும் இணையவசதியும் இருந்தால் போதும் யார் வேண்டுமானலும் எழுதலாம் என்ற நிலை இருக்கிறது. முன்னொரு காலத்தில் அருந்ததி ராயும்,ஜூம்பாலகரியும் சொந்தமாய்க் கணினி வாங்கி அதில் எந்தத் திட்டமுமில்லாமல் தட்டத் தொடங்கினார்களாம். பிறகு தட்டியவைகளைச் சேர்த்துக் கட்டிபோது அது நாவலாகி விட்டதாம்.புக்கர் பரிசும் பெற்று விட்டதாம். எல்லாம் அவர்கள் சொன்னது தான்.

கையேழுத்து பத்திரிக்கை,உருட்டச்சு பத்திரிக்கை,சிறுபத்திரிக்கை அப்புறம் குமுதம்,குங்குமம்,ஆனந்தவிகடன் என்று படிப்படியாக ‘உழைத்து முன்னேறிய’ எழுத்தாளர் பெருமக்கள் பார்த்துப் பெருமூச்செறியும் வகையில் இன்று இணையத்தில் புதிதாக எழுதக் கூடியவர்கள் சிறப்பான படைப்புகளை எவ்வித பின்புலம் இல்லாமல் கொடுத்து விடுகிறார்கள்.

அதே சமயத்தில் என்ன எழுவது? எப்படி எழுவது? இணையம் எனும் பொதுவெளியில் பொறுப்போடு நடந்துக் கொள்ள வேண்டும் என்ற அக்கறையற்று எதையாவது கிறுக்குபவர்களும் இருக்கிறார்கள். ஆயிரம் பேர் ஆடுவதற்கு இடமளிக்கும் மேடை ஆயிரம் பேரையும் நடனக் கலைஞராக்கி விடுவதில்லை.தலைவர்கள் அடிமட்டத் தொண்டன்,மேதைகள்,பாமரர்கள் என்று  பிரிந்து கிடக்கும் அவமானமான நிலை முடிவுக்கு வருவதை இணையம் சாத்தியமாக்கியிருக்கிறது. ஆனால் அது அந்த சாத்தியத்தை மட்டுமே வழங்குகிறது.

சரி பாடத்திற்கு போவோமா?
    நோக்கம்
    பிரச்சினைகள்
    எழுவதின் செயல்முறைகள்
    திட்டமிடல் (Planning)
    முதல் பிரதியை எழுதுதல் (Drafting)
    மீள் பரிசீலனை செய்தல் (Revising)
    எழுதியதை சரிபார்த்தல் (Proof Reading)
    எழுத்தாளரின் பிரச்சனைகள் (Writer Block)
    உதவிக் குறிப்புகள்

யூடியூப் வீடியோவைப் பார்த்து சூரிய ஒளி விளக்கு ஏழை வீடுகளில்!

மணிலாவில் யூடுப் காணொளி பார்த்து  சூரிய பாட்டல  விளக்கு ஏழை வீடுகளில் ஆதாய நோக்குடன் அல்லாமல் ஒரு குழு  அரசு உதவியோடு  ஒரு டாலர் ஒரு விளக்கு என கொடுத்தது . இது தமிழ் நாட்டுக்கும் பயன் பெறலாம், அரசின் பார்வைக்கு தெரிய வந்தால் நல்லது, வீடியோவைப் பாருங்கள் .முடிந்தால் தமிழாக்கம் செய்யுங்கள்.
கட்டுரை  பார்க்க    இதனை கிளிக் செய்து பாருங்கள் 

வீடியோ பார்க்க  இதனை கிளிக் செய்து பாருங்கள்


A bottled liter of water with a few teaspoons of bleach is proving to be a successful recipe for dwellers in the light-deprived slums of the Philippines. The simple technology is spreading sunlight in places where it has never been, and saving residents money at the same time. Gemma Haines reports