Thursday, December 5, 2013

தன் குஞ்சு பொன் குஞ்சுதான்.

வீட்டில் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட வாய்ப்பு கிடைத்தால் அவர்களிடத்து பாசம் அதிகமாகும். அவர்களுக்கும் நம் மீது நேசம் மிகும். வீட்டில் இருக்கும்போது கணினியில் காலத்தை வெகு நேரம் செலவிடாமல் மனைவிக்கு உதவியாக இருக்கும்போது சமைக்கவும் தெரிந்துக் கொள்வது நல்லது. அதனால் மனைவிக்கு வீட்டு வேலை குறையும் .
சமைப்பதில் பொதுவாக பெண்கள் தங்கள் தாயிடம் கற்று வந்த சமையல் முறைதான் (அதிகமான பெண்களுக்குத்) தெரியும். ஆண்கள் அப்படியல்ல. எதிலும் புதுமை காண்பவர்கள்.அதனால் பலவகையில் சமைத்துக் கொடுப்பதில் ஆர்வம் காட்டுவர். சமையல் புதுமையாக இருப்பதால் வீட்டில் அனைவரும் உணவை விரும்பி சாப்பிடுவர்.


‘இன்று ஆட்டுக்கறி ஆனத்தில் (குழம்பு)முருங்கைக்காய் போட்டு சமைக்கப் போகின்றேன்’ என்று சொல்லுங்கள் . 'அப்படிச் செய்தால் ஆனம் நன்றாக இருக்காது' என்று மனைவி சொல்வாள் . அவ்விதமே நாம் சமைத்துக் கொடுத்த பின்பு ‘இதுவும் மிகவும் சுவையாகத்தான் இருக்கின்றது’ என்று சொல்லிவிட்டு நானும் அப்படி சமைத்துப் பார்க்கிறேன்’ என அவளது ஆர்வத்தை வெளிப்படுத்துவாள்.

பொழுதும் மகிழ்வாக கழியும் மற்றும் நல்ல உணவும் கிடைக்கும் .

சமையல் கலை அறிந்து விட்டால் வெளிநாடு சென்று வேலை பார்க்கும் போது உணவுப் பிரச்சனை வராமல் நாமே சமைத்து உணவை ரசித்து சாப்பிடலாம் . தன் குஞ்சு பொன் குஞ்சுதான்

நாம் சாப்பிடும் உணவு இறைவன் கொடுத்த அருளால் கொடுத்தது அதனால் இறைவன் பெயரைச் சொல்லி உண்ணத் தொடங்குங்கள் .
உண்ணும் உணவை ரசித்து உண்ணுங்கள் .
உண்பதிலும் பல வகையில் உண்டு மகிழுங்கள் .
இந்த உணவுதான் சிறந்தது என்ற பாகுபாடு வேண்டாம்.
பாவற்காய் பிடிக்காது அது கசக்கும் இப்படியாக ஏதையும் ஒதுக்க வேண்டாம் .காயும் கனியும் சுவையே .மனதை பக்குவப் படுத்தினால் இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கசப்பு, கார்ப்பு மற்றும் துவர்ப்பு ஆகிய இந்த ஆறுசுவைகளின் பண்புகளையும் கொண்ட அனைத்தும் சுவையே .
ஆறு சுவைகளும் ஒன்றுகூடி உடலை வளர்க்கப் பயன்படுகின்றன. உடலானது ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு தாதுக்களால் ஆனது. இவற்றுள் ஏழாவது தாதுவாகிய மூளை சரியாக இயங்க வேண்டுமானால், பிற தாதுக்கள் ஆறும் தகுந்த அளவில் உடலில் இருக்க வேண்டும். இந்த ஆறு தாதுக்களை வளர்ப்பவை ஆறு சுவைகளாகும்.

துவர்ப்பு ரத்தம் பெருகச் செய்கிறது. இனிப்பு தசை வளர்க்கிறது. புளிப்பு கொழுப்பை உற்பத்தி செய்கிறது. கார்ப்பு எலும்பை வளர்த்து உறுதியாக்குகிறது. கசப்பு நரம்பை பலப்படுத்துகிறது. உவர்ப்பு உமிழ் நீரைச் சுரக்கச் செய்கிறது. உடல் தாதுக்கள் பெருக்கவும் அவற்றை உடலுக்கு ஏற்றவாறு சமன் செய்வதும் ஆறு சுவைகள் கொண்ட உணவுகளாகும்.
(உதாரணம் :பிரியாணி சாப்பிட்டு விட்டு இறுதியில் அதில் பிரியாணியில் தயிர் போட்டு சாப்பிட்டு பாருங்கள்.அதுவும் ஒரு சுவைதான் .
கஞ்சியில் வாழைப் பழம் கலந்து சாப்பிட்டு பாருங்கள்.)
அனைத்திலும் புதுமை .அதை ரசிப்பதில் ஆர்வம் .
மாற்றம் தேவை மனைவியைத் தவிர

 வாழ்வை ரசிக்க வேண்டும் நாம் சாப்பிடும் உணவு இறைவன் கொடுத்த அருளால் கொடுத்தது அதனால் இறைவன் பெயரைச் சொல்லி உண்ணத் தொடங்குங்கள் . உண்ணும் உணவை ரசித்து உண்ணுங்கள் . உண்பதிலும் பல வகையில் உண்டு மகிழுங்கள் . இந்த உணவுதான் சிறந்தது என்ற பாகுபாடு வேண்டாம். பாவற்காய் பிடிக்காது அது கசக்கும் இப்படியாக ஏதையும் ஒதுக்க வேண்டாம் .காயும் கனியும் சுவையே .மனதை பக்குவப் படுத்தினால் இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கசப்பு, கார்ப்பு மற்றும் துவர்ப்பு ஆகிய இந்த ஆறுசுவைகளின் பண்புகளையும் கொண்ட அனைத்தும் சுவையே . ஆறு சுவைகளும் ஒன்றுகூடி உடலை வளர்க்கப் பயன்படுகின்றன. உடலானது ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு தாதுக்களால் ஆனது. இவற்றுள் ஏழாவது தாதுவாகிய மூளை சரியாக இயங்க வேண்டுமானால், பிற தாதுக்கள் ஆறும் தகுந்த அளவில் உடலில் இருக்க வேண்டும். இந்த ஆறு தாதுக்களை வளர்ப்பவை ஆறு சுவைகளாகும். துவர்ப்பு ரத்தம் பெருகச் செய்கிறது. இனிப்பு தசை வளர்க்கிறது. புளிப்பு கொழுப்பை உற்பத்தி செய்கிறது. கார்ப்பு எலும்பை வளர்த்து உறுதியாக்குகிறது. கசப்பு நரம்பை பலப்படுத்துகிறது. உவர்ப்பு உமிழ் நீரைச் சுரக்கச் செய்கிறது. உடல் தாதுக்கள் பெருக்கவும் அவற்றை உடலுக்கு ஏற்றவாறு சமன் செய்வதும் ஆறு சுவைகள் கொண்ட உணவுகளாகும். (உதாரணம் :பிரியாணி சாப்பிட்டு விட்டு இறுதியில் அதில் பிரியாணியில் தயிர் போட்டு சாப்பிட்டு பாருங்கள்.அதுவும் ஒரு சுவைதான் . கஞ்சியில் வாழைப் பழம் கலந்து சாப்பிட்டு பாருங்கள்.) அனைத்திலும் புதுமை .அதை ரசிப்பதில் ஆர்வம் . மாற்றம் தேவை மனைவியைத் தவிர

No comments: