Sunday, December 27, 2015

கொடூரப் பிம்பங்கள்...!

Hilal Musthafa
எதிர் எதிர் கருத்துகள் சந்தித்துக் கொள்ளும் வேளைகளில், அந்த அந்த அணியினர் தாக்கிக் கொள்ளுவது சாதாரணசாதாரணமான நடைமுறை. கொஞ்சம் கூடுதலாகப்போய்க் கொடூரமாக மோதிக் கொள்வதும் நடப்புத்தான். உலக வரறாற்றில் இது வாழைப்பழம் சாப்பிடுவது போல லேசானதாகவே நிகழ்ந்து விடுகிறது.

ஆனால் இச்செயலை ஒரு யுத்த தர்மமாகவும் போர் விதியாகவும் புரிந்து கொள்ளும் போதுதான் ஆபத்தின் தலைவாசலுக்குள் நாம் நுழைந்துவிட நேரிடுகிறது. அதிலும் எத்தகைய போரானாலும் பெண்களை அவர்களின் இருப்பிடத்திலோ அல்லது அங்கிருந்து அவர்களைப் பறித்தெடுத்து வந்தோ சிதைப்பதைத் தர்மமாக்கியதுதான் கேவலமான கொடூரம்.

இரண்டு தத்துவங்களின் கடைபிடிப்பால் போர் நிகழ்வதும் உண்டு.
அப்போதும் இதே தர்மங்கள் சட்டவிதிகள் போலவே கடைபிடிக்கப்
படுகின்றன. நாடு பிடிப்புப் போர்களிலும் இது நடைமுறையாகிறது.
தத்துவப் போர்களிலும் இதுவே தர்மமாகவும் மாறிவிடுகிறது.
எல்லாப் பொழுதுகளிலும் பெண்களே சுரண்டப் படுகிறார்கள்.

Thursday, December 17, 2015

இறைவா

இறைவா

இழந்ததெல்லாம் திரும்பத் தா இறைவா!


இழந்ததெல்லாம் திரும்பத் தா எனக் கென்றேன்


இழந்த தெவை என இறைவன் கேட்டான்!


பலவும் இழந்திருக்கிறேன் ,கணக்கில்லை


பட்டியல் ஒன்றிட்டுச் சொல்லவா இயலும்?


கால மாற்றத்தில் இளமையை இழந்தேன்


கோலம் மாறி என் அழகையும் இழந்தேன்


காதலித்து அவளிடம் இதயமிழந்தேன்


காணாமல் போனாளே அவளை இழந்தேன்


வயதாக ஆக உடல் நலமிழந்தேன்


எதை என்று சொல்வேன் நான்

மகனே...



 மகனே...
நீ என்ன விரும்பினாலும்
எனைக் கேட்டு மட்டுமே
பெறவேண்டிய சூழல்
ஒரு சமயத்தில்
உனக்கிருந்த போது
பொருட்களின்
விலையினை விட
உன் புன்னகையும்
மகிழ்ச்சியும் மட்டுமே
எனக்கு
விலைமதிப்பற்றதாக
தெரிந்தது..!!

Tuesday, December 15, 2015

அதிகாரமும் அதிகாரிகளும்

சில அதிகாரிகளால் மட்டுமே, சில காரியங்களை துணிச்சலாக செய்ய முடியும்.
அந்த நாட்களில், நான் நெல்லையில் தூய சவேரியர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த கால கட்டம் அது. மாவட்ட ஆட்சித்தலைவராக, அப்போது பசுபதி என்பவர் இருந்தார்.காமராஜர் தமிழக முதல்வராக இருந்த கால கட்டம் அது. ஜோதி வெங்கடாச்சலம் என்ற அம்மையார், அப்போது ஒரு அமைச்சராக இருந்தார். நெல்லை சென்ட்ரல் டாக்கீசில், சினிமா பார்ப்பதற்காக, அரசின் காரில், அமைச்சர் வந்து இறங்கினார். இந்த விஷயம், கலெக்டர் பசுபதியின் காதுகளுக்கு போய் சேர்ந்தது. நேரடியாக ஆய்வு மேற்கொண்ட அவர், அரசு காரை, அமைச்சர் - தன் சொந்த தேவைகளுக்கு தவறாக பயன்படுத்துவதை கண்டித்தார். அமைச்சரின் கார், உடனடியாக தியேட்டரில் இருந்து அகற்றப் பட்டது.

Monday, December 14, 2015

காசிருந்தால் எல்லாவற்றையும் வாங்கிவிட முடியுமா..!?!?


காசைக் கடவுளுடன் ஒப்பிட்டு பேசும் அளவுக்கு காசு பணம் மிக அத்தியாவசியமானதுடன் இன்றைய காலகட்டத்தில் இவ்வுலகில் காசிருந்தால் எதையும் வாங்கிவிடலாம் என்ற எண்ணமும் மேலோங்கிக் கொண்டிருக்கிறது.மனிதன் மானத்துடனும் சுயமரியாதையுடனும் கௌரவத்துடனும் வறுமை இல்லாமலும் வாழ்வதற்கு காசு பணம் மிக மிக முக்கியமானதாகும்.மறுப்பதற்கில்லை.அதேசமயம் நாகரீகமும்
நவீனங்களும் தலை தூக்கிய பின்பு இன்றைய சூழ்நிலையில் பணத்தேவைகள் ஒவ்வொரு மனிதனுக்கும் பன்மடங்கு கூடிவிட்டன.நாணயத்தின் மதிப்பும் நாளுக்கு நாள் நலிந்து கொண்டிருப்பதால் நம்தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள பெருந்தொகை தேவைப்படுகிறது என்பது என்னவோ உண்மைதான் அதுபோல இந்த சூழலில் காசு பணம் இருந்தால் எதையும் வாங்கிவிடலாம் என்கிற எண்ணம் ஒவ்வொருவரிடத்திலும் மேலோங்கிக் கொண்டிருக்கிறது என்பதும் உண்மையே.!

கவிதைச்சிறுமியவள்

Suhaina Mazhar
 added 7 new photos.
கவிதைச்சிறுமியவள்
"கவிதைன்னா என்னன்னு தெரியுமா? யாராச்சும் நாளைக்கு ஒரு கவிதை எழுதிட்டு வாங்க..."

சொன்னது 2nd STD E Section... பார்வதி டீச்சர்.

அந்த சிறுமி தன் தாய்மாமனிடம் ஓடிச் சென்று கொஞ்சி கெஞ்சி கவிதை கேட்டாள். மாமனோ ஊர்க்காரர்களால் செல்லமாக "இருமொழிப் புலவர்" என்று அழைக்கப்படுபவர்.

ஓதுவீராக என்று சொல்லி ஓத வைத்த ஜிப்ரீலை போல... "என் வார்த்தை முத்துக்களை பொறுக்கியெடுத்து நீ கோர்த்துக் கொள்" என்றார் அவர்.

எழுதுவதும் அடிப்பதும் திருத்துவதும்... திருத்தப்படுவதுமாக ஒரு அழகிய கவிதையொன்று ஒய்யாரமாக உருப்பெற்றது...

"‪#‎தமிழெங்கள்_இன்னுயிரை_தாங்கும்_மூச்சு‬" என்று ஆரம்பிக்கும் கவிதை அது. (பார்க்க படம் 2)

பென்சிலில் கிறுக்கப்பட்ட கவிதை சமர்ப்பிக்கப்பட்டது. யாருடையதென்ற கேள்விக்கு... மாமனின் கருத்து தன் விரல் வழியே வழிந்ததென்றாள் அச்சிறுமி.

Sunday, December 13, 2015

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் சாலிக்குத் தென்கிழக்காசிய இலக்கிய விருது

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் சாலிக்குத் தென்கிழக்காசிய இலக்கிய விருது


சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் சாலிக்குத் தென்கிழக்காசிய இலக்கிய விருது
தகவல் :  : 



பண்பாட்டு விருது பெறும் சாலி
 சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் சாலிக்குத் தென்கிழக்காசிய இலக்கிய விருது

அத்தா...

சொச்ச வரிகளில் எழுதமுடியா
கணம் நிறைந்த கனமான புத்தகம்;
தூரத்திலிருந்து ஓர மன கண்ணில்
காதலிக்கும் அற்புதம்;

அம்மாக்களை எழுதித்தீர்த்த
மை என்றாலும் சிரிப்பாய்;
அம்மாதான் எல்லாம் என்றாலும்
பற்கள் தெரிய ஜொலிப்பாய்;

Saturday, December 12, 2015

அன்பேவழி....!

பூமியினில் புனிதமாய்
ஆதிமுதல் வாழ்வதற்கும்
அந்தமாய் வானுலகம்
சேர்வதற்கும் அன்பேவழி

பால்புகட்டும் தாயிக்கும்
பசியுணரும் சேயிக்கும்
காதல்செய்யும் தம்பதியர்க்கும்
உலகில்வாழ அன்பேவழி

காசுபணம் கேட்க்காது
பிரதிபலன் பார்க்காது
அடைக்கும் தாளில்லாது
கொடுதுப்பெற அன்பேவழி

எனக்கான ஞாயிறு எப்போதும் ஏது ?..

நான் அகமுடையாள் ...
எனக்கான ஞாயிறு எப்போதும் ஏது ?...
தினத்துக்கும் ஒருவேலை ...
இன்றுமே அப்படித்தான் ...
அதுவும் அதிகமான வேலைகள் ..
வறுத்து ,பொறித்து ,காய்ச்சி இறக்கி ...
வக்கணையாகப் பரிமாறி ..
களைக்குமளவு உண்ணக்கொடுத்து ..
உபசரித்து நான் களைத்து ...
ஒரு கப் டீயுடன் சோபாவில் சரியும்போது ,
உண்டுக்களைத்தவர்கள் எல்லாம் ..
கண்கள் சுழல உறங்கப் போவார் !....

Thursday, December 10, 2015

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க் !

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் | படம்: ஏஎப்பி
 
மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் முஸ்லிம் குடியேற்றத்துக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் என்று குடியரசு கட்சியின் மூத்த தலைவரும் அதிபர் தேர்தல் வேட்பாளருமான டோனால்டு டிரம்ப் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் ஃபேஸ்புக் நிறுவனர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Wednesday, December 9, 2015

மழையில் பொங்கிய மனிதநேயம்! - ஜூனியர் விகடன்


மழையில் பொங்கிய மனிதநேயம்!

முகம் சுளிக்க வைக்கும் குடிசைப் பகுதிகளுக்குள் எல்லம் ஒயிட் காலர்கள் ஓடியாடி உதவுகிறார்கள். குடிசைவாசிகளோடு உணவைப் பிரித்து உண்கிறார்கள். ‘எங்கள் வீட்டில் வந்து தங்கிக்கொள்ளுங்கள்’ எனக் குரல்கள். அடுக்குமாடி குடியிருப்புகளில் விளிம்பு நிலை மனிதர்கள். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் தங்கியிருந்தவர்களுக்கு இஸ்லாமியர்கள் உணவளித்தார்கள். மொழி தெரியாத மாநிலங்களில் இருந்துகூட ஆதரவுக் கரங்கள். தண்ணீர் தராத கர்நாடகாகூட கண்ணீரோடு நிவாரணப் பொருட்களை அனுப்புகிறது. காவடி தூக்கியவர்களும், பால் குடம் எடுத்தவர்களும், மண் சோறு சாப்பிட்டவர்களும், லாயிட்ஸ் ரோட்டில் ஒப்பாரி வைத்தவர்களும் எங்கே போனார்கள்?

சவப்பெட்டி தூக்கிய இஸ்லாமியர்கள்..!

‘எங்கள் பாட்டி இறந்துவிட்டார். உடலைக் கொண்டு செல்ல முடியாமல் தவிக்கிறோம். உதவி செய்யுங்கள்’ - மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த த.மு.மு.க-வினருக்கு சூளைமேடு ஏரியாவில் இருந்து வந்தது இப்படியொரு தகவல். சூளைமேடு பகுதியில் வசிக்கும் பிரிட்டோ என்ற போலீஸ்காரரின் பாட்டி அந்தோனி அம்மாள் மருத்துவமனையில் இறந்துவிட்டார். பிரிட்டோ போனில் உதவி கேட்க களத்தில் குதித்திருக்​கிறார்கள் த.மு.மு.க-வினர். அந்தோனி அம்மாளின் உடலை மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குக் கொண்டு செல்ல முடியாத அளவுக்கு சூளைமேடு ஏரியா முழுவதும் கழுத்தளவு தண்ணீர். மருத்துவமனையில் இருந்து உடலை ஸ்டெரக்சரில் வைத்து கழுத்தளவு தண்ணீரில் தலைக்கு மேல் தூக்கிக்கொண்டு வந்து வீட்டில் சேர்த்தனர் த.மு.மு.க-வினர். மழை அதிகமாக இருந்ததால், அடக்கம் செய்யக் குழிகூட தோண்ட முடியவில்லை. ஒரு நாள் கழித்துத்தான் குழி தோண்ட முடிந்தது. கிறிஸ்தவ முறைப்படி சவப்பெட்டியில் அந்தோனி அம்மாளின் உடலை வைத்து அடக்கம் செய்தனர். மருத்துவமனையில் இருந்து உடலை வீட்டுக்குக் கொண்டு வந்த த.மு.மு.க-வினர்தான் அடக்கம் செய்யவும் உதவியிருக்கிறார்கள். வீட்டில் இருந்து சவபெட்டியை இரண்டு கி.மீ. தூரத்துக்கு வெள்ளத்தில் சுமந்துபோயிருக்​கிறார்கள்.

Tuesday, December 8, 2015

நமக்குள் ஒரு தலைவன்!

சமஸ்

         படம்: ஆர். செந்தில்குமார்

தேசிய ஊடகங்கள் பெரும்பாலனவை சென்னை வெள்ளத்தை ஒரு பொருட்டாகக் கருதவில்லை. மும்பையில் ஒரு பெண் தொழிலதிபர், தன் மகளை எப்படிக் கொன்றார் எனும் கதையைக் கிளுகிளுப்பான பின்னணியில் ஒரு மாதத்துக்கும் மேல் பக்கம் பக்கமாக எழுதியவர்கள். இன்றைக்கு வரை 400-க்கும் மேற்பட்டோர் உயிரை வாங்கியிருக்கும் தமிழக வெள்ளச் செய்தியை உள்பக்கங்களில் ஒரு மூலையில் அடக்கியிருக்கிறார்கள். ஆனால், ஆச்சரியம் அடைய ஏதுமில்லை. காலங்காலமாக நம்முடைய ‘தேசிய ஊடகங்கள்’ காலனியாதிக்க, நிலப்பிரபுத்துவ, சாதி-மத-மொழி-இன துவேஷ மனோநிலையில்தான் செயல்பட்டுவருகின்றன.

பாரிஸ் பயங்கரவாதத் தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டபோது, ஒரு வாரம் முழுக்க அதைப் பக்கங்களில் நிரப்பியவர்கள், அதற்கு ஏழு மாதங்கள் முன் கென்யாவின் காரிஸா பல்கலைக்கழகத்தில் 148 பேர் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டபோது என்ன செய்தார்கள்? ஒரு இந்திய மாணவனுக்கு 12,000 கி.மீ. தொலைவில் இருக்கும் அமெரிக்க அதிபரின் மனைவி பெயர் தெரியும். ஆனால், நம் முடைய எல்லையைத் தொட்டுக்கொண்டிருக்கும் சீன/வங்கதேசப் பிரதமரின் பெயர் தெரியாது. காரணம் என்ன?

முக வாசம்

இப்போது,
அரசு நிர்வாகம், காணொளிக் காட்சியாகி விட்டது.
அரசியல் அரங்கம், ஒலி - ஒளி கண்காட்சி சாலையாகி விட்டது.

தலைவர்கள் - நல்ல நடிகர்களாக,
நடிகர்கள் - வல்ல தலைவர்களாக,
அரங்கத்தில் விளையாடுகிறார்கள்.

மழை, புயல், காற்று, பெருவெள்ளம்,
தமிழகம் - உருக்குலைந்து கிடக்கிறது.

மக்களே, மக்களை பேரழிவிலிருந்து
காப்பாற்றும் - உயர் பண்பின் சமரசம்.

ஜாதி, மத, இன பேதங்களுக்கு அப்பால்
உறைந்து கிடக்கும் மனித நேயம்..
அறிமுகம் இல்லா, மனித முகங்களால்
மலர்ந்து, வளர்ந்து, பரந்து, விரிந்து செல்கிறது.

வெள்ளத்தில் தத்தளிக்கும் முகங்களை,
தாய் பாசத்தோடு அரவணைத்து கரை சேர்க்கின்ற நேச முகங்கள்.

தண்ணீர் பிரதேசம், பாச முகங்கள் ஒளியில்,
பிரகாசமாய் ஜொலிக்கிறது.

மக்களை காக்க, அரசுகள் இனி தேவை இல்லை.
அதிகாரம் தேவை இல்லை.
அமைச்சர்கள் தேவை இல்லை.
மக்களை வஞ்சிக்கும் மக்கள் பிரதிநிதிகள் தேவை இல்லை.
இவர்களின் துணை இன்றியே தமிழகம் தன்னை தற்காத்து கொள்ளும் தகுதியை பெற்றுவிட்டது.

Monday, December 7, 2015

இங்கிலாந்து சென்று வந்த எனது பயண அனுபவங்கள- தக்கலை கவுஸ் முஹம்மத் ..

கடந்த ஒரு வாரகாலமாக இங்கிலாந்து சென்று வந்த எனது பயண அனுபவங்களை நண்பர்கள் கேட்டுகொண்டதால் உங்களிடையே பகிர்ந்து வருகிறேன்.. இன்று அதன் இறுதி பகுதி மிக சுருக்கமாக !....

பயணம் வந்த முதல் இரண்டு நாட்கள் Mohamed Jeseer Jaleel அவர்களுடன் லண்டன் மாநகரை சுற்றி பார்த்தோம்.. பின்னர் பார்க்காத சில இடங்களை பார்ப்பதற்காக இடைப்பட்ட ஒருநாளில் மீண்டும் லண்டன் மாநகருக்கு வந்தோம்.. Hop on Hop Off ( லண்டன் நகரை பஸ்ஸிலிருந்தவாறு அல்லது் ஒவ்வொரு முக்கியமான சுற்றுலா இடங்களில் இறங்கி சுற்றி பார்த்து விட்டு மீண்டும் பஸ்ஸில் ஏறிக்கொண்டு நாள் முழுவதும் ( காலைமுதல்மாலைவரை அவர்கள் போட்டுள்ள பஸ் ரூட்டில் எல்லா இடங்களையும் பார்த்தோம் !..

Sunday, December 6, 2015

ஓரு தொப்புள் கொடி உறவின் நெகிழ வைத்த பதிவு... நன்றி சகோதரா Ramacrshna Yess

ஓரு தொப்புள் கொடி உறவின் நெகிழ வைத்த பதிவு...
நன்றி சகோதரா Ramacrshna Yess
------------------ 

...உதவுவாரில் எங்கே பார்த்தாலும்...
குல்லாக்கள்... SDPI, TNTJ, TMMK
பாதிக்கப்பட்டோரில் யாரைக் கேட்டாலும்...
"பாய்கள்", "முஸ்லீம்காரவங்க வந்து காப்பாத்துனாங்க",
"சாய்புகள்தான் சாப்பாடு போட்டுகிட்டிருக்காங்க".
'தொடக்கி விட்டுவிட்டார்கள்' என்றில்லை;
'இடையில்தான் வந்தார்கள்' என்றில்லை;
'திணறி நின்றார்கள்' என்றில்லை;
'சோர்ந்து விலகிவிட்டார்கள்' என்றில்லை!

அடுத்தது என்ன?

நீருக்கு வீடுகள் வேண்டும்

தெளிவாகத் தெரிந்துவிட்டது



நீருக்கு வீதிகள் வேண்டும்

ஐயமின்றிப் புரிந்துவிட்டது



நீரின் வீடுகள்

குளங்கள் ஏரிகள் குட்டைகள்

என்று பல

Friday, December 4, 2015

மழையல்ல பிழை

மழை வரும்
மருந்தாகச் சில நேரம்
மாணிக்கப் பரல்களாகச் சில நேரம்
மந்திரத் திறப்பாகச் சில நேரம்
மயக்க மொழிப் பொழிவாகச் சில நேரம்

ஒவ்வொரு முறையும்
ஒவ்வோர் அதிசயம்

அள்ளித்தரும்
அன்னை மழையின் மாண்பைச்
சொல்லி மாளாதுதான்

ஆனால்
வான மொத்தத்தின்
ஞானப் பெருநெருப்பையும்
அப்படியே நீராய் மாற்றி
நிலமிறங்கும் பெருமழையே
நீ எவரின் மூளைக்குள்
எவ்வகை நாற்றை நட வந்தாய்?

*

தமிழ்நாட்டில் பத்து நாட்களுக்கு டோல்கேட்டில் கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை ...

தமிழ்நாட்டில் பத்து நாட்களுக்கு டோல்கேட்டில் கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறி விட்டது.
உடனே நடவடிக்கை எடுத்த பிரதமர் அலுவலகம், போக்குவரத்து அமைச்சகம், அமைச்சர், ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றி.

நான் அனுப்பிய விண்ணப்பத்தை இப்போது வெளியிடுவதில் தவறில்லை என்பதால் பகிர்கிறேன்.
இது தகவலுக்காக மட்டுமே. எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு நீங்களும் குரல் கொடுக்கலாம். (என் ஆங்கிலத்தில் குறை காணாதிருக்கவும்.)

Thursday, December 3, 2015

கனத்த மழையிலும் இணைத்த மனித நேயம்...

கனத்த மழையிலும்
இணைத்த மனித நேயம்...

அரசியல்வாதிகளின்
சாயத்தைக் குலைத்து;
அரசியலுக்கான முன்னெடுப்புகளின்
முகரையை உடைத்து;
மகத்தான மனிதர்களை வெளிப்படுத்தினாய்;

சாதி மத அரசியலில் முடக்கியிருக்கும்
அரசியல்வாதிகளை அம்மணமாக்கி;
மக்களின் முன் வெளிச்சம்காட்டி;
மரிக்காத மனிதநேய
மகான்கள் யாரென தெளிவுப்படுத்தினாய்;

Tuesday, December 1, 2015

நிலவேம்பு – மருத்துவ பயன்கள்


நிலவேம்பு – மருத்துவ பயன்கள்

நிலவேம்பு

நிலவேம்பு முழுத் தாவரமும் கசப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. இதனால், நீர்க்கோவை, மயக்கம் போன்றவை குணமாகும்; புத்தி தெளிவு உண்டாகும்; மலமிளக்கும்; தாதுக்களைப் பலப்படுத்தும்.

நிலவேம்பு இலைகள் காய்ச்சல் மற்றும் முறைக் காய்ச்சலைக் குறைக்கும்; பசி உண்டாக்கும்; உடல் தாதுக்களைப் பலப்படுத்தும். ஆரோக்கியம் தரும்; உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும்.

நிலவேம்பு நிமிர்ந்த வளரியல் கொண்ட செடி. 30 செமீ முதல் ஒரு மீட்டர் வரை வளரக் கூடியது. நிலவேம்பு தண்டுகள் நாற்கோணப் பட்டையானவை. நிலவேம்பு இலைகள் நீள் முட்டை வடிவமானவை.

நிலவேம்பு மலர்கள், கணுக்களிலும் நுனியிலும் குறுக்கு மறுக்காக அமைந்தவை. பூக்கள் வெண்மையானவை. நாக்கு போன்று நீண்டு ஊதா நிறப் புள்ளிகளுடன் காணப்படும்.

Monday, November 30, 2015

கோஷ்டி மனப்பான்மை

முஸ்லிம்  சமுதாயம்  பேச்சளவில்  ஒரே  உம்மத்  எனும்  சமுதாயத்தவராகவே  இருக்கிறார்கள். இத்தனை பெரிய சமுதாயம் உண்மையிலேயே ஒன்றுபட்டால் முழு ஒற்றுமையோடு இறைவனின் வார்த்தையை உயர்த்துவதற்கு வேலை செய்தால் கண்ணியமும், சிறப்பும் அவர்களின் காலடியில் விழ எந்த வினாடியும் தயாராக இருக்கும். ஆனால் இன்று பல கோஷ்டிகளாக பிரிந்து கிடக்கிறது. இப்படிப்பட்ட கோஷ்டி மனப்பான்மையால், தமது சமுதாயத்தையும், தமது பள்ளிவாசல்களையும் தனியாக்கிக் கொண்டார்கள். ஒருவன் மற்றவனை திட்டுகிறான். பள்ளிவாசலிருந்து அடித்து விரட்டப்படுகிறான்! வம்பும் வழக்கும் நடத்தப்படுகின்றன. இப்படி முஸ்லிம் சமுதாயத்தை துண்டு துண்டாக்கிப் போட்டுவிட்டார்கள்.

Thursday, November 26, 2015

பெண்ணே உன்னால்!..

என்னடி பெண்ணே!
இன்னும் உறக்கம்
இருள் விட்டு விலகி
எழுந்திரு கண்ணே!

உன்னை வெல்லவும்
இவ்வுலகம் வெல்லவும்
எதுவென்றபோதும்
எதிர்கொள்ளடி பெண்ணே!

விழித்திருக்கும்போதே
திருட்டுப்போகும் உலகம்
விழி உறங்கும்போதும்
விழிப்புணர்வு நெஞ்சுக்குள்
திடமாய் இருத்தல் வேண்டும்

Wednesday, November 25, 2015

நுணலும் தன் வாயால் கெடும்

கிணற்றுத் தவளைகளின்
ஞான முதிர்ச்சி கண்டு...

பிரமித்து போன
கடல் தவளைகள்

இப்போது.......

கையது கொண்டு
வாயது பொத்தி

தீவிரவாதம்

இந்துக்கள் எல்லோரும் தீவிரவாதிகள் என்றால் இந்தியா என்றோ அழிந்துபோயிருக்கும்

கிருத்தவர்கள் எல்லோரும் தீவிரவாதிகள் என்றால் யூதம் என்றோ தீய்ந்துபோயிருக்கும்

முஸ்லிம்கள் எல்லோரும் தீவிரவாதிகள் என்றால் உலகம் என்றோ முடிந்துபோயிருக்கும்

Tuesday, November 24, 2015

தொன்று தொட்ட கற்பனையும், உண்மை நிலையம்!

(டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ எஸ்(ஓ)

1)    பிரான்ஸ் நாட்டின் சக்கரவர்த்தி நெப்போலியன் போனபார்ட் மிகவும் குட்டையானவர் என்றும், அவர் உருவப் படம் எப்போதும் ஒரு நாற்காலியின் மீது கால் வைத்தோ, அல்லது ஒரு குதிரையின்  மீது அமர்ந்து இருந்தோதான் காட்சி அளிக்கும் என்று பள்ளிப் பருவத்திலேயே படித்திருக்கின்றோம். ஆனால் அவர்  உயரம் 5அடி 6 அங்குலம் ஆகும். அது அப்போதைய பிரான்ஸ் நாட்டின் பிரஜைகளின் சராசரி 5அடி 5 அங்குலத்தினை விட மேலானது. பிரான்ஸ் நாட்டின் அளவை ஆங்கிலேய நாட்டின் அளவினை விட மேலானது. உதாரணத்திற்கு பிரான்ஸ் நாட்டின் பிரஜை ஒருவர் 5அடி 2அங்குலம் என்றால் அது ஆங்கிலேய நாட்டின் 5அடி 5அங்குலத்திற்கு சமம்.
2)     20ஆம் நூற்றாண்டின் தலை சிறந்த ஜெர்மன் நாட்டின் புவியியல் விஞ்ஜானி ஆல்பர்ட் ஈஸ்டன் கணிதத்தில் தோல்வியுற்றவர் என்று சொல்லக் கேள்விப் பட்டுள்ளோம்.
ஆனால் அவர் பள்ளி நுழைவுத் தேர்வில் தான் தோல்வி அடைந்து உள்ளார். அவர் கணிதத்தில் மிகவும் கெட்டிகாரராக திகழ்ந்தார்.
3)     உலக அதிசயங்களில் ஒன்றான சீனாவின் புராதான சின்னமான 2400 அடி நெடுஞ்சுவர் விண்வெளியிலிருந்து பார்க்கும் போது தெரிவதில்லை என்று சொல்வார்கள்.
ஆனால் விண்வெளியிலிருந்து பகலில் பார்க்கும் போது பூமியின் எந்த உருவமும் தெரியாதாம். இரவு நேரத்தில் மட்டும் நகரங்களின் மின் விளக்குகள் தெரியுமாம்.
4)     மூளையின் வலது, இடது பக்க பகுதிகள் தன் வேலையினை தனி, தனியே செய்வதாக கூறுவார்கள்.
ஆனால் இடது பக்க மூளை செய்யும் வேலையினை வலது பக்கமும், வலது பக்க மூளை செய்யும் வேலையினை இடது பக்கமும் நன்கு பரிமாறிக் கொள்கின்றன.
5) வாழை மரம் என்று சுவையான கனியினைத் தருகின்ற வாழையினை நாம் அழைக்கின்றோம்.
ஆனால் உண்மையில் வாழைச் செடி என்பதே சரியானது.

6) மது பிரியர்கள் மது அருந்துவது உஸ்னத்தினை அதிகப்படுத்தி வீரியத்தினைக் கொடுக்கும் என்பது நம்பிக்கை.
ஆனால் மது அருந்தினால் உடலின் சீதோசனத்தினைக் குறைத்து தாம்பத்திய நேரத்தில் வெடிக்காத புஸ் வானமாகும்.

7) உணவு உண்ணும் போது தண்ணீர் அருந்தக் கூடாது, அவ்வாறு அருந்தினால் ஜீரணத்திற்குத் தடுக்கும் என்று நம்பிக்கை.
ஆனால் உணவு உண்ணும் பொது சிறிது நீர் அருந்துவது ஜீரணத்திற்கு உதவி செய்யும்.

Monday, November 23, 2015

உலகையே வாசிக்கலாம்

குனிந்து நீ வாசிப்பது
கொஞ்சமோ கொஞ்சம்தான்
நண்பா

நீ தலை நிமிர்ந்து வாசித்தாலோ
அந்த வானத்தின் விரியழகும் மாயமும்
உன் கண்களின் விரல்களில்
கெட்டித் தேனென வழியும்
நண்பா

சில விஷயங்கள் புரிவதேயில்லை ...

சில விஷயங்கள் புரிவதேயில்லை ...
சில விஷயங்கள் புரியாமல் இருப்பதேயில்லை ...

மனிதருக்குள் நடக்கும் போட்டி ...
இருவருக்குள் வந்து போகும் பிரிவினை ...
யார் யாரை மிஞ்சுவதென்ற பரிதவிப்பு ...
முன்னேறுபவனை வீழ்த்த துடிக்கிற துடிப்பு ...
விட்டேனா பார் என்கிற வைராக்கியம் ...
விரக்தி கொள்ளும் மனநிலை ...
விவேகமில்லா வியாக்யானம் ...
இன்னும் எதைச்சொல்ல ?...

Saturday, November 21, 2015

இஸ்ரேலிய உருவாக்கம் - ஒரு ஆய்வு பார்வை.....!

இஸ்ரேலிய உருவாக்கம் - ஒரு ஆய்வு பார்வை.....!
 அவர்கள் சந்தித்தனர். அவர்கள் சாமானிய மனிதர்கள் அல்லர். உலகின் மிகப்பெரிய கந்து வட்டிக்காரர்கள் . மகா மகா கோடீஸ்வரர்கள் அமெரிக்க அரசிற்கே அவர்கள் கடன் கொடுப்பவர்கள், ஆம். அவர்கள் யூதர்கள். அவர்களுடைய இனத்திற்கென்று ஒரு பூமி இல்லை. இது தங்கள் தேசம் என்று சொல்லிக் கொள்ள அவர்களுக்கு ஒரு நாடு இல்லை. உலக வரைபடத்தில் முகவரி இல்லை. அவர்கள் தங்களுக்கு இனி ஒரு விலாசம் தேடிக் கொள்வது என்று அந்த சூதாட்ட விடுதியில் முடிவு கண்டனர். அவர்களின் தலைவன் தியோடர்ஹெட்நெல் என்பவன்.


அவர்கள் ‘யூததேசிய நிதி’ என்று வலிமை மிக்க ஓர் பெட்டகத்தைத் திறந்தனர். அங்கே கூடியவர்களே ஆளுக்குப் பல்லாயிரம் கோடி டாலர் என்று நிதி அளித்தனர். இது ஒரு நூற்றாண்டிற்கு முன்னரே நடந்த நிகழ்வு.
இனி அவர்கள் தங்கள் இனத்திற்கென்று ஒரு தேசத்தை உருவாக்க வேண்டும். எங்கே உருவாக்குவது? எப்படி உருவாக்குவது ?

அவர்களுடைய வேதத்திற்கு பெயர் ‘தவுராத்.’ பத்துக் கட்டளைகள் என்றும் கூறுவார்கள். தங்கள் தேசம் எங்கே இருக்கிறது என்பதை அந்த வேதம் சுட்டிக் காட்டியிருப்பதாக கற்பிதம் செய்தார்கள். இப்படித் தான் இஸ்ரேல் என்ற நாட்டிற்காக ஒரு கரு உருவாக்கப்பட்டது.

‘எப்படிப்பா இருந்தது என் பேச்சு?’


பெரிய குரு இருந்தார். முற்றும் துறந்தவர். எல்லாம் கற்றவர். அவரை ஒரு பிரசங்கம் செய்யக் கூப்பிட்டிருந்தாங்க. பத்தாயிரம் பேர் வருவாங்கனு சொல்லியிருந்தாங்க.

அவரை அழைச்சிட்டு வர ஒரு குதிரைக் காரன் போயிருந்தான். அன்னிக்குன்னு பார்த்து ஊரில் பயங்கர மழை. கூட்டம் கேன்சலாகி எல்லோரும் கலைஞ்சு போயிட்டாங்க.

குரு வந்தபோது அங்கே யாருமே இல்லை. பேசறதுக்காக நிறையத் தயார் பண்ணிட்டு வந்த குருவுக்கோ ஏமாற்றம். இருக்கிற ஒரு குதிரைக்காரனுக்காக மட்டும் பிரசங்கம் பண்ணவும் மனசில்லை.

‘என்னப்பா பண்ண லாம்?’னு கேட்டார்.

வாழ்க்கை போராடும் போர்க்களம் என்றால்...

வாழ்க்கை போராடும் போர்க்களம் என்றால்...
வலிமை மிக்கவர்களால் மட்டும் தான் தாக்கு
பிடிக்க இயலுமா.. !!

'STRUGGLE FOR EXISTENCE' - டார்வின்
'SURVIVAL OF THE FITTEST' - ஸ்பென்சர்

தாகம் தீர
நீர் தேவை

பசி தீர
உணவு தேவை

உடல் மறைக்க
உடை தேவை

மோகம் தீர
துணை தேவை

Tuesday, November 17, 2015

ஒரு சில நாட்கள் முன்பு துபையில் மெட்ரோ ரயிலில் பயணம்...

 Mohamed Anas
ஒரு சில நாட்கள் முன்பு துபையில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துக் கொண்டிருந்தேன், என் பக்கத்து இருக்கையில் ஒரு ஆப்ரிக்கர் அமர்ந்திருந்தார். கிட்ட தட்ட 5 வருடங்கள் நானும் ஆப்ரிக்காவின் உகாண்டாவில் வேலை பார்த்த அந்த பசுமையான நினைவுகளும் ஆப்ரிக்கர் மீதான ஒரு பாசமும் இன்னும் மனதில் நீங்காமல் இருப்பதால் அந்த ஆப்ரிக்கரிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தேன்.

பேச்சு கொடுத்த உடன் அவரும் சரளமாக பேச ஆரம்பித்தார். அவருடைய சொந்த நாடு எது என்று கேட்டேன், "காம்பியா" என்றார். என்னுடைய நாட்டைப் பற்றி விசாரித்தார், நானும் சொன்னேன். ஆப்ரிக்காவில் நானும் சில ஆண்டுகள் பணியாற்றினேன் என்று சொன்னேன் ரொம்ப ஆச்சரியப் பட்டார். அவருடைய நாட்டைப் பற்றி விசாரித்தேன் ஆப்ரிக்க கண்டத்தின் மேற்கே அமைந்திருப்பதாக சொன்னார்.

வளைகுடா அனுப்பிவிட்டு கணவனை பிரிந்திருக்கும் என் தோழியர் சார்பாக...

வளைகுடா அனுப்பிவிட்டு கணவனை பிரிந்திருக்கும் என் தோழியர் சார்பாக...
(எனக்கு அந்த அனுபவம் இல்லை...- Suhaina Mazhar)

அழகு வாழ்வினிலே
பழகும் நாட்களெல்லாம்
பசுமைகள் தந்தாரடி - தோழி
பாசாங்கு இல்லையடி

இணைந்த ஞாபகங்கள்
பிணைந்து கிடப்பதனால்
இனிமைகள் மறந்தேனடி - தோழி
தனிமையும் கொல்லுதடி

இது வேருலகம்...

கள்ளம் கபடமில்லாத ஜீவன்கள்...
நம் முகம் காணாவிட்டால்....
தேடி வாடுபவை....
அன்பைத்தருபவை....
ஆதரவிற்கு ஏங்குபவை....
என்னோடு பாசம மிகக் கொண்டவை.....


சொன்னால் நம்ப மாட்டார்கள்.....
என்னோடு பேசுபவை.....
விவசாயத்தொழிலில்
மாடுகளும் காளைகளும்
இன்னும் எத்தனை நாட்களுக்கோ?

ஒரு மாட்டை பேணி வளர்க்க
நாள் ஒன்றுக்கு இரு நூறு வேண்டும்.
பாலை இறக்குமதி செய்யும் காலம்
பக்கத்தில் தெரிகிறது.....


Monday, November 16, 2015

ஜபருல்லாஹ்வும் தேத்தண்ணியும்


                                                     (புகைப்படம் உதவி: ஆபிதீன் )

கவிஞர் இஜட் ஜபருல்லாஹ்வைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். இவர் ஒரு புரியாத புதிர். புரிந்துக் கொள்வது கடினம் In otherwords I can say, He is a hard nut to crack

புரிந்தவர்களுக்கு இவர் ஒரு திறந்த புத்தகம். புரியாதவர்களுக்கு இவர் ஒரு சிம்ம சொப்பனமா?… ஊஹும்.. .. இல்லை. இவர் ஒரு பெர்முடா முக்கோணம். சர்ச்சைகள் இவருக்கு சர்க்கரைப் பொங்கல் மாதிரி. பிரச்சினைகள் இவருக்கு பிரியாணி மாதிரி.

தேத்தண்ணியும் (தேயிலைத் தண்ணீர்) ஜபருல்லாஹ்வையும் போலவே,,,, “ஹாஸ்யமும், – இவரும்” ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள். சாதாரண இரட்டையர்கள் அல்ல. எந்த அறுவை சிகிச்சை நிபுணராலும் பிரிக்க முடியாத Conjoined Twins.

இதுவரை நான் என்னைப் போட்டு குழப்பிக் கொண்டதில்லை. நான் மிகவும் தெளிவாகவே இருக்கிறேன் என்று தம்பட்டம் அடிப்பவர்கள் இவரிடம் ஐந்தே நிமிடம் பேசிப் பார்க்கலாம். தோல்வியை ஒப்புக் கொள்வார்கள்.

அனுபவம்தான் வாழ்க்கை என்பார்கள். இவருடைய வாழ்க்கையே ஒரு அனுபவம். வாழ்க்கையை கவிதையில் தொலைத்துவிட்டு கவிதையை வாழ்க்கையில் தேடிக்கொண்டிருப்பவர் இவர்.

    சிந்திக்க வேண்டும் என
    எல்லோருமே சொல்லுகிறார்கள்.
    எதைப்பற்றி சிந்திப்பது என்பதே
    என் ஒரே சிந்தனையாக உள்ளது

என்று இந்த ‘பக்கவாட்டு சிந்தனையாளர்’ நம்மிடமே கேள்விகேட்டு நம்மையே பாடாய்ப் படுத்துகிறார்.

Sunday, November 15, 2015

அவன் பேசினால் !


உன்னி லுருவாகி யுள்ளதான
.....வுந்தனகங்காரம் மெல்லவே
என்னில் கரைந்திடவே தந்தேனே
.....என்னை வணங்கிடும் தத்துவமே.
நின்னில் வழக்காக நித்தமுமே
.....நிந்தன் நினைவினை பத்தாகத்
தன்னில் வளர்த்தே வருகிறாய்த்
.....தம்மைக் கெடுத்தே வருந்துகிறாய்.

என்னை சுற்றியிருந்த வேலிகள் உடைக்கப்பட்டு உலகம் அழகாய் தெரிய தொடங்கியது

 சுற்றிலும் மனித உடல்களின்
சிதறல்கள்! மனம் பதைக்க
தூரத்தில் நின்று பார்த்துக்கொண்டிருந்த கூட்டத்தில் நானும் ஒருவன்!
மனம் உருகி இறைவா
இவர்களுக்கு ஏற்பட்ட அநீதம்
யாருக்கும் நேர்ந்து விடாமல்
காப்பாற்று கண்களை மூடி
பிரார்த்தித்து நிமிர்ந்தால்
கூட்டத்தின் பல ஜோடி கண்கள்
என்னை உற்று நோக்குவதை
அறிந்தேன்!

Saturday, November 14, 2015

வாழத் தெரிந்தால் வாழலாம், வழியாயில்லை-வையகத்தில்!

Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd
நவீன உலகில் வாழ்க்கை கடினமானதும், சவாலானதும் ஆகும். ஆனால் திறமையிருந்தால் சமாளிக்கலாம் என்ற கருத்துடன் எழுதப்பட்டது இந்தக் கட்டுரை.
அதிர்ஷ்டத்தினை நம்பியிருக்கிறவனுக்கும், அதிர்ஷ்ட தேவதை அவன் கதவைத் தட்டினாலும் அதனை சமாளிக்க சிலருக்குத் தெரியாது.
ஒருவனுக்கு ஒரு நகைக்கடை பரிசுக் கூப்பனால் ஒரு பி.எம்.டபுள்யு கார் பரிசாக கிடைக்கிறது என்ற வைத்துக் கொள்வோம். படகு போன்ற பளபளப்பான காரை சாலையில் செலுத்தும் போது அந்தக் காரையும் அதனை ஓட்டுகின்றவரையும் ஆண், பெண் என்ற பலரின் கவனம் கவரும். அவருக்கு பல புது நண்பர்கள் கூடுவார்கள். அவர்களை ஏற்றிக் கொண்டு மகிழ்ச்சியிடன் பல சுற்றுலா தளங்களுக்குச் செல்வார். அதனால் பெட்ரோலுக்கும், மற்ற செலவினங்களுக்கு காசு கரையும். சிறிது நாட்கள் நகன்ற பின்பு காரும் பழுது படும். அதற்கான பராமரிப்பு செலவும் பண்மடங்காகும். அதனால் ஏற்படுகின்ற மன உலச்சல் பெரிய பாரமாக அமையம். ஆகவே அதிர்ஸ்டம் மூலம் வருகின்ற பொருளாதாரம் உண்மையான சந்தோசத்தினைத் தருவதிற்குப் பதிலாக சோகத்தின் எல்லைக்கே அழைத்துச் செல்லும்.

                                                       Abdul Latheef Naha
சிலருக்கு நோய்கள் வந்தால் ஒடிந்து மூலையில் முடங்கி விடுவர். ஆனால் அந்த நோயையே வென்று உலகப் புகழ் ஏணிக்கு எட்டியுள்ள ஒரு பெண்மணியின் கதையினை இங்கே சொல்வது பொருத்தமாக அமையும் என எண்ணுகிறேன். .

Friday, November 13, 2015

நிற்க (கவிதை)


நிற்க,

நீரூற்று ஏதுமில்லை

நிலத்திலும் ஈரமில்லை

விழியருவி  பெருக்கும் நீரில்

செழிக்கிறது பாலைவனம்



பாலை மணல் பகுத்து

பாத்திப் பாதை வகுத்து

புதர்களால் அலங்கரித்து

பயணிக்கிறது என் பிழைப்பு


பிழைக்க உடல் உழைத்து

களைத்து நான் படுக்க

வதைக்கிறது உன் நினைவு

உறைக்கிறதா உனக்கு அங்கும்


அங்கும் இங்கு மென

தங்கு மிடம் மாற்றி

அடுக்கு மாடி குடியிருப்பில்

ஒடுக்கி உடல் சாய்க்க


சாய்ந்த உணர்வலைகள்

சடுதியில் தலை தூக்க

போர்வைக்குள் விழித்திருக்கு

பேரழகி உன் கண்கள்


கண்களை இமை மூட

கனவுகளில் உன் வதனம்

புரண்டு படுத்தாலும்

முரண்டு பிடிக்கிற தேன்?


ஏனென்று கேட்பதற்கு

எத்தனையோ கேள்விகள்

என்னிடம் உண்டு அன்பே

எவரறிவார் பதிலுரைகள்


பதிலில்லாப் புதிர்களடி

பாலைக்கு வந்த கதை

தீரவில்லை தேவைகள்

தேய்கிறது என்னுடலும்


உடல்வதைத்து உணர்வழித்து

உண்டாக்கிய துதான் என்ன

உன்னருகில் நானின்றி

உழல்கின்றேன் உத்தமியே


உத்தமி உன் நினைவில்

உயிர் வாடிப் போகு முன்னே

ஊருக்கு வருவதற்கு

உன்னிலையை அறிந்திடனும்


அறியத்தா அம்மணியே

அன்பென்ன மாறியதா

காட்சிப் பிழைகளென  என்

கண்கள் உனைப் பார்க்கிறதா?


பார்க்கும் திசைகளெல்லாம்

பாவப்பட்ட நான் தெரிய

புறப்பட்டு வந்துவிட்டால்

பிழைப்புண்டா எழுந்து  நிற்க?

Thursday, November 12, 2015

வேலைக்காக வெளிநாட்டுக்கு வருவான்..

வேலைக்காக வெளிநாட்டுக்கு வருவான்..

ஆரம்பத்தில் அப்பாவியா இருப்பான்...

எதிரியை கூட நண்பனா நினைச்சு பழகுவான்..

வேலைக்காக யாரு காலை வேணாலும் பிடிப்பான்..

தினந்தோறும்
தொலைபேசி போடுவான்..

தொன்று தொட்ட கற்பனையும், உண்மை நிலையும்!

தொன்று தொட்ட கற்பனையும், உண்மை நிலையும்!
(டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ எஸ்(ஓ)

1)    பிரான்ஸ் நாட்டின் சக்கரவர்த்தி நெப்போலியன் போனபார்ட் மிகவும் குட்டையானவர் என்றும், அவர் உருவப் படம் எப்போதும் ஒரு நாற்காலியின் மீது கால் வைத்தோ, அல்லது ஒரு குதிரையின்  மீது அமர்ந்து இருந்தோதான் காட்சி அளிக்கும் என்று பள்ளிப் பருவத்திலேயே படித்திருக்கின்றோம். ஆனால் அவர்  உயரம் 5அடி 6 அங்குலம் ஆகும். அது அப்போதைய பிரான்ஸ் நாட்டின் பிரஜைகளின் சராசரி 5அடி 5 அங்குலத்தினை விட மேலானது. பிரான்ஸ் நாட்டின் அளவை ஆங்கிலேய நாட்டின் அளவினை விட மேலானது. உதாரணத்திற்கு பிரான்ஸ் நாட்டின் பிரஜை ஒருவர் 5அடி 2அங்குலம் என்றால் அது ஆங்கிலேய நாட்டின் 5அடி 5அங்குலத்திற்கு சமம்.
2)     20ஆம் நூற்றாண்டின் தலை சிறந்த ஜெர்மன் நாட்டின் புவியியல் விஞ்ஜானி ஆல்பர்ட் ஈஸ்டன் கணிதத்தில் தோல்வியுற்றவர் என்று சொல்லக் கேள்விப் பட்டுள்ளோம்.
ஆனால் அவர் பள்ளி நுழைவுத் தேர்வில் தான் தோல்வி அடைந்து உள்ளார். அவர் கணிதத்தில் மிகவும் கெட்டிகாரராக திகழ்ந்தார்.
3)     உலக அதிசயங்களில் ஒன்றான சீனாவின் புராதான சின்னமான 2400 அடி நெடுஞ்சுவர் விண்வெளியிலிருந்து பார்க்கும் போது தெரிவதில்லை என்று சொல்வார்கள்.
ஆனால் விண்வெளியிலிருந்து பகலில் பார்க்கும் போது பூமியின் எந்த உருவமும் தெரியாதாம். இரவு நேரத்தில் மட்டும் நகரங்களின் மின் விளக்குகள் தெரியுமாம்.
4)     மூளையின் வலது, இடது பக்க பகுதிகள் தன் வேலையினை தனி, தனியே செய்வதாக கூறுவார்கள்.
ஆனால் இடது பக்க மூளை செய்யும் வேலையினை வலது பக்கமும், வலது பக்க மூளை செய்யும் வேலையினை இடது பக்கமும் நன்கு பரிமாறிக் கொள்கின்றன.
5) வாழை மரம் என்று சுவையான கனியினைத் தருகின்ற வாழையினை நாம் அழைக்கின்றோம்.
ஆனால் உண்மையில் வாழைச் செடி என்பதே சரியானது.

கவிஞர் அப்துஸ் ஸலாம் அவர்களின் நினைவுகள்/ இப்பொழுதும் எங்கள் நினைவுகளில் வந்து செல்லக் கூடிய வழக்கம் பெற்று இருக்கிறது.- ஹிலால் முஸ்தபா.

 கவிஞர் அப்துஸ் ஸலாம்

“இறைவனிடம் கையேந்துங்கள் – அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை!
பொறுமையுடன் கேட்டுப் பாருங்கள் – அவன்

பொக்கிஷத்தை மூடுவதில்லை!”

இந்த இசைக் கவிதை நிகழ்த்தி இருக்கக் கூடிய பிரம்மாண்டங்கள் ஏராளமானவை. இந்தப் பாடலின் ஆசிரியர் கவிஞர் அப்துஸ் ஸலாம். கவிஞர் இன்று நம்மிடம் இல்லை.

இந்தக் கவிதையினை இசை வீரியத்தோடு நாகூர் ஹனீஃபா அண்ணன் பாடி வெளியிட்ட கால கட்டத்தில் , இசை உலகின் வித்தியாசமான இசைக் கவிதையினை எழுதிய இந்த கவிஞரை மானசீகமாக நான் கண்டு ரசித்துக் கொண்டிருந்தேன். இசைப் பாடலில் இருந்த இளமை காரணமாக, இந்தக் கவிஞரை ஒரு புதிய இளைஞராக நான் கற்பனைச் செய்து இருந்தேன்.

இந்தக் காலகட்டத்தில் என்னுடைய “பேரீச்சம் பழக் காட்டின் பிரதிநிதிகள்” புதுக் கவிதைத் தொகுதி வெளி வந்திருந்தது. அதனை கவிஞர் அப்துஸ் ஸலாம் படித்து இருக்கிறார். அவருடைய மனக் கண்ணில், “யாரோ ஒரு முதிர்ந்த கவிஞன் இந்த நூலின் ஆசிரியனாக இருக்க வேண்டும்” என்ற நினைப்பு முளைத்து இருந்திருக்கிறது.

Wednesday, November 11, 2015

மண் ….!

மண் ….!

குறைகள் குறைவில்லாமல் இருப்பதும்
மண்ணில் தான்
நிறைகள் நிறைந்து இருப்பதும்
மண்ணில் தான்

மனிதம் பிறந்ததும்
மண்ணில் தான்
மானுடம் தழைப்பதும்
மண்ணில் தான்

மனுநீதி பிழைப்பதும்
மண்ணில் தான்
மந்திரங்கள் ஜெபிப்பதும்
மண்ணில் தான்

மன அமைதியைப் பெறுவது எப்படி?


அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வை நினைவு கூர்வதால்தான் உள்ளங்கள் நிம்மதியடைகின்றன. (அல்குர்ஆன் 13: 28)

ஆம்! மேற்சொன்ன இறைவசனம் மனிதர்களுக்கு நிம்மதியைப் பெற வழி வகுக்கும் என்றால் அது மிகையாகாது.

இன்று மனிதர்கள் எவ்வளவோ வளர்ச்சியடைந்து, தொழில்நுட்பத்தின் மூலமும், பொருளாதாரத்தின் மூலமும் எவ்வளவோ முன்னேறி விட்டான்.

தங்களுடைய தேவைகளை எளிதாக பூர்த்தி செய்யும் அளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. தகவல் தொழில்நுட்பம் முன்னேறி விட்டது. இதையெல்லாம் வைத்து மனிதனால் எவ்வளவோ தேவைகளைப் பூர்த்தி செய்ய முடிந்தளவுக்கு, அவனுடைய உள்ளத்துக்கு நிம்மதியை வாங்க முடியவில்லை.

மலச்சிக்கல் ஏற்படுவது ஏன்?


மலச்சிக்கல் ஏற்படுவது ஏன்?
காலையில் எழுந்ததும் மலம் போகாவிட்டால், பலருக்கு அந்த நாள் முழுவதும் எந்த வேலையும் ஓடாது. வெறும் வயிற்றில் லிட்டர் கணக்கில் தண்ணீர் குடிப்பார்கள். சூடாக காபி, தேநீர் அருந்துவார்கள். பீடி, சிகரெட் புகைப்பார்கள். இன்னும் சிலர் எப்படியாவது மலத்தை வெளியேற்றியே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு மூச்சை இழுத்துப் பிடித்து முக்குவார்கள்.

இந்தப் பகீரதப் பிரயத்தனங்கள் எதுவும் தேவையில்லை. தினமும் காலையில் எழுந்ததும் மலம் கழித்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயம் எதுவுமில்லை. மலம் காலையில் வரலாம். மாலையில் வரலாம். இரவிலும் வரலாம். ஒரு நாளைக்கு ஒருமுறை வரலாம். இருமுறை வரலாம். எதுவும் தப்பில்லை.

Monday, November 9, 2015

நீ‬ ‪ ஏன்‬ ‪ வெளிநாடு‬ போன .?...இந்தியா ல வேலை இல்லையா ?



#‎சொல்வதெல்லாம்_உண்மை‬...!!!

#‎நீ‬ ‪#‎ஏன்‬ ‪#‎வெளிநாடு‬ ‬ போன ..இந்தியா ல வேலை இல்லையா ? ன்னு கேட்கும் சில சில ‪#‎அறிவு‬ ‪#‎ஜீவிகளுக்கு‬...!
கடுப்புடன் ..!

உங்கள் ‪#‎அப்பா‬ தாத்தா சம்பாதித்து வச்சி காசை என்ன பன்றது தெரியாம எதோ ஒப்புக்கு ‪#‎காலேஜ்‬ போய் எதோ ஒரு டிகிரி வாங்கி இருக்கும் செல்வாக்கில் அங்கே ஒரு வேலையும் வாங்கி அதுல வரும் காசை என்ன செயறதுன்னு தெரியாம குடி கும்மாளம்னு அடிச்சி ஜாலியா போய்டு இருக்கும் வாழ்கையில் எதோ ஒரு கல்யாணம் செய்து அதுல வரும் வரதட்சணையை வச்சி எதோ ஒரு தொழில் ஆரமித்து . கஷ்ட்டம்னாலே என்னான்னு தெரியாத சில உள்நாட்டில் வேலை பார்க்கும் நண்பர்களே

Saturday, November 7, 2015

அந்த ஆசிரியர் இவர்தான்! -Rafeeq Friend

Rafeeq Friend

 "எனக்குக் கிடைத்த அற்புதமான ஆசிரியர்களே, நான் ஒரு ஆசிரியராக வாழவேண்டும்  என்ற ஆர்வத்தை என்னுள் தூண்டியவர்கள்!"
 - அகீலா ஆஸிஃபி
எல்லாமே தலைகீழாய் மாறிப்போனது. அதுவரையிலும் இருந்த நிம்மதி நிறைந்த வாழ்க்கை, அதற்கெதிராய் மாறி அந்நிய நாட்டில் அகதியாக அடைக்கலம் புகுந்து வாழுமாறு பணித்தது. ஆம், 1992ம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் ஆட்சி கைப்பற்றப்பட்டு உள்நாட்டுப்போர் வெடித்ததில் சிதறுண்டு போனார்கள் அந்நாட்டு மக்கள். பல இலட்சக்கணக்கான மக்கள் பாகிஸ்தான் நோக்கி ஓடினர்.
தங்களின் சொத்து,சுகம், உறவினர்கள் மற்றும் உடமைகள் என அனைத்தையும் துறந்து ஆதரவற்றோராக அகதிகள் முகாம்களில் அடைபட்டனர். சுகமான வாழ்வு கொண்டிருந்த காபூல் மக்களும் அங்கே கண்கலங்கி நின்றனர். கல்வி கற்றிருந்தோரும் காசுபணம் இழந்திருந்தினர். வருடக்கணக்கில் வடிவமைத்துக் கட்டிய வீட்டை அப்படியே விட்டுவிட்டு, மாற்றுத் துணிகள் கூட இல்லாமல் வந்து சேர்ந்தோர் பலர் இங்கிருந்தனர்.
காபூலில் ஓரளவு வசதியான குடும்பம், கல்வியே பிரதானம் என்று, தம் சகோதர சகோதரிகளோடு (ஆண் குழந்தை / பெண் குழந்தை என்று) பேதம் பாராமல்  கல்வி புகட்டிய பெற்றோர். கற்ற கல்வியின் பயனாக காபூலில் கிடைத்த வரலாறு & புவியியல் ஆசிரியப் பணி, அன்பு செலுத்திய மாணவர்கள் என அனைத்தையும் துறந்து, தம் கணவர் மற்றும் இரு சின்னஞ்சிறு பிள்ளைகளையும் தூக்கிக்கொண்டு வந்தவர்தான் 26 வயது அகீலா ஆஸிஃபி எனும் பெண்.  இவர்தான் நாம் வியக்கப்போகும், ஐ நா போற்றிய இந்த ஆண்டின் ஆசிரியை!

Friday, November 6, 2015

முடிந்ததை செய்....!

அக்கிரமத்தை கண்டு அடங்கிவிடாதே
தவறுகளை தட்டிக்கேட்க தயங்கிவிடாதே
இன்னல்களைக் கண்டு இடிந்துவிடாதே
இறுமாப்பு கொண்டு இருந்துவிடாதே

வேஷங்களை நிஜமென்று நம்பிவிடாதே
உண்மையை உரைத்துரைக்க தவறிவிடாதே
பொய்யை புறந்தள்ள பிந்திவிடாதே
அறியாமை கொண்டு அழிந்துவிடாதே

Thursday, November 5, 2015

அதீத நம்பிக்கை உங்களுடைய வெற்றியைப் பறித்துக் கொள்ளலாம்…!!

 by

நீங்கள் வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்றால் உங்களுக்கு நம்பிக்கை அதிகமாக இருக்க வேண்டும் என்று பலர் கூறக் கேட்டு இருப்பீர்கள்.இது தவிர இதுவரை நடந்த ஆய்வுகள் பலவற்றில், அதிக நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கும் போது, உங்களது வழியைத் தாங்கும் சக்தி, மன உறுதி மற்றும் மன தைரியம் ஆகியவை அதிகமாகும் என்று கண்டறியப் பட்டுள்ளது. இது தவிர உங்களுடைய ஆரோக்கியம், உறவு மற்றும் செயல் திறன் ஆகியவற்றை அதிகப் படுத்துவதில் நம்பிக்கை அதிக பங்கு வகிக்கின்றது என்பதும் அனைவரும் அறிந்ததே.

ஆனால் ‘அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு’ என்பதும் நம்பிக்கைக்கும் பொருந்தும். அதீத நம்பிக்கை உங்களை படு குழியிலும் தள்ளலாம். பொதுவாக அதிக போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில், முக்கிய வியாபார உலகில் உங்களுடைய நிலைமையை மிகுந்த தன்னம்பிக்கையுடன் அணுகுவது நிறைய பிரச்சனைகளை உண்டு பண்ணலாம்.

கடைக்காரர் என்னைப் பார்த்து சிரிக்க நானும் சிரித்துவிட்டு கிளம்பி விட்டேன்.

குடும்ப உறவினரான டாக்டரை வழக்கம்போல் பார்த்து பேசிக் கொண்டிருந்தேன்.
அப்படியே பிரஷரையும் செக் பண்ணி பார்த்ததில் கொஞ்சம் கூடுதலாக இருந்தது. மாத்திரை எழுதித் தருகிறேன் ... சரியாகிவிடும் என்று சொல்லிவிட்டு
பல விஷயங்களை என்னோடு பேச ஆரம்பித்தார்.

மாட்டுக்கறி விவகாரத்தில் மோடி அரசும் காவிகளும் நடந்துகொள்ளும் கேவலமான நடவடிக்கைகளை அவருக்கு விவரித்தேன். எழுத்தாளர்களை திட்டமிட்டு கொள்வதையும் மிரட்டுவதையும் சொன்னேன்.
ஷாருக்கானை கூட விட்டு வைக்காமல் அவரையும் பாகிஸ்தான் ஏஜெண்டு என்று விமர்சிப்பதையும் சொன்னேன். டாக்டர் ஆச்சரியப்பட்டார்.

சரி ... மத்தியில் அப்படிஎன்றால் மாநிலத்தில் அதைவிட மோசமாக இருக்கிறது. டாஸ்மாக்கை மூடச் சொல்லி பாட்டுப் பாடிய கோவன் என்பவரை போலீஸ் கைது செய்திருக்கிறது. இது என்ன கொடுமை ?
கருத்து சுதந்திரம் இங்கே சுத்தமாக இல்லை என்றேன்.

அறிவுக்குப் புலப்படாத ஆழ்கடலே.!

அறிவுக்குப் புலப்படாத ஆழ்கடலே
உன் விரிவுக்கு நிகராக யாதுமுண்டோ
மொத்தநீரையும் உனதுள்ளடக்கி - உலகின்
மூன்றில் இருபங்கை உனதாக்கி
நித்தமும் நீ எழுப்பும் ஓசையினால்
நெஞ்சம் கனத்திடும் நெகிழ்ச்சியிலே

எத்தனைதான் ஆச்சரியம் உனதுள்ளே
எண்ணி வியக்கிறோம் மனதினுள்ளே
அத்தனையும் நிறைந்திட்ட அதிசயமே
ஆராய முடியாத ஆழ்மனமே

Saturday, October 31, 2015

ஒற்றை வரியில் எல்லாம்...

 by Yasar Arafat
ஒற்றை வரியில் எல்லாம்...

உன் வியர்வையின் நெடி
மணம் கமழும் என் மனம் மகிழும்;
பாத்திரம் கழுவியக் கையோடு எனை
அணைக்கும் உன் ஸ்பரிசம் அது சுகம்!

அடுப்படி மசாலா வாசத்தோடு உன் சரீரம்
ஆனாலும் கட்டியணைக்கும்போது
உள்ளம் தோறும் மெய்சிலிர்க்கும்;

இதுதான் கடைசியென
எத்துனை முறை ஊட்டுவாய்;
இன்னும் உணவு இருக்கு..
நீ உண்ணு என
காலியான பாத்திரத்தோடு
எப்படிதான் மனம்வந்து சொல்லுவாய்;

உச்சக்கட்டக் கோபத்திலும்
சாப்பாட்டை கொண்டுவந்து நீட்டுவாய்;
தவறிழைத்த நானே முரண்டுப்பிடித்தாலும்
சமாதானாத்திற்கு நீயே வருவாய்;

யார் இந்த துலுக்கன்? ? - புவன் கிருஷ்னண்




யார் இந்த துலுக்கன்? ? - புவன் கிருஷ்னண்

ஒரு இந்து சகோதரனின் மனம் திறந்த பதிவு!!!

நாம் நம்முடைய நெருங்கிய இஸ்லாமிய நண்பரையே ” டேய் துலுக்க பையா ” என்றுதான் அழைக்கிறோம். துலுக்கன் என்று கூறி அவர்களை கிண்டல் செய்வதாக நினைக்கிறோம்.

இந்த பெயர் காரணத்தை நான் பிறகு கூறுகிறேன். உங்களில் எத்தனை பேருக்கு இஸ்லாமிய நண்பர்கள் உள்ளனர். எனக்கு நிறைய இஸ்லாமிய நண்பர்களை தெரியும்.

என் அனுபவத்தில் அந்த இளம் வயதில் அவர்கள் கடைபிடிக்கும் ஒழுக்க நெறிகள் நம்மில் ஒரு சிலர் கூட கடைபிடிப்பதில்லை.

Thursday, October 29, 2015

நீங்கள் துபாயில் வசிப்பவரா? உங்களை மகிழ்ச்சி படுத்த காவல்துறை உதவும்!.


துபாயில் வசிப்பவர்கள் சோகமாக இருந்தால், உடனடியாக ஓடோடி வந்து காரணத்தைக் கேட்கிறது போலீஸ். உலகின் மிக மகிழ்ச்சி யான நகரம் என்ற பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இடம் பிடிப்பதற்காகவே இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது அந்நாட்டு அரசு.

ஓர் எளிமையான ஆய்வு மூலம் மக்கள் சோகமாக இருக்கிறார்களா மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என கணக்கெடுக்கப்படுகிறது. இந்த கணக்கெடுப்பில் பங்கேற்பவர்கள் முகச்சுளிப்புடன் இருக்கும் குறியீடு, சிரிக்கும் குறியீடு, உணர்ச்சிகளைக் காட்டாத முகபாவ குறியீடு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யலாம்.

மகிழ்ச்சியாக இல்லை என்று பதிவு செய்பவர்களை காவல் துறை தொடர்பு கொண்டு, அதற்கான காரணத்தை விசாரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, October 28, 2015

யார் இந்த அப்துல் சத்தார் எதி?


” நான் எதி. நான் பாகிஸ்தான்காரன்.நான் இந்தியாவை வெறுக்கவில்லை…இரண்டு நாடுகளுக்கு இடையிலான அமைதியை நான் ஆதரிக்கிறேன் ” என்று சொல்பவர்.

“எதி நிறுவனம் எந்த அரசின் நிதி உதவியையும் ஒப்புக்கொள்ளாது. தனிமனிதர்களின் ஆதரவுகளை மட்டுமே ஏற்றுக்கொள்ளும்;அவர்கள் பாகிஸ்தானியராக இருக்கலாம் அல்லது எந்த நாட்டினராகவும் இருக்கலாம் என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். நன்றி” என்று தம்நிலை விளக்கம் தருபவர்.

எதி ப்ரிட்டிஷ் இந்தியாவில் குஜராத்தில் உள்ள பண்ட்வா என்ற இடத்தில் 1928-இல் பிறந்தவர். இவருடைய தாயார் முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டு அதனாலேயே இறந்ததனால் ஏற்பட்ட துயரமே இவரை மாற்றுத் திறனாளிகள்,மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் முதலியோரை ஆதரிப்பவராக ஆக்கியது. இளமையில் அன்றாடம் தாயார் தரும் இரண்டு பைசாக்களில் ஒன்றைத் தன் உணவுச் செலவுக்கும் மற்றொன்றை ஏழை எளியோரின் உணவுச் செலவுக்கும் செலவிட்டவர்.மிகவும் துயரமான சூழ்நிலையில் பாக்கிஸ்தானுக்குத் துரத்தியடிக்கப்பட்டவர்.

Monday, October 26, 2015

துளி நீரும் நீ! பெருங் கடலும் நீ!!

மதுரையில் பிறந்த
மதுரம் நீ.
அதன் சாரம்,
புதுகையில் இருந்து
ஊற்றெடுத்தது- என்பதே
உன் பூர்வீகம்.

தமிழ்த்தாயின்
மனம் பெரிது-
உன் மனம் போல.
எனவே,
உர்தூ குடும்பத்து
உதயத்தை,
தமிழ்த்தாய்
தனதாக்கிக் கொண்டாள்.

வைகைக் கரையில் தொடக்கம்
வையகக் கரையெங்கும் தமிழ் முழக்கம்.

ஆதாரம்….!

உலகில் உயிர்களின் ஆதாரம்
பிராணன்
உலகில் பிராணவாயுவின் ஆதாரம்
இயற்க்கை

உலகில் இயற்கையின் ஆதாரம்
உயிர்கள்
உலகில் உயிர்களின் ஆதாரம்
வாழ்க்கை

உலகில் வாழ்கையின் ஆதாரம்
மனிதம்
உலகில் மனிதத்தின் ஆதாரம்
அன்பு

உலகில் அன்பின் ஆதாரம்
அமைதி
உலகில் அமைதியின் ஆதாரம்
அஹிம்சை

உலகில் அஹிம்சையின் ஆதாரம்
சகோதரத்துவம்
உலகில் சகோதரத்துவத்தின் ஆதாரம்
சமாதானம்

உலகில் சமாதானத்தின் ஆதாரம்
இறையச்சம்
அண்ட சராசரங்களின் ஆதாரம்
மகாபெரியோன் இறையோனே !!

ராஜா வாவுபிள்ளை

முகநூலும் எழுகின்ற உணர்ச்சிகளுக்கு ஒரு வடிகாலாக இருக்கிறது

முகநூல் திண்ணை..11
--------------------------

கணவருக்கு வேறு ஊருக்கு மாற்றல் வந்து விட்டது..கூடவே பதவி உயர்வு..

ஆனால் அவளுக்கு ஏனோ அவ்வளவு மகிழ்ச்சியில்லை..ஆனால் எதையும் அவள் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை..

புது ஊருக்குப் போன ஒரே மாதத்தில் அவளுக்கு உடலெல்லாம் எரிச்சல்,தோல் அரிப்பு ..

சூடு, அலர்ஜி என்று கணவர் ஆறுதல் சொல்லி மருந்து வாங்கி கொடுத்தாலும் நாளுக்கு நாள் எரிச்சலும் ,அரிப்பும் அதிகமாகிப் போனது...

வேறு வழியின்றி ஒரு தோல் மருத்துவரை சந்தித்த போது

"தோலெல்லாம் அரிக்குது சமயத்துல துணியெல்லாம் கூட ஈரமாகுது.." அவள் டாக்டரிடம் சொன்னாள்..

அவளுடைய பேச்சில் ஒரு வித கோபமும் ,விரக்தியும் கலந்து கிடப்பதை கண்டு கொண்ட டாக்டர் கேட்டார்.

"என்னம்மா பிரச்சினை..எதையாவது மனதில அடக்கி வச்சிருக்கியா வெளியில சொல்ல முடியாததா..?

அதற்கு மேல் அவளால் மறைக்க முடியவில்லை..

" ஆமாம் டாக்டர் இவருக்கு வேறு ஊருக்கு மாற்றலானதில் எனக்கு கொஞ்சமும் விருப்பமில்லை..12 வருடமாக பழகிய ஊரை விட்டு போக மனமில்லை.கோபம் கோபமாக வந்தது..என்னுடைய இயலாமையினால் அழுகை வந்தது.. எதையும் என்னால் வெளியில் காட்டிக் கொள்ள முடியவில்லை..அடக்கிக் கொண்டு இருக்கிறேன்."கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது..

"அந்த அடக்கப் பட்ட உணர்வுகள் தான் உடம்பில் எரிச்சலாகவும் பிறகு வியர்வையில் ஈர உறுத்தலாகவும் மாறி மாறி வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது..இதை இப்படியே விட்டு விட்டால் அது உங்களை பெரிய மனநோயாளியாக்கி விடும் " என்று எச்சரித்து அனுப்பி வைத்தார்

இது ஒரு உண்மை சம்பவம்...

Sunday, October 25, 2015

தேவைக்கு பொருள் தேடுவது

"நீ ஏழையாக பிறந்தால் அது உன் தவறில்லை, ஏழையாக மறைந்தால் அது உன் தவறு" - பில் கேட்ஸ்

அடிக்கடி வலைதளங்களில் பார்க்கும் வாசகம்.. இது சரியா? பணத்தையே பிரதான குறிக்கோலாக கொண்டு ஒருவன் வாழலாமா?

அவன் செல்வத்தைத் திரட்டி, அதைக் கணக்கிட்டுக் கொண்டிருக்கிறான். நிச்சயமாக தனது செல்வம் தன்னை நிலைத்திருக்கச் செய்யும் என அவன் எண்ணிக்கொன்டிருக்கிறான். அவ்வாறன்று, நிச்சயமாக அவன் "ஹூதமா" வில் வீசப்படுவான். "ஹூதமா" என்றால் என்னவென உமக்கு அறிவித்தது எது.? (அது) உள்ளங்களைச் சென்றடையும் மூட்டப்பட்ட அல்லாஹ்வின் நெருப்பாகும். (அல்-குர்ஆன் 104:2-7)

செல்வத்தைப் பெருக்கும் ஆசை!

செல்வத்தைப் பெருக்கும் ஆசை!
செல்வத்தின் மீதுள்ள ஆசை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளது!

“பெண்கள், ஆண் மக்கள்; பொன்னிலும், வெள்ளியிலுமான பெருங்குவியல்கள்; அடையாளமிடப்பட்ட (உயர்ந்த) குதிரைகள்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால் நடைகள், சாகுபடி நிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள இச்சை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டிருக்கிறது; இவை(யெல்லாம் நிலையற்ற) உலக வாழ்வின் சுகப்பொருள்களாகும்; அல்லாஹ்விடத்திலோ அழகான தங்குமிடம் உண்டு” (அல்-குர்ஆன் 3:14)

கப்ருகளை சந்திக்கும் வரை செல்வத்தை பெருக்கும் ஆசையில் இருக்கும் மனிதன்!

“செல்வத்தைப பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கி விட்டது- நீங்கள் மண்ணறைகளைச் சந்திக்கும் வரை. அவ்வாறில்லை, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள். பின்னர் அவ்வாறல்ல, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள். அவ்வாறல்ல – மெய்யான அறிவைக் கொண்டறிந்திருப்பீர்களானால் (அந்த ஆசை உங்களைப் பராக்காக்காது). நிச்சயமாக (அவ்வாசையால்) நீங்கள் நரகத்தைப் பார்ப்பீர்கள். பின்னும், நீங்கள் அதை உறுதியாகக் கண்ணால் பார்ப்பீர்கள். பின்னர் அந்நாளில் (இம்மையில் உங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த) அருட் கொடைகளைப் பற்றி நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள்” (அல்-குர்ஆன் 102:1-8)

கலைத்தீபம் கண்ட கலைமகள்!

சாந்தமருதூராம் கிழக்கு மண்ணில்
ஆய்ந்து கலை செய்யும் அறிவையாள் ஹிதாயா -
வாய்மையின்
அந்தி வானத்து அழகு நிலவாம்
இந்த மண்ணில் இவள் பெருமை !

உள்ளத்து ணர்வுக்குள் உறங்காப் படைப்புக்குள்
தெள்ளத் தெளிவாம் செகத்திடை மாந்தர்க்கு-
வெள்ளையாய்
தாள் பதிக்கும் தகைசேர் இலக்கியங்கள்
கொள்கை கொள்ளுமாம் குணம்.

Wednesday, October 21, 2015

முதுமை அடையும் பெற்றோரும் பிள்ளைகளின் அரவணைப்பும்


-இம்தியாஸ் யூசுப் ஸலபி-
எம்மை பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய எமது பெற்றோர் வயதுக்குச் செல்லும்போது அல்லது முதுமையை அடையும்போது அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளையும் அவர்களது நிலமைகளையும் நாம் அறிந்துகொள்ள கடமைப்பட்டுள்ளோம்.

குழந்தையாக, சிறுவர்களாக வாலிபர்களாக நாம் இருக்கும்போது நமது பிரச்சினைகளையும் நிலவரங்களையும் நன்கு கவனித்து, நம்மை வளர்த்து ஆளாக்கியவர்கள் எமது பெற்றோர்கள். ஒவ்வொரு பருவத்திலும் ஒரு வகையான பிரச்சினையை நாம் சந்திக்கின்றோம். அது போலவே பெற்றோரும் முதுமையிலும் பிரச்சினைகளை சந்திக்கின்றார்கள். அவர்களது பிரச்சினைகளையும் மனோ நிலைகளையும் பிள்ளைகள் அறிந்து அன்புடன் நடாத்த வேண்டிய கடமைப்பாடு உள்ளது.

Tuesday, October 20, 2015

குரூர மனச் சிந்தனையாளர்கள்



ஒரு மனிதனை எப்படியெல்லாம் நாம் துன்புறுத்தலாம்? சொற்களால், வார்த்தைகளால், செய்கைகளால், எமது நடத்தைகள் மற்றும் நடவடிக்கைகள் எல்லாவற்றாலும் ஒரு மனிதனை இலகுவாகத் துன்புறுத்தி விடலாம். ஆனால் அத் துன்புறுத்தல்களை எல்லோராலும் இலகுவில் தாங்கிக் கொள்ளமுடியாது. துன்புறுத்தலுக்குள்ளாகும் மனிதனின் உணர்வுகளும், உடலும் ஒரே நேரத்தில் சீண்டப்படுகின்றன. அவற்றின் விளைவுகள் பாரதூரமானவை. நீச்சலை அறியாதவன் ஒருவனை நடுக் கடலில் தள்ளிவிடுவதைப் போல குரூரமானவை அவை. ஆனால் அதைச் செய்பவனும் இன்னுமொரு சக மனிதனே. துன்புறுத்தலுக்குள்ளாக்கப்படுபவனைப் போன்றே குருதியும், நரம்புகளும், அவயவங்களும் கொண்டவனே துன்புறுத்துபவனும். அவனுக்கு மட்டும் அம் மனநிலை எப்படி வாய்க்கிறது? அதிகாரமும், ஆணவமும், பழி வாங்கலுமே இவ்வாறான துன்புறுத்தலுக்கு ஒரு மனிதனைத் தூண்டுகின்றன. இவ்வாறான துன்புறுத்தல்களை ‘சித்திரவதை’ எனப் பொதுப் பெயர் கொண்டு அழைக்கலாம்.

Sunday, October 18, 2015

அதிகாலையில் முகத்தில் உரசும் இதமான குளிர் காற்று...


அதிகாலையில் முகத்தில் உரசும் இதமான குளிர் காற்று...

குழந்தையின் சிணுங்கல்கள்

பிள்ளைகளின் புத்தக சுமைகள்..

குக்கரின் விசில் சத்தம்..

ஆட்டோக்களில் குழந்தைகளின் நெரிசல்கள்..

சாலைகளில் காலை நேர டிராபிக்..

பைக்கில் சாலையில் மழையின் தாலாட்டு...

மௌனம்

மௌனம்
உலகில் மிக மிக அழகானது.
சுற்றுச் சூழலில் உணர்த்தப்படும் ஒவ்வாமை உணர்வுகளை ஜீரணிக்க முடியாமலும், வலுக்கட்டாயமாக ஏற்படுத்தப்படும் அழுத்தத்தினால் உண்டாகும் அஜீரணத்தை வார்த்தை எதுவும் பிரயோகப்படுத்த முடியாதவாறு பலவந்தமாய் வாய்க்கு பூட்டு போட்டு அடைத்து விடுகிற நெருக்கடியினாலும், அடிமனதில் சுழலும் வெப்பக்காற்று, பக்கத்தில் நின்று சுவாசிப்போரின் நாசிகளால் கூட உணற முடியாத வகையில் வித்தை காட்டி அமைதிச் சூழலை ஏற்படுத்தி வைத்து விடுகிறது.

முன்னேற்றம்...!

ஏழை எழியவரின்
முன்னேற்றம்
வீழ்ந்து போகின்றது எழாமலே ...

பணம் படைத்தவனின்
முன்னேற்றம்
மேலும் ஏறுகிறது விழாமலே ...

அரசியல் விற்பன்னர்களின்
முன்னேற்றம்
முந்தி நிற்கிறது பந்தியினிலே...

ஹிஜ்ரீ பிறந்த வரலாறு



ஹிஜ்ரீ ஆண்டு தெரியுமா? முஸ்லிம்களின் திருமண அழைப்பிதழ்களில் பார்த்திருக்கலாம். நோன்பு காலங்களில் ஸஹர் நேரம், நோன்பு துறக்கும் நேரம் அடங்கிய அட்டவணைகள் பள்ளிவாசல்களில் வினியோகிப்பார்களே அதில் இருக்கும். மாபெரும் இஸ்லாமியப் பேரணி, முஸ்லிம் மணமக்களைப் பல்லாண்டு வாழ்த்தி, ஹஜ்ஜிலிருந்து திரும்பியவர்களுக்கு என்று வாழ்த்து அச்சிட்டு ஊர்ப்பக்கம் போஸ்டர்கள் ஒட்டியிருப்பார்கள் அதிலும் “ஹி“ புள்ளி ஆண்டு எண் என்று இருக்கும். பெரிய எழுத்திலான ஆங்கில ஆண்டு விபரங்களுடன் அதைவிடச் சிறிய அளவில் ஹிஜ்ரீ விபரங்களும் குறிப்பிட்டிருப்பார்கள்.
நம்மில் மிகப் பெரும்பாலானவர்கள் அதைப் படித்துவிட்டு, ஹிஜ்ரீ விபரங்களை மட்டும் காஃபி ஃபில்டரில் கவனமாய் வடிகட்டிவிட்டு நிகழவிருக்கும் விசேஷத்தின் ஆங்கில ஆண்டு, மாதம், நாள் ஆகியனவற்றை மனதில், டைரியில், காலண்டரில், சுவற்றில், செல்ஃபோனில் இப்படி எங்காவது குறித்து வைத்துக் கொள்வோம்.

சாட்டை!


"சாமிதான்டா எல்லார்க்கும் மூளை தந்தான்....
சப்பான்காரன் மூளைக்கு வேலை தந்தான்......" என்றொரு பாடலைக் கேட்டிருப்பீர்கள் இல்லையா?

தொப்புளைப் பார்த்தவுடன், சுற்றிலும் பம்பரம் சுழற்றத்தான் இங்குள்ள மழுங்கிய மூளைகளுக்கு தோன்றியது.

ஜப்பான் மூளைக்கு என்ன தோன்றியிருக்கிறது தெரியுமா?

மூப்பு முதிர்ந்தவுடன் முட்டிக்கொண்டு வருவதை நம்மால் உணரமுடியாது. அதற்கான உணர்வுகள் வயோதிகம் காரணமாக குறைந்துவிடுவது அல்லது முற்றிலும் உணர்வுகளற்றுப் போவதே காரணம்.

மேற்சொன்ன காரணத்தால் தன்னையறியாமல் சிறுநீர் அல்லது மலம் வெளியாகிவிடும். இதனால் முதியவர்கள் பெரிதும் அவதிக்குள்ளாவார்கள். அதேபோல் சிறுவர்களுக்கும், படுக்கையிலுள்ள நோயாளிகள் இன்னும் பிறர் உதவி தேவைப்படுவோர் என அனைவருக்குமே இதுவொரு பெரும் பிரச்சனைதான்.

சாதனைப் பெண்மணி ஃபஜிலா

சர்வதேச அளவில் சாதனைகள் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார் ஒரு தமிழ்ப் பெண்மணி. அவர் ஃபஜிலா ஆசாத்!  பல நாடுகளுக்கும் சென்று இளைஞர்களுக்கு  தன்னம்பிக்கை வகுப்புகளை நடத்திக்கொண்டிருக்கிறார் அவர்.

மிருதுவான கவிஞராக, அழுத்தமான கட்டுரை யாளராக, தேர்ந்த நகை வடிவமைப்பாளராக, வசீகரிக்கும் பேச்சாளராக, அனுபவம்மிக்க மனநல ஆலோசகராக இப்படி பல்வேறு பரிணாமங்களுடன் திகழ்ந்துகொண்டிருக்கும் தன்னம்பிக்கைப் பெண்மணி ஃபஜிலா ஆசாத் அண்மையில் சென்னைக்கு வந்திருந்தார். அவரை "இனிய உதயம்' வாசகர்கள் சார்பில் சந்தித்தோம்.

உலக அளவில் சாதனை செய்துவரும் உங்களின் வேர் எது? விலாசம் எது?

ராமநாதபுரம் மாவட்ட கீழக்கரைதான் என் தாய்பூமி. இதுதான் நான் வேரூன்றி முளைத்த இடம். என் அப்பா பெயர் உசைன் அப்துல்காதர். முற்போக்கு சிந்தனையாளர். பண்பாளர். அவர்தான் என் ரோல்மாடல். அம்மா, சித்தி சுபைதாவோ வைதீகக் கோட்பாடுகளில் ஊறியவர். என்னோடு பிறந்தவர்கள் ஐந்து பேர். நான்தான் மூத்தவள். குடும்பத்தினரின் அன்பு நீரூற்றில் நனைந்தபடியே வளர்ந்தவள் நான். பள்ளிப் படிப்பில் சுட்டி. பள்ளி, கல்லூரிகளில் படித்தபோது, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் நான் பலமுறை மாநில அளவில் முதலிடம் பிடித்திருக்கிறேன். ஹமீதியா மெட்ரிக் பள்ளி தமிழ் ஆசிரியை நூர்ஜகான் என் தமிழார்வத்துக்குத் தாய்ப்பால் ஊட்டினார். ஆசிரியை சௌதாவும் என்னை உற்சாகப்படுத்தினார். அதனால் எனது பள்ளி நாட்கள் வண்ணமயமாய் நகர்ந்தன.

‎இப்போது‬ அவர் யோசிக்க ஆரம்பித்திருந்தார்.

ஒரு வணிக நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தபோது தமது நிறுவனத்தின் மூலமாகச் செய்யும் சேவைகளைக்குறித்து சொல்லிக்கொண்டிருந்தார். சில கோவில்களின் கட்டிடப் பணிகளுக்கு கணிசமாக பண உதவி செய்ததாகவும் கும்பாபிஷேகம் மற்றும் அன்னதானத்திற்கு தர்மம் செய்ததாகவும் இறைவன் தாம் செய்யும் இந்த தானதர்மங்களுக்குப் பகரமாக வணிகத்தில் செழிப்பையும் குடும்பத்தில் மன நிம்மதியையும் தந்துவிட்டால் போதுமானது என்று பெருமிதத்துடன் பகிர்ந்துகொண்டிருந்தார்.

Monday, October 12, 2015

சமூக நல்லிணக்கத்திற்கு 10 கட்டளைகள்

டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத்

  நமது நாடு பல நூற்றாண்டுகளாகவே பல சமயத்தவர், இனத்தவர், மொழியினர், பண்பாட்டு மரபினர் வாழும் பன்மைச் சமூக நாடாக திகழ்ந்து வருகிறது. பன்மைச் சமூகச் சூழலில் இணக்கம் இருந்தால் மட்டுமே அமைதியும், மகிழ்ச்சியும் கிட்டும். நல்லிணக்கமே நாட்டின் ஒற்றுமைக்கும் இறையாண்மைக்கும் வலுவான அடித்தளமாகும்.

  சமூக நல்லிணக்கம் மலர, வெற்று வார்த்தைகளும், போலிப் பேச்சுகளும், கண் துடைப்பு நடவடிக்கைகளும் எவ்வகையிலும் உதவ மாட்டா. மனித நேயம், நீதி, நியாயம், தர்மம், அஹிம்சை ஆகியவற்றின் கொள்கைகளும், செயல்பாடுகளுமே சமூக நல்லிணக்கம் உருவாக வழி வகுக்கும்.


 1.மனித நேயத்துடன் வாழ்க !

  சமூக நல்லிணக்கத்திற்குத் தடையாக இருப்பது கொள்கை வேறுபாடுகள் அல்ல. சமூகங்களுக்கிடையில் காணப்படும் ஆதிக்க மனப்பான்மை, வெறுப்பு, பகைமை, மாச்சரியம், பொறாமை, அவநம்பிக்கை, சந்தேகம் ஆகியவையாகும். இவற்றைப் போக்கும் அருமருந்து மனிதநேயமே. மொழியால், இனத்தால், சமயத்தால் வேறுபட்டிருப்பினும் நாம் அனைவரும் மனிதர்கள். ஒரே வகையான உடலமைப்பு, உடல் செயல்பாட்டு முறை, உளவியல் போக்கு கொண்டவர்கள். நமது தேவைகளும், உணர்வுகளும், ஆசைகளும், நிராசைகளும் ஒரே மாதிரியானவை. எனவே, தனக்கு விரும்புவதையே பிறருக்கும் விரும்புவோம் என்று எண்ணிச் செயல்பட்டாலே நல்லிணக்கம் நம்மைத் தேடிவரும்.

  ஒன்றே குலம், ஒருவனே தேவன் – திருமூலர்

  யாதும் ஊரே, யாவரும் கேளிர் – கணியன் பூங்குன்றன்

  பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் – வள்ளுவம்

  மனிதர்கள் அனைவரும் ஒரே குலத்தில் இருந்து பிறந்தவர்கள் ஒரு தாய் தந்தையரின் வழித்தோன்றல்கள் குர்ஆன் – பைபிள்

   உலகம் ஒரு குடும்பம் வசுதைவ குடும்பகம் என்ற கோட்பாடுகளைச் செயல்படுத்தினால் மனித நேயம் உருவாகும்.

Sunday, October 4, 2015

ஹாங்காங் டைம்.

குறிப்பு: ஹாங்காங் டைம்...
-----------------------------
1992 - ம் ஆண்டில்
ஹாங்காங்கில் உள்ள
திரி ஸ்டார் உணவு விடுதிக்கு (இந்தியன் ஸ்டைல்)
அஸிஸ்டெண்ட் குக்காக பணி எடுக்கச் சென்றேன்.
மலேசியாவில் இருக்கிற
என் தம்பி இதற்கு ஆவணங்கள் செய்து
வழியை சுழுவாக்கி,
நம்பிக்கை தந்து வழி அனுப்பிவைத்தான்!

'பனானா லீஃப்ஸ் கறி ஹவூஸ்' என்கிற அந்த ஹோட்டல்
சீன நடிகர் ஒருவருக்கு சொந்தமானது!
அங்கே பத்துக்கும் மேற்பட்ட
இந்தியர்கள் பணியில் இருந்தார்கள்!
பெரும்பாலும் இவர்கள் மலேசியா வாழ் தமிழர்கள்!

புனித ஹஜ் பயணம் - சில உண்மைகள் (10 )

உலகில் வாழ பொருள் தேவை
மறு உலகிற்கு அருள் தேவை.

உடல், பொருள், உயிர் அனைத்தையும்
இழந்து, இந்த அருள் ஒன்றை மட்டும் பெற
துடிப்பவர்களே ஹாஜிகள். இது ஒன்றையே தங்கள் வாழ்வின் லட்சியமாக கொண்டு
வாழ்பவர்கள் அவர்கள்.பூர்ணமாக வாழ்வை ரசித்தவா்களுக்கு, ஹஜ் பயணம் கூட ஒரு மரண பயணத்திற்கான பயிற்ச்சி தான்... அவர்கள் அந்த பயணத்திற்காக தேர்வு செய்யும் உடைகளே, அந்த எண்ணத்தை பறைசாற்றுகிறது எனலாம். அந்த நாட்களில் ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கை எவருக்கும் இருந்ததில்லை. தங்கள் வாழ்ககையின் கடைசி பயணமாகவே, ஹாஜிகள் இந்த பயணத்தை கருதுகிறார்கள்.....

புனித ஹஜ் பயணம் - சில உண்மைகள் (9)

மக்காவுக்கு வந்து சேரும் இந்திய ஹாஜிகளை கவனிக்கும் பொறுப்பு சவூதி அரசால் அங்கீகரிக்கப்பட்ட, பித்தியேக ஏஜன்ஸிகளையே சேரும். இந்திய ஹஜ் குழு வோ அல்லது தமிழ்நாடு ஹஜ் குழுவோ அவர்களின் உரிமைகளில் தலையிட முடியாது. அங்குள்ள சட்டங்கள் மிகவும் கடுமையானவை. இந்திய தூதரக அதிகாரி கள், சிலவற்றில் பாராமுகமாக நடந்து கொள் வார்கள். ஆனால் இப்போது நிலை அவ்வாறு இல்லை.

இந்திய ஹாஜிகளின் எந்த தேவைகளையும் கருத்தில் கொண்டு, அவர்களுக்காக அல்லும் பகலும் சேவை செய்வது ஒன்றையே தன் முழு குறிக்கோளாகக் கொண்டு, மிகச் சிறந்த பணியை ஆற்றி வருபவர் தமிழகத்தை சார்ந்த அதிலும் குறிப்பாக, குமரி மாவட்டத்தை சார்ந்த துடிப்பான இளம் IFS அதிகாரி, திரு.முபாரக் IFS அவர்கள். முபாரக் அவர்கள், இந்திய கான்சல் ஜெனரலாக - ஜித்தாவில் பணியாற்றி வருகிறார்.

இது ஒரு ஓவியம் என்றால் நம்புவீர்களா...???


இது ஒரு ஓவியம் என்றால் நம்புவீர்களா...??? இது ‪#‎நான்_வரைந்ததல்ல‬ சமீபத்தில் என் நட்பில் இணைந்த சகோதரர்
                                                                    Arafath Aik
Arafath Aik வின் ஓவியம். அவர் ஒரு பள்ளியின் ஓவிய ஆசிரியர். இது போன்ற ஓவியங்கள் வரைய தனக்கு 18-20 மணி நேரங்கள் ஆகும் என்கிறார்.

உண்மையில் இலக்கில்லாமல் வரைந்து கொண்டிருந்த நான் அவரை பார்த்து தான் ரியாலிஸ்டிக் ஓவியங்கள் வரைய வேண்டுமென்ற ஆர்வம் ஏற்பட்டது. எனக்கு அவர் அளவுக்கு பர்ஃபெக்‌ஷன் வரவில்லை. என்னால் இது போன்ற ஓவியங்களுக்கு 7-8 மணி நேரங்கள் மட்டுமே செலவளிக்க முடிகிறது...!

அவரின் மற்ற ஓவியங்கள் கமெண்ட்டில் தருகிறேன். பார்த்தால் பிரமித்து போவீர்கள். ஓவிய ரசனை உள்ளவர்கள் அவரை நட்பில் இணைத்துக் கொண்டு மனம்திறந்து பாராட்டுங்கள் சகோஸ்...!



                                       Suhaina Mazhar

Saturday, October 3, 2015

பண்டாரிகளின் மேலான கவனத்திற்கு ...

 J Banu Haroon
அவ்வப்போது சின்ன சின்ன தேவைகளுக்கும் அருமையான சமையல் ஆட்கள் (பண்டாரிகள் )கிடைப்பார்கள் .பெண்களுக்கான கஷ்டமான வேலைகள் இங்கெல்லாம் குறைவே !..

அக்கடாவென்று அவர்கள் கொடுத்த லிஸ்டில் உள்ள சாமான்களை வாங்கிப்போட்டுவிட்டு ...குளித்து ரெடியாகி விடலாம் ! நிம்மதியாக சாப்பிடுவதற்கும் ,விருந்தினர்களை வரவேற்று உபசரிப்பதற்கும் ....நிறைய டைம் எடுத்துக்கொள்ளலாம் .

பரோட்டா ,கோழி சம்மா செய்வதற்கு கூப்பிட்டனுப்பிய பண்டாரி கொடுத்த லிஸ்டில் 10பாட்டில் ஸ்பிரின் ட் ,அல்லது செவென் அப் என்றிருந்தது .
'எதுக்கு தம்பி இதெல்லாம் ?..'
'வாங்கி வைங்க ...அது இல்லாட்டி நமக்கு சரிப்படாது !...'
'ஒ !..எத்தனை பேர் கையாள் வருவாங்க ?'..என்றேன் .
'மொத்தம் அஞ்சு பேர் ! '...சொல்லிவிட்டு போய்விட்டார் .

Friday, October 2, 2015

புனித ஹஜ் பயணம் - சில உண்மைகள் (8)

 Vavar F Habibullah

இந்த முறை, இந்தியாவில் இருந்து சுமார் ஒன்றரை லட்சம் பேர் ஹஜ் பயணம் மேற் கொண்டனர். இந்திய ஹஜ் கமிட்டி இவர்களை தேர்வு செய்து அனுப்புகிறது என்றாலும், பணக்கார ஹாஜிகளுக்கென்றே செயல்படும் சில ஹஜ் டிராவல் நிறுவனங்கள் இந்த சேவையை முழு அளவில் வியாபார நோக்கிலேயே நடத்து கின்றன. ஹாஜிகள் கொடுக்கும் பணத்தை வைத்தே அவரகளின் ஹஜ் CATEGORY நிரணயம் செய்யப்படுகிறது. A கிளாசில் தொடங்கி, E கிளாஸ் வரை தரவாரியாக ஹாஜிகள் பாகுபடுத்த படுகின்றனர். இதை சவூதி அரசு வகைப் படுத்துகிறது.

தமிழ்நாடு ஹஜ் கமிட்டி, இந்திய ஹஜ் கமிட்டியின் ஒரு கிளையாகவே செயல் படுகிறது. தமிழக ஹாஜிகளை தேர்வு செய்து அவர்களை விமானநிலையம் அழைத்து வந்து வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சிகளை மக்கள் வியக்கும் வண்ணம் நிகழ்த்தி அந்த படங்களை பத்திரிகைகளில் வெளியிட்டு மகிழ்வதோடு அதன் திருப்பணி நிறைவு பெறுகிறது.

மாட்டுக் கறியும் மட்டோக்கியும் பின்னே ஞானும் ...!

 ராஜா வாவுபிள்ளை

உகாண்டாவுக்கு வந்த புதிதில் 1980 ல் கம்பாலாவில் இந்திய தூதரகதில் பணிபுரிந்த இந்தியர்களை தவிர்த்து இங்கே இருந்த இந்தியர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

இந்தியர்கள் அனைவரும் இங்குள்ள குஜராத்தி கோவிலில் விடுமுறை நாளான ஞாயிறன்று கூடுவது வழக்கம். மதியம் 'தாழி' எனும் குஜராத்தி மரக்கறி சாப்பாடும் பரிமாறப்படும். 10 அல்லது 15 இந்தியர்கள் ஒற்றுமையாய் கூடி அந்த வாரத்தில் நடந்த காரண காரியங்களை பகிர்ந்து எந்தவிதமான பாகுபாடும் இல்லாமலே பழக்கவழக்கங்கள் இருந்து வந்தது.

ஹோட்டல்கள் இருந்தாலும் இந்திய உணவு விடுதிகள் எதுவும் இல்லாததால் குஜராத்தி கோவில் அப்போது அங்கு வாழ்ந்த இந்தியர்களுக்கு நல்ல ஒரு கூடுமிடமாக வே இருந்தது.

புனித ஹஜ் பயணம் - சில உண்மைகள் (7)


Vavar F Habibullah
கேரளாவை சார்ந்த ஒரு பெரிய பிஸினஸ் மேன், உம்ரா மற்றும் ஹஜ் விசாவில் மக்கா வந்தார். சாதாரண மெடிக்கல் செக்கப்புக்காக என்னை பார்க்க மருத்துவமனை வந்தார். அவர் சொன்னார்...,

"டாக்டர் சார்... நான் ஒரு டயபடிஸ் பேஷியண்ட், ஆனால் அதிசயம் பாருங்கோ, மக்காவில் கால் வைத்ததுமே டயபடிஸ் இருந்த இடம் தெரியாம மறைந்து போய் விடுகிறது."

பேசிக் கொண்டிருந்தவர், திடீரென்று வயிற் றை பிடித்துக் கொண்டு அலறினார். அது ஒரு 'அக்யூட் அப்டாமன்' கேஸ் போல் தோன்றவே உடனடியாக ICU வில் அட்மிட் பண்ணி, தேவையான சிகிச்சையைத் தொடர்ந்தோம்.
சற்று 'ஸ்டபிலைஸ்' ஆன பிறகு அல்- நூர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தேன்.
அவருடன் தங்கி இருந்து, அவரை கவனிக்க எவரும் இல்லை. வந்தவர்கள் அவர்கள் பணிகளை கவனிக்க சென்று விட்டனர். அவர் தந்த தகவலின் பேரில், அவருக்கு தெரிந்த உறவினர் ஒருவரை, ரியாதில் இருந்து வரவ ழைக்க ஏற்பாடு செய்தோம். இரவில் வெகு நேரம் கழித்து வந்த அவரை, மருத்துவமனை யில் நோயாளியுடன் இருந்து, அவரை கவனிக்க ஏற்பாடுகள் செய்து கொடுத்தோம்.

தாத்ரி சம்பவம் எதிரொலி: கிராமத்தை விட்டு வெளியேற தயாராகும் முஸ்லிம்கள்

ஆர்.ஷபிமுன்னா

இக்லாக்கின் உறவினர்கள் | படம்: பிடிஐ

பக்ரீத்தில் பசு மாடு பலி கொடுத்ததாக இக்லாக் அடித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என இக்லாக்கின் தாய் அஸ்கரி கோரியுள்ளார். இத்துடன் அங்குள்ள முஸ்லிம் குடும்பங்கள் அக்கிராமத்தை விட்டு வெளியேற ஆலோசித்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

டெல்லியில் இருந்து சுமார் 56 கி.மீ தொலைவில் உள்ள பிசோதா கிராமம், உபி மாநிலம் தாத்ரி தாலுக்காவில் அமைந்துள்ளது. இங்கு கடந்த வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்ட பக்ரீத் பண்டிகைக்காக பசு மாடு பலி கொடுத்து அதன் இறைச்சியை உண்டதாக கிளம்பிய வதந்தியில், 52 வயது இக்லாக் அடித்துக் கொல்லப்பட்டார்.

புனித ஹஜ் பயணம் - சில உண்மைகள் (6)

 Vavar F Habibullah
மக்கா நகரில், நான் அறியாத இடங்கள் எதுவும் இல்லை. என்னை போலவே மக்கா நகரின் தொன்மையை பற்றி, வரலாறு பற்றி அறிந்து கொள்ள ஆவல் கொண்டவர்கள் மிகவும் அதிகம். ஆனால் வரலாற்று சின்னங்கள் பல அழிக்கப் பட்டு விட்டன என்ற முரண்பாடான தகவல்கள் நம்மை அதிர்ச்சி கொள்ள வைக்கின்றன.
ஜியாத் FORTRESS தான் முழுமையாக தகர்க் கப்பட்டு, அங்கே கம்பீரமான மக்கா ராயல் கிளாக் டவர் எழும்பி இருக்கிறது என்று சொல்கிறார்கள்.
முதல் கலீபா அபூபக்கர் சித்திக் வாழ்ந்த வீடு தான், ஹில்டன் ஹோட்டலாக உருமாறி விட்டது என்று சொல்கிறார்கள்.

கலைமகள் ஹிதாயா ரிஸ்வி அவர்களுடன் ஒரு நேர் கானல் .. - நேர் கானல் : கிண்ணியா பாயிஸா அலி

'இலக்கிய வழிப் பயணத்தில் இன்னும் தன்னை இளையவளாகத் தான் கருதிக் கொண்டிருக்கின்றார்''

எனதுகவிதைகளில்,யாரும் இலக்கணக் குற்றங்களை தேடிக் கொண்டிருக்கத் தேவையில்லை.
ஏனெனில் !நான் இலக்கண ஏடுகளை எட்டிப் பார்த்ததுமில்லை தமிழ் மொழியை கற்றவளும் அல்ல. அதனால்தலைக்கனங் கொண்டு மார் தட்டிப் பேசுவதுமில்லைஎன்று கூறுகின்றார்

கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

அவர்களுடன் ஒரு நேர் கானல் ..


நேர் கானல் : கிண்ணியா பாயிஸா அலி


....................................................................................................... தென்றலே கவிபாடும் தென்கிழக்கு மண்ணின் கிராமம் ஒன்றின் தெருக்கோடியில் நின்று கொண்டு கூழான் கல்லொன்றை கூலிக்கெடுத்தாவது விழிகளை மூடிக் கொண்டு வீசினால் விர்ரென்று விரைந்தேகும் அக் கல் விழும் இடம் ஒரு கவிஞனின் வீடாக இருக்கும் இல்லாவிட்டால் ஒரு எழுத்தாளனின் தலையாக இருக்கும்.
கன்னித் தமிழின் கழுத்துக்கு கனகமணி மாலையிட்டு விண்ணுலகம் விரைந்திட்ட முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாந்த அடிகளார்.அவர் அன்புச் சீடன் ஆசுகவி புலவர்மணி ஆ.மூ.சரிபுதீன் போன்ற ஆன்றோர்களும் ;வாடிநிற்கும் பயிராய்,வாழ்வோடிந்த உயிராய்,வரண்டு போன நதியாய் கிடந்த ஈழத்து இலக்கியத்தை வளப்படுத்தி வாகை சூடிய சான்றோர்களும் பிறந்து சரித்திரம் படைத்த மண் தென் கிழக்கு மண்.அம் மண்ணில்
வைரக்கற்களோடு வைரக்கல்லாக தன்னையும் பதித்துக் கொண்ட பெண் படைப்பாளி தான்இந்தஅன்பான

சகோதரி கலைமகள் ஹிதாயா றிஸ்வி..ஆம்

Thursday, October 1, 2015

கள்ளம்கபட மற்ற மனதாக குழந்தைகள் போல நடந்து கொள்வார்கள்.

 சரியான இளிச்சவாயெனா இருக்கியேப்பா.!?

நாம் அன்றாடம் எத்தனையோ வித்தியாசமான குணமுடைய நபர்களை சந்திக்கிறோம்.அதில் ஒன்றுமறியாத வெகுளித்தனமான வெளுத்ததெல்லாம் பாலென நினைக்கும் நபர்களும் அடங்கும். இப்படிப்பட்ட வெகுளித்தனமான நபர்கள் எதையும் யோசிக்காமல் யாரையும் எளிதில் நம்பி விடுவார்கள்.எது போலி எது நிஜம் என்று தெரியாமல் ஏமாந்தும் போய்விடுவார்கள். புறத்தோற்றத்தை வைத்து மரியாதைக்குரியவர்கள் என நினைத்து விடுவார்கள்.கள்ளம்கபட மற்ற மனதாக குழந்தைகள் போல நடந்து கொள்வார்கள். இத்தகைய ஒன்றும் அறியாத அப்பாவிகளுக்கு சமுதாயம் சூட்டியுள்ள பட்டம்தான் இழிச்சவாயென் என்பதாகும்.

புனித ஹஜ் பயணம் - சில உண்மைகள் (5)

Vavar F Habibullah
 தற்போது மக்காவில் நடந்த உயிரிழப்பு பற்றி பல்வேறு செய்திகள் உலா வருகின்றன.
சாதாரணமாக இந்த உயிரிழப்புகள் மக்காவில், மதினாவில், அரபாத்தில், அல்லது முஸ்தலிபா போன்ற வணக்கஸ்தலங்களில், நிகழ்ந்ததாக வரலாறு இல்லை.
இந்த முறைமட்டும், கிரேன் விழுந்து (human error) இறந்தவர்கள் தவிர; ஒருமுறை ஈரானிய தீவிரவாதிகளாலும், மக்காவில் உயிர்ப்பலி நிகழ்நததுண்டு. வன்முறை சம்பவங்கள் மசூதிகளிலும், சர்ச்சுகளிலும், யூத திருத்தலங்களிலும் நடைபெறுவது என்பது புதிய செய்தி அல்ல. யூத, முஸ்லிம், மற்றும் கிருத்துவர்களுக்கும் சொந்தமான ஜெருசலேமிலும் வன்முறை வெடிப்பது என்பது மிகவும் சகஜமான ஒன்று தான். கடவுளின் சந்நிதானங்களிலேயே, உயிர்ப்பலிகளும் தொய்வின்றி தொடர்கின்றன.மக்காவில் நிகழ்ந்த உயிரிழப்புக்கு காரணங்கள் வேறு...

அச்சே தின் ஆயேகா?


நல்ல காலம் பொறக்குது..!
நல்ல காலம் பொறக்குது..!

“அச்சே தின் ஆயேகா”
“அச்சே தின் ஆயேகா”

குடுகுடுப்பைக் காரராய்
தாடி வைத்த மோடிஜீ
நாடி ஜோதிட
நற்குறி சொன்னார்.

அய்யகோ….!
“அச்சே தின்” அல்ல
அச்சம் தினம் அல்லவா
ஆகி விட்டது?

என் வீட்டு அடுக்களையில்
என்னவெலாம் சமைக்க வேண்டும்?

Wednesday, September 30, 2015

புனித ஹஜ் பயணம் - சில உண்மைகள் (4)

 Vavar F Habibullah
எனக்கு நன்கு அறிமுகமான, ஒரு பிரபல தொழிலதிபர் குடும்பம் ஒன்று, புனித ஹஜ் ஜை நிறைவேற்ற, மக்கா மாநகருக்கு வருகை புரிந்தது. அவர்களுடன் 85 வயது மதிக்கத் தக்க, ஒரு மூதாட்டியையும் அழைத்து வந்திருந்தனர். அந்த வயதான பெண்மணியை அழைத்துக் கொண்டு, என்னை பார்ப்பதற்காக நான் பணி புரிந்த மருத்துவ மனைக்கு வந்தனர்.

மிகுந்த மூச்சுத்திணரல் (respiratory distress) நோயால் அவதிப்பட்ட அவரை, ICU வில் வைத்து அவசர சிகிச்சை மேற் கொள்ளும் சூழல் ஏற்பட்டது. இந்த உடல் நிலையில் அவரை ஹஜ் பயணம் மேற்கொள்ள எப்படி அநுமதி வழங்கினார்கள் என்பது மருத்துவர்களான எங்களுக்கும் புரியவில்லை. ஹஜ் பணியை மேற் கொள்ளும் நிலையில் அவர் இல்லை. அவர் உடலில் சக்தியும் இல்லை. அவருடன் வந்த உறவினர்கள் மதினா செல்லும் அவசர கதியில் இருந்தார்கள். அந்த பெண்மணியை உடன் இருந்து கவனிப்பதற்கும் எவரும் இல்லை.

Tuesday, September 29, 2015

எதிரும் புதிரும்../ ‎அடப்‬ போங்கப்பா

அவனுடன் கூட்டு சேராதே என்பார்கள்..இவர்கள் மட்டும்
கூடி குலாவுவார்கள்..

இல்லாதவனிடம் பேச மாட்டார்கள்.
இருப்பவனிடம் தூக்கத்திலும் பேசுவார்கள்..

ஊருக்கு உபதேசம் சொல்வார்கள்.உபகாரம் கேட்டால் ஊரிடம் கேட்கச் சொல்வார்கள்..

தியாகத்தின் நிறம் பச்சை என்பார்கள்.முதுகில் குத்தி விட்டு சிகப்பு என்பார்கள்..

நாக்கில் தேனை தடவி பேசுவார்கள்.மனதில் விஷத்தோடு இருப்பார்கள்..

சேவையே உயிர் மூச்சு என்பார்கள்.விழுந்து கிடந்தால் மிதித்தே கொல்வார்கள்.

வேலையில் கவன குறைவாய் இருப்பார்கள்..அடுத்தவன் வேலையில் ரெம்ப கவனமாய் இருப்பார்கள்..

தற்பெருமையே கிடையாது என்பார்கள்.ஒரு லைக் போட கெளரவம் பார்ப்பார்கள்..

வயிற்றுப் பசிக்கு உணவுக்
கேட்டால் மையத்திற்கு வந்து பாத்தியா ஓதுவார்கள்..

‪#...‎அடப்‬ போங்கப்பா
 
                                                                                                                                                            Saif Saif
Saif Saif