Sunday, May 29, 2011

அதிமுக - காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்டால் திமுக நிலைமை என்னவாகும்?


கடாஃபி நல்லவரா? கெட்டவரா? - இங்கர்சால், நோர்வே.

அவரது குடிமக்களில் ஒருசாராருக்கு நல்லவர்; மற்றொரு சாராருக்குக் கெட்டவர். இதனால்தான் அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் மக்கள் போரிடுகின்றனர்.

மாமியார் மருமகள் பிரச்னைகள் போல் மாமனார் மருமகன் பிரச்னைகள் வருவதில்லையே... என்ன இருந்தாலும் Male மக்கள் மேன்மக்கள்தானே? - ரிஸ்வான், பஹ்ரைன்.

ஆண்கள் தொழில், வணிகம், ஊழியம் என வருவாய் ஈட்டும் வழிதேடி வீட்டை விட்டு வெளியே செல்லும் நிலையில் வீட்டில் இருக்கும் பெண்களிடையே சில பிரச்சனைகள் உருவாகும். அதுவே மாமியார் மருமகள் போருக்கு வழிவகுக்கும்.

பொதுவே பெண்கள் பொசசிவ்னெஸ் குணம் உள்ளவர்களாக இருப்பதால் மகனும் கணவனும் என இரண்டு நிலைகளில் இருக்கும் ஒருவன் மீது கொண்ட
பொசசிவ்னெஸ் இப்போருக்குக் காரணம். வீட்டில் யாருக்கு பொசசிவ்னெஸ் அதிகம் என்ற ஈகோவும் காரணம்.

மருமகளை மாமியார் வேலைக்காரியாக நினைப்பதைப்போல் மருமகனை மாமனாரோ மாமியாரோ வேலையாளாக நினைப்பதில்லை. மேலும் பெரும்பாலோரான  மாமியாரும் மருமகளும் ஒரே வீட்டில் இருப்பர். மாமனாரும் மருமகனும் ஒரே வீட்டில் இருப்பதில்லை என்பதோடு எந்தத் தந்தையும் தம் மகளின் வாழ்க்கை (த் துணை)யோடு விளையாடத் துணியமாட்டார் என்பதும் மாமனார் மருமகன் சண்டை இல்லாமைக்குக் காரணமாகலாம்.

சதாம், ஒசாமா, அடுத்து..? - இளமாறன், ராயப்பேட்டை.
அய்மன் ஜவாஹிரி / முல்லா ஓமர்.

அண்ணா ஹசாரே - சமீப புரட்சி தொடரில், இந்திய புரட்சியின் ஆரம்ப குறியீடா? - இளவரசு, பரங்கிபேட்டை.

வினா புரியவில்லை.

அவர் என்ன பெரிய புரட்சி செய்து விட்டார்.?

நடைமுறையில் உள்ள சட்டத்தைச் செயல்படும் சட்டமாக ஆக்குவதற்கு உரிய வழியை உருவாக்கச் சொல்லி ஒரு போராட்டம் நடத்தியுள்ளார். முன்னர் ஒரு விடையில் நான் சொன்னதுபோல் குத்து விளக்காக உள்ளார்.

அதிமுக - காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்டால் திமுக நிலைமை என்னவாகும்? - அருள், கத்தர்.

அ இ அ தி மு க வுடன் காங்கிரஸ் கூட்டணி வந்தால் கம்யூனிஸ்ட்கள் தி மு க பக்கம் வரலாம்; பா ம க, அ இ அ தி மு க பக்கம் போகலாம். வேறு பெரிய மாற்றம் எதுவும் வரப்போவதில்லை.

வலிமையான எம் ஜி ஆரும் இந்திரா காந்தியும் நெருக்கடி நிலைக் கொடுமையும் சேர்ந்திருந்தபோது கூட தி மு க அஞ்சவில்லை; அசரவில்லை. இப்போது எதிர்க் கட்சியாக இருக்கும் தகுதியைக் கூட இழந்து  கேவலமான  தோல்வியைச் சந்தித்தாலும் அதிலிருந்து மீண்டு வரும் தொண்டர் பலம் கொண்டது தி மு க…

ஊழல் பெருச்சாளிகளையும் உட்கட்சிக் கலகக்காரர்களையும் களையெடுத்துவிட்டு, ஸ்டாலின் தலைமையில் துவக்க காலத் துடிப்புடன் மக்கள் பணி ஆற்றினால் மீண்டும் தி மு  க ஆட்சிக்கு வரும்.

தனது பயணத்தின்போது பொதுமக்களுக்கு இடையூறாக போக்குவரத்தை நிறுத்தக்கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளாரே? - செந்தமிழ்செல்வன்,அருப்புக்கோட்டை.

தம் ஆட்சியில் முன்பு சாலை வெய்யிலில் காத்துக் கிடந்த மக்கள், அடுத்து வந்த தேர்தலில் தமக்களித்த தண்டனையை மறக்காமல் இருக்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாம்..

தமிழகத்தில் அதிமுகவின் ஆட்சி இனிமேல் எப்படி இருக்கும்? - ப.கோ. வசீகரன்.

மேலே உள்ள வினாவில் இருப்பது உண்மையாக நடைமுறைப் படுத்தப் படும் என்பது உறுதியானால் முன்னர் ஜெயலலிதா ஆண்டதை விடச் சிறப்பாக அமையும் என எதிர்பார்க்கலாம். ஆனால் அவரின் அதிரடித் துவக்கம்( ரஸ்ஸலின் அலசல்) பழைய மாதிரியே இருக்கிறது..

ஆட்சி மாறும் போது முந்தய அரசு செயல்படுத்திய திட்டங்களை புதிய அரசு மாற்றும் போது ஏற்படும் பண விரயத்திற்கு யார் பொறுப்பு? இதனை தவிர்க்கவே இயலாதா வணங்காமுடியாரே? (உதாரணம்: தலைமைச் செயலகம்)- சரவணன், திருச்சி.

இப்படிச் செய்வோரே பொறுப்பு.

ஆனால் மக்கள் இதை உணர்வதாகத் தெரியவில்லை. நான்காம் தூணாகிய பத்திரிகைகளும் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை.

உத்தரப்பிரதேச மாநில முதல்வர் மாயாவதி  லக்னோ நகரின் பல இடங்களில்,   1000 கோடி ரூபாய் அரசுச் செலவில் யானைச் சிலைகள் நிறுவியுள்ளார்; கூடவே கன்ஷிராமுக்கும் தமக்கும் அம்பேத்கருக்கும்…..

5.9 கோடி பேர்,வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் ஒரு மாநிலத்தில் இப்படி ஊதாரிச் செலவு நடந்ததை உச்சநீதிமன்றமே  கண்டித்துள்ளது. தாம் ஆட்சிக்கு வந்தால் இவற்றை அகற்றப் போவதாக முலாயம்சிங் யாதவ் சூளுரைத்துள்ளார். மக்கள் பணத்தை வீணாக்குவதில்  உ பி யுடன் தமிழ்நாடு சரிசமமாகப் போட்டியிடுகிறது.

விறைப்புத்தன்மை எதனால் குறைகிறது? - சூர்ய ப்ரகாஷ் சேதுராமன்.

வீர்யம் குறைவதால்.

Saturday, May 28, 2011

சீறப்படும் சமச்சீர் புத்தகங்கள் !

வா.. வின் ஓவியம்

கல்வி அமைச்சகம் கீழ்
பல பாடத் திட்டங்கள்;
‘மாணவர் ஒரே நிலை;
கல்வியும் ஒரே நிலை!’
என்ற சீரிய நோக்கின்
விளைவே சமச்சீர் கல்வி!

எல்லாத் தரப்பிலும்
ஏகபோக வரவேற்பு!
புது நூல்கள் அச்சாகி,
பள்ளிகளுக்கு வந்தன.
வந்ததோ வந்தது தேர்தல்!
ஆட்சி மாற்றமும் வந்தது!

மீண்டும் அம்மாவின் எழுச்சி!
கலைஞர் திட்டமோ வீழ்ச்சி!
‘சமச்சீர் கல்வி வேண்டும்,
பாடங்கள் மாற வேண்டும;’
இது புதிய அரசின் கொள்கை!

Thursday, May 26, 2011

அன்புடன் மலிக்காவும் கவிதையும்

நம் எண்ணங்கள் தெளிந்த நீராய் ஓடட்டும் அது நம் ஆன்மாவை தெளிவாக்கட்டும் என்று தொடங்கி

என்றும் உங்கள் நினைவுகளோடு
நிலைக்க விரும்பும்
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

இவ்விதம் எழுதி அனைவர் மனதிலும் ஆழமாக பதியும் வரிகளுடன் கவிதையினை நிறைவு செய்யும் அதிரை மலர் தமிழ் மனம் வீசும் மங்கை மலிக்காவுக்கு நம்  வாழ்த்துக்கள்.

துபாயில் வானலை வளர்தமிழ் நிகழ்வில் முத்துப்பேட்டை கவிஞர் மலிக்காவுக்கு பாராட்டு


இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் -இது என்னுடைய ஆக்கம்..

நான் மிகவும் விரும்பிய உள்ளத்தினை தொடும் கவிதை
மரணிக்கும்போது
உனக்காகவே நானென்றுஎனைநீ உச்சிமுகர்ந்தாயே
அத்தருணமே எனதுயிர் சாந்தி அடையக்கண்டேன்
நான்பிறக்க வரம்கேட்டாய் என்னைமணக்க வரம்கேட்டாய்
நமதன்பின்வெளிப்பாடாய் நம்வாரிசுகளின் வரம்கேட்டாய்
எத்தடையுமின்றி எல்லாமே கிடைத்தது


என்னவனே! எனக்கு வரமாக கிடைத்தவனே!
எனக்காக ஒருவரம் கேட்பாயா? இறைவனிடம்
என்விழிநீர் உன்னைத்தழுவ உன்மார்புக்குழிக்குள்
நான் முகம் புதைத்திருக்கும் வேளையில்
எனக்கு மரணம் நிகழவேண்டுமென்று...


அன்புடன் மலிக்கா.
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

Tuesday, May 24, 2011

மாறிய மக்கள்; மாறாத ஜெ.



நடந்து முடிந்த தமிழகத்தின் சட்டமன்றத்திற்கான 17ஆவது பொதுத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. அறுதிப் பெரும்பான்மை பெற்று, அதன் தலைவி ஜெயலலிதா மூன்றாவது முறையாக முதல்வர் பொறுப்பேற்றிருக்கிறார். அ.இ.அ.தி.மு.க. அதிக இடங்களை வெல்லும் என ஆரூடம் கூறிய ஊடகங்கள் உட்பட யாருமே எதிர்பாராத அளவுக்கு 147 இடங்களில் தனித்து (91.875%) வென்று, ஆட்சியைப் பிடித்திருக்கிறது அ.தி.மு.க.

கடந்த ஐந்தாண்டு கால தி.மு.க. ஆட்சியில் நிலவிய

  1. விண்ணைத் தொட்ட விலைவாசி
  2. மின்வெட்டு
  3. வரலாறு காணாத ஸ்பெக்ட்ரம் ஊழல்
ஆகியன தி.மு.க.வை எதிர்க்கட்சி வரிசைக்கும் கீழே குப்புறத் தள்ளிப் போட்டிருக்கின்றன. பாவம் ஒரு பக்கம்; பழியொரு பக்கம் என்பதுபோல் தி.மு.க. ஆட்சியின் முறைகேடுகளால் அக்கட்சியோடு கூட்டணி சேர்ந்த கட்சிகளும் வெறும் தோல்வியை மீறி, பெரும் தோல்வியைத் தழுவியுள்ளன. குறிப்பாக, முஸ்லிம் லீக் மூன்று இடங்களில் போட்டியிட்டு முட்டை வாங்கிக் கொண்டது. ஈழ ஆதரவுக் கட்சிகளான பா.ம.க.வும் விடுதலைச் சிறுத்தைகளும் படுதோல்வியைச் சந்தித்து, தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை இழக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளன. சிக்கனமாக, அவ்வப்போது அறிக்கைகள் மட்டும் விட்டுக் கொண்டிருந்த புதிய தமிழகம் அ.இ.அ.தி.மு.க. கூட்டணியில் தன்னை இணைத்துக் கொண்டு, இரண்டு இடங்களில் போட்டியிட்டு ஓரிடத்தில் வென்றுள்ளது. கட்சி துவங்கிச் செயல்படத் தொடங்கிய 5 ஆண்டுகளில் சட்டமன்றப் பொதுத் தேர்தலைச் சந்தித்து, 41 இடங்களை அ.இ.அ.தி.க.விடமிருந்து பெற்று, 29 இடங்களில் (70.731%) வென்று. பிரதான எதிர்க்கட்சியாகியுள்ளது தே.மு.தி.க. தேர்தல் ஆணைய விதிகளின்படி தே.மு.தி.க.வுக்கு அங்கீகாரமும் தனிச்சின்னமும் ஒதுக்கப்படவுள்ளன.
மக்களுக்குக் கடந்த ஆட்சியின் மீதிருந்த கடுஞ்சினத்தின் காரணமாக எதிர்மறை வாக்குகளால் பயனடைந்தது அ.இ.அ.தி.மு.க என்றால், பெரும்பயனை அறுவடை செய்த கட்சி தே.மு.தி.க. என்பது பொருத்தமாக இருக்கும். அட்டூழியங்கள் பெருகிப் போனால் மக்கள் வாக்குகளால் தண்டிப்பார்கள் என்பதற்கு நடந்து முடிந்த தேர்தல் ஓர் எடுத்துக்காட்டு.

சதாம் ஹுசேன் ஹஜ் செய்வது வீடியோ-

அன்புத் தம்பி! எப்போது உன் கல்யாணம்?

by நீடூர் SA மன்சூர் அலி
நம் சமூகத்தில் எழுதப் படாத சட்டங்கள் நிறைய இருக்கின்றன. அறிவுக்குப் பொருந்தாத பல விஷயங்கள் – “இது இப்படித் தான்! எல்லோரும் இப்படித் தான் செய்கிறார்கள், நாமும் அப்படித் தான் செய்திட வேண்டும்” என்று மக்கள்  அவைகளைக் கண்ணை மூடிக் கொண்டு காலா காலமாக பின் பற்றி வருகின்றனர்.  அவை சரி தானா, அவைகளை இன்னும் விடாப் பிடியாக பிடித்துக் கொண்டிருக்கத் தான் வேண்டுமாஎன்று சிந்தித்துப் பார்த்திடக் கூட நேரமில்லை நம்மவர்களுக்கு. இப்படிப் பட்ட எழுதப் படாத சட்டங்களுக்கு, விதிகளுக்கு நம்மிடம் பஞ்சமே இல்லை!
நான் சொல்ல வருவது மார்க்கம் சம்பந்தப் பட்ட – ஷிர்க் மற்றும் பித்அத் – போன்ற விஷயங்களைப் பற்றி அல்ல! அவை குறித்து நிறைய பேசப் பட்டு வருகின்றன. எழுதப் பட்டும் விவாதிக்கப் பட்டும் வருகின்றன.
இங்கே நாம் விவாதிக்க விருப்பது குடும்பம் சார்ந்த விஷயங்கள் குறித்துத் தான். இது குறித்து பல விஷயங்களை நாம் ஆழமாக விவாதிக்க வேண்டியுள்ளது. ஒவ்வொன்றாக அவைகளை அலசுவோம் இங்கே.
சான்றாக – நமது இளைஞன் ஒருவனை எடுத்துக் கொள்வோம். அவன் படிக்கிறான். படித்து முடிக்கிறான். வேலைக்குச் செல்கிறான். சம்பாதிக்கின்றான். சரி! அவன் எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகின்றான்? “அன்புத் தம்பி! எப்போது உன் கல்யாணம்?” என்று கேட்டால் என்ன பதில் அவனிடமிருந்து வருகிறது?

Sunday, May 22, 2011

உங்களுக்கு சிறை செல்ல விருப்பமா! இந்தியாவில் வேண்டாம்.

யாருக்கும் சிறை செல்ல விருப்பம் கிடையாது .தவறு செய்யாமலும் சில சமயங்களில் சிறைக்கு செல்லும் நிலை ஏற்படலாம். அந்த நிலை வந்தால் உலகில் அருமையான  சிறைகள் உண்டு .அது நம் வீட்டினைவிட மிகவும் அருமையாக இருக்கும் . அந்த மாதிரி சிறைச்  சாலையினை தேர்வு செய்து கொள்ளுங்கள் .ஒருகாலமும் திகார் ஜெயில் வேண்டாம். 

( திகார் ஜெயிலில் 8-ஆம் எண் அறை கனிமொழிக்காக ஒதுக்கப்பட்டு இருந்தது.படுத்துதூங்குவதற்கு சிறியமேடை, கழிப்பறை வசதி செய்யப்பட்டு இருந்தது.கழிவறைக்கும்,படுக்கும் மேடைக்கும் இடையே தடுப்புச்சுவர் கிடையாது. திரைச்சீலையால் மறைத்துக்கொள்ள வேண்டும்.-
செய்தி  Source: http://www.inneram.com/ )

 நார்வே ஹோல்டன் ஜெயிலில் நல்ல குளியல் அறை வசதி  கழிப்பறை வசதி உண்டு. எந்த வித தடைச் சுவர்களும்   இல்லை.
The World's Nicest Prison. Norway Holden Prison jail has en-suite bathrooms and windows without bars. A luxury prison containing en-suite bathrooms, .Banksy art-style art and windows without bars.

Saturday, May 21, 2011

நடிகர் தனுஷ், சலீம் குமாருக்குத் தேசிய விருதுகள்!

தலைநகர் டெல்லியில் தேசிய திரைப்பட விருதுகள்  இன்று அறிவிக்கப்பட்டன. இதில், நடிகர் தனுஷுக்கும் மலையாள நடிகர் சலீம் குமாருக்கும் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
தனுஷுக்கு "ஆடுகளம்" என்ற படத்தில் சிறப்பாக நடித்ததற்காகவும், சலீம் குமாருக்கு "ஆதாமின்றே மகன் அபு"  என்ற படத்தில் (இஸ்லாமிய கதைப் பின்னணியில்)  சிறப்பாக நடித்ததற்காகவும் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.

Tuesday, May 17, 2011

உடல் நலத்திற்கு ஒரே வழி தொழுகை.

நடந்து சென்று பள்ளிவாசலில் தொழுது வருவதின் சிறப்பு.

According to a latest research, walking is a useful sport to prevent some knees diseases …நடப்பது மூட்டு வலி வராமல் இருக்க உதவலாம் . .குதிப்பதும், ஓடுவதும் நடப்பதும் எவராலும் தொடர்ந்து செயல் பட முடியாது  .உடல் நலம் கருதி இதனை செயல்படுத்த முயல்வோரும் சில காலங்களுக்குள் நிறுத்தி விடுவர் . ஆனால் அதனை இறைபக்தியுடன் செயல்படுவோர் ஒரு காலமும் நிறுத்த மாட்டார்கள் . இதற்கு ஒரே வழி தொழுகை. இஸ்லாமிய முறை தொழுகை இறைபக்தியுடன் உடல் நலமும் தர வல்லது.தொடர்ந்து தொழுது வருபவர்களுக்கு கழுத்தில் உள்ள எலும்பின் தேய்மானம்(Cervical Spondylosis ) வருவதில்லை.
காலையில் எப்படியாவது வைகறை [பஜர் ] தொழுகைக்கு எழுந்தாக வேண்டும்.தொழுகையை அதன் குறிப்பிட்ட நேரத்தில் அதற்குரிய சுன்னத் தொழுகையோடு தொழுது வந்தால் உடலின் உடலையும் மனதையும் ஆரோக்யமாக வைத்திருக்கலாம்.
தூய்மையான அதி காலை காற்று உடல் நலத்துக்கு மிகவும் நல்லது விடியல் காலையில் பஜர் தொழுகைக்கு போகும் போது சுத்தமான ஓசோன் காற்றை சுவாசிப்போமே அப்போது வரும் ஒரு உற்சாகம் அது மிகவும் உயர்வானது.
The prophet said  to his companion (do you want to know what erase sins and raise Muslims to the upper levels in heaven , they said yes, then the prophet said  that you must make the ablution perfectly and to walk to mosques and to wait the prayers .)[Narrated by Muslim].அமல்களில் சிறந்தது எது என்று நபி صلى الله عليه وسلم அவர்களிடம் கேட்டபோது தொழுகையை அதன் ஆரம்ப நேரத்தில் தொழுவது என்றார்கள். அறிவிப்பவர்: உம்முஃபர்வா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:திர்மிதி, ஹாகிம், அபூதாவூத்
ஒரு மனிதர் தனித்துத் தொழுவதை விட கூட்டாகத் தொழுவது 27 மடங்கு சிறந்ததாகும். என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்.அறி:இப்னு உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:புகாரி,முஸ்லிம்,திர்மிதி
நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:-
உங்களில் யாரேனும் பள்ளிவாசலுக்குள் நுழைந்தால் இரு ரகஅத்துகள் தொழாமல் உட்கார வேண்டாம். (அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி) , ஆதாரம் : புகாரி-1163)
சுத்தமான இடத்தில எங்கு வேண்டுமானாலும் தொழுது கொள்ளலாம் ஆனால் பள்ளிவாசலுக்கு சென்று தொழுவது சிறப்பு
ஜமாஅத்து(கூட்டுத்)தொழுகை தொழுகையைக் கடைபிடியுங்கள். ஜகாத்தையும் கொடுத்து விடுங்கள். ருகூஃ செய்வோருடன் சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள்! (2:43)

  ஜமாஅத்துடன் தொழுவதற்கும், தனிமையாகத் தொழுவதற்குமிடையே நன்மையில் ஏற்ற தாழ்வு: ''ஜமாஅத்துடன் தொழுவது தனித்துத் தொழுவதைவிட 27 பங்கு பதவியால் கூடுதலாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (இப்னு உமர்(ரழி), புகாரீ, முஸ்லிம்)
 

Sunday, May 15, 2011

நீடூர் ஜாமிஆ மஸ்ஜிதில் மன்சூர் அலி சொற்பொழிவு

 இன்று உலகெங்கிலும் – கல்வியாளர்களாலும், தொழில் முனைவோர்களாலும், இன்னும் பல சிந்தனையாளர்களாலும் அதிகம் பேசப்படுகின்ற ஒரு துறையே – “மனித வள மேம்பாடு” என்பது (Human Resource Development).
ஓவ்வொரு தனி மனிதனுக்குள்ளும் புதைந்து கிடக்கின்ற அனைத்துத் திறமைகளையும்….. கண்டுணர்ந்து, அவைகளை முழுமையான பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பெரிதும் உதவி செய்திடும் துறை தான் – மனித வள மேம்பாடு ஆகும். தனி மனித வாழ்விலும், குடும்ப வாழ்விலும், தொழில் துறைகளிலும், பணியிடங்களிலும் ஒரு மனிதன் முழு வெற்றி அடைவதற்கு இந்தத் துறை பெரிதும் உதவி செய்கிறது.
“மனிதர்கள் சுரங்கங்கள்! – தங்கத்தைப் போல! வெள்ளியைப் போல!” – என்றார்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்.
சுரங்கங்களில் மறைந்து கிடக்கின்ற விலை மதிக்க முடியாத கனிமங்களைப் போலவே, ஒவ்வொரு தனி மனிதனுக்குள்ளும் “உள்ளாற்றல்கள் – மனித வளங்கள் – மறைந்து கிடக்கின்றன!
சுரங்கங்களின் தாதுப் பொருட்களிலிருந்து “தங்கத்தை” வெளிக் கொணர்வது போன்று தான் மனித வளங்களும் கண்டுபிடிக்கப் பட்டு மெருகேற்றப் பட வேண்டும்.
   அப்படிச் செய்திடும் போது தான் – மனிதன் – தான் யார் என்பதை உணர்ந்து கொள்கிறான். அப்போது தான் அவனுக்கு தன்னம்பிக்கை (Self Confidence) ஏற்படுகின்றது. அவனே வாழ்க்கையில் வெற்றி பெறுகின்றான்.

Friday, May 13, 2011

கேட்பவர்க்கு வாரி வழங்கும் கிருபையாளன் இறைவன்

அல்ஃபாத்திஹா - தோற்றுவாய்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)


1:1. அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.


1:2. (அவன்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.


1:3. (அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்).


1:4. (இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.


1:5. நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக!


1:6. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி.


1:7. (அது) உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல, நெறி தவறியோர் வழியுமல்ல. 
------------------------------------------------------------------------------

அல்லாஹ்தான் அனைத்துப் பொருட்களையும் படைப்பவன் இன்னும், அவனே எல்லாப் பொருட்களின் பாதுகாவலனுமாவான். (39:62)
அவன் தான் உங்கள் அல்லாஹ் - உங்கள் இறைவன் - எல்லாப் பொருட்களையும் படைப்பவன் - அவனைத் தவிர வேறு நாயனில்லை எனவே நீங்கள் (சத்தியத்தை விட்டும்) எங்கு திருப்பப்படுகிறீர்கள்? (40:62)
நிச்சயமாக, அல்லாஹ்தான் எனக்கும் இறைவன், உங்களுக்கும் இறைவன். ஆகவே அவனையே வணங்குங்கள், இதுவே ஸிராத்துல் முஸ்தகீம் (நேரான வழி) (43:64)
 
அவன் வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றிப் படைத்தவன். அவனுக்கு மனைவி, எவரும் இல்லாதிருக்க, அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான். இன்னும் அவன் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். அவன்தான் அல்லாஹ் - உங்கள் இறைவன், அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை எல்லாப் பொருட்களின் படைப்பாளன் அவனே ஆவான் ஆகவே, அவனையே வழிபடுங்கள் - இன்னும் அவனே எல்லாக் காரியங்களையும் கண்காணிப்பவன். (6: 102, 102)
மேலும், அவர்களிடம் யார் அவர்களைப் படைத்தது என்று நீர் கேட்டால் "அல்லாஹ்" என்றே அவர்கள் நிச்சயமாக கூறுவார்கள் அவ்வாறிக்கும் போது (அவனைவிட்டு) அவர்கள் எங்கு திருப்பப்படுகிறார்கள்? (43:87)


மேலும், (நபியே!) "நீர் இவர்களிடத்தில் வானங்களையும், பூமியையும் படைத்துச் சூரியனையும் சந்திரனையும் (தன் அதிகாரத்தில்) வசப்படுத்திருப்பவன் யார்?" என்று கேட்டால், "அல்லாஹ்" என்றே இவர்கள் திட்டமாக கூறுவார்கள் அவ்வாறாயின் அவர்கள் (உண்மையை விட்டு) எங்கே திருப்பப்படுகிறார்கள்? (29: 61)
இன்னும், அவர்களிடம் "வானத்திலிருந்து நீரை இறக்கி, பிறகு அதனைக் கொண்டு இப்பூமியை - அது (காய்ந்து) மரித்தபின் உயிர்ப்பிப்பவன் யார்?" என்று நீர் கேட்பீராகில் "அல்லாஹ்" என்றே இவர்கள் திட்டமாகக் கூறுவார்கள் (அதற்கு நீர்) "அல்ஹம்து லில்லாஹ் - புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது" என்று கூறுவீராக எனினும் இவர்களில் பெரும்பாலோர் அறிந்துணர மாட்டார்கள். (29:63)

"ஏழு வானங்களுக்கு இறைவனும் மகத்தான அர்ஷுக்கு இறைவனும் யார்?" என்றும் கேட்பீராக. "அல்லாஹ்வுக்கே" என்று அவர்கள் சொல்வார்கள் "(அவ்வாறாயின்) நீங்கள் அவனுக்கு அஞ்சி இருக்கமாட்டீர்களா?" என்று கூறுவீராக! (23:86,87)

"எல்லாப் பொருட்களின் ஆட்சியும் யார் கையில் இருக்கிறது? - யார் எல்லாவற்றையும் பாதுகாப்பவனாக - ஆனால் அவனுக்கு எதிராக எவரும் பாதுகாக்கப்பட முடியாதே அவன் யார்? நீங்கள் அறிவீர்களாயின் (சொல்லுங்கள்)" என்று கேட்பீராக. அதற்கவர்கள் "(இது) அல்லாஹ்வுக்கே (உரியது)" என்று கூறுவார்கள். ("உண்மை தெரிந்தும்) நீங்கள் ஏன் மதி மயங்குகிறீர்கள்?" என்று கேட்பீராக. (23: 88,89)

Wednesday, May 11, 2011

பின்லேடன் மனைவிகளை அமெரிக்கா சந்திக்க பாக். அனுமதி

பாகிஸ்தானில் உள்ள அபோட்டாபாத் நகரில் வைத்து பின்லேடனை அமெரிக்க ராணுவம் சுட்டுக் கொன்றதாக அறிவித்தையடுத்து, பாகிஸ்தான் அரசு தான் அவரை பாதுகாத்து வந்தது என்ற குற்றச்சாட்டு எழுந்தது.  காரணம் பின்லேடனை தங்கியிருந்ததாகக் கூறப்படும் இடம்  ராணுவ பயிற்சி மையத்திற்கு அருகில் உள்ளதால் ராணுவத்திற்கு தெரியாமல் பின்லேடன் தங்கியிருக்க முடியாது என்ற விமர்சனம் எழுந்தது.

இந்நிலையில்,  பின்லேடனின் மனைவிமார்கள் 3 பேரை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்து பத்திரமாக பாதுகாத்து வருகிறது என்ற செய்தி வெளியானது.  எனவே, பாக்கிஸ்தான் பின்லேடனின் மறைவிடம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டுமென்றும், கைது செய்து வைத்திருக்கும் அவரது மனைவிமார்களிடம் விசாரணை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் அமெரிக்க வலியுறுத்தியது.  இதற்கு ஆரம்பத்தில் மறுத்த பாகிஸ்தான், அமெரிக்காவின் தொடர் வற்புறுத்தலால் இப்போது சம்மதித்துள்ளதாகத் தெரிகிறது.


ஆனாலும், அவர்களிடம் பேட்டி மட்டுமே எடுக்க வேண்டும் என்றும் கேள்விகளை கேட்டு அவர்களை விசாரணை நடத்த அனுமதிக்க இயலாது எனவும் கூறியுள்ளது.   இவ்விசயத்தில் பாகிஸ்தானின் பிடிவாதம் தொடருமா அல்லது தளருமா என்பது விரைவில் தெரியவரலாம்
Source : http://www.inneram.com/2011051116395/pak-permitted-to-see-binledans-wifes

Tuesday, May 10, 2011

மிகவும் உபயோகமான பவர் பாயிண்ட் & அட்டாச்மெண்ட்ஸ் - Useful powerpoint Slides & Attachments.

http://nidurseasons.blogspot.com

Sunday, May 8, 2011

ஒசாமா பின் லாடனின் அன்பான அழகிய மனைவி

ஒசாமா பின் லாடனின் அன்பான, அழகிய மனைவி  29 வயதுடைய அமல் யமன் நாட்டைச் சார்ந்தவர்.
இஸ்லாம் நான்கு பெண்களை திருமணம் செய்துக் கொள்ள அனுமதிக்கின்றது . அவருடன் மூன்று மனைவியரும் உடன் இருந்தனர்.  

   அங்கிலிகன் திருச்சபையின் தலைவரான ரோவான் வில்லியம்ஸ் பின்லேடன் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், ஆயுதமற்ற ஒருவரை நிராயுதபாணியான நிலையில் கொன்றது தனக்கு சங்கடமான உணர்வுகளை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார். அமெரிக்க உளவுப்படையினரின் ரகசிய நடவடிக்கையில் ஒசாமா பின் லாடன் கொல்லப்பட்டது தொடர்பான முழுமையான சகல விபரங்களையும் அமெரிக்க வெளியிட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலின் ஆணையர் நவநீதம் பிள்ளை கேட்டுள்ளார்.  பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்றும் நவநீதம் பிள்ளை கூறியுள்ளார்.

பின்லேடன் படுகொலை சில சிந்தனை கவிஞர் இரா .இரவி

ஒழிக்கப்படவேண்டியது தீவிரவாதம்தான் .தீவிரவாதி அல்ல .பின்லேடன்  ஏன்?   தீவிரவாதியானான் என்ற காரணத்தையும் ஆராய வேண்டும் .உலக ரவுடியான அமரிக்கப் படை எங்கு சென்றாலும் ,எந்த நாட்டிற்குள் நுழைந்தாலும் வெளிய வருவது இல்லை . .வியாட்னாமிலும்அமரிக்கப் படை இன்னும் உள்ளது .ஆப்கானிஷ்தானிலும்,ஈராக்கிலும் அமரிக்கப் படை இன்னும் உள்ளது . அமரிக்கப் படையின் தாக்குதலுக்கு அப்பாவி பொதுமக்கள் பல்லாயிரம் மாண்டு உள்ளனர் .அணு ஆயுதம் வைத்துள்ளார் என்று சதாமைக் கொன்றார்கள் .கடைசிவரை  அணு ஆயுதம் கண்டுபிடிக்கப்படவில்லை. வல்லரசு நாடு என்பதற்காக எதுவும்  செய்யலாம் என்பது தவறு .தவறு யார்? செய்தாலும் தவறுதான் .சில ஆயிரம் பேர் சாவுக்கு காரணமான பின்லேடனைக் கொன்றார்கள் .ஆனால் சில லட்சம் பேர் சாவுக்கு காரணமான ராஜபட்சேயை கொல்ல அமெரிக்க முன் வருமா ?வராது .காரணம் அமெரிக்காவில் இறந்தது அமெரிக்கர் .இலங்கையில் இறந்தது தமிழர் .ஏன் ? இந்தப் பாகுபாடு .இலங்கையில் பெட்ரோல் கிணறுகள் இல்லை பின்லேடன் படுகொலையோடு இது முடிந்துவிடுமா? யோசிக்க் வேண்டும் ?பின்லேடன்  ஆதரவாளர்கள் இருப்பார்கள் அவர்களை மூளைச் சலவை செய்து வன்முறைக்கு வழி வகுப்பார்கள். அமெரிக்காவின் இந்த பலி வாங்கும் செயலால் உலக அமைதி கேள்விக் குறியானது .

Friday, May 6, 2011

பின்லேடன் கொலையில் தொடரும் சந்தேகங்கள்(வீடியோக்கள்)!

ஒருங்கிணைந்த ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்க உளவுத் துறையான சிஐஏவால் வளர்த்து எடுக்கப்பட்ட பின்லேடன், பாகிஸ்தானில் பதுங்கியிருந்தபோது இராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்நிலையில் அவரது கொலையில் பல்வேறு சந்தேகங்கள் சர்வதேச சமூகத்தால் முன்வைக்கப்படுகின்றன.
பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் பதுங்கியிருந்த அல்-காயிதாவின் நிறுவனரும் தலைவருமான பின்லேடன், சிஐஏ துணையுடன் அமெரிக்க இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஒபாமா சில தினங்களுக்குமுன் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து சில மணி நேரத்தில் அவரது உடல் கடலில் வீசி எறியப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

பின்லேடன் கொல்லப்பட்டதற்கு ஆதாரமாக சர்வதேச ஆங்கில ஊடகங்களில் ஒரு புகைப்படமும் வெளியானது. அது வெளியாகும்வரை, ஒபாமா அறிவித்த பின்லேடன் மரணச் செய்தியினை அப்படியே உள்வாங்கியிருந்த சர்வதேச சமூகம், அப்புகைப்படம் போலியானது என்பதை வெகு எளிதில் கண்டுகொண்டது. அந்நிமிடத்திலிருந்து பின்லேடன் கொலை குறித்த பல்வேறு கேள்விகளும் சந்தேகங்களும் சர்வதேச சமூகத்தை ஆட்கொண்டுள்ளன. அவையாவன:

Thursday, May 5, 2011

ஒரு கோடி ரூபாய் உயர் கல்வி உதவி

அஸ்ஸலாமு அலைக்கும்.
டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் தலைமையின்கீழ் இயங்கும் 'இஸ்லாமிக் ரிஸர்ச் ஃபவுண்டேஷன்', உயர்கல்வி பயில விரும்பும் ஏழை மாணவர்களுக்காக ஒரு கோடி ரூபாயை 2011-2012 ஆண்டுக்கான உதவித் தொகையாக அறிவித்திருக்கிறது.
நூறு விழுக்காடு கல்வி உதவித் தொகையான இதைப் பெறத் தக்க மாணவர்களின் தகுதிகள்:
  1. மார்க்கப் பற்றாளராகவும் கடமைகளில் பேணுதல் உடையவராகவும் இருக்க வேண்டும்.
  2. உயர்கல்வி பயில்வதற்குப் பணம் செலுத்திப் படிக்க முடியாத ஏழ்மை நிலையில் இருக்க வேண்டும்.
  3. கல்வியில் மிக்க ஆர்வம் உடையவராகவும் நல்ல மதிப்பெண்கள் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
  4. உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி பயின்றவராக இருக்க வேண்டும்.
மேற்காணும் தலையாய தகுதிகள் பெற்ற, மருத்துவம், பொறியியல், கற்பித்தல், நிர்வாகம் ஆகிய துறைகளில் உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்கள் உதவித் தொகை வேண்டி, http://www.irf.net/iis/scholarship.pdf எனும் சுட்டியிலிருந்து விண்ணப்பத்தைத் தரவிறக்கி, நிரப்பி அனுப்ப வேண்டும்.
தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு 29.5.2011இல் மும்பை, புனே, பெங்களூரு, சென்னை, டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத், அவ்ரங்காபாத், அகோலா மற்றும் மலேகோன் ஆகிய நகர்களில் எழுத்துத் தேர்வு இருக்கும். அத்தேர்வில் 75 விழுக்காடு வினாக்கள் இறைமறை குர் ஆனின் அடிப்படையில் அமைந்திருக்கும்.
எழுத்துத் தேர்வில் தேறிய மாணவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு, உதவி வழங்கப்படுவர், இன்ஷா அல்லாஹ். கூடுதல் விபரங்களுக்கு :

Tuesday, May 3, 2011

பின்லேடன் செய்த முதல் தவறு !

பின்லேடன் செய்த முதல் தவறு அமரிக்காவுடன் சேர்ந்து ஆப்கன் நாட்டில் ருஷ்ய படையினை வெளியேற உதவியது .அமெரிக்கா உருவாக்கிய பயங்கரவாததிற்கு துணையாகி பலிகடாவானவர் பின்லேடன்.
அதிலிருந்து தொடர்ந்த தவறு செய்ய வழி வகுத்ததும் அமரிக்காதான்.
குற்றம் செய்ய வழி வகுத்தவன்
அமரிக்கன் . குற்றம் செய்பவனை விட அதனை தூண்டுபவன் பெரிய குற்றம் செய்தவனாக கருதப்பட வேண்டும்.
அமரிக்கா தனது படைகளை அராபிய நாட்டிலிருந்து ஒருகாலமும்
வெளியேற்றாது .எல்லாமே அமெரிக்க ஆதிக்கத்தில் இருக்க வேண்டும் இது அமெரிக்காவின் கொள்கை . அமெரிக்கா கால் வைத்த சிதைந்த நாடுகள் 
 ஏராளம் (வியட்னாம்,ஈராக். பாகிஸ்தான் ...) 
மற்றவர்களை மதிக்கும் மக்கள் பிரன்ச் இனத்தவர்தான்.  
 பின்லேடனை  அமெரிக்காதான் தனது சுய நலம் கருதி உலகம் அறிய வைத்தது .அமெரிக்கா உருவாக்கிய பயங்கரவாததிற்கு துணையாகி பலிகடாவானவர் பின்லேடன். 
அமெரிக்காவின் புதிய கண்டுபிடிப்பு கடலுக்கு அடியில் இறந்தவர் உடலை அடக்கம் செய்வது .அதுவும் இஸ்லாமிய முறையாம்! (பின்லேடன்
கடலுக்கு அடியில் அடக்கம் செய்யப் பட்டதாக செய்தி.)
அமெரிக்காவுக்கு இனி கடலுக்கு அடியில் இருந்து பல தொல்லைகள் வரலாம் 


மேலும் படிக்க : பின்லேடன்: அமெரிக்கா உருவாக்கிய பயங்கரவாதம்!

Monday, May 2, 2011

ஒசாமா இறப்பில் புது குழப்பம் ...

அமெரிக்காவிற்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ஒசாமா பின் லேடன் ஞாயிற்று கிழமை கொல்லப்பட்டதாக அமெரிக்க அரசு உத்தியோகபூர்வமாக தெரிவித்தது ஆனால்   அது சமபந்தப்பட்ட எந்த ஒரு புகைபடதினயோ அல்லது அது சம்பந்தப்பட்ட எந்த ஒரு வீடியோ ஆதாரதினையும் இதுவரையில் அமெரிக்க அரசு வெளியிடவில்லை  பாகிஸ்தானில் இருந்து இணையதளங்களுக்கு பரப்பிவிடபட்ட சிதைக்கப்பட்ட நிலையில் இறக்கப்பட்ட ஒசாமாவின் படம் என வெளியிடப்பட்ட புகைப்படமும் போலி என நிரூபிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலதிகமாக இனைய தளங்களில் ஒபாமா ஒசாமாவின் இறப்பை உத்தியோகபூர்வமாக  அறிவித்து கோவத்துடன் செல்லும் காட்சிகள் என ஒபாமாவின் சில காட்சிகள்  இனைய உலா வந்துகொண்டிருன்கின்றன இதற்கும் ஒசாமாவின் இறப்பிற்கும் எதவது சம்பந்தம் இருக்குமா?

பார்க்க : http://qaruppan.blogspot.com/ஒசாமா இறப்பில் புது குழப்பம்

Source : http://qaruppan.blogspot.com/2011/05/blog-post_02.html?showComment=1304356288966#c8059088845494562965