Monday, December 27, 2021

யாகாவாராயினும் நா காக்க! - புஹாரி மவுலானா அன்வாரி ஜும்ஆ பேருரை

முன்மாதிரி முஸ்லிம் பெண்கள் ஆவோம் - A.ஃபாத்திமா ஆலிமா சிறப்புரை பகுதி 2

நீடூர்-நெய்வாசல் A.L.I.சங்கம் 25-12-2021 அன்று நடத்திய மகளிருக்கான தர்பியா நிகழ்ச்சியில் நாகர்கோவில் சகோதரி.A.ஃபாத்திமா ஆலிமா அவர்கள் "முன்மாதிரி முஸ்லிம் பெண்கள் ஆவோம்" என்கிற தலைப்பில் ஆற்றிய சிறப்புரை பகுதி 2

முன்மாதிரி முஸ்லிம் பெண்கள் ஆவோம் - A.ஃபாத்திமா ஆலிமா சிறப்புரை பகுதி 1

நீடூர்-நெய்வாசல் A.L.I.சங்கம் 25-12-2021 அன்று நடத்திய மகளிருக்கான தர்பியா நிகழ்ச்சியில் நாகர்கோவில் சகோதரி.A.ஃபாத்திமா ஆலிமா அவர்கள் "முன்மாதிரி முஸ்லிம் பெண்கள் ஆவோம்" என்கிற தலைப்பில் ஆற்றிய சிறப்புரை பகுதி 1

Saturday, December 25, 2021

Tamil Quran - தமிழ் குர்ஆன் - ஸூரத்துல் இஃக்லாஸ்(ஏகத்துவம்)

 

டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

Tamil Quran - தமிழ் குர்ஆன் - ஸூரத்துல் இஃக்லாஸ்(ஏகத்துவம்)

மக்கீ, வசனங்கள்: 4

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ


112:1 قُلْ هُوَ اللّٰهُ اَحَدٌۚ

112:1. (நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.


112:2 اَللّٰهُ الصَّمَدُۚ

112:2. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.


112:3 لَمْ يَلِدْۙ وَلَمْ يُوْلَدْ ۙ

112:3. அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.


112:4 وَلَمْ يَكُنْ لَّهٗ كُفُوًا اَحَدٌ

112:4. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.

http://www.tamililquran.com/qurandisp.php?start=112



Friday, December 24, 2021

இருபத்து ஒன்று பெண்களின் திருமண வயதானால்.....! / DR.HABIBULLAH

 


21

இருபத்து ஒன்று

பெண்களின்  திருமண

வயதானால்.....!

உடல் ரீதியாக, மன ரீதியாக

அறிவு ரீதியாக சில பெர்சனல்

முடிவுகளை, தானே எடுத்துக்

கொள்ளும் சுதந்திரம், இன்றைய

உலகில் இளம் பெண்களுக்கு

கிடைக்கலாம்.பொருளாதார

ரீதியாகவும்  பெண் வெற்றி

பெற்றால்... திருமண மேட்ச்,

மேட்  அல்லது ஃபிரண்ட்ஸ்

செலக்சன், ஜாப் செலக்சன்

போன்றவற்றில் பெற்றோரை

புறக்கணித்து தனி முடிவுகளை

தானே எடுக்கவும் துணிவும் வரும்.

குழந்தை பெறும் வயதையும்

சற்று தள்ளிப் போட முடியும்.

இதனால், இருபத்தொரு வயது

நிரம்பாத இளம் பெண்ணை

சட்ட பூர்வமாக திருமண

செய்ய தடை ஏற்படலாம்.

பதினெட்டு வயது நிரம்பிய

ஆண் - பெண், அரசியலில்

எம்எல்ஏ எம்பிக்களை வாக்க

ளித்து  தேர்வு செய்யும் நிலை

உள்ள போது, திருமணம் மட்டும்

சட்டப்படி செய்ய இயலாது

என்றால் லீகல் ஏஜை, எப்படி

நிர்ணயம் செய்வது!

டீன்ஏஜ் பருவம், பதிமூன்று

வயதில் துவங்குகிறது.

செக்ஸுவல் டெவலப்மெண்ட்

உடலில், மனதில், ஹார்மோன்

களில் மாற்றம் செய்யும் நேரம்.

இப்போதெல்லாம், மீடியாக்கள்

டீன்ஏஜ் குழந்தைகளை வைத்து

டீன் ஷோக்கள் நடத்தி, யங்

மைன்ட்ஸை, கரப்ட் செய்து

வருவது...யங் குழந்தைகளை

டிரக்ஸ்,மது போதை,செக்ஸ்

அட்வன்ஜர்களில் நிதானம்

தவற வைக்கிறது. இதன் மூலம்

பெண் குழந்தைகள், டீன்

பிரிக்னன்ஸி, அபார்ஸன்

எஸ்டிடி போன்ற செக்ஸ்

வியாதிகளில் அதிக அளவில்

சிக்கி சீரழியும் நிலை இங்கும்

உருவாகி விட்டது.”செக்ஸ்

கிளிப்கள்சமூக வலை

தளங்களில் அதிகம்

இளைஞர் மத்தியில்

பகிரப்பட இந்த சூழலும்

ஒர் காரணம். பாலியல்

வன்முறை - பலாத்காரம்

பெண் குழந்தைகளுக்கு

அறிந்த தெரிந்த பெரிய

மனிதர்களால் நிகழ்வது

மேலும் தொடரலாம்.

திருமண வாய்ப்பு, வயதால்

தள்ளிப் போவதால் கூடா

உறவு முறைகள் ஏற்பட

வாய்ப்புகள் அதிகம்.

மேநாடுகளில், சரியான

செக்ஸ்  எடுகேசன் மூலம்

டீன்ஏஜ்  கவுன்சலிங் முறையில்

பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி

நாட்களாகி விட்டது. ஐயுடி

கருத்தடை இம்ப்லாண்ட்

மாத்திரை, பேட்ச், ரிங்

இன்ஜெக்சன் எல்லாம்

அங்கு சர்வ சாதாரணம்.

மதம், பண்பாடு, கலாச்சாரம்

போற்றும் நமது நாட்டில்

இந்த சிந்தனைகள்

இப்போது எடுபடாது.

இது போன்ற தாறுமாறான

செக்ஸ் வக்கிரங்களை

தவிர்க்கவே, பெற்றோர்

தங்கள் பெண்களை விரைந்து

திருமணம் செய்து வைக்க

விளைகிறார்கள். வயது

அதிகரிக்கும் நிலையில்

திருமணத்தை தள்ளி

போடலாம்.காதல்

உணர்வுகளை ஒத்திப்

போடுவது எப்படி!

பெண்கள் திருமண வயது

அதிகம் தள்ளிப் போனால்

கலாச்சார சீரழிவுகள் மேலும்

அதிகரிக்கக் கூடும். பெண்

ணின் திருமணம் அதிக நாள்

தள்ளிப் போவது, பெற்றோரை

மனம் கலங்க வைக்கும்.

மதமும் குடும்பமும் மட்டுமே

குழந்தைகள் மனதில் நல்ல

ஒழுக்கத்தை விதைக்க

துணை  புரிகின்றன.புதிய

சட்டங்கள் இளைஞர் தம்

ஒழுக்கத்தை காப்பாற்றுமா

என்பதை பொறுத்திருந்து

தான் பார்க்க வேண்டும்.

DR.HABIBULLAH



Senior Consultant Paediatrician

Adolescent Physician & Psychologist

மக்களின் வாழ்வியலையும் அரசியலையும் பிரதிபலித்த பெரும் கலைத்திருவிழா

. மக்களின் வாழ்வியலையும் அரசியலையும் பிரதிபலித்த பெரும் கலைத்திருவிழா. இந்த நிகழ்வினை ஒருங்கிணைத்த இயக்குநர் @beemji , @TherukuralArivu மற்றும் குழுவினருக்கு எனது வாழ்த்துகள் Kanimozhi (கனிமொழி)






மர்யமின் குமாரர் ஈஸாவுக்குத் தெளிவான அத்தாட்சி / கிரிஸ்த்மஸ் வாழ்த்துக்கள்

 


மேலும், நாம் மூஸாவுக்கு நிச்சயமாக வேதத்தைக் கொடுத்தோம். அவருக்குப்பின் தொடர்ச்சியாக (இறை) தூதர்களை அனுப்பினோம்; இன்னும், மர்யமின் குமாரர் ஈஸாவுக்குத் தெளிவான அத்தாட்சிகளைக் ரூஹுல் குதுஸி (என்னும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு வலுவூட்டினோம்; குர்ஆன் 2:87

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! மர்யமுடைய மகன் (ஈஸா) உங்களிடம் நேர்மையான (தீர்ப்பு சொல்லும்) நீதிபதியாக இறங்கவிருக்கிறார்! ஸஹீஹுல் புகாரி ஹதீஸ் 2222

இயேசு, ' எலோயி, எலோயி, லெமா சபக்தானி? 'என்று உரக்கக் கத்தினார். ' என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்? 'என்பது அதற்குப் பொருள்.35



ஒரு புதிய தாள் மீண்டும் எழுத -


ஒரு புதிய தாள் மீண்டும் எழுத -

வாழ்க்கை புத்தகத்தை .....

நீங்கள் திறக்க இருக்கிறீர்கள் -

நாம் எதைப் பெற்று கொண்டு ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கிறோம் ..

பணம்,

சொத்து,

கௌரவம்???

நாம் இறக்கும் போது,

நம் பணம், சக்தி , சொத்து ...

மற்றும் நம் அனைத்து உடைமைகளும் நம்மை விட்டு செல்கின்றன ...

BYE BYE 2021

 BYE BYE 2021

    Before I finally say goodbye to 2021,

    I would like to say

    to each and everyone of you.

    For the impact you had in my life

    Specially for those who sent me email,

    You have enriched my year!!

I wish you all a magical

    Festive Season filled with

    Loving Wishes and beautiful thoughts.

    May your coming year mark the beginning

    of Love,

Wednesday, December 22, 2021

நேரடி வானொலியைக் கேட்கலாம். உங்கள் உள்ளூர் வானொலியை முயற்சிக்கவும்!!!!

 

அன்புள்ள அனைவருக்கும்,

 இப்போது இயர் போன் இல்லாமலும் உலகம் முழுவதும் வானொலி கேட்கலாம்!!!!  இது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இணைப்பைக் கிளிக் செய்யும் போது, ​​​​உலகம் சுழல்வதைக் காணலாம்.  பச்சை நிற புள்ளிகள் உள்ளன, அதில் நீங்கள் தொட்டால் அந்த இடத்திலிருந்து நேரடி வானொலியைக் கேட்கலாம்.  உங்கள் உள்ளூர் வானொலியை முயற்சிக்கவும்!!!!

 வெறுமனே அற்புதம்!!!!  😃எங்கள் இஸ்ரோவைப் பற்றி பெருமிதம் கொள்கிறோம்,

 தொடர்ந்து பகிருங்கள்....

 

 http://radio.garden/live

 

 

 👍🏻 *_FANTASTIC_* 🤘🏻👌🏻

 

 முயற்சி செய்து பாருங்கள்...அருமையாக உள்ளது

Tuesday, December 21, 2021

மானுடத்தின் இரட்சகனே! மன்னிப்பைத் தந்தருள்வாய்!!

 


மானுடத்தின் இரட்சகனே!

மன்னிப்பைத் தந்தருள்வாய்!!

கண்ணான என்தலைவா

என் 'கல்பில்'( இதயம்) ஒளி ஏற்றி வைப்பாய்!!

#தௌபா ( பாவ மன்னிப்பு)


#கண்மணி வாப்பா

பாடுபவர் Asif Meeran அவர்களின் அப்பா அப்துல் ஜப்பார் அவர்கள் 


கிரிக்கெட் வர்ணனையாளர் அப்துல் ஜாஃபர் மகனார்  Asif Meeran  அவர்கள் 


ஸூரத்துல் மாஊன் (அற்பப் பொருட்கள்)

 


107. ஸூரத்துல் மாஊன் (அற்பப் பொருட்கள்)

மக்கீ, வசனங்கள்: 7

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

PlayCopyWordByWord107:1

107:1 اَرَءَيْتَ الَّذِىْ يُكَذِّبُ بِالدِّيْنِؕ

107:1. (நபியே!) நியாயத் தீர்ப்பைப் பொய்ப்பிக்கின்றானே அவனை நீர் பார்த்தீரா?

PlayCopyWordByWord107:2

107:2 فَذٰلِكَ الَّذِىْ يَدُعُّ الْيَتِيْمَۙ

107:2. பின்னர் அவன்தான் அநாதைகளை விரட்டுகிறான்.

PlayCopyWordByWord107:3

107:3 وَ لَا يَحُضُّ عَلٰى طَعَامِ الْمِسْكِيْنِؕ

107:3. மேலும், ஏழைக்கு உணவளிப்பதின் பேரிலும் அவன் தூண்டுவதில்லை.

PlayCopyWordByWord107:4

107:4 فَوَيْلٌ لِّلْمُصَلِّيْنَۙ

107:4. இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான்.

PlayCopyWordByWord107:5

107:5 الَّذِيْنَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُوْنَۙ

107:5. அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர்.

PlayCopyWordByWord107:6

107:6 الَّذِيْنَ هُمْ يُرَآءُوْنَۙ

107:6. அவர்கள் பிறருக்குக் காண்பிக்(கவே தான் தொழு)கிறார்கள்.

PlayCopyWordByWord107:7

107:7 وَيَمْنَعُوْنَ الْمَاعُوْنَ

107:7. மேலும், அற்பமான (புழங்கும்) பொருள்களைக் (கொடுப்பதை விட்டும்) தடுக்கிறார்கள்.

http://www.tamililquran.com/qurandisp.php?start=107




வாழ்க்கை துணையின்றி வாழ்தல் காய்க்காத மரம்

 


திருமண வயதை இன்னும் தள்ளிப்போடுவது உயர்வல்ல !

இந்தியாவின் தட்ப வெட்ப காலநிலை காரணமாக  ஒரு பெண் பூபெய்தும் பருவம் பனிரெண்டு வயதிலேயே தொடங்கிவிடுகின்றது .இது குளிர் நாட்டின் தட்ப வெட்ப காலநிலை காரணமாக பெண்கள் பூபெய்தும் காலம் சிறிது மாற்றமாக தள்ளியே வருகின்றது .இதே நிலைதான் குழந்தைகள் பிறக்கும் நிலையிலும் .தடையின்றி செயல்பட்டால் இந்தியாவில் அதிகமாகவே மக்கட்பேறும் அதிகமாகும் அது அதிக குளிர்உள்ள நாடுகளில் அவர்களால் முடிவதில்லை .அங்கு குழந்தைகள் பிறப்பது குறைவுதான்

பூபெய்தும் காலத்திற்கும் திருமண காலத்திற்கும் மிகவும் தாமதமானால் மக்கள் தவறான தூண்டுதற்க்கு அவர்கள் மனோநிலை மாறிவிடும் ,அதனால் மக்களுக்கு ஒழுக்கம் கெட்டுவிடும்

Thursday, December 16, 2021

அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் சையது ராபியத்தம்மா M அவர்களுக்கு அன்புடன் வாழ்த்துக்கள்

 அன்புடன் வாழ்த்துக்கள்   சையது ராபியத்தம்மா M அவர்களுக்கு

உங்களில் உயர்ந்தோர் தான் பெற்ற கல்வியை மற்றவருக்கு எடுத்து உரைப்பவரே உயர்ந்தோர் ஆவர். அது தன் புகழ் நாடி இல்லாமல் இறையருள் நாடி இருக்கும்போது அந்த சேவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த சேவையை செய்தவருக்கு நன்மை வந்தடைவதுடன் அதனால் மற்றவர்களும் பயனடைகின்றனர்.

இறைவன் அருளால் தன்னால் முடிந்த அளவு தான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதில் ஒரு நிறைவு கொள்கின்றார்.சிறந்த ,மனிதநேயம் பெற்ற மிக சிறந்தவர்கள் வரிசையில் 

சையது ராபியத்தம்மா M அவர்களும் ஒருவராக இருப்பதில் நாம் மகிழ்வடைகின்றோம்   

தற்பொழுது ஜமால் முகம்மது கல்லூரியில்

ஆங்கில துறை நூலகராக

சேவை செய்து வருகிறார்


சிறந்த  சேவை கொண்ட மனமும்  மனிதநேயமும்  கொண்டவர்.

அவர்கள் "(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்" எனக் கூறினார்கள்.(குர்ஆன் 2:32)

'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்

 

நம்மைப்பற்றி நாம் அறிவோம்

 

நம்மை வாழ்வித்தவர்களை

 

நமக்கு கல்வி கொடுப்பவகளை

 

நம் உறவுகளை

 

நம் நண்பர்களை

 

நன்கு அறிந்து கொள்வதில்

 

நமக்கு மிகவும் மகிழ்வும் ,பலனும் .பலமும் ,உந்துதல் சக்தியும் கிடைக்கும்

சையது ராபியத்தம்மாஅவர்களை  வாழ்த்தி மகிழ்வதில் நாம் மகிழ்வடைகின்றோம் .

 

இறைவன் அருளால் தொடரட்டும் இவரது  சேவைகள் .

 

இறைவன் அவருக்கு நீடித்த ஆயூளை கொடுத்து அருள இறைவனை பிரார்திக்கின்றோம்

Jazaakum'Allah Khairan.

நன்றி

அன்புடன் ,



முகம்மது அலி

சையது ராபியத்தம்மா M
                                                       Rabiya Jmc

                                                   Rabiya Jmc

2020 Allahu Allahu (அல்லாஹூ...அல்லாஹூ...) Nasheed in Tamil | Thasni Fath...

Saturday, December 11, 2021

ராபியா பஸ்ரி ரலியல்லாஹு அன்ஹா

 ராபியா பஸ்ரி ரலியல்லாஹு அன்ஹா

அரபு நாட்டிலே, ஈராக் மாகாணத்திலே, பஸ்ரா நகரிலே, ஹிஜ்ரி இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலே ஆதி என்னும் கோத்திரத்திலே, ஓர் ஏழை முஸ்லிம் குடும்பத்திலே, இஸ்மாயில் என்பவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இஸ்மாயீல் இறைநேசம் நிறைந்தவர். ஆண்டவன் மீது அளவு கடந்த நம்பிக்கை யுள்ளவர். ஆனால் அவர் மிகவும் ஏழை. நற்குடியில் பிறந்த மங்கையை மணந்து இல்லறம் நடத்தி வந்தார். அந்த இல்லறச் சோலையிலே பூத்த நான்காம் பொன்மலர் ஹஸ்ரத் ராபியா (ரலியல்லாஹு அன்ஹா) ஆவார்கள்.

குழந்தை பிறந்தது. குடும்பத்தில் அது நான்காம் குழந்தை. ஆகையால், அதற்கு ராபியா (நான்காவது) என்று பெயரிடப்பட்டது. உண்ண உணவும், அணிய ஆடையும் இல்லத்திலே இல்லாத அளவுக்கு வறுமை. பிறந்த குழந்தையின் உடலை மறைத்து, அதைக் குளிரினின்றும் காப்பாற்ற வீட்டில் கந்தைததுணியும் இல்லை. இரவில் இருளை நீக்க விளக்கும் இல்லை. குழந்தையின் தொப்புளில் தடவஎண்ணையும்இல்லை. குழந்தை ராபியா பிறந்து நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகவளர்ந்து வந்தது. சில ஆண்டுகள் கழிந்தன. குழந்தையின் தாயும், தகப்பனும் இறையடி சேர்ந்தார்கள்.