அவ்வளவுதான்...!
நான் இருபத்தைந்து நாள்களுக்கு முன்னர் குடல் அறுவை சிகிச்சை செய்து ஓய்வெடுத்து
வருக்கிறேன்.தற்போது
நல்ல நலத்துடன் இருக்கிறேன்.
ஓய்வு நிலையில் மனம் எப்போதும் மிதந்து பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதுவும் கடந்த கால வெட்ட வெளியில்தான்
உலா நிகழ்த்துகிறது.
இது என் அனுபவ நிகழ்வு.
1973--ஆம் ஆண்டு. மார்ச் மாதம் 1--ஆந் தேதி. அக்காலம் என் அண்ணாமலைப் பல்கலைக் கழகக் காலம்.
எனக்குள் ஓர் இனிய காதல் நடமாடிய வேளை.
என் பல்கலைக் கழக நண்பர்.இன்றுவரை குடும்பமாகக் கலந்துறவாடும் நட்பு வட்டத்தில் இருப்பவர். தகடூர் பாவாணன்.
Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts
Wednesday, March 7, 2018
Sunday, June 14, 2015
காதலுக்கும் திருமண த்திற்கும் உள்ள வித்தியாசம்
ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும் திருமண த்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான்.
அதற்கு அந்த ஞானி, "அது இருக்கட்டும். முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்று கிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா.
ஆனால் ஒரு நிபந்தனை.
"நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது." என்றார்.
கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான்.
அதற்கு அந்த ஞானி, "அது இருக்கட்டும். முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்று கிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா.
ஆனால் ஒரு நிபந்தனை.
"நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது." என்றார்.
கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான்.
Wednesday, November 5, 2014
எதிர் எதிராய் அமர்கிறோம்
வெளிர் ரோஜா ஆடைக்குள்ளிருந்து
வழிந்தவண்ணமாய் இருக்கிறது
உன் பேரழகு
அள்ளிக்கொள்ளும் ஆவலோடு
என் விரல்கள் தயார்நிலை
ராக்கெட்டுகள் ஆகின்றன
அள்ளி அள்ளிப் பருகி
தாகம் ஏற்றிக்கொள்ளும்
நிலையிலேயே கரைகின்றன
விழிகள்
எதுவுமே அறியாததுபோல
இருந்துவிட முடிவெடுத்து
வானவில்லாய் ஆக்கிக்கொள்கிறாய்
உன் ஆகாயத்தை
உணவு வருகிறது
உண்டுகொண்டுதான் இருக்கிறோம்
அத்துமீறும் பருவக்கசிவுகளை
ருசி உணரப்படவே இல்லை ஆனால்
நன்றாக இருக்கிறதல்லவா
என்று பாராட்டிக்கொள்கிறோம்
பரிமாறப்பட்ட உணவை
புறப்படும்போது
பிறகென்ன நண்பனே என்கிறாய் நீ
மீண்டும் சந்திப்போம் தோழி
என்று கை குலுக்குகிறோம்
குலுங்கிக் கொட்டி
நட்சத்திரங்களாய்க் கண்சிமிட்டுகின்றது
சொல்லப்படாத காதல்
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
வழிந்தவண்ணமாய் இருக்கிறது
உன் பேரழகு
அள்ளிக்கொள்ளும் ஆவலோடு
என் விரல்கள் தயார்நிலை
ராக்கெட்டுகள் ஆகின்றன
அள்ளி அள்ளிப் பருகி
தாகம் ஏற்றிக்கொள்ளும்
நிலையிலேயே கரைகின்றன
விழிகள்
எதுவுமே அறியாததுபோல
இருந்துவிட முடிவெடுத்து
வானவில்லாய் ஆக்கிக்கொள்கிறாய்
உன் ஆகாயத்தை
உணவு வருகிறது
உண்டுகொண்டுதான் இருக்கிறோம்
அத்துமீறும் பருவக்கசிவுகளை
ருசி உணரப்படவே இல்லை ஆனால்
நன்றாக இருக்கிறதல்லவா
என்று பாராட்டிக்கொள்கிறோம்
பரிமாறப்பட்ட உணவை
புறப்படும்போது
பிறகென்ன நண்பனே என்கிறாய் நீ
மீண்டும் சந்திப்போம் தோழி
என்று கை குலுக்குகிறோம்
குலுங்கிக் கொட்டி
நட்சத்திரங்களாய்க் கண்சிமிட்டுகின்றது
சொல்லப்படாத காதல்
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
Saturday, September 20, 2014
முகிலுக்கும் பரிதிக்கும்
முகிலுக்கும் பரிதிக்கும்
வானவில் பிறக்கும் அதிசயம்போல்
மௌனத்தால்
மெலிதாகக் கிசுகிசுப்பாள்
நெகிழ்வான பெண்
பிரபஞ்ச வெளிகளில்
பிளக்கப்படாத அணுக்களின் பேரடர்வாய்
மௌனத்தால்
மௌனமாகவே இருப்பாள்
விருப்பில்லாப் பெண்
பெண்ணின் மௌனம்
பிழையில்லாச் சம்மதமென்று
எவன் சொன்னது
அது
சுயநலச் சூட்டில் கொதித்து
பெண்ணை
வசதியாய் வளைக்கும்
அபிலாசையில்
மூர்க்கர்கள் சொல்வது
புன்னகையே புதிராய்
விழிவீச்சே கேள்வியாய்
நாணமே நழுவுதலாய்
விளையாடுமே பெண்ணுள்ளம்
இவையாவும் அவளின்
ஆசீர்வதிக்கப்பட்ட இயல்புகளல்லவா
அவகாசம் கேட்கும் விண்ணப்பங்களாய்ச்
சட்டுச் சட்டென்று மொட்டாகும்
பெண்ணின் மௌனப் பூக்கள்
சரியான சாவிதேடி
அவள் அவளை
அவளாகவே திறக்கும்வரை
அவசரப்படுத்தாமல்
அமைதி காப்பதே ஆணுக்கழகு
மௌனம் கலைத்து அவள் உனக்குச்
சம்மதமகுடம் சூட்டியபின்னும்
இன்னொரு மௌனத்தை
உடுத்திக்கொண்டுவிட்டால்
அடடா
அது நிகழ்ந்தே விட்டது
ஆம்
உன் நம்பிக்கை மரம்மீது
கூர் கோடரி ஒன்று
உறுதி செய்யப்பட்டுவிட்டது
விடை பெற்றுக்கொள்
விரைந்து வேற்றிடம் பார்
வெதும்பிச் சாகாதே
பெண்ணின்
விருப்பத்தின் திருப்பத்தை
வாழ்த்திப் பாட
வாயற்றுப் போனாலும்
அவள்
வாழும் வழிவிட்டுப்போ
இன்னொரு பெண்மனம்
உனக்காக எங்கோ
மௌனம் கலைக்கக்
காத்திருக்கிறது
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
வானவில் பிறக்கும் அதிசயம்போல்
மௌனத்தால்
மெலிதாகக் கிசுகிசுப்பாள்
நெகிழ்வான பெண்
பிரபஞ்ச வெளிகளில்
பிளக்கப்படாத அணுக்களின் பேரடர்வாய்
மௌனத்தால்
மௌனமாகவே இருப்பாள்
விருப்பில்லாப் பெண்
பெண்ணின் மௌனம்
பிழையில்லாச் சம்மதமென்று
எவன் சொன்னது
அது
சுயநலச் சூட்டில் கொதித்து
பெண்ணை
வசதியாய் வளைக்கும்
அபிலாசையில்
மூர்க்கர்கள் சொல்வது
புன்னகையே புதிராய்
விழிவீச்சே கேள்வியாய்
நாணமே நழுவுதலாய்
விளையாடுமே பெண்ணுள்ளம்
இவையாவும் அவளின்
ஆசீர்வதிக்கப்பட்ட இயல்புகளல்லவா
அவகாசம் கேட்கும் விண்ணப்பங்களாய்ச்
சட்டுச் சட்டென்று மொட்டாகும்
பெண்ணின் மௌனப் பூக்கள்
சரியான சாவிதேடி
அவள் அவளை
அவளாகவே திறக்கும்வரை
அவசரப்படுத்தாமல்
அமைதி காப்பதே ஆணுக்கழகு
மௌனம் கலைத்து அவள் உனக்குச்
சம்மதமகுடம் சூட்டியபின்னும்
இன்னொரு மௌனத்தை
உடுத்திக்கொண்டுவிட்டால்
அடடா
அது நிகழ்ந்தே விட்டது
ஆம்
உன் நம்பிக்கை மரம்மீது
கூர் கோடரி ஒன்று
உறுதி செய்யப்பட்டுவிட்டது
விடை பெற்றுக்கொள்
விரைந்து வேற்றிடம் பார்
வெதும்பிச் சாகாதே
பெண்ணின்
விருப்பத்தின் திருப்பத்தை
வாழ்த்திப் பாட
வாயற்றுப் போனாலும்
அவள்
வாழும் வழிவிட்டுப்போ
இன்னொரு பெண்மனம்
உனக்காக எங்கோ
மௌனம் கலைக்கக்
காத்திருக்கிறது
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
Tuesday, February 18, 2014
அகம் நீயே யுகம் நீயே
அகம் நீயே
யுகம் நீயே
வரம் நீயே
சுகம் நீயே
கடும் புனலாய் காதல் வளர்த்தேன்
சுடும் அனலாய் தேகம் கொதித்தேன்
ஃ
மனசும் மனசும் சேருமா
மௌன மாகப் பேசுமா
பனியில் பூசும் வண்ணமாய்
அழியுமா ?
இரவு பகலைத் தின்னுமா
விழிகள் கனவில் மின்னுமா
உறக்கம் போன பின்னுமா
மயக்கமா ?
Thursday, February 13, 2014
Tuesday, February 4, 2014
காதல் மழையில்
காதல் மழையில்
குதித்து குளித்தேன்
குளித்ததில் மகிழ்ந்தேன்
உடை நனைந்தது
உடலும் நனைந்தது
உள்ளமும் குளிர்ந்து
காதல் நின்றது
மழை நின்றது போல்
உடலும் காய்ந்தது
உள்ளமும் காய்ந்தது
மழையில் நனைந்தது மறக்கவில்லை
காதலில் வீழ்ந்த நினைவுகள் மறக்க முடியவில்லை
Tuesday, December 24, 2013
முதற்காதல்
முதற்காதல்:
நினைவுகளின் ஒழுங்கைகள் வழியே
இறந்த காலத்தின் புத்தகத்தைப் பார்க்கிறேன்
கள்ளிமுட்களும், செஞ்சந்தனக் கரியும்
பாதங்களை முத்தமிட்ட பாதையில்
அகழிகள், மலைத்தொடர்கள் ஊடாகப்
பின்நடை போடுகிறேன்
கபிலம், கருமை, சாம்பல் நிறங்களில்
இருண்ட கறைகள் நிறைந்த
காலத்தின் மாபெரிய புத்தகத்தில்
ஒரேயொரு பக்கமே உள்ளது
அதில் ஒரேயொரு ஓவியம் உள்ளது
அநேக வர்ணங்கள் நிரம்பிய
வேறெந்த ஓவியத்திலும்
படிந்திராத வர்ணங்கள் நிரம்பிய
Saturday, November 9, 2013
ஆழ்மனதில் மனதில் அடங்கியிருந்து கனாவாய் காட்சி கொடுத்தாயோ!
மூளையில் ஏற்படும் இரசாயன நிலை மாற்றத்தினால் தூக்கத்தின் நிலை மாறுபடுகின்றது.
ஆழ்ந்த தூக்கம், தடைப்பட்ட தூக்கம் என்ற பல நிலைகள் தூக்கத்திலும் உண்டு.
அதிகமான கனவுகள் மகிழ்வைத் தரக்ககூடியதாக இருந்தாலும் சில கனவுகள் நம்மை அதிசிய வைக்கும் நிலையில் இருக்கும். தினமும் கனவுகளின் காட்சி தொடர்ந்து வருவதும் ,அச்சமூட்டக் கூடியதாக குழந்தைகள் காணும் கனவுகள் காண்பதும் மனோ நிலையில் பாதிப்பை உண்டாக்கும் .
குழந்தைகளுக்கு தேவையற்ற பயம் தரக் கூடிய நிகழ்வுகளை காண வைப்பதும் பயமூட்டி வளர்ப்பதனாலும் இம்மாதிரியான பயம் காட்டக் கூடிய கனவுகள் குழந்தைகளைப் பாதிக்கின்றது. இருதயம் பட படக்க கண் விழித்து அலறுகின்றது.
வாழ்க்கை குறைவின்றி நிறைவோடு அமைய
காதல் என்பது மன ஒற்றுமையினால் ஏற்படும் ஈடுபாடு
எபோதும் இன்பமாய் தங்கள் வாழ்க்கை குறைவின்றி நிறைவோடு அமையவேண்டும் என்பது ஒவ்வொரு காதலர்களின் விருப்பம்.
பூமியின் ஈர்ப்பு சக்தி நாம் நிற்பதில் ,நடப்பதில் வீழ்ந்து விடாமல் பாதுகாக்கின்றது .
பாசத்தின் பிணைப்பில் உருவான காதலின் ஈர்ப்பு வாழ்வில் நெருக்கத்தை தருகின்றது
அறிவு ,அழகு,கல்வி ,பொருள் இவைகளால் உந்தப்பட்டு வரும் காதல் அதன் கருவின் ஈர்ப்பில் வந்தது அதில் நேசம் என்னும் பாசம் பிணைக்கப் படாமல் உடைந்து போகும்
எபோதும் இன்பமாய் தங்கள் வாழ்க்கை குறைவின்றி நிறைவோடு அமையவேண்டும் என்பது ஒவ்வொரு காதலர்களின் விருப்பம்.
பூமியின் ஈர்ப்பு சக்தி நாம் நிற்பதில் ,நடப்பதில் வீழ்ந்து விடாமல் பாதுகாக்கின்றது .
பாசத்தின் பிணைப்பில் உருவான காதலின் ஈர்ப்பு வாழ்வில் நெருக்கத்தை தருகின்றது
அறிவு ,அழகு,கல்வி ,பொருள் இவைகளால் உந்தப்பட்டு வரும் காதல் அதன் கருவின் ஈர்ப்பில் வந்தது அதில் நேசம் என்னும் பாசம் பிணைக்கப் படாமல் உடைந்து போகும்
Friday, November 8, 2013
காதல் என்பது ...
காமத்தை
சுமந்துகொண்டே
செல்வதால்
காதல் இங்கே
கழுதைகளின்
அழுக்கு மூட்டை !
o
கடற்கரைகளும்
குளிரூட்டப்பட்ட
வாடகை அறைகளும்
இங்கே
காதலை
கற்பழிப்பு செய்கின்றன !
o
முளையிலே வந்த
முறையில்லாக் காதல்
காவல் நிலையத்தில்
கையெழுத்துப் போடுகிறது!
சுமந்துகொண்டே
செல்வதால்
காதல் இங்கே
கழுதைகளின்
அழுக்கு மூட்டை !
o
கடற்கரைகளும்
குளிரூட்டப்பட்ட
வாடகை அறைகளும்
இங்கே
காதலை
கற்பழிப்பு செய்கின்றன !
o
முளையிலே வந்த
முறையில்லாக் காதல்
காவல் நிலையத்தில்
கையெழுத்துப் போடுகிறது!
Monday, November 4, 2013
Tuesday, April 30, 2013
உறவு மேம்பட ஊடல் வேண்டும்
தொடர்பு துவங்கியது
தொடர்பு தொடர்ந்தது
தொடர்பு காதலாக தொடர்ந்தது
தொடர்பு உணர்வோடு ஒன்றியது
தொடர்பு முகநூல் வழியே உருவானது
தொடர்பு உறவாக மாறியது
தொடர்பு கணவன் மனைவியாக சேர்ந்தது
தொடர்பு ஊடலை உட்கொண்டது
ஊடல் உறவை வலுப்படுத்தியது
ஊடல் கட்டியவளுடன் ஓட்டச் செய்தது
கோபம் வந்தது பிரிக்க முயன்றது
காதல் வந்ததை பிரிக்க முயன்றோர் தூபம் போட்டனர்
கோபம் அறிவை மங்கச் செய்தது
ஊடல் உறவை கூட்டச் செய்தது
ஊடல் வேண்டும் உறவோடு ,உணர்வோடு ,
உடலோடு ஒட்டிய மனைவியோடு
உறவு மேம்பட ஊடல் வேண்டும்
தொடர்பு தொடர்ந்தது
தொடர்பு காதலாக தொடர்ந்தது
தொடர்பு உணர்வோடு ஒன்றியது
தொடர்பு முகநூல் வழியே உருவானது
தொடர்பு உறவாக மாறியது
தொடர்பு கணவன் மனைவியாக சேர்ந்தது
தொடர்பு ஊடலை உட்கொண்டது
ஊடல் உறவை வலுப்படுத்தியது
ஊடல் கட்டியவளுடன் ஓட்டச் செய்தது
கோபம் வந்தது பிரிக்க முயன்றது
காதல் வந்ததை பிரிக்க முயன்றோர் தூபம் போட்டனர்
கோபம் அறிவை மங்கச் செய்தது
ஊடல் உறவை கூட்டச் செய்தது
ஊடல் வேண்டும் உறவோடு ,உணர்வோடு ,
உடலோடு ஒட்டிய மனைவியோடு
உறவு மேம்பட ஊடல் வேண்டும்
Sunday, December 2, 2012
நகையைக் கண்டால் புன்னகை
நகையைக் கண்டால் புன்னகை
கடையைக் கண்டால் வேகம்
பையை இறுக்கினால் வெறுப்பு
நச்சத்திர விடுதிக்குப் போனால் மோகம்
நெருங்கினால் நெருப்பு
விலகினால் ஏக்கம்
பேசினால் பாசம்
காட்சி மாறினால் கசப்பு
மலரைக் கண்டால் நாட்டம்
திருமணம் என்றால் பார்ப்போம்
பெற்றோரைக் கண்டால் ஓட்டம்
காதல் காதலியின் நாட்டம்
கல்யாணம் பெற்றோர்களின் முடிவில்
அலைக்கழிக்க வைக்க ஆனந்தம்
அலைக்கழிக்கப் பட்டதால் வேதாந்தம்
இன்பத்தை அள்ளித் பெருக நாடினோம்
துன்பத்தை தந்து பிரிந்து விட்டாய்
இசைந்துவந்து இன்பத்தை தொடங்கினாய்
கசந்து போய் துன்பம் தந்து மடியச் செய்தாய்
கடையைக் கண்டால் வேகம்
பையை இறுக்கினால் வெறுப்பு
நச்சத்திர விடுதிக்குப் போனால் மோகம்
நெருங்கினால் நெருப்பு
விலகினால் ஏக்கம்
பேசினால் பாசம்
காட்சி மாறினால் கசப்பு
மலரைக் கண்டால் நாட்டம்
திருமணம் என்றால் பார்ப்போம்
பெற்றோரைக் கண்டால் ஓட்டம்
காதல் காதலியின் நாட்டம்
கல்யாணம் பெற்றோர்களின் முடிவில்
அலைக்கழிக்க வைக்க ஆனந்தம்
அலைக்கழிக்கப் பட்டதால் வேதாந்தம்
இன்பத்தை அள்ளித் பெருக நாடினோம்
துன்பத்தை தந்து பிரிந்து விட்டாய்
இசைந்துவந்து இன்பத்தை தொடங்கினாய்
கசந்து போய் துன்பம் தந்து மடியச் செய்தாய்
Thursday, February 2, 2012
காதல் சிறகினிலே
இருபதில் தொடங்கிய
இதிகாசக்காதல்
அருபது முடிந்தும்
அறுவடையற்று
நிறைந்த கோபங்கள்
நிகழந்த சண்டைகள்
உதிர்ந்து உதிர்த்து
வெற்றுச்செதில்களாய்
விழுதுகளில் விளையாடி
தொடங்கிய காதல்
வேர்களில் நிறைந்தது
நிம்மதியாய்
வெளுத்த மீசைக்கு
கருமை அடிக்க
பெண்மையின் கண்களில்
என்றும் வெளுக்காத
காதல் கண் மை
காதல் தொடங்கிய
கண்கள் சுருங்கலாம்
வாய்கள் மொழிந்த
வார்த்தை மறக்கலாம்
காமம் சுகந்த
தேகம் இளைக்கலாம்
தேடிடும் கைகளுள்
பற்றிடும் உயிரென
தளர்ந்த கைகள்
இருக்கிப்பிடிக்கையில்
குழைந்த கதல்
இறுதியாய்..
இனிமையாய்..
என்றும் இளமையாய்..
Source : http://uumm.wordpress.com/
உமா
உமா. கோவை வாசி. கவிதைகள் ஒவ்வொரு அசைவையும் தாமே தேர்ந்தெடுக்க முடிகிற அழகிய வண்ணக் கனவு. அந்தக் கனவுகள் தருகிற புத்துணர்வே ஒவ்வொரு சுவாசத்தையும் இயல்பாக்குகிறது. உமாவின் கனவுகளின் ஆல்பத்தை பகிர்ந்து கொள்ள நட்போடு வரவேற்கிறேன்...உமாவும் கவிதையும்இயற்கையின் அடிமை
இதயங்களின் சிநேகிதி....
எதையும்..எவரையும்..
அவரவர்..குறை ..நிறைகளுடன்..
நேசிக்க விரும்புவபர்....
கவிதைகளோ...கதைகளோ...
வாழ்கையை..மனித உணர்வுகளை...
ரசித்து...ருசித்து...பார்க்கும்
அன்பால் மட்டுமே..அனைத்தையும்
சாதிக்கத்துடிக்கும்...
...உமா
Wednesday, September 14, 2011
காதலும் கொஞ்சம் கவிதைகளும்

(கனடா கீதவாணி வானொலி வழியே)
காற்றுச் சிறகேறி
காதுகளின் உயிர் தீண்டி
வேற்றுமொழி தேசத்தில்
ஊற்றுத் தமிழ் கூட்டி
ஒய்யாரமாய் உலாவரும்
உயர் கீத வாணியே
உயர்வாய் நீ நாளுமே
வணக்கம்
கீதவாணியும் தமிழ்நாடு கலாச்சார சங்கமும் இணைந்து வழங்கும் இந்த தமிழக நேரத்தில் என் கவிதைகளோடு உங்களைச் சந்திப்பதில் நான் பெருமிதமடைகிறேன்.
கனடாவில் தமிழனை உயர்த்தவும் தமிழ்ப் பண்பாட்டைக் காக்கவும் பல வழிகளில் தொண்டாற்றும் தமிழ்நாடு கலாச்சாரச் சங்கம் என்றென்றும் வாழ்க
இனி காதலும் கொஞ்சம் கவிதைகளும் என்ற தலைப்பில் உங்கள் உள்ள வனங்களில் மெல்லப் பூக்க வருகிறேன் உங்கள் செவி மொட்டுக்களை என்பால் கொஞ்சம் மலரச் செய்யுங்கள்
முதலில் காதலைப் பற்றிய ஒரு சிறு விளக்கமாய் ஒரு வரியில் எனக்குள் உருவான ஒரு கவிதை
காதல் எனப்படுவது யாதெனில்
இதயங்களின்
புனிதமான பகுதியிலிருந்து
நெகிழ்வான பொழுதுகளில்
இயல்பாகக் கழன்றுவிழும்
மிக மெல்லிய உயிர் இழைகளால்
சாட்சியங்களோ
சட்டதிட்டங்களோ இல்லாமல்
சுவாரசியமாய்ப் பின்னப்படும்
ஓர் உறுதியான உணர்வுவலை
Tuesday, August 9, 2011
S.A.மன்சூர் அலி வழங்கும் "இதுதான் காதல்"
நீடூர் மன்சூர் அலி M.A., B.Ed., அவர்கள் சென்னை வண்டலூர் கிரஸன்ட் மேல் நிலைப்பள்ளியில் இஸ்லாமிய பாடவியல் (Islamic Studies) ஆசிரியராகவும், மாணவர் நல ஆலோசகராகவும், மனித வள மேம்பாட்டுப் பயிற்சியாளராகவும் பணியாற்றியவர்.
மன்சூர் அலி அவர்கள் தி கார்டன் அகாடமி (The Garden Academy)Please visit :http://www.thegardenacademy.in/) எனும் மனித வள மேம்பாட்டுக் கல்வி நிறுவனத்தை நடத்தி வருகிறார். மேலும் கல்வி நிறுவனங்களின் அழைப்புகளை ஏற்று, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு மனித வள மேம்பாட்டுப் (Human Resource Development) பயிற்சி அளித்து வருகிறார்.
S.E.A. முஹம்மது அலி ஜின்னா
Jazakkallahu Hairanநன்றி : http://niduronline.com/
Subscribe to:
Posts (Atom)






















