Sunday, April 30, 2017

இது ஒரு பரவசமூட்டும் உணவு சுற்றுலா.

இது ஒரு பரவசமூட்டும் உணவு சுற்றுலா. மிகவும் வித்தியாசமானதும் கூட. சீனாவில் இருந்து ஐரோப்பா வரை நீண்டிருக்கும் பண்டைய கால தொழிற் வர்த்தக பாதை 'சில்க் ரூட்' என்று அழைக்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான மைல்கள் நீளும் இந்த பாதையில் உள்ள பல்வேறு நாடுகளுக்கும் சென்று அவர்களின் உணவுகளை அறிமுகப்படுத்துவதே இந்த உணவு சுற்றுலாவின் நோக்கம். சில்க் ரூட்டில் உள்ள பெரும்பாலான நாடுகள், இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடுகளாக காலப்போக்கில் மாறிவிட்டன. மேற்கு சீனாவும் இதற்கு விதிவிலக்கல்ல.

மொழியும் மொழிதலும் ....!

சாந்தியும் சமாதானமும் யாவருக்கும் உரித்தாகுக.
அஸ்ஸலாமு அலைக்கும்.
மிருகங்கள்கூட தன்னினத்து சக மிருகத்தை காணும்போது நலம் விசாரித்துக் கொள்கின்றன.
மனிதரில் ஒவ்வொரு பாரம்பரிய பழக்க வழக்கத்திற்கேற்ப ஒருவருக்கொருவர் வாழ்த்து பரிமாறிக்கொள்கின்றனர்.
நான் வசிக்கும் உகாண்டாவில் 56 பழங்குடி இனத்தவர்களும் அவர்களுக்கென தனியான மொழியும், கலாச்சாரமும், பண்பாடுகளும் ஏன், வாழ்த்து சொல்வதும் இருக்கிறது.

எம்மெஸ் சலீம் ...உகாண்டா தமிழ் சங்கத்தின் தலைவர் பொறுப்பு ஏற்பு.


எம்மெஸ் சலீம் ...
என் மருமகன்.
நாகர்கோயிலில் தொழிலதிபராக இருந்தவர் இன்று உகாண்டாவில் பணிபுரிகிறார்.
திறமைமிக்கவர்.
பல துறைகளில் விற்பன்னர்.
பொது நலப் பணிகளில் ஈடுபாடுள்ளவர்.
சென்ற இடமெல்லாம் சிறப்புகளை பெற்று வரும் சலீமைத் தேடி புதிய சிறப்பொன்று வந்திருக்கிறது.
அது ...
உகாண்டா தமிழ் சங்கத்தின் தலைவர் பொறுப்பு.
கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் வெற்றிகளை ஈட்டிய சலீம்
உகாண்டா தமிழ் சங்கத் தலைவர் பதவிக்கும்
பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன்.

Friday, April 28, 2017

யோகா VS தொழுகை : முஸ்லிம்களுக்கு யோகா தேவையில்லை. தொழுகை Vs யோகா முக்கிய அம்சங்கள் !!

முஸ்லிம்களுக்கு யோகா தேவையில்லை.

முஸ்லிம்களின் தொழுகை முறை அழகிய மிகச்சிறந்த பலனளிக்கும் யோகா. அதை எல்லோரும் ஏற்றுக் கொள்ளுங்கள் என்றுயாரையாவது அழைக்கிறோமா?நமக்குத் தேவையும் இல்லை.

யோகா தினம் என்று ஒன்று ஜூன் 21 தேதி உருவாக்கப்படுவது ஏன்?



கைபர் போலன் கணவாய் வழியாக ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டு, அடுத்த வேளை உணவுக்கோ, நிம்மதியான இரவு ஓய்வுக்கு ஒரு தங்குமிடமோ இன்றி பஞ்சப்பரதேசிகளாகப் பிழைக்க இடம் தேடி இந்தியாவினுள் வந்தேறிய ஆரியக்கூட்டத்தின் பரம்பரையில் வந்த 5 சித்பவப்பன்னாடைகளின் அழுகி நாறிப்போன மூளைகளில் உதயமான, இரத்தவெறிக்கூட்டம் ஆர்.எஸ்.எஸ் ஐ உருவாக்கியDr.Keshav Baliram Hedgewar

Wednesday, April 26, 2017

தாவூதும் கோலியாத்தும்

Vavar F Habibullah 

ஆண்டவனுக்கும் - ஆள்பவனுக்கும் உள்ள சம்பந்தம் என்ன? ஆட்சி மாற்றங்கள் நிகழ, ஆண்டவன் தான் காரணமா?

ஜனநாயக நாட்டில், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள், மக்கள் நலனுக்கு எதிராக செயல்படும் போது அதை தூக்கி எறிகின்ற சக்தி படைத் தவர்கள், மனிதர்களா அல்லது ஆண்டவனா?

ஆண்டவன், நேரிடையாக இவ்விஷயத்தில் தலையிடாவிட்டாலும் மக்கள் மூலமாகவே இதை நடத்தி காட்டுகிறான்.

Monday, April 24, 2017

எழுதப்படாத புத்தகங்கள்

நேற்று புத்தக தினம். எல்லாரும் ஏதாவது எழுதினார்கள். இன்னும் எழுதப்படாத புத்தகங்கள் குறித்து நான் எழுத விரும்புகிறேன். ஆமாம்.... பேஸ்புக்கில் சிலருடைய எழுத்துகள் புத்தகமாக வரத் தகுதியுடையவை. பேஸ்புக் என்னும் குறுகிய வட்டத்துக்கு வெளியே அச்சில் ஆவணமாக்கப்பட வேண்டியவை. சட்டென நினைவில் வருகிறவர்கள் (இந்த நால்வரும் இதுவரை புத்தகம் வெளியிடாதவர்கள், பத்திரிகைகளிலும் எழுதாதவர்கள். )—

மழையில் ஒரு மெளன💘யுத்தம் /

மழையில் ஒரு மெளன💘யுத்தம்
💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟
Saif Saif
உன் பார்வையின் அர்த்தங்களை பரிமாறிக் செல்கையில்
பளிச்சென்ற மின்னல்
கணபொழுதில் அதை
களவாடி பறந்து விட்டதே..
உன் இதயத்தின் விம்மல்களை
உள் வாங்கச் சொல்கையில்
இடியோசை ஒன்று அதை
தூரமாக்கி தொலைத்து விட்டதே..
மழையில் தெறித்த
சாரல் நீரில்
வரைந்த முகக் கோடுகளில்
உன் விசும்பல்களின் கண்ணீர் மறைந்திருக்கிறது..

Sunday, April 23, 2017

இறைவன் சகோதரனைத் தன் மடியில் ஏந்திக்கொள்ளட்டும் ஆமீன்

உயிரை
இழக்கவே முடியாது
ஆனால் இழந்துதான் ஆகவேண்டும்
மரணம் தோற்பதே இல்லை
துக்கத்தைப்
பெறவே முடியாது
ஆனால் பெற்றுத்தான் ஆகவேண்டும்
கொடுந்துயர் வலுக்கட்டாயமானது
கண்மூடி மண்மூடி முடிந்தாயிற்று
நெற்றிமூடி நித்திரைமூடி அழுதாயிற்று
நெஞ்சுமூடி நினைவுமூட வழியில்லை
காட்சிமூடி கண்ணீர்மூட முடியவில்லை
செய்திகேட்டதும்
கனடாவிலிருந்து கலிபோர்னியாவுக்கு
நெருப்பில் ஏறிப் பறந்து வந்தேன்
என் நேரிளைய தம்பி காலிதுக்கு
ஈமச்சடங்கு செய்துவிட்ட
ஈரக்கையுடன் எழுதுகிறேன்
நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட
கோட்டைகளில் இருந்தாலும்
மரணம் உங்களை வந்தடைந்தே தீரும்
- குரான் 4:78
இன்னாலில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜிவூன்
இறைவனிடமிருந்து வந்தோம்
இறைவனிடமே செல்கிறோம்
இறைவன் அவனைத்
தன் மடியில் ஏந்திக்கொள்ளட்டும்
ஆமீன்
*
காலிது அசன்பாவா
மரணம் ஏப்ரல் 17, 2017 @Santa Maria
அடக்கம் ஏப்ரல் 19, 2017 @Livermore - Five Pillars Farm




* * * * அன்புடன் புகாரி புதிய பதிவுகள் * * *

Wednesday, April 19, 2017

உயிர்த்துளிகளை சேமிப்போம் / Shahjahan R

உயிர்த்துளிகளை சேமிப்போம்
(விரைவில் வாட்ஸ்அப்பில் / பேஸ்புக்கில் ஆயிரக் கணக்கில் பகிரப்பட இருக்கிற பதிவு!) :)
பூமியில் உள்ள மொத்த நீரில் 97.4% கடல் நீர். மீதி 2.6% மட்டுமே நன்னீர் - Freshwater. அந்த 2.6%டிலும் ஏறக்குறைய முக்கால்வாசி போலார் பகுதியில் இருக்கும் பனிமலைகள். அது எல்லாம் போக, ஆறுகளில் குளம் குட்டைகளில் இருக்கும் நீர் எவ்வளவு இருக்கும்? இதைத்தான் நாம விவசாயம், தொழிற்சாலை, குடிநீர், கட்டுமானம் என எல்லாவற்றுக்கும் பயன்படுத்த வேண்டும். படத்தைப் பாருங்கள். பெரிய துளிதான் 2.6% நன்னீர். சிறிய புள்ளிதான் நமக்குப் புழங்குவதற்குக் கிடைக்கும் நீர்.
ஒவ்வொரு துளியின் முக்கியத்துவத்தை அறிய மேற்கண்ட விவரம் போதும், இது வெறும் நீர் அல்ல, உயிர்த்துளி. சிக்கனத்துக்கான குறிப்புகள் எல்லாமே எல்லாருக்கும் தெரிந்திருக்காது. அவரவர் தம்மால் முடிந்த அளவில் சிக்கனத்தைப் பின்பற்றினால், நாம் சேமிக்கும் நீர் வேறு ஒருவருக்கு உதவியாக இருக்கும். அதற்காக சில குறிப்புகளை தொகுத்து கீழே தருகிறேன். (நல்லதொரு பிளம்பரைப் தேடிப் பிடித்து தொடர்பில் வைத்துக் கொள்ளுங்கள்.)

சாதக மனோபக்குவம் ....!

வாழ்க்கையில் நாம் என்ன செய்தாலும் விளைவுகள் இரண்டு வகையாக இருக்கும்.
ஓன்று வெற்றி.
மற்றொன்று தோல்வி.
தோல்வியில் படிப்பினை கிடைக்கிறது அது வெற்றியை நோக்கி முன்னேற வழி காட்டுகிறது.
வெற்றியில் தொடர்து முன்னேற உத்வேகம் கிடைக்கிறது.
போட்டியே வாழ்க்கைமுறை என்பதே பாலர்பள்ளியில் இருந்து
பாடையில் போகும்வரை எடுத்து கையாளும்படியாகவே சமூக கட்டமைப்புகள் பன்னாட்டு சந்தை கொள்ளையர்களால் புகுத்தப்பட்டு சாதாரண மக்களின் மூளை சலவையால் சுத்தமானதாக காட்டப்பட்டு கவரப்பட்டுவிட்டது. இதனால் ஆக்கத்தைவிட அழிவே அதிகமாக இருக்கும். என்றாலும் அதை அறிந்தவர்கள், நான் உட்பட, யாராலும் அதிலிருந்து தம்மை பிரித்துக்கொள்ள முடியாதபடி மாயவலை பின்னப்பட்டுவிட்டது.

Thursday, April 13, 2017

அடுக்கடுக்காய் அடுக்கடுக்காய்

அடுக்கடுக்காய் அடுக்கடுக்காய்
மேலும் மேலும்
இத்தனைச் சோதனைகளா

என்றால்
ஏதோ மிக நல்லதொன்று
உங்கள் வாழ்வில்
வெகு விரைவில் மலரப் போகிறது

Tuesday, April 11, 2017

விவசாயிகள் போராட்டம் குறித்து இன்பாக்சில் கேள்வி மேல் கேள்விகள்.

Shahjahan R
போனீர்களா... பார்த்தீர்களா... தடியடியாமே... எப்போது முடிவு வரும்... என்னதான் நடக்கும்... வெற்றி கிடைக்குமா... அவர்களுக்கு ஏதாவது உதவி செய்யலாமே....
சுமார் ஒரு மாத காலமாக தலைநகரில் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். விளம்பரத்துக்காகப் போராடுகிறார்கள், ஆடிகார் அய்யாக்கண்ணு என்று ஒரேயடியாக ஒதுக்குவது எவ்வளவு தவறோ, அதே அளவுக்குத் தவறு - கோரிக்கைகள் அனைத்தும் சரியானவை என்பதும்.
கோரிக்கைகள் குறித்து எனக்கு சில கருத்து வேறுபாடுகள் உண்டு. உதாரணமாக, நதிநீர் இணைப்பு.
இருக்கட்டும். இப்போது அது விஷயமில்லை.

Thursday, April 6, 2017

அந்த இளைஞரை எண்ணி நான் வியக்காமல் இருக்க முடியுமா?

நேற்று முன்தினம் திருவாரூரில் தொடங்கிய பயணம் நேற்றிரவு மும்பையில் முடிந்தது. திருவாரூரில் தொடங்கி மும்பை வரை இரண்டு மொபைல்களிலும் மாற்றி மாற்றி தமிழிலும் இந்தியிலுமாகப் பேசிக் கொண்டிருந்தார் மார்வாடி இளைஞர்.
என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேச்சைத் தொடங்கினேன். ஆண், பெண், குழந்தைகளுக்கான ஆயத்த ஆடைகள், சேலைகள் மற்றும் துணி வணிகம் செய்கிறாராம்.
திருவாரூர், காரைக்கால் மற்றும் நாகை பகுதிகளுக்கு குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து சப்ளை செய்கிறாராம். எவ்வகையான பொருள்கள் அதிகமாக விற்பனை ஆகின்றன எனப் பார்ப்பதற்காக மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இந்தப் பகுதிகளுக்கு வந்து செல்வாராம்.

Wednesday, April 5, 2017

ஆரோக்யம் அனுபவியுங்கள்.......!

முடிந்த வரை மருத்துவம் பார்ப்பதை தள்ளிப்போடுங்கள்...
அமெரிக்காவில் கூட காய்ச்சல், சளி போன்றவை குழந்தைகளுக்கு வந்தால், உடனடி மருத்துவம் அளிப்பதில்லை... 3,4 நாட்களில் தானாக சரி ஆகும் ; அப்படி ஆகாவிட்டால் மட்டுமே டாக்டரைப் பார்க்க அனுமதி கிடைக்கும்...
ஒருவர் தவறான உணவை உட்கொண்டார் என்று வைத்துக் கொள்வோம்,
தொண்டை வரைக்கும் அவர் கட்டுப்பாட்டில் நஞ்சு இருப்பதால் அது உள்ளே சென்றுவிடும்!

400 மொழிகளில் அசத்தும் சிறுவன்!

படம் source
பல மொழிகள் பேசத் தெரிந்த பலருக்கும் பெரும்பாலும் அந்த மொழிகளை எழுதவோ, படிக்கவோ தெரியாது. ஆனால், பத்து வயது மஹ்மூத் அக்ரம் 400 மொழிகளில் படிக்கிறார், எழுதுகிறார், தட்டச்சு செய்கிறார்! அறிவுத் திறனில் உலகின் மிகப் பெரிய பணக்காரரான பில்கேட்ஸுக்கு இணையாகத் திகழ்கிறார்! இந்தச் சிறுவன் பல்வேறு விருதுகளையும் வென்றிருக்கிறார்!

சென்னை வியாசர்பாடியில் வசிக்கும் அக்ரம், நான்கு வயதிலேயே மொழிகளைக் கற்கத் தொடங்கிவிட்டார். இவரது அப்பா அப்துல் ஹமீத் பல மொழிகள் அறிந்தவர். இவர் பிற மொழிகளில் தட்டச்சு செய்வதைப் பார்த்து, இந்தச் சிறுவனும் மிக வேகமாகக் கற்றுக்கொண்டிருக்கிறார். ஆச்சரியப்பட்ட அப்பா, அடுத்தடுத்துப் புதிய மொழிகளைக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். தமிழ் பிராமி, கிரந்த எழுத்து, வட்டெழுத்து போன்றவற்றை அந்த வயதிலேயே கற்றுவிட்டார் அக்ரம்.

ஒரு கட்டத்தில் கற்கும் திறனும் தட்டச்சுத் திறனும் அசாத்தியமான வேகத்துக்குச் சென்றன. அறிவாற்றல் திறன் பரிசோதனை செய்யப்பட்டபோது, `அக்ரம் இயல்பான குழந்தை இல்லை’ என்பதை பெற்றோர் புரிந்துகொண்டனர். அறிவையும் நினைவாற்றலையும் வளர்க்க ஊக்கப்படுத்தினர்.
மேலும் படிக்க கீழ் உள்ளதை சொடுக்குங்கள்
400 மொழிகளில் அசத்தும் சிறுவன்!