Sunday, May 31, 2020


படம் :மர்ஹூம் சல்லல்லா(சலவாத் பாவா) பாவா
(தலையில் பேட்டா)
மர்ஹூம் நாஜிர் N.P.முஹம்மது இப்ராஹீம் ஹஜ்ரத்( தலையில் வெள்ளை தொப்பியுடன் )

ஸல்லல்லாஹ் பாவா பற்றித் தெரிந்த விவரங்கள் நிறையவே உள்ளன .ஆனால் அவர்கள் பிறந்தது வளர்ந்தது அவர்கள் குடும்பம் பற்றிய தகவல்கள் யாருக்கும் தெரியாது
நான் அறிந்த வரை சொல்கின்றேன்
நாங்கள் சிறு வயதாக இருக்கும்போது அவர்களை பெரியோர்கள் முதல் சிறு குழந்தைகள் வரை மிகவும் நேசிப்பார்கள் .அவர்கள் குழந்தைகளை ஸல்லல்லாஹ் ஓதச் சொல்வார்கள் அவரது கையில் ஒரு உண்டியும் பையும் இருக்கும் .ஓதும் குழதைகளுக்கு மிட்டாய் கொடுப்பார்கள் .அந்த சிறிய மிட்டாய்க்கு ஸல்லல்லாஹ் பாவா மிட்டாய் என்றே பெயர் வந்து விட்டது
அவர்கள் உண்டியில் சேர்ந்த பணத்தை வைத்து சீர்காழி அருகில் உள்ள புத்தூரில் பள்ளிவாசல் கட்டி உள்ளார்கள்

லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்

Hilal Musthafa
கலிமா கேசட்.
பாடிவர்:எஸ்.பி.பி. இசை:எம்.எஸ்.வி.
பாடல்:அ.ஹிலால் முஸ்தபா.

(நேற்று கலிமா கேசட்டின் முதல் பாடல் பதிவிட்டேன்.
இன்று மூன்றாம் பாடல் பதிகிறேன்.

இடையில் இரண்டாம் பாடலாக
"யா அல்லாஹ்..."என்ற பாடல் உள்ளது.

அது என் பாடலன்று.
மற்றொரு கவிஞர் பாடல்.
நல்ல பாடல்.
அவர் பெயர் நினைவில்லை.)

(மூன்றாம் பாடல்)

லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர்
ரஸூலுல்லாஹ்
லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர்
ரஸூலுல்லாஹ்

அல்லாஹ்வின் பேரைச்சொல்லிக்
கலிமாவை ஓதுகின்றோம்
அடுத்துங்கள் பேரைச்சொல்லி
ஆனந்தம் அடைகின்றோம்!

யா நபி! உங்கள்மீது
இறையருள் இருக்குது
எழுந்துள்ள பொருள்களெல்லாம்
உங்கள்புகழ் பாடுது!

உயிரின் ஓசை

மனவெழுச்சிக்கான மாமருந்து ... !நிசப்தம்

Saturday, May 30, 2020

பிறர் வாழ விழுந்த மனிதர்

பிறர் வாழ விழுந்த மனிதர்

Vavar F Habibullah
ஐம்பது வருடங்களுக்கு
முன்னால் கோட்டாறில்
வாழ்ந்த இந்த பெரிய
மனிதரின் பெயர்
வாவர் ஹாஜியார்.
உண்மையில் இவர் ஒரு
செல்ஃப்மேட் மேன்.இளம்
வயதில் மிகவும் கஷ்டப்பட்டு
தன் திறமையால் சமூகத்தில்
மிகவும் உயர்ந்த நிலையைத்
தொட்டவர்.

சினிமாவில் கூட காண முடியாத
அளவுக்கு அதிசய திருப்பங்கள்
கொண்டது இவரது வாழ்க்கை
வரலாறு.இதை நான் சொல்லா
விட்டால் இளம் தலை முறை
என்னை மன்னிக்காது.ஹிஸ்டரி
என்பது ‘ஹிஸ் ஸ்டோரி’ என்பதால்
இது கூட அவரது கதை தான்.
தயாளம்,தர்மம் கூட எல்லை
மீறி போனால் அது மனிதனை
அழித்து விடும் என்பதற்கு இவர்
ஒரு உதாரணம்.

மறைந்த 'தமிழ்மாமணி' அதிரை அஹ்மத் பற்றிய சிறு குறிப்பு!

மறைந்த 'தமிழ்மாமணி' அதிரை அஹ்மத் பற்றிய சிறு குறிப்பு!

அதிரை நியூஸ்: மே 30
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் அதிரை அஹ்மத் (வயது 72). தமிழ் இலக்கியங்கள் மீது அதிக பற்று கொண்டவர். எழுத்தாளர், கவிஞர், சமூக ஆர்வலர் ஆவார். முத்துப்பேட்டை அல் மஹா மகளிர் அரபிக் கல்லூரியில் சில ஆண்டுகள் முதல்வராக பொறுப்பேற்று இஸ்லாமிய மார்க்க கல்வியை போதித்தவர். அனைவராலும் 'தமிழ்அறிஞர்' என அன்புடன் அழைக்கப்படுபவர்.

அதிரையின் மூத்த எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். இஸ்லாம் ஓர் அறிமுகம், இஸ்லாமிய இலக்கியச் சிந்தனை, மழைப்பாட்டு (உரை), Wisdom in the Dawn (English), இளமைப் பருவத்திலே (Wisdom in the Dawn  என்ற நூலின் மொழிபெயர்ப்பு), ஆயிஷாவின் சிறுமிப் பாட்டு (சிறுவர் மரபுக் கவிதைகள்), அரும்புப் பாட்டு (பதிப்பில்), பெண்மணி மாலை (மரபுக் கவிதைகள்), ஒருமைப் பாட்டு (மரபுக் கவிதைகள்), இறையருட்கவிமணி மாலை (மரபுக் கவிதைகள்), அருமையான வாழ்வும் அமைதியான இறப்பும், ஏசுவை நேசித்தேன் பேறு பெற்ற பெண்மணிகள் பாகம் -1, பேறு பெற்ற பெண்மணிகள் பாகம் – 2,நபி வரலாறு, நம் பிள்ளைகளுக்கு,  நபி வரலாறு (விரிவு), சல்மான் அல் ஃபாரிஸி (மொழிபெயர்ப்பு), அலீ பின் அபீதாலிபு,கப்பாப் இப்னுல் அறத்து (மொழிபெயர்ப்பு), அபூதர் அல்ஃகிஃபாரி. மிக்தாத் இப்னுல் அஸ்வத் (மொழிபெயர்ப்பு), இறைத்தூதர் முஹம்மத், வட்டியை ஒழிப்போம்! (மொழிபெயர்ப்பு), அண்ணலார் கற்றுத் தந்த தலைமைத்துவம் (இலக்கியச் சோலை), தொழுகையாளிகளே! (மொழிபெயர்ப்பு - மூலம்: அரபி), மொட்டுகளே மலருங்கள்! , கவிதை – ஓர் இஸ்லாமியப் பார்வை, நல்ல தமிழ் எழுதுவோம்!, ஈமான் – இஸ்லாம் கவி மலர்கள், நபி (ஸல்) வரலாறு, பேருபெற்ற பெண்மணிகள், மரபுக்கவிதைகள் உட்பட மொத்தம் 35 நூல்களை எழுதி உள்ளார்.

அதிரை அஹ்மது அண்ணன் அவர்கள்.கிடைத்த அறிமுகம் உயர்வானது


முகநூல்   நன்பர்கள் ' வழியே  எனக்குக் கிடைத்த அதிரை அஹ்மது அண்ணன் அவர்கள்.கிடைத்த அறிமுகம்  உயர்வானது
அதிரை அஹ்மது அண்ணன் அவர்கள் நிறை ஞானம்.பெற்றவர்

அதிரை அஹ்மது அவர்களது முகநூல் பக்கத்தில் உள்ள படம்
அவர்கள் எழுதிய புத்தகங்கள் நிறைவாகவே இருக்கும்

அறிமுகமான தருணத்திலிருந்தே அவர்களுக்கு என் மீது அப்படியோர் அன்பு, பாசம். வயதிலும் அறிவிலும் பக்குவத்திலும் பழுத்த அவர்கள் என்னிடம் பட்டுக்கோட்டை சந்திப்பின்போது பழகும்போது வெளிப்படுத்திய அண்ணன் அபிமானத்தில் நான் மகிழ்ந்து போனேன்   அதிரை அஹ்மது அண்ணன் அவர்களின்   எனக்குக் கிடைத்த பேறு.

தமிழ் மாமணி பட்டம் பெற்ற அவர்கள் எழுதிக் குவித்த நூல்கள் பல. அவர்களுடைய அண்மைய master piece -
 அவர்கள் . தம்மைப் படைத்தவனிடம் மீண்டார்கள் தமிழ் மாமணி அதிரை அஹ்மது காக்கா.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

என் வாழ்வின் மிகு மோசமான காலக் கட்டம்.

Hilal Musthafa
( 1992--ஆம் ஆண்டு பிற்பகுதியாக இருக்கலாம்.
என் வாழ்வின் மிகு மோசமான காலக் கட்டம்.

தினம் தினம் மூன்று வேளை உணவைத் தொடர்ந்து நான் உண்ணாத வறிய காலம்.

அந்த நேரம் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி யிடமிருந்து என் நண்பர் நாகப்பட்டினம் மறைந்த சலாஹுத்தீன் வழி அழைப்பு வந்தது.

நானும் சலாஹுதீனும் பட்டினப் பக்கம்
எம்.எஸ்.வி.,இல்லம் சென்றோம்.

"ஏம்பா கவிஞனே!
தம்பி எஸ்.பி.பி. முதல் தடவையாக இஸ்லாமியக் கேசட் பாடப் போகிறார்.
நான்தான் இசையமைக்கிறேன்.
நீதான் பாடல்.

நீ எழுதத்தான் வேண்டும். உன் நிலைக்காக இதைத்தான் இப்போது நான் செய்ய முடியும்.

Friday, May 29, 2020

இறை இல்ல துவா பிரார்த்தனை பாடல்

சேனல்கள் எல்லோரையும் முட்டாள் ஆக்குகின்றன : கவிஞர் மோகனசுந்தரம்

கனடா தமிழ் முஸ்லிம் பல்கலாச்சாரசங்கம்நோன்புபெருநாள் ZOOM நேரலையில் தேரிழ...

கனடா தமிழ் முஸ்லிம் பல்கலாச்சாரசங்கம்நோன்புபெருநாள் ZOOM நேரலையில் தேரிழந்தூர்தாஜூதீன் குழு பாடியது.

பிறப்பு என்பது ஒரு நிகழ்வு மட்டுமல்ல; அது ஒரு வரலாற்றின் தொடக்கம்


Yembal Thajammul Mohammad ஏம்பல் தஜம்முல் முகம்மது //




பிறப்பு என்பது ஒரு நிகழ்வு மட்டுமல்ல; அது ஒரு வரலாற்றின் தொடக்கம் என்பதை உணர்ந்தால் " தோன்றிற் புகழொடு தோன்று"தல் எவர்க்கும் எளிது. இனிது.

உன்னதமான தந்தையின் உத்தமமான பிள்ளையாகப் பிறந்து எல்லா வசதி வாய்ப்புகளையும் எய்தித் திகழ்ந்தாலும்
" என்றும் ஒருநடையர் ஆகுவர் சான்றோர்" என்ற இலக்கணத்திற்கு இவர் இலக்கியம்.

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்( ரஹ்) அவர்களின் மடி தவழ்ந்து,
அண்ணாவைப் போன்ற ஒர் ஆளுமையான சிராஜுல் மில்லத் அவர்களின் மனம் தவழ்ந்து, சிங்கம் போலத் தமிழகத்தில் உலாவந்த சிறைக்கஞ்சாப் போராளி- சிறந்த இதழாளர்- பல்துறை வித்தகர் நாவலர் மறுமலர்ச்சி யூசுஃப் அவர்களின் உறவாகி, அரசியல் சூஃபி என்று அகிலம் போற்றும் முனீருல் மில்லத் பேராசிரியர் இ.யூ.மு.லீகின் அகில இந்தியத் தலைவர் பேராசியர் கேஎம்கே அவர்களின் அரசியல் நிழலாகி, நாடெங்கும் - நாநிலமெங்கும் வரவேற்கக் காத்திருக்கும் மக்களின் உறவாகி ....உலா வரும் இந்த நிலா முகம், இயூமுலீகின் முதன்மைத் துணைத் தலைவர் அண்ணன் அப்துர் ரஹ்மான் - மேனாள் நாடாளுமன்றப் போர்வாள்- அவர்களின் பிறந்த நாள் சமுதாய வரலாற்றில் ஒரு சந்தோஷமான நாள்! தமிழக சன்மார்க்க வரலாற்றில் ஓர் உன்னதமான நாள்.

ஈத் முபாரக் பெருநாள் தொழுகை இமாமத் செய்யும் யுவன் சங்கர் ராஜா.

ஊர் என்று எதனைச் சொல்வீர்?

ஊர் என்று எதனைச் சொல்வீர்?
Shahjahan R

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் எதற்காக ஊருக்குப்போவதில் அவ்வளவு குறியாக இருக்கிறார்கள்? இருக்கிற இடத்திலேயே இருக்க வேண்டியதுதானே? அரசுதான் உணவு தருகிறதே? நிலைமை சரியாகிற வரை அமைதியாக இருக்க வேண்டியதுதானே?
- என்றெல்லாம் சில அறிவாளிகள் கேள்வி கேட்டார்கள். ஆட்சியில் இருப்பவர்கள்கூட. பிரதமர் ஒருவர்தான் பேச்சுவாக்கில் ஒருமுறை சொன்னார் - “புலம் பெயர்ந்தவர்கள் தன் ஊருக்குப் போக வேண்டும் என்று நினைப்பது இயல்பானது” என்று. ஆனால் சொன்னாரே தவிர, செய்தது ஏதுமில்லை.

தினமும் இரண்டு வேளையும் அரசு தருகிற உணவுக்காக, அது எப்போது வரும் என்று எத்தனை நாட்களுக்கு காத்திருக்க முடியும்? எத்தனை நாட்களுக்குக் பிச்சைக்காரர்களைப் போல கையேந்தி நிற்க வேண்டியிருக்கும் என்று தொழிலாளர்களுக்குத் தோன்றும் என்பதெல்லாம் இந்தக் கேள்வி கேட்கும் அறிவாளிகளுக்குப் புரியாது. அவர்களுக்குத்தெரிந்ததெல்லாம், தன் தலைவன் எதைச் சொன்னாலும் அது தவறாக இருந்தாலும் போற்ற வேண்டும். தலைவன் எதையும் செய்யாவிட்டாலும் அதற்கும் ஏதாவது சப்பைக்கட்டு கட்ட வேண்டும். சுருக்கமாகச் சொன்னால் அடிமை புத்தி. அல்லது தொழிலாளர்களை வெறும் அடிமைகளாகக் கருதும் புத்தி.

தலைகுனியாதீர் ...!



Hilal Musthafa
படைத்தவனின் கருணைகண்டு
நெஞ்சம் மகிழுங்கள்! - அவன்
படைப்புகளைப் பணிந்துவணங்க
அஞ்சி நில்லுங்கள் !
(படைத்தவனின்...)

சோதனைகள் தொடர்கையிலே
அழைத்துப் பாருங்கள்! - அதைச்
சுட்டெரித்துக் காத்திடுவான்
வணங்கிப் பணியுங்கள்!
(படைத்தவனின்...)

Thursday, May 28, 2020

முழு இரவும்….



முழு இரவும்….

எது இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று கேட்டால் ஒவ்வொருவரும் வேறு வேறு பதில்களைச் சொல்வார்கள். ஆனால் எது இல்லாமல் இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று கேட்டுப் பாருங்கள்....அதற்கான பதில் என்னவாக இருந்தாலும் அதன் மையமான பொருள் பிரச்னை என்பதாகத்தான் இருக்கும். அப்படியென்றால் வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் பிரச்னை இல்லாமல் இருக்க வேண்டும் என்றுதானே பொருளாகிறது.


ஆனால் நடைமுறை வாழ்க்கையில் அது சாத்தியமானதா என்றால் நிச்சயமாக சாத்தியமில்லை என்பது நம் அனைவருக்குமே தெரியும்.


"ஓடிக்கொண்டே இருக்கிறேன்.. பல பிரச்னைகள்.
வீட்டில், தெருவில், ஊரில், வேலை செய்யும் இடத்தில் என எங்குமே பிரச்னைகள்.. தூங்கமுடியவில்லை.. பிரச்னைகளை தீர்த்து நான் நிம்மதியாக உறங்குவதற்கு எனக்கு ஒரு தீர்வு சொல்லுங்கள்"  என்றவாறே  அந்த மகானின் முன்பாக நின்றிருந்தார் அரேபிய நாட்டில் ஒட்டக பண்ணை வைத்திருக்கும் அந்த மனிதர்.

Wednesday, May 27, 2020

ஈத் அல் பித்ர் தொழுகைக்காக நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள்

ஈத் அல் பித்ர் தொழுகைக்காக நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள்
ரமழான் இறுதியில் ஐ.கே.இ.ஏ வாகன நிறுத்துமிடத்தில் பாதுகாப்பாக கூடியிருந்தனர்
https://www.facebook.com/

தம்பதிகளுக்கு இடையே உள்ள உறவு ஒரு புனிதமான உறவு. ..

“(மனைவியர்களான) அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், (கணவர்களாகிய) நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கிறீர்கள்”. 2:187

Tuesday, May 26, 2020

கோழிக்கறி இட்லி | Kozhi Kari Idli | Chicken stuffed idli | Chicken keem...

ஏக காலத்தில் இரண்டு பட்டப் படிப்புகள்!

ஏக காலத்தில் இரண்டு பட்டப் படிப்புகள்!

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள்! EmojiEmoji(பலருக்கும் இரண்டுமே பழுத்து எதிர்காலம் செழிக்கலாம்!; வெகு சிலருக்கு ஓன்று பழித்தாலும், ஒன்று பழுக்கும்!) 


கல்வியே பெரிதென்று ஏங்கிடினும் அது கிட்டாதவர்களுக்கும், விருப்பமின்றி கல்லூரிக்குள் திணிக்கப்பட்டும் தம் மனம் விரும்பிய பாடத்தில் பட்டம் பெற விரும்பும் பல்கலைப் 'பிரியர்'களுக்கும் மீண்டும் வசந்தமளிக்கும் வாய்ப்புகள் வந்துவிட்டன.

'ஏகலைவர்' ஏற்றிவைத்த தொலை நிலைக் கல்வித் தீபம் இனி மேலும் சுடர்விட்டுப் பிரகாசிக்கும்.   ஆம்!, ஏழைகளின் பொருளாதார வளத்தை மேம்படுத்திக்கொள்ள,

அரசுப் பணிகளில் அமர, 

தொழில் நுட்பப் பிரிவுகளில் படித்தாலும் தன்னுள் தாகமெடுக்கும் மொழி இலக்கியம் சமூகவியல் சார்ந்த படிப்புகளிலும் ஏக காலத்தில் கவனம் செலுத்த,

 பெரிதும் வழிசெய்யும் பல்துறை சார்ந்த பலகலைத் தேர்ச்சிகளை குறுகிய காலத்தில் பெறும் வகையில்,   ஒன்றுக்கு மேற்பட்ட பட்ட/பட்டயப் படிப்புகள்  படிக்கும் வசதி மீண்டும் வந்துவிட்டது!.

பேஸ்புக் தந்த ஒரு அறிமுகம்

·
Vavar F Habibullah

ஒரு காலத்தில் சென்னை
அசோக் நகர் எனது மருத்துவ
மனையின் தலைமையகமாக
இருந்த போது.....
வாரம் தோறும் நிகழும்
மருத்துவம் சார்ந்த கட்டுரை
கேள்வி பதில் சம்பந்தமாக
தினத்தந்தி, தினகரன், ராணி
வாசுகி போன்ற அன்றைய
பிரபல மூத்த பத்திரிகையாளர்
களுடனான அறிவியல் ரீதியான
சந்திப்பு, எழுதுவதில் ஒரு தனி
ஆர்வத்தை என்னுள் நிகழ்த்தியது
எனலாம். அப்போதெல்லாம்
பெரும்பாலான தமிழ் பத்திரிகை
களில் எனது மருத்துவ
கேள்வி பதில் நிகழ்ச்சிகள்
இடம் பெறும்.

தன்னம்பிக்கை

பெருநாள் தக்பீர் சொல்வது ஷுஐப் மிஸ்பாஹி அவர்கள்

பேராசிரியர் அல்ஹாஃபிள் ஷுஐப் மிஸ்பாஹி அவர்கள் சொற்பொழிவு

நீடூர்-நெய்வாசல் மஸ்ஜித் தக்வாவின் இமாம், ஜாமிஆ மிஸ்பாஹுல்ஹுதாவின் பேராசிரியர் அல்ஹாஃபிள் ஷுஐப் மிஸ்பாஹி அவர்கள்  தொழுகைப் பற்றிய ஆன்மீக  சொற்பொழிவு

Monday, May 25, 2020

பெருநாள் தொழுகையை நிறைவேற்றினோம்

எத்தனை தடைகள் இடையூறுகள் வந்தாலும் அது குரோணா வழிவந்தாலும் மார்க்க கடமையை நிறைவேற்றுவதில் தடையாக முடியாது. அதிலும் சில நன்மையான காரியங்களை உருவாக்கும். கடந்த நோன்பு காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் பல இமாம்களை உருவாக்கியது. எங்கள் வீட்டிலேயே சிறுவர்கள் இமாமாக இருந்து தொழுகையை நடத்தி வைத்தது மிகவும் மகிழ்வைத் தந்தன. சிறவர்கள் அனைத்து நோன்பையும் ஆர்வமாக நோற்று தங்கள் கடமையை நிறைவேற்றினார்கள். எங்கள் எதிர் வீட்டில் பள்ளி இமாம் குடி இருப்பதால் அவரிடம் தங்களது மார்க்க சம்பந்தப்பட்ட சந்தேகங்களை கேட்டும் தெரிந்துக் கொண்டார்கள். பெருநாள்
தொழுகையை தான் தொழவைப்பதாக எனது பேரன் விரும்பினான். இறைவன் அருளால் எதிர்வீட்டு இமாம் சுஹைப் ஹஜ்ரத் அவர்கள் இமாமாக இருந்து எங்கள் அண்ணன் வீட்டில் எங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் பெருநாள் தொழுகையை நிறைவேற்றினோம். அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே
தாங்களும் துவா செய்யுங்கள்.

சில மேன் மக்கள்

Vavar F Habibullah
என்னை விட வயதில் மூத்த
சீனியர் பெருமக்களிடம் மட்டுமே
பண்டிகை தினங்களில் பேசி
அவர்கள் நலம் விசாரித்து
மகிழ்வது எனது சமீபத்திய இயல்பு.

ஒளிவு மறைவின்றி அவர்கள்
பேசிடும் வாழ்க்கை நெறிகளில்
எவ்வித கலப்படமும் இல்லை.
யதார்த்த மனித வாழ்க்கையின்
பிரதிபலிப்புகளை அவர்களின்
வார்த்தைகளில் உணர முடியும்.
குடும்ப உறவுகளில் இருந்து
முதுமை மற்றும் இயலாமை
காரணமாக சற்று ஓரம் கட்டப்
பட்ட போதிலும் உடன் வாழ்ந்து
வரும் நட்பு வட்டமே இவர்கள்
சுவாசிக்க உதவும் ஆக்ஸிஜன்
சிலிண்டர்கள் போல் உதவுகிறது.

Friday, May 22, 2020

அன்சாரி பாரிஸ் பள்ளிவாசலில் தொழுகைக்காக ....

மணலுக்கு பதில் எம்சாண்ட்[ Manufacture Sand_ Msand] உபயோகித்தால் கட்டிடம் உறுதியாக இருக்குமா ?



Majestic Builder
மணலுக்கு பதில் எம்சாண்ட்[ Manufacture Sand_ Msand] உபயோகித்தால் கட்டிடம் உறுதியாக இருக்குமா ?

தற்பொழுது நம்மிடையே உள்ள பெரிய கேள்வி.? இது. அதற்க்கான பதிவு இது.

பயனுள்ளதாக இருந்தால் கமென்ட் செய்யவும்


மணல் என்பது நதி நீர், மலைக் கற்களை, தன் அசுர வேக ஓட்டத்தில் தூள் தூளாக்குவதால் இயற்கையாகப் பல வருட காலத்தில் உருவாகுவது.சன்னமானது.

எம் ஸாண்ட் என்பது கற்களை மனிதன் பொடி செய்வது. இது மணலைப் போல சன்னமானது அல்ல.கரடு முரடானது.

கான்கிரீட் என்பது மண், ஜல்லி, சிமெண்ட், நீர், ஆகியவை சேர்ந்த ஒரு கலவை ஆகும்.
இதில் சிமெண்ட் ஒரு பசை போல செயல்பட்டு மண் மற்றும் ஜல்லி கற்களை பிடித்து கொள்கிறது.

Wednesday, May 20, 2020

#EidAtHome: Step-by-step guide to offering Eid prayer at home

#EidAtHome: Step-by-step guide to offering Eid prayer at home


https://www.khaleejtimes.com/photos/nation/combating-coronavirus-step-by-step-guide-to-offering-eid-prayer-at-home#slide9

வீட்டிலேயே பெருநாள் தொழுகை தொழும் முறை | Eid prayer at home | #Selfstart...

பெருநாள் தர்மமும் நோக்கமும்

பெருநாள் தர்மமும் நோக்கமும்
“பித்ரு ஸகாத், நோன்பாளி வீணான காரியங்களில் ஈடுபட்டதனால் ஏற்படும் பாவத்தைத் தூய்மைப் படுத்துவதாகவும், ஏழைகளின் உணவுக்கு வாய்ப்பாகவும் அமைந்துள்ளது, யார் அதனை தொழுகைக்கு முன்பே கொடுத்து விடுகிறாரோ அதுதான் ஒப்புக் கொள்ளப்பட்டப் பெருநாள் தர்மமாகும் யார் பெருநாள் தொழுகைக்குப்பின் அதனை வழங்குகிறாரோ அது (பெருநாள் தர்மமாகாது மாறாக அது) சாதாரண தர்மமேயாகும்” என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்- அபூதாவூத், இப்னுமாஜா, தாரகுத்னீ. ஹாகீம்.


“பித்ரு ஸகாத் என்பது நோன்பு வைத்திருக்கும்போது நோன்பாளி வீணான காரியங்களில் ஈடுபட்டிருந்தால் அதற்குப் பரிகாரமாகவும் ஏழைகளின் (அன்றைய) உணவுக்கு வழியாகவும் இருப்பதற்காக நபி (ஸல்) விதியாக்கினார்கள். அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்- அபூதாவூத், இப்னுமாஜா, தாரகுத்னீ, பைஹகீ.

நபி (ஸல்) பெருநாள் தர்மத்தைக் கடமையாக்கி, ‘‘இன்றைய தினம் ஏழைகளைத் தேவையற்றவர்கள் ஆக்குங்கள்” என்றும் கூறினார்கள். அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி) நூல்கள்: பைஹகீ, தாரகுத்னீ.

பெருநாள் தர்மம் எப்போது, தொழுகைக்கு முன்பா? பின்பா?
பித்ரு ஸகாத்தை பெருநாள் தொழுகைக்கு மக்கள் புறப்படு முன்பே வழங்கிவிட வேண்டுமென நபி (ஸல்) கட்டளையிட்டார்கள். அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ, அபூதாவுத், திர்மிதீ.

நபித்தோழர்கள் பெருநாளைக்கு ஒருநாள் முன்பாக அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பாக இத்தர்மத்தை வழங்குபவர்களாக இருந்தனர். அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) நூல்- புகாரி.

ஷவ்வால் நோன்பு (பிறை-27)

ஆக்கம்: சத்தியமார்க்கம்
மீண்டும் ஒரு ரமளான்: பிறை 27

ரமளான் மாதத்தின் கடமையான நோன்புகளைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளை ஈகைப் பெருநாளாக நாம் கொண்டாடுகின்றோம்.

இதனைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்திலும் உபரியாக ஆறு நோன்புகள் நோற்பது நபி பெருமானார் (ஸல்) காட்டித்தந்த வழிமுறையாகும். எனினும் இந்த ஷவ்வால் நோன்பைக் கடமையான நோன்பு என்று கருதிவிடக் கூடாது.

நபி (ஸல்) கூறியுள்ளார்கள்:
“ரமளான் மாதத்தின் நோன்பையும் நோற்று, பின்னும் அதைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பையும் நோற்கின்றவர் வருடம் முழுவதும் நோன்பு நோற்றவருக்குச் சமமாவார்” (ஆதாரம்: முஸ்லிம்).

ஷவ்வால் மாத ஆறு நோன்பைப் பற்றி அறியாதவர்கள், அதனையும் நோற்று ஆண்டு முழுவதும் நோன்பு நோற்ற நன்மையைப் பெறுவதில் கவனம் செலுத்தத் தவறி விடுகின்றனர்.

இன்னும் சிலர் அறியாமையால் ‘இது பெண்களுக்கு மட்டும் உரியது அவர்கள் விடுபட்ட நோன்பை நிறைவேற்றுகின்றனர்’ என்று கருதுகின்றனர். மேற்கண்ட ஹதீஸ் பொதுவாக முஸ்லிம்கள் அனைவருக்கும் உரியது என்பதை நாம் கவனத்தில் கொண்டு இப்போது முதல் இந்த ஷவ்வால் 6 நோன்பையும் நோற்று அதிக நன்மைகளைப் பெற்றுக் கொள்வோமாக.

சுலைமான் ஆலிம் இஸ்லாமிய பாடல்

Tuesday, May 19, 2020

Surah Al-Qadr (கண்ணியமிக்க இரவு) | Tamil Translation| Islamic Dawah Page

ஸூரத்துல் கத்ரி (கண்ணியமிக்க இரவு) Surah Al-Qadr [97]

Quran: 97. Surah Al-Qadr (The Power): Arabic and English translation HD

லைலத்துல் கத்ர்

லைலத்துல் கத்ர் என்பதன் பொருள் கண்ணியமிக்க இரவு என்பதாகும். அந்த ஓர் இரவு ஆயிரம் மாதங்களை விட சிறப்புத் தகுதி பெற்றுள்ளதாக திருக்குர்ஆன் கூறுகிறது.

"நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலதுல் கத்ர்) இரவில் இறக்கினோம். மேலும் கண்ணிய மிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? அதில் மலக்குகளும், (ஜிப்ரீல் எனும்) ஆன்மாவும் தன் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி (நிலவியிருக்கும்). அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். (திருக்குர்ஆன் 97 : 1-5)"

வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி – 2020

வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு  தொழில் முனைவோர் பயிற்சி - 2020

100 தமிழர்களுக்கு  மட்டுமே

₹ 25,000 மதிப்புள்ள தொழில் வழிகாட்டுதல் | 6 மாதங்கள் ( கட்டணம் இல்லாமல் )

யார் கலந்து கொள்ளலாம்?

➡️ தொழில்  தொடங்க ஆர்வம்முள்ள வெளிநாடு வாழ் தமிழர்கள்

➡️ கொரானா வைரஸால் வேலை இழந்தவர்கள்

➡️ சொந்த ஊரில் தொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்கள்

Sunday, May 17, 2020

அழகான வார்த்தையில் அல்லாஹ்வை புகழ்ந்து பாடிய கவிஞர் மாஷா அல்லாஹ்

வீட்டில் ஈத் தொழுகை


வீட்டில் ஈத் தொழுகை

மூதாதையர்களுக்கான துஆ:


• யா அல்லாஹ், வஃபாத்தான என் மூதாதையர்கள் மற்றும் என் உம்மத்தினரின் பாவங்களை மன்னிப்பாயாக.

•யா அல்லாஹ், அவர்கள் உன்னை காணும் வரை மண்ணறையில் அவர்களுக்கு நிம்மதியான நேரத்தை வழங்கிடுவாயாக.

•யா அல்லாஹ், அவர்களை கப்ரின் வேதனை மற்றும் நரக நெருப்பிலிருந்து  பாதுகாப்பாயாக.

•யா அல்லாஹ், அவர்களின் மண்ணறையை விசாலமாக்கி கிருபை செய்திடுவாயாக.

•யா அல்லாஹ், அவர்களின் பாவங்களை மன்னித்து அவர்களின் நல்லறங்களை ஏற்று கொள்வாயாக.

•மேலும் மறுமையில்  ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்னும் மேன்மையான  சொர்க்கத்தை
அவர்களுக்கு வழங்கிடுவாயாக.

Quotes on Making it Through Hard Times

Human history has known many times of uncertainty and difficulty. The upside of it is that when we go through such times ourselves, we can look back and learn from the experience of the wise people that came before us. Whether it's the general atmosphere caused by the coronavirus that's got you feeling low or a personal matter, we hope that these inspiring words on perseverance through hard times will brighten your day!

Guide to Perform Aidilfitri Prayer | Ustaz Asysallehan Ali

Saturday, May 16, 2020

இட்லி

அப்துல்கையூம்

இதை நீங்க ரூம் போட்டு யோசிச்சீங்களா என்று கேட்டால், ஊ..ஹூம் கிடையாது, என் ரூமிலேயே உட்கார்ந்து நானே யோசித்தது. மண்டபத்திலும் யாரும் இதை எழுதிக் கொடுக்கவில்லை.

இத்தாலியை ஆங்கிலத்தில் ITALY என்று எழுதிவிட்டு நாம் அதை இட்டாலி என்று ஆங்கிலத்தில் உச்சரிப்போம். நோ.. நோ.. அப்படி உச்சரிக்கக் கூடாதாம். இட்லி என்றுதான் உச்சரிக்க வேண்டுமாம். உடனே பிஸ்ஸாவைப்போல் இட்லியும் இத்தாலி உணவு என்று நான் சொல்லிவிட்டதாக யாரும் என்னிடம் மல்லுக்கு நிற்க வேண்டாம்.

மல்லூஸ்க்கு எப்படி புட்டு பிரதான உணவோ அதுபோல நமக்கு இட்லி பிரதான உணவு, காலப்போக்கில் இட்லி குட்டி போட்டு இப்போது குட்டி குட்டி இட்லியும் வாரிசாக வந்து விட்டது.

வடநாட்டில் தமிழர்களாகிய நமக்கு அவர்கள் வைத்திருக்கும் பட்டப்பெயர் “இட்லி சாம்பார்”.

அடேய் ..! இட்லிதான் உலகத்திலேயே ஆரோக்கியமான, சத்தான உணவு என்று மேலை நாடுகளே ஒத்துக்கிட்டாங்க என்று சொன்னால் அந்த பான்பராக் வாயன்களுக்கு எங்கே சார் புரியப் போகுது?

மௌத் மரணம்

ஸகாத் பற்றி மாற்றுமத சகோதரர் கூறுவதை கேளுங்கள்

உப்புமா

அப்துல்கையூம்

உலகத்திலேயே உப்புமாவுக்குத்தான் சத்ருகள் அதிகம். பவர் ஸ்டாருக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் இருப்பதைப்போல உப்புமாவுக்கும் என் நண்பர் Ravichandran P Selvam போன்று ஒரு சில சில மித்ருகள் - அதாவது அதிதீவிர ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். தன் நண்பர் Ruthra Moorthy போன்ற உப்புமா ஆர்வலர்களுடன் இணைந்து “உப்புமா ரசிகர் மன்றம்” என அவர் தனியாக தொடங்கவும் வாய்ப்பிருக்கிறது.

உப்பு + மாவு – இதன் கலவையே உப்புமா ஆகும். கன்னடத்தில் `உப்பிட்டு’, எனவும், தெலுங்கில் `உப்பிண்டி’எனவும், மலையாளத்தில் `உப்புமாவு’எனவும், மராத்தியில் `உப்பீட்’ எனவும் பாவப்பட்ட பயனாளிகளை படுபயங்கரமாக பயமுறுத்தும் பண்டம்தான் இந்த உப்புமா.

தோசை


அப்துல்கையூம்


தோசை என்ற பெயர் ஏன் வந்தது?

வடநாட்டவர் ஒருவர் சொன்ன கதை இது. தோசைக்கல்லில் மாவை ஊற்றியதும் “சை” என்று ஒரு சப்தம் வருமல்லவா?. இந்தியில் சொன்னா அது “ஏக்… சை”. இரண்டாவது முறை அதை சட்டுவத்தால் திருப்பிப் போடும்போது மற்றொரு சவுண்டு “சை” என்று வரும். அது “தோ.. சை” (அதாவது இரண்டுமுறை “சை” என்ற சப்தம்). அதனால்தான் தோசை என்ற பெயர் வந்ததாம்.

இப்படித்தான் ஒரு கதையை அவிழ்த்துவிட்டு என் காதில் அவர் பூ சுற்றினார். இந்தக் கதையை சொல்வதற்கு குறிப்பாக என்னை ஏன் அவர் தேர்ந்தெடுத்தார் என்று எனக்குப் புரியவில்லை. என்னைப் பார்த்தால் தொட்டபெட்டா மலையிலிருந்து போர்வை போர்த்திக்கொண்டு வந்தவன் போல தெரிந்ததோ என்னவோ?

சாம்பார்

அப்துல்கையூம்

இட்லிக்கு பதிவு போட்டுவிட்டு சாம்பாருக்கு பதிவு போடாவிட்டால் அது இட்லிக்கு செய்யும் மாபெரும் துரோகம். உண்ட இட்லிக்கு ரெண்டகம் நினைக்கக்கூடாது.

Matches are made in Heaven என்கிறார்கள். புரோட்டாவுக்கு குருமா, பூரிக்கு உருளைக்கிழங்கு மசாலா, இடியாப்பத்திற்கு பாயா, தயிர் சாதத்திற்கு பட்டை ஊறுகாய், உப்புமாவுக்கு ஜீனி - இப்படியாக ஒவ்வொன்றுக்கும் மேட்சிங் கண்டுபிடித்த அந்த 'மெட்ரிமோனியல் மேட்ச் மேக்கர்' யாரென்று நமக்குத் தெரியவில்லை.

கண்ணதாசன் சிரமப்பட்டு எழுதிய பாடல்

இறைசிந்தனை


பாப் எனும் வாசலிலே!
பக்தி பரவச நிலையிலே!
பார்ப்பேனே ரப்பே!
புனித நாளோ சென்று
கொண்டிருக்க!
புண்ணியம் தேடி
கதறுகிறேனே!
புன்னகைக்கும் பூமானே!
புவியாலும் கோமானே!

லைலதுல் கத்ரினை எம்முள்ளே!
லாவகமாய் அடைந்திட
இரவு,பகல் நினைவலையில்
நீந்துகிறேனே!
இருள் சூழ்ந்த கல்பு
ஒளி கொடுப்பாயென்றே!

Wednesday, May 13, 2020

தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை / Kombai S Anwar

தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை

Kombai S Anwar 
தமிழ் முஸ்லிம்கள் வரலாறு - கல்வெட்டுக்கள், செப்பேடுகள், கட்டிடக்கலை & இலக்கியம்
Just listen to our
TMK Media Adviser Kombai S Anwar


சில மண்மூடிய அஸ்திவாரங்கள்

Vavar F Habibullah



80 களின் துவக்கத்தில்
என்று நினைக்கிறேன்.
தக்கலையில் குழந்தைகள்
சிகிச்சைக்கென்றே தனியாக
ஹபீப் குழந்தைகள் மருத்துவமனை
உருவான நேரம். எம்ஜிஆர்
ஆட்சியில் வக்பு வாரிய
விசாரணைக்குழு உறுப்பினராக
நான் தேர்வு செய்யப்பட்ட நேரம்.

சென்னை பிரபல சட்ட வல்லுனரும்
தொழில் அதிபருமான நண்பர்
ரஜாக், வக்பு வாரிய தலைவராக
இருந்தார். எனது மாமா
திருவிதாங்கோடு
எஸ்எ.இப்ராஹீம் அப்போது
முஸ்லிம் கலைக்கல்லூரியின்
நிர்வாகியாக இருந்தார்.

அம்மா ஆஸ்பத்திரியில், வீடே பட்டினி



அரிசியும் பருப்பும்
அடுக்குப் பானையிலிருக்கு
உப்பும் புளியும்
தக்கரிலே இருக்கு

மாவடுவும் மசாலாவும்
தகர டப்பாக்குள்ளே
சீனியும் சிறுகடுகும்
சிவப்புநிற குடுவையிலே



கண்ணாடி போத்தலிலே
கல்கண்டு இருக்கு
காகிதப் பொட்டலத்தில்
கருமிளகு மடித்திருக்கு

மௌனம் ஓர் ஆயுதம்


----- தமிழ்மாமணி கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ்

இளையான்குடி

ஸவ்ர் குகையே! – எங்கள்

தாஹா நபியிருந்த

பவர் குகையே !


அன்று

சத்தியம் சொல்லப்

புறப்பட்ட

எங்கள் சந்தன மலர்களைப்

பத்திரப்படுத்தித் தந்தாயே…!

பகை மேகங்கள்

விழுங்கப் பார்த்ததே…!

அவர்கள் நோம்பாளிகள் அல்லாஹ்வின் விருந்தாளிகள்

Monday, May 11, 2020

நான் பிரான்ஸ் வந்தபோது / Nidur AbuAyman

புதிதில் பள்ளிவாசல் எங்கு இருக்கிறது  என்று தெரியாமல் இருந்த நேரத்தில்
#தாஃவா தப்லிக் சகோதரர் ஆஃபிரிகா நாட்டச்சார்ந்த
முஹம்மது பிலால் என்பவர் #என் வீடு தேடி வந்து
பள்ளி வாசல் பக்கத்தில் இருக்கிறது என்று சொல்லி அழைத்துச்சென்றார்
(#அல்லாஹ் அவருக்கு நீண்ட ஆயுளையும் ஜன்னத்தையும் தந்தருள்வானாக)
#அவர் யார் என்று எனக்குதெரியாது நான் யார் என்று அவருக்கு  தெரியாது அல்லாஹ்
மலக்கை அனுப்பியது
போன்று எனக்கு தோன்றியது
#சிலநாட்களாக ஒரு சிலர் தப்லிக் தஃவா செய்யக்கூடியவர்களை தவறாக எழுதி வருகிறார்கள்
#எத்தனையோ மடாக்குடிகாரர்களையும்  நிரந்தர தொழுகையாளியாக்கிய வரலாறு இருக்கிறது
#தப்லிக் செய்பவர்கள் வாலி ஏந்தியோ போஸ்ட்டர் ஒட்டியோ
ஜகாத் நிதியோ
பித்ரா நிதியோ
வெளி நாடு மற்றும் எந்தவித வசூலும் செய்யாமல்
#தன் சொந்த பணத்தில் ஊர் ஊராக சென்று மக்களை தொழ அழைக்கிறார்கள்
#அவர்களின்
பணத்திலேயே சமைத்தும் சாப்பிடுகிறார்கள்
விளம்பர படுத்தி யாரோ பிரியாணி ஆக்கிஇவர்கள் சாப்பிடுவதில்லை

பத்ரு சஹாபாக்கள் /பாடலை எழுதி பாடியவர் இஸ்மாயில் சிராஜி சென்னை


இ-பயான் பத்ரு சஹாபாக்கள் சிறப்பு 1441H சூரா யாஸின் , 313 சஹாபாக்களின் பெயர் ...


இரகசியமாக தர்மம் செய்தல்:

   இரகசியமாக தர்மம் செய்தல்:     

வலது கரம் செய்ததை இடது கரம் அறியாத விதத்தில் இரகசியமாக செய்வது சிறப்பிற்குரியதாகும் என்று இஸ்லாம் கூறுகிறது. தர்மம் செய்யும் போது அல்லாஹ்வின் திருப்தி மட்டுமே நோக்கமாக இருக்கவேண்டும். எனவேதான் தர்மம் செய்வதை வலியுறுத்தியுள்ள நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரகசியமாக தர்மம் செய்பவரை ‘வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு தர்மம் செய்பவர்’ என வர்ணித்துள்ளார்கள்.


அல்லாஹ்தஆலா கூறுகிறான்,

யார் தங்கள் பொருள்களை (தான தர்மங்களில் )இரவிலும், பகலிலும் இரகசியமாகவும் பகிரங்கமாகவும் செலவு செய்கின்றார்களோ அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது. (அல்குர்ஆன் 2:274)

பிரான்ஸில் கொரோனவில் இறந்த முஸ்லிம்களை இஸ்லாமிய முறைப்படி கஃபனிட்டு முஸ்லிம்களுக்கு ஒதுக்கபட்ட இடத்தில் ஜானசா தொழுகை நடத்தி அடக்கம் செய்யப்படுகிறது

 பிரான்ஸில் கொரோனவில் இறந்த முஸ்லிம்களை இஸ்லாமிய முறைப்படி கஃபனிட்டு முஸ்லிம்களுக்கு ஒதுக்கபட்ட இடத்தில் ஜானசா தொழுகை நடத்தி 
அடக்கம் செய்யப்படுகிறது

#பிரான்ஸில் எந்த ஒரு மருத்துவமனையும்
கொரோனாவில் இறந்தவர்களை மைய்யத்தை தரமாட்டோம் என்றோ
மைய்யத்தை எரித்து விடுவோம் என்றோ யாரும் எங்கும் எனக்கு தெரிந்தவரை சொல்லவே இல்லை

#ஆனால் இதற்கு மாற்றமாக
ஊரில் சிலர் பிரான்ஸில்
குரோனாவில் இறந்தவர்களை எரிப்பதாகவும்
#மருத்தவமனைநிர்வாகம் மைய்யத்தை தரமாட்டோம் என்றும் மறுப்பதாகவும்
சிலர் உண்மைக்கு மாறாக #பொய்சொல்லிக்கொண்டு அலைகிறார்கள்

#ஏன் உங்களுக்கு இந்தவேளை
அல்லாஹ்வை #பயந்துகொள்ளுங்கள்

Allahu Akbar, Allahu Akbar, அல்லாஹு அக்பர் , அல்லாஹு அக்பர் ,

பாங்கின் ஓசை ஒலிக்கிறது அது பாங்காய் காதில் கேட்கிறது.
===================
”அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் - இறைவன் மிகப் பெரியவன் இறைவன் மிகப் பெரியவன்

அஷ்ஹது அன்லா இலாஹ இல்லல்லாஹ் – இறைவன் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று சாட்சி கூறுகிறேன்

அஷ்ஹது அன்லா இலாஹ இல்லல்லாஹ் - இறைவன் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று சாட்சி கூறுகிறேன்

அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் – முஹம்மது இறைவனின் தூதர் என்று சாட்சி சொல்கின்றேன்

அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் - முஹம்மது இறைவனின் தூதர் என்று சாட்சி சொல்கின்றேன்

Sunday, May 10, 2020

எங்கே இறைவன் (A SUFI VISION) not meant for all

Vavar F Habibullah


கண்ணில் நீ
கருத்தில் நீ
காதில்
விழும் சொல்லில் நீ
பேச்சில் நீ
என் மூச்சும் நீ.

உள்ளில் நீ
நெஞ்சில் நீ
உணர்வில் நீ
என் உயிரும் நீ

ஆதியும் நீ
அந்தமும் நீ
எல்லாமும் நீ
எங்கும் நிறைந்தவன் நீ

அன்பும் நீ
கனிவும் நீ
என்றே உன்னைத் தேடி
ஊரெல்லாம்
உலகெல்லாம்
அலைந்த என்னில்

அரசியல் பிரமுகர் ஒருவருடன் தந்தை பெரியாரைச் பார்க்கச் சென்றிருந்தேன்.

Yembal Thajammul Mohammad

அரசியல் பிரமுகர் ஒருவருடன் தந்தை பெரியாரைச் பார்க்கச் சென்றிருந்தேன்.

அப்போது அவர் ஒரு மாலை நாளிதழைப் படித்துக் கொண்டிருந்தார். நாங்கள் முகமன் கூறினோம். முகம் மலர பதில் கூறினார். மரியாதை நிமித்தமான சந்திப்புதான்; பொதுவான பேச்சு.

அப்போதே அவர் இரண்டு மூன்று பேர் உதவியுடன்தான் இயங்கிக் கொண்டிருந்தார்.குறிப்பான பிரச்னை அந்த மூத்திரச் சட்டி;அதற்கும் வயிற்றுப் பகுதிக்குமான இணைப்பாக இருந்த குழாய். அது அசைந்தால் கூடச் சிரமம்தான் போலும்.

அவரைப் பற்றி மக்களுக்கு அதிகம் தெரிந்தது அவர் கடவுள் இல்லை என்பவர் என்பது.அது மாபெரும் துணிச்சலான செயலாகப் பார்க்கப்பட்டது.

நாங்கள் அவரோடு இருந்த நேரத்தில் அவர் சற்று இப்படி அப்படி அசைந்தார்.ஏதோ அசௌகர்யத்தை உணர்ந்தவர் சிங்கம் கர்ஜிப்பது போன்ற தொனியில் ஒரு வார்த்தையைச் சொன்னார்....

BADR SAHABAH NIGHT 2020 | 1441H

பாக்கியம் நிறைந்த பத்ர் சஹாபாக்கள்

Sahaba Names List Imam Hussain R A

பத்ரு ஸஹாபாக்கள்..

[Tamil] பத்ரு தொடங்கிய வரலாறு | Moulana Shamsudheen Kasimi

ஷைகுல்ஹதீஸ்A.E.M.அப்துர் ரஹ்மான் மிஸ்பாஹி-பத்ரு ஸஹாபாக்களின் சிறப்புகள்-...

Saturday, May 9, 2020

பத்ர் களம் ஈந்த பாக்கியம்...!

பத்ர் களம் ஈந்த பாக்கியம்...!
Hilal Musthafa

ஆண்டு நினைவில் இல்லை. சுமார் முப்பத்தைந்து நாற்பது ஆண்டுகள் கடந்திருக்கலாம்.

பட்டுக்கோட்டையில் பிரம்மாண்டமான மீலாது பொதுக் கூட்டம். தமிழ்மாநில முஸ்லீம் லீகினுடைய தலைவர் சொல்லேர் உழவர் சிராஜுல் மில்லத் அப்துலஸ் ஸமது சாஹிப் பங்கேற்கிறார்.

அந்த மீலாது பெருவிழாவில் கவிஞர் தா.காசிம், மச்சான் இஜட் . ஜபருல்லாஹ், அ.ஹிலால் முஸ்தபா பங்கேற்கின்றனர்.

சென்னையில் இருந்து ஸமது சாஹிப், ஜபருல்லாஹ், நான் மூவரும் தலைவர் காரில் பயணமாகிப் பட்டுக்கோட்டைக்கு வருகிறோம்.

அந்தக் காலக் கட்டங்களில் இப்படி தலைவரோடு கார்ப் பயணம், மாதத்தில் 15-20 நாட்கள் தமிழகத்தில் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

கவிஞர்.தா.காசிம் எப்போதுமே தலைவர் காரில் பயணத்திற்குச் சம்மதிக்க மாட்டார். லட்ச ரூபாய் கொடுத்தாலும் மறுத்துவிட்டு ரயிலிலோ பஸ்ஸிலோ பயணமாகி விடுவார்.

“Everybody’s always blaming me for everything.”

ஆழமான ஆடியில் வாழுகின்ற மீன்களாய் / தாஜுதீன்

மாட்சிமை ஓங்கும் மங்கள திங்கள் பாடியவர் தேரிழந்தூர் தாஜுதீன்

Muthu Rasool Madhu ganam | Fathima Safa | Essaar media

பயனுள்ள வாழ்க்கை... - 13-09-2019

கொரானாவின் கொடுமை விலக சிறப்பு பிரார்த்தனை (தமிழ்)

60 - அல்ஹம்துலில்லாஹ் ! ( மெளலவி P.A. காஜா முயீனுத்தீன் பாகவி அவர்கள்)

சிறப்புரை: P.A.காஜா முயீனுத்தீன் பாகவி ஹஜ்ரத்,கிப்லா தலைப்பு: ஞானத்தின் ...

ஆன்மீகமும் அண்ணலாரும் P.A.மௌலவி காஜா முயீனுத்தீன் பாகவி ஹழ்ரத்

தென் கொரிய இஸ்லாமிய YouTube-பர்ஸ்

Aashiq Ahamed
தென் கொரிய இஸ்லாமிய YouTube-பர்ஸ், இந்த ரமலானில் அசத்தி வருகிறார்கள். இவர்களில் பலருக்கும் முஸ்லிமாக இதுவே முதல் ரமலான். இறை நம்பிக்கையை வலுப்படுத்தும், புத்துணர்வூட்டும், நகைச்சுவை ததும்பும், மனம் நெகிழவைக்கும் பொழுதுபோக்கிற்கு உத்திரவாதம் அளிக்கின்றன இவர்களது காணொளிகள். தனித்துவமான அணுகுமுறையை கொண்டுள்ள இந்த சேனல்கள் பலரையும் வெகுவாக கவர்ந்துவருகின்றன. சுமார் 30 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் இவர்களை பின்தொடர்கின்றனர்.

இவர்கள் அனைவருடைய வீடியோக்களுக்கும் ஆங்கில சப்-டைட்டில் உண்டு. சிலருடைய வீடியோக்களில் அரபி மற்றும் துருக்கிய சப்-டைட்டில் கூட உண்டு. இவர்களை பின்தொடர (படம் வாரியாக):

இஃப்தாருக்கு தந்த அன்பளிப்பு

கத்தாரில் கத்தார்ஏர்வேசில் பொறியாளராக இருக்கும் எனது சகோதரி மகன்

சுவனத்தின் தலைவி அன்னை பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா / ஹஜ்ரத் சுஹைப் மிஸ்பாகி சொற்பொழிவு

சுவனத்தின் தலைவி அன்னை பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா / ஹஜ்ரத் சுஹைப் மிஸ்பாகி சொற்பொழிவு

S.E.A.முகம்மது அலி ஜின்னா, நீடூர். JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎ "Allah will reward you [with] goodness."

வரலாற்று பெண்மணி உம்முசுலைம் (ரலி) அன்ஹூ/ ஹஜ்ரத் முஹம்மது ஷுஐபு மிஸ்பாஹி சொற்பொழிவு

நீடுர்-நெய்வாசல் ஜின்னா தெரு மஸ்ஜித் தக்வா இமாம் ஹஜ்ரத் முஹம்மது ஷுஐபு மிஸ்பாஹி அவர்கள் சொற்பொழிவு

 S.E.A.முகம்மது அலி ஜின்னா, நீடூர்.
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎ "Allah will reward you [with] goodness."

Friday, May 8, 2020

தாய் / அம்மா

13 - வீடுகளை மஸ்ஜுதுகளாக ஆக்குங்கள்.

26 - நோன்பு கடமையாக்கப்பட்டதின் நோக்கங்கள்.

Memories (Lyrics)

Lyrics:

Here's to the ones that we got
Cheers to the wish you were here but you're not
'Cause the drinks bring back all the memories
Of everything we've been through
Toast to the ones here today
Toast to the ones that we lost on the way
'Cause the drinks bring back all the memories
And the memories bring back, memories bring back you

There's a time that I remember
When I did not know no pain
When I believed in forever
And everything would stay the same
Now my heart feel like December
When somebody say your name
'Cause I can't reach out to call you
But I know I will one day, yeah

Blow Your Mind (Mwah)

Blow Your Mind (Mwah)
Dua Lipa
I know it's hot
I know we've got
Something that money can't buy
Fighting to fifths
Biting your lip
Loving too late in the night
Tell me I'm too crazy
You can't tame me, can't tame me
Tell me I have changed
But I'm the same me, old same me
Inside
Hey!
If you don't like the way I talk, then why am I on your mind?
If you don't like the way I rock, then finish your glass of wine
We fight and we argue, you'll still love me blind
If we don't fuck this whole thing up
Guaranteed, I can blow your mind
Mwah!
And tonight I'm alive, ain't a dollar sign
Guaranteed, I can blow your mind, mwah
And tonight I'm alive, ain't a dollar sign
Guaranteed, I can blow your mind, mwah (Mwah, mwah, mwah, mwah)
Yeah, I'm so bad
Best that you've had
I guess you're digging the show
Open the…

The Scale of the Universe 2

Must see / கிளிக் செய்து பாருங்கள் /பொறுமை வேண்டும்
Mobile Version: https://itunes.apple.com/us/app/the-s... Online Flash Version: http://htwins.net/scale2/ http://www.newgrounds.com/portal/view...

99 Commands From Allah (Powerful) Quranic Reminders

Korea's Game Begins | Tamil | Madan Gowri

நோன்புக் கஞ்சி / நிஷா மன்சூர்

நோன்புக் கஞ்சி தொடர்பாக அண்ணன் கோம்பை அன்வர் அவர்கள் சில நாட்களுக்கு முன்னர் உரையாடியிருந்தார். தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பிரத்யேகமான வழமைகள்,உணவு வகைகள் இருக்கின்றன. எங்கள் கொங்கு பகுதிகளில் ஊறவைக்கப்பட்ட சப்ஜா விதை வித் நன்னாரி சர்பத்,ரூஹப்ஜா சர்பத் இல்லாத கஞ்சி வடை காம்போவை நினைத்துக்கூடப் பார்க்க இயலாது.

2004 வாக்கில் ஒருமுறை உடன்குடியில் நோன்பு திறக்க நேர்ந்தது. ஊருக்குள் ஒரு பள்ளி இருப்பதாக வழி சொல்லியிருந்தார் அங்கிருந்த வணிக நண்பர். ஒருபக்கமும் திண்ணைகள் கொண்ட பெரிய தெருவின் இடதுபுற இறுதியில் பள்ளி இருந்தது. நான் அருகில் செல்லச்செல்ல தொழுகைக்கான பாங்கு அழைப்பு ஒலித்துக் கொண்டிருந்தது. நோன்பு திறக்கும் நேரம் கடந்துவிட்டது என்பதால் காரிலேயே தண்ணீர் குடித்து நோன்பைத் துறந்துவிட்டு பள்ளிக்குள் நுழைந்தால் ஒருத்தரையும் காணோம்.

வெற்றி வேண்டுமா? போட்டுப் பாரடா எதிர் நீச்சல்!


N.S.M. Shahul Hameed
வெற்றி வேண்டுமா? போட்டுப் பாரடா எதிர் நீச்சல்!

அட சரிதான் போடா ‘LOCK DOWN’ என்பது வெறும் கூச்சல்!

நமது கல்வி முறை என்பது பண்பாட்டையும், இலக்கியங்களையும், அறிவுசார் கலைகளின் பயன்பாட்டையும் கற்றுத்தருவதைக் காட்டிலும்; ஒரே பொருளின் பல்வேறு பரிமாணங்களைப் பல்வேறு கவர்ச்சியான தலைப்புகளின்கீழ் பயில்வதில்தான் கவனம் கொண்டு திரிகிறது.  வர்த்தக மயம் விதிக்கும் விலைவாசி ஏற்றமும், கை நிறைய அள்ளித்தரும் கவர்ச்சியான சம்பளங்களும்தான் இன்றய கல்வித்திட்டங்களை வடிவமைக்கின்றன.

ஒரு சில கல்லூரிகள் மட்டுமே இந்தக் குறைபாடு இன்றிச் சிறந்த பயிற்சியுடன் மாணவர்களைத் தயார் செய்து அனுப்புகின்றன. ஆனால் இதுபோன்ற கல்லூரிகளில் சேர்ந்து பயில, ஒன்று மிக அதிகமான மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் அல்லது அதிகமான பணம் வேண்டும்.

Muhammad Ali, Ready To Meet God

தாய்

Wednesday, May 6, 2020

நீடூர்-நெய்வாசல் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதாவின் முன்னாள் தலைவர்கள்:மற்றும் நிர்வாகிகள்


ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதாவின் முன்னாள் முதல்வர்கள்

1. மௌலானா, அல்ஹாஜ், ஷாஹ் அப்துல் கரீம் பானி ஹழ்ரத்         1912-1932

2. மௌலானா, அபுல்கமால் முஹம்மது சயீது ஹழ்ரத்                  1932-1945

3. மௌலானா, N.P.முஹம்மது இப்ராஹும் ஹழ்ரத்                      1945-1962

4. மௌலானா, முஹம்மது ரஹ்மத்துல்லாஹ் ஹழ்ரத்                   1962-1981

5. வடக்குமாங்குடி தாஜுஷ்ஷரீஅத், S.R.ஷம்சுல் ஹுதா ஹழ்ரத்      1981-1988

6. மௌலானா,O.M. அப்துல் காதிர் பாகவி ஹழ்ரத்                    1988-1995

7. மௌலானா, M.S.அப்துஸ்ஸலாம் ஹழ்ரத்                         1995-2002

8. மௌலானா, A.முஹம்மது இஸ்மாயீல் ஹழ்ரத்                    2002-2003
9. மௌலானா, H.கமாலுத்தீன் ஹழ்ரத்                               2003-2005

10.மௌலானா, S.M.சதக்கதுல்லாஹ் ஹழ்ரத்                          2005

11.மௌலானா, A,முஹம்மது இஸ்மாயீல் ஹழ்ரத்                   2006லிருந்து
                                                                                                                                இன்று வரை

---------------------------------------

ரமலானும் நாமும்

ரமலானும் நாமும்

நீடூர்-நெய்வாசல் ஜாமிஆ மஸ்ஜித் துணை இமாம் அல்ஹாஃபிள் ஷாஹ் மதார் மிஸ்பாஹி அவர்கள்

அல்ஹாஃபிள் ஷாஹ் மதார் மிஸ்பாஹி அவர்கள் கேட்ட துஆ (பிரார்த்தனை)

நீடூர்-நெய்வாசல் ஜாமிஆ மஸ்ஜித் துணை இமாம் அல்ஹாஃபிள் ஷாஹ் மதார் மிஸ்பாஹி அவர்கள்
கேட்ட  துஆ (பிரார்த்தனை)

வலம்புரி ஜான் தன்னம்பிக்கை!

Tuesday, May 5, 2020

மறைந்த மாமேதை மர்ஹூம் மௌலானா எஸ். ஆர். ஷம்சுல் ஹுதா அவர்களின் பயான்,

நாற்பது வருடத்திற்கு முன் ரமலான் தராவிஹ்!

சுமார்
இருபது நிமிட பயானாக இருந்தாலும் ஒரு அற்புதமாகவும் கேட்க கேட்க இனிமையாகவும் கருத்து மிக்கதாகவுமே இருந்தது.

நீடூர் நெய்வாசல் பெரிய பள்ளியில்
மறைந்த மாமேதை மர்ஹூம் மௌலானா எஸ். ஆர். ஷம்சுல் ஹுதா அவர்களின் பயான்,
அன்று ஹாஃபில் அவர்கள் எதை ஓதுகிறாரோ
அதிலிலிருந்து ஒரு வரி எடுத்துக் கொண்டு  மிக அற்புதமான கருத்துக்களை சொல்வார்கள். அதை கேட்டுக்கொண்டே இருக்கலாம்!
அவர்களின் அந்த பயானை கேட்க மற்ற ஜமாஅத் நண்பர்களும் ஓடோடி வருவார்கள்.
அவர்களின் விளக்கம் அப்படி இருக்கும்!

ஷுஐப் மிஸ்பாஹி அவர்கள் நோன்பு திறக்கும்போது கேட்ட துஆ (பிரார்த்தனை)

Tamil Islamic Song | இணையில்லா இறைவனே | Inaiilla iraivanae | composed b...

Tamil Islamic Song | ரமலான் பிறையே | Ramalan Piraye | Kanmani Raja | Rahema

யா அல்லாஹ் Unseen Videos of #ARRahman Composing with #GVPrakash | A R Rahman Song R...

எங்கும் நிறைந்தோனே இரு கரம் ஏந்துகிறேன்

எங்கும் நிறைந்தோனே ...
இருகரம் ஏந்துகிறேன் அல்லாஹ்...

சங்கை மிகுந்தோனே ..
சஞ்சலம் தீர்த்துவிடு
யா அல்லாஹ்...

உன்னையன்றி யார்தான் எனக்கு உதவிடுவார் அல்லாஹ்..!(2)

அன்பும் பண்பும் ஆற்றல்மிகுந்தோனே
அருள்வாய் ... யா அல்லாஹ்

வானில் மிளிரும் அர்ஷினிலே என்றும் வாகாய் வாழும் நல்லவனே.....(2)

தேன் உலகம் உயர்சொர்கத்தையும்
தீய நரகத்தையும் படைத்த வல்லவனே ....

என் மேல் கோ...ப...ம்ம்மா...
எந்தன் இதயம் தாங்குமா..?(2)

இனிதாய்
நலமாய்
வளமாய் வாழ அருள்வாய்
யா அல்லாஹ்
என்றும் அருள்வாய் யா அல்லாஹ்....

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் படம் இயக்குகிறாரா�� ? இது உண்மையா ? | வீக்கெண்ட்...

Yuvan - Why Islam, His Wife, NGK Interval, Nerkonda Paarvai Surprise & M...

அன்புடன் நோன்பு

dr. ஃபஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்

 அன்புடன்  நோன்பு

இறை நம்பிக்கையாளர்களே, உங்களுக்கு முன் இருந்தவர்கள்மீது நோன்பு கடமையாக்கப் பட்டதுபோல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப் பட்டுள்ளது. அதன் மூலம் நீங்கள் தூய்மையானவர்கள் ஆவதற்காக’ – அல் குர்ஆன் (2:183)

இதோ நோன்பு ஆரம்பித்து விட்டது.இது இஸ்லாமியர்களுக்கான நோன்புக் காலம்.வருடம் முழுக்க பழகி இருந்த ஒரு முறையிலிருந்து முற்றிலும் தன்னை மாற்றிக் கொள்ளச் செய்யும் ஒரு ஓவராயிலிங் சிஸ்டம்.. முந்தின தினம் வரை நேரத்திற்கு காபி குடிக்க முடியாவிட்டால் கூட  தலைவலி என உழலும் மனம் அடுத்தநாள் நோன்பு என்று அறிவிக்கப்பட்டவுடன் அதற்கேற்றாற்போல் சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை எதையும் உண்ணாமல், பருகாமல் இருக்க தயாராகி விடுகிறது.

பசித்திருக்கும்  நோன்பாளி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் கூட ஃப்ரிட்ஜில் இருக்கும் உணவையோ நீரையோ உட்கொள்ளாத கட்டுப்பாடும் இறை அச்சமுமே இந்த  நோன்பின் சிறப்பு.

இதெல்லாம் ஒருபுறமிருக்க இந்த வருட ரமலான் முற்றிலும் புது அனுபவமாக அமைந்து விட்டது.

Monday, May 4, 2020

உகாண்டா சனாதிபதி ககுட்டா முசொவேனி சிறந்த ஆட்சியாளர் ....


தமது தேசத்தின் மீது பற்றை விதைத்து கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் ஆப்பரிக்கா கண்டத்தின் ஒற்றை மனிதராய் ஜொலித்து உரிய நடவடிக்கைகளை கையாண்டு மக்களின் உயரிய அன்பை அறுவடை செய்கிறார் ....

எவ்விதமான விஷயமாக இருந்தாலும் அவைகளை விளக்கும் முறையில் நாட்டு மக்களிடம் விவரமாக பேசும் திறனை இறையிடம் வரமாக பெற்றவர் என்றால் அது இவருக்கு மிகவும் பொருந்தும் ....

பேச்சுக் கலையில் கலைஞரை போல் நாவன்மை பெற்றவரான இவர் ஊரடங்கு அமுலாகிய தருணங்களில் மக்கள் எவ்வாறு செயல்பட்டு தங்களை பேணிக் கொள்ளணும் என்று பற்பல உதாரணங்களோடு அருமையாக ஊட்டுகிறார் ....

லுக்மான் (அலை) மகனுக்கு செய்த உபதேசம்


பிஸ்மில்லாகிர் ரஹ்மானிர் ரஹீம்
அஸ்ஸலாமு அழைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ
என் அன்பு சகோதர சகோதரிகளே நாம் இன்ஷா அல்லாஹ் லுக்மான் அலை அவர்களது வாழ்க்கை வரலாறை காண்போம்

அல் குர்ஆனிலே ஸூரா லுக்மானில் லுக்மான் (அலை) தன் மகனிற்கு செய்யும் உபதேசம் ஒவ்வொறு பெற்றோர்களுக்கும் சிறந்ததோர் முன்மாதிரியாகும். இன்று பெற்றோர் தம் பிள்ளைகளை எவ்வாறு அனுகுகின்றார்கள்? தம் சிறார்களை அன்பாக அழைத்து அறிவுரை கூறுபவர்கள் மிகக்குறைவு. பிள்ளைகள் சிறியதோர் பிழை செய்தாலும் உடனே ஏசுபவர்கள்தான் அதிகம். இவ்வாரான பிழையான அனுகுமுறைகள் காரணமாகவே பிள்ளைகள் பெற்றோர்களை விட்டும் தூரமாகின்றனர்.

எங்கள் இரட்சகனே! அருள் இறங்கும் இந்நேரத்தில் கேட்கிறேன்.



الْحَمْدُ للَّهِ رَبِّ الْعَـلَمِينَ أَسْتَغْفِرُ اللَّهَ الْعَظِيمَ توكلت على الله
எங்கள் இரட்சகனே!
அருள் இறங்கும் இந்நேரத்தில் கேட்கிறேன்.

குழந்தை பாக்கியமில்லாதவர்
களுக்கு குழந்தை செல்வத்தை அருள்வாயாக!

உடல் நலம் குன்றியிருப்போர்க்கு
பூரண உடல் நலத்தைத் தருவாயாக!

அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வாயாக!

திருமணம் நடைபெறாமல் இருப்போர்க்கு நல்ல துணையைத் தந்தருள்வாயாக!

Saturday, May 2, 2020

அன்னையை இறுதிவரை காப்பது மகனா? மகளா? சிறப்புப் பட்டிமன்றம் - கவிஞர் புகா...

Magana Magala | Leoni Pattimandram | மகனா மகளா

நிஷா மன்சூர் was live.

https://www.facebook.com/nisha.mansur/videos/2041305762679997/
நிஷா மன்சூர் was live.

Feel the power of positive Thinking... That is the BIGGEST SECRET OF LIFE...!!!

வயது என்பதற்கு
எந்த வேலியுமில்லை..
Just numbers அவ்வளவுதான்...

வாழ்க்கையில் எல்லோரும் ஒன்றுதான்!

20 வயசுக்கு அப்புறம், வெளிநாடும்,
உள் நாடும் ஒண்ணு தான்.
எப்படி இருந்தாலும், எங்க இருந்தாலும்,
அட்ஜஸ்ட் பண்ண கத்துக்குவோம்.

30 வயசுக்கு அப்புறம், இரவும், பகலும்
ஒண்ணுதான்.கொஞ்ச நாள் தூங்கலன்னா கூட சமாளிச்சிட்டு
போக கத்துக்குவோம்.

Exclusive - Princess Hend Al #Qassimi Speaks To Smita Sharma (Twitter-@s...