Sunday, December 29, 2013

யார் இந்த நேருக்கு நேர் புகழ் வீரபாண்டியன்?

ஏறத்தாழ 30 ஆண்டுகள் ஊடகத்துறையில் அனுபவத்துடன் ,தன்னுடைய பெயரிற்கு ஏற்ப யாருக்கும் அஞ்சாது உண்மையை உரைக்கும் நெஞ்சுரம் கொண்ட இவரது தந்தை சுதந்திர போராட்ட வீரர் என்பதும் குறிப்பிடதக்க விசயம்

முஸ்லிம் சமுதாய இயக்கங்களை காட்சி ஊடகங்கள் புறக்கணித்திருந்த கால கட்டங்களில் சன் டிவியில் தான் நடத்தும் நேருக்கு நேர் நிகழ்ச்சின் மூலமாக சமுதாய தலைவர்கள் பலரையும் உலகிற்கு அடையாளம் காட்டியவர் தான் நடத்தும் நிகழ்ச்சியில் உண்மை மேலோங்கி இருக்க வேண்டுமென்பதில் மிகவும் கண்ணும் கருத்துமாய் செயல்படக்கூடியவர்


ம ம க துவக்க விழா மாநாட்டில் இவர் ஆற்றிய உரை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது அதிலும் குறிப்பாக நான் சொல்கிற இந்த முழக்கத்தை நீங்கள் அனைவரும் முழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டு ‘‘இந்தியா எங்கள் தாய்நாடு இஸ்லாம் எங்கள் வழிபாடு’’என அவர் கூற கூடியிருந்த ஆண்களும் பெண்களும் அதனை திருப்பி முழங்க தாம்பரம் ரயில்வே மைதானம் ஆர்பாரித்தது துவக்க காலம் தொட்டே இவர் மீது காழ்ப்புணர்ச்சியுடன் இருந்த, உண்மை வெளிக்கொணரப்படுவதை விரும்பாதவர்கள் ஒரு விவாத மேடையில் கலந்து கொண்ட தோழர். குமரேசன் அவர்கள் கோல்வார்க்காரின் பஞ்ச் ஆஃப் தாட்ஸ் பற்றி பேசவே அப்படி கூறபடவேயில்லை என இந்து சகோதரர்கள் தரப்பிலிருந்து வந்தவர் மறுக்க அப்புத்தகத்தின் தமிழாக்கத்தை நேயர்களுக்கு காட்டி யதால் வீரபாண்டியன் மீதான கோபம் இவரை விரும்பாதவர்களுக்கு மேலும் அதிகமானது இதற்கிடையில் சென்னையில் SDPI கருத்தரங்கில் கலந்து கொண்ட அவர் முஸ்லிம்களை நோக்கி அவருடைய மனதில் பட்ட சில கேள்விகளையும், கோரிக்கைகளையும் முன்வைத்தார்

ஒரு மனிதனின் தனிப்பட்ட கருத்திற்காக அவர் பணிபுரியும் இடத்தில் அவர் மீது புகார் செய்திருப்பதன் மூலம் , மதவாத சக்திகளின் மிரட்டல் மூலம் இவர் மீது தனிப்பட்ட தாக்குதல் பகிரங்கமாகவே வெளிப்பட்டிருக்கிறது இந்த மிரட்டலுக்கு இதற்கு சன் டிவியும் பணிந்துள்ள செயல் ஊடகத்தில் மத வாத சக்திகள் படு பயங்கரமாக கோலோச்சுவதை மேலும் உறுதிப்படுத்துகிறது...

தக்கலை கவுஸ் முஹம்மத்

No comments: