Friday, February 25, 2011

மனம் மகிழுங்கள் - 37 : முயற்சி திருவினையாக்கும்!

மனம் மகிழுங்கள்!
37 - முயற்சி திருவினையாக்கும்!
- நூருத்தீன்
சுறுசுறுப்பிற்கு எப்பொழுதுமே எறும்பை உதாரணமாகச் சொல்வோம். எறும்பு படு சுறுசுறுப்புதான். எதில் சுறுசுறுப்பு? தனக்கெனச் செய்து கொள்ள வேண்டிய வேலைகளில்! அதேபோல் புழு, பூச்சி, மிருகங்கள் என்று உலகிலுள்ள ஜீவராசிகள் அனைத்துமே ஏதோ ஒரு வேலையில் ஈடுபட்டவாறுதான் உள்ளன. சுறுசுறுப்போ, மெத்தனமோ ஏதோ ஒரு வேலை; அல்லது காரியம் - கூடு கட்டுதல், பசிக்கு இரை தேடுதல், தன் ஜோடியிடம் காதல், தேவைப்பட்டால் நீரில் 'சளக்'கென்று ஒரு குளியல். யாரும் சொல்லாமல், கட்டளையிடாமல், வற்புறுத்தாமல் தங்கள் வேலையைச் செய்து கொண்டே இருக்கின்றன. பிறகு நிம்மதியான உறக்கம்.
இதிலுள்ள அடிப்படைத் தத்துவம் நமக்கு முக்கியமானது. அது, ‘மகிழ்வாய் இருக்க வேண்டுமெனில் முயற்சியெடுத்துக் காரியமாற்றும் மனப்பக்குவம்.’

ஒரு காரியம் செய்ய வேண்டியிருக்கிறது. ‘அதற்கு மெனக்கெடணுமே’, ‘முயற்சி எடுக்கணுமே’ என்று தள்ளிப்போட்டால், செய்யத் தவறினால் என்னவாகும்? காரியம் ஆகாது. தவிர அது நம்மைப் பாதிக்கும்.

எளிமையான உதாரணம் ஒன்று: ஓரிரு நாட்களாய்க் காய்ச்சல். சுக்குக் கஷாயம், கை வைத்தியம் எதிலும் சரியாகவில்லை. என்ன செய்வது? எழுந்து சட்டையை மாட்டிக் கொண்டு, பை நிறையப் பணத்தை அடைத்துக் கொண்டு டாக்டரிடமும், அவருக்கே அவருக்கான பார்மஸிக்கும் செல்ல வேண்டும். அதெல்லாம் பிடிக்கவில்லை என்று தள்ளிப்போட்டாலோ, போக மறுத்தாலோ நிலைமை சீராகி விடுமோ? ஆகாது. பிரச்சினை நம்மை மேலும் பாதிக்கும்.

தேர்வு எழுத படிக்க வேண்டும். படகு ஓட்ட துடுப்புப் போட்டால்தான் நகரும்.

உடனே ‘மோட்டார் போட்?’ என்று வம்பு செய்யாதீர்கள். அதற்குப் பெட்ரோல் பங்க் சென்று டீசல் வாங்கி வைத்திருக்க வேண்டும். நீரை அள்ளி ஊற்றினாலெல்லாம் வேலைக்காவாது.

ஆக, எந்தவொரு காரியத்திற்கும் ஏதோ ஒருவகையிலான முயற்சி முக்கியம். அந்த முயற்சி சிறக்க நமது மனோபாவம் முக்கியம்.

ஒரு முயற்சி என்று இறங்கும்போது காரியம் நடைபெறுகிறது என்பது ஒரு விஷயம். அதனூடே மற்றும் சில நிகழ்கின்றன. முயற்சி நம்மைச் சோதிக்கும்; நம் திறனை நாம் பரீட்சித்துப் பார்க்க உதவும்; நமக்குப் பாடம் கற்பிக்கும்.

எப்படி என்கிறீர்களா? இல்லறம் என்றொரு முயற்சியில் இறங்குகிறீர்களில்லையா? இப்பொழுது யோசித்துப் பாருங்கள்.

எனவே ஒரு முயற்சியில் இறங்கும்போது அதை அனுபவிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு காரியத்தைச் செய்து முடிக்கவேண்டும் என்பதற்காக மட்டும் ஒரு முயற்சியில் இறங்கினால் அதில் மகிழ்விருக்காது. தவிர அம்முயற்சி ஏதேனும் காரணத்தால் கைகூடவில்லையெனில் மனம் சோர்ந்து போய்விடும்.

ஒரு விற்பனையாளன் தனது தொழில் நிமித்தமாய்ப் பலதரப்பட்ட மக்களைச் சந்திக்க முடிகிறது; பேச முடிகிறது; பழக முடிகிறது. மக்களைச் சந்தித்துப் பேசிப் பழகுவதால் ஏற்படும் அனுபவத்தை உணர்ந்து அவன் மகிழ்வுடன் தன் பணியைப் புரியும்போது அவனது மனம் உற்சாகமடைகிறது. அதனால் ஒரு நாள் குறிப்பிட்ட அளவிலான விற்பனை இல்லாது போனாலும் அவனது மனம் அதீதச் சோர்வடையாது; ஏமாற்றம் அடையாது.

ஈடுபடுவது எந்தக் காரியமாக இருந்தாலும் அதை அனுபவித்து உணர்ந்து மகிழ்வுடன் செய்யும்போது அந்த வேலையின் முடிவு இரண்டாம் பட்சமாகி ஏற்படும் திருப்தியும் மகிழ்வும் இருக்கிறதே அது முக்கியமானதாகிவிடுகிறது. இதைப் பொதுவாய் ஆங்கிலத்தில் job satisfaction என்போம். மனத்திருப்தியற்று ஒரு வேலையில் ஈடுபட்டால் அதில் லட்சலட்சமாய்ச் சம்பாதித்தாலும் மகிழ்வு தொலைந்து காணாமல் போய்விடும்.

"பணம்; பணம்" என்று நிற்காமல் கொள்ளாமல் ஓடிக்கொண்டே இருக்கிறோமே அது சொத்தைத் தரும். சுகத்தைத் தரும். மகிழ்வைத் தருமோ?

ஒரு செயலின் முடிவை மட்டுமே எண்ணி அளவுக்கதிகமாக அதில் கவனம் செலுத்தினால் நிகழ்காலத்தை அனுபவிக்க மறந்து விடுவோம். எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை மட்டுமே மனதில் ஓடி ஓடி, செய்து கொண்டிருக்கும் காரியத்தை, அந்த நிமிடத்தை, அந்த நொடியை உணர்ந்து மகிழ மறந்துவிடுவோம். ஏனெனில் மகிழ்வு என்பது ஏதோ ஓர் இடத்தில் ஏதோ ஒரு குறிப்பிட்ட தருணத்தில் என்று நமக்காகக் காத்திருப்பதில்லை.

எனவே முயற்சியின் இறுதியில் ஏற்படப் போகும் முடிவை நினைத்துப் பெரிதும் அலட்டிக்கொள்ளாமல் ஈடுபடும் முயற்சியை உணர்ந்து மகிழக் கற்றுக் கொண்டால் செய்யும் காரியம் தானாகவே இன்பமானதாக ஆகிவிடும்.

வாரம் முழுதும் மனைவி உங்களுக்குச் சமைத்துப் போடுகிறார். ஒரு ஞாயிற்றுக்கிழமை நீங்கள் அவருக்கு இன்ப அதிர்ச்சி தர முடிவு செய்கிறீர்கள். அவர் உறக்கத்திலிருந்து எழுவதற்கு முன் நீங்கள் எழுந்து, தலைக்குக் குளித்து, அடுக்களைக்குச் சென்று காலையுணவு சமைக்கிறீர்கள். சமையல் அனுபவம் இல்லாத நீங்கள் அன்று அபூர்வமாய் ஈடுபடும் முயற்சியில் அந்த அனுபவத்தை உணர்ந்து, மகிழ்ந்து லயிப்புடன் செய்ய முனைந்து பாருங்கள். அது மிகப்பெரும் மன மகிழ்வை உங்கள் மனதில் ஏற்படுத்தும்.

அதன்பின் உங்கள் மனைவி எழுந்துவந்து அந்த உணவைச் சாப்பிட்டுவிட்டுப் பாராட்டினால் அது போனஸ். இல்லையென்றால் பெரிய பிரச்சினையில்லை. நீஙகள் அதிகம் மனவருத்தம் அடையப் போவதில்லை. ஏனெனில் உங்கள் மனதில் அன்றைய சமையல் பணியை, அந்தப் புது முயற்சியை ரசிப்பதற்கு மனதைத் தயார்படுத்திவிட்டீர்கள். அதுவே உங்கள் மனதில் முக்கியத்துவம் பெற்றுவிட்டது.

மனத் திருப்திக்காக ஒரு காரியம் புரியும்போது, அதில் ஈடுபடும்போது, அம்முயற்சி தானே நல்ல முடிவை தேடித்தரும். முயற்சி திருவினையாக்கும் என்பது இயற்கையின் விதி. ஆயினும் ஏதேனும் காரணத்தால் முடிவுகள் தாமதமானாலோ, அல்லது நீங்கள் நினைத்ததைப்போல் காரியம் அமையவில்லை என்றாலோ, அது உங்கள மன அமைதியைக் குலைக்காது. காரியத்தில் உள்ளார்ந்து ஈடுபட்ட திருப்தி மனதில் பரவியிருக்க, முடிவு வரும்போது வரட்டும் என்று அடுத்த முயற்சியில் இறங்கிவிடுவீர்கள்.

எல்லாம் சரி! ஒரு காரியத்தை விரும்பி திருப்திகரமாகப் புரிவது எப்படி? அதை நீங்கள் மனதில் ஒரு தீர்மானமாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதுதான். வேறு வழியில்லை.

ஒரு சிந்தனையாளர் கூறினார், "மன மகிழ்வின் இரகசியம் என்ன விரும்புகிறோமோ அதைச் செய்வதில் இல்லை; எதைச் செய்ய நேரிடுகிறதோ அதை விரும்புவதில் உள்ளது."

னம் மகிழ, தொடருவோம்...
Source: http://www.inneram.com/2011022513781/manam37

Tuesday, February 22, 2011

உலகிலேயே மிகப் பெரிய வளமான குடும்பம்

இந்திய மிசாராமில்  பக்த்வாங் கிராமத்தில் உள்ள ஜியோன சனா தனது
39 மனைவிகளுடன் 94 பிள்ளளைகள் ,14  மறு மகள்கள், 33 பேர குழந்தைகலுடன் 100 -அறைகளுடன் கூடிய நான்கு மாடி கட்டிடத்தில் சிறப்பாக வாழ்ந்து வருகின்றார் .தான் மிகவும் கொடுத்து வைத்தவர் என அவர் பெருமை அடைகின்றார். Mr சனா சொல்வது "எனது பிரிவு மக்கள் அதிகமாக நான் அமரிக்கா வரை சென்று   இன்னும் திருமணம் செய்வேன்" என்று
  ஒரு உணவுக்கு 30 முழு  கோழிகள் தேவைப்படுமாம்.
Mr . சனாவின் மனைவியில்  ஒருவர் 35 வயதுடைய   ரின்க்மினி சொல்கிறார் அவர்தான் "இந்த கிராமத்திலேயே மிகவும் அழகானவர். நாங்கள் அனைவரும் மிகவும் ஒற்றுமையாக இருப்போம்"  என்று
 



mail from fazalmohamed mohamedshakir







Monday, February 21, 2011

சிரிப்புதான் வருகின்றது!



சிரிப்புதான் எத்தனை வகை!
மனதிற்கு எத்தகைய இதமளிக்கிறது என்பதைப் பெரும்பாலும் நாம் அனைவரும் இயற்கையாகவே உணர்ந்திருப்போம்
மகிழ்வான பிளந்த வாயுடன் சிரிப்பு
அரசியல் சிரிப்பு
சிந்தனையாளர் சிரிப்பு
சந்தர்ப்பவாதியின் சிரிப்பு
சிரிப்பதற்காகவே சிரிப்பு
நமுட்டுச் சிரிப்பு
அகம் மகிழ்ந்த சிரிப்பு
எப்படி வரும் நமக்கு சிரிப்பு! ஒட்டு போட்டவர் ஏமாந்த சிரிப்பு

Friday, February 18, 2011

மனம் மகிழுங்கள் - 36 : ஈடுபாடு!

மனம் மகிழுங்கள்!
36 - ஈடுபாடு!
- நூருத்தீன்
ஆங்கிலத்தில் commitment என்றொரு சொல் உண்டு. ஒரு செயலைப் பொறுப்பாய் மேற்கொள்ளுதல் என்று தமிழில் சொல்லலாம். வாழ்க்கையில் இது முக்கியம். எந்த செயல் புரிய முனைந்தாலும் அதை முழு ஈடுபாட்டுடன் பொறுப்பாய் நிறைவேற்றி முடிக்கும் மனோபாவம் வேண்டும். மனமிருந்தால் செய்வேன்; இல்லையெனில் 'என் வழி தனி வழி' என்றெல்லாம் ஒரு செயலில் இறங்கினால் அது இரண்டுங்கெட்டான் வழி.
ஈடுபாட்டுடன் செய்யப்படும் செயல்களே மன நிறைவளிக்கும்; மகிழ்வைத் தரும்.

திருமணம் புரிந்து கொள்கிறோம். எனக்கு மூடிருந்தால் கணவனுக்குரிய/மனைவிக்குரிய பொறுப்புகளை கவனிப்பேன்; மற்ற நேரத்தில் 'Please Do Not Disturb' என்று போர்டு மாட்டிக் கொள்ள முடியுமா? பிறகு குடும்பம் என்னாவது?

ஒருவர் எந்தப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளாமல் - commit ஆகாமல் - தயங்கித் தயங்கி நின்றால் எந்தச் செயலையும் அவரால் சாதிக்க முடியாது. ‘செய்யலாமா வேண்டாமா’ என்ற மனோபாவத்துடனேயே இருந்து கொண்டிருந்தால் உலகம் அவரை ‘ஸீரியஸாக’ எடுத்துக் கொள்ளாது.

“இந்தக் காரியத்தில் நான் இறங்கப் போகிறேன்; என்ன ஆனாலும் சரி செய்து முடிக்கப் போகிறேன்” என்று களத்தில் இறங்கிப் பாருங்கள். அதன்பிறகு நடைபெறுவது மாயம். மனதில் ஏற்படும் திடமான அந்த உறுதிமொழி நீங்கள் மேற்கொள்ளும் காரியத்தில் உங்களை முழு மனதுடன் ஈடுபட வைக்கும். பின்னர் எதிர்படும் தடங்கல்கள், பிரச்சனைகள் போன்றவற்றையெல்லாம் மனம் எதிர்கொள்ளும் விதமே தனி.

ஏனெனில் -

“எப்படியும் இந்த ஒலிம்பிக்ஸில் நான் தங்கப்பதக்கம் வாங்கியே தீருவேன்” என்று ஒருவர் முடிவெடுத்துவிட்டால், அதற்கடுத்து அவரது  செயல்பாடுகளெல்லாம் அதற்கான முயற்சிகள், பயிற்சிகள் என்று அவ்ர் சுவாசிப்பது அந்தத் தீர்மானமாகவே ஆகிவிடுகிறது. அதையே, “இந்த முறை தங்கப்பதக்கம் வாங்க முயல்வேன்” என்று சொல்லிப் பாருங்கள். மனம் தோல்விக்குப் பாதித் தயார்!

இரண்டு வாக்கியங்களையும் உச்சரித்துப் பார்த்தால் மன அதிர்விலேயே வித்தியாசம் தெரியும்.

இவ்விதி, அலுவலாகட்டும் தொழிலாகட்டும் தாம்பத்யமாகட்டும் அனைத்திற்கும் பொது.

ஆக, எந்த ஒரு காரியத்திற்கும் அதைப் பொறுப்பாய் மேற்கொண்டு முடிக்கும் ஈடுபாடு அவசியம். அது இன்றிக் குடும்பம் இல்லை; தொழில் இல்லை; அரசாங்கம் இல்லை.

சரி! இது அமைந்துவிட்டால் எல்லாமே இன்ப மயமா?

பொறுப்பான ஈடுபாடு மட்டுமே வெற்றியை அளிக்கும்; காரியம் சித்தியடைய உதவும் என்று நம்பினால் தப்பு.

ஏன் அப்படி?
சோதனை என்பதைப் பற்றி ஒருமுறை பார்த்தோம். சோதனைகள் வாழ்க்கையின் அங்கம். இப்புவியானது நீரால், ஆக்ஸிஜனால் மட்டும் நிரம்பியிருக்கவில்லை. பிரச்சினைகளும் சோதனைகளும் அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் வியாபித்து நிறைந்திருப்பதே இப்புவி.  அவற்றையெல்லாம் எதிர்கொள்ள வேண்டும்; கடக்க வேண்டும்.

மூச்சிரைக்க ஓடி எப்படியாவது வெற்றிக் கோட்டை நோக்கி மூக்கை நீட்டிவிட commitment எனப்படும் பொறுப்பான ஈடுபாடு இன்றியமையாதது. அப்படி இல்லையெனில் ‘ஆளை விடப்பா’ என்று தப்பித்து ஓடிவிடவே மனம் விரும்பும்.

எப்படியும் உடல் எடையைக் குறைத்தே தீருவது என்று முடிவெடுத்து ஈடுபாட்டுடன் உணவுக் கட்டுப்பாட்டுத் திட்டத்தில் இருந்து கொண்டிருப்பீர்கள். “இன்னுமா டயட் முடியலை. இந்த ஒருமுறை மட்டும் சாப்பிடு; ஒன்றும் ஆகிவிடாது” என்று நண்பரொருவர் உங்களது நாசியருகே அசல் நெய்யில் செய்த பால்கோவாவைக் கொண்டுவந்து நீட்டுவார். மகா சோதனையான அந்தச் சில நிமிடங்களை நாக்கை, நாசியை, விரலை கண்ணை மூடிக்கொண்டு கடந்து விட்டீர்கள் என்றால் போதும். ஆனால் எப்போதும் வாழ்க்கையில் சோதனைகளும் பிரச்சினைகளும் இந்தளவு எளிமையாய் அமைவதில்லை.

கொசுறாய் ஒரு நல்லது நடக்கும். யதார்த்தத்தில் மக்களிடம் ஒரு குணம் உண்டு. மெச்சத் தகுந்ததை மெச்சுவது.

கடும் மனப் போரட்டத்திற்குப் பின் பால்கோவாவை நிராகரித்தீர்களில்லையா, அதைக் கண்டு அந்த நண்பர் உங்கள் மனவுறுதியை மெச்சத் தயங்கப் போவதில்லை. அதற்கு நேர்மாறாய் அவர் நடந்து கொண்டால் அவரது நட்பை நீங்கள் மறுபரிசீலனை செய்யவேண்டியிருக்கும் என்பது வேறு விஷயம்.

மனைவி தன் கணவனை நேரெதிரில் என்ன வேண்டுமானாலும் பேசியிருக்கலாம். “சமைச்சு எல்லாம் தயாராத்தானே இருக்கு, எடுத்து வெச்சு சாப்பிடக்கூடவா தெரியாது.” ஆனால் நீங்கள் நினைத்தே பார்த்திருக்க மாட்டீர்கள்; உங்களது முதுகுக்குப் பின் “என்ன லேட்டானாலும் சரி; நான் பரிமாறாமல் அவர் சாப்பிட்டதே இலலை. அவருக்கு எல்லாமே நான் செஞ்சாத்தான் நடக்கும்.”

கூடுதல் குறைவு இருக்கலாம். மக்கள் மெச்சத் தகுந்ததை மெச்சவே செய்வார்கள்.

அடுத்து -

பொறுப்பாய் ஈடுபாட்டுடன் செயல்படுவேன் என்பதற்கு அர்த்தம் அனைத்துப் பணிகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வதோ, யார் எது கேட்டாலும் முடியாது என்று வாக்களிப்பதோ அன்று. அதெல்லாம் சில நாள், சில மாதம், அதிகம் போனால் ஓரிரு ஆண்டுகள் தாங்கும். அதன்பிறகு மனமும் உடலும் சோர்ந்து உங்களது காரியங்களை செய்து கொள்வதற்கே மனம் சுரத்தற்றுப் போகும்.

என்னென்ன காரியங்களில் பங்கெடுக்க முடியும், என்ன செயல்களெல்லாம் உங்களுக்குச் சாத்தியம் என்று தேர்ந்தேடுத்து என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதைத் திட்டமிட்டு அவற்றிற்கான பொறுப்பை மேற்கொள்வதே சிறந்தது. இல்லையெனில் மிஞ்சுவது தலைவலி மட்டுமே.

எந்தவொரு காரியத்திலும் ஈடுபடுமுன் தீர யோசியுங்கள். அதைச் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் பொறுப்பேற்றுக் கொண்டு முழு மனதுடன் ஈடுபட்டு நிறைவேற்றுங்கள்.

தினமும் பள்ளிக்கூடம் சென்றால்தான் கல்லூரி, பட்டம் என்று வெளியேற முடியும். மழைக்கு மட்டுமே ஒதுங்கினால் ஜலதோஷத்திலிருந்து மட்டுமே தப்பலாம்.
னம் மகிழ, தொடருவோம்...

Thursday, February 17, 2011

அய‌ல் நாட்டு ச‌ம்பாத்திய‌ம்....


அங்கோ அங்காடி ஊழியர்களின் அவநிலை. இங்கோ அரபுநாட்டில் ணிபுரியும் ஊழியர்களின் லை நிலை.

பாசமிகு குடும்பப்பெரியர்களின் இறப்பில் ங்கெடுக்கமுடியவில்லை.

உற்றார், உறவினர்களின் திருமத்தில் ந்து கொள்ளஇயவில்லை. அதற்கு காரணம் ஒன்றும் புரியவில்லை.

பாசத்துடன் குடும்பச்சுமை என்னும் வேசத்தையும் ஒரு சேரட்டி அனுப்பப்பட்டபொதிகள் நாங்கள்.

விடுமுறையில் மாதங்கள் வாரங்களாகும், வாரங்கள் நாட்களாகும். நாட்களெல்லாம் ணித்துளிகளாகிப்போகும். விடுமுறை கழித்து இங்கு வந்த பின் எல்லாம் தலைகீழாய் மாறிப்போகும்.

வெயிலோ றுத்தெடுக்கும்; குளிரோ டுங்கவைக்கும். பாலைவப்புயலோ ண்ணில் ண்ணை வாரி தூவும்.

அரணைக்கஇங்கு தாயுமில்லை, னைவியும் இல்லை. லையணை உண்டு.

பால் இருக்கும் இங்கு ம் இருக்கும். அதை வெட்டிக்கொடுக்கஆள் இருக்காது. ஞ்சணையில் குளிர் காற்றும் ரும், தூக்கமும் ரும். நம் ஏக்கம் தீராது.

கடும்காய்ச்சல் ரும் லைவலி ந்து இடையிடையே லையை தட்டும். ஆனால் ஒரு நாள் ம்பதுண்டிப்பு நினைவில் ந்து சகல நோயுக்கும் இலவசமாய் சிகிச்சை அளித்துச் செல்லும்.

ல் இருக்கும், ரையுமிருக்கும். ஆனால் சுண்டல் விற்காது. சுற்றிப்பார்த்தாலும் உள்ளச்சுகம் தீராது.

கார் இருக்கும் ம்பெனியில் ல்ல பெயர் இருக்கும் ஆனால் இவற்றின் சுவை காணம் ஊர் இருக்காது.

பெரும் றேதும் செய்யாமல் தம்மைத் தாமே நாடுகத்தினோம். அதிலே ஆனந்தமும் ண்டோம். சுதந்திரமாய் தாய் நாட்டில் சுற்றித்திரியந்து போனோம்.

இங்கு விளையாடந்ததிடல்கள் இருந்தும் விளையாடம் இல்லாமல் போனோம். அறையிலேயே முடங்கிப்போனோம். அதிலே போலி ஆனந்தம் ண்டோம்.

இங்கு மிளிரும் விளக்கில் ங்கிப்போனோம். பிள்ளைப்பாசத்தை ணியில் ட்டி வைத்தோம்.

ணிப்பொறி முன் அமர்ந்து கைதட்டிச்சிரித்தோம். வாரவிடுமுறையில் விழாக்கோலம் ண்டோம்.

குடும்பத்துடன் இருந்தாலும் குதூகத்தில் குறைகள் ண்டோம்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

-- மு.செ.மு. நெய்னா முஹம்மது.
Source : http://adirainirubar.blogspot.com/2011/02/blog-post_17.html
 

மனைவியை பிரிந்து வெளிநாடுகளில் வேலை செய்யலாமா … மனைவியை பிரிந்து வெளிநாடுகளில் வேலை செய்யலாமா ·