Thursday, June 30, 2011

Tanzil: தஞ்சில் குர்ஆன் நேவிகேட்டர் (குர்ஆன் - Alhamdulilah | வியப்பான இணையத்தளம்!)







அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி பரகாத்துஹு
Http://www.tanzil விஜயம் செய்யவும் தகவல்

 
அல் குர்ஆன்  ஓதுதல் (Recitations) & மொழிபெயர்ப்புகள் (ஆடியோ) பொறுத்தவரையில் ஒரு அற்புதமான வலைத்தளம் இதுகுறிப்பிடப்பட்டுள்ளது.  எந்த வரிசையில் சுட்டி வைக்க நீங்கள்மொழிபெயர்ப்பு காண்பீர்கள்.
அந்த வரி அல்லது நீங்கள் முழு சுரா விட்டு மூலையில் உள்ள பக்கம் மேலே உள்ள மொழிபெயர்ப்பு கிளிக் செய்யவும் முடியும்.
  இந்த வலைத்தளத்தில் இடது பக்க நீங்கள் சுரா (அனைத்து 114 சுரா இருந்து) தேர்ந்தெடுக்க முடியும்.

மேலும் நீங்கள் எந்த
ஆயத்தும் தேர்வு செய்யலாம், பக்கம் எண் தேடலாம்.

நீங்கள் யாருடைய பாராயணம் நீங்கள் கேட்க வேண்டும் Reciter தேர்ந்தெடுக்க முடியும்.

நீங்கள் மக்களுக்கு விநியோகிக்கவும்.
Tanzil : Quran Navigator


தயவு செய்து இங்கு கிளிக் செய்யுங்கள்Tanzil : Quran Navigator 



Please visit
http://www.tanzil. info 



Jazak'Allah Khair

அல் குர்ஆன் ஓதுதல் (Recitations) & மொழிபெயர்ப்புகள் (ஆடியோ) القرآن الكريم و ترجمة لمعانيه لعدة لغات مع الاستماع للتلاوة





அல் குர்ஆன்  ஓதுதல் (Recitations) & மொழிபெயர்ப்புகள் (ஆடியோ) பொறுத்தவரையில் القرآن الكريم و ترجمة لمعانيه لعدة لغات مع الاستماع للتلاوة
For  AL Quran Recitations & Translations (Audio)القرآن الكريم و ترجمة لمعانيه لعدة لغات مع
الاستماع للتلاوة

 தயவு செய்து இங்கு கிளிக் செய்யுங்கள் please click here : Quran Explorer – [Sura : 1, Verse : 1 - 7]

Wednesday, June 29, 2011

"Alija Izetbegovic; நாம் மறக்க மாட்டோம் "

போஸ்னியா, Srebrenica, .. இப்போது, அவர்கள் பற்றி எழுத ஒரு பிரச்சாரத்தை தொடங்கும் நினைவில் மாதம் "Alija Izetbegovic; நாம் மறக்க மாட்டேன்"
போஸ்னியா-ஹெர்ஜிகோவினா தலைவரான Alija Izetbegovic பதவி - 1990 முதல் 2000 வரை
Alija Izetbegović 1990 இல் போஸ்னியா மற்றும் ஹெர்ஸகோவினா முதல் தலைவராக ஆனார் ஒரு பெரிய போஸ்னிய ஆர்வலர், வழக்கறிஞர், ஆசிரியர், தத்துவ மற்றும் அரசியல், இருந்தது. இரண்டாம் உலக போரின் போது செர்பியன் செட்னிக்குகள் நாஜிக்கள் பக்கத்தில் போராடும் போது, Alija Izetbegović சட்டம் பள்ளி படிப்பை முடிக்கும் முன் டிட்டோ விரோத பாசிச பார்ட்டிசன்கள் இல் இரண்டாம் உலக போரின் ஆரம்பத்தில் அரை ஆண்டு வழங்கப்படுகின்றது. பின்னர் செர்பியர்களின் முன்னாள் யூகோஸ்லாவியா அழித்து மற்றும் முஸ்லீம் போஸ்னியர்கள் மற்றும் அல்பேனியர்கள் எதிரான இன உறுதியாக தெரிவிக்க நோக்கம் கொண்டு ஆட்சிக்கு வந்த போது அவன் அவர்களின் பாதுகாப்பு அவரது கடைசி ஆண்டுகள் கழித்தார்.
Yes, remember... This year they will do the 16th anniversary of Srebrenica in Turkey at Taqsim square.

Tuesday, June 28, 2011

எங்க ஊரு நல்ல ஊரு (இது தொடர் பதிவு)

எங்க ஊரு நல்ல ஊரு (இது தொடர் பதிவு): "
எங்க ஊரு நல்ல ஊரு” என்ற தலைப்பில் இருபத்தைந்து பதிவர்களை தேர்வு செய்து தொடர் பதிவெழுத அழைப்பு விடுத்து அதில் என்னையும் அன்பு சகோதரி ஸாதிகா அவர்களுக்கு முதலில் நன்றி கூறிக் கொள்கிறேன்.

தொடர் பதிவு எப்படி எதை எழுதவேண்டும் என்பதை இதோ ஸாதிகா கூறுகிறார்கள்

“பதிவர்கள் அவரவர்கள் சொந்த ஊர்,புகுந்த ஊர்,வாழ்ந்த ஊர்,புலம் பெயர்ந்த ஊர் மற்றும் நாடுகளில் உள்ள நிறைவான,குறைவான,போற்றத்தக்க,வெறுக்கத்தக்க,சுவாரஸ்யமான,சிறப்பான குணாதிசயங்களை எழுதிப்பகிர்ந்தால் அவ்வூர்களைப்பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களை அனைவரும் அறிந்து கொள்ளலாமே.”

இது நல்ல முயற்சி பல பதிவர்களிடமிருந்து பல ஊர்களைப் பற்றிய விபரங்கள் கிடைக்கும்.

,இதில் எனது ஊரைப்பற்றிய செய்திகளை நீங்களும் தெரிந்துக் கொள்ளுங்கள்.
Please click here : http://www.masjids.in/masjid/kiliyanur-jamia-masjid/
* கிளியனூர் எங்கு இருக்கிறது? எந்த கிளியனூர்? என்ற கேள்விகள் பலருக்கு தோன்றலாம். ஆம் இதே பெயரில் மூன்று கிளியனூர் இருக்கிறது. ஒன்று விழுப்புரம் பக்கமும், இன்னொன்று நன்னிலம் பக்கமும் இருக்கிறது. நான் பிறந்த கிளியனூர் தஞ்சை மாவட்டத்தின் கிழக்குப் பகுதி தற்போது நாகை மாவட்டத்திற்குள் ஐக்கியமாகி, மயிலாடுதுறையிலிருந்து (12 கீ.மீ) திருவாரூர் செல்லும் சாலை வழியாக சுந்தரப்பன் சாவடியிலிருந்து 4 கீ.மீ தூரம் உள்ளே சென்றால் பசுமைப் போர்வையை போர்த்தியதுபோல, சுற்றிலும் வயலும், தோப்புகளும் சூழ்ந்து அழகிய மாதிரி கிராமமாக பல ஆண்டுகளுக்கு முன்னே பெயர் பெற்றது கிளியனூர் வரலாறு.


* 1955 ஆம் ஆண்டிலேயே சுய தேவை பூர்த்தியில் தன்னிறைவு அடைந்த இந்திய கிராமங்களின் வரிசையில் தஞ்சை மாவட்டத்தில் முதலிடம் பெற்ற கிராமமாக “மாதிரி கிராமம்” என்ற சிறப்பை பெற்று அன்றைய முதல்வர் கர்மவீரர் காமராஜ் அவர்களின் கரங்களால் நேருவிருது வாங்கிய பெருமை எங்கள் கிளியனூருக்கு உண்டு.

* கிளியனூர் என்றாலே கொடைவள்ளல் S.A.அப்துல் மஜீதை (சீனா அனா) அவர்களை யாருமே மறக்க மாட்டார்கள். கிளியனூருக்கு மட்டுமல்ல தமிழகத்தில் பல ஊர்களுக்கு கல்வியிலும், பொருளாதாரத்திலும் வள்ளலாக திகழ்ந்தவர்கள். இன்று புகழ் பெற்ற டாக்டர் முஹம்மது ரிலா அவர்கள் இவருடைய பேரர் ஆவார்.

பிறந்து ஏழு நாட்களே ஆன குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை செய்து இந்த உலகத்தையே வியக்க வைத்தவர் டாக்டர் ரிலா.

தகவல் ஒலிபரப்பு முன்னாள் அமைச்சர் பிரமோத் மகாஜன் குண்டடிப்பட்டு கல்லீரல் பழுதுப்பட்டிருந்த போது சிகிச்சையளிக்க லண்டனிலிருந்து தனி விமானத்தில் மும்பை வந்தவர் டாக்டர் முஹம்மது ரிலா.
முன்னால் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாம் சந்திக்க விரும்பிய நபர் டாக்டர் முஹம்மது ரிலா. இவருடைய பரம்பரை எங்கள் ஊரைச் சார்ந்தவர்கள் என்பதில் எங்களுக்கு பெருமை.

பள்ளிவாசல் மினாராவிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம்


* நாகூர் ஹனிபா அவர்கள் பாடிய - “இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை” - என்ற இந்தப்பாடலை கேட்காத காதுகள் தமிழகத்தில் இருந்திருக்க முடியாது மதங்களை கடந்து இரசித்த இந்தப் பாடலை எழுதியவர் எங்கள் ஊரைச்சார்ந்த மரியாதைக்குரிய காலம் சென்ற கவிஞர் அப்துல்சலாம் அவர்கள் என்று குறிப்பிடுவதில் நான் பெருமைக் கொள்கிறேன்.

சவுதி நாட்டவர் துபாய் நைட் கிளப்பில்

சவுதி நாட்டவர் கடந்த வாரம் துபாய் நைட் கிளப்பில் 1 மில்லியன் ரியால்ஸ் செலவிட்டது ....

Saturday, June 25, 2011

மத்திய அரசின் உயர் பதவிகளில் கேரளத்தவர்களே கோலோச்சுவதன் காரணம் என்ன?


உயர் நீதிமன்றத் தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றம் போகுமளவுக்கு சமச்சீர் கல்வி மேல் ஜெயாவுக்கு என்ன கோபம்? - பாபு, கீழக்கரை.

கனிமொழி, கருணாநிதி எனும் இரு பெயர்கள்.

சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்தைக் கருப்பு எம்ஜிஆர் என்று யாரேனும் புகழ்ந்தால் முதல்வர் ஜெயலலிதாவின் ரியாக்சன் எப்படி இருக்கும்? - சுரேஷ்-கோபிச்செட்டி பாளையம்.

கருப்பு எம் ஜி ஆர் எனும் பெயர் விஜயகாந்துக்கு எப்படிப் பொருந்தும்?

சிவப்பு எம் ஜி ஆரையே தேவைக்கு மட்டும் புகழும் ஜெயலலிதாவின் முன் விஜயகாந்தைக் கருப்பு எம் ஜி ஆர் எனப் புகழ்ந்தால் ஜெயலலிதாவின் ரீ ஆக்ஷனுக்கு முன் ர ரக்களின் ரீ ஆக்ஷன் தொடங்கி விடும்.


மத்திய அரசின் உயர் பதவிகளில் கேரளாவைச் சேர்ந்தவர்கள்தான் இருக்க முடியும் என்பது போன்ற சூழல் நிலவுகிறதே! என்ன காரணம்? - சுரேஷ், மதுரை.
ஒரு வகையில் உன்மைதான்.

1970 வரை டெல்லியில் தமிழர்களின் ஆதிக்கம்தான் இருந்தது. மத்திய அரசின் அனைத்துத் துறைகளிலும் செயலர் இணை துணை உதவிச் செயலர்கள் எனத் தமிழர் நிரம்பி வழிந்தனர். திராவிடக் கட்சிகளின் கையில் தமிழ்நாட்டு ஆட்சி விழுந்த பின் கல்வித்தரம் குறைந்து தமிழர்கள் பின் தங்க வேண்டிய சூழல் எழுந்தது. கேரளக்காரர்கள் படித்து உயர் நிலையில் வருகின்றனர். கேரளத்தின் எம் பிக்கள் கட்சி வேறுபாடு பாராது டெல்லியில் லாபி செய்து தம் மாநிலத்தவரையே அனைத்து உயர் இடங்களிலும் நிரப்புகின்றனர். இதனால்தான் நீங்கள் வினவியுள்ளது நிகழ்கிறது.

பிள்ளை பெற்றவளைப் பார்த்து மலடி வயிற்றில் அடித்துக் கொண்ட கதிதான் தமிழ்நாட்டுக் கதை.

இதை மாற்ற நம்மால் முடியும்.

வளரும் தமிழ் இளைஞர்களை நன்கு பயிற்றுவித்து ஆட்சிப் பணித்தேர்வுகளில் முதலிடம் பெறச்செய்வதோடு டெல்லியில் பிடியை இறுக்கினால் நம்மாலும் முடியும்
.

தமிழில் குத்பாப் பிரசங்கம்

குத்பாப் பிரசங்கம்


தாவூத்ஷா காலத்தில் தமிழ் நாட்டில் பள்ளிவாசல்களில் குத்பாப் பிரசங்கம் அரபியில் நடந்தது. தமிழில் நடத்த வேண்டும் என்று அவர் போராடினார். தானே 54 குத்பா சொற்பொழிவுகளைத் தமிழில் எழுதி, நூலாக அச்சிட்டு வெளியிட்டார். “குத்பாப் பிரசங்கம்” என்ற அந்த நூல் பற்றிய விளம்பரம்:

“பள்ளிவாசல்களில் கூடியிருப்பவர்கள் குறட்டை விட்டுத் தூங்கிய போதிலும் அரபு மொழியிலேயே குத்பாவை ஓதி, அவர்களைத் தாலாட்டி மேலும் உறங்க வைத்தாலும் வைக்கலாமேயொழிய ஜும்ஆ பிரசங்கங்களைத் தாய்மொழியில் புரியக் கூடாது என்று தொண்டை கிழியக் கத்தித் திரிந்த முரடர்களின் காலம் அஸ்தமித்துப் போய்விட்டது.

Friday, June 24, 2011

திருக்குறள் இசைத்தட்டு (இலவச பதிறக்கம்)


திருக்குறள் இசைத்தட்டு (இலவச பதிறக்கம்)

திருக்குறள் இசைத்தமிழ்க் குறுவட்டினை இலவமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ள இந்த இணைப்பினைச் சொடுக்கவும்.
முனைவர்.இரா.குணசீலன்
தமிழ் விரிவுரையாளர்
கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி
திருச்செங்ககோடு
நாமக்கல் மாவட்டம்
தமிழ்நாடு
இந்தியா.
"

Wednesday, June 22, 2011

மருத்துவமனையால் ஏற்படும் தடுமாற்றம் !

 உடல் நலம் சரியில்லை, வியாதி வந்து விட்டது. வைத்தியம் செய்தாக வேண்டும் . வீட்டில் இருந்தால் என்ன செய்வது! .மருத்துவரை அணுக வேண்டும் மருத்துவமனை  போக வேண்டும் . பணம் செலவுதான்  ஆகும் .மருத்துவர் சொல்லும் நியாயமான  டெஸ்ட் செய்தாக வேண்டும்.  ஆனால் டாக்டர் எடுக்கச்  சொல்லும் டெஸ்டிலேயே (எக்ஸ்ரே,  CT scans,MRI scans, மற்றும் பல) புது வியாதியும்  வந்து கடனாளியாகவும் ஆக வேண்டியதுதான் .

  மருத்துவ தொழில் சேவை செய்யும் தொழிலாக இருந்தது  போய் வியாபாரமாக மாறிவிட்டது .
இங்கு  சுட்டிப் பாருங்கள் .Read more and know the real examples...

Google translate கூகுளின் தமிழ் சேவை

 அன்பின் தமிழ் நெஞ்சங்களே!

ணினித்துறையில் தமிழர்கள் பலர் இருந்தும் அதிலும் குறிப்பாக Microsoft நிறுவனத்தில் தமிழர்களின் ஆதிக்கம் அதிகமிருந்தும் இதுவரை கூகிள் தமிழில் மொழிபெயர்ப்பு வெளியிடாமல் இருந்தது ஆச்சிரியமாகவே இருந்தது, அந்தக்குறையை கூகிள் நிறுவனம் இன்று பூர்த்தி செய்துள்ளது.

ஆங்கிலம், அரபி, ஹிந்தி, உருது போன்ற பல மொழிகளில் உள்ள வலைத்தளங்கள், மற்றும் செய்திகளை ஒரே கிளிக்கில் தெரிந்து கொள்ள இது ஏதுவாக அமையும்.

அதற்கான சுட்டி:


ஆங்கிலம் மற்றும் அரபியில் மொழிமாற்றம் செய்யப்பட்டதின் நகல் இத்துடன் இனைத்துள்ளேன்.
 

by mail from ஹாஜா மொஹைதீன்

Monday, June 20, 2011

டாட் காம் (.COM) ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி!

1980 ஆம் ஆண்டுகளில் அறிமுகமான இணைய தள பெயர்களை தனியாக அடையாளப்படுத்த அவற்றின் இணைய முகவரியின் இறுதியில் .com அல்லது .net மற்றும் .org என்ற மூன்று பெரும்பிரிவுகளாக வகைப்படுத்தி இருந்தனர்.பிறகு 2000 ஆண்டின் தொடக்கத்தில் இணைய தளங்களின் எண்ணிக்கை அசுர வளர்ச்சியடைந்ததால், அவற்றின் பின்னொட்டு (Suffix) அடையாளங்களில் மேலும் சில வகைகளை அறிமுகப்படுத்தினர். குறிப்பாக .cc, .co போன்றவற்றைச் சொல்லலாம்.

மென்மேலும் வளர்ச்சியடைந்த இணையத்தில், முகவரிகளில் நாடுகளின் பெயர்களையும் .in, .us, .de மற்றும் .info, .biz என ஏழுவகைகளுடன் மொத்தம் முன்னூறு வகைப்படுத்தி,இணைய தேடல்வசதி எளிமையாக்கப்பட்டது உலகின் அனேக நாடுகள் தனித்தனி வழங்கிகளில் இணைய சேவையைத் செயல்படுத்தத் தொடங்கிய பின்னர் மேலும் வகைப்படுத்த வேண்டிய தேவை எழுந்ததால் Internet Corporation for Assigned Names and Numbers (ICANN) என்ற அமைப்பு மேலும்சில புதிய வகைப் பிரிவுகளை அறிமுகம் செய்ய வேண்டி உருவாக்கப்பட்டது.

Sunday, June 19, 2011

தினமும் தாய் தந்தையர் தினமாக கொண்டாடுவோம் !

 தந்தையர் தினம் ஜூன் மாதத்தில்  தந்தையர்களை கெளரவிப்பதற்காக கொண்டாப்படும் ஒரு நாளாகும். அமெரிக்காவில் தோன்றியது இந்த  தந்தையர் தினம்.
தமிழ்நாட்டில் “அப்பா” என்று  அன்பாக தனது தந்தையரை அழைப்பார்கள். நல்லவேளை இதற்கென விடுமுறை இருந்து காலத்தினை வீணாக்கவில்லை. தனது தந்தையரை தமிழ்நாட்டில் முஸ்லிம்கள் அத்தா  என்று அழைப்பார்கள். அத்தா என்பதும் தமிழ் சொல்தான்.

அத்தா என்பது பழந்தமிழ்ச் சொல்

.   அத்தன் என்பதுதான் அத்தா என்று அழைக்கப்படுகிறது. அத்தன் என்றால் தகப்பன் என்று பொருள்.   பழைய இலக்கியங்களில் அத்தா என்ற சொல்லை நிறைய இடங்களில் காணலாம்.   அத்தா அச்சன் முத்தன் அப்பா என்பதெல்லாம் தகப்பன் என்பதனையே குறிக்கும்.   "அத்தா இது கேள் என ஆரியன் கூறுவான்" கம்பராமாயணம்.   "அத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே" தேவாரம். -    
அன்புடன் புகாரி  

 அம்மா அப்பா இருவரும் நாம் வர வழி வகுத்தவர்கள் . ஆனால் அம்மாவுக்கு நாம் முதல் இடம்  தருவது இயல்பு . காரணம் அவள் பாசத்திற்காக ஏங்குபவள். தகப்பன் கெட்டலைந்து தாய் அவதிகுள்ளாகிய நிலை கண்ட பையன் மனமுருகி தாய்  மீது வைத்துள்ள பாசம் அவனை செம்மையாகவும்  சிறப்பாகவும் வளர வைக்கின்றது, அதே நேரத்தில் தாய் கெட்டவளாக இருந்துவிட்டால் தகப்பன் எவ்வளவு உயர்ந்தவனாக இருந்தாலும் அந்த குடும்பம் நன்றாக அமையாது. நாம் காட்டும்  பாசம், அன்பு,இறக்கம் மற்ற அனைத்தும்   தாய்  தந்தையர் இருவரிடமும் மேலோங்கி நிற்க விரும்புவோம் . ஆதலால் தாய் தந்தையர் தினத்தினை பிளவுபடுத்தாமல் தினமும் தாய் தந்தையர் தினமாக கொண்டாடுவோம். அவர்களுக்காக எப்பொழுதும் இறைவனிடம் பிரார்த்திப்போம்,நாம் நன்றாக் இருக்க பெற்றோர்களின் பிரார்த்தனையை   வேண்டி நிற்போம்  

Saturday, June 18, 2011

செக்ஸ் கல்விக்காகவே தனிக்கல்லூரி நிறுவினால் என்ன?





தண்ணீருக்கு அடியில் கண்ணீர் விட முடியுமா...? - சீதா, நாகர்கோவில்.

முடியும்; ஆனால் அது நீரில் கலந்து விடுவதால் வெளியே தெரிவதில்லை.


ஸ்பெக்ட்ரம் ஊழலில் கைதாகிச் சிறையில் இருக்கும் ராசா அனுபவிக்கும் வசதிகளைப் படித்தால் அவர் கைதி மாதிரியே தெரியவில்லையே? எல்லா அரசியல் கைதிகளுக்கும் இம்மாதிரி வசதிகள் கிடைக்குமா? - ப.கோ. வசீகரன்.

கொலைக்குற்றத்தில் கைது செய்யப்பட்ட சங்கராச்சாரி சிறையில் அனுபவிக்காத வசதிகளா?

ராசா அரசியல் கைதி அல்லர்.  முறைகேட்டில் ஈடுபட்டு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய வழக்கில் இப்போது விசாரணைக் கைதி;  குற்றம் நிரூபிக்கப்பட்ட தண்டனைக் கைதி அல்லர்.

நாடாளுமன்ற உறுப்பினர் என்ற தகுதியில் முதல் வகுப்பில் அவர் இவ்வசதிகளைப் பெறுகிறார். முதல் வகுப்புத் தகுதி பெற்ற கைதிகளுக்கு இவ்வசதி சட்டப்படி கிடைக்கும். ஆனால் பீகார் போன்ற மாநிலங்களில் கொலைக் குற்றத்துக்குத் தண்டனை பெற்ற கைதிகளும் தாதாக்களும்  ராசா பெறுவதை விட அதிக வசதிகளைப் பெறுகின்றனரே... இதற்கு என்ன சொல்ல?.

பாடத்தில் செக்ஸ் கல்வி அவசியம் என்கிறார்களே, செக்ஸ் கல்விக்காகவே தனிக்கல்லூரி நிறுவினால் என்ன? - சபாபதி, சேலம்.
நல்ல ஆள்தாம் போங்கள். 

உங்கள் வினாவிலேயே "பாடத்தில் செக்ஸ் கல்வி" என்றுதான் வினவியுள்ளீர்கள். கலைக்கல்லூரியில் பட்டப் படிப்புக்குத் தேர்ந்தெடுக்கும் பொருளியல், வணிகவியல், வேதியியல், இயற்பியல், கணிதவியல் போன்ற சிறப்புப் பாடத்துக்கே தனிக்கல்லூரி நிறுவுவதில்லை. மற்ற பாடங்களுடனே அதைக் கற்பிப்பர். அதுபோல்தான் செக்ஸ் கல்வியும். மருத்துவம், பொறியியல் போன்ற வருவாய் ஈட்டும் தொழிற்கல்விகளுக்கே தனிக்கல்லூரி.. 

செக்ஸ் என்ன வருவாய் ஈட்டும் தொழிலா?.

நாய்களுக்காக விற்கப்படும் உணவில் புதிய சுவைகூட்டப்பட்ட உணவு என்று விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது, அதை எப்படி சோதித்து தெரிந்து கொள்வது? - ராஜன், மதுரை.

நீங்கள் சுவைக்க வேண்டாம். உங்கள் நாய் வெளிப்படுத்தும் மகிழ்ச்சியில் அறிந்து கொள்ளலாம்.


காப்பிரைட் சின்னத்தை யார் காப்பிரைட் செய்துள்ளார்கள்? - ஜோஸ், சென்னை.

யாரும் இல்லை. எனவே அதை நீங்கள் பயன்படுத்தத் தடை இல்லை.

Wednesday, June 15, 2011

வாழ்வு முற்றுப் பெறுவதற்கு முன் மகிழ்வாக இருக்க வழி

உங்களில் சிறந்தவர் யாரெனில், கல்வியைக் கற்பவரும், அதனைப் பிறருக்குக் கற்றுக் கொடுப்பவருமே என்றார்கள் இறைத்தூதர் (ஸல்).
வாழ்வு முற்றுப் பெறுவதற்கு  முன் நாம் ஏதாவது நற்காரியங்களை செய்தாக வேண்டும் . அதற்கு பல வழிகள் இருப்பினும் நாம் பெற்ற அறிவினை, அனுபவத்தை மற்றவர்க்கு  கொடுத்துச் செல்வது சிறப்பானதாகும். உங்களுக்குக் கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்த தற்காலத்தில் ஒரு சிறந்த வழி இணைவழியாக (கம்யூட்டர்) தற்பொழுது உள்ளது.
அதிலும் முதியோர்கள்  மிகவும் பயன் பெறலாம் . வயது வந்த பின் கல்வி கற்றோர் தம் காலத்தினை தமக்கும் மற்றோருக்கும் பயன் பெறும் வகையில் இதனை பயன்படுத்தி மன நிறைவு அடையலாம்.
அதற்கு உங்களுக்கென்று ஒரு வலைப்பூவினை உருவாக்கிக் கொள்ளுங்கள், இது உங்களுக்கு உற்சாகத்தினைத் தரும். பின்பு உங்களுக்கு காலம் போகாமல் தவித்த எண்ணம் போய் காலம் மகிழ்வாகக் கழியும்.உள்ளம் மகிழ்வடையும்.நாம் நல்ல காரியத்தில் செயல் படுகின்றோம் என்ற ஆத்ம திருப்தியடையும்.
இணையதளம் தொடங்க பணம் செலவு செய்ய தேவையில்லை.   ப்ளாக்கர்

Blogger: Create your free Blog

www.blogger.com   மற்றும் வோர்ட்பிரஸ் இவைகள் உங்களுக்கு உதவும். செயல்பட   சில வீ டியோ பாருங்கள் , மற்றும் இதற்கு உதவியாக பல வலைப்பூக்கள் இருகின்றன. அதில் ஒன்று  ப்ளாக்கர் நண்பன்


 பாஸித்தின் "ப்ளாக்கர் நண்பன்" வலைப்பூ பூத்த விதம் ...






நண்பர்கள் மனம் வீசும் மலர்கள்

கண்களுக்கு ஒளி எப்படி அவசியமோ, சுவாசப்பைக்கு காற்று எப்படி தேவையாக இருக்கிறதோ, இதயத்துக்கு அன்பு எப்படி வேண்டப்படுகிறதோ அது போன்று தான் மனித நேயத்துக்கு நண்பர்கள்  இன்றியமையாதவர்களாக இருக்கிறார்கள். 

அன்பு (முஹப்பத்), நேசம் (மவத்தத்) போன்ற சொற்கள் திருக் குர் ஆனில் பல தடவைகள் பயன் படுத்தப் பட்டுள்ளன. இறைவனே கருணையாளனாகவும் (ரஹ்மான்), அன்புள்ளவனாகவும் (ரஹீம்) தான் இருக்கின்றான். நிச்சயமாக உங்களுக்கு உற்ற நண்பர்கள்; அல்லாஹ்வும், அவனுடைய தூதரும்;. எவர் ஈமான் கொண்டு, தொழுகையைக் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து, (அல்லாஹ்வின் கட்டளைக்கு எந்நேரமும்) தலைசாய்த்தும் வருகிறார்களோ அவர்கள்தாம். (அல்-குர்ஆன் 5:55)

 இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;. நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்;. அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்;. நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து, அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்;. இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்.(அல்-குர்ஆன் 3:103)

நட்பு -திருக்குறள்   முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு. மு.வ உரை:
முகம் மட்டும் மலரும் படியா நட்பு செய்வது நட்பு அன்று, நெஞ்சமும் மலரும் படியாக உள்ளன்பு கொண்டு நட்பு செய்வதே நட்பு ஆகும்.
திரு.பரிமேலழகர் உரை முகம்நக நட்பது நட்பு அன்று - கண்டவழி அகமொழிய முகமாத்திரமே மலரும் வகை நட்குமது நட்பாகாது; நெஞ்சத்து அகம் நக நட்பது நட்பு - அன்பால் அகமும் மலர நட்குமதே நட்பாவது. (நெஞ்சின்கண் நிகழ்வதனை 'நெஞ்சு' என்றார்.இறந்தது தழீஇய எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. இதனான் இரண்டும் ஒருங்கே மலர வேண்டும் என்பது பெற்றாம்.)

Saturday, June 11, 2011

முதுமையும் ! இளமையும் !

முதுமை மறதிக்கு இடம் கொடுக்கும் . தனக்கு இழைக்கப்பட்ட தீமையும் மறந்து நிற்கும்.
இளமை நினைவாற்றலை நிலை நிறுத்த முயலும் . தனக்கு இடையூறாக இருப்பவரை நினைவுபடுத்தி ஓரம் கட்டும்
முதுமை சிதைவடையும் மனமாக மாற வாய்புண்டு .  சிதையும் மனதிற்கு இடம் தராது (காதல் வந்து மறுக்கப்பட்டால்! வெல்லும் அல்லது விழும் )
முதுமை மனவியின் மீது வைக்கும் பாசம் தியாக வாழ்வின் வழி வந்தது . இளமை  மனவியின் மீது வைக்கும் அன்பு ஆசையினால் வந்தது.
முதுமை உண்மையின் உறைவிடம் . இளமை பண்மையின் பிறப்பிடம்.
முதுமை ஓரிடத்தில் ஒன்றி நிற்கும் . இளமை பேரிடம் நாடி ஓடும்
முதுமை இறையருள் நாடி நிற்கும் .  இளமை பறை சாற்றும் புகழ் நாடும்
முதுமை வாழ்ந்த வாழ்வினை அசைபோடும் .இளமை நினைத்தது நடக்க நடை போடும்

பழம் இனிக்கும் .காய் கசக்கும் .முதிர்ச்சி அனுபவத்தின் ஆழம். முதுமை பாசத்தின் பண்பு . இளமை அவசரத்தின் கோலம். கண்டதை விழுங்கும் வேட்கை . துடிப்பின் வேகம் தடுமாற்றத்தின் காட்சி .
முதுமை சரித்திம் பேசும். இளமை விஞ்ஜானம் சொல்லும் .
முதுமை முன்னேற்றம் நாடாது இருப்பதனை பாதுகாக்க நாடும். இளமை புதுமையினை நாடி பல வழிகளில் செயல்பட முயலும்.முதுமையில் நிதானம் வந்தடையும் . இளமையில் வேகம் மேலோங்கும்.
முதுமை பதுமையல்ல அது பாதுகாவலன் . இளமையின் வேகம் வேதனையிலும் முடிய வாய்ப்புண்டு.
முதுமையில் வரும் வேதனை தாங்கும் சக்தியுடையதல்ல. இளமையில் வரும் சோதனை எதையும் தாங்கும் இதயம் கொண்டது.
தவிர்க்கமுடியாத மாற்றம் முதுமை. முதுமைக்கு இளமையில்லை. இளமைக்கும் முதுமையுண்டு. என்றும் இளமை என்பது பேதமை
இளம் வீரர்களே முதியோரிடம் பரிவு காட்டுங்கள்.
இப்பொழுதே  முதியோரிடம் பாசத்தைக் காட்டுங்கள், பரிவைக் காட்டுங்கள்,கனிவு காட்டுங்கள், அன்பாகப் பேசுகள்,இறையருள் பெற்றிடுங்கள் இறைப் பொருத்தத்தை பெற்றிடுங்கள்

“முதுமை வந்து கூன் விழுமோ   
மூன்றுகால் நடை வாய்த்திடுமோ

புதுமை உலகம் கேலி செய்யுமொ

என்று வரும் எனக்கு அழைப்பு – அங்கு
சென்று விடத்தான் நினைப்பு”
நீடூர் சயீது தனது மரணத்துக்கு இரண்டு நாள் முன்  எழுதிய  கவிதை.

Thursday, June 9, 2011

மயங்க வைக்கும் (ராஜ) மாளிகை கண்டு மயக்கம் வேண்டாம் !

காணி நிலம் வேண்டும் - பராசக்தி
காணி நிலம் வேண்டும், - அங்கு
தூணில் அழகியதாய் - நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் - அந்தக்
காணி நிலத்தினிடையே - ஓர்மாளிகை
கட்டித் தரவேண்டும் -
பாரதியார் பாடல் நினைவுக்கு வரும். அவர் நல்ல மனதோடு அனைவருக்கும் மாளிகை கேட்டார். அது நமக்கு கிடைக்குமோ! கிடைக்காதோ! குறைந்தது குடிசை மாற்று வாரியம் வழங்கும் வீடு கிடைத்தால் போதும் என்ற மனதோடு இருந்தால் எப்படி?
இருக்க ஒரு வீடு தேவை. இந்தியா ஏழை  நாடு,அதனால் குடிசை போதும் . ஆனால் ஒரு சிலர் இருக்கும் ஆடம்பர பங்களா நம் கண்ணில் பட்டால் அதற்காக நாம்  பொறாமை படாமல் இருப்பது உயர்ந்த உள்ளம். 
எல்லாம் இனாம் கிடைக்கும் காலம் வந்தாச்சு . அதனால் ஒரு காலம் வந்து ஓர்மாளிகையும் இனாமாக கிடைக்கலாம் ( "காணி நிலத்தினிடையே - ஓர்மாளிகைகட்டித் தரவேண்டும்" )அதுவரை பொறுமையாக இருந்து ராஜாவாக வாழ ஆசைப் பட்டால் அவதி வந்து வீடே வேண்டாம் எனறு மனம் மாறாமல் இருக்க படக் காட்சி கண்டு மகிழ்வோம்.
(உங்கள் ஆசை எப்படி ! ? வோட்டு போட்டால் போதுமா !)