Friday, December 20, 2013

கடல் கண்டேன்


கடல் கண்டேன்
அலைபோல் ஆர்ப்பரிக்கும்
மனம் கொண்டேன்

கடல் கண்டேன்
கடல் ஆழம் போல்
சிந்தனை கொண்டேன்

கடல் கண்டேன்
வருவதை உள்வாங்கும்
திறன் கொண்டேன்

கடல் கண்டேன்
ஒவ்வாததை வெளியேற்றும்
வழி கண்டேன்

கடல் கண்டேன்
பரந்து விரியும்
பார்வை பெற்றேன்

கடல் கண்டேன்
வானத்தை பிரதிபலிக்க
கற்றுக் கொண்டேன்

கடல் கண்டேன்
பிரிவன இணையக்
கண்டேன்

கடல் கண்டேன்
வரையறுத்த எல்கைக்குள்
கட்டுப்பட்டேன்

கடல் கண்டேன்
கடலைப் படைத்த
மகா பெரியோனைக் கண்டேன்

கவிதை யாத்தவர் Abdul Kader Sangam

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன்...

Abdul Kader Sangam அவர்களுக்கு வாழ்த்துக்கள்...