Thursday, November 14, 2013

வில்லும் அம்பும் – கலீல் ஜிப்ரான்


உங்கள் குழந்தைகள்
உங்களுடையவர்கள் அல்லர்
அவர்களே வாழ்வும், வாழ்வின் அர்த்தங்களும் ஆவர்.

அவர்கள் உங்கள் வழியாக வருகிறார்களேயன்றி
உங்களிடமிருந்து அல்ல

உங்களுடன் இருந்தாலும் அவர்கள்
உங்களுக்கு உரியவர்களல்லர்.


அவர்களுக்கு உங்கள் அன்பைத் தரலாம்; …
எண்ணங்களை அல்ல.
அவர்களுக்கென்று சுய சிந்தனைகள் உண்டு.

அவர்களுடைய உடல்களை
நீங்கள் சிறைப் படுத்தலாம்;
ஆன்மாக்களை அல்ல.

கனவிலும் நீங்கள் நுழைய முடியாத
எதிர்காலக் கூட்டில்
அவர்களது ஆன்மாக்கள் வசிக்கின்றன.

நீங்கள் அவர்களாக முயலலாம் ;
அவர்களை உங்களைப்போல
உருவாக்க முயலாதீர்கள்.

வாழ்க்கை பின்னோக்கிச் செல்வதோ,
நேற்றுடன் தங்கிப் போவதோ இல்லை.

உயிர் கொண்ட அம்புகளாய்
உங்கள் குழந்தைகளும்,
விரைந்து செலுத்தும் வில்லாய்
நீங்களும் இருக்கிறீர்கள்.

வில்லாளியானவர்,
முடிவில்லாத பாதையின் இலக்கை நோக்கி
தன்னுடைய அம்புகள்
துரிதமாகவும் , தூரமாகவும் செல்லும் வண்ணம்
உங்களை வளைக்கிறார்.

அவர் கைகளில் உங்களின் வளைவு
மகிழ்வுக்கு உரியதாக இருக்கட்டும்.
ஏனெனில்,
பறக்கும் அம்புகளை மட்டுமல்ல………..
நிலைத்து நிற்கும் வில்லையும் அவர் நேசிக்கிறார்.

-கலீல் ஜிப்ரான்


தகவல் தந்தவர் நிசா மன்சூர்
Nisha Mansur

2 comments:

நிஷா மன்சூர் said...

பகிர்வுக்கும்
பதிவிற்கும்
நன்றி

நிஷா மன்சூர் said...

பதிவுக்கும்
பகிர்வுக்கும்
நன்றி,

என் படத்தைப் பதிந்ததற்கும் கூடுதல் நன்றிகள்..;)