Monday, November 18, 2013

எழுதியதை எங்கே தூவுவது


எழுதியெழுதி வரிகளை
எனக்குள் இருத்தி வைத்தேன்
வைக்குமிடம் நிரம்பிப் போனது
எழுதியதை சொல்லிக் கேட்பதற்கும் ஆளில்லை
எழுதியதை பெற்றுச் செல்வதற்கும் ஆளில்லை
எழுதியதை கிழித்து தூவவும் மனமில்லை
எழுதியதை நிறுத்தி சிந்தித்தேன்
எழுதியதை நிரப்பி வைக்க இடம் கிடைத்தது
எழுதுவதையெல்லாம் குறை காணாமல்
பெருமனதோடு பெற்றுக் கொள்ளுமிடம் கண்டு கொண்டேன்
பெருமனதோடு முகநூல் பெற்றுக் கொண்டது

No comments: