Wednesday, November 6, 2013

இந்தக் கவிதையை எங்கே பதிவது?

அன்பின் கவிதை இரசிகர்களே!

இந்தப் படத்தைப் பார்த்ததும் உடனே யான் யாத்த வெண்பா இதுவாகும்.

தென்றல் முகர்ந்ததால் தேன்மலர் மொட்டவிழும்
உன்றன் கணவர் உரசியதால் மேனியெங்கும்
சென்று உணர்வும் சிலிர்த்திடும் காமனை
வென்று படுக்கையில் வீழ்த்து.


இதனைத் தொடர்ந்து எழுதவும் முடியும்; ஆயினும், எங்கே பதிவது? சொந்த வலைத்தளத்திலும் ஊடுருவி “விரசம்” என்றெல்லாம் பின்னூட்டமிட்டு விடுவார்களோ? என்ற அச்சம். எனவே, கவிதை இரசிகர்களாகவும், கவிஞர்களாகவும் இருக்கின்ற உங்களின் பார்வைக்கு அனுப்புகின்றேன். நீங்கள் இரசிப்பதாக இருந்தால் தொடர்ந்து மீதமுள்ளவற்றையும் யாத்து அனுப்புவேன்.

மிக்க நன்றி.
அன்புடன்,
கவியன்பன் கலாம்
ABUL KALAM BIN SHAICK ABDUL KADER

No comments: