
வண்ணமல்லியே வசந்தமல்லியே
வாசம்வீசிடும் வசியக்காரியே
வெள்ளைமேனியில் பச்சை பாவாடை
அணிந்திருக்கும் நீ அழகுதேவதை
உன்பட்டுதேகத்தை
தொட்டுத்தொடுக்கையில்
எந்தன் விரல்களும்
வீணைமீட்டுதே
தொடுத்து முடித்ததும்
தலையில் வைக்கயில்
வாசம் வீசியே
சரங்களும் சரசம்பாடுதே
கொடியில் பூத்து
நீ
கொள்ளை கொள்கிறாய்
கூந்தல் ஏறியே
பலரின்
உறக்கம் கொல்கிறாய்
மணத்தைப்பரப்பியே
மயக்கவைப்பியே
மணப் பந்தலையும்
அலங்கரிப்பியே
சின்னமல்லியே உனக்கொரு
சேதி தெரியுமா
எந்தன் மன்னவன்
உன்னில் மயங்கவில்லையே
நானிருக்கையில்
அவனுக்கு
நீ எதற்கடி
என்கூந்தலுக்குள்
நீ ஒளிந்துகொள்ளடி....
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்
Thanks to http://niroodai.blogspot.com
U9WDWV47RSV3
No comments:
Post a Comment