Friday, January 15, 2010

பரண்

அப்பா காலம்வரை
கட்டப்பட்ட
அத்தனை வீடுகளிலும்
அறைகள் இருந்தனவோ
இல்லையோ?
நிச்சயமாய்
பரண்கள் இருந்தன!

பழையன கழிந்தனவோ
இல்லையோ?
கண்டிப்பாய்
பரண் ஏறின!

ஓவ்வொரு வருடமும்
போகிக்குப் பரண்கள்
ஓழுங்குபடுத்தப்படும்!

என்றேனும் ஓருநாள்
தேவைப்படும் என்று
பரண் ஏறிய பொருட்கள்
சீனியாரிட்டி அடிப்படையில்
சீக்கிரமாய் விடைபெறும்!

சம்பளம் சற்று
அதிகமானவுடன்
பூர்வீக வீட்டை
இடித்துவிட்டு
மார்டனாய்
அமைந்ததென் புதுவீடு!

எக்சேஞ்ச் மேளாவில்
பொருள்மாற்றம்
நடப்பதால்
பொருட்களோடு
பரணும் விடைபெற்றது !

மாத்திரை
நேரத்திற்கு சாப்பிடுங்க!
உடம்பை
கவனமாப் பார்த்துக்கங்க!
சொல்லிவிட்டு
என் மகன்
வேலைக்காக
விமானம் ஏறியபோது
வீடே பரணாய்
மாறிப்போனது! 
 
Labels: எனது கவிதைகள்
நன்றி: http://mmabdulla.blogspot.com 

No comments: