Wednesday, January 27, 2010

கனவின் திசைகளுக்கப்பால்...........

by இப்னு ஹம்துன்
கனவின் திசைகளுக்கப்பால்.....

காதலின் திரை மறைத்த
பொய்களுக்குப் பின்னே
நாம் நாயகர்களானோம்
நமக்குள்ளே.

கனவில் நெய்த அங்கி
வாழ்வின் முட்களில்
கிழிபடுகிறது எப்போதும்

காலத்தின் நிர்வாணத்தில்
கண்டுகொண்டோம்
நாம் நம்மை.

அதன்பின்
ஆடைகள் குறித்த
அலட்டல்கள் தவிர்த்தோம்

ஒப்பனைகள் மாற்றாத
'உள்'நிறத்தில்
அந்த அந்தகார ஆழத்தில்
இன்னும் வசீகரித்தபடி
ஒரு மலர்.


(உயிரோசையில் வெளியாகியிருக்கிறது)

No comments: