Wednesday, January 27, 2010

மும்பை இந்தியர் அனைவருக்கும் சொந்தமானதே - முகேஷ் அம்பானி

மும்பை இந்தியர் அனைவருக்கும் சொந்தமானதே என ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி கூறியுள்ளார். மும்பையில் இனைய தளம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், டாக்ஸி ஓட்டுநர்கள் தங்கள் உரிமத்தை புதுபித்துகொள்ள மராத்தி மொழி தெரிந்திருக்க வேண்டும் என்ற மஹாராஷ்டிர அரசின் முடிவை குறைகூறினார்.
நாம் முதலில் இந்தியர்கள், மும்பை, டில்லி, சென்னை உட்பட அனைத்து நகரங்களும் அனைத்து இந்தியர்களுக்கும் சொந்தமானது என்ற அவர், நிறுவனங்கள் உரிமம் இல்லாமல் நிர்வகிக்ககூடிய நிலைக்கு போகி கொண்டிருக்கும் நிலையில், நாம் ஏழையான டாக்ஸி ஓட்டுனர்களுக்கு உரிமத்தை அறிமுகம் செய்வது மிகவும் துரதிர்ஷ்டம் என்றார்.
சில மாதங்களுக்கு முன் சிவ சேன தலைவர் பால் தாக்கரே, நவ நிர்மான் தலைவர் ராஜ் தாக்கரே ஆகியோர் மும்பயில் வட இந்தியர்களுக்கெதிராக போராட்டத்தில் இறங்கியது குறிப்பிடத்தக்கது.

Source : http://www.inneram.com

No comments: