Thursday, January 7, 2010

தனிநபர் சுய பரிசோதனை


மனிதன் தன் அன்றாட வாழ்வில் காலை முதல் இரவு - வரை எத்தனையோ காரியங்களைச் செய்கின்றான்.

இறைவனுக்குப் பிடிக்காத இறைவனின் வெறுப்புக்கு ஆளாக்குகின்ற பலப்பல காரியங்களையும் அவன் செய்து விடுகின்றான்.

எப்படி அவற்றைக் களைவது? அவற்றிலிருந்து விலகி இருப்பது எப்படி?


தின்ந்தோறும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை - காலை சுபஹ் தொழுகைக்கு முன்போ அல்லது இஷாவுக்குப் பின்பு படுக்கையில் அமர்ந்து தூங்கும் முன்போ - ஒதுக்கிக் கொள்ள வேண்டும்.


தூக்கத்தின் முந்தைய நேரம் சிறப்பானதாகும்.

தூங்கும் முன படுக்கையில் உட்கார்ந்த நிலையில் அன்றைக்கு காலையில் தூங்கி விடிந்தது முதல் இரவு தூங்கச் செல்லும் வரை நாம் செய்த எல்லா செயல்களையும் மனதில் பட்டியலிட்டு சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்!

இன்றைக்கு காலையில் சுபுஹுக்கு சரியான நேரத்தில் எழுந்தோமா? சுபுஹ் தொழுகையை ஜமா அத்தோடு நிறைவேற்றினோமா? என்று ஆரம்பித்து ஒவ்வொன்றாக ஒன்றன்பின் ஒன்றாக பட்டியலிட்டுக் கொண்டே வரவேண்டும்.

நம்முடைய ஒரு நாளின் அனைத்து செயல்களும் நம் கண்முன்னே வந்தபின் அவற்றை முழுமையாக சீர்தூக்கிப் பார்த்தால் அவற்றில் உள்ள நிறைகுறைகள் நமக்குத் தென்படும்.

நம்முடைய சிறுசிறு தவறுகள் குறைகள் நம் பார்வையில் படும்.

நாம் நம்முடைய பெற்றோர்களின் பேச்சை மதியாது இருந்திருப்போம்!

அவர்களை உதாசீனப்படுத்தியிருப்போர்;

மனையாளை தேவையில்லாமல் கடிந்துரைத்திருப்போம்;

தேவையில்லாமல் பக்கத்துவீட்டுக் காரரிடம் சண்டை பிடித்திருப்போம்;

யாரையவாது தேவையில்லாமல் திட்டி இருப்போம்;

கோபப்பட்டிருப்போம்..............

அது போன்றே இஸ்லாமியர் என்பதை நிரூபிக்க யாரிடமாவது இஸ்லாமியக்கொள்கை கருத்துகளைத் தெரிவிக்க சந்தர்ப்பம் வாய்த்தும் அதனைத் தவற விட்டிருப்போம்...........

அல்லது யாராவது ஒருவர் நம்மிடம் இஸ்லாம் பற்றி சந்தேகங்கேட்கையில் தெளிவாக விளக்க இயலாது தடுமாறியிருப்போம்................


இப்படியாக இவை அனைத்தும நம்முடைய கவனத்துக்கு வரும் போது ஒரு நாள் வாழ்க்கையின் மேடுபள்ளங்கள் அமல்களில் ஏற்பட்டிருந்த ஏற்ற இறக்கங்கள் யாவும் ஒரே பார்வையில் நேர்க்கோட்டில் வந்து நின்று விடும்.

எதை நாம் சீர்திருத்த வேண்டும்?

நம்மிடம் உள்ள எந்தெந்த தீய பண்புகளைக் குறைக்கவேண்டும்? என்பதையெல்லாம் நாம்அறிந்து கொள்ளலாம்;

நம்மிடம் முன்கோபம் உள்ளது;

நம்மிடம் அலட்சிய மனப்பான்மை உள்ளது;

அமல்களை குறித்த நேரத்தில் நிறைவேற்றுவதைத் தடுக்கும் அசட்டைப் போக்கு உள்ளது;

பொறுப்பற்ற தன்மை உள்ளது எனப்பல சிறுசிறு குறைகள் தென்படும்.


இன்ஷா அல்லாஹ் இவற்றையெல்லாம் நான் எனது நாளைய வாழ்வில் தவிர்த்துக் கொள்வேன் என்று வைராக்கியம் பூண்டு கொள்கிறோம்

மறுநாளிலேயே இவை அனைத்தையும் நம்மால் களைய இயலாது;

ஆனால் ஆரோக்கியமான முன்னேற்றம் கண்டிப்பாக ஏற்படும்.

இவ்வாறு சில நாட்களில் பெரும்பாலான தவறுகள் நம்மை விட்டு நீங்கிவிடுவதை நாம் அனுபவ பூர்வமாக உணரலாம்.

அமல்கள் நாளுக்கு நாள் பொலிவடைவதையும் நம்மால் பார்க்க இயலும்.

நன்றி :http://islamiyappaarvai.blogspot.com/

No comments: