Monday, January 11, 2010

நமக்கு நாமே




தூரங்கள் பிரித்து வைத்த

உணர்வுகளை வெளிப்படுத்த

என்ன செய்யலாம்?


இமெயில் அனுப்பலாம்....

எத்தனை பேருக்கு

இன்டர்நெட் தெரியும்?


எஸ்.எம்.எஸ் அனுப்பலாம்....

ஏழுவரிக்குள் எல்லாம் சொல்ல

எழுத்தாளனால் கூட முடியாது!


ரீச்சார்ஜ் செய்து

கூப்பிட்டு பேசலாம்....

ரீச்சார்ஜ் என்பது

காலத்திற்குள் கட்டுப்படுவதல்ல

காசுக்குள் கட்டுப்படுவது

இருக்கின்ற காசுக்குள்

எவ்வளவுதான்

பேசமுடியும்?


ஆபிஸ் போனில் பேசலாம்

அந்த அதிர்ஷ்டம்

அனைவருக்கும் கிடைப்பதில்லை!


எழுதி அனுப்பலாம்

வாங்கிப் படிக்க நேரம்

வாய்ப்பதில்லை யாருக்கும்!


ஒன்று செய்யலாம்...

ஓருகடுதாசி எழுதி

நமக்கு நாமே

போட்டுக் கொள்ளலாம்! 

Labels: எனது கவிதைகள்
 நன்றிhttp://mmabdulla.blogspot.com
-----------------------------------------------------------




No comments: