Friday, January 1, 2010

குறள் 1082 நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல்



பார்த்தேன் நான் அவளை
பதிலாகப்
பார்த்தாள் அவளும் என்னை
வெறுமனே அவள் பார்த்தாலே
அந்தப் பார்வை எனைக்
கொன்று குவிப்பதாய் இருக்க
அவளோ
ஒரு படையையே
தன் விழிகளில் திரட்டி
என்னைப்
பார்த்துத் தொலைத்தாளே

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தக்கணங்கு
தானைக்கொண் டன்னது உடைத்து



3 காமத்துப்பால் - 1 களவு இயல்
109 தகையணங்குறுத்தல் - குறள் 1082

வல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை

---அன்புடன் புகாரி
நன்றி http://anbudanbuhari.blogspot.com:
 -----------------------------------------------------------------------------------------------




No comments: