Wednesday, January 6, 2010

அமிலப் பெண்கள் (இளகிய மனமுடையவர்கள் இப் பதிவைத் தவிர்க்கவும் )


போரிலும் பகையிலும் முதல் பொருளாய்
அவளையே சூறையாடினாய்:
அவளுக்கே துயரிழைத்தாய் ;
உன்னால் அனாதைகளாக்கப் பட்ட
குழந்தைகளையெல்லாம் அவளிடமே ஒப்படைத்தாய்:
தலைவனாகவும் தேவனாகவும் நீ
தலை நிமிர்ந்து நடந்தாய்

(கவிஞர் ஃபஹீமாஜஹானின் 'ஒரு கடல் நீரூற்றி' தொகுப்பிலிருந்து)

               பல பத்திகளில் எழுத வேண்டியவற்றை, கவிஞரின் மேற்சொன்ன வரிகள் எளிதாகவும், விரிவாகவும், வெளிப்படையாகவும் விளக்குகிறது. போர்களிலும், பகைகளிலும், பல குடும்பங்களிலும் பெண்களின் நிலைமை மிகவும் பரிதாபத்துக்குரியது. ஒவ்வொரு இடத்திலும் அவள் அத்திவாரமாக விளங்குவதாலோ என்னவோ, எதிரிகள் அவளையே சிதைக்கிறார்கள். எள்ளி நகையாடுகிறார்கள். காவலற்றுப் போன அகிம்சை விலங்கென, வேட்டையாடுகிறார்கள். எல்லாம் செய்யும் ஆண், தப்பித்துவிடுகிறான். சிலவேளை சிறிய தண்டனை அல்லது பொது மன்னிப்பு. பெண், காலங்காலமாக தன் வாழ்வின் இறுதிக் கணம் வரை ரணம் சுமக்க வேண்டியவளாகிறாள்.

நன்றி :http://rishanshareef.blogspot.com/

No comments: