Friday, January 22, 2010

சமுதாய கவனத்திற்கு… வாக்காளர் பட்டியலில் பதிவு செய்ய வாய்ப்பு

 தமிழ்நாட்டிலுள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் அனைத்து கிராமங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் பதிவுசெய்வதற்கும், ஏற்கனவே உள்ள விவரங்களில் திருத்தங்கள் செய்வதற்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
 
வாக்குச்சாவடி நிலை அலுவலர் (பி.எல்.ஓ.). அவருக்காக ஒதுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் தனது அடையாள அட்டையுடன் வர உள்ளார்.
 
வாக்காளர்களின் விவரங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் மற்றும் புகைப்படத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் ஆகியவற்றை குறிப்பெடுப்பார்.
 
01-01-2009 அன்று 18 வயது நிரம்பியவர்கள் படிவம் ‘பி’-யில் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரி கொண்டு வரும் படிவத்தில் கையொப்பமிட்டுக் கொடுக்க வேண்டும்.
 
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு வயது மற்றும் இருப்பிடச் சான்றிதழை அவரிடம் அளிக்க வேண்டும்.
 
அந்த அலுவலர் வீடுகளுக்கு வருகை தந்ததற்கு அடையாளமாக அந்த வீட்டின் முகப்புக் கதவில் ஸ்டிக்கர் ஒட்டப்படும்.
 
சம்பந்தப்பட்ட அதிகாரி 22-1-2010க்குள் வராமல் இருப்பின் அது பற்றி மாவட்ட ஆட்சித் தலைவர், சென்னை மாநகராட்சி பகுதியில் மாநகராட்சி ஆணையர் ஆகியோரிடம் தெரிவிக்கலாம்.
 
இதுபற்றிய முழு விவரமும் www.ceotamilnadu. nic.in – என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.
 
(இது பற்றிய விவரத்தை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பிரைமரி மாவட்ட அமைப்புகள் அனைத்தும் அச்சிட்டு வீடுகளில் விநியோகிக்கவும், பள்ளிவாசல்களில் அறிவிக்கச் செய்யவும் வேண்டுமென இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைமை நிலையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது).
 
Source: கலீல் பாகவீ


சமுதாய செய்திகள், தமிழ்நாடு
நன்றி :http://muthupet.org

No comments: