Friday, August 31, 2012

முஸ்லிம்கள் ஏன் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளார்கள்?


 உலகளவில் முஸ்லிம்கள் ஏன் மிகவும்  பின்தங்கிய நிலையிலும், திறனற்றும் மற்றும்  பலமற்றும் உள்ளார்கள்?
உலகில் பலர் இஸ்லாத்தில் இணைந்துக் கொண்டிருக்கிறார்கள். இஸ்லாத்தின் அருமையான தத்துவம் அவர்களை இஸ்லாத்தில் இணைய வைக்கின்றது.

இஸ்லாம் வளர்கின்றது . உண்மைதான். வெறும் வளர்ச்சி மட்டும் போதாது . கடந்த காலத்தில் இஸ்லாம் ஸ்பெயினில்  காணாத வளர்ச்சியா!
கி.பி 712 லிருந்து கி.பி 1492 வரை ஸ்பெயினில் முஸ்லிம்களின் ஆட்சி. 780 ஆண்டுகள் அந்த மண்ணில் நீதி மிக்கதொரு ஆட்சி நிலைத்திருந்தது.

இஸ்லாமிய ஆட்சியில் இஸ்பெயினில் 780  ஆண்டுகள் இருந்தன! இப்பொழுது மாறிப்போனது!  வளர்ச்சியுடன் அறிவையும் பயன்படுத்தக் கூ டிய ஆற்றலும் பெற்றிருக்க வேண்டும்

 
(  "ஒரு முஸ்லிம் என்பவன் மார்க்கத்தில்  மட்டுமே சிறந்தவனாக இருக்க வேண்டுமா? உலக
அரங்கில் முன்னுக்கு நிற்பவனாக அவன் இருக்கக் கூடாதா?
ஏன்?
உலக அரங்கில் பல மதத்தவர்கள் இருக்கின்றார்கள். இவர்களுள் முஸ்லிம்களின்
சாதனைகள் என்ன? எத்தனை புதிய கண்டுபிடிப்புகளைச் செய்திருக்கிறார்கள்.
எத்தனை பேர் ஆய்வாளர்களாக இருக்கிறார்கள்? எத்தனை பேர் அறிவியல்,
பொருளாதாரம், விண்வெளி ஆராச்சி போன்ற பல துறைகளிலும் நோபல் பரிசுகளைப்
பெற்றவர்களாக இருக்கிறார்கள் அல்லது பெறுகின்ற தகுதியுடையவர்களாக
இருக்கிறார்கள். அவர்களெல்லாம் எந்தெந்த நாடுகளில் அதிகம் இருக்கிறார்கள்.
உலக அரங்கில் ஒரு முஸ்லிமின் முகம் எது?")

உலகில்  ஒரு மதிப்பீட்டின்படி 1.476.233.470 முஸ்லிம்கள் உள்ளனர்
ஆசியாவில் ஒரு பில்லியன், ஆப்பிரிக்காவில் 400 மில்லியன்,
அமெரிக்க, ஐரோப்பாவில் 44 மில்லியன் மற்றும் ஆறு மில்லியன்.

நம்மைப்  போன்ற முஸ்லிம்கள் விநோதமாக ,அதிசியமாக மற்றும்  அதிர்ச்சியுடனும் பார்க்கும் பார்வை!>>>

ஏன் ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் லிபியா போன்ற  முஸ்லீம் நாடுகள் மட்டுமே மேற்கு நாட்டு கிரிஸ்துவர்களால்   தாக்கப்பட்டு  வருகின்றன என்பதனை நினைத்து.  இது  ஒன்றும் அதிசியமான செய்தி அல்ல.

இஸ்லாத்தினை வளர விடாமல் பல்லாண்டுகளாக தொடந்து வந்த முயற்சி இப்பொழுதும் தொடர்கின்றது.

இஸ்லாத்தினை வளர விடாமல் தடுப்பது   புனிதப் போராகவே கிரிஸ்துவர்களால் கருதப்படுகின்றது .

பிறைக்கும் சிலுவைக்கும்(wars between Christians and Muslims ... Crescent and the Cross,) நடந்த சரித்திரப்போரில்இதனையும்  கிரிஸ்துவர்கள் இணைத்து விட்டார்கள் அதற்க்கு முத்தாய்ப்பு வைத்தது போல் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் அதை சுற்றி வளைத்து ஒரு சிலுவை போர் என அத்தாட்சி கொடுத்து விட்டார்.

. முஸ்லீம் நாடுகள் பெரும்பாலும் உயிர்வாழ மேற்கு நாடுகளை சார்ந்து இருக்கும் நிலை.


சவுதி அரேபியா, இஸ்லாமிய கொள்கையாக   வஹாபிச கொள்கைகளை   தனது  மையப்புள்ளியாக தன்னிலையை பிரபலமாக்கிக் கொள்வதில் தாளாத ஆர்வம் கொண்டுள்ளது. அதற்காகவே  தங்களைப் பாதுகாப்பதில் இஸ்லாத்திற்கு பாதகம் விளைவிக்கும் நிலையில்  தங்கள் நாட்டில் இறைவனால் அருளப்பட்ட செல்வங்களை  அமெரிக்காவுக்கு  தாராளமாக  நன்கொடையாக அள்ளித் தருவதோடு அமெரிக்காவையும்  சார்ந்து இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது . மன்னர்களின் சுகபோக வாழ்விற்கு எதனையும்  விட்டுக் கொடுக்கலாம் என்ற அளவுக்கு வந்து  புனித பூமீயில் புனிதமான கஹ்பாவிலிருந்து  இருந்து ஒரு சில நூறு கிலோமீட்டர் உள்ள இடத்தில அமெரிக்க தளங்களை அமைக்க  அனுமதி.கொடுத்துள்ளது.அமெரிக்கா  விலை மதிப்பு மிக்க பெட்ரோலை கணிசமாக பெற்றுக் கொண்டு காலம் கடந்த அமெரிக்காவில் ஒதுக்கப்பட்ட சில போர்  விமானங்களையும்,ஆயுதங்களையும் கொடுத்து சரி செய்து விடுகின்றனர் . அந்த ஆயூதங்கள்  இஸ்லாமிய நாடுகளை அழிப்பதற்கே பயன் படுத்தப்படுகின்றது

உலகில் உள்ள மனிதர்களில் ஐவருக்கு ஒரு முஸ்லீம்
ஒவ்வொரு ஐந்தாவது மனிதன் ஒரு முஸ்லீம் .
மூன்று மனிதர்களில் இரு முஸ்லிம் ஒரு இந்து.
இரண்டு முஸ்லிம்களில் ஒரு புத்தர்
நூறு முஸ்லிம்கள் மத்தியல் ஒரு  யூதர்  உள்ளனர்

இந்த நிலையில் முஸ்லிம்கள் மிகவும் பலமற்று  எப்போதும் இருப்பது மிகவும் வியந்து பார்க்கக் கூடியதாகவும் வருத்தம் தரக் கூடியதாகவும் உள்ளது  . ஏன் இந்த நிலை!

இஸ்லாமிய மாநாடு (OIC) என்ற அமைப்பில்  57 உறுப்பு நாடுகள் உள்ளன, அவற்றில்  அனைத்திலும்  500 பல்கலைக்கழகங்கள் உள்ளன
 ஒவ்வொரு மூன்று மில்லியன் முஸ்லிம்களுக்கு ஒரு பல்கலைக்கழகம்

அமெரிக்காவில் 5.758 பல்கலைக்கழகங்கள் மற்றும் இந்தியாவில்  8.407 பல்கலைக்கழகங்கள்
உள்ளன

இந்த நிலையில் முஸ்லிம்கள் மிகவும் பலமட்றுப் போனவர்களாக    எப்போதும் இருப்பது மிகவும் வியந்து பார்க்கக் கூடியதாகவும் வேதனப் பட்டவர்களாகவும்  காணப்படுகின்றனர் . ஏன் இந்த நிலை!

இஸ்லாமிய மாநாடு (OIC) என்ற அமைப்பின் 57 உறுப்பு நாடுகள் உள்ளன, அவற்றில்  500 பல்கலைக்கழகங்கள் உள்ளன
 ஒவ்வொரு மூன்று மில்லியன் முஸ்லிம்களுக்கு ஒரு பல்கலைக்கழகம்

அமெரிக்காவில் 5.758 பல்கலைக்கழகங்கள் மற்றும் இந்தியாவில் பல்கலைக்கழகங்கள் 8.407 உள்ளன.

 'உலக பல்கலைக்கழகங்களின் கல்வி மதிப்பீடு' 2004 ஆம் ஆண்டு, ஷாங்காய் ஜியாவோ டாங் பல்கலைக்கழகம் தொகுக்கப்பட்டதில்  , அதன் தந்திரமான அறிக்கையில் குறிப்பிடுகின்றது  , முஸ்லீம் பெரும்பான்மை மாநிலங்களில் இருந்து  500 பல்கலைக்கழங்களில் ஒரு பல்கலைக்கழகம் கூட முதல் நிலையில் கிடையாது  என்று அறிவித்துள்ளது

மற்றும் UNDP, திரட்டப்பட்ட அறிக்கையில்  கிரிஸ்துவர்களின்  உலக எழுத்தறிவு  கிட்டத்தட்ட 90 சதவீதம் உள்ளது மற்றும் 15 கிரிஸ்துவர் பெரும்பான்மையாக  அரசுகளில் கிரிஸ்துவர்களின் எழுத்தறிவு சதவீதம் 100  விகிதமாக  உள்ளது.

ஆனால்  முஸ்லீம் பெரும்பான்மையாக உள்ள  அரசுகளில் இது முற்றிலும் முரண்பாடாக, மாறுபட்டதாக இருப்பது மிகவும் வருந்தத் தக்கதாக உள்ளது. முஸ்லிம்களின் கல்வி அறிவு சுமார் 40 சதவீதம் கிட்டுவதே வியக்க வைக்கும்  நிலை. உலக முஸ்லிம் பெரும்பான்மை உள்ள நாடுகளில் முஸ்லிம்கள் 100  விகிதம் எழுத்தறிவு கிடைக்கப் பெற்ற உள்ள நாடு உலகில் எங்கும் கிடையாது என்பது அப்பட்டமான உண்மை.  ஆரம்ப பள்ளி நிறைவு முஸ்லீம் உலகில்  ' குறைவான 50 சதவீதம்தான்  ஆனால்  கிரிஸ்துவர் நடத்துவது  உலகில்    98 சதவீதம் உள்ளது .இந்நிலை தொடர வேண்டுமா ? சற்று சிந்தனை செய்யுங்கள்! உலகத்தோடு போட்டி போட்டு  முஸ்லிம்கள் முழுமையாக  கல்வி அறிவு பெற்று உயர்நிலை அடைய வேண்டாமா! நமக்கு அனைத்து தகுதியும் இருந்தும்  நாம் ஏன் இன்னும் அதன் முயற்சியில் ஈடுபட  தயக்கம் காட்டி மற்ற காரியங்களில் நம் சிந்தனைகளை சிதறச் செய்கின்றோம். ஒற்றுமையும் உத்வேகமும் நம்மிடம் தளர்ந்துவிட மாற்றார் நம் கவனத்தினை திருப்பி விடுவதை நாம் அறிந்துக் கொள்வது உயர்வு .

முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் ஒரு மில்லியன் முஸ்லிம்கள் ஒன்றுக்கு 230 விஞ்ஞானிகள்.
ஆனால் ஐக்கிய அமெரிக்காவில் ஒரு மில்லியன் மக்களுக்கு 4,000 விஞ்ஞானிகள் ஜப்பானில் ஒரு மில்லியன் மக்களுக்கு 5,000 விஞ்ஞானிகள் உள்ளனர் .

முழு அரபு உலகில், முழு நேர ஆராய்ச்சியாளர்கள் எண்ணிக்கை 35,000 மற்றும் ஒரு மில்லியன் அரபியர்கள் மத்தியில்  50 தொழில்நுட்ப வல்லுனர்கள் மட்டும் உள்ளனர். ஆனால் கிரிஸ்துவர் உலகில் ஒரு மில்லியன் மக்களுக்கு 1,000 தொழில்நுட்ப வல்லுனர்கள் உள்ளனர்  என்பதனை நாம் அறிய வேண்டும்

மேலும் கிரிஸ்துவர் உலகம்   அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஐந்து சதவீதம் (GDP.யில் )வரை  செலவழிக்கிறது ஆனால்  முஸ்லீம் உலகில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு சம்பந்தமாக , அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.2 சதவீதம்  (GDP.யில் ).மட்டும் செலவழிக்கிறது. முஸ்லீம் உலகின் அறிவு உற்பத்தி திறன் கிடையாது! இதில் தேக்க நிலைதான்

மக்களுக்காக ஓராயிரம்  தினசரி பத்திரிக்கைகள் மேலும் மில்லியன் புத்தக தலைப்புகளில் ஏராளமான புத்தகங்கள் மக்களின் நன்மைக்காக தயாரிக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன
பாகிஸ்தானில்  இருபது தினசரி செய்தித்தாள்கள் ஆயிரம் பாக்கிஸ்தானியர்களுக்காக.
சிங்கப்பூரில்  அதே விகிதம் மக்களுக்கு  360,
 எகிப்தில்  20,
இங்கிலாந்தில், மில்லியன் கணக்கில்  புத்தக தலைப்புகளில் 2,000 உள்ளது.

இஸ்லாமிய நாடுகளுடன் மற்ற நாடுகளை ஒப்பிடும்போது  தினசரிகள் மற்றும் அறிவு தரக் கூடிய புத்தகங்கள் வருவது கணிசமான அளவு குறைகின்றது . இதன் முடிவு: முஸ்லிம்கள்  உலகின் அறிவு பெறுவதில்  குறைகிறது.


அதிக தொழில்நுட்ப பொருட்களை  மொத்த ஏற்றுமதியில் செய்வதில்  ஏற்றுமதி அறிவு பயன்பாடு  முக்கியமான சுட்டிக்காட்டியாக உள்ளது.
அதிக தொழில்நுட்ப தயாரிப்புகள் மொத்த ஏற்றுமதியில்   பாக்கிஸ்தானின்  ஏற்றுமதி ஒரு சதவீதமாக உள்ளது.
சவுதி அரேபியா அதே சதவீதம் 0.3 ஆகும்; சிங்கப்பூர் சதவீதம் 58 ஆகும் போது குவைத், மொராக்கோ, மற்றும் அல்ஜீரியா, சதவீதம் 0.3 இருக்கின்றன.
இதில் முஸ்லீம் உலகின் அறிவின் ஆக்கங்களை முற்படுத்திக் கொள்வதில் குறைவு தென்படுகின்றது .
முஸ்லிம்கள் ஏன் அந்த அறிவுத் திறனில் சக்தி அற்றவர்களாக இருக்கின்றோம் ?
அதன் அடிப்படைக் காரணம் நாம் அறிவை வளர்பதற்கான முயற்சியில் கவனம் செலுத்துவதில்லை.அதனை அபிவிருத்தி செய்யவுமில்லை,உபயோகப்படுத்துவதுமில்லை
அறிவு சார்ந்த சமுதாயமே இனி வரும் காலங்களில் அணைத்து வகைகளிலும் முன்னேற்றம் காண முடியும்  அதிகாரமும் அவர்கள் கையில் நிற்கும் .

57 இஸ்லாமிய மாநாடு (OIC) என்ற அமைப்பு  நாடுகளின் ஒருங்கிணைந்த வருடாந்திர மொத்த உள்நாட்டு உற்பத்தியில் $ 2 டிரில்லியன் உள்ளது.
ஆனால் அமெரிக்கா,$ 12 டிரில்லியன் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் சேவைகளை உற்பத்தி செய்கின்றது ;சீனா  $ 8 டிரில்லியன்,  ஜப்பான்  $ 3.8 டிரில்லியன் மற்றும் ஜெர்மனி $ 2.4 டிரில்லியன் (வாங்கும் திறன் சமநிலை அடிப்படையில் கொள்வனவு(purchasing power parity basis)

எண்ணெய் வளம் மிக்க சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் மற்றும் கத்தார் கூட்டாக $ 500 பில்லியன் மதிப்புள்ள சரக்குகள் மற்றும் சேவைகள் (பெரும்பாலும் எண்ணெய்) உற்பத்தி; தனியாக ஸ்பெயின் கத்தோலிக்க போலந்து $ 489 பில்லியன் மற்றும் புத்த தாய்லாந்து $ 545 பில்லியன், $ 1 டிரில்லியன் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் சேவைகளை உற்பத்தி செய்கிறது.

உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவிகிதம் என்ற முஸ்லீம் மொத்த உள்நாட்டு உற்பத்தி வேகமாக குறைந்து வருகிறது.

எனவே, ஏன் முஸ்லிம்கள் மிகவும் பலமற்று இருக்கின்றோம் ?

தேவையான  கல்வி இல்லாமையும  அதனை முறையாக பயன் படுத்தாமையும்தான் .
நாம் அனைவரும்  அல்லாஹ்விடம் எங்கள் தோல்விக்கு நாங்களே வழி வகுத்துக் கொண்டோம் . இறைவா ! நீ அணைத்து வளங்களையும் தந்தாய் நாங்கள்தான் அதனை முறையாகப் பயன்படுத்தவில்லை என மன்றாடி  மன்னிப்பு கேட்டு இனியாவது நாங்கள் நீ கொடுத்த அறிவை விசாலமாக்கி அந்த அறிவைக் கொண்டு உன்னை தொழுவதோடு உன்னால் கொடுக்கப்பட்டதனை முறையாகப் பயன் படுத்தி இன்ஷா அல்லாஹ் ஆற்றல் மிக்க முஸ்லிம்களாக இருக்கின்றோம் அதற்க்கு நீயே துணை நின்று அருள்வாயாக! 

No comments: