Showing posts with label பெருமை. Show all posts
Showing posts with label பெருமை. Show all posts

Tuesday, November 12, 2013

பெயரில் என்ன இருக்கிறது பெருமை பேச

பெயரில் என்ன இருக்கிறது பெருமை பேச
பெயரோடு இன்னொரு பெயர் இணைந்தால்தான் பெருமை

எழுதுகோல் எடுத்து எழுதாத இடமில்லை பெயரை
எழுதி அனுப்பித்தவைகள் பெயரோடு வந்து விளம்பரம் தந்தன

பார்த்தவன் படித்தவன் பாராமுகமாய் போகிறான்
பார்த்து பார்த்து பாராமுகமாய் போனதால் பசுமை முகம் சோர்ந்து போனது

நிறைவோடு எழுதி நிறைவற்ற மனமானது
நிறைவோடு இல்லை இல்லான் இல்லாதததால்

என் பெயரும் இல்லானின் பெயரோடு இணைந்து விட
எங்கள் பெயர் சொல்ல மக்களை பெற்றுத் தருவேன்

பூக்காத மரமாய் நிற்கிறேன்
பூத்த பின் மகரந்த சேர்க்கை கிடைக்கும்

பூத்த பின் மணம் வீசி நிற்ப்பேன்
பூத்த பின் வண்டுகள் நாடி வரும்

Wednesday, November 21, 2012

இதுதான் கொலை உலகம் !

ஆயுதங்கள் விற்பனைக்கு பல நாடுகள் போட்டி !
இதுதான் கொலை உலகம் !
நாம் கலை  வளர்த்தோம் என்று பெருமை பேசுவோம் . மக்கள் தொண்டே எங்கள் கொள்கை என மார்தட் டிக்கொள்வோம்   . ஆனால் நடப்பது என்ன ?  பதவி வெறி, பண மோகம், மண் ஆசை ஜாதி,இன வெறி மற்றும் பல தோற்றங்களில் வரும் கொலை வெறி  இது தொடர்ந்து வருகின்றது  . இது இந்த நாகரிக உலகத்திலும் பாதிக்க படும் அவல நிலை . எத்தனை புகழ் வாழ்ந்த தலைவர்கள்  கொலை செய்யப்பட்டனர். மனிதன் நல்லவன் மக்கள் கொடியோர் என்பர். தனி மனிதன் அல்லது மக்கள் கொடியோர் அல்ல . இவர்களால் தூண்டப்பட்ட ஆசைதான் மிகவும் கொடிய சக்தி . ஒரு தலைவன் வீழ்த்தப் பட்டால் அதன் விளைவால் வீழ்ந்த தலைகளும் நாடும் அதிகம் . இது காலம் தொட்டு நடந்து வரும் கொடுமை .இதன் விளைவால் சில சரித்திர புகழ் பெற்ற,  மக்களால் மிகவும் நேசிக்கப்பட்ட மாமனிதர்களை நாம் பாப்போம் . இவர்கள் நினவு நம் மனதில் காலமெல்லாம் இருந்துக்கொண்டே இருக்கும்.
மஹாத்மா காந்தி அன்பு வழியில், அகிம்சை வழியில் இந்திய நாட்டுக்கு சுதந்திரம் வாங்கித்தந்த தேசத் தந்தை
ஆபிரகாம்  லின்கன் -அமரிக்காவின்   16 ஜனாதிபதி (ப்ரெசிடென்ட் 1861 முதல்  ஏப்ரல் 1865.வரை.அடிமை முறையை ஒழிக்க அயராது பாடுபட்டவர் .

Friday, August 10, 2012

வெளிப்படையாக நன்மையாக இருப்பினும் அது வீணாவது இறைவன் பார்வையில்

Vain Despite Apparently Good
வெளிப்படையாக நன்மையாக இருப்பினும் அது வீணாவது இறைவன் பார்வையில்

பெருமைக்கு ஆசைப்பட்டு , ஆடம்பரத்திற்காக செயல்பட்டு விளம்பரதிற்க்காக தர்மம் ,சேவை, ஜகாத் ,உதவுதல் இவைகள் அனைத்தும் செய்து அதனை இறைவனது
நன்மையான  கணக்கில் சேர்க்க முடியாது மாறாக  அவைகள் தீமையாகி தண்டனையும் பெற்றுத் தரலாம். காரணம் அவைகள் அனைத்தும் இறைவனது அருள் நாடி
செய்யப்பட்டவையல்ல பெருமைக்காக செய்த அனைத்து நன்மைகளும் அதனால் விளைந்த ஆதாயங்களும் இங்கேயே பலவகையில் பெற்றிருக்க இறைவன் அருள் கிடைக்காமல் போய்விடும்.