உன் கண்ணீரை
என் கைகளில் ஏந்திக்கொள்கிறேன்
உன் கனவுகள்
நிறைவேறும் வழி சொல்கிறேன்
உன் துயரங்கள்
கரைந்துபோகும் உறவுதருகிறேன்
உன் இதயத்தில்
இருந்துகொண்டு நீயாகிறேன்
உன் தோல்விகளைச்
சுமக்கின்ற தோளாகிறேன்
உன் வெற்றிகளைக்
கொண்டாடும் பூக்களாகிறேன்
உன் குழந்தை மனச்
செயல்களை ரசித்துக்கொள்கிறேன்
உன் திறமை தேடிப்
பாராட்டி உன் வானமாகிறேன்
உன் உணர்வோடு
உணர்வாகும் நிலையாகிறேன்
உன் உயிரோடு
உயிர் கோக்கும் உயிராகிறேன்
Source : http://anbudanbuhari.blogspot.in/
Showing posts with label உயிர். Show all posts
Showing posts with label உயிர். Show all posts
Thursday, December 20, 2012
Wednesday, December 19, 2012
கண்ணாடிப் பேழையில் கடுஞ் சிறை
உலவி வர சிறிய இடம்
உலவும் போது இடிப்பதில்லை
உன்னைக் கண்டு நான் மகிழ
உணவைத் தேடி நீ அலைய
உயிர் வாழ உணவு கொடுப்பேன்
உயிர் வாழ நீர் மாற்றம் செய்வேன்
நிறம் நிறமாய் வாரிசு கொடுத்தாய்
வாரிசு உன்னை வளம் வரும்
வேதனை அறியா உள்ளம் பெற்றாய்
பெற்றது அறியா உள்ளம் கொண்டது
நான் என் மகிழ்வை அடைய
நான் கண்ணாடிப் பேழையில் விட்டு வைத்தேன்
நான் அறியேன் அதுவே உனக்கு கடுஞ்சிறையென
உன் உயிரில் நான் விளையாட
என் உயிரில் விளையாட யார் வருவாரோ!
உலவும் போது இடிப்பதில்லை
உன்னைக் கண்டு நான் மகிழ
உணவைத் தேடி நீ அலைய
உயிர் வாழ உணவு கொடுப்பேன்
உயிர் வாழ நீர் மாற்றம் செய்வேன்
நிறம் நிறமாய் வாரிசு கொடுத்தாய்
வாரிசு உன்னை வளம் வரும்
வேதனை அறியா உள்ளம் பெற்றாய்
பெற்றது அறியா உள்ளம் கொண்டது
நான் என் மகிழ்வை அடைய
நான் கண்ணாடிப் பேழையில் விட்டு வைத்தேன்
நான் அறியேன் அதுவே உனக்கு கடுஞ்சிறையென
உன் உயிரில் நான் விளையாட
என் உயிரில் விளையாட யார் வருவாரோ!
Friday, October 12, 2012
வசையும் வேண்டாம், வன்முறையும் வேண்டாம்...
By டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் (தினமணியில் வெளியானது)
உயிர், உடைமை, கண்ணியம், நம்பிக்கை இவை நான்கும் மனிதனின் மிக முக்கிய அடிப்படை உரிமைகளாகும். இவற்றில் எதைப் பறித்தாலும் மனிதன் பொங்கி எழுவான். தன் இனம், மொழி, மதம், கலாசாரம், நாடு ஆகியன இழிவுபடுத்தப்படும்போது மோதல்கள் உருவாகின்றன.
தலைவர்களின் சிலைகள் சிதைக்கப்படும்போது, தேசியக் கொடி அவமதிக்கப்படும்போது, மதிப்பிற்குரிய தலைவர்களை இழிவுபடுத்தும்போது, வரலாற்றைத் திரித்து எழுதி கொச்சைப்படுத்தும்போது உணர்வுகள் காயப்படுத்தப்படுகின்றன.
சமீபத்தில் வெளியான "இன்னோசென்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ்' எனும் திரைப்படம் நபிகள் நாயகத்தைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் அமைந்ததால் உலகெங்கும் அதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆர்ப்பாட்டம், பேரணி என்று ஆரம்பித்து சில இடங்களில் வன்முறையில் முடிந்திருக்கிறது. லிபியாவுக்கான அமெரிக்கத் தூதரகத்தில் மூன்று தூதரக அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
சென்னையில் போக்குவரத்து அதிகமுள்ள அண்ணா சாலையில் நான்கு நாள்களாக, சில மணி நேரங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் தொல்லைக்குள்ளாயினர். படத்தைத் தயாரித்தவர்கள் "இது எங்களின் கருத்துச் சுதந்திரம், எங்கள் உரிமை' என்கிறார்கள். எதிர்ப்பாளர்களோ "எதிர்ப்பது எங்களின் உரிமை' என்கிறார்கள். இது பற்றிய விவாதங்களை அலசும் முன் இந்தத் திரைப்படம் குறித்து சில தகவல்களைப் பார்க்கலாம்.
உயிர், உடைமை, கண்ணியம், நம்பிக்கை இவை நான்கும் மனிதனின் மிக முக்கிய அடிப்படை உரிமைகளாகும். இவற்றில் எதைப் பறித்தாலும் மனிதன் பொங்கி எழுவான். தன் இனம், மொழி, மதம், கலாசாரம், நாடு ஆகியன இழிவுபடுத்தப்படும்போது மோதல்கள் உருவாகின்றன.
தலைவர்களின் சிலைகள் சிதைக்கப்படும்போது, தேசியக் கொடி அவமதிக்கப்படும்போது, மதிப்பிற்குரிய தலைவர்களை இழிவுபடுத்தும்போது, வரலாற்றைத் திரித்து எழுதி கொச்சைப்படுத்தும்போது உணர்வுகள் காயப்படுத்தப்படுகின்றன.
சமீபத்தில் வெளியான "இன்னோசென்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ்' எனும் திரைப்படம் நபிகள் நாயகத்தைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் அமைந்ததால் உலகெங்கும் அதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆர்ப்பாட்டம், பேரணி என்று ஆரம்பித்து சில இடங்களில் வன்முறையில் முடிந்திருக்கிறது. லிபியாவுக்கான அமெரிக்கத் தூதரகத்தில் மூன்று தூதரக அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
சென்னையில் போக்குவரத்து அதிகமுள்ள அண்ணா சாலையில் நான்கு நாள்களாக, சில மணி நேரங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் தொல்லைக்குள்ளாயினர். படத்தைத் தயாரித்தவர்கள் "இது எங்களின் கருத்துச் சுதந்திரம், எங்கள் உரிமை' என்கிறார்கள். எதிர்ப்பாளர்களோ "எதிர்ப்பது எங்களின் உரிமை' என்கிறார்கள். இது பற்றிய விவாதங்களை அலசும் முன் இந்தத் திரைப்படம் குறித்து சில தகவல்களைப் பார்க்கலாம்.
Wednesday, August 8, 2012
அல்லாவை அல்லாமல் இறையோனில்லை
அல்லாவை அல்லாமல் இறையோனில்லை
அம்மாவைப் போலிங்கு சொந்தம் இல்லை
சொந்த பந்தம் வாழ்வில் உண்டு - பெற்ற
பெற்ற தாய் போல சொந்தம் ஏது?
அல்லாஹ்வைப்...
உயிர் ஒன்று உயிர் செய்ய இறை செய்யும் ஒரு மாயம்
உடல் கொண்டு தாய் செய்ய வைத்தானம்மா
தாய்யுண்ணும் உணவோடு உணர்வெல்லாம் குழந்தைக்கும்
தரமாகப் சேர வைத்தானம்மா!
தாயாரின் காலுக்குக் கீழ் சொர்க்கம் உண்டென்று
தாஹா நபி சொன்ன மொழி தானம்மா!
தாய் தந்த அன்புக்கும் தாலாட்டுப் பாட்டுக்கும்
யார் என்ன செய்தாலும் நிகராகுமா?
எப்போதும் மெய்தானே !
அல்லாஹ்வைப்...
அல்லாவை அல்லாமல் இறையோனில்லை !
அம்மாவைப் போலிங்கு சொந்தம் இல்லை
சொந்த பந்தம் வாழ்வில் உண்டு - பெற்ற
பெற்ற தாய் போல சொந்தம் ஏது?
அல்லாஹ்வைப்...
Subscribe to:
Posts (Atom)



