Showing posts with label மக்கள். Show all posts
Showing posts with label மக்கள். Show all posts

Wednesday, January 22, 2014

அழகானவைகள் எப்பொழுதும் நன்றாக இருப்பது இல்லை.

நல்லவைகள் எப்போதும் அழகாக இருக்க முடியும்!

நீங்கள் ஒரு யோசனை தர
நான் ஒரு யோசனை தர
நமக்குள் அந்த யோசனைகள் பரிமாற்றம்
நமக்குள் பரிமாற்றம் செய்து கொண்டமையால்
நமக்குள் இரண்டு யோசனைகள் கிடைக்கும்.

கருத்துகள் நல்லவைகள்
நல்லவைகள் நிறைவேற்றப்பட
நல்லவைகள் நன்மை விளைவிக்கும்

நாட்டுக்கு நாடு தகவல் பரிமாற அம்பாசிடர்கள்
நாட்டுக்கு நாடு தகவல் பரிமாற்றம்
நாட்டுக்கு நாடு தகவல் பரிமாற்றம் செய்தமையால்
நாட்டுக்கு நாடு பிரச்சனைகள் தீர்வு
நாட்டுக்கு நாடு பிரச்சனைகள் தீர்வானதால்
நாட்டுக்கு நாடு தொடர்பு நெருக்கம்

Friday, November 9, 2012

டாக்டர் ஆகணும் ! ஆமாம் ஆமாம் ஆமாம்!!!

'ஏன்டா தாளை கிறுக்கி கிழித்துப் போடறே !' கோபமாக தாய்
'நீ தானே டாக்டர் ஆகுனும்னு சொன்னே!' ஐந்து வயது பையன்
'அதுக்கு தாளை கிழிக்கனுமா!' தாய்
'டாக்டர்
தாள்லே கிறுக்கி  கிழிச்சுத்தானே கொடுக்குறாரு!' பையன்



மன்னவா! மக்கள் பயப்படுகிறார்கள்!
அப்படி யார் சொன்னது ?
மக்கள் பேசிக்கொள்கிறார்கள்!
அங்கே யார்! வரச் சொல்!
மக்கள் பயப்படுகிறார்களா ?
இல்லை! மரியாதை செய்கிறார்கள்!
பின் ஏன் நீங்கள் வந்தீர்கள்?
மரியாதையின் நிமித்தம் பார்க்க வந்தோம்
நீர் ஏன் பயப்படுகிறார்கள் என்று சொன்னீர்?
வெளிச்சம் இல்லையாம் அதனால் கொசு கடிக்கிறதாம்.
வெளிச்சமும் குளிர்ச்சியும் இருக்கத்தானே செய்கிறது
அனைவரும் 'ஆமாம் ஆமாம் ஆமாம் '

Wednesday, August 8, 2012

சறுக் சறுக்கென்ன குத்துராங்க

கல்லையெல்லாம் காவியுடுத்தி
கடவுள் என்று சொல்றாங்க
கடவுள் பெயரில் கொலைகள்செய்து
கடவுள்பெயரை கொல்றாங்க

மாட்டை அறுத்தல் பாவம் என்போர்
மனிசன் தலையை வெட்றாங்க
மாசா மாசம் சேத்த காசை
திருடன் காலில் கொட்டுறாங்க

உண்மைய சொன்னா பைத்தியமென்னு
ஊரே சேர்ந்து திட்டுறாங்க...
உரிமைய கேட்டா கொல்வோமுன்னு
ஊரைய விட்டு வெரட்டுறாங்க

வாக்கு வாங்கி போனவரெல்லாம்
வாயப் பாத்து நிக்குறாங்க
நாசகாரன் போட்டதையெல்லாம்
நாயப்போல நக்குறாங்க

மக்கள் வாழ்வை பேரம்பேசி
மாடிவீடு கட்டுறாங்க
மக்கள் பின்னர் ரோசம் பறந்து
வோட்டுப்போட நிக்கிறாங்க

சரக்கு கொடுத்தா கழுதைக்கும் கூட
சறுக் சறுக்கென்ன குத்துராங்க
பின்னர் பெரிசா பிரச்சின வந்தா
எம்பிக்கு ஏசி கத்துறாங்க













கவிஞர் அஸ்மின்

Tuesday, January 11, 2011

எப்படி நான் இந்தியாவ காப்பாத்துவேன்…..!!!!!!!!!


ஏன் இந்தியா பிரச்சனையிலே இருக்கு.
மக்கள் தொகை: 110 கோடி
9 கோடி ஓய்வு பெற்றவர்கள்


30 கோடி மாநில அரசு பணியாளர்கள்
17 கோடி மத்திய அரசு பணியாளர்கள்
(இருவருமே வேலை செய்யறதில்லை)


1 கோடி IT ஆளுங்க (அவங்க என்னிக்கு இந்தியாக்கு உழைசாங்க)

25 கோடி பள்ளில படிப்பவர்கள்

1 கோடி 5வயசுக்கும் கீழானவர்கள்

15 கோடி வேலை தேடுவோர்

1.2 கோடி சீக்கு புடிச்சி ஆஸ்பிடலில் இருப்போர்

ஒரு புள்ளிவிபரத்தின் படி 79,99,998பேர் ஜெயிலில்


மிச்சம் இருப்பது நீயும் நானும்

நீ எப்போ பார்த்தாலும் மெயில் அனுப்பறது/படிக்கிறதுல பிஸி

அய்யோ நான் மட்டும் ஒத்தையாளா எப்படி இந்தியாவை காப்பாத்துவேன் !





Shaik Dhawood
எனக்கு மின்னஞ்சலில் வந்தது!