காணவில்லை! கண்டு பிடித்து கொடுப்பவருக்கு அன்பளிப்பு வழங்கப்படும். இது
அக்காலத்தில் குழந்தை காணாமல் போனால் வரும் செய்தி. அதை வைத்து
'மாக்கான் பிடிச்சிட்டு போய்டுவான்' என்று அச்சமூட்டுவோம். அக்காலத்தில்
வாசலில் தொங்கும் பல்பு திருட்டு போகும் . காலம் மாறிவிட்டது இப்பொழுது
சிறிய திருட்டுக்கு யாரும் ஆசைப்படுவதில்லை அதேபோல் குழந்தைகளை தூக்குவதற்கும் விரும்புவதில்லை. நாகரீக திருட்டு நடைபெருகின்றது.
வீட்டில் புகுந்த திருடன் நகைகள் மற்றும் பணத்தினைத் தவிர மட்ற பொருட்களை
திருடுவதில்லை.
அந்த கதிதான் பெண்களுக்கும் வந்துவிட்டது.
திருட்டானால்
அல்லது காணாமல் போனால் அரசிடம் முறையிட வேண்டும்.
இதனை கிளிக் செய்து படியுங்கள் கையூட்டை கலைவது கைக்கூடுமா!
ஓடிப்போனால்
இறைவனிடம்தான் முறையிட வேண்டும்.நாமும் அதற்கு காரணமாக இருந்தால்
இறைவனிடம் பாவ மன்னிப்பு நாடி இனி அவ்விதம் நடக்காமல் இருக்க வழி
தேடிக்கொள்ள வேண்டும் .
இதனை கிளிக் செய்து படியுங்கள் ஓடிப்போவது ஏன்? எதற்காக?
தவறுகள்
ஆணிடமில்லை பெண்ணிடமில்லை. இது காலத்தின் மாற்றம்,
நாம் வாழும் காலம்
மறுமலர்ச்சி காலம், இங்கு என்ன புரட்சியா நடந்துவிட்டது? எகிப்தில் கமால்
பாட்சா புரட்சி வழி கொண்டு பெண்களுக்கு உரிமை கொடுத்து மாற்றம்
கொடுத்தார் . இஸ்லாம் அனைத்து உரிமையும் பெண்களுக்கு தந்திருந்தபோதும்
அதனை முறையே பயன்படுத்தாமல் ஒரு சில முல்லாக்களின் தவறான பிரசங்கத்தினால்
பெண்களை கல்வி கற்க விடாமல் செய்து வீட்டிற்குள் முடக்கி விட்டோம். தற்பொழுது அந்த
நிலையில் மாற்றம் வர பெண்களும் உயர் கல்வி பெற்று வருகின்றனர். கல்வி பெற
கல்லூரி சென்றால் கெட்டுவிடுவார்கள் என்ற தவறான பிடிவாதத்திலிருந்து
இப்பொழுதுதான் மீண்டு வருகின்றோம். மறுமலர்ச்சி காலத்தில் ஒரு சில தவறு
நடக்கத்தான் செய்யும் அதற்காக அனைத்துமே தவறாகி விடும் என்ற முடிவுக்கு
வருவது மூடத்தனம்.காக்காய் அனைத்துமே கருப்பல்ல பல நாடுகளில் வெள்ளை
காக்கைகள் உண்டு. ஒரு சிலர் பாடசாலைக்கு வரும்போது தர்ணாவில் ஆரம்பிக்க அது
அனைவருக்குமே உடந்தையானது என்ற முடிவுக்கு வர வேண்டாம்.
இலட்சத்தில்
ஒரு பெண் ஓடிபோனால் அதற்காக அனைத்துப் பெண்களும் ஓடிப்போவார்கள் என்ற
முடிவுக்கு வந்தால் ஒருவரும் திருமணம் செய்துக்கொள்ள முடியாது . உலகமே நிலை தடுமாறி விடும் .(மேற்கோள்களும் பழமொழிகளும் கொடுத்தால் கட்டுரை இன்னும் நீண்டுவிடும்)
Showing posts with label பாவ மன்னிப்பு. Show all posts
Showing posts with label பாவ மன்னிப்பு. Show all posts
Wednesday, August 1, 2012
Friday, June 15, 2012
வருத்தம் ஏன் ! மனம் மகிழ்வுடன் வாழ்ந்து விடு .
நாம் நம்மைப் பற்றிய எண்ணுவது ஒருபுறம் இருக்கட்டும்; மற்றவர்களைப் பற்றி சிறிது யோசித்துப் பாப்போம் !
மிதியடி இல்லையே என்று எண்ணாமல் கால் இல்லாமல் இருப்பவர்களைக் கண்டு ஆறுதல் அடை. பொருள் வாங்க பணம் இல்லையே என்று வருந்தாமல் நமக்கு கடன் இல்லை என
நிம்மதி கொள். வீட்டில் இறப்பு ஏற்பட்டால் கண் கலங்காதே! எத்தனையோ குடும்பங்கள் அடியோடு எதிர்பாராத வகையால் இயற்கையின் சீற்றத்தால் அழிந்துவிடுவதனை பார்க்கின்றோம்.
குழந்தைகள் படிக்க வைக்க பணம் இல்லையே என்று வருத்தம் அடைவோர் குழந்தைப் பெறும் பாக்கியம் இல்லாத தம்பதியர்கள்பார்த்து அமைதி அடைந்து நாம் பாக்கியம் பெற்றோர் என கருதட்டும்.தேவை மனவுறுதியும், ஆரொக்கியமும், தியாக மனப்பான்மையும், குழந்தைகளை இறைவன் அளிக்கும் மிகப்பெரும் செல்வம் என்று கருதும் மன நிலையும் தான். பணங்காசுகளோ, வசதிவாய்ப்புகளோ அல்ல.
வருத்தம் வேதையினை தந்து உடல் நலனை பாதித்துவிடும். மகிழ்ச்சி உற்சாகத்தினை தந்து ஆற்றல் உள்ளவர்களாக மாற்றும். எடுத்ததெற்கெல்லாம் குறை காண்பது தாழ்வு மனபான்மைக்கு வழி வகுத்துவிடும். வாழும் கடைசி நிமிடம் வரை மகிழ்வாக வாழ வேண்டும். .
மிதியடி இல்லையே என்று எண்ணாமல் கால் இல்லாமல் இருப்பவர்களைக் கண்டு ஆறுதல் அடை. பொருள் வாங்க பணம் இல்லையே என்று வருந்தாமல் நமக்கு கடன் இல்லை என
நிம்மதி கொள். வீட்டில் இறப்பு ஏற்பட்டால் கண் கலங்காதே! எத்தனையோ குடும்பங்கள் அடியோடு எதிர்பாராத வகையால் இயற்கையின் சீற்றத்தால் அழிந்துவிடுவதனை பார்க்கின்றோம்.
குழந்தைகள் படிக்க வைக்க பணம் இல்லையே என்று வருத்தம் அடைவோர் குழந்தைப் பெறும் பாக்கியம் இல்லாத தம்பதியர்கள்பார்த்து அமைதி அடைந்து நாம் பாக்கியம் பெற்றோர் என கருதட்டும்.தேவை மனவுறுதியும், ஆரொக்கியமும், தியாக மனப்பான்மையும், குழந்தைகளை இறைவன் அளிக்கும் மிகப்பெரும் செல்வம் என்று கருதும் மன நிலையும் தான். பணங்காசுகளோ, வசதிவாய்ப்புகளோ அல்ல.
வருத்தம் வேதையினை தந்து உடல் நலனை பாதித்துவிடும். மகிழ்ச்சி உற்சாகத்தினை தந்து ஆற்றல் உள்ளவர்களாக மாற்றும். எடுத்ததெற்கெல்லாம் குறை காண்பது தாழ்வு மனபான்மைக்கு வழி வகுத்துவிடும். வாழும் கடைசி நிமிடம் வரை மகிழ்வாக வாழ வேண்டும். .
Subscribe to:
Posts (Atom)