Showing posts with label ஆணை. Show all posts
Showing posts with label ஆணை. Show all posts

Friday, August 3, 2012

சொன்னான் செய்தேன் .. நோன்பும் உண்ணாவிரதமும்


"அறிது அறிது மானிடராதல் அறிது...
மானிடராய் பிறந்தும் கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அறிது
கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அறிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும்தான் செய்தல் அறிது
தானமும் தவமும்தான் செய்தலாயினும் வானவர் நாடு வழி திறந்திடுமே" - ஔவ்வயார்

மனிதனாய் பிறந்தாலும் பல கடமைகளும் இருந்து சில உரிமைகளும் பெற்றிருந்தாலும் நிம்மதியாய் வாழ பல போராடங்களையும் அளவற்ற தொல்லைகளுக்கும் உட்படுத்தப்படுகின்றோம்.  பார்த்தால் மன்னன் பசித்தால் பரதேசி.
'உனக்கென்ன நீ கொடுத்து வைத்தவன்' என்று  நாம் சொல்ல எல்லாம் இறைவன் அருள் என்று சொல்பவனும் 'உம....வீட்டுக்கு வீடு வாசப்படி' என்று புலம்புவனும் உண்டு . எங்கு நிம்மதியாக வாழ விடுகிறார்கள். இந்த உலகில் நிம்மதியாக இருக்க விடமாட்டார்கள் என்பர் சிலர். 'சரிப்பா வேறு உலகம் ஒன்று உள்ளதே அதற்கு  ஏதாவது உருப்படியா ஒரு வழி வகுத்து வாழ்கின்றாயா?' அதற்கும் சரியான பதில் கொடுக்க முடியவில்லை.

எதற்கு எடுத்தாலும் போராட்டம். அதிலும் பலவகை போராட்டங்கள்.
கையூட்டு , இலஞ்சம், ஊழல் இவைகளை ஒழிக்க போராடுகின்றோம்  என்று  சிலர் திரண்டு அதற்காக நினைத்ததை சாதிக்க பல வழிகள் கையாளப்படுகின்றன . முதலில் உண்ணாவிரதம் அது வேறு விதமாக மாறுவதனை பார்க்கின்றோம். சாத்வீகம் போய், சமாதானமும் முடியாமல் இருதியில்  அது எங்கு போய் நிற்குமோ! அவர்களுக்கே வெளிச்சம்.
ஒருவர் குடியை ஒழிப்பேன் என்கிறார் மற்றவர் அதை வியாபாரமாக்கி விட முயல்கின்றனர் . அப்பப்பா ஒரே குழப்பம்!