Saturday, November 17, 2012

மீண்டும் பேசுங்கள் மத நல்லிணக்கவியலாளர்களை அழைத்து !

புதிய தலைமுறை" தொலைகாட்சி "நேர்பட பேசு" நடிகர் விஜய் வீட்டு முன் நடந்த போராட்டம் பற்றிய விவாதம் பல கேள்விகளை எழுப்பு
கிறது.

1- ஷாஜி,அஜயன் பாலா, மனுஷ்ய புத்திரன் மூவரும் திரைத்துறை சம்பந்தப்பட்டவர்கள்.

2- வணிக ரீதியாக நடந்தது என்பதை எந்த முறையிலும் ஏற்கவியலாது.

3- ஷாஜி இரண்டு முறை பாரக் ஒபாமவை முஸ்லிம் என்று வலியுறுத்தும் படியே ஆலாபணை செய்து கொண்டிருந்தார்.

4- அரசியல் நோக்கம் என்பது போராட்டத்தை உணர்வுகளை மொக்கை படுத்தும்படி பேசியதும் சரியல்ல.

5- மனுஷ்ய புத்திரன் நடுநிலைமையோடு பேசியது பாராட்டத்தக்கது.

6- தமிழ் சினிமா என்பது மிகப்பெரிய குப்பைக்கூடமாகி விட்டது என மனுஷ்ய புத்திரன் கூறியது நல்ல பதிவு.

7- ஒவ்வொரு திரையரங்குகளுக்கு முன்னால் போராட்டம் நடத்தியிருக்கவேண்டும் என அஜயன் பாலா கூறியது "சட்ட ஒழுங்கு" பிரச்னையை கொண்டு வருவதை மறந்தது ஏன்?

8- நமது பெரும்பாலான இயக்குனர்கள் சமூக அறிவில்லாமல்தான் படம் எடுக்கின்றனர் ( மனுஷ்ய புத்திரன்)

9- "டேம் 999" ஐயும் "துப்பாக்கி"யையும் ஒப்பிட்டு பார்த்தது சரியல்ல.

10- படங்கள் வந்தபோது, வந்த பின்னரும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன என்பதை எல்லோரும் மறந்தது ஏனோ?

(வசூல் ராஜா பெயருக்கே எதிர்ப்பு)
(வாட்டர்" ஷூட்டிங்கையே நடத்த விடாமல் தடுத்தது)

ஆக மொத்தம் நேர்பட பேசியது நேரம் கடக்க பேசியதானது வருந்த்தத்தக்கது. மீண்டும் பேசுங்கள்
முஸ்லிம் சமூகவியல், மத நல்லிணக்கவியலாளர் களை அழைத்து.

 
- Zafrullah Rahmani

தயவுசெய்து கீழ் உள்ளதை சொடுக்கி காணொளி  பாருங்கள் 
துப்பாக்கி படத்தின் தாக்கம் புதிய தலைமுறையின் நேர்...

No comments: