Sunday, November 18, 2012

சுமைதாங்கியாக வாழ்வதே சுகம் .

உறவின் முதியவர் ஒருவரை வழியில்  சந்திதேன்
'மாமா ஒரு ஆலோசனை உங்களிடமிருந்து தேவை'
 'என்ன சீக்கிரம் சொல்லுங்கள்  எனக்கு ஓய்வில்லை போக வேண்டும்'
'எனது மகனுக்கு நிறைய பேர் பெண் தருவதாக சொல்கிறாகள். பையன் அதிகமாக படித்து நிறைய சம்பாதிகின்றான் .
உறவுக்காராகள் வேறு மிகவும் நிற்பந்திகிரார்கள் உங்கள் ஆலோசனை சொலுங்களேன்'
'தம்பி முதலில் நீ உனது இறுதி கால வாழ்வுக்கும் மற்றும் நீ அந்த பையனுக்கு செலவு செய்த பணத்தையும் அவனது வருமானத்திலிருந்து சேர்த்துக் கொள் பின்பு அவனுக்கு திருமணம் செய்து வைப்பதைப்  பற்றி முடிவு செய்யலாம்'
என்று சொல்லிவிட்டு தொடர்ந்தார்
'நான் உறவினர் அல்லாத  பெண்ணைத்தான் எனது  பையனுக்கு மணமுடித்தேன் .இப்பொழுது அந்த பெண் நினைத்தபடி பையன் மாறி விட்டான் அத்துடன் அந்த பெண் ஒரு நாளைக்கு ஒன்று சொல்கின்றது .அதனை புரிந்துக் கொள்ளவே முடியவில்லை . இன்னும் நான் சுமைதாங்கியாக இருகின்றேன், அதனால்
 தெரியாத கழுதையை விட தெரிந்த கழுதை நல்லது. தெரிந்த கழுதை எப்படி உதைக்கும் என்பது தெரியும் . இதை நினைவில் வைத்து செயல்படு' என்று சொல்லிவிட்டு அடுத்து நான் பேசுவதற்குள் நடையைக் கட்டினார்.
தெரிந்த கழுதையிடம் கேட்டது தவறாக போய் விட்டதே மனதை குழப்பி இதயத்தில் சுமையைத் தந்து விட்டாரே
என்று மனமுடைந்து எனது நடையை தொடர்ந்தேன் .கண்டவர்களிடம் ஆலோசனைக் கேட்பது ஆபத்தாகிவிடும் என்பதை அறிந்தேன்.
 

 நாமே நம் மனைவிக்கு அடிமை நாம் சொல்வதையா அவள் கேட்கப் போகிறாள் முடிவை மனைவியே எடுக்கட்டும். நாம் எப்போழுதும்போல் சுமைதாங்கியாக இருப்போம் .இதுவே எனது முடிவு.

No comments: